பதிவுகள் முகப்பு

மு.புஷ்பராஜன்: குருநகரின் முகவரி! - மு.நித்தியானந்தன் -

விவரங்கள்
- மு.நித்தியானந்தன் -
இலக்கியம்
21 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக  புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.

லண்டன் வந்த பிறகும் அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது.  விமர்சனக்கூட் டங்களில், கலந்துரையாடல்களில், கருத் தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில்,  கடற்கரைச் சுற்றுலாக்களில், குடும்ப நிகழ்வு களில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புஷ்பராஜன், லண்டனைவிட்டு, தன் குடும்பத்துடன் இணைந்து வாழ கனடா சென்றபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப்பல லண்டன் இலக்கிய நண்பர்களும்தான்.  இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.

புஷ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர்.  மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிற்கையிலே, அருகில் இருந்த பெர்ணபேத் என்னும் தன் சின்னப்பெரியம்மாவை| நினைவுகூரும் மென்மை அது. மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வார்க்கப்பட்ட மென்மை அது. தன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை. 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழக்கி, டமாரம் அடிக்காமல் மௌனமாய் விலகும் மென்மை.  அயலவரை,  ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.

கலகக்காரன் போன்ற tagகளை அவர் குத்திக் கொள்வதில்லை.  நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை.  ஆரவார இலக்கியச் சந்தையில், ஙொய் ஙொய் என்று ரீங்காரமிடும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.

மேலும் படிக்க ...

சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் ‘அச்சமும்’ - ராகவன், லண்டன் -

விவரங்கள்
- ராகவன், லண்டன் -
இலக்கியம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.


சாதியச் சிந்தனையும் நடைமுறையும் மொழி , பண்பாட்டு வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அனைத்து தளங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டின் பின்னணியில் சாதிய அதிகாரக் கட்டமைப்பு இயங்குகிறது. சாதிய அமைப்புக் கொண்ட சமூகங்களில் சாதிய சிந்தனை எவ்வாறு தொழிற்படுகிறது? அது எவ்வாறு இயல்பாக்கம் அடைந்திருக்கிறது? என்பதை அவதானிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கு.

"சாதியம் என்பது வெறும் பாகுபாடு காட்டுதல் அல்ல. பாகுபாடு என்பது சாதியத்தைச் சட்டரீதியாக அணுகும் பக்கம் மட்டுமே. பாகுபாடு காட்டுதல், தீண்டாமை, மனிதவுரிமை மீறல்கள் போன்றவைக்கு அப்பால், மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பாக்கம் அடைந்த சாதிய நடைமுறைகள் ஆபத்தற்றவை என்ற தோற்றப்பாட்டை அளிக்கின்றன" என்கிறார் பாலமுரளி நடராஜன் என்ற ஆய்வாளர்.

பண்பாட்டுத் தளத்தில் பார்க்கும் போது, மத ஆசாரங்கள் தொடங்கி கல்வி, இசை , நாடகம், வழிபாடு, சடங்குகள், அரசியல் , மொழி போன்ற பல்வேறு தளங்களிலும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளிலும் சாதியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. சாதியம் என்பது வாழ்முறையின் பிரிக்க முடியாத அங்கமாகி அரூபமாகத் தொழிற்படும் ஒரு நச்சுக்கிருமி. அத்துடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் சாதி அந்தஸ்து ( caste privilege) என்பதும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. தீண்டாமை, அக மணம், சாதிய வன்முறை போன்ற நேரடியான அடக்குமுறைகள் இலகுவாக அடையாளப்படுத்தக்கூடியவை. எனவே இயல்பாக்கம் பற்றியே இந்த கட்டுரை பேசுகிறது.

மேலும் படிக்க ...

'தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மன வளர்ச்சியும்'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி.-லண்டன்
சமூகம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை -


எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.

'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'; என்றுரைத்து ஒரு குழந்தைக்குத் தன் தாய் தந்தையரின் சொற்களை மனதில் உறுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எங்கள் தமிழ். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று இறையுணர்வை மனதில் பதிப்பது எங்கள் பக்தித் தமிழ். 'தாயைச் சிறந்த ஒரு கோயிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தாரக மந்திரத்தைக் குழந்தையின் மனதில் பதிக்கும் தெய்வீக் மொழி; எங்கள் அருமைத் தாய்மொழயான தமிழ் மொழி. ஓரு மனிதனின் வாழக்கையில் 'எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்'; என்றும்இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்றுரைத்துக் கல்வியின் மகத்துவத்தை இளம்மனதில் வித்திட்டவர்கள் எங்கள் தமிழ்; மூதாதையர்கள். 'பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றுரைத்து ஒரு குழந்தையின்,தன்னைப் பெற்ற தாயையும் தன்னைத் தாங்கிய பிறந்த நாட்டைப் போற்றவும் மனதில் கடமையுணர்சி;சியைப் பதிப்பது எங்கள் தனித்தமிழ். 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கேயுலகு' என்று எங்கள் வாழ்க்கையை எங்கள் மொழியுடன் இணைக்கும் மனத்திடத்தைத் தந்தது எங்கள் தெய்வத் தமிழ்.

