பதிவுகள் முகப்பு

கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
01 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.

தவம் செய்யும் முனிவர்கள்

முக்காலுடன் தவம் செய்பவர். தாமரை மணியாலான ஜெப மாலையையும், ஆமை வடிவமான மணையையும் வைத்திருப்பர். தவசியர் ஆமை வடிவில் உள்ள மணைப்பலகையில் அமர்ந்து தவமிருப்பர். ஆமை துன்பம் நேரும் போது, நான்கு கால்களும், தலையும் ஆகிய ஐந்து உறுப்புகளையும், முதுகு ஓட்டின் கீழே அடக்கிக் கொள்ளும். அது போல் ஐம்புலன்களின் பிணிப்பையும் அகற்ற வேண்டும். ஆமை போல் ஐந்து பற்றையும் தவசியர் அகற்ற வேண்டும் என்பதை நினைவு செய்யும் வகையில், ஆமை போல் செய்யப்பட்ட மணையில் அமர்ந்திருப்பர். தவசியர் புலித்தோலிலும் அமர்வது உண்டு. அப்புலித் தோலும் ஆமை வடிவினதாகக் கிழித்து அமைக்கப் பெற்றிருக்கும். உண்மையாக ஐம்புலப் பற்றை அகற்றி இருப்பர்.

தவசியர் குறித்துத் தொல்காப்பியர்

தவசியருக்கு பூணூல், கமண்டலம், முக்கோல், ஆமை வடிவினாலான பலகை ஆகியவை உரியன என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய"
(தொல்காப்பியம்-மரபியல்நூ70)

தவம் செய்வோர் சொல்லுக்கு மாபெரும் வலிமை உள்ளது. அச் சொல் காலத்தை வென்று நிற்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அது அப்படியே பலிக்கிறது. துறவியர் சொன்ன சொல் தான் மந்திரமாகும். அவர்கள் செய்த தவத்தின் சக்தி, அவர்கள் சொல்லும் சொல்லில் ஊடுருவி, அச்சொல்லையே மந்திரமாக்குகிறது.

மேலும் படிக்க ...

யாழ் நூலக எரிப்பு தின நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜூன் 1 1981 என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று.  தமிழர்களின் சர்வதேசப் புகழ்பெற்ற அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது சன நூல் நிலையம் எரிக்கப்பட்ட நாள். மனித நாகரிகத்தின் கறை படிந்த நாட்களில் ஒன்று.  தனிப்பட்டரீதியில் என் பால்ய பருவத்தில் நண்பனாக, ஆசிரியனாக விளங்கிய நிறவனம் அது. நான் செல்லும் அறிவாலயங்களில் ஒன்று.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக அன்றிருந்த த(ம்)ர்மிஷ்ட்டரின் அரசின் தூண்களாக விளங்கிய இனவெறி பிடித்த அமைச்சர்கள் சிலரின் தலைமையில் ,ஏவல் நாய்களாகப் படையினர் பாவிக்கப்பட்டு யாழ் நகர் எரிக்கப்பட்டது. யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் ,பூபாலசிங்கம் புத்தகக்கடையுட்பட, எரிக்கப்பட்டன. யாழ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.

இத்தருணத்தில் யாழ் பொது சன நூலகத்தில் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். யாழ் ஈழநாடு பத்திரிகை தனது மாணவர் மலரில் , வாரமலரில் எனது மாணவ, இளம் பருவத்து எழுத்துகளைப் பிரசுரித்து ஊக்குவித்ததை எண்ணிப் பார்க்கின்றேன்.

யாழ் நூலக எரிப்பு தமிழர்கள் உள்ளங்களில் ஏற்படுத்திய காயம் ஆறாதது. ஏனென்றால் அப்போது நடந்த வன்முறையில் அரிய வரலாற்று நூல்கள், ஓலைச்சுவடிகளையெல்லாம் நாமிழந்தோம். அவை திரும்பக் கிடைக்கப்போவதில்லை. தாவீது அடிகள் நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமான சம்பவமும் நடந்தது.

மேலும் படிக்க ...

கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
இலக்கியம்
31 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நீரால் தழைக்கும் நிலம், பிள்ளைப் பேரால் தழைக்கும் குலம். இயற்கை வரப்பிரதாசம் நீர் ஆகும். மனிதனின் முயற்சியின்றி அமைந்தவை இயற்கை நீர்நிலை. முயற்சியால் அமைந்தவை செயற்கை நீர்நிலை. உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது நீர். நம் உடலில் நீரே மிகுதியாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து நீங்கிவிடின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரலாம்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்பார் வள்ளுவர். மழையின் மாற்று வடிவங்களே அருவி, ஆறு, ஓடை, கடல், ஏரி, குளம், இன்னபிற. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று நீர். இறை வழிபாட்டிற்கு நீர் மிகவும் முக்கியமானதாகும். மங்கல நிகழ்ச்சியாயினும், அமங்கல நிகழ்ச்சியாயினும் அவற்றிற்கு முதல் தேவையாகக் கருதப்படுகிறது நீர். நீரின் தத்துவத்தில் அமைந்த ஆலயம் திருவானைக்கால் ஆகும்.

நீரின் ஏற்பட்ட வளர்ச்சி
நீரின் வளத்தினாலே ஆற்றங்கரையோரங்களில் சிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக நகரங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக வளர்ச்சி சிந்துநதியில் வளர்ந்தது. நைல் நதியில் எகிப்து நாகரீகம் தழைத்து ஓங்கியது. எல்லா உயிர்களுக்கும் ஊட்டமளிப்பது நீர்தான்.

நீரின் சிறப்பு
நீரில்லாவிடில் வாழ்வில்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வான்மறைந்த தந்த வள்ளுவர் கூற்று. அத்தகைய நீரின் சிறப்பாக காவியம் பேசுவது அரசர் முன்னின்று நடத்திய விழா நீர் விழாவாகும். நீர் விழாவின் போது கொடுங்குற்றம் செய்தவர்கள் கூட மன்னிக்கப்பட்டனர். மக்கள் பாவங்களைக் கழுவும் ஆற்றல் நீருக்கு இருப்பதாக நம்பிய நிலையும் காவியத்தில் இடம்பெறக் காண்கிறோம். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கின்றது நல்வழி.

அப்பூதிகள் திருநாவுக்கரசு பெயரால் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீரறம் செய்து வந்ததைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம். இறந்தவர்களுக்கு நதியில் நீர்க்கடன் செய்தல் மரபு. நீர்க்கடன் செய்தாலே வீடுபேறடைய முடியும்.

மேலும் படிக்க ...

லண்டனில் தமிழ் மக்களின் சதுரங்கச் சுற்றுப் போட்டி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
29 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசர்களின் விளையாட்டு எனக் கருதப்படும் சதுரங்கம் chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. மதியூகமும்,  தந்திரமும் முக்கியமானதாகக் கருதப்படும் இவ்விளையாட்டானது தற்காலங்களில் பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில்,  பூங்காக்களில்,  கழகங்களில், இணையத்தளங்களில் விளையாடுவதோடு, கணனிகளிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.

இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி,  ஒரு கலையாகவும்,  அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சில சமயங்களில் ஒரு போர் விளையாட்டாகவும்,  ‘மூளை சார்ந்த போர்க்’கலையாகவும் பார்க்கப்படுவதுண்டு. இப்படி 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தச் சதுரங்க விளையாட்டானது பல ஈடுபாடுள்ள சென் சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது எனலாம். அந்தகைய சிறப்புகளைக் கொண்ட சதுரங்க விளையாட்டை ‘உலகத் தமிழர் சதுரங்க பேரவை’ யின் (WTCF)  ஏற்பாட்டால் மிக அண்மையில் முதற் தடவையாக லண்டன் அல்பேட்டன் கொமியூனிற்றிப் பாடசாலை மண்டபத்தில் இப்போட்டி அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் படிக்க ...

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 I

உக்ரைன்-ரஷ்யா போர்களத்தில், அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள், உலக அளவில் ஊடகங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டன: ஒன்று, KHMELNYTSKYI எனும் இடத்தில், உக்ரைனின் ஆயுத தளபாடங்களின் சேமிப்பு நிலையத்தின் மீது ரஷ்யா, நடத்திய மாபெரும் தாக்குதல். மற்றது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாய், “எமது அரண்”, “எமது இதயம்” என்று உக்ரைனினால் கொண்டாடப்பட்ட பக்மூத் (Bakhmuth) என்னும் பாதுகாப்பு கோட்டையின் ஒட்டுமொத்த வீழ்ச்சி

