பதிவுகள் முகப்பு

'தலைவி' பார்த்தேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்றிரவு தலைவி திரைப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்த்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட கதை. இதற்கு முன்னர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கிடையில் நிலவிய உறவினை மையமாகக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'இருவர்' வெளிவந்திருந்தது. ஆனால் 'தலைவி'திரைப்படத்தின் வெற்றியாக நான் கருதுவது பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் , நடிப்பும்.

'இருவர்' திரைப்படத்தில் மோகன்லாலை, பிரகாஷ்ராஜைத்தான் நாம் நினைவு கூர்வோம். அவர்கள்நடித்த பாத்திரங்களை அல்ல. ஐஸ்வர்யா பச்சன் மட்டும் சிறப்பாக ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருந்ததாக உணர்ந்தேன். ஆனால் 'தலைவி' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்தும், அரவிந்தசாமியும் முறையே ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆராகவும் முற்றாகவே தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். கலைஞராக நடித்த நாசரும் ஓரளவுக்குத் தன்னை மாற்றுவதில் வெற்றிகொண்டிருக்கின்றார் என்றே கூறலாம். ஆனால் முதலிருவரும் முற்றாகவே தம்மை அப்பாத்திரங்களாகவே மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். படம் முழுவதும் எம்ஜிஆர் , ஜெயலலிதாவாகவே அவர்கள் தென்பட்டார்கள். கங்கனா ரணாவத்தாக, அரவிந்தசாமியாகத் தென்படவேயில்லை. அவ்வளவுக்கு இருவருமே அவ்வாளுமைகளின் இயல்புகளை உள்வாங்கி நடித்திருக்கின்றார்கள். மிகவும் சிரமமான பணியினைச் சிறப்பாக, எப்பொழுதும் மனத்தில் நிலைத்திருக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அதற்காக இயக்குநர் விஜய் அவர்களைப் பாராட்டலாம். இத்திரைப்படத்தின் மூலம் கங்கனா ரணாவத்துக்குச் சிறந்த நடிகைக்கான மத்திய அரசின் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆணாதிக்கம் நிறைந்த தமிழ்த்திரையுலகில், அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் ஜெயலலிதா அடைந்த அவமானங்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வெற்றிகொண்டு தன்னை நிலை நிறுத்திய வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அதனைச் சிறப்பாகவே இத்திரைப்படத்தில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009-7) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
11 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் 2009 -7

பங்குனி பிறந்து வெய்யில் கனத்திருந்தது. இரவுக்கும் பகலுக்கும் வெளிச்சம் தவிர வேற்றுமை அதிகம் இல்லாதிருந்தது. பகலில்போல் இரவிலும் குண்டுகள் விழுந்து வெடித்தன. பகலில்போல் இரவிலும் மனிதர்கள் சிதறி அழிந்தார்கள். தெய்வங்களும் நீங்கிப்போன பூமியாயிருந்தது வன்னி நிலம். பிரார்த்தனைகள் மனிதருக்கு ஆறுதலைத் தந்தன. பலன்களைத்தான் தராதிருந்தன. பதுங்கு குழி இருந்ததில் அதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த இடம், யுத்தம் புதுக்குடியிருப்பைநோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையிலும் தகுந்த பாதுபாப்பைத் தருமாவென யோசனையாகிப் போனது முருகமூர்த்திக்கு. அதுவரை இருந்தது சரிதான், ஆனால் இனி என்ற கேள்வி அவன் மனத்தில் விடைத்து நின்றிருந்தது. கடைசியில் மேலே நகர்ந்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு அவன் வந்தான். மாசி 4இல் இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி ஓய்ந்திருந்த ராணுவத் தாக்குதல், மறுபடி மாசி 6ஆம் திகதியிலிருந்துதான் உக்கிரமடைந்திருந்ததை அவன் நினைவுகொண்டான்.

இரண்டு நாட்கள் இந்தக் குண்டுவீச்சுகளுக்கு ஒரு இடைவெளி விட்டாலும், குண்டுகள் எட்டாத இடத்துக்கு பிள்ளைகளோடு அவன் ஓடிவிடுவான். பலபேர் குண்டுகளை யோசிக்காமல் ஓடினார்கள். அவனால் முடியவில்லை. அவனுடைய மகள் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் நடுங்கி ஒடுங்குகிறாள். எந்தநேரமும் பதுங்குகுழிக்குள்ளே அடங்கிக் கிடக்கிறாள். ஷெல்லடியில் தாய் உடல் சிதறிச் செத்த துக்கத்தையும், அதன் பயத்தையும் அவளால் இலகுவில் மறந்துவிட முடியாது. அவள் சிரித்து என்றும் பார்த்ததேயில்லையென ஆகியிருந்தது. முருகமூர்த்தி நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. சித்திரை 14இன் புதுவருஷத்துக்கு முன்னர் வன்னியின் முழுநிலப் பரப்பையும் பிடித்துவிடுகிற மூர்க்கத்தில் ராணுவம் மும்முரமான எறிகணை வீச்சில் இறங்கியதுதான் நடந்தது. கடற்புறத்திலிருந்து பீரங்கிப் படகுகள் குண்டுகளை வாரி இறைத்துக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது..  -  நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
-  நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
11 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் எட்டு!