மேலும் படிக்க ...

உண்மையை உரைப்பேன்! - நந்தினி சேவியர் -

விவரங்கள்
- நந்தினி சேவியர் -
இலக்கியம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -


1966 அக். 21 ல் சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் எனும் கோசத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆர்த்தெழுந்த மக்கள் பேரணி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாக சகல விளிம்பு நிலை மக்களுடைய இயக்கமாக பரிணமித்தது. அதன் பின்னணியில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ஆணவத்திற்கு எதிரராக நின்றமையால் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அவர்களது காவல் நாய்களாலும் தாக்கப்பட்ட, அடைக்கப் பட்ட எண்ணிறைந்தவர்களை என்னால் அடையாளப்படுத்தப்பட முடியும். நான் மு.தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த இதனை எழுதவில்லை அவரது பணியை வரவேற்கிறேன். ஆனால்  அவரை அவரது செயலை விதந்து பேசுவோர்களது அரசியல் உள் நோக்கம் என்ன.? நான் கூறப்போகும் இரண்டு விசயங்கள் உங்களுக்கு தெரியாதது என சாட்டுச் சொன்னாலும். மு.தளையசிங்கம் இதனை கண்டு கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.

1.  நிச்சாமப் போராட்டம் பற்றி  உலகமே அறியும். மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி   ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றி    மட்டுவில், மந்துவில், கன்பொல்லை சாதி  எதிர்ப்பு நடவடிக்கைககள்பற்றி  தளையசிங்கம் அறியாததல்ல.  அதுபற்றி அவர் ஏன் எழுதவில்லை..?

2.  மான் முத்தையா எனும் சங்கானையைச் சேர்ந்தவர். ஒருகாலம் சங்கானை நகரசபைச் சேர்மனாக இருந்தவர். பஞ்சமர்  சமுகத்தைச் சேராதவர்.  நிச்சாம.  ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்றமையால் தனது சமுகத்தவர்களால் பொலிசில்  காட்டிக்கொடுக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு, சிறுநீர் பருக்கப்பட்டு கொடூரத்தை அனுபவித்த வரலாறு உண்டு. இதனை இந்தப் பிரபஞ்சயதார்த்தவாதியை சிலாகிக்கும்  பிரமுகர்கள் அறியவில்லையா, மு.த கூட அறியவில்லையா.?

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Witty Gardedn என்னும் யு டியூப் சானலில் எனது சிறுகதைகளிலொன்றான 'கணவன்'சிறுகதையைச் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதற்கான காணொளியைப்  பார்த்து,கேட்டு இரசிக்க: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM

Witty Gardedn என்னும் யு டியூப் சானலில் வ.ந.கிரிதரனது சிறுகதைகளிலொன்றான 'கணவன்'சிறுகதையைச் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதற்கான காணொளியைப்  பார்த்து,கேட்டு இரசிக்க: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: மணிமேகலையும் மஹாவம்சமும்!

விவரங்கள்
- ரொறன்ரொ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
18 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மு.த: அவசரக் குறிப்புகள் அல்ல - மு. நித்தியானந்தன் -

விவரங்கள்
- மு. நித்தியானந்தன் -
இலக்கியம்
18 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' கட்டுரைத்தொடர் கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' பத்திரிகையில், 1964/65 காலப்பகுதியில் வெளியான தொடராகும். மு.த. அவர்கள் இத்தொடருக்கு, 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: அவசரக் குறிப்புகள்' என்றுதான் தலைப்பிட்டிருந்தார். இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோதே, 'என்ன அவசரம்?' என்ற தலைப்பில், ப.வயிரவன் 2, 3 இதழ்களில் இக்கட்டுரைத்தொடரை விமர்சித்து எழுதியிருந்தார். கே.எஸ்.சிவகுமாரன், 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற தனது நூலில், மெய்யியலாளர் காசிநாதன் அவர்களே வயிரவன் என்ற பெயரில் விமர்சனங்கள் எழுதிவந்தார் என்று குறிப்பிடுகிறார்.

