பதிவுகள் முகப்பு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 851 1978 3516 | Passcode: 881566

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளையின் 'தாய்வீடு'க் கட்டுரை 'ஜாதி' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளை  'தாய்வீடு' பத்திரிகை - சஞ்சிகையில் அறிவியற் கட்டுரைகள்  எழுதி வருபவர். மார்ச் மாதத் தாய்வீடு இதழில் இவரது 'ஜாதி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனும் தனது முகநூற் பக்கத்தில் குறிப்பிட்டுக் கருத்துகள் கூறியிருந்தார். குகன் சங்கரப்பிள்ளையின் 'ஜாதி' என்னும் இக்கட்டுரை முக்கியமான கட்டுரை.  தலைப்பு சிறிது ஒட்டாமலிருக்கின்றது. நாம் நடைமுறையில் , பேச்சு வழக்கில் சாதி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.  சாதி என்றே கட்டுரையின் தலைப்பினை வைத்திருக்கலாம்.

             - குகன் சங்கரப்பிள்ளை -

நண்பர் குகன் சங்கரப்பிள்ளையினை எண்பதுகளிலிருந்து நானறிவேன்.  எண்பதுகளின் ஆரம்பத்தில் மொன்ரியாலில் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்த இளைஞர்களில் ஒருவராக, சமூக அரசியற் செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவரிருந்தார். அப்போதிருந்து அறிவேன்.  அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான் எனது 'மண்ணின் குரல்' நாவல் தொடராக முதலில் வெளியானது. அதில் வந்த மண்ணின் குரல் நாவல், கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பின்னர் நூலுருப்பெற்றது.

எப்பொழுது மெல்லிய புன்முறுவல் பூக்கும்  முகத்துக்குச் சொந்தக்காரர். ஒருபோதும் அவர் முகத்தில் கடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவங்களை நான் கண்டதேயில்லை.  இலத்திரனியற்துரையில் கல்வித்தகமை பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வருபவர்.

'ஜாதி' என்னும் தலைப்பிலான இக்கட்டுரை ஆய்வுக்கட்டுரை போன்றில்லாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விபரிப்புகளை உள்ளடக்கிய கட்டுரையாக அமைந்திருப்பதால் , வாசிப்பவர்களை ஒரு கணம் அதிர வைக்கின்றது. சிந்திக்கவும் வைக்கின்றது. இவர் குறிப்பிட்டிருக்கும்    Caste: The Origins of Our Discontents  என்னு நூலை எழுதிய  Isabel Wilkerson முக்கியமான அமெரிக்க ஆபிரிக்க இனத்து ஊடகவியலாளர் , எழுத்தாளர் இவர். முதன் முதலில் புலியட்சர் பரிசினைப்பெற்ற அமெரிக்க - ஆபிரிக்கர் இவர். உலகத்து மானுடர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், கடவுளை நோக்கி வினவுதல் ஆகியவை இக்கட்டுரையின் ஏனைய சிறப்பம்சங்கள். கட்டுரையைக் கேட்பவர்களுக்குக் கொண்டு செல்வதில் ஆனந்தராணி பாலேந்திராவின் குரலும் சிறப்பாக உதவுகின்றது.

மேலும் படிக்க ...

இவளும் அவளும் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விமானம் தரையிறங்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வியாபிக்க, ஓங்கி உயர்ந்து நின்றிருந்த கட்டங்களையும் ஊர்ந்துகொண்டிருந்த வாகனங்களையும் யன்னல் கண்ணாடிக்குள்ளால் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாமதி.

இருபது வருடங்களுக்கு முன், முதன்முதலாக ரொறன்ரோவுக்கு வந்திருந்த அந்தப் பொழுது மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தது. அவளின் கண்கள் சட்டென ஈரமாகின. மனம் சற்றுக் கனத்தது.

