பதிவுகள் முகப்பு

13 ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் , மார்க்சிய அறிஞருமான அ.வரதராஜப்பெருமாளின் கருத்துகள்!

விவரங்கள்
- பகிர்ந்துகொண்டவர் அ.வரதராஜப்பெருமாள் -
அரசியல்
20 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." - வள்ளுவர் -

தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.

அவ்வகையில் அண்மையில் இவர் பகிர்ந்திருந்த இலங்கை , இந்திய அரசுகளுக்கிடையிலேற்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய கருத்துகளை 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான அரவிந்தன் என்னும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு அது பற்றி அளித்திருந்த பதில்களைப் பகிர்ந்திருந்தார். தெளிவான பதில்கள். உபகண்ட அரசியலை நன்கு விளங்கியுள்ளதை வெளிப்படுத்தும் பதில்கள்.

மேலும் படிக்க ...

பெற்றுக்கொண்டேன் கத்யானா அமரசிங்கவின் நாவல் 'தரணி'யை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் தமிழில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளிவந்து விருதுகளைப்பெற்ற நாவல் எழுத்தாளர் கத்யானா அமரசிங்கவின் 'தரணி'நாவல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்.
மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் தோழர் பா. விசாலம் மறைவு! - அசோகன் யோகன் கண்ணமுத்து -

விவரங்கள்
- அசோகன் யோகன் கண்ணமுத்து -
இலக்கியம்
15 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- எழுத்தாளர் பா.விசாலம் அவர்கள் மறைந்த செய்தியினை சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அசோகன் யோகன் கண்ணமுத்து தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் பா.விசாலம் அவர்களின் மறைவால் வாடி நிற்கும் அனைவருடன் நானும் இணைந்து கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார்!  - அசோகன் யோகன் கண்ணமுத்து -
 

எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார், எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்களும் அவரது வாழ்க்கைத்துணைவராக ஏற்ற தோழர் ராஜூ அவர்களும் நாகர்கோவிலில் களப்பணியாற்றியவர்கள். தோழர் பா. விசாலம், இரு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாய வாழ்வு நோக்கி தங்களை உட்படுத்திக்கொண்ட தோழர்கள் அவர்கள் தோழர் ராஜூ பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். தோழர் பா. விசாலம் எனும் பெயர் நிலைகொண்டது. (தகவல்: தளம் இதழ்)

எட்டு வருடங்களுக்கு முன்னர், தோழர் விசாலம் அவர்களின் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்' நாவல் பற்றி நான் எழுதிய குறிப்பை மறுபதிவு செய்கின்றேன். தோழருக்கு என் இதய அஞ்சலி!
மேலும் படிக்க ...

காதலர்தினக் கவிதை: காதல் நெஞ்சம்!  - ஜெயா ஸ்ரீ -

விவரங்கள்
- ஜெயா ஸ்ரீ -
கவிதை
15 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அழகே உனது
கண்களே கவிதை.
அன்பால் ஈர்த்தே
அகத்தை நிறைத்தாய்.

உயிரின் உயிரே
உண்மைக்கு காதலே.
உயிருள்ள வரை
பிரியாத மையலே.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வழங்கும் கவிஞர் இந்திரனின் சிறப்புரை: திராவிடச் சிற்பங்களும், அவற்றின் அழகியலும்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி-
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Meeting ID: 834 2958 4996 | Pass code: 493623
Web: www.atlasonline.org
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Time: February 19, 2022

காதலர்தின வாழ்த்துகள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
13 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://www.youtube.com/watch?v=AwazG88Jhug

மானுட உணர்வுகளில் காதல் உணர்வுகள் அற்புதமானவைு. ஏனென்றால் குடும்ப உறவுகள் தவிர்த்து முதல் முறையாக இன்னொருவருடன் உயிரும், உள்ளமும் கலந்து உறவாகும் உறவு , உணர்வு காதல். அவ்வகையில் அது மானுடரின் பருவ வளர்ச்சியில் முக்கியமானதொரு படி.

முதற்காதலோ, நிறைவேறிய காதலோ, நிறைவேறாத காதலோ, ஒரு தலைக் காதலோ அது எவ்வகையாகவிருப்பினும் அக்காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோரிடத்தைப் பிடித்த உணர்வுகள் என்றால் அது மிகையான கூற்றல்ல. நான் கூறுவது தூய்மையான காதலுணர்வுகளை. அவ்வுணர்வுகளில் தன்னலம் இருக்காது. பழி வாங்கும் வெறி இருக்காது. தன் காதலுக்குரியவரின் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்கும்.

மேலும் படிக்க ...

அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!' & அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
13 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14!

அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!' 

