கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இரண்டாவது 'நூல்களின் சங்கமம் - நூல் கண்காடசி 2026'!



இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு.
அதற்கு இடஞ்சலாய் கொசுக்கள் சுற்றிலும் ரீங்காரமிட்டு தொல்லை செய்தன மதனை. வலது புற ஜன்னலின் ஓரத்தில் கொஞ்சம் செடிகள் இருந்தன. அந்தப்பக்கம் இருந்துதான் கொசுக்கள் வந்திருக்க வேண்டும்.
அதனை சரியாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான் மதன்.அவனின் தற்காலிக ஊழியர் சம்பளத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளடங்கவில்லை. இருந்தாலும் இன்னொரு உயிருடன் சாவகாசம் வைத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு என்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையையும் செய்து வந்தான்.அவைகளைச் சரியாகப் பராமரித்து வந்தான்.
0
வால் என்று தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் . உடம்பைச்சுற்றி ஆட்டம் போட்டு ஊசியாய் குத்தி அவனின் துரத்தலுக்குப் பயப்படாமல் திரியும் கொசுக்களை விரட்ட இரு கைகள் போதாது. சாட்டை போல் ஒரு வால் இருந்து துரத்துவதுதான் சவுகரியமாக இருக்கும் என்று நினைத்தான் மதன்
அந்தக் கொசுக்கள் கற்பகத்தைக் கடிக்குமா. அவள் அப்படி எதுவும் அசவுகரியமாய் உணர வில்லை. சாதாரணமாய்தான் தன் அருகில் உட்கார்ந்திருக்கிறாள்.

சிங்களக் கவிஞர் சஞ்சீ குணதிலகவின் May I be allowed என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம்.
பள்ளிப் பையுடன் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அவை. அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளார் சஞ்சீ குணதிலக. அதனக் கவிஞர் பா.அகிலன் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதனையும் தனது பதிவுக்கான எதிர்வினைகளில் ஒன்றாகப் பகிர்ந்திருந்தார் சஞ்சீ குணதிலக. அத்தமிழ் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மூலக் கவிதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி]
எனக்கு அனுமதி கிடைக்குமா? - சஞ்சீ குணதிலக -
பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகளுடன்
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளுக்காகத்
தனிமையில் கண்ணீர் சிந்த
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அவர்களின் நினைவாகச்
சடங்குகள் செய்ய
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
பொம்மைகளுடன் சேர்த்துத்
தங்களை உயிருடன் புதைக்காத
ஓரிடத்தில்
அவர்கள் மறுபிறவி எடுக்கட்டும்.
அவர்களின் உறவினர்களுக்காகத்
துயரப்பட
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அவர்களின் ஆன்மாக்கள்
ஏதேனும் ஒரு வகையில்
அனுதாபத்தை உணரட்டும்.
அவர்களின் நினைவாகக்
கவிதை எழுத
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
காற்றில் கலந்திருக்கும்
அந்த ஆன்மாக்கள்
என் துயரத்தை உணர்ந்து
என்னை மன்னிக்கட்டும்.
மண்ணில் புதைக்கப்பட்ட
அந்தக் குழந்தைகளைப் பற்றி
உங்களைச் சிந்திக்க வைக்க
எனக்கு அனுமதி கிடைக்குமா?
அதன் மூலம்,
அந்த ஆன்மாக்களின் அருளால்
நம் உறவினர்கள் அனைவரும்
காப்பாற்றப்பட
நாம் பிரார்த்திக்கலாம்.
இனம், பிறப்பு, சாதி மற்றும்
பாலினம் ஆகியவற்றின்
கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்
மற்ற மனிதர்கள் மீது
உணர்வுபூர்வமான பற்று கொள்ள
எனக்கு அனுமதி கிடைக்குமா?
9 ஆகஸ்ட் 2026.

முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் – 636005 (பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா.
முகவுரை
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஒலி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தினான். காலப்போக்கில் மனித இனம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பேச ஆரம்பித்தான். அப்பேச்சே மொழியாக உருவெடுத்தது. இத்தகைய மொழி மென்மேலும் வளர்ச்சி பெற்று இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு எனப் பல்வேறு வகைகளைத் தழுவியுள்ளது. இவ்வகையில் படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளன. படைப்பிலக்கியங்களைப் படைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு உத்தியினைக் கையாளுகின்றனர். அவற்றில் பலரும் அவர்களுடைய சொந்த மண்வாசனையைக் கமலச் செய்கின்ற வகையில் படைக்கின்றனர். அவ்விதத்தில் கலைச் செல்வியின் முதல் படைப்பான சக்கை புதினமும் அவருக்கு உரிய மொழி நடை அமைப்பில் அமைந்துள்ளது. இதனைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
மொழி
மொழி நம் விழி என்று பேராசியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அவ்வகையில் நம்முடைய விழியைப் பாதுகாப்பது போல நம்முடைய மொழியையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் மட்டுமே சமுதாயம் பாதுகாக்கப்படும். சமுதாயம் பாதுகாக்கப்பட்டது என்றால் மக்களைப் பாதுகாக்கின்றோம், மக்களைப் பாதுகாக்கின்றோம் என்றால், அம்மக்களின் மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் முதலியவற்றைப் பாதுகாக்கின்றோம். எனவே மொழி என்பது சமுதாயம் சார்ந்தும் மனித உணர்வுகளைச் சார்ந்ததும் ஆகும். மேலும், மொழியினைப் பற்றி மொழியியல் அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களை எடுத்து கூறுகின்றனர். அவ்வகையில், “மொழி சமுதாயம் சார்ந்தது. மொழி இல்லையேல் சமுதாயம் இல்லை.

கட்டுரையாளர் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.
முன்னுரை
இரவலன் என்ற சொல்லுக்கு ஏற்போர், பரிசிலர் என்று பொருள். புரவலன் என்ற சொல்லுக்குக் காத்துதவுவோன், கொடையாளன் என்று பொருள். தன்னை நாடி வருகிற புலவனை வள்ளலோ அல்லது மன்னனோ அன்புடன் எதிர்கொண்டு அழைத்து அவரது திறனுக்கு ஏற்ப பரிசில்களைக் கொடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களிடம் அல்லது வள்ளல்களிடம் சென்று ஆடிப்பாடித் தங்களுடைய கலைத்திறனை வெளிக்காட்டுவர். அவ்வாறான ஆடல், பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசர்கள் அல்லது வள்ளல்கள் அவர்களுக்குத் தேவையான அளவு செல்வங்களை வாரி வழங்குவர். இவ்வாறான இரவலர் - புரவலர் உறவு என்பது எட்டுத்தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டுப் பாடல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டில் உள்ள இரவலர் - புரவலர் உறவு எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து மட்டும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
இரவலர் விருப்பம் / எதிர்பார்ப்பு
இரவலர்களுக்குத் தேவை பரிசு மட்டுமன்று. அவர்களது தகுதிக்கான பரிசு. புரவலனின் அன்புடன் அது கிடைக்கவேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்துள்ளது. இதைத்தான் பெருஞ்சித்திரனாரின் பின்வரும் இரு பாடல்கள் சொல்லுகின்றன.
‘‘பற்பல குன்றும் மலையும் கடந்து பரிசில் பெற வந்து நின்றுகொண்டிருக்கும் என்னைப் பார்க்கவும் செய்யாமல் ‘இதனை ஏற்றுக்கொண்டு செல்லுங்கள்’ என்று தந்து சொல்லி அனுப்புவதற்கு நான் என்ன பரிசில் வாணிகம் செய்ய வந்தவனா? என்னிடம் விரும்பி வந்து தினையளவு பரிசில் தந்தாலும், அதன் அன்பு பெருமையை உணர்ந்து நான் ஏற்றுக்கொள்வேனே! (புறம்.208)’’ என்று பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்துப் பாடிய பாடல் இது. இன்னொரு பாடல் வருமாறு.

புதிர்
பெண்களை வரையறை செய்வதில்
மரபணுக்களா ,சமூகப்பண்பா...? முன்
நிற்கிறது என்றால்
மரபணு என்று விஞ்ஞானமும்
சமூகப்பண்பு என ஒரு சாரரும்
போட்டி போட்டாலும் இங்கே
ஒரு நகர்வு ஏற்படுகிறது அதன் காரணம் தான்
என்னவோ? மேலும் புரியாமையை
ஏற்படுத்துகிறது
எப்போது தான் புரியப் போகிறது
இந்தப் புதிர் ?
அத்திவாரங்களை எங்கேயோ கட்டி விட்டு
கட்டடங்களை இங்கு கட்டிக்
கொள்ளும் நானும்
கனவுகளில் தான் வாழ்கிறேன்
நினைவுகளில் வீழ்கிறேன்