வீட்டு வாசலில் அவுக கார் வந்து நின்றது.

“அம்மா….. குட்டி ஐயா வீட்டுலயிருந்து, எல்லாருமே வந்திட்டாங்க….”

சமையல்காரப் பையன் சத்தமாகக் கூவினான். எனக்கென்று ஒரு வாழ்க்கை கிடைக்கப்போவதையிட்டு, மனப்பூர்வமான மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஜீவன்களில் ஒன்றான அவனது முகத்திலே பூரிப்பு மெருகேறிக்கொண்டிருந்தது.

அவனிடம் மெதுவாக அம்மா கேட்டாக.

“டேய்…. அது என்னடா குட்டி ஐயா…..”

“ஆமா…. அம்மாவுக்கு – ஐயா….. சின்னம்மாவுக்கு – சின்னையா…… அப்பிடீன்னா…. குட்டியம்மாக்கு – குட்டி ஐயாதானே……”

அவன் பேச்சை ஆதரிப்பதுபோல தலையை ஆட்டியபடி அம்மா சிரித்தாக.

“பரவாயில்லையே….. ஓங்கிட்டக் கேட்டுத்தான் உறவுமொறைகளத் தெரிஞ்சிக்கணும்…..”

நேரத்தக் கவனித்தேன். சரியாக ஒன்பது முப்பது மணி.

காலங்கள் நேரங்களுக்கு மதிப்பளித்து அவுக பணியாற்றும் முறை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர்களுடன் கூடவந்த தரகர், அவர்களைக் கூட்டிவந்து அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவசரமாக கிளம்பினாக.

ஏன் என்று புரியாமல் அம்மா விழித்தபோது,

“ஒண்ணும் யோசிக்காதீங்க அம்மா….. பெரியவங்க உங்களமாதிரி ஆச்சார ரசனை உள்ளவங்க….. எந்தவொரு சுபகாரியம் பண்ணுறதாயிருந்தாலும்,ஐயர் வெச்சுப் பண்ணினா திருப்தியாய் இருக்கும்ங்கிற செண்டிமெண்டில ஊறிப்போனவங்க…. அதே நேரத்தில, மதுரையிலயிருந்தே ஐயரைக் கூட்டிக்கிட்டு வர்றதில கொஞ்சம் செரமங்கள் உள்ளதால, லோக்கல்ல இருந்து, ஐயரைக் கூட்டிக்கிட்டு வர ஏற்பாடுகள் பண்ணியிருக்கோம்…. இப்ப போயி கூட்டிக்கிட்டு வர்ரேன்….’’

மேலும் படிக்க ...

அறிமுகம்: ஓவியர் வீரப்பன் சதானந்தன் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
10 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான குறிப்பிது.

ஓவியர் வீரப்பன் சதானந்தன் ஹட்டனிலுள்ள புனித ஜோன் பொஸ்கோ (St.John Bosco) பாடசாலையில் கல்வி கற்றவர். 1970-1972 காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற நிலத்தோற்ற (Landscape) ஓவியரான திரு.டொனால்ட் ராமநாயக்கவிடமும் (Donald Ramanayake), 1973-1975 காலகட்டத்தில் இன்னுமொரு புகழ்பெற்ற இலங்கையின் ஓவியரான திரு.ரிச்சார்ட் ஆர்.டி.கப்ரியலிடமும் (Richard R De Gabriel) ஓவியம் பயின்றவர். ஓவியர் டொனால்ட் ராமநாயக்க இவரை இலங்கைக் கலைச்சங்கத்தின் உறுப்பினராக்க 1971இல் ஆதரவளித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இவரது ஓவியங்கள் இலங்கைக் கலைச்சங்கத்தின் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இவர் தனது ஓவியக் கண்காட்சியை நுவரெலியாவின் பொதுசன நூலகத்தின் கூடத்தில் 1999 - 2002 வரையிலான காலகட்டத்தில் ஏப்ரில் மாதத்தில் நடத்தியுள்ளார். மே மே 3, 2003 - மே 25, 2003 காலகட்டத்தில் ஜேர்மனியின் ஃபிராங்க்பேர்ட் நகரில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதனை நடத்துவதற்கு ஓவியர்களின் குழுவொன்று ஆதரவளித்தது. சென்னையில் நவமப்ர் 11,2010 - நவம்பர் 17, 2010 வரை நடைபெற்ற லியனார்டோ டாவின்சி தொடக்கம் வான்கோ வரையிலான ஓவியங்கள் பற்றிய கருத்தரங்கில் இவர் கலந்துகொண்டிருக்கின்றார்.