II

KHMELNYTSKYI ஆயுத கிடங்கானது, உக்ரைன் தலைநகர் கிவ்விலிருந்து 322km தொலைவிலும் இதனை விட நெருக்கமாக, மேற்படி கிடங்கு, போலந்து எல்லையிலிருந்து 119km தொலைவிலும் அமைந்து கிடக்கிறது. அதாவது, உக்ரைனின் மேற்கு புறமாய் அமையப்பெற்றிருந்த இம் மாபெரும் ஆயுத கிடங்கு, போலந்து எல்லைக்கு மிக அருகாமையிலும், ரஷ்ய எல்லைக்கு மிக தொலைவிலும் அமையப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. இருந்த போதிலும், ரஷ்யா, மே 15-16இன் இரவில், 18 ஏவுகணைகளையும் ஆறு ட்ரோன்களையும் கொண்டு மேற்படி, தொலைதூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 18 ஏவுகணைகளில் ஆறு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் எனவும் ஒன்பது குரூஸ் (CRUISE) ஏவுகணைகள் எனவும் ஏனைய மூன்று ஏவுகணைகள் இனம் தெரியாதவை எனவும் கூறப்படுகின்றது. இவற்றில் பல ஏவுகணைகளைதான் சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அறிவித்த போதும், தாக்குதலின் போது இங்கிலாந்து அனுப்பி வைத்திருந்த யுரேனிய ((URANIUM) முனை கொண்ட தாங்கிகளுக்கான குண்டுகள் பலவற்றையும், கூடவே, உலகின் முதல் தர விமான-அணு எதிர்ப்பு ஏவுகணையான அமெரிக்காவின் பேட்ரியேட் ஏவுகணைகளும் அழிந்து விட்டதாக உக்ரைனினாலேயே அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'எங்கே அந்த வெண்ணிலா' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரவுகளில் அமைதியாகக் காரில்  பயணிக்கையில், அல்லது தொலைதூரப்பயணங்களில், அல்லது இரவுகளின் தனிமையில் படுக்கையில் புரண்டிருக்கையில் கேட்பதற்குத் துணையாக வரும் குரல்களில் முக்கியமானதொரு குரல் பாடகர் உன்னிமேனனின் குரல். 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவிசங்கரின் வரிகளில், சிற்பியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள் நான் கூறுவதன் அர்த்தம் புரியும். இதயத்தை வருடிச் செல்லும் குரல் உன்னிமேகனுடையது. நடிகர் மனோஜ் ஆர்ப்பாட்டமில்லாத சிறந்த நடிகர். தமிழ்த் திரையுலகில் அவரால் சோபிக்க முடியாது போனது துரதிருஷ்ட்டமே.

மேலும் படிக்க ...

சிறுகதை : அதிகாரம் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
27 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூசச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான். இடது கையால் அதன் மேல் படாலென்று தட்டு தட்டினான் . தண்ணீர் பொலீரென்று கொட்டி விடும் என்று நினைத்தான். பேருந்து நிறுத்தங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை இப்படி தலையில் தட்டி காசை வரவழைத்த இரு முறை நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து போயின அது போல் இப்போதும் திரும்பத்திருமப அதன் மேல் தட்டினால் தண்ணீர் குபுக்கென்று கொட்டும் என்பதை திடமாய் நம்பினான். . வாஷ்பேசின் கீழ்ப்பகுதியில் இருக்கும்  திறந்து மூடும் உபாயத்தை திருகினான். தண்ணீர் வராதது அவனை எரிச்சலடையச் செய்தது. கழிப்பறையிலிருந்து வெளிக்கிளம்பிய் நாற்றம் ரொம்ப நேரம் அங்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

