அத்தியாயம் பத்து -  ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன.  ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.

"என்ன கண்ணா யோசனை?"

எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.

"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"

"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."

"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப்  பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில்  பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."

"அப்போ, இந்த முறுவல், உடம்பு இவற்றிலெல்லாம் உனக்குப் பிடிப்பேயில்லையா கண்ணா?" இவ்விதம் பொய்க்கோபத்துடன் கேட்டுவிட்டு நகைத்தாள் மனோரஞ்சிதம்.

"கண்ணம்மா, உன் உடலழகு வேறு. உளத்தினழகு வேறு. ஆனால்.."

"ஆனால் .. என்ன கண்ணா?"

'கண்ணம்மா, உடலழகு நிலையற்றது. ஆனால் உளத்தினழகோ இருக்கும் வரையில் நிரந்தரமானது."

"உண்மைதான் கண்ணா, சரியாகத்தான் சொன்னாய். "

"உடலழகு  பற்றிய மயக்கம் ஒரு காலகட்டம் வரைக்கும்தான். ஆனால் உளத்தினழகோ அதனை மீறியது. இருப்புக்கு அர்த்தம் , நிறைவு தருவதே இந்த உள்ளத்தினழகுதான் கண்ணம்மா. உனக்கு அந்த அழகு தேவைக்கு அதிகமாகவே உண்டடி."

"போதும் கண்ணா, அது சரி  இருந்தாற்போலுனக்கு எதற்காக இந்தக் கட்டடக்காடு பற்றிய விசாரம்?"

"வழக்கம்போல் நீ வருவதற்கு முன் சிறிது நேரம் ஆதி மனிதனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். எனக்கு அவனை நினைத்தால் ஒருவிதத்தில் ஒரே பொறாமையாகவுள்ளது. அவனுடனான உரையாடல்தான் கட்டடக்காடு பற்றிய விசாரத்தைத் தோற்றி விட்டது கண்ணம்மா"

"அப்படியேன் உனக்கு ஆதியின் மேல் அவ்வளவு பொறாமை கண்ணா?"

'அதுவா.. அதற்குக்  காரணமே அவனது இயற்கையுடனான இருப்புத்தான். அதுதான் முக்கிய காரணம். அவன் வாழ்ந்த காலத்தில் நகரங்கள் இல்லை. கட்டடக்காடுகள் இல்லை. தூய்மை மிகுந்த இயற்கையுடன் அவனது இருப்பு அமைந்திருந்தது கண்ணம்மா. அதுதான் முக்கிய காரணம் கண்ணம்மா. அதுதான் முக்கிய காரணம்."

" கண்ணா  நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அப்படித்தான் தோன்றினாலும் மறுபுறத்தில் சரியில்லையே.."

"ஓரு புறத்தில் சரி. மறுபுறத்தில் சரியில்லையா? என்ன புதிர் போடுகிறாய் கண்ணம்மா? நம்ம வடிவேலு நகைச்சுவை போலல்லவா இருக்கிறது உன் வார்த்தைப் பிரயோகம். சரி, ஆனால் சரியில்லை."

இவ்விதம் கூறிவிட்டு இலேசாகச் சிரிக்கின்றேன். ஆனால் அச்சிரிப்பை அலட்சியம் செய்தவளாக மனோரஞ்சிதம் கூறினாள்:

"கண்ணா,  நீ பொறாமைப்படும் ஆதி மனிதன் இயற்கையுடன் வாழ்ந்தாலும், அவன் குகைகளில் வாழ்ந்த தாய் வழிக் குழுச்சமுதாயச் சூழலில் வாழ்ந்தவன். இன்றுள்ள மனிதருடன் ஒப்பிடுகையில் அறிவியலில் அரிச்சுவடியாகவிருந்தவன்."

"இருந்தாலென்ன கண்ணம்மா, அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டுமே. இயற்கையை மாசு படுத்தி, போர்கள் நிறைந்த உலகத்தில் வாழும் இன்றுள்ள மாந்தருடன் ஒப்பிடுகையில் ஆது மானுடர் எவ்வளவோ மேலென்றுதான் தோன்றுகின்றது. எதிர்பார்ப்புகள் குறைந்த இயற்கையுடன் அரவணைத்த வாழ்க்கை. நல்லதுதானே கண்ணம்மா?"

"கண்ணா,  மானுடரின் முக்கிய அம்சமே ஆறாவது அறிவுதான். பகுதறியும் ஆறாவது அறிவுதான் மானுடரை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துவது. அந்த ஆறாவது அறிவு இன்றுள்ள மானுடரில் பல நூறு மடங்கி அபிவிருத்தியடைந்துள்ளது.  நீ பொறாமைப்படும்  ஆதிமானுடர் ஒரு விதத்தில் மிருகங்களைப்போல் வாழ்ந்தவர்கள். நான் அவர்களைப்பார்த்துப் பரிதாப்படுகின்றேன் கண்ணா."