இந்நூல் ‘க்ரியா’ வெளியீடாக வெளிவருவதற்கான இறுதி வேலைகள் முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்று போட்டிருக்கிறீர்கள். எந்த ஏழாண்டுகள்?' என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டபோதுதான், அவர் அந்நூலின் உட்பக்கத்  தலைப்பில், 1956-1963 என்ற ஆண்டு விபரத்தைச் சேர்த்து, முக்கிய அம்சமொன்றினைச் சுட்டிக்காட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்தார்.

மு.த.வின் 'போர்ப்பறை', ‘புதுயுகம் பிறக்கிறது', ‘கலைஞனின் தாகம்', 'மெய்யுள்', 'ஒரு தனி வீடு' ஆகிய நூல்களையும் கோவை சமுதாயம் பிரசுராலயம் மூலமாகத் தமிழகத்தில் வெளியிட்டுவைத்த பெருமை பத்மநாப ஐயரையே  சாரும்.  பத்மநாப ஐயரின் தன்னலமற்ற முயற்சிகள் பெரும் பாராட்டிற்குரியன.

'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் தன்னைப் பற்றித் தவறாக மு.த. எழுதியிருப்பதாகவும், இந்நூலைப் பிரசுரித்தால், ‘க்ரியா’மீது தான் வழக்குப்போடுவேன் என்று தர்மு சிவராமு அவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தை, ராமகிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.     .  

மு.த.வின் இந்த இலக்கியத்தொடரின் பெருமளவு கட்டுரைச் சேகரங்களை உதவிய மு.புஷ்பராஜனைப் பற்றி இந்நூலில் ஒரு குறிப்பும் இல்லை. சில இதழ்களைத்  தேடி உதவிய விக்னேஸ்வரனுக்கும், நான்கு நாட்கள் மூலப் பிரதியைப் பார்வையிட்டு உதவிய ஜீவகாருண்யத்திற்கும் நன்றி தெரிவித்த பெருந்தன்மை, புஷ்பராஜன் விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை என்று தெரியவில்லை.  மூலப் பிரதியிலிருந்து இந்நூல் தொகுக்கப்பட்டபோது, மூலப் பிரதியின் சில குறிப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 371: மு.தளையசிங்கத்தின் 'போர்ப்பறை'!

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட.

மு.தளையசிங்கம் என்னும் ஆளுமையை அறிவதற்கு அவரது நூல்கள் பெரிதும் உதவும். 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்னும் சிந்தனையைத் தனது மானுட விடுதலைக்கான தீர்வாக உருவாக்கியவர் மு.பொ.  கருத்துமுதல்வாதியான ஹெகலின் சிந்தனைகளை உள்வாங்கி மார்க்சியத்தை உருவாக்கினார் கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளின் நல்ல அம்சங்கள் என்று தான் கருதியவற்றை உள்வாங்கி, அவற்றை ஏற்று , மீண்டும் மார்க்ஸ் ஏற்காத கருத்து முதல்வாதத்தை ஏற்று, ஹெகலியக்கருத்து முதல்வாதச் சிந்தனையை அதிலேற்றி, மானுட விடுதலைக்கு மார்க்சின் புறவிடுதலை  மட்டும் போதாது , அக விடுதலையும் அவசியம் என்று தனது பிரபஞ்ச யதார்த்த வாதச் சிந்தனையை உருவாக்கியவர் மு.த.

அவரது போர்ப்பறை நூலிலுள்ள 'புதிய வார்ப்புகள்' கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி அதனை  ஆணித்தரமாக எடுத்துரைக்கும்.

மேலும் படிக்க ...

கவிதை: நவீன செங்கோல் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
கவிதை
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     

மர்மங்கள் நிறைந்த மானிடத்தில்
      என் உடல் ஆயுதமாகிறதே!
      புரட்சிக்குரல் எழுப்பி
      கறுப்புக் கவசம் அணிந்து  
      கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து
      என் சுய விருப்பத்தை - பெண்
      அரசியல் போராட்டம் போல்      
      பேசுகிறேன்!

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்!

விவரங்கள்
-முகநூல் எதிர்வினைகள் -
முகநூல் குறிப்புகள்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -


Arun Ambalavanar: அனோஜன் இதில் பொய்யான தகவல் எதுவும் எழுதவில்லை. N.K. மஹாலிங்கம், மு. பொ ஆகியோர் அனோஜன் சொன்ன விடயத்தை ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். தயவு செய்து விடயத்தை முழுமையாக ஆராயாமல் சோபாசக்திக்கு வக்காலத்து வாங்குவதை கைவிடுங்கள்.