எழுத்தாளர் ஜோதிகுமார் இவரை மலையகத்தின் புகழ்பெற்ற ஓவியரான எஸ்.சிவப்பிரகாசத்துடன் இணையாகக் கருதப்படக்கூடிய இன்னுமோர் ஓவியராகக் கருதுவார். அதே சமயம் வீரப்பன் சதானந்தன் ஓவியர் எஸ்.சிவப்பிரகாசத்திடமிருந்து வேறுபடுவது இவரது நிலத்தோற்ற ஓவியங்கள் மூலம்தானென்றும் அவர் சுட்டிக்காட்டுவார். நிலத்தோற்றங்களை ஓவியங்களாக வரைவதில் ஓவியர் வீரப்பன் சதானந்தன் மிகுந்த திறமை மிக்கவராக விளங்குகின்றார். மேலும் இவரது ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ஜோதிகுமார் ஓவியர் வீரப்பன் சதானந்தனின் வர்ணத்தேர்வு, தூரிகைக் கோடுகள் (Brush Strokes), இயற்கையை வெளிப்படுத்தும் பாணி போன்றவை இயற்கையின் சீற்றத்தை வெளிப்படுத்திய ஓவியர் டேர்னர் (Turner), சமூக நீதிக்கான தேடலை, கோபத்தைத் தன் ஓவியங்களில் வெளிப்படுத்திய ஓவியர் வான்கோ போன்ற ஓவியர்களைக்கொண்ட ஓவியப் பாரம்பரியத்துக்கு அந்நியமானதல்ல என்பார்.

மேலும் படிக்க ...

அந்தக் கணத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலும்!   - ஸ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஸ்ரீரஞ்சனி -
நலந்தானா? நலந்தானா?
10 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று உலகளாவியரீதியான உள ஆரோக்கிய தினமாகும். உள ஆரோக்கியத்தைப் பேணும் வழிவகைகளை அறியச்செய்தல் இந்த நாளின் ஒரு நோக்கமாகும். அவ்வகையில் அந்தக் கணத்தில் இருப்பதன் மூலமும், நிகழ்காலத்தில் வாழ்வதன் மூலமும் எங்களின் மனநலத்துக்கு எவ்வகையில் நாங்கள் உதவிசெய்யலாம் என்பது பற்றி நான் அறிந்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.

கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்வதில் அல்லது எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் எங்களை அறியாமலே எங்களின் மனம் பரபரத்துக்கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் கவனித்திருப்போம். அப்படியான நினைவுகள் சந்தோஷமான விடயங்களாகவோ அல்லது நேர்மறையான சிந்தனைகளாகவோ இல்லாமல், எங்களைத் திணறடிக்கச்செய்யும் உணர்ச்சிகளாகவோ அல்லது கண்கலங்க வைக்கும் சம்பவங்களாகவோ இருக்கும்போது அல்லது ஒருவருடனும் தொடர்பற்றிருப்பதுபோல அல்லது உணர்ச்சியற்ற ஒரு நிலையை உருவாக்குவதுபோல இருக்கும்போது, துயரம், வேதனை, வலி, பற்றற்ற தன்மை, மனவழுத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறையான நிலைகள் எங்களுக்கு வரக்கூடும்.

எனவே அவ்வகையான எதிர்மறை நினைவுகளில் உழலும் அல்லது எதிர்காலம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்துபோகும் நிலையை மேவுவதற்கு, அலைபாய்ந்து கொண்டிருக்கும் எங்களின் மனத்தைக் கவனித்து, மீளவும் அதனை அந்தக் கணத்தில் இருக்கச்செய்தல் (Grounding) மிகவும் முக்கியமாகும். அந்தக் கணத்தில் இருக்கும் திறனை நாங்கள் வளர்த்துக்கொள்வதற்கு நிகழ்காலத்தில் வாழும் உத்தி (Mindfulness) எங்களுக்கு உதவுகிறது என்கிறார், Harvard பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான Westbrook.

மேலும் படிக்க ...