ஸ்பொன்சரில் அம்மாவைக் கனடாவுக்குத் தேவகி கூப்பிட்டிருந்தபோது பாமதிக்கும் அவளுக்கும் பல கனவுகள் இருந்தன. தன்னந்தனியனாகத் தங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட அம்மாவைக் கண்கலங்காமல் கவனிக்க வேண்டும், குளிர்காலத்தின் கஷ்டம்கூடத் தெரியாமல், ஆறு மாதம் சிட்னியிலும், ஆறுமாதம் ரொறன்ரோவிலுமாக மாறிமாறி அவவை வைத்திருந்து, விரும்பியதெல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விதி வேறொரு பாதையை வகுத்திருந்தது. மனமெல்லாம் சிலிர்க்க அம்மாவைச் சிட்னியில் வரவேற்பதற்குப் பதிலாக, அழுதழுது வீங்கிய கண்களுடன், வானம்கூட இருண்டுபோயிருந்த ஒரு நாளில், அம்மாவுக்கு விடைகொடுப்பதற்காக பாமதி ரொறன்ரோவுக்கு வந்திருந்தாள். ரொறன்ரோவில் அவள் தங்கியிருந்த அந்தப் பத்து நாட்களும் தேவகியும் அவளும் அம்மாவைப் பற்றியே மீளவும்மீளவும் கதைத்துக் கதைத்து மறுகினர்.

மேலும் படிக்க ...

உலக சிறுவர் புத்தக தினமும் , குழந்தை இலக்கியமும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
சிறுவர் இலக்கியம்
04 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. -

உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய வேகமான வாழ்க்கையின் நகர்வில் மனிதர்களிடமிருந்து மறைந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்று வாசிப்பு பழக்கம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகைகளையோ அல்லது நல்ல நூல்களையோ காசுகொடுத்து வாங்கி வீட்டில் படிப்பவர்களை விட நூலகங்களுக்கு சென்று படிப்பவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

ஆனால் இன்று இணைய வளர்ச்சியின் காரணமாக அந்த நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் கூட மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான். வாசிப்புதான் ஒரு மனிதனை பூரணமாக்க கூடியது. முடிந்தளவு நல்ல நூல்களை வாசிப்பதும், நமது எதிர்கால குழந்தைகளுக்கும் அந்த வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவும் அவசியமாகும்.

சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. IPPY ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு) இத்தினத்தை கடைபிடிக்கிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில் ஏப்ரல் 2 ஆம் திகதி உலக சிறுவர் புத்தக தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

மேலும் படிக்க ...

விக்கிமூலத்தில் நற்றிணைத் தரவு மேம்பாடு (E-content development for Natrinai resource in ta.Wikisource) - முனைவர் வா. காருண்யா & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி -

விவரங்கள்
- முனைவர் வா. காருண்யா & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி -
ஆய்வு
04 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முனைவர் வா. காருண்யா, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 &  முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி , தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042, -

ஆய்வுச்சுருக்கம்

விக்கிமூலம் எனும் திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. அவற்றுள் தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது பகிர்வுரிமம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் இணையலாம். அவர்கள் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம், திருத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இந்தத் தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் மொத்தப் பக்கங்கள் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளன. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், மொழியியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. பழந்தமிழ் இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அவற்றுள் நற்றிணை தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் ஒன்று மட்டுமே உள்ளது கவனத்திற்குரியது. அந்தத் தரவு எதிலிருந்து எடுக்கப்பெற்ற மூலம் என்று அறிய முடியவில்லை. இருப்பினும் நற்றிணை சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் கூடவே எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? தன்னார்வலர்களின் கடமையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு இந்த நூலிற்கு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தந்து மொழியறிவை மேம்படுத்தலாம். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக மலரும். அது குறித்த புரிதலை இதன் மூலம் பெற இயலும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள நற்றிணை சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.

மேலும் படிக்க ...

ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான  கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம்,  சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல்.  மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான  தொடர் நாவல்.

