பதிவுகள் முகப்பு

கம்பராமாயணத்தில் வாழ்த்து அணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
10 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

வாழ்த்து அணி

இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும்.

"இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
. முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப"
(தண்டியலங்காரம் 60)

அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல்

அயோத்தி நகரத்து மகளிர் அனைவரும் வலிமையுடைய ஆடவரும் கௌசல்யா தேவியும், தசரத சக்கரவர்த்தியும் போலவே இக்குமாரர்கள் வாழ்க என்று அவரவர் மனதுக்குப் பொருந்திய கடவுளை வணங்கி வேண்டுவார்கள். 60,000 வருடங்கள் பேரோடும், புகழோடும் நாட்டு மக்களின் நலத்தையேப் பெரிதாக எண்ணி தசரதன் ஆட்சி புரிந்தார். அவ்வாறு பன்நெடுங் காலம் மக்கள் போற்றும் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
09 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படங்களைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி,  பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.

ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இரவு வானில் சுடர்கள் ஒளிரும்.
உறக்கம் மறந்து கிறக்கம் கொள்வேன்.
இரவு வான் அறிவியல் புத்தகம்.
இவ்விதமே நான் எப்போதும் எண்ணுவேன்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

மேலும் படிக்க ...

ஐ.நா. தொடக்கம் அறுகம்பே வரை : அய்னாவின் கட்டுரையை முன்னிறுத்தி! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
07 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1

இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக, இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சார்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாத்திரம் மாலைத்தீவு பிரஜை எனவும் கூறப்படுகின்றது. பிரதான நபர் இன்னும் கைதாகவில்லை எனக்கூறப்பட்டாலும் இன்றுவரை அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்துச் சரியான தகவல்களில்லை. தாக்குதல் தொடர்பிலான கைதுகளும், எழுந்த களேபரமும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.

தமிழ்த் தீவிரவாதத்தைப் போலவே, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தலையெடுப்பும் இலங்கைக்கு ஒன்றும் புதிதானதில்லை. ஆனால், முன்னைநாள் சட்டமா அதிபர் லிவேரா முதல் முன்னைநாள் புலனாய்வு இயக்குனர் ஷானி அபேயசேகர வரையில், எடுத்துரைக்கும் பிரதான விடயம் யாதெனில், இவற்றில் அரச பங்கேற்பு உண்டு என்பதும் இத்தீவிரவாதிகள் அரசால் தீன்போட்டு வளர்க்கப்பட்ட சக்திகளாவர் என்பதுமேயாகும். இவ்அடிப்படையில், இத்தீவிரவாதிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு, ஓர் ஆழமான அரசியல் சதி உண்டு என்பதும் - அதற்கூடு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற (அல்லது மாற்றியமைக்க) செய்யப்படுகிறது, என்பதுமே மேலவர்களின் கூற்றில் முக்கியத்துவப்படும் செய்தியாகிறது.

இது உண்மையாக இருக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அதற்கூடு நாட்டில் இனவாதத்தைத் தலைவிரித்து ஆடச்செய்துவிட்டு, அதற்கூடு கோட்டாபாய ஆட்சிக்கு வந்தார் என, வாதிடுவோரும் உண்டு.

மேலும் படிக்க ...

முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைந்தார்!

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
07 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் மறைந்த  தகவலினை இணைய வாயிலாக அறிந்தோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மு.பொ. இவர் எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் சகோதரர். யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்,  சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல். திறனாய்வு, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பன்முகப் பங்களிப்பாளர். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.- வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
06 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட  முடியவில்லை. -

1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...

இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த  முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர்.  இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).