கனடா, ஒன்ராரியோவில் உள்ள பீல் பிரதேசத்தில் கடந்த 17 வருடங்களாகச் செயற்பட்டுவரும் தமிழ் மக்களின் குடும்ப மன்றமான சொப்கா (SOPCA) குடும்ப மன்றத்தின் 17வது ஆண்டு நிறைவு கலை விழா ஜோன் போலிஸ் ஒன்றுகூடல் மண்டபத்தில் சென்ற சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஒன்ராறியோ கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனரும், ஆசிரியருமான திருமதி கமலவதனா சுந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக 7 ஆம் வட்டார கவுன்சிலரும், மேயர் பதவிக்குப் போட்டியிடுபவருமான தீபிகா தமெர்லா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறுக்கும் நெடுக்குமான கோடுகளுக்கு நடுவில் மங்களம் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள்தான் அவனை முதலில் வரவேற்றனர். பார்ப்பதற்குத் தம்மைப் போன்ற தோற்றப்பொலிவுடன் இருந்ததால் முதல் சந்திப்பிலேயே கட்டித்தழுவித் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். தான் யார்? என்பதையும் ஏன் இந்தக் கோலத்தில் இந்தப் புள்ளியில் வந்து நிற்கிறேன் என்றும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை என்பதை அவனால் அப்போது நம்பமுடியவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய பெயரையாவது கேட்பார்கள் என்று மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கண்கள் எதிரிலிருந்த முகங்களை நோட்டம் விட்டன.
கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண் மீது அவனுடைய பார்வை சென்ற போது, “பயில்வான் பக்கிரிக்கு! ஜலம் கொடும்மா!” என்ற குரல் கனத்து ஒலித்தது.
அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பெயரை இவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று யோசித்து முடிப்பதற்குள் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் பக்கிரி. இல்லை… இல்லை… பயில்வான் பக்கிரி.

எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்திறமைகள் பெற்றவர் கவிஜி அவர்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை, உலகசினிமா என பன்முகப் பரிமாணங்களில் தனது எழுத்துப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 25 நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் இந்நூல் 16ஆவது நூலாக வெளிவந்தது. தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் படைப்புகள் இவருடையது.
இவரது கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. சாதரண மொழிநடையில் அமையாது கவித்துவமான நடையைக் கொண்ட கட்டுரைகள் இவருக்கானது. தான் எடுத்துக் கொண்ட பொருண்மையில் இருந்து நீங்காது, ஒழுங்கமைவுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டு நம் கருத்தை, சிந்தையை நிறைக்கிறது.
பாகீரதியின் பேரன் என்ற முதல் கட்டுரையில் பாரதி குறித்து கட்டுரை வரைந்துள்ளார். இதில் பாரதியைப் பற்றிய இவரது ஆழ்ந்த வாசிப்புத் திறன் பளிச்சிடுகிறது. பாரதியின் வாழ்க்கையைப் படித்தாலே உண்மையில் அவரின் மேல் பற்றுக்கொண்டவர்களுக்குக் கண்களில் கண்ணீர் ததும்பும். உன்னதமான மகாகவிஞன் அவன். அவரைப் பற்றி,
“சிறுபிள்ளை ஒருவனைத் தன்னிலிருந்து மெல்ல வெளியிலெடுத்துத் தன் மடியில் தானே அமரும் வித்தை காட்டும் பாரதியின் குஷி” என்று வேறுபாடு காணாத குழந்தை உள்ளம் பாரதிக்கானது என்பதை நயமான வார்த்தைகளால் வர்ணம் பூசுகிறார். இவர் கவிஞர் என்பதால் கட்டுரையிலும் மாய்மாலம் செய்கிறார். பாரதி தனது காலத்தில் ஒரு கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பட்ட பாட்டை அவரது வாழ்க்கை நமக்குத் தெளிவுபடுத்தும். இதனை,
“அன்றைய காலத்தில் பாரதி என்ற ஒற்றைமரம் தன் வேர் பிடிக்க என்ன பாடு பட்டிருக்கும் என்று புரிகிறோம்” என்று நவில்கிறார். உண்மையில் பாரதி அவரது காலத்தில் தனது பாடல்களை நூலாக்கம் செய்ய விரும்பி, பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை. பாரதி அவரது காலத்திற்குப் பின்னரே போற்றப்பட்டார். உலகக் கவிஞர்களுக்குப் பாரதி எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதையும் இக்கட்டுரையில் இயம்புகிறார். பாகீரதியின் பேரன் என தலைப்பிட்டிருப்பது பாரதியின் பாட்டியின் பெயர் பாகீரதி. எனவே பாகீரதியின் பேரன் என யாருக்கும் தெரியாத பாரதியின் வரலாறுகளை ஆய்ந்து பெயரிட்டிருப்பது சாலச்சிறந்தது.