ஓராயம் அமைப்பின் ஆதரவில் நடந்த மெய்நிகர் நிகழ்வு: 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
09 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டடக்கலையும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் பற்றிய நல்லதொரு நிகழ்வு. இதில் முதலில் உரையாற்றிய மயூரநாதன் வீட்டு வடிவ அமைப்பில் பண்பாட்டுக் கூறுகளான உணவுப்பழக்கம், அன்றாடச் செயற்பாடுகள், சிறப்பு நிகழ்வுகள், நம்பிக்கைகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்புகள், வெளியாருடனான தொடர்புகள், தனிமைக்கான தேவை மற்றும் சமூகத்தகுதி வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி , அவற்றில் குடும்ப உறுப்பினர்கள், வெளியாருடனான தொடர்புகள், சமூகத்தகுதி வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் நல்லதோர் உரையினைப் போதிய வரைபடங்கள், புகைப்படங்கள் உதவியுடன் நடத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் குணசிங்கம் கட்டடக்கலைஞராகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவங்கள், தனது இளமைக்காலத்தில் தான் அனுபவித்த யாழ்ப்பாண வீடுகள், மாந்தர்களுடனான தொடர்புகள் பற்றி நனவிடை தோய்ந்து, தன் உள்ளத்தில் சுமைகளாகக் காவிக்கொண்டிருக்கும் தன் இளமைக்கால வீடுகளின் பண்பாட்டுக் கூறுகளைத் எவ்விதம் புதிதாக அவர் வடிவமைக்கும் வீடுகளில் பாவித்தார் என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார்.

மேலும் படிக்க ...

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக Samoa, Cook Islands, New Zealand, Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.

1778 ஆம் ஆண்டு ஐரோப்பியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்ற கடற்பயணிதான் முதன் முதலாக இத்தீவுகளில் கால்பதித்தார். புகழ்பெற்ற பேர்ள்ஹாபர் (Pearl Harbour), உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகள் (Valcano Park), தொலைநோக்கி மையம் (Mauna Kea Summit) இந்துக்கோயில், டோல் அன்னாசிப்பழத் தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்ற பாம்புகளே இல்லாத ஹவாய்க்குப் பயணமானேன். ஹவாயில் உள்ள விமான நிலையத்தை டானியல் கே. இனோஜி சர்வதேச விமான நிலையம் (Daniel K. Inouye International Airport) என்று அழைக்கிறார்கள். சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த விமானநிலையத்திற்கூடாக வருடாவருடம் பயணிக்கிறார்கள். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் ஹவாயின் பாரம்பரிய உடையணிந்த, கழுத்திலே பூமாலை அணிந்து, தலையிலே ஒற்றைப்பூ சூடியிருந்த இளம் பெண்கள் எங்களை வரவேற்றார்கள். காதில் விழுந்த முதல் வார்த்தை ‘அலோகா’ என்பதாகும். ‘அலோகா’ ((Aloha) என்றால் வணக்கம், சென்ற இடமெல்லாம் அலோகா சொன்ன போது, எனக்கு ‘அரோகரா’ என்பது போலக் கேட்டது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அதைப்பற்றிப் பின்பு ஆராய்ந்து பார்த்த போது, எங்கள் பண்பாட்டிற்கும் அதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: எஸ். பொன்னுத்துரை படைப்புகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்! - முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -

விவரங்கள்
- முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -
ஆய்வு
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 முன்னுரை
பண்பாடு என்பது பண்பட்ட மனதின் வெளிப்பாடேயாகும். சங்க கால மக்களின் வாழ்க்கை நிலையையும். பின்புலத்தையும் இது எடுத்து காட்டுவதாகவும் வருங்காலச் சந்ததியினருக்கு நல்ல நினைவுச் சின்னமாகவும் விளங்குகின்றது.

பண்பாட்டுக் கூறுகள்:
அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்களும், நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் பண்பாடாக அமைகின்றன.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' (நச்சினார்க்கினியர் உரை, கலித் தொகை, கலி. 16)

என்னும் கலித்தொகை வரி பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் என்னும் ஒழுக்கமும் பண்பாடு என்று கூறுகின்றது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் தனித்தனிப் பழக்கவழக்கங்கள் உண்டு. அவை பிற சமூகத்தினரிடமிருந்து தங்களை தனித்துக் காட்டுகின்ற அடையாளங்களாகும். அவ்வகையில் நவீன இலக்கியவாதியான இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை இலங்கை தமிழ் மக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் மையமாக வைத்துத் தனது படைப்புகளில் விளையாட்டு, திருவிழா, மருத்துவம், உணவுப் பழக்கம் போன்றவற்றைப் படைத்துள்ளார்.

விளையாட்டுக்கள்
'விளையாட்டு என்பது வெளித்தூண்டுதலின்றி மனமகிழ்ச்சியூட்டும் வெயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல்நலம்,மனநலம் பேணுவதாகவும் உள்ளது' என்று சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் (ப. 246) குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

அரசும் அதிகாரமும் - அறிதலும் பகிர்தலும் 8 நிகழ்வுக்கான அழைப்பு! - விதை குழுமம் -

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.