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (அறிஞர் அ.ந.கந்தசாமி என்ற அழைக்கப்பட்டவர்) அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் நினைவாக இந்நினைவுக் குறிப்பு வெளியாகினறது. கதை, கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் காத்திரமாகக் கால் பதித்தவர் அ.ந.க. பத்திரிகையாசிரியராக (தேசாபிமானி, ஆரம்பகால சுதந்திரன், இதழாசிரியராகவும் (இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடான ஶ்ரீலங்கா சஞ்சிகை) அவரது பங்களிப்பு பரந்து பட்டது. இதுவரை அவரது வெளிவந்த படைப்புகள்: வெற்றியின் இரகசியங்கள் , உளவியல் நூல் (பாரி நிலையம், 1966), மதமாற்றம் (நாடகம், வெளியீடு: தேசிய கலையிலக்கியப் பேரவை), மனக்கண் (மின்னூல்,அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு: பதிவுகள்.காம்), 'நான் ஏன் எழுதுகிறேன்' (மின்னூல், அமேசன்-கிண்டில் பதிப்பு, 14 கட்டுரைகளின் தொகுப்பு), எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு, மின்னூல்: அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு : பதிவுகள்.காம்). மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அ.ந.க சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். 

தமிழ்க் கவிதைப்பரப்பில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைப்பரப்பில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகளிலொன்றாக நான் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்' என்னும் கவிதையினைக் கூறுவேன். ஆனால் இலங்கைப் பேராசிரியர்கள் அல்லது இந்திய விமர்சக வித்தகர்களின் பார்வையில் இக்கவிதை ஏன் படவில்லை என்பது புரியாத புதிர் என்பேன். பேராசிரியர் நுஃமானின் பார்வையில் கூட அ.ந.க.வின் சிறந்த கவிதைகள் எதுவும் பட்டதாக இதுவரை அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் எவற்றிலும் நான் கண்டதில்லை (அ.ந.க.வின் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை மட்டும் . 'தேன்மொழி' கவிதையிதழின் ஐப்பசி 1955 பதிப்பில் வெளியான 'கடைசி நம்பிக்கை' என்னும் கவிதையை மட்டும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்). விமர்சகர்கள் எவரது பார்வையிலும் படாத அ.ந.க.வின் சிறந்த கவிதைகளைப்பற்றி எழுத்தாளர்கள் பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்தனி ஜீவா, அகஸ்தியர் , முருகையன் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கவிஞர் முருகையன் இக்கவிதையின் சிறப்பைச் சிலாகித்துக் கூறியிருந்ததை வாசித்திருக்கின்றேன். (இன்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் சி.ரமேஷ் கூட அ.ந.க.வின் படைப்புகளைத் தவற விட்டிருக்கின்றார். அண்மையில் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட 'ஈழத்து நாவல் சிறப்பித'ழில் ஈழத்து நாவல்கள் பற்றிய சி.ரமேஷின் நீண்ட நெடுங்கட்டுரையில் தினகரனில் வெளியாகி வாசகர்களின் பாராட்டுதல்களைப்பெற்ற 'மனக்கண்' நாவல் பற்றியோ, அவர் மொழிபெயர்ப்பில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எமிலி சோலாவின் 'நானா' நாவல் பற்றியோ குறிப்புகள் எவற்றையும் காண முடியவில்லை. இத்தனைக்கும் அ.ந.க.வின் படைப்புகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன. ஜெயமோகன் கூடத் தனது தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நூலில் அ.ந.க.வின் 'மனக்கண்' பற்றிக் குறிப்பிடத்தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.)

மேலும் படிக்க ...

குரு அரவிந்தனின் காதலர் தினக் கதைகள்!

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அரசியல்
13 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 1. என் காதலி ஒரு கண்ணகி

நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.

மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.

சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?

மேலும் படிக்க ...

அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?   - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
13 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெப்ருவரி 14 காதலர் தினம்!

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, அல்லது பரிமாறிக்கொள்ள இந்த நாள் உகந்ததாகவும் இருப்பதால், ‘காதலர்கள் தினம்’ என்றும் குறிப்பிடுவர். சில நாடுகளில் 9 நாட்கள் இதைக் கொண்டாடுவர். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்பதால், தொடக்கத்தில் அன்பைப் பரிமாற காதலர்கள் இயற்கை தந்த மலர்களையும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு போன்றவற்றையும் பரிமாறினர். அதன் பின் கையால் எழுதிய வாழ்த்து மடல்களையும், தொடர்ந்து அச்சு யந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட வாழ்த்து மடல்களைப் பரிமாறும் வழக்கமும் அறிமுகமானது.