அவன் பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ள கழிப்பறையைத்தான் பயன்படுத்துவான். அலுவலகத்தில் மற்றவர்கள் இந்தக்கீழ்த்தளக் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள். மற்றவர்கள் என்றால் அய்ந்து பேர். நான்கு பேர் வெளிப்புறப் பணியாளர்கள். இன்னொரு அறையில் கணினியோடு மல்லாடும் ஒருவர் ஆறாவது விரல். முக்கியமான விரல் அவர். பழனி  மேல்தளத்தில் உள்ளக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குக் காரணம் அவன் அதிகாரி. ஆறு பேருக்கு அதிகாரி அறையிலேயே  உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்வதால் கையோடு கீழ்த்தளக்கழிப்பறை வாஷ்பேசினை டிபன்பாக்ஸ் கழுவப் பயன்படுத்துவார்.  இன்னும் இரண்டு தொலைபேசி இணைப்பகங்கள் தெற்கு, கிழக்கு என்று ஏழு கி.மீ தூரத்தில் இருந்தன. அவையும் அவனின் கட்டுப்பாட்டில் இருந்தன.  அவற்றில் இருவர், நால்வர் என்று பணியாட்கள் இருந்தனர்.எல்லாம் நகரின் மத்தியிலிருந்து தூரத்தில் பொதுமக்களின் பெரும் சேவைக்கென எப்போதோ உருவாக்கப்பட்டவை. ( ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. 1,76,000 கோடி ஊழலுக்குப் பின்னும் உயிர்த்திருக்கும் துறை ) . அவர்கள் இந்தத் தலைமையகத்திற்கு பெரும்பாலும் வரமாட்டார்கள். குட்டி ராஜ்யத்தின் அதிகாரி பழனி.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி இதழ்கள் அறிமுகமும், உரையாடலும்! - சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- சு. குணேஸ்வரன் -
நிகழ்வுகள்
26 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெளி அரையாண்டு இதழ்கள் அறிமுகமும் உரையாடலும் 28.05.2023 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலக குவிமாடத்தில் இடம்பெறவுள்ளது. மூத்த படைப்பாளி ஐ. சாந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இதுவரை வெளிவந்த மூன்று இதழ்களாகிய தி.ஜா சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ்கள் பற்றிய கருத்துரைகளை
வடகோவை வரதராஜன், ந.குகபரன், வேல்.நந்தகுமார், இ.இராஜேஸ்கண்ணன், சின்னராஜா விமலன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர் வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளிவான, உறுதியான  கருத்துகளைக் கொண்டிருந்தார்.

இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல்  செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர்  எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப் படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.

அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.

மேலும் படிக்க ...

'ரொக் இசையின் இராணி (Queen of Rock 'n' Roll) மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எண்பதுகளில் தனது நாற்பதுகளில் What's Love Got to Do with It பாடலின் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர் 'டீனா டேர்னர்' (Tina Turner).  அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள பிறவுண்ஸ்வில்லில் பிறந்தவர் இவர். இயற்பெயர் - Anna Mae Bullock.

அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் இசைச் சானல்களில் லயனல் ரிச்சி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பில்லி ஜோயெல், மைக்கல் ஜோன்ஸன், சிந்தி லோப்பர் போன்றவர்களுடன் இவரது பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இளையவர்களுக்கு மத்தியில் சரிக்கும் சமமாக இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார். இவரை எப்போதும் இரசிகர்கள், விமர்சகர்கள் 'ரொக்கின் இராணி' என்றழைப்பார்கள். அது மிகையான கூற்றல்ல.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: தேனாற்றங் கரையினிலே.. ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.

ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா'  என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.

மேலும் படிக்க ...

வண.பிதா. செ. அன்புராசா அடிகளாரின் 'அன்புள்ள ஆரியசிங்க' வாசிப்பு அனுபவம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
24 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வரலாற்றுப் புகழ் வாய்ந்த எத்தனையோ கடிதங்கள் உலகில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன. இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திய காலிமுகத் திடல் 'அறகலய' எனப்படும் அறப்போராட்டம் நடைபெற்ற தீர்க்கமான காலகட்டம் ஒன்றில்,  வணக்கத்துக்குரிய அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகளாரால் எழுதப்பட்ட முப்பது கடிதங்களும் இவ்வாறே முக்கியத்துவம் பெறவேண்டியவை.  2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம்  2022 .07. 16ம் திகதிவரை அவரது முகநூலில் 'அன்புள்ள ஆரியசிங்க...' எனும் தலைப்புடன் தமிழில் எழுதப்பட்ட இக் கடிதங்கள் இன்று சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் நூலுருவாகி உள்ளமை மகிழ்ச்சிகுரியது.