5
இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றுவாயாக இருந்தது.
இதுவரை நான் அரையும் குறையுமாகக் கேட்டு, படித்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அங்கு ஒரு பகல் மட்டுமே அலையமுடியும் என்பது, பலநாள் பட்டினியானவனுக்கு ஒரு கவளம் சோறு மட்டும் பிச்சையாக கிடைத்ததுபோலிருந்தது.
ஆணோ (Arno) என்ற நதி புளோரன்ஸ் நகரத்தின் மத்திய பகுதியில் ஓடுகிறது. நதியின் இரு பக்கமும் கடைகள் மற்றும் வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் இருந்தனர்; இந்த இடம் மறுமலர்ச்சி காலத்தில் கலைஞர்கள் வாழும் இடமாக மாறியது. தற்போது முக்கியமாக உல்லாச பயணிகள் வருவதற்கான இடமாகியுள்ளது.

தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ஜானகி அம்மா நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப்பயிற்சியை மேற்கொண்டவர். பின்னர் ஏவிஎம் ஸ்ருடியோவில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடும் பாடகியாகச் சேர்ந்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழியில் மட்டுமல்லாது கொங்கணி. துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஷ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என பதினான்கிற்கும் மேற்பட்ட மொழிகளில் 48.000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஒரு இசையரசி. இத்தகைய ஒரு அற்புதமான மாயக் குரலின் அருகே அவரின் குரலோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றமை நான் பெற்ற அற்புதமான ஒரு சக்தியின் பாக்கியம் என்றே கருதுகின்றேன்.
1960 களில் ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் அவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் இன்றும் தொடர்ந்து பலராலும் பாராட்டப்படுவதும், பாடப்படுவதும் மறக்கமுடியாததொன்றாகும்;. ஜானகி அம்மா போன்று உச்சஸ்தாயியில் எந்தப்பாடகி;களாலும் பாட முடியாதபோது அந்தப்பாடலைப் பாடி உலகப் புகழ் பெற்ற பெருமைக்குரியவர்.

மெலிந்த கட்டை உடல்வாகு கொண்டவன் அவன். நான்கடி உயரம். அவன் நடந்து நான் கண்டதில்லை. ஓடி ஓடியே வேலைகள் அனைத்தையும் செய்வான். காலை ஐந்து மணி அளவில் அவனது வேலை ஆரம்பமாகும். விடுதியை சுற்றி கூட்டி, வாசலையும் துப்புரவாக்கி, பின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் கூட்டி பெருக்கி - இரவு ஏழு மணிக்குத்தான் இவனது அலுவல்கள் முடியும். இதற்கிடையில் வெவ்வேறு சில்லறை எடுபிடி வேலைகள். கூறினான்: றாகலை தோட்டத்தில் இருந்து வந்தவனாம். பின், இங்கேயே தங்கி திருமணத்தை முடித்து விட்டதாக. இப்போது மொத்தமாய் பதினைந்து வருடங்களாய் ஆகிவிட்டதாம் - இந்த விடுதி எசமானுக்கு ஊழியம் செய்து. நான் சென்றால் இவனுக்கு ஒரு வித சந்தோஷம். துள்ளி குதித்து வருவான். காலையில் காப்பியை தயாரித்து இருவரும் சேர்ந்து குடிப்போம். ஐந்து மணி. தனிமையில், குடில் போன்ற அந்த சமையலறையில் கோப்பியை சுவைத்து பருகியவாறே நாங்கள் அனைத்தையும் அளவளாவிக் கொண்டிருப்போம்.
ஒருமுறை கூறினான்: “சற்று வெளிச்சம் வந்தவுடன்தான் வீட்டை விட்டு புறப்படுவேன். சனம் அப்போதுதானே போக வர துவங்கும். சவம் எடுத்து வரும் பாதை இது…”.
“தோட்ட புறங்களில் பேயின் நடமாட்டம் ஒன்றும் அதிகமாக இல்லை. இங்கேதான் அதிகமாக இருக்கின்றது…”.
“அது ஏன்…?” என்றேன்.
“சுனாமிக்கு பின்னர்தான்… சுனாமியில்தானே நிறைய பேர் இறந்து போனார்கள்…”.
“காலையில் அஞ்சு மணிக்கு முன்னாடியே வந்துட்டு போயிரும்…”