வெலன்ரைன் தினம் எப்படி அறிமுகமானது என்பதைப் பார்ப்போம். மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசனான இரண்டாம் கிளாடியஸ் பேரரசர் இரண்டு பேருக்குத் தண்டனை கொடுத்து அவர்களை பெப்ரவரி 14 ஆம் திகதி தூக்கிலிட்டார். வெவ்வேறு ஆண்டுகளில் அவர்கள் தூக்கிலிடப் பட்டாலும் அவர்களைப் போன்ற தியாகிகளுக்கு வெலன்ரைன் என்று பெயரிட்டார்கள். பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று நடந்ததால், அவர்கள் செய்த தியாகம் புனித காதலர் தினமாகப் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப் படுகின்றது. இதைப்பற்றி, ‘செயிண்ட் வெலன்ரைன் தினத்திற்கானது இது, ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது’ என்று ஜெப்ரி சாஸர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க ...

நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) கவிதைகள்!

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
கவிதை
13 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1. உலகின் பெரிய ஆயுதம்

காலையில் கண்விழிக்கிறேன்
வெற்றிடம் தான் என் வீடாகத் தெரிகிறது
பானைக்குள் இருக்கும் வெற்றிடம்போல்...
குளிப்போடு தண்ணீரை ரசிக்கிறேன்
குளியலறையில் தனிமையில் தினசரி
மர்மமான தண்ணீர்
மூடித் திறக்கிறது பிரபஞ்சம்
விபரிக்க முடியாத விந்தை அது!
குளியலறையில் காமங்களும்
கண்ணீர்ப்பாடல்களின் முணுமுணுப்பும் தான்!
நீருக்குள் என் பாடல்களை ஓசையாக்குகின்றேன்!
சாதாரணம் அது அசாதாரணம் போல் தெரிகிறது!
நீரின் ஓசையுள் என் கோபத்தையும் இசைக்கிறேன்
நிகழ்வுகள் சுருதியாகி கவிதைக்குள் இனிக்கிறது
தனிமை காணும் கனவு வெறும் வனப்பூச்சி அல்ல
தண்ணீரைத் தொடும் அழகிய என் அனுபவம்
அந்த ரசனை! ஆ...அற்புதம்!
தண்ணீர்தான் உலகின் மிகப் பெரிய ஆயுதம்
திறக்க முடியாத யன்னல்களை
மூடிவிரிக்கும் உலகின் கண்ணாடி அந்தத் தண்ணீர்தான்!

30.1.2022.

மேலும் படிக்க ...

பதிவுகள் வாசகர் கடிதங்கள்!

விவரங்கள்
Administrator
வாசகர் கடிதங்கள்
12 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- வாசகர்களே! உங்கள் ஆக்கபூர்வமான 'பதிவுகள்; இணைய இதழ் பற்றி, இவ்விதழில் வெளியான ஆக்கங்கள் பற்றி எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


 

ஓவியர் சதானந்தன்:
Sat, Feb 12 at 9:41 a.m.

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, இலங்கையிலிருந்து, சதானந்தன் எழுதிக் கொள்வது, தங்களது தேக, உள ஆரோக்கியம் வேண்டி முதற்கண் ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கின்றேன். தங்களது பயன்மிகு நேரத்தை சிரமம் பாராமல் செலவிட்டு எனது நேர்காணல்களை, வடிவமைப்புடன் நேர்த்தியாய், தங்களது 'பதிவுகள்' இணைய தளத்தில் பதிவிட்டு அதனை பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றீர்கள்.தங்களது இந்த உதவி கிட்டாவிடில், இப்பேட்டி வாசகர்களிடம் முழுமையாய் சென்று சேர்வது என்பது சாத்தியமில்லை என்றே நான் கருதுகின்றேன். தங்களது இந்த உதவிக்கு எனது பெரு நன்றிகள் என்றும் உரித்தாகும். மேலும் தங்களது எழுத்து/இலக்கிய பணிகள் மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி.
இப்படிக்கு அன்புடன் சதானந்தன்.


மேலும் படிக்க ...

இசையமைப்பாளர் வேதாவின் காலத்தால் அழியாத கானங்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசையமைப்பாளர் வேதா காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் பலவற்றை வழங்கியவர். ஒரு சில மேனாட்டுப் பாடல்களின் தழுவல்களுமுண்டு. தமிழ்த்திரையுலக இசையில் தழுவாதவர்கள் யாருளர்?

மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம் இசையமைப்பாளர் வேதா என்று. அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றே கூறுமளவுக்கு அந்நிறுவனத்துக்காக அதிக எண்ணிக்கையில் அவர் இசையமைத்துள்ளார். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கரையும், வேதாவையும் பிரிக்க முடியாதென்று கூறுமளவுக்கு அதிக அளவில் அவரது திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் வேதா.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, விஜயலலிதா, சி.ஐ.டி.சகுந்தலா போன்றோர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு இசையமைத்த வேதாவின் பாடல்கள் பல காலத்தால் அழியாதவை. வேதாவின் இசையமைப்பில் வெளியாகி எம்மையெல்லாம் துள்ள வைத்த, கிறங்க வைத்த துடிப்புள்ள பாடல்கள் பலவற்றைப் பின்வரும் இணைப்பில் கண்டு, கேட்டுக் களிக்கலாம்: https://www.youtube.com/watch?v=E5hbXdGgbbE

மேலும் படிக்க ...

13வது திருத்தம்! (கட்டுரை தொடர்ச்சி) - யோ.திருக்குமரன் -

விவரங்கள்
- யோ.திருக்குமரன் -
அரசியல்
12 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மித்த நிகழ்வுகள்:

பகுதி 1

அண்மையில், இலங்கையில் காணப்பட்ட நகர்வுகள் முழு தமிழ் உலகத்தையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்த கூடியவைதான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒன்று, வடக்கே, 13வது திருத்தம் வேண்டாம் என கோரி, போராடிய நிகழ்வு. மற்றது இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கம் பூணும் நோக்குடன் தனது நகர்வுகளை ஆரம்பித்த நிகழ்வு. இவ்வகையில், இதனுடன் தொடர்புபட்ட, பேராசிரியர் கணேசலிங்கனின், மிக அண்மித்த கட்டுரை ஒன்றின் தலைப்பானது, இவ்வாறு அமைந்திருந்தது:

“இந்தியாவுடன், இலங்கையின் நெருக்கமான உறவுக்கான அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான உத்திகளா?” (தினக்குரல்--06.02.2022).

மேற்படி தலையங்கம் எழுப்பக்கூடிய பிரதானமான கேள்விகள் இரண்டே இரண்டுத்தான்:

i. ஒன்று: மேற்படி ‘அணுகுமுறைகள்’ என்பன யாவை?
ii. இரண்டாவது: அவ்அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான, ‘உத்திகளாக’ செயற்படுகின்றனவா, என்பனவையே அவை.

மேற்படி இரண்டு கேள்விகளும், ஒன்றை ஒன்று சார்ந்தது அல்லது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதாவது, கிழக்கு முனைய ஒப்பந்தம் போல், 13ஐயும் ஒருதலைபட்சமாக கிழித்தெறியப்பட முடியாது போனால், நிச்சயம் அது இந்திய ஒத்தாசையுடனேயே ஆற்றப்பட வேண்டிய கருமமாகும். எனவேத்தான் 13ஐ நீக்க வேண்டும் எனில் முதலில், இவ் ‘அணுகுமுறைகள்’ மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை ஆகின்றது. இதனால்தான், ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியப்பட்டது போல கடனுதவியை நாட, உலக வங்கியை அணுகாமல், இலங்கையானது, ஏன் இந்தியாவை நாடுகின்றது என்ற கேள்வி, இன்று, என்றைக்கு விடவும் மிக முக்கியமானதாகின்றது. இதனையே வேறு வார்த்தைகளில் கூறிவதென்றால், கடனுதவியை இந்தியாவிடம் இருந்து கோருவதன் நோக்கம் இரண்டாகலாம்:

மேலும் படிக்க ...

கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஆக்கங்கள்! - சுலோச்சனா அருண். செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். -

விவரங்கள்
- சுலோச்சனா அருண். செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். -
இலக்கியம்
12 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கின்றன என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கான ஆவணங்களாகவும் நிலைத்து நிற்கப் போகின்றன என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முதலிடம் தந்து, புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் வெள்ளிவிழாக் கொண்டாடும் உதயன் பத்திரிகை, செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், மற்றும் இருசு பத்திரிகை, பதிவுகள், திண்ணை போன்ற இணையத்தளங்களில் வெளிவந்த பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள், சில புதினங்கள் பற்றி அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஜீவநதி இதழ் தனது 150வது இதழைச் சமீபத்தில் ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக 475 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. அதில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் கனடியபத்திரிகையில் தொடராக வெளிவந்த சில நாவல்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இதைவிடச் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச ரீதியாக நடந்த சிறுகதை நாவல் விமர்சனப் போட்டியிலும் குரு அரவிந்தனின் சிறுகதைகள், மற்றும் நாவல்கள் சில, 14 நாடுகளில் இருந்து வாசகர்களால் திறனாய்வு செய்யப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களில் இருந்தும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டிக் குறிப்பிட விரும்புகின்றேன்.