இவ்விதம் கூறிவிட்டு மனோரஞ்சிதமே தொடர்ந்தாள்:

'கண்ணா, ஆதிமனிதர் காலத்து இயற்கை மாசற்ற நிலையில் இருந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது அறியாமை. அறிவு வளர வளரத்தானே தொழில் நுட்பமும் வளர்ந்தது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சிதானே மனித சமுதாயத்தின் வளர்ச்சி. ஆனால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி  நேர்மறை விளைவுகளுடன் பல எதிர்மறை விளைவுகளயும் கூடவே கொண்டு வந்தது. அதுதான் இன்றுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் கண்ணா"

நான் என் மனோரஞ்சிதத்தின் தெளிந்த நீரோடைபோன்ற , சிக்கல்களற்ற தர்க்கத்தில் , ஞானச்செழிப்பில் ஒரு கணம் என்னை மறந்திருந்தேன்.

அதனைப் பார்த்து அவள் தனக்கேயுரிய மந்தகாசப் புன்னகையுடன் கேட்டாள்:

"என்ன கண்ணா, அப்படியே பிரமித்துப் போய் விட்டாய்."

"கண்ணம்மா, உன் தர்க்கம் என்னைக் கட்டிப்போட்டு விட்டதடி. உன் சிந்தனையின்  வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறதடி. எப்படி உன்னால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதடி. அதுதான் என் பிரமிப்புக்குக் காரணமடி என் செல்லம்மா."

நானே தொடர்ந்தேன்:

"அதுசரி கண்ணம்மா, மனிதரின் இன்றைய ஞானத்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். அப்படியென்றால் நவகாலப்பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வு?'

"கண்ணா, தீர்வு அதிமானுடரின் வரவிலுள்ளது. இன்று நாம் வாழும் இந்நிலவுலகை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றோம். இது மாற வேண்டுமானால் நம் சிந்தனையில் பரிணாம வளர்ச்சி ஏற்பட வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்கச் செயற்படும் அதே சமயம் சிந்தனை வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளையும், விழிப்புணர்வையும் அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். சென்றால்..."

"சென்றால்.. மேலே கூறு கண்ணம்மா. சென்றால் என்ன... கண்ணம்மா."

'கண்ணா, நாம் வாழும் இவ்வுலகில் வாழும் மானுடர்கள் மட்டுமே முக்கியமானவர்கள் அல்லர். 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்' என்றான் ஒரு கவிஞன் அன்று. பண்டைத்தமிழ்க் கவிஞன் அவன். கண்ணா, அவன் கூறும் 'யாவரும்' மனிதரை மட்டும் குறிப்பதாக நான் கருதவில்லை. இந்நிலவுலகில் வசிக்கும் அனைத்து வகை உயிர்களையும் குறிப்பதாகவே நான் கருதுகின்றேன்.  இவ்வுலகின் நிம்மதிக்கு, தூய்மைக்கு முதலில் நாம் உருவாக்கும் கட்டடக்காடுகளை நிறுத்த வேண்டும். கட்டடக்காடு என்னும் பெயரில் நிஜ மரங்களை அழித்துக்கொண்டிருக்கின்றோம். என் புவிக்குடும்பத்து உறவுகளை, பறக்கும் , ஊரும், நீந்தும் உறவுகளை எம் நலன்களுக்காகக் கொன்ரூ குவித்துக்கொண்டேயிருக்கின்றோம். இதனை நாம் முதலில் நிறத்த வேண்டும். அதற்குத்தான் அதிமானுடரின் வருகை முக்கியம் கண்ணா."

'கண்ணம்மா, உன் கூற்று எனக்கு என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகள் சிலவற்றை நினைவூட்டுகிறதடி."

"என்ன வரிகள் கண்ணா?"

"பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்.
மண்மீ துள்ள , மக்கள், பறவைகள்;
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்..."

பாரதியாரின் இக்கவிதை வரிகளைக் கேட்டதும் மனோரஞ்சிதம் ஓடி வந்து என்னை வாரியணைத்துக் கொண்டாள். அத்துடன் "அற்புதமான கவிதை வரிகள் கண்ணா" என்று கூறியவாறே ஒரு தடவை என் இடது கன்னத்தில் பலமாக முத்தமிட்டாள். என் மனோரஞ்சிதத்துக்கு இன்பம் அளவு மீறி விட்டால் இப்படி நடந்து கொள்வதொன்றும் புதியதல்ல. அவள் அணைப்பும் , இதழ்களின் மென்முத்தமும் தந்த உன்மத்தத்தில் நான் கூறினேன்:

"கண்ணம்மா, ஆதி மானுடரின் வாழ்க்கையில் அழகிருந்தது. இனிமையிருந்தது. கூடவே அறியாமையுமிருந்தது. நவ மனிதரின் வாழ்க்கையில் அறிவு மயக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலை மாறவேண்டுமானால் அதிமானுடரின் அறிவுத் தெளிவின் அவசியம் முக்கியம். அதிமானுடர் பற்றி நம்மூர் எழுத்தாளர் மு.தளையசிங்கமும் தன் தர்க்கத்துக்குரிய வகையில் பிரபஞ்ச யதார்த்தவாதம் பேசினார். கவிஞர் நுஃமானும் அதிமானுடர் பற்றி தன் கோணத்தில் சிந்தித்தார். மேனாட்டு எழுத்தாளர்கள் பலரும் அவ்வப்போது சிந்தித்திருக்கின்றார்கள். எழுதியிருக்கின்றார்கள். ஒரு விதத்தில் இற்றைய மானுடரின் பிரச்சினைகளுக்கான தீர்வு அதிமானுடரின் வருகையில்தான் தங்கியுள்ளதாகத் தோன்றுகின்றது."

அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!

எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here