இவ்விதமாகத்  தங்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தம் தாயகத்துக்கு வந்து குடியேறினார்கள். இரண்டாவது தேவாலயத்தைக் கட்டினார்கள். மீண்டும் கி.மு 63 - கி.பி 135 காலப்பகுதியில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பில் யூதர்களுக்கும், ரோமானியர்களுமிடையில் மோதல்கள் ஏற்பட்டன. ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சிகள் செய்தனர். அக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் யூதர்கள் அவர்களின் தாயகத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.  எருசலேமிலிருந்த அவர்கள்து இரண்டாவது தேவாலயம் அடித்து நொருக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 2 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
05 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஊதா நிற மண்ணுள்ள அந்தக் கடற்கரையைப் பார்க்காமல் திரும்புவதற்கு எனக்கோ மனமிருக்கவில்லை. தேசிய பூங்கா ஒன்றுக்கு ஊடாகச் சென்று, காடு போன்ற பிரதேசமொன்றைத் தாண்டி Pfeiffer Beachஐத் தேடினோம். அதற்கான பாதையென மிகவும் ஒடுங்கிய வழியொன்றை google map காட்டியது. அதற்குள்ளால் கார் போய்வர முடியுமா என்பது பெரும் சந்தேகமாக இருந்ததால், அது சரியான வழிதானா என மகளுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே அதனைத் தாண்டிச் சற்றுத் தூரம் போய் வழியிலிருந்த கடை ஒன்றில் Pfeiffer Beachக்கு எப்படிப் போவதெனக் கேட்டோம். அந்த ஒடுங்கிய வழிதான் அதற்கான வழியென்றார்கள். இருட்டத் தொடங்கிவிட்டது, இப்படி ரிஸ்க் எடுத்து அங்கு போகத்தான் வேண்டுமா என்பது மகளின் கேள்வியாக இருந்தது. நானோ போய்த்தான் பார்ப்போமே என அடம்பிடித்து ஒருவாறாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விலகிக்கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. இந்த மண் ஊதாவாக இருக்கிறதா, வந்ததற்குப் பிரயோசனமா என்றா மகள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது, இருப்பினும் நீண்ட நேரம் அங்கிருக்க முடியவில்லை. நன்கு இருட்ட முன்பாக அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. வழியில் சூரியன் மறைவதைப் பார்த்தபின் நகருக்குள் நுழைந்தோம்.

அடுத்ததாக இன்னொரு இடத்துக்கும் போகவேண்டுமென்றிருந்தது. அன்று காலை Big Sur போகும் வழியில், Santa Cruz என்ற நகரைக் கடந்து சென்றபோது, ஓரிடத்தில் strawberry விற்றுக் கொண்டிருந்தனர். California strawberriesக்குப் பெயர்பெற்றது என்றா மகள். பழங்கள் மிகவும் பெரியனவாகவும், அடர் சிவப்பாகவும், அழகாகவும் இருந்தன. மாதிரிக்கு ஒன்றைச் சாப்பிட்டுப் பார்க்கலாமென்றிருந்தது. அப்படிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கட்டுமா என அருகே நின்ற ஒருவரிடம் கேட்டேன். அவர் தன் கையிலிருந்த கூடைகளிலிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கச்சொன்னார். “மிகவும் சுவையாக இருக்கிறது, என்ன விலை?” என்றேன். “இது உங்களுக்குத்தான்!” என சிறியதொரு கூடை நிறைந்த பழங்களை அவர் எனக்குத் தந்தார். “இல்லை, வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்,” என்றோம். அது தன் அன்பளிப்பு என்றார் அவர். பின்னர் தான் ஒரு கடை வைத்திருப்பதாகவும் அங்கு வந்து தங்களின் strawberry பானத்தைக் குடித்துப் பார்க்கவேண்டுமெனவும் அன்பாகக் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அவரும் அந்தப் பழக்கடையின் ஒரு வாடிக்கையாளர் என்பது தெரிந்தது. என்னுடன் சேர்த்து தன்னை ஒரு படம் எடுக்கும்படியும், அந்தப் படத்தைக் காட்டினால் கடையில் நாங்கள் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமென்றும் மகளிடம் சொன்னார். அதனால் திரும்பிவரும்போது, அந்த மனிதரின் அன்புக்கு மரியாதை செலுத்தும்முகமாக, நேரமானாலும் கட்டாயம் அங்கு செல்லவேண்டுமென முடிவெடுத்திருந்தோம்.