பௌதீகவியலில் சக்தி என்பது மிக அடிப்படையான எண்ணக்கருவாக இருப்பதைப் போன்று அரசியல் கல்வித்துறையில் அதிகாரம் (POWER) என்னும் எண்ணக்கரு அடிப்படையானதாக அமைந்துள்ளது என பெர்ட்டண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ரஸ்ஸலின் இக்கூற்றை மேற்கோள் காட்டும் ஜயதேவ உயன்கொட அவர்கள் 'அதிகாரம்' பற்றிய நவீனகால அரசியல் கோட்பாடுகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமது நூலின் 5 ஆம் இயலில் (POLITICS AND POLITICAL SCIENCE - A CONTEMPORARY INTRODUCTION) மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுவானவர்கள் ஆகியோரின் தேடலுக்கும் படிப்புக்கும் உரிய வழிகாட்டிக் குறிப்புக்களைத் தந்துள்ளார்.

நவீன கால அரசியல் கோட்பாட்டாளர்கள் அதிகாரத்தின் மூன்று பரிமாணங்களை விளக்கிக் கூறியுள்ளனர்.

ஆட்சியாளர்களால் ஆளப்படுபவர் மீது பிரயோகிக்கப்படும் அதிகாரம் இதனை 'POWER OVER' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியமறுத்து ஆளப்படுவோர் எதிர்ப்பை தெரிவதற்கும் அதிகாரம் தேவைப்படுகிறது. இதனை 'எதிர்ப்பதற்கான அதிகாரம்' (POWER TO RESIST) எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளை மாற்றுவதற்கான (POWER TO CHANGE) அதிகாரமும் ஆளப்படுவோரால் பிரயோகிக்கப்படுகிறது. இது அதிகாரத்தின் மூன்றாவது பரிமாணம் ஆகும்.

மேற்குறித்த வகைப்பாடும், அதிகாரத்தின் 'POWER OVER' 'POWER TO' இருவேறு நோக்குமுறைகளும் அரசியல் கோட்பாட்டு ஆய்வுகளின் சுவாரசியம் மிக்க கூறுகளாகும்.

மேலும் படிக்க ...

பன்னாட்டுத் தமிழியற் கருத்தரங்கு அழைப்பிதழ்! தலைப்பு: “திருக்குறள் கூறும் அறம்”!

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'!   - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
07 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார். இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ' நேரம் தப்பிய படப்பிடிப்பு' (Time-lapse photography) பார்த்த அனுபவம் கிட்டும்.
ஒரு காட்சி, கால நீரோட்டத்தில், எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை இந்த தொடர்காட்சிகள் சித்திரிக்கும். புதுமைப்பித்தனின் இந்த யுக்தி அவரின் எழுத்துப்புரட்சியின் ஒரு பரிமாணம்.

இலங்கையின் மூத்த நதி எனும் பெருமையை சூடிக்கொண்ட களனி கங்கையைச் சுற்றி பல ஆண்டுகளாக ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களை ஒரு தொடர் காட்சி ஆவணப்படம் போல் படைத்து எம் கைகளில் " நடந்தாய் வாழி களனிகங்கை" எனும் நூலாக தவழவிட்டிருக்கிறார் எழுத்தாளர் முருகபூபதி. புதுமைப்பித்தன் கண்ட ஆற்றங்கரை பிள்ளையாரை களனி கங்கையில் காண்கிறார் ஈழத்தின் இந்த மூத்த எழுத்தாளர்.

களனி கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, அதன் இரு மருங்கிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு உலகம் எப்படி மாற்றங்களுக்கு தன்னை அர்ப்பணித்து புதிய மனிதர்களையும் அவர்கள் படைப்புகளையும் காலச்சக்கரத்துடன் இணைத்தது என்பதே இந்நூலின் கரு.

பதினேழு அத்தியாயங்களிலும் எழுபத்தியெட்டு பக்கங்களிலும் பொதிந்துள்ள தகவல்கள்தான் எத்தனை!? ஒரு கலைக்களஞ்சியத்தை படித்த களைப்பு. எம் மனக்கல்லறையில் ஆழத்தோண்டி நீளப்புதைத்துவிட்ட நினைவுக்கோர்வைகளை மீளத்தோண்டியெடுத்து எம் கண்முன்னே படைக்கிறார் முருகபூபதி.

தொப்பிக்குள் இருந்து முயலெடுக்கும் மந்திரவாதியைப் போல் காலம் மறந்த எத்தனையோ மானுடர்களை எமக்கு மீள அறிமுகப்படுத்தி வியக்கவைக்கிறார். இவை சாதாரண காட்டு முயல்கள் அல்ல. அவை இலங்கை சரித்திரத்தையே மாற்றிப் போட்ட மகுடமணிந்த முயல்கள். அதே தொப்பிக்குள் இருந்து சில அரசியல் குள்ள நரிகளையும் எடுத்துப்போடும்போதுதான் நாம் வாயைப்பிளக்கிறோம்!

மேலும் படிக்க ...

ஓராயம் அமைப்பு: அனுபவப் பகிர்வு க. பாலேந்திரா & ஆனந்தராணி பாலேந்திரா!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
03 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் 'ஓராயம்'அமைப்பு இணைய வழி நடாத்திய நாடகக் கலைஞர்களான பாலேந்திரா & ஆனந்தராணியுடனான கலந்துரையாடல்:  https://www.youtube.com/watch?v=inrsetfdoig

மேலும் படிக்க ...

