நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் கா. சிவத்தம்பி - ஜோதிகுமார் -
1
போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி… என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.
"பல்ல புடுங்கினன்… ஒன்று கிடந்து ஆடிக்கொண்டிருந்தது… ஒன்றும் சாப்பிட முடியாமல்… புடுங்கி போட்டன்… காய்ச்சலப்பா"…
நாற்காலியை இழுத்து அமரும் போது குமரனும் வந்து சேர்ந்தான்… எழுந்து உட்கார்ந்து கொண்டார்… சற்று நேரத்தில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை… பாரதி – புதுமைபித்தன் குறித்து அளவிலாவினோம்… "அவர்கள் இருவரும் தான்… இரு அசுர பிரமாக்கள்… பிரமாண்டங்கள்… இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில்… புதுமைபித்தன்… ஓ… தமிழின் நெகிழ்வுதன்மையை… இலாஸ்ட்டி சிட்டியை அவன்தானே முதன்முதலாய் கொணர்ந்து சேர்த்தவன்… நல்லஅறிவு… ஆனால் ஏழையாய் தானே செத்தான்…”