மேலும் படிக்க ...

ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சி 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி'! எழுத்தாளர் மாத்தளை சோமு கெளரவிப்பு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
03 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                - எழுத்தாளர் மாத்தளை சோமு -

ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் இன்று கனடா நேரம் அதிகாலை 4 மணி தொடங்கி ஏழு மணி வரை நடைபெற்றது. சங்கத்தலைவர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் வரவேற்புரையினை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியை எழுத்தாளர் நடேசன் சிற்ப்பாக நெறிப்படுத்தினார். நிகழ்வில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் புகலிட நாவல்கள் பற்றி\யும், எழுத்தாளர் வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (குறிப்பாகக் கனடாச் சிறுகதைகள்), மற்றும் எழுத்தாளர் சிவராசா கருணாகரன் புகலிடக் கவிதைகள் பற்றி உரையாற்றினார்கள்.

நிகழ்வின் பிரதான அம்சம்  மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களைக்  கெளரவித்தலாகும். அவரை பற்றிய கெளரவிப்பு உரையினைப் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் மிகவும் சிறப்பாக ஆற்றினர். தொடர்ந்து ஏற்புரையினை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நன்றியுரையினை ஆற்றினார். தொடர்ந்து கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க ...

அ. பால மனோகரனின் நிலக்கிளி. - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நூல் அறிமுகம்
03 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம்.

ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் - இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்த சம்பவத்தை நிறுத்த முனைகிறோம் .

அதே போல் மேடையில் திரை விழுந்தது என்பதற்குப் பதிலாக சிவப்புக்கோடுகளைக் கொண்ட திரை, நாடகத்தின் முடிவில் மெதுவாக இறங்கி நாடகத்திலிருந்து பார்வையாளர்களைப் பிரித்தது என்று எழுதினால், இங்கே அந்தக் காட்சியை இவ்வாறு விவரிப்பதன் மூலம் மனதில் நிறுத்த முயல்கிறோம்.

அவளது பின்அசைவுகள் எனது இதயத்தை வேகமாகச் சுருங்கி விரியப் பண்ணின எனும்போது – இங்கே இரண்டு செயற்பாடுகளை நாம் காட்ட முயல்வதும் வாசகரின் மனதில் காட்சிப்படுத்தும் முயற்சியே ஆகும்.

கருமேகங்களாகக் கூந்தல் இருந்தது – எனும்போது மேகம், கூந்தல் ஆகிய இரண்டு பொருட்களை ஒப்பிடுகிறோம்.

இப்படியான உத்திகளைக் காளிதாசனிலிருந்து, கம்பன், பாரதி எனப் பலர் எடுத்தாண்டிருக்கிறார்கள். அவற்றையே நாமும் பின்பற்றுகின்றோம்.

மேலும் படிக்க ...

நாளை (நவம்பர் 4, 2024) கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கஓ8ன் வெளியீட்டு நிகழ்வு!.

விவரங்கள்
- தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
02 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (Scarborough Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough, ON M1M 1R9)

நாளை 3ம் திகதி நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்குவார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்குவார்.

மேலும் படிக்க ...

சிறுகதை: காடுபோக்க - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
சிறுகதை
01 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    - முனைவர் கோ.சுனில்ஜோகி -

1

இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.

அவளின் கபாலத்திற்குள் கார் இடிகள்... மேலும், இறுக்கமாகக் காதுகளை இறுக்கினாள். அவளது சிறுவிழிகள் விம்பிப் புடைத்தன. பல்லைக் கடித்துக்கொண்டு நாசியகட்டி மூச்செறியும் அவளின் முகம் அடைமழைக் காலத்தில் புகைப்போக்கியில் ஒதுங்கிய காடுபோக்காவையே ஒத்திருந்தது. அதிலும், லேசாகப் புலரத் தொடங்கியிருக்கும் இந்தவேளையில் அவளின் மனநிலையும் அந்தக் காடுபோக்காவின் மனதொத்திருந்தது.