இனிய நந்தவனம் - கனடா சிறப்பிதழ் வெளியீடு! - மணிமாலா - கனடா -

விவரங்கள்
- மணிமாலா - கனடா -
நிகழ்வுகள்
02 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கமைய இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது. விழாத் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம் பெற்றன. எழுத்தாளர் திரு. வாகீசன், கவிதா செந்தில், கணபதி ரவீந்திரன் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூல் பற்றிய ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து இனிய நந்தவனம் கனடா மலர் வெளியிடப் பெற்றது. முதற் பிரதியை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து வர்த்தகப் பிரமுகரும், கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை வர்த்தகப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கனடா சிறப்பிதழில் சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், நூல் ஆய்வுரை, நேர்காணல், உரையாடல், சேவைப்பாராட்டு, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளத்தின் தலைமையகக் கட்டிடத் திறப்புவிழா செய்தி போன்ற பல ஆக்கங்களும், தகவல்களும் இடம் பெற்றிருந்தன. செப்ரெம்பர் இதழில் கனடிய கவிஞர்களான கவிஞர் வி. கந்தவனம், கவிஞர் சிவா சின்னத்தம்பி, விருத்தக்கவி வித்தகர் தேசபாரதி வே. இராசலிங்கம், அருட்கவி ஞானகணேசன், கவிஞர் அனலை ஆ. இராசேந்திரம், கவிஞர். க. குமரகுரு, கவிஞர் அகணி சுரேஸ், கவிஞர் வ. ந. கிரிதரன், மட்டுவில் ஞானகுமாரன், சுதர்சன் மற்றும் குரு அரவிந்தனின் சிறுவர் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அக்ரோபர் மாத சேவைச் சிறப்பிதழிலும் கவிஞர் திருமதி பவானி தர்மகுலசிங்கம், கவிஞர் மா. சித்திவினாயகம், கவிஞர் சி. சண்முகராஜா ஆகிய கனடியக் கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (15 - 20)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
30 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி.  இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -


15
பாரதி, தன் தேடல்களுக்கூடு, தன் வாழ்க்கை தரிசன பரப்பெல்லையை, நாளும் நொடியும், விஸ்தரித்து செல்வதை, அவனது வாழ்வும் வரிகளும் எமக்கு எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இருந்தும் மஹாகவி, குறித்த ஓர் சித்தாந்த சார்பினை தேடிச் செல்லாதது அவரது பலம் என்ற வகையில் போற்றப்படுவதைப் பின்வரும் வரிகள் எதிரொலிக்கின்றன:

“மஹாகவிக்கு இத்தகைய இடர்பாடுகள் இல்லை. அவர் (முருகையன் போல்) ஒரு தத்துவத்தை மட்டும் தமக்குரியதாக வரித்து கொண்டவருமல்லர். எல்லாவற்றுள் இருந்தும் ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு மானுடம் பாடியவர் அவர்…” ப-320
மறுபுறம், கைலாசபதியின் கூற்று வருமாறு:

“சித்தாந்த சார்பொன்றினை தேடிச்செல்லும் ஆத்ம துடிப்பின் எல்லையிலேயே அவரது (முருகையனது) கவிதைகளில் பெரும்பாலானவை பிறக்கின்றன…”து குறித்து கருத்துகூறும் பேராசிரியர் பிரசாந்தன், “இத்தகைய ஒரு சித்தாந்த சார்பு, படைப்பாளியின் பிற சிறகுகளை வெட்டி விடக்கூடிய தன்மையுடையது… தத்துவ சார்பு (என்பது), அச்சித்தாந்த சார்பு குழுமத்துக்குள் முதன்மை வழங்குமே தவிர முழு இலக்கியப் பரப்புள்ளும் முதன்மையை வழங்காது. பதிலாக, கேள்விக்குள்ளாகும்…” என்பார்.

மேலும் படிக்க ...

பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர் சொற்பொழிவு - 10!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://meet.google.com/kyq-obwu-bdc

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (11 - 14)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


11

“இன்னவைதாம் கவியெழுத” ஏற்ற பொருள் என்று எண்ணாமல் இன்னல், ஏழ்மை, உயர்வு, என்பவற்றை பாடுங்கள் என்று மஹாகவி ஆரம்ப காலத்திலேயே விடுத்த அறிவிப்பு, கூடவே, இதற்கு முன்னதாக, “கேடுற்றவரிடையே கெட்டழியாது என்னிடமே எஞ்சி கிடக்கின்ற இன்தமிழ், இவ் என்பாக்கள், என்றைக்கொரு நாளோ எத்திசையும் வெல்லும்” என்று அறிவித்துள்ளது, எல்லாமே, கூறுமாப்போல், இவரது வாழ்க்கை தரிசனம் என்பது பாரதியை விஞ்சிய ஆழத்தைக் கொண்டது தானோ என்ற கேள்வியை எழுப்புவதாய் உள்ளது.