எட்டாம் வகுப்பிலிருந்து யாழ் இந்துக் கல்லூரிக்குக் கற்கச் செல்லவிருந்ததால் ,அப்போது படித்துக்கொண்டிருந்த வவுனியா மகா வித்தியாலய நண்பர்கள் இருவருடனும் ,தம்பியுடனும் நகரிலிருந்த அஜந்தா ஸ்டுடியோவுக்குப் புகைப்படமொன்று எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். அஜந்தாவுக்கு அருகிலேயே நாங்கள் வழக்கமாகப் புத்தகங்கள் வாங்கும் ஶ்ரீ  முருகன் புத்தக்கடை இருந்தது. அஜந்தாவிலும் வாசலுக்கு அருகிலிருந்த 'கவுண்ட'ரிலிருந்த கண்ணாடிக்  'காட்சிப்பெட்டி'க்குள்  ஜெகசிற்பியனின் நாவல்கள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதில் என் கவனத்தை ஈர்த்தது 'மண்ணின் குரல்' நாவல்.  அன்று வாங்கி வாசிக்கும் நிலையில் நானில்லை. அன்றிலிருந்து இன்று வரை அந்நாவலை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.

மேலும் படிக்க ...

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
01 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ -

காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
31 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!

அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்?  ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.

மாதவன் இருபத்தி நான்கு வயது இளைஞன். நாட்டின் யுத்தச் சூழல் முடிவுக்கு வந்தபோது அவனுக்கு வயது ஒன்பது. அவன் யுத்தத்துக்குள் அகப்பட்டிருக்கவில்லை.  யாழ் மாவட்டத்தின் ஒரு கோடியில் பாதுகாப்பான சூழலிலிருந்தான். ஆனால் அவனை யுத்தக்களச் செய்திகள் மிகவும் பாதித்தன. ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், போராளிகள், படையினர் எனக்கொல்லப்பட்டபோது அவன் நினைப்பான் எதற்காக மனிதர்கள் இவ்விதம் இரத்த வெறி பிடித்து அலைகின்றார்கள். இன்று காசாவில் அதே இரத்தவெறியால் இரத்த ஆறு பெருகுகின்றது. உலகமே உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல் நிற்கின்றது. உலகப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று தோன்றியது. வல்லரசுகள் தம் நலன்களை மையமாக வைத்துச் செயற்படுவதனால் ஏற்பட்டுள்ள நிலையே இவ்விதமாக இரத்த ஆறுகள் பெருகுவதற்கு மூல காரணமென்று கருதினான்.

தற்போது நிலவும் உலக ஒழுங்கு , வல்லரசுகளுக்கிடையில் மோதல்கள் காரணமாகப் பாரபட்சமானது என்று கருதினான். எப்பொழுதும் பாதிக்கப்படுபவை வறிய ,வலிமை குன்றிய நாடுகளே என்றும் கருதினான். வலிமையான நாடுகள் தமக்கிடையிலான மோதல்களுக்கு வலிமை  குன்றிய, வறிய நாடுகளைப் பலிக்கடாக்களாக்குகின்றன. உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகளற்று ஒன்றிணைந்தால் தவிர இந்நிலைக்கு ஒரு போதும் தீர்வு ஏற்படப் போவதில்லை. இவ்விதமான சிந்தனைகள் எப்பொழுதும் அவனது இளம் மனத்தில் உதித்துக்கொண்டேயிருந்தன.

மேலும் படிக்க ...

புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
31 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
புகலிடத்தமிழ் இலக்கியப்பரப்பில் பல சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிக்கொண்டுள்ளன. இவற்றில் முதலில் வெளியான முக்கிய தொகுதி மித்ர பதிப்பக வெளியீடான 'பனியும் பனையும்'. எழுத்தாளர்கள் எஸ்.பொ & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரையில் , பல்வேறு நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு.
 
பதிப்பு விபரம்: பனியும் பனையும்;: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக்கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94: கோகில ஸ்ரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18*12 சமீ.
மேலும் படிக்க ...