அவளால் முடிந்தவரை காதுகளை இறுக்கியாகிவிட்டது. அலைபேசியையே ஓர்ந்திருந்தாள். அது அணைந்தது. காதுகளிலிருந்து கையை விலக்க அவளுக்கு மனமில்லை. அது அடுத்தநொடியே மீண்டும் ஒலிக்குமென்று அவளுக்குத் தெரியும். அவள் நினைத்ததைப்போலவே அது ஒளிர்ந்தது. மீண்டும்… மீண்டும்… மீண்டும்…. முன்னினும் சத்தமாய் ‘காடுபோக்க… காடுபோக்க…’ இறுக்கத்தைக் கூட்டினாள்… கழுத்துப் புடைத்து நரம்பெழுந்தது… காதுகளில் அழுத்தியதின் வலி.. அழுத்தத்தின் வலி…. அலைபேசியை எடுத்து ஓங்கி சுவற்றில் அறைந்துவிடலாம் போலிருந்தது.

எத்தனைமுறைதான் சொல்வது… எவ்வளவுதான் சொல்வது… இப்படியே விட்டால் இது அடங்காது… சேற்றில் இறங்கிய எருமையைப்போல… அவள் தெரிந்தேதான் இறங்கியிருந்தாள்… இறக்கப்பட்டிருந்தாள்…. வேறு வழியில்லை… அதை மீட்பதும் கடமை... அதோடு காப்பதும் கடமை…. கடனிலுழலும் நெஞ்சம்.. பட்டுதான் தீரும்… விடவே விடாது… பாடாய்ப் படுத்தும்…. அலைபேசியை எடுத்தாள்… திரையில் அலைந்த பச்சைக் குமிழி கடப்பாட்டில் அலைந்தது. அதைச் சொடுக்கினாள்.

மேலும் படிக்க ...

உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
31 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
முதல்வனாம் இறையை பணிந்துமே நிற்பார்

புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
கஷ்டமுடன் உழைத்து களிப்புறுவார் களிப்பே
காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ஒன்று கூடல் - 'புலம் பெயர் இலக்கியத்துன் செல்நெறி'

விவரங்கள்
= தகவல் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசிப்பும் , யோசிப்பும்: முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
பதிப்பு விபரம் நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்) xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.


முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் ஈழத்துக் கவிதையுலகில் முக்கியமானதொரு நாடகம். 'நாடகம் நான்கு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ள நாடகங்களிலொன்று. இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி.

இந்நாடகத்தின் முதல் மேடையேற்றம் 01-04-1969 அன்று கொழும்பு ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கில் , மெளனகுருவின் இயக்கத்தில் மேடையேறியது.

இந்நாடகத்தின் முக்கியமான கரு: மானுட வரலாற்றில், ஆதிச்சமுதாய அமைப்பில் பொதுவுடமை சமுதாய அமைப்பு முறை நிலவியது. ஆனால் காலப்போக்கில் அவ்விதம் நிலவிய அமைப்பு வர்க்கம், சாதி, இனபேதம் மற்றும் நிறபேதம் போன்ற பிரிவுகளாகப் பிளவுண்டுவிடுகின்றது. இவ்விதம் பிளவுண்டு கிடக்கும் மானுட சமுதாயத்தை மீண்டும் அந்தப்பொதுவுடமை சமுதாய அமைப்பு நோக்கி, உழைக்கும் மானுடர் வழி நடத்திச்செல்வர் என்பதை மையமாக வைத்துப்பின்னப்பட்ட நாடகமே 'சங்காரம்'.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தாத்தாமாரும் பேரர்களும். ஏம்.ஏ.நுஃமான். கல்முனை 6: வாசகர் சங்க வெளியீடு, நூரி மன்சில், 1வது பதிப்பு, மார்ச் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5. அளவு: 20.5*14 சமீ.


இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

மேலும் படிக்க ...

வாரிசு! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
28 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.