உதயன் பத்திரிகையில் கடந்த காலங்களில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் நாவல், சிறுகதைகளில் உறங்குமோ காதல் நெஞ்சம் (2004) உன்னருகே நானிருந்தால் (2004) எங்கே அந்த வெண்ணிலா (2006) சொல்லடி உன் மனம் கல்லோடி (2018) அம்மாவின் பிள்ளைகள் (2019)ஆகிய தொடர் நாவல்கள், மற்றும் குமுதினி போன்ற குறுநாவல்களும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இதைவிட உதயன் பத்திரிகையில் வெளிவந்த அனேகமான சிறுகதைகளும் இதுதான் பாசம் என்பதா (2002), என்காதலி ஒரு கண்ணகி (2001), நின்னையே நிழல் என்று (2006), தங்கையின் அழகிய சினேகிதி (2020), சதிவிரதன் (2019), குரு அரவிந்தன் சிறுகதைகள் (2005) போன்ற சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கள் தமிழ்நாட்டில் உள்ள மணிமேகலைப்பிரசுரம், இனிய நந்தவனம் பதிப்பகம் போன்றவற்றால் வெளியிடப்பெற்றன. கனடிய பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆக்கங்கள் பற்றிச் சில சான்றோர்கள், எழுத்தாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கே தரவிரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் (இசை, நடனம்) - மாணவர்களுக்கான நிகழ்ச்சி.

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
11 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை! - மைதிலி தயாநிதி -

விவரங்கள்
- மைதிலி தயாநிதி -
இலக்கியம்
10 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இக்கட்டுரையானது கனடாவிலே இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளாகத் தமிழில் படைத்த சிறுகதை இலக்கியம் பற்றிய ஒரு பருந்துப் பார்வை ஆகும். இது எனது வாசிப்பு அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை அன்று என்பதை மனதில் இருத்திக் கொண்டு மேலே வாசிக்கவும். வன்முறை காரணமாக 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலிருந்து தமிழர் அகதிகளாகக் கனடாவில் தஞ்சம் தேடியமையே ”கனடாத் தமிழ் இலக்கியம்” எனும் நாடு வாரியான இலக்கிய வகையின் தோற்றப்பாட்டிற்குக் காரணமாய் அமையும். இவ்வாறு கனடாவிற்கும், ஐரோப்பாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந்தவர்கள் படைத்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும், புலம் பெயர்ந்தவர் இலக்கியம் என்றும் அழைத்தார்கள். இரண்டையும் ஒரே பொருளில் வழங்குபவர்களும் உண்டு. அதே சமயம், புகலிட இலக்கியம் என்பது புலம் பெயர் இலக்கியத்திலிருந்து வேறுபட்டது என வாதிடுவோரும் உண்டு. பேராசிரியர் பாலசுந்தரம் தாம் எழுதிய கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் எனும் நூலில் கனடாத் தமிழ் இலக்கியம் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்துகின்றார்.

கண்டம் வாரியாக அல்லது நாடு ரீதியாகக் கதைகளை நோக்கும் முறைமையை 1994 ஆம் ஆண்டில் தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும், இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. வும் வெளியிட்ட பனியும் பனையும் எனும் நூலில் அவதானிக்கலாம். அத்தொகுப்பில் உள்ள கதைகளை ஆஸ்திரேலியக்கதைகள், ஐரோப்பியக்கதைகள், வட அமெரிக்கக் கதைகள் என முப்பிரிவினதாகத் தொகுப்பாசிரியர்கள் வகுத்துள்ளனர். மேலும், ஐரோப்பியக் கதை ஒவ்வொன்றும் எந்தெந்த நாட்டிற்குரியது என்ற செய்தியையும் அவர்கள் தந்துள்ளனர். இப் பகுப்பு முறையின் அடிப்படை என்ன என்பது குறித்து இந்திரா பார்த்தாசாரதி பின்வருமாறு கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! - சக்தி சக்திதாசன், லண்டன் -

விவரங்கள்
- சக்தி சக்திதாசன், லண்டன் -
அரசியல்
10 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.

ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர். ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் என்னும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா. கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.

2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது. அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே. இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.

மேலும் படிக்க ...