கவிஞர் கண்ணதாசன்: நவீன கணியன் பூங்குன்றனார். - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
30 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது.  'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அகஸ்தியரைப் பின்தொடரும் புதல்வி பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


எமது இலங்கைத் தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களாக நன்கு அறியப்பட்டவர்களின் பிள்ளைகள் அனைவருமே எழுத்தாளர்களாகிவிடுவதில்லை. எழுத்தாளரின் பிள்ளை எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்ற விதியும் இல்லை ! எழுத்தாளர்களாக வாழ்ந்தவர்களின் சந்ததிகளில் எழுத்தாளர்களாக வளர்ந்த சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம். நானறிந்த மட்டில், மஹாகவி உருத்திரமூர்த்தியின் மகன் சேரன், மகள் ஓளவை , நீலாவணனின் மகன் எழில்வேந்தன், இலங்கையர்கோனின் மகள் சந்திரலேகா, காரை சுந்தரம்பிள்ளையின் மகள் மாதவி சிவலீலா, கோகிலா மகேந்திரனின் மகன் பிரவீணன், மருதூர்க்கொத்தனின் மகன் ஆரீஃப், எஸ். எம். கார்மேகத்தின் மகள் கனகா, தி. ஞானசேகரனின் மகன் பாலச்சந்திரன், த. கலாமணியின் மகன் பரணீதரன், தகவம் இராசையா மாஸ்டரின் மகள் வசந்தி தயாபரன் ஆகியோர் எனது நினைவுக்கு வருகிறார்கள். இவர்களின் வரிசையில் மற்றும் ஒருவராக நவஜோதி ஜேகரட்னம் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி இங்கே சொல்ல வருகின்றேன். ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாமில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் மகள்தான் நவஜோதி.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (2) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
27 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இரண்டு: அன்பின் ஆதிக்கமும், ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவமும்!

மாதவனது மனம் நிறைய அந்த அணில் பற்றிய சிந்தனைகளே பரவிக் கிடந்தன.

''நண்பனே, என்ன சிந்திக்கின்றாய்? இன்னமும் அந்த அணில் பற்றித்தானா?"

இவ்விதம் கேட்டுவிட்டுச் சிரித்தான் மார்க்.

''உண்மைதான் நண்பனே. இந்த அணில் என் மனத்தில் இருப்பு பற்றிய சிந்தனைகளை வழக்கம்போல் ஏற்படுத்தி விட்டன. இது என்னுடைய இயல்பு. எப்பொழுதும் இருப்பு பற்றிச் சிந்திப்பது. சக உயிரினங்களைப் பற்றிச் சிந்திப்பது.''

மாதவனின்  பதிலைக்கேட்டுப்  பலமாகச் சிரித்தான் மார்க்.

'நீ துறவியாகப் போயிருக்க வேண்டியவன்.  உனது இருப்பிடம் நகரமல்ல.'

''ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். பொதுவாகவே எனக்கு இயற்கையெழில் தவழும் கானகச்சூழலும், அமைதியும் நிறையப் பிடிக்கும். ஆனால்  தொழில்நுட்ப வளர்ச்சியின் எல்லாப் பயன்களையும் உதறிவிட்டுப் போகும் அளவுக்கு மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லையே''

என்று பதிலுக்குக் கூறிவிட்டு மாதவனும் சிரித்தான்.  அவனே மேலும் தொடர்ந்தான்:

''நண்பனே, இந்த இருப்பின் நேர்த்தியை, அழகினை நான் விரும்புகின்றேன். ஆனால் இதன் குறைபாடுகளை நான் வெறுக்கின்றேன். இவ்வுலகம் மட்டும் அன்பின் ஆதிக்கத்தில் மட்டும் நிறைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தால் ... ஆனால் அவ்வாறு ஏன் படைக்கப்படவில்லை?"

''நண்பனே, ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை , சார்பியல் கோட்பாட்டை இங்கும் நீ பாவிக்கலாம்."

இவ்விதம் மார்க் கூறியதைக் கேட்டு மாதவனுக்குச் சிறிது ஆச்சரியமேற்பட்டது.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
25 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!

மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.