வயதில் அறுபது தாண்டிய தென்றலுக்கு வாரிசு இல்லை. பிறந்ததிலிருந்தே தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தவன். எப்போதும் வாழ்வின் பாதையைப் பற்றி பெரிதாக யோசிக்காதவன். இப்பொழுது தான் காலம் நெருங்கும்போது, அவனுக்கு ஒரு உணர்வை மட்டும் அடித்துக் கொண்டது: இங்கே அவன் இல்லாதிருந்தால், ஏதாவது மாறுமா?

தோட்டத்தில் இருந்த வெள்ளைத்தாமரைப் பூவுகளை பார்த்து தென்றல் ஓரளவு சாந்தமாக இருந்தான். அவனை யாரும் வழிமொழிந்ததாக இல்லை. அவன் தந்தை, தாயின் நினைவுகள் எல்லாம் மங்கியதாய் ஆகிவிட்டன. "நான் என் வீட்டின் வாரிசு அல்ல, நானாகவே இங்கே இருக்கிறேன்," என்று அவன் சும்மா சிந்தித்தான்.

குழலிசையின் ஒலியை போலவே, தென்றலின் நினைவுகளில் பழைய வார்த்தைகள் சிதறியவையாக இருந்தன. அவருடைய வாழ்க்கை முழுவதும் கடந்து வந்த பாதைத் திசைமை இல்லாததாயிருந்தது. ஒரே நம்பிக்கை இருந்தது: காற்று நம்மை அடைவதற்குள் எதுவும் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க ...

மறக்காதீர்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இமயம் தொட்டாலும்
ஏணியை மறக்காதீர்
அபயம் அளித்தாரை
அரைக்கணமும் மறக்காதீர்
கவலை இருந்தாலும்
காரியத்தை மறக்காதீர்
கஷ்ட நிலையிலும்
கண்ணியத்தை இழக்காதீர்

ஆசானை மறக்காதீர்
அன்னையை ஒதுக்காதீர்
அரவணைக்கும் அனைவரையும்
அகமார வாழ்த்துங்கள்
மாசுகளைச் சேர்க்காதீர்
மனமிருளச் செய்யாதீர்
மயக்கமுடன் வாழாமல்
மனவெழுச்சி கொள்ளுங்கள்

மேலும் படிக்க ...

அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன் - த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -

விவரங்கள்
- த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -
இலக்கியம்
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

            - அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன்-

பிறந்தகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.

குடும்பப் பின்னணி

குமுளமுனை சின்னப்பிள்ளை நாகலிங்கம் மற்றும் ஆறும் இரத்தினம்மா தம்பதியினரின். நான்காவது மகவாகப் பிறந்தவர் நெல்லிநாதன். மூத்த சகோதரர் நடனசபாபதி நீர்பாபசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஈஸ்வரபாதம் கூத்துக்கலையில் இவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளமையிலேயே மறைந்தவர். அடுத்ததாகப பிறந்த சகோதரி யோகேஸ்வரி திருமணமாகி வேறு பழம்பாசி என்னும் கிராமத்தில் குடியேறியுள்ளார். அடுத்தவர் குகன் என்னும் இளைய சகோதரர், அடுத்தவர் சந்திரகுமாரி திருமணமாகி ஊரிலேயே வாழ்நதவருகின்றார். லலிதகுமாரி ஆசிரியையாக குமுளமுனை ம.வி.யில் கற்பித்துவருகின்றார். திருமணமாகிப் பிள்ளைகளோடு குமுளமுனையில் வாழ்ந்து வருகினறார். நேசமலர் இளைய சகோதரி முள்ளியவளையில் திருமணம் செய்து அங்கேயே வாழந்து வருகின்றார்.

நெல்லிநாதன் சம்மளங்குளத்தைச் சேர்ந்த செல்வரத்தினம், அன்னலட்சுமி தம்பதியினரின் புதல்வி சூரியபவானியைத் தனது வாழ்க்கைத் துணவியாக்கி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.

மேலும் படிக்க ...