Annogen Balakrishnan: நீங்கள் புரிதல் இன்றி விவாதத்தை வேறுபக்கம் கொண்டு செல்கிறீர்கள். //ஜீவா மீது மல்லிகையில் மு.த கலந்துகொண்ட ஒரு சமூக, அரசியல் போராட்டம் பற்றிய செய்தியொன்றைப் போடவில்லையென்பதை எவ்விதம் முக்கியதொரு குற்றச்சாட்டாகக் கூறலாம்?// என்று வினவுகிறீர்கள், மு.தளையசிங்கம் என்ற இலக்கியவாதி ஈடுபட்ட முற்போக்கு நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது, வெறுமே சமூக, அரசியல் போராட்டம் என்று சுருக்கி, அதனை மல்லிகை செய்தியாகப் போடவில்லை என்று சொல்வது, பிரச்சினையை விளங்கிக்கொள்ளும் திறன் போதாமையால் வருவது. சாதி ஒழிப்புப் போராட்டம் காரணமாகத் தாக்கப்பட்ட தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அந்தச் செய்தியை மல்லிகை பிரசுரிக்கவில்லை என்பதற்குக் காரணம் க.கைலாசபதி மீதிருந்த அச்சம். இது திண்ணை உரையாடலில் பதிவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டக் காரணம், கைலாசபதியின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இலக்கிய உலகைக் கட்டுப்படுத்தியது என்று காட்டத்தானே தவிர, ஜீவாவை சிறுமை செய்ய அல்ல. முதலில் அதனை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் முற்போக்குப் போராட்டம் காரணமாக மிலேச்சத்தனமான வன்முறைக்கு உள்ளாகியபோது, அது சார்ந்த விடயங்களை பேசாமல் கடந்தமை சாதரணவிடயமல்ல. முற்போக்கு பத்திரிக்கை ஒன்று காரணம் இன்றி இதனைச் செய்யாது. பொது அறிவு இருந்தாலே இதனை விளங்கிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:

விவரங்கள்
- முகநூல் எதிர்வினைகள் -
முகநூல் குறிப்புகள்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! '  என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:


Ambikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.

Memon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.

Tam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: "மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா? அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா? அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக
என்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக
இதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி

மேலும் படிக்க ...

சிறுகதை: வெந்து தணிந்தது காடு – கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
– கே.எஸ்.சுதாகர் -
அரசியல்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.

“கொரோனா காற்றாலை பரவுமா அப்பா?” உறங்கிக் கொண்டிருந்த அக்சரா, விழித்தெழுந்து திடீரெனக் கேட்டாள்.

அக்சரா ஏழாம்வகுப்புப் படிக்கின்றாள். கொரோனா தொடர்பான `கிறியேற்றிவ்’ படைப்பொன்றை எழுதுமாறு பாடசாலையில் கேட்டிருந்தார்கள். அக்சரா தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்குப் போவதில்லை. சூம் கல்வித்திட்டத்தின் (Zoom education) மூலம்--- ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயான வீடியோ தொடர்பாடல்--- வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வருகின்றாள். அக்சராவின் கேள்விக்கு விரிவான விளக்கம் குடுக்கப் போனால், வேலைக்குப் பிந்த நேரிடலாம என்பதை உணர்ந்தான் அகிலன்.

“பின்னேரம் வந்து சொல்கின்றேனே!” என்றபடி வாசலை நோக்கிச் சென்றான்.

“நான் கதவை மூடுகின்றேன்” எழுந்து வந்த அப்பா, பின்னாலே நின்று சொன்னார். அப்பாவுக்குப் பின்னால் அம்மா மறைந்து நின்று எட்டிப் பார்த்தார்.

“கவனம்…. அகிலன்…”

அம்மா `கவனம்’ என்று சொன்னது `ஆட்கொல்லி’ கொரோனாவைத் தான். அந்தக் `கவனம்’ அகிலனுக்கு சலிப்பைத் தந்தது.

“அம்மா…. நான் சேவை செய்வதற்காகத்தானே படித்தேன். எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளோடுதான் நாங்கள் எல்லாரும் வைத்தியசாலையில் வேலை செய்கின்றோம்.”

மேலும் படிக்க ...

செங்கோடா செருப்போடு நில்! - முருகபூபதி -

விவரங்கள்
-முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -


ஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.
முதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.