மஹாகவியின் வாழ்க்கை தரிசனம் பொறுத்த பேராசிரியர் நுஃமான் அவர்களின் கூற்றினைமீள ஒருமுறை நினைவு கூறலாம்:

“மஹாகவியின் படைப்பகளினூடு பிரதியாக்கப்படும் உள்ளடக்கத்தை மூன்று நிலைப்படுத்தி நோக்கலாம்,

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின் மீதுமான அவரது எதிர்ப்பு. (ப-20)

மேலும் கூறுவார்:

“இருந்தும் இயக்க பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தனித்தே நின்றார்…” ப - 202

இதே போன்று நா.சுப்ரமணியன் அவர்களும் பின்வருமாறு கூறுவார்:

“…மஹாகவி கோட்பாடு ரீதியான பொதுவுடைமை சிந்தனைக்குள் நிற்காமல் தனக்கென தனித்த சமூகப் பார்வையை வளர்த்து கொண்டார்” ப-85

எழுத்துக்களில், சமத்துவத்தையும், மானுடத்தையும் உள்ளடக்கல் என்பது, ஜெயமோகன் முதல் நூறு, ஆயிரக்கணக்கான எழுத்துக்களில், பொதுவில் இலகுவாயும் சகஜமாயும் காணக்கூடிய ஒன்றுதான் என்றாகி விட்டது.

மேலும் படிக்க ...

தமிழ் மொழிச் செயற்பாட்டகம்: என்.கே.ரகுநாதம்(ன்) - தகவல்: கற்சுறா-

விவரங்கள்
- தகவல்: கற்சுறா -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்ணாமலை கனடா: சங்க இலக்கியம் - மீள் வாசிப்பு கருத்தரங்குத் தொடர் -5

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -


விதைக்குழுமத்தின் ஏழாவது இணையவழி நிகழ்வு: அரசியல் விஞ்ஞானம்! - விதைக்குழுமம் -

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இத்தகவல்  இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -


விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய மடலில் தெரிவித்திருந்ததுபோல செப்ரம்பர் 2021 இல் விதை குழுமம் ஒருங்கிணைக்கும் இரண்டாவது இணையவழி நிகழ்வாக அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் என்கிற தலைப்பில் அறிதலும் பகிர்தலும் தொடரின் 7வது நிகழ்வு இடம்பெறும்.

அரசியலும் அரசியல் விஞ்ஞானமும்

‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL SCIENCE – A CONTEMPORARY INTRODUCTION என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். மாலினி பாலமயூரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் அமைந்த இந்நூல் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் (SSA) வெளியிடப்பட்டுள்ளது (2018). க.பொ.த (உயர்தரம்) வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் முதற்கலைத் தேர்வு (GAQ) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வகையில் எழுதப்பட்ட இந் நூல் அரசியல் விஞ்ஞானக் கற்கைத்துறை பற்றிய விரிந்தவொரு பார்வையை வழங்குகிறது.

அரசியல் பற்றிய கற்கை அணுகுமுறைகள் பல உள்ளன. அவற்றுள் அரசியல் தத்துவ அணுகுமுறை முதல் பின்நவீனத்துவ அணுகுமுறை வரையான எட்டு அணுகுமுறைகளைத் தேர்ந்து அவை பற்றிய விரிவான விளக்கங்களை நூலாசிரியர் தருகின்றார். ஒவ்வொரு அணுகுமுறை பற்றியும் விளக்கும் பொழுது, அவை ஒவ்வொன்றினதும்

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (8 -10)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


8
மஹாகவியின் கவிதை வெளிபாட்டில் காணக்கிட்டுவதாய் கூறப்படும் புதிய முறைகளும், சொல்வார்ப்புகளும், உவமானங்களும், உருவகங்களும் முற்றாய் புதியன எனவும் அதற்குரிய காரணம் அவரது கவிதை உள்ளமானது ‘கட்டற்ற ஓர் தேடலை’ கொண்டிருந்ததே என்பார் சண்முகம் சிவலிங்கம்.ப-49

‘கட்டற்ற தேடல்’ என்ற இச்சொற்பிரயோகம் சற்றே ஆபத்தானது. அல்லது அளந்து பிரயோகிக்கப்பட வேண்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சண்முகம் சிவலிங்கம் வரையறை செய்தாற்போலவே, மஹாகவி யாழ்பாணத்து கிராமமொன்றின் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்து, பெரும்பகுதி காலமும் கொழும்பில் உத்தியோகம் பார்த்து,ஈற்றில் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் தேறியுள்ளார். சுருக்கமாகக் கூறினால், ‘எமக்குத் தொழில் கவிதை’ என்பது போல் இல்லாமல், இவர்க்கு தொழில் அரச உத்தியோகம், நிர்வாக சேவை என்பன இருந்துள்ளன என்பது தெளிவு. இருந்தும், கூடவே, இதனுடன் சேர்ந்தாற் போல் கலை இலக்கிய ஆக்கங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபட்டவர் என்றாகின்றது.