மறைந்தும் மறையாத ஆசான் கதிர் பாலசுந்தரம் அவர்கள் - யூனியனின் பொற்கால அதிபர் வாழ்வும் வழியும் - த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -

விவரங்கள்
- த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -
இலக்கியம்
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் முன்னாள்அதிபர் கதிர்காமர் பாலசுந்தரம் கடந்த 2.06.2024 அன்று இயற்கையெய்தினார். ஆசிரியராக, அதிபராக, எழுத்தாளராக பல்வேறு திறன்களையும் ஆளுமையும் கொண்டவர். தன்னை முதனிலைப் படுத்தாமல் அமைதியாக இருந்து பல்வேறு செயற்திட்டங்ளை நிறைவேற்றியுள்ளதோடு, யூனியன் கல்லூரியின் பொற்காலம் இவரது பதவிக்காலமே எனத் துணிந்து கூறுமளவிற்கு அவரது சேவை உயர்பு பெற்றிருந்தது என்பதை அறியமுடிகின்றது. தனியாள் ஆய்வுகள், சிறுகதைகள், நாவல்கள் என்பன இவரது எழுத்தாற்றலுக்குக் கட்டியம் கூறுவதோடு ஆங்கிலம் கற்பதற்கான நான்கு நூல்களையும் ஆக்கியுள்ளார். இவரது ஆங்கில நூல்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளையும் விட்டுவைக்கவில்ல. எம்.டி. குணசேன நிறுவனத்தினர் இந்த நூல்களைத் தத்தெடுத்து இலங்கை முழுமையும் உள்ள பாடாசலைகளுக்குக் கிடைக்க வழிவகுத்தமை இவரது ஆங்கிலப் புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.

அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது கனடாவில்தான். ஆழ்கடலான் பரமநாதனின் நூல்வெளீடு எனது தலைமையில் நடந்தவேளை அதில் பங்குகொண்டு ஒரு பாராட்டுக்கவிதையையும் தந்திருந்தார். அவரது நூல்களுள் ‘வன்னி’ நாவலைவெளியிட்டு வைக்கும் பொறுப்பை என்னிடம் துணிந்து ஒப்படைத்திருந்தார். அத்தோடு வேறுசில அவரது நூல்களுக்கு உரையாற்றவும் அழைத்திருந்தார். யூனியன் பொற்காலம் நூலுக்கு பேராசிரியர் நா.சுப்பிரமணியன், சட்டத்தரணி விக்னேஸ்வரன், முனைவர் பார்வதி கந்தசாமி உட்பட நானும் அந்த நூல்வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்பை தந்துள்ளமை என்மீது அவர் கொண்டுள்ள மதிப்பைக் காட்டி நின்றது.

மேலும் படிக்க ...

ஒரு மணிநேரத்தின் கதை (The Story of An Hour) - மூலக்கதை ஆங்கிலத்தில் கேட் சோபின் Kate Chopin (1894) | தமிழில் அகணி சுரேஸ் -

விவரங்கள்
- மூலக்கதை ஆங்கிலத்தில் கேட் சோபின் Kate Chopin (1894) | தமிழில் அகணி சுரேஸ் -
சிறுகதை
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

அந்த செய்தியை உடைந்து பேசும் வாக்கியங்களில் அவரது சகோதரி ஜோசெபின்(Josephin ) கூறினாள்; குறிப்புகள் மறைத்து வெளிப்படுத்தப்பட்டது.  அவரது கணவரின் நண்பர் ரிச்சர்ட்ஸ் (Richards ) அங்கேயும், அருகில் இருந்தான். ரயில்வே பேரழிவின் தகவல் வந்த போது, "கொல்லப்பட்டவர்களில்" பிரெண்ட்லி மல்லார்டின் (Brendly Mallard)  பெயர் முன்னணி இடத்தில் இருந்தது. அதன் உண்மையை உறுதிப்படுத்த அவர் இரண்டாவது டெலிகிராம் மூலம் உறுதி செய்யும் வரை மட்டும் நேரம் எடுத்துக் கொண்டான், மேலும் அந்த துக்கமான செய்தியைச் சொல்லும்போது, குறைவான கவனத்துடன், குறைவான அன்புடன் இருக்கும் நண்பரை முன்னேறச் செய்யாமல் விரைந்து வந்தான்.

