இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 61 : 'அண்மைக்கால சிங்களப் புனைகதைகள்'
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

“ஜி” என்ற எழுத்தானது, இங்கே, அழுத்தி கூறப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. காரணம் இதே காலப்பகுதியில் வாழ்ந்த எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பாரும் நீதியரசராக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒருவராகும். அவரது வாழ்வு, ஜி.சுப்ரமணிய ஐயரின் வாழ்வோடு ஒப்பிடும் போது, ஒப்பிட கூடாத, பல்வேறு வித்தியாசங்களை காட்டுவதாய் இருந்துள்ளது.
தனது, 16ம் வயதில், 1871இல், மெட்ரிக்குலேஷனையும், 1873இல் எப்.ஏ பரீட்சையும் தேறி, 1875இல், சி.எஸ்.எம் மிஷன் கல்லூரியில், ஆசிரியர் ஒருவராக, ஒரு 40 ரூபாய் சம்பளத்தில் அமரும் இவர், பின் இரு வருடங்களில் பச்சையப்பா முதலியார் கல்லூரியில், அமர்ந்து, (1877) அடுத்த இரு வருடங்களிலேயே, “இந்து ஹைஸ்கூலின்” பிரதம ஆசிரியராக நியமிக்கப்படுகின்றார். அப்போது, இவ் இளைஞனின் வயது 24. (1879).
இப்படி பிரதம ஆசிரியராய் நியமிக்கப்படுவதற்கு, ஒரு வருடத்தின் முன்னரேயே, 1878இல், தனதுவேறு சில நண்பர்களுடன் இணைந்து (Triplicane Literary Society Members ) ஓர் ஆங்கில பத்திரிகையை இவ் இளைஞன் துவங்குகிறான். பத்திரிகையின் பெயர்: “The Hindu”. (02.09.1878). இவ்வளவும் நடந்தேறியது அவனது 23-24 வயதிலேயே என்பது முக்கியமானது. இவனது எழுத்து வண்மையை பற்றி கூற வரும் பாரதி, பிற்காலத்தில் எழுதுவான்: “காரம் மிகுந்த, அரைத்தெடுக்கப்பட்ட பச்சை மிளகாய் சாந்தில், தன் பேனையை முக்கி எழுதுபவன்”.
2
தந்தை ஒரு வக்கீல். குடும்பம் பிராமண குடும்பம். ஆறு சகோதரரர்கள். ஒரு சகோதரி. நான்காவதாய் அவதரித்த இவனது கல்வி முழுமையும் ஆங்கிலத்தில்தான்.

கவிதை அறிமுகம்: இக்கவிதை கிரேக்கத்தின் பழம் பெரும் உறுதிப்பாட்டு வாதத்தை (Stoicism) அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நம்முடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றை நம்மால் முறைப்படுத்த முடியும். நமது கட்டுப்பாட்டில் அடங்காத பிறர் கருத்துக்கள், காலநிலை, மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நம்மால் முறைப்படுத்த இயலாது. எனவே அவற்றைத் தக்க முறையில் புரிந்து அப்படியே ஏற்றுக் கொண்டு நடுநிலையோடு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகப் பாவித்து வாழும் ஞானியின் மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு.
எனவே 1841 இல் எமிலி பிரான்டே எழுதிய இக்கவிதை அவரின் ஞானி(ஸ்டாயிக்) மனநிலையை காட்சிப்படுத்துகிறது எனக் கொள்ளலாம்.
கவிதை:
பொருளதன்மேல் எம்மின் விருப்பு அருகியதே
பெருஅன்பினை எள்ளிப் பரிகசிப்பேன் யான்
உருபுகழ் எமக்கு வெறுங் கனவே!
வருகாலை மறைந்திடும் அதுவே!
ஒருவேளை நான் பிரார்த்தித்தால், அந்த
ஒரேயொரு பிரார்த்தனை என்அதரத்தை எனக்காக
அசைத்திடும், 'யான்சுமக்கும் இதயத்தை விட்டொழிய
இசைந்து நல்கிடு சுதந்திரத்தையென'.
ஆம், இலக்கை நோக்கி விரைந்திடு நாட்களில்
மலங்கி மன்றாடிக் கேட்பது அவ்வளவே
'இருப்பிலும் இறப்பிலும் பிணைப்பிலா எனதுயிர்
பெரு துணிச்சலுடன் சகித்திடல் வேண்டுமென'.