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு!  - த. நரேஸ் நியூட்டன் -

விவரங்கள்
- த. நரேஸ் நியூட்டன் -
இலக்கியம்
10 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும் அவை சார் வெளியீட்டு நிகழ்வுகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுள் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய வெளியீடுகளில் நூல் வெளியீடுகள் முக்கிய இடம்பெறுகின்றன. நூல் வெளியீடுகளில் பல தரப்பினரும் அழைப்பிற்கு அமைவாக கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் அண்மையில் எனக்கும் ஒரு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எனது மனதில் பதிந்த சில விடயங்களை வைத்துக்கொண்டு நூல் வெளியீடுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் பொருட்டு இந்த ஆக்கத்தை படைத்துள்ளேன். இங்கு மூத்த எழுத்தாளர்களை தவிர்த்து புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிட்டமைக்கு காரணம் மூத்த எழுத்தாளர்களைப்பொறுத்தவரை அவர்கள் போதுமான அனுபவங்களைப் பெற்றவர்கள். ஆகவே முக்கியமாக புதிய எழுத்தாளர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.

அண்மையில் பிரபல எழுத்தாளர் ஒருவருடைய காணொளியொன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த காணொளியில் ஒரு சந்தர்ப்பத்தில் ‘இன்று எழுத்தாளர்களுள் சிலர் வெளியீட்டு மோகம் உள்ளவர்களாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்’ அதாவது தாம் எழுதிய படைப்பை வெளியிட்டுவிடவேண்டும் என்ற அவா அவர்களிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கருத்துப்பட ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அவசரம் அவசரமாக வெளிவரும் பல வெளியீடுகளை பார்க்கையில் இவரது கருத்து மிக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. இந்த விடயமும் எனது மனதின் ஆழத்தில் பதிந்திருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது அந்த விடயமும் இந்த வெளியீட்டு நிகழ்வின் போக்கும் அனேகமாக இந்த ஆக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைகிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: இரக்கம்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
09 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சசியின் கையிலிருந்த சிறு அட்டைத்துண்டைக்கூர்ந்து பார்த்தாள் அன்னபூரணி. அவள் முகம் இருளடைந்து தொங்கிப்போயிற்று. அவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் த்தும்பியது

“ என்னடி இது “ தப்பு நடந்து போச்சக்கா “

“ அடி பாவி மகளே இப்பிடி வந்து நிக்கறியாடி .. யாரு காரணம் . இந்தவீட்லே இருக்க விட்டதுதானா தப்பு “

“ அவசரப்படாதேக்கா.. உனக்கு அதிர்ச்சிதா உடனே என்னோட நல்லா சிரிச்சுப் பேசறது பாவா நெனப்புலே வர்றாரா. அதெல்லா இல்லெ ..இது க்கு என் பாய் பிரண்ட்தா காரணம் “

“ அய்யோ இதெ நான் உங்க பாவாகிட்ட மொத்ல்லே எப்பிடி மறைக்கிறது"

குளியலறைக்குள் சட்டென நுழைந்த அன்னபூரணி சசி கண்ணாடியைப்பார்த்தபடி நின்று கொண்டு 'பிரக்னன்சி கிட்'டைப்பார்த்துக்கொண்டிருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனாள். அது இரட்டைக்கோடுகளைக்காட்டியது.

சசி முன்னதாக் சிறுநீர் சொட்டுக்களை அதில் விட அது இரண்டு கோடுகளைக்காட்டியது. ஒற்றைக்கோடாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் அது அவளுக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. காலையில் நானே பால் வாங்கப்போறன் என்று சசி கடைக்குக் கிளம்பிய பாவாவிடம் சொல்லி விட்டு சென்றாள். மருந்துக்கடையில் பிரக்னன்சி கிட்டை வாங்கினாள். அவசரகதியில் குளியறைக்குள் நுழைந்து சோதிக்க ஆரம்பித்து விட்டாள்.

சசியின் உடம்பில் வியர்வை வழிந்தோடியது. வலது மூலையில் கிடந்த பாவாவின் அழுக்குத்துணிகள் அருவருப்பூட்டின.சுவரில் தெரிந்த திட்டுத்திட்டான அழுக்கு அக்கா எவ்வளவு வேலையைத்தான் செய்வாள் என்ற யோசனையைத் தந்தது . அவளின் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் போய் விடுகிறது எப்பவாவது ஞாயிறில் அருணோடு கொஞ்ச நேரம் இருக்க முடிகிறது. மற்றபடி அருணைச்சந்திப்பது அவளின் மதிய உணவு இடைவேளையில்தான் .

மேலும் படிக்க ...

பெருங்கதையில் உவமைகள்!  - மித்ரா -

விவரங்கள்
- மித்ரா -
இலக்கியம்
08 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை:
சொல்லப் புகுவதனைத் தக்க ஒப்புமை கொண்டு உணர்த்துவது உவமை. பேச்சிலும், எழுத்திலும் உவமையைக் கையாளாதவர் எவருமிலர் எனலாம். புலி போலப் பாய்ந்தான், மான்போல ஓடினாள் என எளிய மக்களும் உவமை கூறக் காண்கிறோம். அணிகட்கெல்லாம் தாயாக விளங்குவது உவமை அணியே… சொல்லப் புகும் கருத்து உவமையால் வலிவு பெறுகிறது.