அவர் இந்தக் கதையை ஏற்கெனவே பல பெண்கள் கேட்டது போல, அதன் முக்கியத்துவத்தை ஏற்க முடியாத நிலைமையில் கேட்டுக் கொண்டாள். உடனே, திடீரென, கள்ளத்துடன், தனது சகோதரியின் கைகளைப் பற்றியவாறு அழுதாள். துக்கத்தின் புயல் தன்னைத்  தழுவிய பிறகு, அவர் தனியாக தனது அறைக்கு சென்றாள். யாரும் அவரைத் தொடர்ந்து செல்லவில்லை.

திறந்த ஜன்னலுக்கு எதிராக, ஒரு வசதியான, பரந்த நாற்காலி  இருந்தது. இதில் அவர் மூழ்கினாள், தனது உடலை அடிக்கடி வாடவைக்கும் உடல் சோர்வால் அழுத்தப்பட்டு, அவரது ஆன்மாவை அடையுமாறு தோன்றியது.

மேலும் படிக்க ...

உணர்ச்சித் தமிழ்த்தேசியத்திலிருந்து புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை நோக்கி.... - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
24 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தினர் அனுபவித்துவரும் பிரச்சினைகளைப்பற்றிச் சிங்கள ஊடகவியலாளரான ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவையில் தெரிவித்த கருத்துகள் பி.பி.சி.சியின் தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பிரசுரமாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் ஷெலி உபுல் குமார யாழ்ப்பாணம் சென்று இது பற்றி ஆராய்ந்து இவ்வாவணத்தைத் தயாரித்துள்ளார்.

இதன்போது அவர் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது அவர் 'தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது' என்று பதிலளித்திருக்கின்றார். இது மிகவும் தவறான தகவல் என்பதை நாம் அனைவரும்  அறிவோம்., யாழ் மாவட்டக் கிராமங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் சாதி அடையாளங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க ...

வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -

விவரங்கள்
- அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
ஆய்வு
24 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.

புலம்பெயர் இலக்கியம் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்புகள்தாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னொரு கட்ட வளர்ச்சி கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. புலம்பயர் படைப்புக்களில் கவிதை சிறுகதை நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையாகவும் காணப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியங்கள் புலம்பெயர்ந்து சென்று ஈழத்து சமூக பண்பாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவற்றை எதிர்கொண்ட விதங்கள் புல பாதிப்புக்கள் புலம்பெயர் அனுபவங்கள் பண்பாட்டுச் சிக்கல்கள் மொழி பிரச்சனை அகதியாக்கப்படுதல் போன்றவற்றை கூறுபொருளாகக் கொண்டு காணப்படுகின்றன.

மேலும் படிக்க ...

இலக்கியத் திறனாய்வாளர்கள், மாணவர்களின் கவனத்துக்கு -. எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் நூலகத்தில்..

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
22 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பன்முக இலக்கியப் பங்களிப்பு காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்ழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. இதுவரை காலமும் அவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் வெளிவராமலிருந்ததால் அவற்றைத் திறனாய்வு செய்பவர்களுக்குப் போதிய உசாத்துணை நூல்கள் இல்லாத குறையிருந்தது. தற்போது அந்தக் குறை ஓரளவு நீங்குகின்றது.

இதுவரை காலமும் வெளியான நூல்கள் மதமாற்றம் ( நாடகம்) & வெற்றியின் இரகசியங்கள் (உளவியல்). இவற்றை முறையே தேசிய கலையிலக்கியப் பேரவை, பாரி நிலையம் ஆகியன வெளியிட்டிருந்தன.