மேலும் படிக்க ...

பாலின பேத வன்முறை : பெண்குரல்கள் - சுப்ரபாரதி மணியன் -

விவரங்கள்
-- சுப்ரபாரதி மணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் ஒருத்திதான்
ஆனால் எனக்கு நூறு முகங்கள்
ராவணனின் முகங்களை விட எனக்கு அதிக முகம்
ஆறுமுகத்தின் முகங்களைவிட அதிகம்
 என் நூறும் உங்களை கொஞ்சம் பார்க்கச் செய்யும்.
 நான் திருமணமாகாதவர்,
 திருமணம் செய்துகொள்ள தேவையான காசும் பணமும் என்னிடம் இல்லை
 நான் சம்பாதிப்பதினை வைத்து
 வாழ்க்கையை வயிற்று நடத்துகிற எனக்கு
 எப்போது சீமந்தம் என்று என்னைப் பார்க்கிற போதெல்லாம்
ஒரு சக பின்னலாடைத் தொழிலாளி கேட்டுக்கொண்டே இருக்கிறார்
கேட்பது மட்டுமில்லை
 கைகளை நீட்டி தொடவும் செய்கிறார்,
 சீமந்ததிற்கு அவர் காரணமாக விரும்புவது  போல பேசுகிறார்
 எனக்கு பல புகைப்படங்களும் பாலியில் விஷயங்களும்
கைபேசியில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன
அனுப்புவர் அவர்தான் என்று தெரியும் ..
ஆனால் எதற்காக, யாரிடம்  கேட்பது, சொல்வது  என்று தெரியவில்லை
 எங்கள் அலுவலகத்தின் கழிப்பறையின் கதவுகளில் உள்புறத்தில்
எழுதப்பட்டிருக்கும்  வார்த்தைகள் ,
பாலியல் உறுப்புகள் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்
இவையெல்லாம் இன்னொரு வகையான தாக்குதலாக இருக்கிறது.
 என் சூப்பர்வைசர் என்னை அழைத்து
 பாராட்டுகிறார்.. முதுகில் தட்டுகிறார்
 வார்த்தையில் கூட அவர் பாராட்டை தெரிவிக்கலாம் .
கம்பெனி நிர்வாகி அடிக்கடி கூப்பிடுறார்
என் மேல் விழும் மழை துளி  சந்தோசப்படுத்தும்
அவரின் அச்சில் தெறிப்பு எரிச்சலூட்டுகிறது.
 அவரும் என்னை வேறு மாடிக்கு அழைக்கிறார் .
ஒருநாள் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும்போது
மார்பகத்தைத் தொட்டு விட்டு சென்றவர் யார் என்று தெரியவில்லை

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய  Zoom வழி இணையவெளிக்  கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி  முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"டொமினிக் ஜீவா போன்ற வாழ்நாள் போராளி மீது விமர்சனம் வைக்கும்போது, ஒன்றுக்கு நான்கு தடவைகள் யோசித்துப் பேசுவதே நல்லது. அனோஜன் பாலகிருஷ்ணன் இன்றைய நிகழ்வில் 'டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீது அச்சம் இருந்தது' என்று சொன்னது தவறு. 'தமிழ் மொழிச் செயற்பாட்டகம்' மு.தளையசிங்கம் குறித்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார். மு.தளையசிங்கத்தை மதிப்புறப் பேசுவதற்காக, ஜீவாவை மதிப்பிறக்கிப் பேச வேண்டிய அவசியம் கிடையாது. இது ஜீவா மீதான கடுமையான பழிச் சொல்! மல்லிகை இதழில் அப்போது ஏன் செய்தி வெளியிடவில்லை எனப் பதில் சொல்ல இப்போது நம்மிடையே ஜீவா இல்லை. "

இதில் அவர் அனோஜன் பாலகிருஷ்ணன் மல்லிகை ஆசிரியரான அமரர் டொமினிக் ஜீவா மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை வைத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அது: "அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார்".

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2006 - 7) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஏழு!

கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில்,  சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த  வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில்  பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.