இலங்கை இனப்பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி, இறுதி யுத்தத்தின் பின்னும் இன்றுவரை தொடரும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் வரலாற்று ஆதாரத்துடன் இங்கு கூறப்பட்டுள்ளன. பெரும்பான்மை இன மக்களை நோக்கிய சில நியாயமான கேள்விகளும் முன்வைக்கப் பட்டு உள்ளன.யாரையும் புண்படுத்தாத ஆனால் கண்ணியமும் வலிமையும் துணிவும் மிக்க வார்த்தைப் பிரயோகங்களுடன் இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. தங்குதடையற்ற மொழிஆளுமை அவரது எழுத்துக்கு அணி சேர்க்கிறது.

2022 இன் நாடுதழுவிய பொருளாதார வீழ்ச்சியை மையப்படுத்திய பெரும்பான்மை இன மக்கள் எழுச்சியுடன், தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் அனுபவித்த ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தி, ஒப்பு நோக்கும் விதமாக இந்நூல் அமைந்திருப்பதன் மூலம், பெரும்பான்மை மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நன்நோக்கும் தெளிவாகிறது . அதே சமயம் தெற்கில் வாழும் மக்களின் துயரில் பங்குகொள்ளும் அன்பும் அரவணைப்பும் தெளிவாகவே இந்நூலில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942–2022) - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் (  1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன்.  1973 ஆம் ஆண்டு அவரது 'விடிவை நோக்கி' நாவல், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.  எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில் ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன். தெணியான் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்:  கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம்,  சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.

வதிரியைச் சேர்ந்த அன்பர் சதாசிவம், எங்கள் ஊரில் பூட் எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்திவந்தார். வடமராட்சியிலிருந்து வந்த மூவரும் சதாசிவம் வீட்டில் தங்கியிருந்தனர். 'விடிவை நோக்கி' அறிமுகவிழா, எங்கள் ஊரில்,  1966 இல் அண்ணி என்ற இலக்கிய இதழை நடத்திய,  உறவு முறையில் எமது மாமாவான அ. மயில்வாகனன்  தலைமையில் நடந்தது. கொழும்பிலிருந்து இலக்கிய ஆர்வலர் எம். கிஸார், தனது காரில் மல்லிகை ஜீவா, மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரை அழைத்து வந்தார். அந்த விழா வெகுசுவாரசியமாக நடந்தது. அதனைப்பற்றி அடுத்த வாரம் வெளிவந்த தேசாபிமானியில்        ( கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு )  மு. கனகராஜன் எழுதியிருந்தார்.  இவ்வாறு தெணியானுடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கிய நட்புறவு , சகோதர வாஞ்சையாக வளர்ந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அவர் மறைந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்ததினம் வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முடிந்தவரையில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதும் எனது கடமையாக இருந்தது.

மேலும் படிக்க ...

'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை...' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) .  கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில்  பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர்.  முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது  'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)'  என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன்.  அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai)  விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.
அம்மலரை கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன். அதற்கான இணைப்பு

இம்மலரில் முகநூலில் விஜயன் அவர்கள் பற்றிய என் பதிவினையும் 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய  , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை. அக்கோலங்களில் ஒன்றாக நிற்பவை..' என்னும் தலைப்பில் உள்ளடக்கியுள்ளார்கள்.  அதற்காக விஜயன் குடும்பத்தினருக்கு நன்றி. அக்கட்டுரையில் எனக்குத் தெரிந்த அக்கால விஜயனின் தோற்றத்திலிருக்கும் புகைப்பட,மொன்றினையும் உள்ளடக்கியுள்ளார்கள்.அத்துடன்  அப்பதிவுக்குரிய மேலும் சில புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்ததும் மீண்டும் நினைவுகள் யாழ் நகரில் அலைந்து திரிந்த எழுபதுகளுக்கே சென்று விட்டது.

விஜயன் பற்றிய என் முகநூற் பதிவினை மீண்டுமொரு தடவை பகிர்ந்துகொள்கின்றேன்.

(முகநூற் பதிவு) அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை)

ஒவ்வொருவருவருக்கு அவரவர் பால்ய, பதின்ம வயதுப்  பருவங்களில்  வந்து போன மறக்க முடியாத ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். சந்தித்திருப்பார்கள். அவ்வாளுமைகள் அவர்கள் வாழ்வில் வந்து போயிருப்பார்கள். ஆனால்  பல்வேறு காரணங்களினால் அவர்கள் மறக்க முடியாதவர்களாக தடம் பதித்துச் சென்றிருப்பார்கள். என் வாழ்விலும் அவ்விதமான ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் இவர்.