நீதிக்கதை 1: செயற்கை உலகம்!
பகுதி 1 – இயற்கையின் மடியில் பூம்பாறை
மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், செங்குன்றம் என்ற மலைத்தொடரின் அரவணைப்பில் பூம்பாறை என்ற அழகிய சிற்றூர் அமைந்திருந்தது. இயற்கை அன்னையின் அரவணைப்பில் செழித்து விளங்கிய அந்த ஊர், அமைதி, அன்பு, ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தது.
பூம்பாறையின் காலைகள் பறவைகளின் இனிய கீச்சொலியால் விழித்தெழும். மாலைகள் அமுதாறு என்ற ஆற்றின் சலசலப்பில் உறங்கும். அந்த ஊரின் மக்கள் அனைவரும் அன்பு என்ற ஒரே நூலில் இணைக்கப்பட்ட குடும்பமாக வாழ்ந்தனர்.
செங்குன்றத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் பரந்து விரிந்திருந்தன. அவற்றில் பலவகையான மரங்களும், மூலிகைகளும் செழித்து வளர்ந்தன. பறவைகள் ஆயிரக்கணக்கில் கூடுகட்டி வாழ்ந்தன. மயில், மான், முயல், அணில், யானை எனப் பல உயிரினங்கள் அச்சமின்றி உலவின.
செங்குன்றத்தில் ஊற்றெடுத்து ஓடிய அமுதாறு, பூம்பாறை மக்களின் உயிர்நாடியாக விளங்கியது. அதன் நீரால் வயல்கள் முப்போகம் விளைந்தன. கால்நடைகள் செழித்தன. மக்களின் வாழ்க்கை வளமாக இருந்தது.

தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய் உணடு.அதெப்படி வடிவேலு பாணியில் பதிலளிக்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா? இதோ என் விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றேன். புரிந்து கொள்வீர்கள். இதற்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் ஊழல் பற்றிய அறிவைப்பெற்றிருப்பது அவசியம்.
ஊழலை இரு விதங்களாகப் பிரித்துபார்க்கலாம்: ஒன்று அரச அலுவலங்களில் ,அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல், இதனை &கீழ்மட்ட ஊழல் அல்லது Petty Corruption என்று குறிப்பிடலாம். அடுத்தது மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல். இதனை Grand Corruption என்பர். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் அமைச்சர்கள் போன்ற மேலமட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில் நிலவும் ஊழல்.


குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு முக்கியம். ஆங்கிலத்திலும் , தமிழிலும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அது இந்நூலின் நல்லதோர் அம்சம்.
சிறுவர் இலக்கியம் மானுட சமுதாயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. குழந்தைகளே நாட்டின் எதிர்கால நாயகர்கள். அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதொரு படிக்கட்டு சிறுவர் இலக்கியம்.
குழந்தைப்பருவம் வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்ளும் பருவம் அல்ல. பாடசாலை, வீடு என்று வண்ணத்துப் பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலகட்டம். இப்பருவத்தில் அவர்கள் உள்ளங்களில் நல்ல சிந்தனைகளை வளர்ப்பது அவசியம். நாம் வாழும் மண், அதன் பண்பாட்டின் ஆரோக்கியமான அம்சங்களில் கவனத்தைத் திருப்புவது அவசியம். நாம் வாழும் இப்பூமி பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். இப்பூமி இருக்கும் சூரியக் குடும்பம்,சூரியக் குடும்பங்கள் இருக்கும் பிரபஞ்சம் இவற்றை அறிந்து கொள்ள வைப்பது அவசியம். கற்பனைத்திறனை வளர்ப்பது அவசியம். மொழித்திறனை அதிகரிக்க வைப்பது அவசியம். இள வயதிலேயே வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்குவது அவசியம். வாசிப்பில் மனதொன்றிக்கிடப்பது மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க வைக்கின்றது. அவ்விதம் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்ப்பது அவசியம். வாசிப்பு ஒரு பொழுது போக்கு, அந்தப் பொழுது போக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை மிக்கது. அவ்விதம் மனத்தை இன்பமாக வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தையும் செய்கிறது குழந்தை இலக்கியம்.