அருவிகளும், சிற்றோடைகளுமாய் அப்பிரதேசம் வளப்பமாக இருந்தது. வீதிகளின் ஓரமெங்கும் மரங்களின் சாமரை வீச்சு. நிலம் படர்ந்து கொழுத்த புல்லினம். நீர்க் குழிகளில் மதர்த்து வளர்ந்து மேலெழத் துடித்துநிற்கும் நீர்த் தாவரங்கள். கல்வேலிகளுள் குட்டி வேலிகளாய் பூஞ்செடிகள். மல்லிகை, நந்தியாவெட்டை, தேமா, சூரியகாந்தி என அச்செடிகளில் வாசம் தெறிக்கும் பூக்களின் சிரிப்பு. இடையிடை உயர்ந்து வளர்ந்த ரப்பர் மரக் காடுகள். இன்னும் தொட்டம் தொட்டமாய் பாகினி, கித்துல், புருத்தை ஆதிய மரங்களின் செறிவு.  நீரும் நிலமும் செழிப்பின் ஆழத்தையும், காற்றும் வானும் பூக்களின் வாசத்தையும் அங்கே சுமந்திருந்தன.
அந்த அழகுகளின் பின்னாலேதான் அதன் அழுகுரல் இருந்தது.

மேலும் படிக்க ...

ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ரா செனெகாவே நீ வா! வா! வா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்றுக் காலை எனது ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனகா கோவிட் -19  தடுப்பூசியினைப்பெற்றுக்கொண்டேன். கடந்த இருபது வருடங்களாக வருடா வருடம் 'புளூ'வுகான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு வருகின்றேன். அவை எவ்வித எதிர்விளைவுகளையும் தந்ததில்லை. இதுவும் அவ்விதமே அமையுமென்ற நம்பிக்கையுண்டு.  இதுவரையில் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படவில்லை.

தற்போது ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்தத்தடுப்பூசி தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதே நேரத்தில் ஏற்கனவே இந்தத்தடுப்பூசி ஐரோப்பாவில் மில்லியன் கணக்கில் மக்களுக்குப் போடப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அங்கு பாவிக்கப்பட்ட இத்தடுப்பூசியை அப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்று தயாரித்ததாகவும் அறிகின்றேன்.

மேலும் படிக்க ...

மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள...... 14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ தமிழ் மொழிச் செயற்பாட்டகம் சார்பில் இலண்டனில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய மீள்வாசிப்பு பற்றிய நிகழ்வு  பற்றிய , பதிவுகள் இணைய இதழில் வெளியான, எழுத்தாளர் பெளசரின் அறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலைப் பல்வேறு பிரிவுகளாகக் கோட்பாடுகள் வாயிலாக, காலகட்டம் வாயிலாகப் பிரித்தாலும், அவற்றை மேலும் பல உப பிரிவுகளாகப் பிரித்தாலும், அவற்றில் மூன்று காலகட்டங்கள் முக்கியமானவை: முற்போக்கு, நற்போக்கு மற்றும் பிரபஞ்ச யதார்த்தவாதம்.  இம்மூன்றின் மூலவர்களாக நான் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை மற்றும் மு.தளையசிங்கம் ஆகியவர்களையே  குறிப்பிடுவேன்.

மு.த மகத்தான ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. என்னைப்பொறுத்தவரையில் அவர் தனது நூலான 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களில் (தாழ்த்தப்பட்ட சமூகங்களின் இலக்கியம் பற்றிய கருத்துகள்) உடன்பாடில்லையென்றாலும் நிஜவாழ்வில் அவர் அவ்விதமான சொற்பதங்களுக்கேற்ப வாழவில்லையென்பதையும் அறிந்து மதிக்கின்றேன். அச்சொற்பதங்களைப்பாவிக்காமல் அவர் சிறப்பாக அந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தால், அந்நூல் முக்கியமான இடத்திலிருந்திருக்கும். இவ்விதம் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கும் நிலையில் இருந்திருக்காது.

இவரும் தனது குறுகிய வாழ்வில் மறைந்து விட்டார். தனது சமூக,அரசியற் செயற்பாடுகளுக்கேற்ப வாழ்ந்ததாலேயே அவரும் மரணத்தைத்தழுவியதாகவும் அறியப்படுகின்றது.

அவரைப்பற்றி அறிய முயற்சி செய்பவர்கள் கூடுதலாக மு.பொ.வின் பிரபஞ்ச யதார்த்தவாதம் என்றால் என்ன? அது கூறும் தத்துவம் என்ன? என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மார்க்சியமும், மதங்களும் மனிதர்களின் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான விடுதலைக்குத்தான் தமது கோட்பாடுகளுக்கேற்ப வாதங்களை முன் வைக்கின்றன. பிரபஞ்ச யதார்த்தவாதம் என்பது மு.பொ.  மார்கசியத்தை உள்வாங்கி, அதனைத் தனது பார்வையில் மேலும் தர்க்கங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு தத்துவத்தை முன் வைக்கின்றார். அது சரியா தவறா என்பதற்கப்பால் , அந்த அவரது தர்க்கச்சிறப்புள்ள சிந்தனைதான் முக்கியமானது. மு.த.வை அறிந்துகொள்வதற்கு அவரது பிரபஞ்ச யதார்த்தவாதக் கோட்பாடுகளை அவர் எவ்விதம் மார்க்சியத்திலிருந்து வந்தடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரது அக்கோட்பாடு பற்றிய கட்டுரைகளிலேயே முக்கிய  கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்பே அவரது படைப்புகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதுவே எனது பார்வை.