தற்போது பதிவுகள்.காம் அவரது படைப்புகளைத் தாங்கிய மூன்று மின்னூல்களை அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்திலும் நீங்கள் வாசிக்கலாம். அவையாவன:

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) ‘வாழ்வும் வரலாறும்’ (1934-2006)! ஈழத்து இலக்கியவராற்றில் தடம்பதித்த தம்பதியினர்! - த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. -

விவரங்கள்
- த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. -
இலக்கியம்
22 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்துச் சோமு என எழுத்துத்துறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் எழுத்தாளர் சோமகாந்தன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் தனக்கெனத் தடம்பதித்த ஒரு எழுத்தாளராக திகழ்கின்றார். அவர் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாது எழுதுவோரை ஊக்கப்படுத்தும் வகையிலே தனது உடல் நலத்தைக்கூடபாராது பல முயற்சிகளை முன்நின்று உழைத்துவந்த, ஒரு இலக்கியப் படைப்பாளி என்றால் தவறாகாது.

யாழ் குடாநாட்டில் வடமராட்சிப்பகுதியில் கரணவாய் என்னும் கிராமத்தில் கலட்டி என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் திரு. சோமகாந்தன் அவர்கள். அவர் தனது ஆரம்பப்படிப்பினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார் அவருக்கு ஆதிசைவப் பரம்பரையில் தோன்றிய ஸ்ரீ வைத்தியநாதக் குருக்களால் ஏடுதொடக்கப்பட்டு அவரிடமும், ஸ்ரீ செவ்வந்திநாதக் குருக்கள் போன்றோரிடமும் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்டதோடு, கல்வியில் ஆர்வத்தைத் தூண்டிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பலவித பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு கல்வி கற்கமுடியாதிருந்த வேளையிலும் ஊக்கமும் தந்து அவரின் கல்விப்பணி தொடரக் காரணர்களாக அவர்கள் விளங்கினர். அவர்களை எழுத்தாளர் சோமகாந்தன் அவர்கள் வாழ்க்கை முழுமையும் நினைவில் வைத்திருந்தமையை அவரோடு உரையாடியபோது வெளிப்படையானது.

மேலும் படிக்க ...

'டொரோண்டோ'வில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது 2024 நிகழ்வு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
21 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் -

இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ற்கான இயல்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. JC'S Banquet மண்டபத்தில் நடந்தது.  கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில்  வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், புனைவுக்கான விருது 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்' நூலுக்காக எழுத்தாளர் றஷ்மிக்கும், கவிதைக்கான விருது கவிஞர் இளவாலை விஜயேந்திரனுக்கும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது' நூலுக்கும்., அல்புனைவுக்கான விருது 'நினைவு நல்லது' நூலுக்காக வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரனுக்கும், மொழியாக்கத்துக்கான விருது ஜெகதீஷ்குமார் கேசவனுக்கும்,  இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது முனைவர் பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வரலாற்றில் இலங்யைில் வர்த்தகம் - த.சிவபாலு -
  2. இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 1 - ஶ்ரீரஞ்சனி -
  3. அழைப்பு: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு!
  4. பயனுள்ள மீள்சுரம்: வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி! - அருண்மொழிவர்மன் -
  5. ஜோர்ஜ் இ.குருஷேவின் 'ஒரு துரோகியின் இறுதிக்கணங்கள்' - வ.ந.கிரிதரன் -
  6. இலை மறை காயாக இருந்து சாதனைகள் படைத்தவர் பிரேம்ஜி ஞானசுந்தரன் - த.சிவபாலு -
  7. இலைமறை காயாக இருந்து சாதனைகள் படைத்தவர் அ.ந.கந்தசாமி அவர்கள்! - த.சிவபாலு -
  8. கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024 - குரு அரவிந்தன் -
  9. வதனம் மஞ்சரி - கனடா சிறப்பிதழ் வெளியீடு - சுலோச்சனா அருண் -
  10. மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்! - கவிஞர் மதுராந்தகன் -
  11. ‘நாமசங்கீர்த்தன மரபு’ - ‘அபங்’ பாடல் வகை பற்றிய அறிமுகம்.
  12. கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு!
  13. ஒரு வழக்கறிஞரின் இலக்கிய யாத்திரை - நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.-
  14. சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 14 / 104
  • முதல்
  • முந்தைய
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • அடுத்த
  • கடைசி