7
அடுத்த நாள் காலை பஸ்சில் லா ஸ்பீசியா(La Spezia) கால் மணி நேர ரயில் பயணத்தின் பின்பு ஐந்து கடற்கரை ஊர்களுக்கு (Monterosso, Vernazza, Corniglia, Manarola மற்றும் Riomaggiore) சென்றோம். இவை அக்காலத்தில் முக்கியமான நகரமான மான்ரெஸ்சோயை அடைந்தோம். உள்ளே பெரிய ஊர்: ரயில் நிலையத்திலிருந்து பாதை நேரடியாக கடற்கரைக்கு இறங்குகிறது. அழகான கடற்கரை தொடர்ச்சியாக நடந்தபோது என்னைக் கவர்ந்தது மலைப்பாறையில் செதுக்கப்பட்ட நெப்டியூன் சிலையாகும். ஆரம்பத்தில் கையிலுள்ள சூலத்துடன் நேப்டியூன், இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டுவீச்சில் சூலத்தையும், கையையும் இழந்த நிலையில், இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்தது.
போரில் கடவுளருக்கும் அதே கதியே?
சூரியக் குடும்பத்தில் எட்டாவது கோள் ஆனால் ரோமர்களது ஆறு, கடல் மற்றும் எரிமலைக்கு மட்டுமல்ல, குதிரைகளுக்கும் உரிய கடவுளாகும். ஐந்தாயிரம் வருடங்கள் பழமையான கிரிக்கர்களின் பொசிடோன்தெய்வத்தின் ரோமானியப் பதிப்பே நெப்டியூனாகும். கடல் மாலுமிகளது முக்கிய தெய்வமாகும்.
ரோம அரசு இருந்த ஆயிரம் வருடங்கள் இயற்கையின் சக்திகளை( Pagan Gods) தங்கள் தெய்வங்களாக வழிபட்டார்கள். கிரிக்க தெய்வங்களை விட ரோமர்களது தெய்வங்களின் எண்ணிக்கை அதிகமானவை . நாங்கள் இப்பொழுது பாவிக்கும் ஃபுளோரா(Flora) இயற்கையில் உள்ள தாவரங்களைச் சொல்வது: ரோமர்களது முக்கிய தெய்வமாகும் அதேபோல் காட்டு விலங்குகளுக்கு ஃபோனா(Fauna) என்ற பெண் தெய்வம் உண்டு. கதவு, பிணைத்தல், படலை எல்லாவற்றிற்கும் தெய்வங்கள் உள்ளது. நுழைவாசலின் தெய்வம் ஜானா: அதனாலே ஜனவரி என்ற பெயர் வந்தது – புதிய வருடம் ஜனவரி மூலம் உள்ளே நுழைக்கிறது. விவசாயத்திற்கு கைத்தொழில்கள் ஒவ்வொன்றிற்கும் கடவுள் உண்டு. இதற்கப்பால் தெய்வங்களுக்கு மிருகப்பலிகள் பலிகள் கிடைக்கும். . பன்றிகள் வெட்டப்பட்டுப் படைக்கப்படும். தெய்வங்கள் மனித உருவிலானவை. அவைகளுக்கும் எங்களைப்போல் கோபம், காதல் இரக்கம் என்ற குணங்கள் ஏற்படும்.

ஒரு முறை எனது ஆட்டோ நண்பன், ‘குடும்ப வாழ்வு’ பொறுத்து, தனது அபிப்பிராயத்தை கூறிக்கொண்டிருந்தான். குடும்ப வாழ்வு என்பது, ஆளுக்காள் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவத்திலேயே தங்கி உள்ளது என்று அவன் பிரலாபித்தான். அவனது ஆட்டோ ரிப்பேருக்காக, ஆட்டோ ரிப்பேர் செய்யும் அவனது நண்பன் ஒருவனின் வீட்டின் முன்னால் நின்றிருந்தோம்.
அவனது நண்பன் ஒரு திறமான மெக்கானிக் போல. அது போலவே, இவனது நல்ல நண்பனும் கூட. திருத்தி முடித்ததிற்கு கூலியாக ஒரு சதத்தையேனும், இவனிடம் பெற்றானில்லை. ரிப்பேர் நடந்த அந்த இடமோ ஒரு தோப்பு போன்றது. சுற்றி வர உயர்ந்த உயர்ந்த மரங்கள். நடுவே வீடு –பழைய ஓர் இடிந்து விழும் நிலையிலிருந்த வீடு. வீட்டை சுற்றி, கூட்டாமல் கொள்ளாமல், ஒரு வகை ஈரலிப்புடன் வீழ்ந்திருந்த இலை குழைகள். ஈரமான தூசி படிந்திருந்தது. ஒரு ஆட்டோவோ, அன்றி ஒரு மோட்டாரோ அங்கே வந்து ஒரு ரிப்பேருக்காக நின்றதுமாயில்லை. அப்படி என்றால், இது இவனது கராஜ் கிடையாது. வேலை செய்வதற்கான, இவனது பட்டறையை வேறு இடத்தில் இவன் வைத்திருக்க வேண்டும். நான் உட்கார, ஓர் கதிரையை, ஓர் உயர்ந்த மரத்தடியில் இழுத்து போட்டுவிட்டு, ஆட்டோவின் பின்புறத்தை திறந்து, இருவருமாய், குனிந்து உட்கார்ந்து ரிப்பேர் செய்வதில் ஈடுபட்டனர்.
மரங்கள் அடர்ந்திருந்த, அந்த மர நிழலில், சுகமான காற்றை அனுபவித்தவாறு வெறுமனே உட்காந்திருந்தேன்.
அரைமணி நேரத்தில் ரிப்பேர் முடிந்தது. செல்லும்போது, பின்னால் இருக்கையில் இருந்து கூறினேன்: “திறமைசாலி இவன்”. உடனடியாக ஆமோதித்தான் எனது ஆட்டோ நண்பன்: “இந்த நகரிலேயே இவனை போன்ற திறமைசாலி இல்லை. விஷயத்தை கூறினால் போதும். சட்டென விவரத்தை பிடித்து கொள்வான் மனிதன். ஆனால் பாவம். தனியாகத்தான் இருக்கின்றான்”.
அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!

அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!
சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக்ட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.
எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது? ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.

[ 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதன் ஓரளவு முழுமையான எழுத்து வடிவம் இது.]
கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம்
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம் என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும் செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.

இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு.
அதற்கு இடஞ்சலாய் கொசுக்கள் சுற்றிலும் ரீங்காரமிட்டு தொல்லை செய்தன மதனை. வலது புற ஜன்னலின் ஓரத்தில் கொஞ்சம் செடிகள் இருந்தன. அந்தப்பக்கம் இருந்துதான் கொசுக்கள் வந்திருக்க வேண்டும்.
அதனை சரியாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான் மதன்.அவனின் தற்காலிக ஊழியர் சம்பளத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளடங்கவில்லை. இருந்தாலும் இன்னொரு உயிருடன் சாவகாசம் வைத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு என்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையையும் செய்து வந்தான்.அவைகளைச் சரியாகப் பராமரித்து வந்தான்.
0
வால் என்று தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . உடம்பைச்சுற்றி ஆட்டம் போட்டு ஊசியாய் குத்தி அவனின் துரத்தலுக்குப் பயப்படாமல் திரியும் கொசுக்களை விரட்ட இரு கைகள் போதாது. சாட்டை போல் ஒரு வால் இருந்து துரத்துவதுதான் சவுகரியமாக இருக்கும் என்று நினைத்தான் மதன்
அந்தக் கொசுக்கள் கற்பகத்தைக் கடிக்குமா. அவள் அப்படி எதுவும் அசவுகரியமாய் உணர வில்லை. சாதாரணமாய்தான் தன் அருகில் உட்கார்ந்திருக்கிறாள்.

சிங்களக் கவிஞர் சஞ்சீ குணதிலகவின் May I be allowed என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம்.
பள்ளிப் பையுடன் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அவை. அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளார் சஞ்சீ குணதிலக. அதனக் கவிஞர் பா.அகிலன் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதனையும் தனது பதிவுக்கான எதிர்வினைகளில் ஒன்றாகப் பகிர்ந்திருந்தார் சஞ்சீ குணதிலக. அத்தமிழ் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மூலக் கவிதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி]
எனக்கு அனுமதி கிடைக்குமா? - சஞ்சீ குணதிலக -
பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகளுடன்
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளுக்காகத்
தனிமையில் கண்ணீர் சிந்த
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அவர்களின் நினைவாகச்
சடங்குகள் செய்ய
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
பொம்மைகளுடன் சேர்த்துத்
தங்களை உயிருடன் புதைக்காத
ஓரிடத்தில்
அவர்கள் மறுபிறவி எடுக்கட்டும்.
அவர்களின் உறவினர்களுக்காகத்
துயரப்பட
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அவர்களின் ஆன்மாக்கள்
ஏதேனும் ஒரு வகையில்
அனுதாபத்தை உணரட்டும்.
அவர்களின் நினைவாகக்
கவிதை எழுத
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
காற்றில் கலந்திருக்கும்
அந்த ஆன்மாக்கள்
என் துயரத்தை உணர்ந்து
என்னை மன்னிக்கட்டும்.
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளைப் பற்றி
உங்களைச் சிந்திக்க வைக்க
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அந்த ஆன்மாக்களின் அருளால்
நம் உறவினர்கள் அனைவரும்
காப்பாற்றப்பட
நாம் பிரார்த்திக்கலாம்.
இனம், பிறப்பு, சாதி மற்றும்
பாலினம் ஆகியவற்றின்
கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்
மற்ற மனிதர்கள் மீது
உணர்வுபூர்வமான பற்று கொள்ள
எனக்கு அனுமதி கிடைக்குமா?
9 ஆகஸ்ட் 2026.

முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் – 636005 (பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா.
முகவுரை
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஒலி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தினான். காலப்போக்கில் மனித இனம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பேச ஆரம்பித்தான். அப்பேச்சே மொழியாக உருவெடுத்தது. இத்தகைய மொழி மென்மேலும் வளர்ச்சி பெற்று இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு எனப் பல்வேறு வகைகளைத் தழுவியுள்ளது. இவ்வகையில் படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளன. படைப்பிலக்கியங்களைப் படைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு உத்தியினைக் கையாளுகின்றனர். அவற்றில் பலரும் அவர்களுடைய சொந்த மண்வாசனையைக் கமலச் செய்கின்ற வகையில் படைக்கின்றனர். அவ்விதத்தில் கலைச் செல்வியின் முதல் படைப்பான சக்கை புதினமும் அவருக்கு உரிய மொழி நடை அமைப்பில் அமைந்துள்ளது. இதனைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
மொழி
மொழி நம் விழி என்று பேராசியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அவ்வகையில் நம்முடைய விழியைப் பாதுகாப்பது போல நம்முடைய மொழியையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் மட்டுமே சமுதாயம் பாதுகாக்கப்படும். சமுதாயம் பாதுகாக்கப்பட்டது என்றால் மக்களைப் பாதுகாக்கின்றோம், மக்களைப் பாதுகாக்கின்றோம் என்றால், அம்மக்களின் மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் முதலியவற்றைப் பாதுகாக்கின்றோம். எனவே மொழி என்பது சமுதாயம் சார்ந்தும் மனித உணர்வுகளைச் சார்ந்ததும் ஆகும். மேலும், மொழியினைப் பற்றி மொழியியல் அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களை எடுத்து கூறுகின்றனர். அவ்வகையில், “மொழி சமுதாயம் சார்ந்தது. மொழி இல்லையேல் சமுதாயம் இல்லை.

கட்டுரையாளர் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.
முன்னுரை
இரவலன் என்ற சொல்லுக்கு ஏற்போர், பரிசிலர் என்று பொருள். புரவலன் என்ற சொல்லுக்குக் காத்துதவுவோன், கொடையாளன் என்று பொருள். தன்னை நாடி வருகிற புலவனை வள்ளலோ அல்லது மன்னனோ அன்புடன் எதிர்கொண்டு அழைத்து அவரது திறனுக்கு ஏற்ப பரிசில்களைக் கொடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களிடம் அல்லது வள்ளல்களிடம் சென்று ஆடிப்பாடித் தங்களுடைய கலைத்திறனை வெளிக்காட்டுவர். அவ்வாறான ஆடல், பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசர்கள் அல்லது வள்ளல்கள் அவர்களுக்குத் தேவையான அளவு செல்வங்களை வாரி வழங்குவர். இவ்வாறான இரவலர் - புரவலர் உறவு என்பது எட்டுத்தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டுப் பாடல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டில் உள்ள இரவலர் - புரவலர் உறவு எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து மட்டும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
இரவலர் விருப்பம் / எதிர்பார்ப்பு
இரவலர்களுக்குத் தேவை பரிசு மட்டுமன்று. அவர்களது தகுதிக்கான பரிசு. புரவலனின் அன்புடன் அது கிடைக்கவேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்துள்ளது. இதைத்தான் பெருஞ்சித்திரனாரின் பின்வரும் இரு பாடல்கள் சொல்லுகின்றன.
‘‘பற்பல குன்றும் மலையும் கடந்து பரிசில் பெற வந்து நின்றுகொண்டிருக்கும் என்னைப் பார்க்கவும் செய்யாமல் ‘இதனை ஏற்றுக்கொண்டு செல்லுங்கள்’ என்று தந்து சொல்லி அனுப்புவதற்கு நான் என்ன பரிசில் வாணிகம் செய்ய வந்தவனா? என்னிடம் விரும்பி வந்து தினையளவு பரிசில் தந்தாலும், அதன் அன்பு பெருமையை உணர்ந்து நான் ஏற்றுக்கொள்வேனே! (புறம்.208)’’ என்று பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்துப் பாடிய பாடல் இது. இன்னொரு பாடல் வருமாறு.