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா? - வ.ந.கிரிதரன் -


மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள......  14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா?  

மேலும் படிக்க ...

' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' ('Women in leadership: Achieving an equal future in a covid-19 world') - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சமூகம்
11 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -


முன்னுரை:

'Women in leadership: Achieving an equal future in a covid-19 world' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' என்ற தலைப்பு எனது கட்டுரையின்; பொருளாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அகில உலக மாதர் தினவிழா பங்குனி எட்டாம் திகதி தொடங்குகிறது.இவ்வருட மாதர் தினவைபவங்கள்,'கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' இந்தக் கருத்துப் பொருள் சார்ந்த தலைப்பை ஐக்கிய நாடுகள்நாடுகள் அறிவித்திருக்கிறது. இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு'சமத்துவம்' பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. மிகவும் கொடுமையான கோவிட-19 கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,ஒட்டுமொத்த உலகின், பாதுகாப்பு,கல்வி,சுதந்திரம்,பொருளாதார வளர்ச்சி என்பன, சீருடன் வளர ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொடிய வைரசு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலகத்தில் பல்வித வேறுபாடுகளால் மக்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டு, முரண்பட்டுக்கொண்டு பல பிரச்சினைகளையுண்டாக்கிப் பிரிந்து வாழும் அத்தனை மனிதர்களும்,இயற்கையின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்தக் கொடிய  கோவிட் 19 வைரஸ்,.சாதி.மத,இன,நிற பேதமின்றித் தாக்கியழித்துக் கொண்டிருப்பதிலிருந்த எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையில்:

1.அகில உலக மாதர் தின வரலாறு,
2.கோவிட் கால கட்டத்திலும் மனித மேன்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடுவதாக உலக ஊடகங்களால் அங்கிகரிக்கப்பட்ட பெண் ஆளுமைகள்,
3. முக்கியமாக இந்திய நாட்டைச்சேர்ந்த அல்லது இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் சாதனையாளர்கள்ஒரு சிலரைப் பற்றிக் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
4.அத்துடன், இனறைய கால கட்டத்தில் தோற்று நோய் தடுப்பூசியான வக்ஸின் தயாரிப்பில் பெண்கள் சாதனை பற்றிய குறிப்புகள்.
5.கடைசியாக இன்றைய இளம் தலைமுறை தங்களையும் மேம்படுத்தி, தங்களைப் போன்ற ஒடுக்கப் பட்ட,அடக்கப் பட்ட,வசசதியற்ற பெண்களை மேம்படுத்த உதவுவது எதிர்காலம் முன்னேற மிகவும் அத்தியாவசியம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு!

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
இலக்கியம்
11 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 )

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: இணைய வெளி உரை நிகழ்வு - பரதக்கலை (தோற்றம் , தொடர்ச்சி & வளர்ச்சி)

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
10 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: சிலம்பு சுட்டும் குறிஞ்சி மக்களின் வாழ்க்கை - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து எம்.ஏ.,பி.எட்.,எம்ஃபில்.,பிஎச்.டி.,(யுஜிசி.செட்.,நெட்.), உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்-641048. -
ஆய்வு
10 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்
மக்களால் ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய மனிதனுடைய ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், குறிஞ்சி நிலமான மலையும், மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும், அவர்களுக்குள் உள்ள பல வகையானப் பிரிவுகளையும், நிலத்தின் தன்மையையும், நிலத்தில் வழிபடும் தெய்வமாக விளங்கும் முருகனின் சிறப்பும், வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

முன்னுரை
மக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் சமூகத்தில் மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதன் நன்மை, தீமையைப் பகுத்து அவற்றின் வழி செயல்படும் திறனாலேயே உயர்திணையாகச் சுட்டப்பட்டான். “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்னும் தொல்காப்பிய வரிகள் மூலம் மனிதன் ஆறறிவுடைய சிறப்பிற்குரிய திறமானது புலப்படுகிறது.