இதற்கிடையில் மாடப்புறாக்கள் சில அணிலுக்கு அண்மையில் பறந்து வந்தமர்ந்து இரை தேடத்தொடங்கின. அப்புறாக்களைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் சிலவும் பறந்து வந்து புறாக்களின் அருகாமையில் இரைதேடத்தொடங்கின. புறாக்களுக்கும் ,சிட்டுக்குருவிகளுக்குமிடையில் ஒருவித நட்புரீதியிலான புரிந்துணர்வு, அன்பு இருப்பதாக அவன் இவ்விதம் அவற்றை ஒன்று சேரக் காண்கையில் உணர்வதுண்டு. சிட்டுக்குருவிகள் அமைதியான சுபாவம் மிக்க புறாக்களின் அருகாமையில் ஒருவித பாதுகாப்பு கலந்த உணர்வினை உணரக்கூடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இச்சமயம் பார்த்து சீ கல் என அழைக்கப்படும் வெண்ணிறக் கடற்பறவைகள் சில கீச்சிட்டபடி சிறகடித்துப் பறந்தன.

மேலும் படிக்க ...

இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (இறுதிப் பகுதி) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
25 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

7

ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதலாய், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் யாவும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான பலரும் இன்று விடுவிக்கபட்டே உள்ளனர்.

அர்ணாப்ஜெசிம் முதல் (579 நாட்கள் சிறையில்), சஹ்ரானின் மனைவி வரை கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று விடுதலைப்பெற்று உள்ளனர் (16.03.2023). இது போலவே, இஸ்புல்லா பல்கலைக்கழகம் முதல் அடிப்படைவாத பிரசுரங்களாக கருதப்பட ஜெசீமினது மடிகணனி, மற்றும் நூற்றைம்பது புத்தகங்கள் போன்றவையும் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது போக, இதுவரை பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும,; ஏற்கனவே பதிவுக்கோரி விண்ணப்பித்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெளியாகியுள்ள செய்திகளின் முக்கியத்துவம் இலகுவில் புறந்தள்ள முடியாதது. (விடிவெள்ளி:14.02.2023). (இச்சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் வழமையான துர்பாக்கிய நிலைக்குறித்த கேள்விகளை அவரவர் எழுப்பிக்கொள்வது அவரவர் விடயமாகின்றது.)

மேலும் சில மதங்களின் முன், ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளதையும் இதனுடனேயே, நாம் இணைத்து பார்த்தாக வேண்டியுள்ளது. “முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்’. (வீரகேசரி:23.10.2023).

மேலும் படிக்க ...

இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
25 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


3

தமிழருக்கு எதிரான இனவாத அரசியல் என்பது இதுவரை இரு அடிப்படைகளில் செயல்பட்டு வந்துள்ளது. ஒன்று, இனப்படுகொலைகள் மலிந்த, வன்செயல்கள் பரவலாக நிகழ்ந்த 1977, 1981, 1983 காலப்பகுதியின் ஓர் அரசியல் வடிவத்தைக் கூறலாம். மற்றது, தேர்ந்த, குறுகிய எல்லைப்படுத்தப்பட்ட, அரசியல். உதாரணமாக குருந்தூர் மலை அல்லது மயிலத்தடு மேய்ச்சல் நிலம் அல்லது நினைவேந்தல்களில் இடையூறுகளை ஏற்படுத்துவது அல்லது பொன்னம்பலம் கஜேந்திரன் போன்றோரை உடல்ரீதியாக குண்டுகட்டாக கட்டி அப்புறப்படுத்துவது – என்றளவில் இனவாதமானது இந்நாட்டில் தனது இரண்டாவது முகத்தை காட்டியும் உள்ளது. அதாவது, ஒரு புறம் தமிழ் மக்களுக்கு எதிரான பரந்த ரீதியான வன்செயல். மறுபுறம், திட்டமிடப்பட்ட ரீதியில், முன்னெடுக்கப்படும் குறித்த எல்லைப்படுத்தப்பட்ட, பிரதேச ரீதியான இனவாத நகர்வுகள்.

ஆனால் இனி ஒரு 77 அல்லது 83 நடக்குமானால் (அதாவது, பெருவாரியான, இனப்படுகொலைகள் மலிந்த, பரந்துப்பட்ட வன்செயல்கள்) அது ஓர் இந்திய தலையீட்டுக்கு வழிசமைத்து விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் ஆட்டிப்படைக்கையில் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து, அவர்களை ஒரு  தலையாய சக்தியாக அங்கீகரித்த செயற்பாடானது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாகவே இருந்தது.அதாவது ஒருபுறம் இந்திய ஆக்கிரமிப்பு சம்பந்தமான அச்ச உணர்வு. மறுபுறம் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து அங்கீகரித்த செய்கை. இவை இரண்டும், சர்வதேசிய நகர்வுகளை பின்தள்ள கூடியவை என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க ...