பெருங்கதை உவமை:
பெருங்கதையில் நானூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உவமைகள் ஆளப்பட்டுள்ளன. பெருங்கதையாகிய தங்க வளையலில் உவமைகளாயாகிய மணிக்கற்களைப் பொருத்தமுறப் பதித்து ஆசிரியர் ஒளி கூட்டியுள்ளார்.
ஒரே அடியில் உவமைகளை எடுத்தாண்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் கொங்குவேள் சிறப்பிடம் பெறுகிறார்.

பட்டும் படாப்பேச்சு:
ஒருவரிடம் பலர் வந்து ஒன்றை வேண்டும் போது அவர் கூறும் மறுமொழி, கேட்பவர் தங்கட்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடம் தந்தும் அதே வேளை அவர் எவ்விதப் பிடியும் கொடுக்காமலும் பேசுவதற்குக் குரங்கு தன் குட்டியைத் தாங்குவது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. குட்டி தன்னை நன்றாகப் பற்றிக் கொள்ளத் தாய்க்குரங்கு இடந்தருகிறதேயன்றித் தான் குட்டியைப் பற்றிப் பிடிப்பதில்லை. இவ்வுவமையை ஆசிரியர் கொங்குவேள் பிரச்சோதனன் மூலம் பொருந்திக் காட்டுகிறார்.

மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
நிலைமையொடு தெரிதரு நீதியனாகி
ஆவது துணிதுணை ஆசையின் நிறீஇ
பிரச்சோதனன் பேசினான்.

மேலும் படிக்க ...

இந்திய இசைக்குயில் தன் கூவலை நிறுத்தியது! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடகி லதா மங்கேஸ்கார் மறைந்த செய்தியினை அறிந்தேன். மிகப்பெரிய இழப்பு, ஆனால் அவரது இருப்பு கொண்டாடப்பட வேண்டிய நிறைவான இருப்பு. இனி அவர் தன் கானங்கள் மூலம் நம்மிருப்பில் , வருங்கால மானுட இருப்பில் நிலைத்து நிற்பார். ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக அபிமான் திரைப்படத்திலிருந்து  இரு பாடல்கள்:

1.  https://www.youtube.com/watch?v=QpfolokBUik

2. https://www.youtube.com/watch?v=59EJJrOzTWw

இலங்கை - பெப்ரவரி 4, 2022 : பால்மா இல்லாத சுதந்திரம்! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
05 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மரியாதை வேட்டுகளின்போது
எழும் நச்சுப் புகையில்
பால்மா இல்லாத தேசத்தின்
கொடி சுமந்த
என் குழந்தைகள்
சோர்ந்து விழுந்தார்கள்... 

மேலும் படிக்க ...

மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கேற்பட்ட மிரட்டல்களும், அவரது எதிர்வினையும் பற்றி...

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
05 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.

"நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள். அன்றும் இதே சிரித்த முகத்துடன்  வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்."

என்னும் வரிகள் மருத்துவர் ராஜினி திரணகமாவை நினைவூட்டுகின்றன. ராஜினி திரணகமாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் பெண்ணொருவருக்கு ஏற்படக் கூடாது. அதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.

இவருக்கு நான் கூறுவது இதனைத்தான்:

"உங்களைப்போன்ற துணிச்சலும், அறிவும், சமுதாயப்பிரக்ஞையும் மிக்க இளையவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதே நேரத்தில் உங்கள் மருத்துவத் தொழிலையும் நீங்கள் தொடரலாம். அரசியலில் வருவதன் மூலம் உங்களுக்கும் ஒரு மேலதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் உங்களைப்போன்ற துணிச்சலும், ஆற்றலும், மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள இளையவர்கள் குறைவு. உங்களுக்குள் மருத்துவருடன் கூட சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் இருக்கிறார்கள். அதனால்தான் ஊழல்களுக்கெதிராக உங்களால் இவ்வளவு தூரம் துணிச்சலுடன் செயற்பட முடிகின்றது. நீங்கள் புதியதொரு சமூக நலன் பேணும் அமைப்பொன்றைக்கூட உருவாக்கலாம். அதன் கீழ் ஆயிரக்கணக்கில் பலர் அணி திரளும் சாத்தியமுண்டு. அவ்விதம் செய்தால் யாரும் தனிப்பட்டரீதியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவும் உங்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும்."

மேலும் படிக்க ...