நோக்கம்
மக்களின் சிறப்பு நாட்டின் சிறப்பாகக் கருத அம்மக்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்ப பகுக்கப்பட்டனர். மலையும் மலை சார்ந்த பகுதியில் வேட்டையாடுதலைத் தொழிலாக் கொண்டு வாழும் குறவர்களின் வாழ்க்கையையும், அந்நிலத்திற்குரிய சிறப்புகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்! முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும். மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.

செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. பேராசிரியர் நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான். எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில், புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

மேலும் படிக்க ...

புகலிடத் தமிழ் சினிமா – ஒரு தொடர்ச்சியற்ற பயணத்தில் - ‘புகலிடத் தமிழ் சினிமா’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
நூல் அறிமுகம்
09 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.

பாரிஸிலிருந்து முகம் பதிப்பகத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கு பின் ‘முகம்’ பதிப்பகத்தினர் ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கின்றனரா என்ற தகவல் என்னிடம் இல்லை. வெளிவரவில்லையென்றே நினைகின்றேன். அதேபோல் இதுபோன்றதொரு சினிமா குறித்ததொரு நூல் வெளிவந்ததா என்ற கேள்விக்கும் இல்லை என்ற கசப்பான பதிலே விடையாகக் கிடைக்கின்றது.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனும் இயக்குனர் அருந்ததியும் தொகுத்தளித்த இந்நூலில் மு.புஷ்பராஜன்,அருந்ததி, ஜீவன், அபிநயன், சுவிஸ் ரஞ்சி, கதிர்காமநாதன், அழகு குணசீலன், புவனன், எஸ்.பி.ஜெகாதரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

பதிப்புரையில் இயக்குனர் அருந்ததி “சினிமாவின் சாத்தியப்பாடுகள் அதிகம். ஆயினும் இப்புலம்பெயர் சூழலில் ஒரு சினிமாவை உருவாகுவதற்கான சாத்தியபாடுகள் மிக குறைவானவை. எனவே அதன் காரணங்கள் பற்றியும் அதன் கடந்து போதல் பற்றியும் இந்நூல் பேசுகின்றது” என்று பதிவு செய்கிறார். அவர் இதனைக் கூறி இப்போது 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் எமது நிலைமையில் எந்தவித மாற்றமுமில்லை. அந்தக் குறைந்தளவு சாத்தியப்பாடுகளை வைத்துக்கொண்டுதான் நாம் இன்னமும் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க ...

மேனாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..

தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்களால்தாம். இவர்களில் அதிகப்பங்களிப்பு வழங்கியவர்கள் என்ற பெருமையைத்  தமிழகத்தமிழர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இந்நாடுகளில் வாழ்ந்த, வாழும் தமிழர்கள்தாம் பிறநாடுகளில் குடியேறி அங்கும் தமிழுக்குப் பங்காற்றுகின்றார்கள்.

அண்மைக்காலமாக மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காகச் செயலாற்றி வருகின்றார்கள். முக்கிய காரணங்களில் ஒன்று உலகளாவியரீதியில் தமிழுக்கான அங்கீகாரம் இதன் மூலம் கிடைக்கும் என்பதுதான். தமிழகப்பிரபலங்கள் தொடக்கம் தமிழக அரசு வரைக்கும் நிதியுதவியை அளித்து வருகின்றார்கள். மொழி வளர்ச்சிக்கு இத்தகைய உதவிகள் அவசியமே. ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கான முக்கியத்துவமென்ன?தேவையென்ன?

தமிழை இதுவரை காலமும் பேணிப்பாதுகாத்து வந்த தமிழர்கள் வாழும் தமிழகம், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது . அங்குள்ள பல்கலைக்கழகங்கள் போதிய நிதியுதவியின்றி மொழி ஆராய்ச்சிகளில் அதிக அளவில் ஈடுபடுவதற்கு முடியாமல் சிரமப்படுகின்றன. தமிழ் மொழியை வளர்ப்பவர்கள் தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் மட்டுமல்லர். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல்,  மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எழுதி மொழிக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களும்தாம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கவிதை: சவாலைத் தெரிவு செய்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  2. பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
  3. மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம்! - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -
  4. கவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் - முருகபூபதி -
  5. மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -
  6. கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
  7. திருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -
  8. சுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -
  9. ஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -
  10. வாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -
  11. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -
  12. மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -
  13. 'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்!
  14. நூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
பக்கம் 112 / 115
  • முதல்
  • முந்தைய
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • அடுத்த
  • கடைசி