ஆறு தசாப்த காலங்களுக்கும் மேலாக அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமை கலைஞர் க. பாலேந்திரா ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1974 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின்  தமிழ் விழா நடந்தது. இவ்விழாவில்  காலை, முதல் மாலை வரையில்  கருத்தரங்குகள் இடம்பெற்றன. இரவு நிகழ்ச்சியில்  நாதஸ்வர கலைமேதை அளவெட்டி என்.கே. பத்மநாதன் குழுவினரின் கச்சேரியைத் தொடர்ந்து சங்கத்தின் நுட்பம் மலர் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர் இரண்டு நாடங்கள் மேடையேறின. இரண்டுமே அக்காலப்பகுதியின்  இலங்கை அரசியலையும் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்திருந்தன.  மாவை நித்தியானந்தனின் ஐயா லெக்‌ஷன் கேட்கிறார் என்ற நாடகம் நவீன நாடக வரிசையில் சபையோரை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது.

அடுத்து, கலைஞர் ( அமரர் ) சுஹேர் ஹமீட் எழுதி,  இயக்கிய ஏணிப்படிகள்  நாடகம்  மேடையேறியது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட முற்றிலும் வித்தியாசமான நாடகம் ஏணிப்படிகள்.  இதில் பிரதான பாத்திரம் ஏற்று திறம்பட நடித்தவர் க. பாலேந்திரா என்ற மாணவர்.

மேலும் படிக்க ...

இலங்கை தினகரனுக்கு இம்மாதம் 92 வயது ! தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் வகிபாகம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
24 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்! குறிப்பிட்ட  தொண்ணூறு  ஆண்டுகளுக்குள், இலங்கையில் நேர்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.

காலிமுகத்தில் கடலோடு சங்கமிக்கும் சிற்றேரியின் அருகே தினகரனும் இதர ஆங்கில, சிங்கள ஏடுகளும் வெளியாகும் மாபெரும் கட்டிடம் அமைந்திருப்பதனால், தினகரனுக்கும் ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என்ற நாமம் கிட்டியிருக்கிறது. இதன் நிறுவனர் ( அமரர் ) டி. ஆர். விஜேவர்தனா. தினகரன், 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House  என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன். தினகரன் முதலாவது இதழ் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. தினகரன் வாரமஞ்சரி ( ஞாயிறு பதிப்பு ) 1948 மே மாதம் 23 ஆம் திகதி அதன் முதல்வெளியீட்டை வரவாக்கியது.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முதல் காலாண்டு நிதிஉதவி பெற்ற கிழக்கு மாணவர்கள். - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
24 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அவுஸ்திரேலியாவிலிருந்து  கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு  நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில்,  மட்டக்களப்பு -  அம்பாறை மாவட்டங்களில் வதியும்  ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை  பாண்டிருப்பில் நடைபெற்றது.

கல்வி நிதியத்தின் கிழக்கு மாகாண தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர்  முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டிருப்பதனால், இவ்வாண்டு ( 2024 ) முதல் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் குடும்பம் - சி. செந்தாமரை எம்.ஏ., பி.எட்., முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30 -

விவரங்கள்
- சி. செந்தாமரை எம்.ஏ., பி.எட்., முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30 -
ஆய்வு
24 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

              - எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -
முன்னுரை    

கரிசல் இலக்கியத்தின் வழியாகக் கிராமிய மக்களின் எளிய வாழ்வியலைத் தம் எழுத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவர் தமது 21வது வயதில் தனது முதல் சிறுகதையான ‘பரிசு’ எனும் சிறுகதையினை எழுதினார். அச்சிறுகதை செம்மலர் இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் ஆறு நாவல்களையும், ஆறு குறுநாவல்களையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ள இவருக்கு மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்குச் சமூகம் மற்றும் அரசியல் பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் இவர், நுட்பமான அரசியல் அறிவாளியாக விளங்கியதுடன் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் இயங்கியுள்ளார். இத்தகைய சமூக சிந்தைனை கொண்ட படைப்பாளியான மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணப்படும் குடும்பம் குறித்தான கருத்தியல்களை, உறவுகளை, சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குடும்பம்