மேலும் படிக்க ...

பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' புத்தக வெளியீடும் ஆனந்தராணியுடனான அறிமுகமும்! - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -

விவரங்கள்
- சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -
முகநூல் குறிப்புகள்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -

-  சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) என் பதின்மப் பருவத்திலிருந்து அறிமுகமான நண்பர்களில் ஒருவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர் அண்மையில் 'டொரோண்டோ'வில் நிகழ்ந்த நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றியெழுதிய சிறப்பான முகநூற் பதிவிது. - வ.ந.கி -


பாலேந்திராவின் நாடக பயணத்தின் 50 வருட காலத்திற்கு மேலான பயணத்தின் அனுபவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக அவரால், அவரின் இணையர் ஆனந்தராணியுடன் இணைந்து உருவாக்கி புத்தக வெளியீடும் விமர்சன அரங்கும் கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வாரம் நிகழ்ந்தது. தற்போது எல்லாம் இவ்வாறான பொது நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்பவர்கள் மிக அரிதாகிப் போன சூழலில்... இந்நிகழ்வில் பல கருத்து வேறுபாடு உள்ளவர், அமைப்புகள்களைச் சேர்ந்தவர்கள் தனி நபர்கள் என்று வழமையை விட ஐந்து மடங்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டது பாலேந்திராவின் நாடக உலகப் பயணதிற்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாராமாக பார்க்க முடிகின்றது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தை தனது கட்டப்பெத்தை பல்கலைக் கழக மாணவர் வாழ்வில் அத்திவாரம் போட்டவர்.

இலங்கை பரப்பில் தலை நகரிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகத்தை பார்க்க நாம் போயாக வேண்டும் என்பதாக பல ஊர் மக்களையும் அரங்கத்திற்கு அழைத்த பெருமை பாலேந்திராவை சாரும். ஆரம்பத்திலேயே குறிபிட்டும்விடுகின்றேன் இந்த நாடகப் பயணத்தின் வெற்றி ஆனந்தராணி இல்லாவிட்டால் நிச்சயம் முழுமைபெற்றிருக்க முடியாது. இதனை அருகில் இருந்த அல்ல தூரத்தில் இருந்து பார்த்து வந்த பலரில் நானும் ஒருவனாக இருந்தாலும் அன்று புத்தக வெளி யீட்டில் இருவரும் தம்மால் உருவாக்கப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட நாடங்களில் சிலவற்றில் இருந்து ஒவ்வொரு காட்சியை பாடலுடன் நடிப்பை சபையில் முன்வைத்த போது என்னால் இன்னும் அதிக உணரமுடிந்தது.  பாடல்களுக்கான உயிர்ப்பை.... இனிமையை... தாளம் போடும் அளவிற்கு பின்னணி இசையான அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யாழ் கண்ணன் இல்லாமலே எம் முன்னே கொண்டு வந்தனர். அவர்களின் பாடலுடன் இணைந்து நடிப்பை நான் தாளம் போட்டுத்தான் கேட்டேன். வாசுதேவன் என்ற கவிஞரின் கவிகளும் வலுவாக இருந்தன.

நிகழ்விற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அவரின் ஆரம்ப காலத்து பல்கலைக் கழக சகாக்கள், நாடக நடிகர்களாக சிலர் வந்திருந்தது அதுவும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு என்பதாக அது இருந்ததும் இந்த ஐந்து மடங்கு பார்வையாளர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை நிறுவுவதற்கு போதுமான ஆதாரத்தை கொண்டிருந்து.

மேலும் படிக்க ...

நடிகர் சரத்பாபு மறைந்தார்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னை  மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. அவரது அமைதியான யாரையும் கவரும் முக அழகுடன் கூடிய ஆளுமையும், இதயங்களை வருடிச்  செல்லும் குரலும் எப்போதும் என்னை ஆகர்சிப்பவை. அது அவரது உண்மைக் குரலா அல்லது வேறு யாராவது அவருக்குக் குரல் கொடுத்தார்களா என்பது தெரியாது.  ஆனால் அந்தக் குரலும், அவரது நடிப்பும், சிரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரது மறைவுச் செய்தியினை இன்று இணையம் மூலம் அறிந்தேன். அண்மையில் அவர் மறைந்ததாக முகநூலில் வதந்தியொன்று  பரவியது நினைவுக்கு வந்தது. ஆனால் இது வதந்தியல்ல என்பதைத் தமிழக முதல்வரின் இரங்கல் செய்தி புலப்படுத்தியது. இதுவரை காலமும் தன் நடிப்பால் எம்மையெல்லாம் மகிழ்வித்து வந்தார் சரத்பாபு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -

விவரங்கள்
- பதிவுகளுக்கு அனுப்பியவர்: நா.சபேசன் -
நூல் அறிமுகம்
21 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் கிடைக்கக் கூடிய முழுக் கவிதைகளையும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' எனும் தலைப்பில் தொகுத்து இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடுகிறோம். காலச் சுவடும் கூடலும் இணைந்து இந் நூலை வெளியிட்டுள்ளன.  இதற்காக நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரையை நன்றியுடன் இங்கு பகிர்கிறேன். விஜயேந்திரனின் கவித்துவத்தை இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. -  எழுத்தாளர் நா.சபேசன் -


இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்  - எம். ஏ. நுஃமான் -

1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.

மகாஜனாவில் இருந்து ‘புதுசு’மூலம் வெளி உலகுக்கு அறிமுகமான கவிஞர்களுள், விஜயேந்திரனின் சக பயணிகளான பாலசூரியன், சபேசன், ரவி, ஊர்வசி, ஔவை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1970களின் பிற்பகுதியிலும் 80களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைத் துறைக்குள் வந்தவர்களை, போரின் புதல்வர்கள் என்று நான் சொல்வதுண்டு. இனமுரண்பாடும், விடுதலை இயக்கங்களின் எழுச்சியும், போரும், வன்முறையும் இவர்களைக் கவிதைக்குள் இழுத்துவந்தன. இவர்களுடைய கவிதைகள் பெரும்பாலும் இவற்றுக்கான இலக்கிய எதிர்வினைகளாகவே அமைந்தன. தமிழ்த் தேசியக் கருத்துநிலையும், மார்க்சிய இடதுசாரி இலட்சியங்களும், வெவ்வேறு அளவில் இவர்களது கவிதைகளில் தொனிப்பொருளாகக் கலந்திருக்கக் காணலாம். இவர்கள் யாரும் ஏராளமாகக் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள் அல்ல. ஆனால், கணிசமான எண்ணிக்கையில் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பத்தினாதனின் ‘அந்தரம் நாவல் குறித்த எனது பார்வை. - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
20 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை,  சிறுகதை,  நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.

அந்த வகையில் இலங்கை மன்னார் மாவட்டம் வட்டக் கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொ. பத்தினாதன் அவர்களின் ‘அந்தரம்’ என்ற நாவல் குறித்து எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். 208 பக்கங்களைக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினால் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பான விடயம். நூலின் அட்டைப்படம் அந்தரத்தை அழகாக, சைகையால் வெளிப்படுத்தி நிறகின்றது.

மேலும் படிக்க ...

பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கிய நிகழ்வில் "கதைகளும் நாமும்"

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

மேலும் படிக்க ...

நியூசிலாந்து சிற்சபேசனின் புதிய நூல்; வெளியீடு - மெய்நிகர் அரங்கு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Link https://auckland.zoom.us/j/97354605291
Zoom Meeting ID: 973 5460 5291 (No password)

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால் குடிக்கவில்லை. எனினும், ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன்"

இவ்வாறு   1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் - மார்ச்சில் 'யுகமலர்' என்ற தனது கதைத்தொகுதியை வெளியிட்டபோது கூறிய எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கல்கரி மாநகரில் இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

"எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்" என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால், நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.

மேலும் படிக்க ...

கலை,இலக்கியப் பங்களிப்பு மிக்க 'நுட்பம்' சஞ்சிகை பற்றி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதலாவது நுட்பம் இதழ் 1968இல் வெளியானதை நுட்பம் 1970 இதழில் வெளியான கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரியின்  தமிழ் மன்றத்தலைவர் மாவை. நித்தியானந்தனின்   'தலைவரின் செய்தி'யிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இரண்டாவது நுட்பம் 1969இல் வெளிவரவில்லையென்பதையும், 1970இல் வெளியான நுட்பம் இதழே இரண்டாவது இதழ் என்பதையும் மேற்படி தலைவரின் செய்தி தெரிவிக்கின்றது.  1971 வரை கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியாக இயங்கிக்கொண்டிருந்த இக் கல்வி நிறுவனம் 1972 தொடக்கம் -1977 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்குகின்றது. 1978இலிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகமாகச் சுயாதீனமாக இயங்கத்தொடங்குகின்றது. 1972 வரை தமிழ் மன்றம் என்னும் பெயரில் இயங்கிய தமிழ் மாணவர்களின் சங்கம் 1973இலிருந்து தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது.