புதிர்
பெண்களை வரையறை செய்வதில்
மரபணுக்களா ,சமூகப்பண்பா...? முன்
நிற்கிறது என்றால்
மரபணு என்று விஞ்ஞானமும்
சமூகப்பண்பு என ஒரு சாரரும்
போட்டி போட்டாலும் இங்கே
ஒரு நகர்வு ஏற்படுகிறது அதன் காரணம் தான்
என்னவோ? மேலும் புரியாமையை
ஏற்படுத்துகிறது
எப்போது தான் புரியப் போகிறது
இந்தப் புதிர் ?
அத்திவாரங்களை எங்கேயோ கட்டி விட்டு
கட்டடங்களை இங்கு கட்டிக்
கொள்ளும் நானும்
கனவுகளில் தான் வாழ்கிறேன்
நினைவுகளில் வீழ்கிறேன்

கனடா, ஒன்ராரியோவில் உள்ள பீல் பிரதேசத்தில் கடந்த 17 வருடங்களாகச் செயற்பட்டுவரும் தமிழ் மக்களின் குடும்ப மன்றமான சொப்கா (SOPCA) குடும்ப மன்றத்தின் 17வது ஆண்டு நிறைவு கலை விழா ஜோன் போலிஸ் ஒன்றுகூடல் மண்டபத்தில் சென்ற சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஒன்ராறியோ கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனரும், ஆசிரியருமான திருமதி கமலவதனா சுந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக 7 ஆம் வட்டார கவுன்சிலரும், மேயர் பதவிக்குப் போட்டியிடுபவருமான தீபிகா தமெர்லா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறுக்கும் நெடுக்குமான கோடுகளுக்கு நடுவில் மங்களம் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள்தான் அவனை முதலில் வரவேற்றனர். பார்ப்பதற்குத் தம்மைப் போன்ற தோற்றப்பொலிவுடன் இருந்ததால் முதல் சந்திப்பிலேயே கட்டித்தழுவித் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். தான் யார்? என்பதையும் ஏன் இந்தக் கோலத்தில் இந்தப் புள்ளியில் வந்து நிற்கிறேன் என்றும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை என்பதை அவனால் அப்போது நம்பமுடியவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய பெயரையாவது கேட்பார்கள் என்று மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கண்கள் எதிரிலிருந்த முகங்களை நோட்டம் விட்டன.
கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண் மீது அவனுடைய பார்வை சென்ற போது, “பயில்வான் பக்கிரிக்கு! ஜலம் கொடும்மா!” என்ற குரல் கனத்து ஒலித்தது.
அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பெயரை இவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று யோசித்து முடிப்பதற்குள் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் பக்கிரி. இல்லை… இல்லை… பயில்வான் பக்கிரி.

எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்திறமைகள் பெற்றவர் கவிஜி அவர்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை, உலகசினிமா என பன்முகப் பரிமாணங்களில் தனது எழுத்துப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 25 நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் இந்நூல் 16ஆவது நூலாக வெளிவந்தது. தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் படைப்புகள் இவருடையது.
இவரது கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. சாதரண மொழிநடையில் அமையாது கவித்துவமான நடையைக் கொண்ட கட்டுரைகள் இவருக்கானது. தான் எடுத்துக் கொண்ட பொருண்மையில் இருந்து நீங்காது, ஒழுங்கமைவுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டு நம் கருத்தை, சிந்தையை நிறைக்கிறது.
பாகீரதியின் பேரன் என்ற முதல் கட்டுரையில் பாரதி குறித்து கட்டுரை வரைந்துள்ளார். இதில் பாரதியைப் பற்றிய இவரது ஆழ்ந்த வாசிப்புத் திறன் பளிச்சிடுகிறது. பாரதியின் வாழ்க்கையைப் படித்தாலே உண்மையில் அவரின் மேல் பற்றுக்கொண்டவர்களுக்குக் கண்களில் கண்ணீர் ததும்பும். உன்னதமான மகாகவிஞன் அவன். அவரைப் பற்றி,
“சிறுபிள்ளை ஒருவனைத் தன்னிலிருந்து மெல்ல வெளியிலெடுத்துத் தன் மடியில் தானே அமரும் வித்தை காட்டும் பாரதியின் குஷி” என்று வேறுபாடு காணாத குழந்தை உள்ளம் பாரதிக்கானது என்பதை நயமான வார்த்தைகளால் வர்ணம் பூசுகிறார். இவர் கவிஞர் என்பதால் கட்டுரையிலும் மாய்மாலம் செய்கிறார். பாரதி தனது காலத்தில் ஒரு கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பட்ட பாட்டை அவரது வாழ்க்கை நமக்குத் தெளிவுபடுத்தும். இதனை,
“அன்றைய காலத்தில் பாரதி என்ற ஒற்றைமரம் தன் வேர் பிடிக்க என்ன பாடு பட்டிருக்கும் என்று புரிகிறோம்” என்று நவில்கிறார். உண்மையில் பாரதி அவரது காலத்தில் தனது பாடல்களை நூலாக்கம் செய்ய விரும்பி, பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை. பாரதி அவரது காலத்திற்குப் பின்னரே போற்றப்பட்டார். உலகக் கவிஞர்களுக்குப் பாரதி எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதையும் இக்கட்டுரையில் இயம்புகிறார். பாகீரதியின் பேரன் என தலைப்பிட்டிருப்பது பாரதியின் பாட்டியின் பெயர் பாகீரதி. எனவே பாகீரதியின் பேரன் என யாருக்கும் தெரியாத பாரதியின் வரலாறுகளை ஆய்ந்து பெயரிட்டிருப்பது சாலச்சிறந்தது.