ஆளுமைப் பருவம் எய்திய ஆணும் பெண்ணும் உரிய சமூக அங்கிகாரத்துடன் கூடி வாழ்வதே குடும்பம் எனப்படுகின்றது. இத்தகைய அமைப்பில் கணவன், மனைவி, இவர்களின் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர். இத்தகைய குடும்பம் ஒரு தனி அலகு அல்லது தனிக்குடும்பம் என்று வழங்கப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் ஒன்றிணைந்து இரத்த உறவுடைய ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டுக் குடும்பமாக அறியப்படுகின்றது.

மேலும் படிக்க ...

நாட்டுப்புறப் பழமொழிகளின் பொருண்மையும் கருத்தாக்கமும் - பி.மோகன பிரியா, முதுகலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும், அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி-05 -

விவரங்கள்
- பி.மோகன பிரியா, முதுகலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும், அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி-05 -
ஆய்வு
24 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" தமிழ்க் குடியினர் ஆவார். இத்தகைய தமிழர்கள் தொடக்க காலத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர்.  தாம் வாழும் சூழலை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், தாம் உணர்ந்துக் கொண்ட  கருத்தினை பிறருக்கு கூறும் வகையில் மனிதரிடமிருந்து தோற்றம் பெற்றதே வாய்மொழி இலக்கியமான பழமொழியாகும். பழமொழிகளைப் போலவே விடுகதைகளும் வாய்மொழி இலக்கியமாகக் கருதப்படுகின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பழமொழிகளையும் விடுகதைகளையும்  வாய்மொழி வழியாகவே வழங்கி வந்தனர். ஆனால் அவற்றினை ஏடுகளில் எழுதவில்லை. அதனால் தான் பழமொழியினை வாய்மொழி இலக்கியம் என்று குறிப்பிடுகின்றனர். ஒருவர் செய்யும் செயலில் ஏதேனும் சில குறைபாடுகள் இருப்பின் அத்தகைய செயலினைச் சுட்டிக்காட்டி அமையக்கூடிய சிறு கருத்தே பழமொழியாகும். நாட்டுப்புற மக்களின் மகுடமாக விளங்கக் கூடியவை நாட்டுப்புற பழமொழிகளாகும் . அன்றைய காலகட்டத்தில் பழமொழிகள் இல்லாத சமுதாயத்தினை நாம் காண முடியாது. ஏனென்றால் அந்தளவிற்கு பழமொழிகள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கினை பெற்றவையாகவே விளங்கின.

இத்தகைய பழமொழிகள்  ஒருவரின் அனுபவப் போக்கினை பிறர் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்தவையாகும். மக்களின் வாழ்வில் சிறப்பு பெற்ற பழமொழிகள்  இன்றைய காலத்தில் எவ்வாறு வழங்கப்படுகின்றன, அவற்றினைப் பற்றிய கருத்துகள் என்ன? அவை எந்த பொருண்மையில் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிடும் வகையில் இவ் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

மேலும் படிக்க ...

மலையகா - மலையகப் பெண்களின் கதைகள்!

விவரங்கள்
- தகவல்:பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
22 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடலும் கப்பலும் கரையாத சோகமும் வணங்கா மண் - நூன்முகக் குறிப்பு! - முனைவர் செல்லத்துரை சுதர்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை.-

விவரங்கள்
- முனைவர் செல்லத்துரை சுதர்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை.-
இலக்கியம்
22 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனப்படுகிறது. வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.

மேலும் படிக்க ...

இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1
அண்மையில், தமிழ் தேசியத்தை கட்டுவிக்கும் முயற்சிகளில் சிலதாக, இலங்கையின் வடக்கில் நிகழ்ந்த  பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:

1. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரியமை.
2. தமிழர் தேசியத்தைக் கட்டிவளர்க்கும் பொருட்டு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு யாழ் கூட்டம்.
3. சாந்தனின் மரணச்சடங்கு.