மேலும் படிக்க ...

முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.) - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

புலம்பெயர் படைப்பாளர்களின் பாடுபொருள் - தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்கள் ஒப்பீடு! - முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் படைப்பாளிகளின் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சமுதாயம் தன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகப் படைப்பாளி தன் இலக்கியத்தைப் படைக்கின்றான். சமுதாயத்தின் தாக்கத்தின் தன் பாடுபொருளாகக் கொள்கின்றான் . உலகத்தில் ஓர் இனத்தினரின் ஆக்கிரமிப்பால் புலம்பெயரும் பூர்வ குடிகள் தம்முடைய மனக்குமுறல்களைப் படைப்புக்களில் பதிவுசெய்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த தமிழா்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடிபுகுந்துள்ளனா். வெவ்வேறு நாடுகளில் குடிபெயா்ந்திருந்தாலும் அவா்களின் மனம் அவா்களுடைய சொந்த நாட்டைச் சுற்றியே வருவது இயல்பாகும். அதைப் போலவே பாலஸ்தீனத்தை இழந்த அரேபியர்கள் தம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்களில் இடம்பெறும் பாடுபொருளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இடம் பெயா்தல்

தனது ஊரை விட்டுப் பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குச் சென்று வாழ்தல் இடம்பெயா்தலாகும். இடம் பெயா்தல் ஒரு திட்டமிட்ட வினையாகும். சான்று: பனை ஏறும் தொழிலாளா்கள் குமாி மாவட்டத்தை விடுத்துப் பிற மாவட்டங்களை நாடிச் செல்லுதலும் உாிய பருவத்தில் மீண்டும் தம்மிடம் நோக்கி வருதலும்

குடிப் பெயா்தல்

ஏதேனும் இயற்கைச் சீற்றம் காரணமாகச் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வாழ்தல்குடிபெயா்தலாகும். குடிப்பெயா்தலும் ஓரளவு திட்டமிட்டே செய்யப்படுகிறது. சான்று: இந்தியாவில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்தமை.

புலம் பெயா்தல்

தம் மண்ணில் வாழ முடியாமல் துரத்தப்படும் நிலையில் உயிருக்கு அஞ்சி வேற்றிடம் சென்று வாழ்தல் புலம் பெயா்தல் ஆகும். சான்று: ஈழத் தமிழா்கள் சிங்கள இராணுவத்தின் நெக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி ஓடி உலகின் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்தல்

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க, விற்க
  2. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: 'யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்” (மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)'
  3. முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன் ! - முருகபூபதி -
  4. அரசியல் கைதியான எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை! - வ.ந.கிரிதரன்-
  5. முக்கொம்பன் , பூநகரியில் நூலகம் அமைக்கும் திரு.குகனுஜன்! நூலகத்துக்கு உலகெங்குமிருந்து நூல்களை அனுப்பி உதவிடுவோம்! - வ.ந.கி -
  6. ‘ஈழத்து நாதஸ்வர இசைமரபில் பஞ்சாபிகேசன் பரம்பரை’
  7. திரு வி.ஜீவகுமாரன், திருமதி கலாநிதி ஜீவகுமாரன் இருவரின் நூல்வெளியீட்டு விழா!
  8. முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2023
  9. உடையார்குடிக் கல்வெட்டும், விளக்கமும், ஆதித்த கரிகாலன் படுகொலையும், கல்கியும் பற்றி...... - வ.ந.கி -
  10. பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
  11. பதினைந்தாவது குறும்பட விருது விழா - சுப்ரபாரதிமணியன் -
  12. ஒரு கடிதம் - ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) - முருகபூபதி , அவுஸ்திரேலியா -
  13. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு ( மெய்நிகர் நிகழ்ச்சி )
  14. அறிவியற் சிறுகதை: அழைப்பு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -
பக்கம் 70 / 126
  • முதல்
  • முந்தைய
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • அடுத்த
  • கடைசி