நிர்வாக பரீட்சையினை ஒருவர் தன் வாழ்வில் எழுதக் கூடாது என்பதுமில்லை, எழுதுவதால் குறைவடைய போகின்றார் என்பதும் இல்லை. இருந்தும், பிரச்சினை தருவது ‘கட்டற்ற தேடல்’ என்ற சொற் பிரயோகமே. வேறுவார்த்தையில் கூறுவதானால், இப்பின்னணியில் நோக்குமிடத்து, மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பது தன்மீது தானே விதித்துக்கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒரு வகையான கட்டற்ற தேடல்தான் என்பது தெளிவு.

மேலும் படிக்க ...

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்! - (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -

விவரங்கள்
- (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -
இலக்கியம்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -


சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.

முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: இசைக்கலைமணி வர்ண இராமேஸ்வரன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவரான, இசைக் குடும்பத்தில் பிறந்த இவரை எங்கள் பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளில் அடிகடி சந்தித்திருக்கின்றேன். இதைவிடக் கலைவிழாக்களிலும், பல அரகேற்ற நிகழ்ச்சிகளிலும் பலமுறை சந்தித்தித்து உரையாடியிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியிலும் கற்றவர். மிகவும் அன்பாகப் பழக்ககூடிய நல்ல நண்பர். கனடாவில் உள்ள வர்ணம் இசைக்கல்லூரி அதிபரான இவர், படித்த கல்லூரிக்குத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தைதான் அளவெட்டியைச் சேர்ந்த கலாபூசணம் வர்ணகுலசிங்கம் அவர்கள். தாயாரின் பெயர் மகேஸ்வரி. இராமேஸ்வரன் பண்ணிசையில் மட்டுமல்ல, மிருதங்கம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைபயின்று ‘இசைக்கலைமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராகவும் அங்கு பணியாற்றினார்.

தாயக நினைவுகளை மீட்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கே கூவிடும் எங்கள் குரல் மொழி கேட்கிறதா?’ போன்ற பல பாடல்களை இவர் பாடியதன் மூலம் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தபின் இங்கே ஒரு இசைக்கல்லூரியை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழ் இசைத்துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி இருந்தார்.

மேலும் படிக்க ...

ஜீவநதி வெளியீடாக வெளிவந்துவிட்டது வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுதி) !

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' வெளியாகியுள்ளது. இது பற்றிய ஜீவநதி பதிப்பகத்தின் அறிவிப்பை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஜீவநதி பதிப்பகம் முன்னர் அறிவித்திருந்தபடி நூல் வெளியாகியுள்ளது. அதற்காகப் பதிப்பக உரிமையாளர் பரணீதரனுக்கும், நூலைக் குறித்த தினத்தில் வெளியிட உதவிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நன்றி.

மேலும் படிக்க ...

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது.

இக்கட்டுரை இக்கவிதைத் தொகுதியை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

இக்கவிதைகள் இலங்கையில் இன்னும் நீறு பூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினை, பதவிக்காக இனவாதத்தைத் தேசபக்தி என்னும் போர்வையில் பேசும் அரசியல்வாதிகள், யாழ் நூலக எரிப்பு , தீண்டாமை மற்றும் வரதட்சணைச் சமூகக்கொடுமைகள் போன்றவற்றை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றது என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

பதவிக்காக தேசபக்தி என்னும் போர்வையில் இனவாதம் பேசும் ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசியல்வாதிகளை 'ஆளும் நரிகள்' என்று கவிஞை வர்ணிக்கின்றார் என்பதையும், அந்நரிகளே சொர்க்கத்தீவின் சீரழிவுக்குக் காரணமென மேலும் அவர் குற்றஞ் சாட்டுகின்றார் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

மெய்நிகர் அரங்கு: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு ! கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். - முருகபூபதி -
  2. தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
  3. தொடர் நாவல்: கலிங்கு (2009 -6) - தேவகாந்தன் -
  4. தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (4-7)! - ஜோதிகுமார் -
  5. இசைக்கலைஞர் வர்ணவர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  6. சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
  7. தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (1 - 3)! - ஜோதிகுமார் -
  8. ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -
  9. கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -
  10. ஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம்! - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -
  11. முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் அனுபவமும்' - வ.ந.கிரிதரன் -
  12. வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' - வ.ந.கி -
  13. பேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -
  14. என்னுரை! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 88 / 104
  • முதல்
  • முந்தைய
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • அடுத்த
  • கடைசி