5
இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றுவாயாக இருந்தது.
இதுவரை நான் அரையும் குறையுமாகக் கேட்டு, படித்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அங்கு ஒரு பகல் மட்டுமே அலையமுடியும் என்பது, பலநாள் பட்டினியானவனுக்கு ஒரு கவளம் சோறு மட்டும் பிச்சையாக கிடைத்ததுபோலிருந்தது.
ஆணோ (Arno) என்ற நதி புளோரன்ஸ் நகரத்தின் மத்திய பகுதியில் ஓடுகிறது. நதியின் இரு பக்கமும் கடைகள் மற்றும் வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் இருந்தனர்; இந்த இடம் மறுமலர்ச்சி காலத்தில் கலைஞர்கள் வாழும் இடமாக மாறியது. தற்போது முக்கியமாக உல்லாச பயணிகள் வருவதற்கான இடமாகியுள்ளது.

தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ஜானகி அம்மா நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப்பயிற்சியை மேற்கொண்டவர். பின்னர் ஏவிஎம் ஸ்ருடியோவில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடும் பாடகியாகச் சேர்ந்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழியில் மட்டுமல்லாது கொங்கணி. துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஷ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என பதினான்கிற்கும் மேற்பட்ட மொழிகளில் 48.000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஒரு இசையரசி. இத்தகைய ஒரு அற்புதமான மாயக் குரலின் அருகே அவரின் குரலோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றமை நான் பெற்ற அற்புதமான ஒரு சக்தியின் பாக்கியம் என்றே கருதுகின்றேன்.
1960 களில் ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் அவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் இன்றும் தொடர்ந்து பலராலும் பாராட்டப்படுவதும், பாடப்படுவதும் மறக்கமுடியாததொன்றாகும்;. ஜானகி அம்மா போன்று உச்சஸ்தாயியில் எந்தப்பாடகி;களாலும் பாட முடியாதபோது அந்தப்பாடலைப் பாடி உலகப் புகழ் பெற்ற பெருமைக்குரியவர்.

மெலிந்த கட்டை உடல்வாகு கொண்டவன் அவன். நான்கடி உயரம். அவன் நடந்து நான் கண்டதில்லை. ஓடி ஓடியே வேலைகள் அனைத்தையும் செய்வான். காலை ஐந்து மணி அளவில் அவனது வேலை ஆரம்பமாகும். விடுதியை சுற்றி கூட்டி, வாசலையும் துப்புரவாக்கி, பின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் கூட்டி பெருக்கி - இரவு ஏழு மணிக்குத்தான் இவனது அலுவல்கள் முடியும். இதற்கிடையில் வெவ்வேறு சில்லறை எடுபிடி வேலைகள். கூறினான்: றாகலை தோட்டத்தில் இருந்து வந்தவனாம். பின், இங்கேயே தங்கி திருமணத்தை முடித்து விட்டதாக. இப்போது மொத்தமாய் பதினைந்து வருடங்களாய் ஆகிவிட்டதாம் - இந்த விடுதி எசமானுக்கு ஊழியம் செய்து. நான் சென்றால் இவனுக்கு ஒரு வித சந்தோஷம். துள்ளி குதித்து வருவான். காலையில் காப்பியை தயாரித்து இருவரும் சேர்ந்து குடிப்போம். ஐந்து மணி. தனிமையில், குடில் போன்ற அந்த சமையலறையில் கோப்பியை சுவைத்து பருகியவாறே நாங்கள் அனைத்தையும் அளவளாவிக் கொண்டிருப்போம்.
ஒருமுறை கூறினான்: “சற்று வெளிச்சம் வந்தவுடன்தான் வீட்டை விட்டு புறப்படுவேன். சனம் அப்போதுதானே போக வர துவங்கும். சவம் எடுத்து வரும் பாதை இது…”.
“தோட்ட புறங்களில் பேயின் நடமாட்டம் ஒன்றும் அதிகமாக இல்லை. இங்கேதான் அதிகமாக இருக்கின்றது…”.
“அது ஏன்…?” என்றேன்.
“சுனாமிக்கு பின்னர்தான்… சுனாமியில்தானே நிறைய பேர் இறந்து போனார்கள்…”.
“காலையில் அஞ்சு மணிக்கு முன்னாடியே வந்துட்டு போயிரும்…”