இவற்றுடன் வேறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவற்றில் சாந்தனின் மரணச்சடங்கானது, தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் அதே சமயம் இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டிவிடும் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகவும் அமைந்து போனது. ஆனால் இவையாவும், இறுதியில், எந்தளவில் வெற்றியை எய்தின என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

காரணம், மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, அது, ஒப்பீட்டளவில், அற்ப சொற்பமாகவே இருந்தது என்பது சில ஆய்வாளர்களின் கணிப்பானது. இதனாலோ என்னவோ அண்மைக்காலங்களில் வீறு குறைந்து விட்ட தமிழ் தேசியத்தைப்பற்றிப் பல்வேறு அறிக்கைகள் வெளிவருவதாய் அமைந்திருந்தன.  “தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் ஆட்டங் காண்கின்றன” என புருஷோத்தமன் தங்கமயிலும் (முரசு: 17.03.2024) “நாம் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை துவங்குவதற்கு முன் எமது மக்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்க வேண்டியுள்ளது.” என யோதிலிங்கமும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் எனலாம். விக்னேஸ்வரன் ஐயாவின் வடமாகாணசபை நாட்டியம் முதல் தமிழரசு கட்சியின் தேர்தல் , குருந்தூர் மலை அரசியல் வரை பார்த்து முடித்துவிட்ட தமிழ்மக்கள், தேசிய அரசியல் பொறுத்து  ஒரு விமான பார்வையை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க ...

திருப்பூர் சக்தி விருது 2024

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
21 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும்   இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் )  அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.

( ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, ,   திருப்பூர்   641 604  / 99940   79600 )

திருப்பூர் சக்தி  விருது    குழு,(  (கனவு / முத்தமிழ்ச்சங்கம் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர்காயும் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.  இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே  அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகம் தளக்குறிப்பு கூறுகிறது:

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நினைவு கூர்தல் : பண்டிதர், சைவப்புலவர் ஏகாம்பரநாதன் பரஞ்சோதி ஆசிரியர். - வ.ந.கி -
  2. அஞ்சலிக்குறிப்பு: ஈழத்தின் மூத்த தலைமுறை படைப்பாளி கவிஞர் வி. கந்தவனம் நினைவுகள் ! - முருகபூபதி -
  3. காலம் 60 ஆவது இதழ் வெளியீடு! - தகவல்: செல்வம் -
  4. கண்ணாடிக்காரனின் கவிதை! -ம.ஆச்சின்.
  5. ஒரு கவிஞனின் சமையலறை ---- செ.சுதர்சன் -----
  6. நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி) - தகவல்: குரு அரவிந்தன் -
  7. கலாநிதி கலாமணியின் 31ம் நாள் நினைவாக மூன்று நூல்கள் வெளியீடு! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
  8. இரு வேறு காலகட்டக் கதைகளிரண்டும், சில ஒற்றுமைகளும்! - வ.ந.கிரிதரன் -
  9. 'மண்ணின் குரல்' - என் ஆரம்ப நாவல்களின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் -
  10. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்மையான மேதை! & ஸ்டீபன் ஹார்கிங் : தப்பிப்பிழைத்தலில் வெற்றிகரமான போராளி! - வ.ந.கிரிதரன் -
  11. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் - மீண்டும் எழுந்து வருக! - வ.ந.கி -
  12. கார்ல் மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!
  13. திருப்பூர் கிருஷ்ணனின் “சிவப்பாய்ச் சில மல்லிகைகள்” சிறுகதையில் குடும்ப உறவுநிலைகளும் கதைமாந்தரின் பண்புகளும் - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, அவிநாசி ரோடு, கோயம்பத்தூர் - 14. -
  14. பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர் - நாவல்/ சிந்து சீனு - சுப்ரபாரதிமணியன் -
பக்கம் 30 / 107
  • முதல்
  • முந்தைய
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • அடுத்த
  • கடைசி