நேர்காணல் பகுதி ஆறு (இறுதிப் பகுதி) : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது, தூரிகையானது நிறங்களில் எப்படி தோய்த்தெடுக்கப்படுகின்றதோ அதைவிட முக்கியமாக வாழ்வில் தோய்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறினீர்கள். அதாவது இவ்விரு அம்சங்களுமே ஒரு ஓவியத்தின் வெற்றியை அல்லது அதன் சாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறினீர்கள். முக்கியமாக ஓவியத்தில் வெளிப்படும் கருப்பொருளானது ஓர் ஓவியரின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலித்தே ஆகும் என்பதனை பிக்காசோவின் ஓவியங்களை கொண்டு நீங்கள் வாதித்தீர்கள். இப்பின்னணியில் இளைய தலைமுறையினருக்கான உங்களின் செய்தி என்னபதில்: இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு தகுதியுடையவன் என்று என்னை நான் கருதி கொள்ளவில்லை. ஆனால் இதை சொல்லலாம். அதாவது இளைய தலைமுறையினர் ஆழ்ந்து, மிக ஆழ்ந்து கடந்த கால ஓவிய பிரமாண்டங்களை கற்க வேண்டும். அது கொன்ஸ்டாபிளாக இருக்கலாம். அல்லது மொனேயாக இருக்கலாம். அல்லது பிக்காசோவாக இருக்கலாம். இது ஒரு துறை. ஆழமான, கண்டிப்பான, மிக பரந்த பரப்பிது. கடும் உழைப்பையும், அர்ரப்பணிப்பையும் கோரக்கூடியது இது.

மேலும் படிக்க ...

சிறுகதை: தொட்டால் சுடுவது..! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
03 பிப்ரவரி 2022
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.

சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக இருந்தது. ஸ்கைடோமுக்கு எல்லாப் பக்கமும் வாசல் இருப்பதால் எந்த வாசலில் சந்திப்பது என்ற சந்தேகத்தில் தான் அவள் சுற்றி சுற்றி வந்தாள். கோயிலுக்குப் போனால்கூட ஒரு தடவை பிரகாரத்தைச் சுற்றிவர கஸ்டப்படுபவள் இன்று இந்த மண்டபத்தை இரண்டாவது தடவை சுற்றி வரும்போது இசையால் எவ்வளவு தூரம் கவரப் பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாள். ரமணியிடம் தான் இவளது டிக்கட்டும் இருந்தது. இவள் வேலை முடிந்து இங்கே வருவதாகவும் ரமணி இங்கே காத்திருப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. என்ன காரணத்தாலோ ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சொற்ப நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போவதாக வேறு அறிவித்து விட்டார்கள். வேறு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகலாம் என்றால் டிக்கட் எல்லாம் விற்பனையாகி விட்டதற்கான ‘சோல்ட் அவுட்’ என்ற அறிவிப்பு வாசலில் பளீச்பளீச் சென்று மின்னிக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர் விமானம். - குரு அரவிந்தன் -
  2. மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கு ஏற்பட்ட நிலை! - வ.ந.கிரிதரன்-
  3. கணையாழி: பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்!  - வ.ந.கிரிதரன் -
  4. சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் ! மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !! - தகவல்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . -
  5. அரசியல் ஆய்வு: மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் -
  6. அறிமுகக் குறிப்பு: க.தணிகாசலத்தின் 'பிரம்படி' - வ.ந.கி -
  7. காணொளி: மக்கள் மனம் நிறைந்த மல்லிகை டொமினிக்ஜீவா - லண்டன் காணொளி - தயாரிப்பு லண்டன் எஸ்.கே. ராஜென் - தகவல்.முருகபூபதி -
  8. கவிஞரே! மீண்டு வருக!
  9. எதிர்வரும் சனிக்கிழமை, பேராசிரியர் சிவசேகரத்துடனான சந்திப்பு நிகழ்வும், அதற்கான Zoom இணைப்பும்! - எம்.பெளசர் -
  10. (தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (8 & 9) - ஜோதிகுமார் -
  11. ஜனவரி 28! மல்லிகை ஜீவா மறைந்து இன்றுடன் ஓராண்டு ! ஜீவாவை நினைவுகூரும் புதிய இரண்டு நூல்கள் ! - முருகபூபதி -
  12. வாசிப்பு அனுபவம் :  முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை! இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் !  - ஜோதிமணி சிவலிங்கம் -
  13. முனைவர் சுனில் ஜோகியின் நீலகிரிப் பாடகர் பற்றிய புதினம் 'மாதி'!
  14. ந. பிச்சமூர்த்தியின் மரபு மனமும் நவீன தெறிப்பும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
பக்கம் 104 / 128
  • முதல்
  • முந்தைய
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • அடுத்த
  • கடைசி