அரிஸ்டோட்டில் (கி.மு 384 - 322)
கி.மு 384ல் கிரேக்க கொலனியான மெசடோனியா ஸ்ட்ரெஜிராவில் பிறந்த அரிஸ்டோட்டில் 17வது வயதில் எதென்ஸில் உள்ள பிளேட்டோவின் அகெடமியில் பிளேட்டோவின் மாணவனாகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடங்கள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் மரணத்தின் பின்னர் அரிஸ்டோட்டில் “லைசியம்” என்ற தனது கல்விக் கூடத்தை நிறுவினார். அதை ஆரம்பித்த பிறகு அரிஸ்டோட்டிலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. இவர் தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல் உடற்கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல் அளவையியல் எனப் பலதுறைகளை போதித்துச் சிறப்புப் பெற்றார்.
புலக்காட்சிக்கு உட்படும் தனித்தனிப் பொருட்களே புற உலகில் இருப்பவை. இவை அழியக் கூடியன. ஆனால் பொதுமைகள் நிலைபேறு உடையவை என்பது பிளேட்டோவின் கருத்து. அரிஸ்டோட்டில், ஒவ்வொருதனிப்பட்டபொருளும் உண்மையானதே. ஒவ்வொரு தனிப்பட்ட பொருளிலும் எல்லாவற்றிற்கும் பொதுவானதன்மைகள் உண்டு. அவை தனிப்பட்ட பொருள்களில் தான் புதையுண்டு கிடக்கிறது என்றார்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 \Passcode: 554268


அத்தியாயம் 4: நிலத்தின் வரைபடமும் நினைவின் இலக்கணமும் (The Topography of Soil and Grammar of Memory)
ஒரு நீண்ட, காத்திரமான அறிவுஜீவிப் பயணத்தின் ஆக உன்னதமான இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். தர்வீஷின் அரசியல், உடலதிகாரம் மற்றும் மொழிபெயர்ப்பு ஒழுக்கவியல் ஆகிய அனைத்தையும் விவாதித்த நாம், இப்போது அவரது ஒட்டுமொத்தக் கவித்துவத்தின் ஆன்மாவாக விளங்கும் 'நிலம், நினைவு மற்றும் அடையாளம்' ஆகியவற்றின் மீதான கோட்பாட்டுத் தொகுப்பிற்குள் நுழைகிறோம்.
4.1 நிலம்: ஒரு பௌதீக எல்லையிலிருந்து பிரபஞ்சக் குறியீடு நோக்கிய விரிவாக்கம் (Territory to Cosmos)
மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் 'நிலம்' (Land) என்பது வெறும் எல்லைக் கற்களால் வகுக்கப்பட்ட ஒரு துண்டுப் பூமி அல்ல; அது மனித இருத்தலின், அடையாளத்தின் ஆகப் பிரதானமான அஸ்திவாரம். பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது மொழிபெயர்ப்புத் தெரிவுகள் மூலம் தர்வீஷின் இந்த நில அரசியலை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
ஆரம்பகாலத்தில் நிலம் என்பது ஆக்கிரமிப்பாளனால் பறிக்கப்பட்ட 'ஒலிவத் தோட்டங்களாகவும்', 'ஈச்சை மரங்களாகவும்' பௌதீகத் தன்மையோடு (Physical Reality) காட்சியளித்தது. ஆனால், கவிஞனின் புலம்பெயர் வாழ்வும் நாடோடித்தனமும் (Exile and Nomadism) அந்த நிலத்தை ஒரு குறியீட்டுத் தளத்திற்கு (Symbolic Space) நகர்த்துகின்றன. பின்-காலனிய அறிஞர் எட்வர்ட் சைத் குறிப்பிடுவதைப் போல, "புலம்பெயர்ந்தவனுக்கு நிலம் என்பது நினைவுகளால் மட்டுமே நெய்யப்படக் கூடிய ஒரு கற்பனைக் குடியரசு (Imagined Geography)."