அரிஸ்டோட்டில் (கி.மு 384 - 322)
கி.மு 384ல் கிரேக்க கொலனியான மெசடோனியா ஸ்ட்ரெஜிராவில் பிறந்த அரிஸ்டோட்டில் 17வது வயதில் எதென்ஸில் உள்ள பிளேட்டோவின் அகெடமியில் பிளேட்டோவின் மாணவனாகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடங்கள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் மரணத்தின் பின்னர் அரிஸ்டோட்டில் “லைசியம்” என்ற தனது கல்விக் கூடத்தை நிறுவினார். அதை ஆரம்பித்த பிறகு அரிஸ்டோட்டிலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. இவர் தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல் உடற்கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல் அளவையியல் எனப் பலதுறைகளை போதித்துச் சிறப்புப் பெற்றார்.
புலக்காட்சிக்கு உட்படும் தனித்தனிப் பொருட்களே புற உலகில் இருப்பவை. இவை அழியக் கூடியன. ஆனால் பொதுமைகள் நிலைபேறு உடையவை என்பது பிளேட்டோவின் கருத்து. அரிஸ்டோட்டில், ஒவ்வொருதனிப்பட்டபொருளும் உண்மையானதே. ஒவ்வொரு தனிப்பட்ட பொருளிலும் எல்லாவற்றிற்கும் பொதுவானதன்மைகள் உண்டு. அவை தனிப்பட்ட பொருள்களில் தான் புதையுண்டு கிடக்கிறது என்றார்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 \Passcode: 554268


அத்தியாயம் 4: நிலத்தின் வரைபடமும் நினைவின் இலக்கணமும் (The Topography of Soil and Grammar of Memory)
ஒரு நீண்ட, காத்திரமான அறிவுஜீவிப் பயணத்தின் ஆக உன்னதமான இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். தர்வீஷின் அரசியல், உடலதிகாரம் மற்றும் மொழிபெயர்ப்பு ஒழுக்கவியல் ஆகிய அனைத்தையும் விவாதித்த நாம், இப்போது அவரது ஒட்டுமொத்தக் கவித்துவத்தின் ஆன்மாவாக விளங்கும் 'நிலம், நினைவு மற்றும் அடையாளம்' ஆகியவற்றின் மீதான கோட்பாட்டுத் தொகுப்பிற்குள் நுழைகிறோம்.
4.1 நிலம்: ஒரு பௌதீக எல்லையிலிருந்து பிரபஞ்சக் குறியீடு நோக்கிய விரிவாக்கம் (Territory to Cosmos)
மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் 'நிலம்' (Land) என்பது வெறும் எல்லைக் கற்களால் வகுக்கப்பட்ட ஒரு துண்டுப் பூமி அல்ல; அது மனித இருத்தலின், அடையாளத்தின் ஆகப் பிரதானமான அஸ்திவாரம். பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது மொழிபெயர்ப்புத் தெரிவுகள் மூலம் தர்வீஷின் இந்த நில அரசியலை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
ஆரம்பகாலத்தில் நிலம் என்பது ஆக்கிரமிப்பாளனால் பறிக்கப்பட்ட 'ஒலிவத் தோட்டங்களாகவும்', 'ஈச்சை மரங்களாகவும்' பௌதீகத் தன்மையோடு (Physical Reality) காட்சியளித்தது. ஆனால், கவிஞனின் புலம்பெயர் வாழ்வும் நாடோடித்தனமும் (Exile and Nomadism) அந்த நிலத்தை ஒரு குறியீட்டுத் தளத்திற்கு (Symbolic Space) நகர்த்துகின்றன. பின்-காலனிய அறிஞர் எட்வர்ட் சைத் குறிப்பிடுவதைப் போல, "புலம்பெயர்ந்தவனுக்கு நிலம் என்பது நினைவுகளால் மட்டுமே நெய்யப்படக் கூடிய ஒரு கற்பனைக் குடியரசு (Imagined Geography)."

[ இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ]
நம்பிக்கை தரும் விடயம்: உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி ஃபேர்ணண்டோவுக்கும் மரண தண்டனை!
இலங்கையின் வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு. நாட்டின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கை அளிக்கக்கூடிய் தீர்ப்பு! சட்டம் எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் தன் கடமையை உரிய முறையில் செய்திருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் தீர்ப்பு! நாட்டு மக்களுக்கு நாட்டின் சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு. இவ்விதமாக நாட்டின் நீதிமன்றங்கள் செயற்படுவது இத்துடன் முடிந்து போகக்கூடாது. தொடர வேண்டும். நிரந்தரமாகத்தொடர வேண்டும். அப்படித்தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளும் படிப்படியாகத் தீர்வதற்கான சூழல் உருவாகும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுத் தொகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டன.
கடந்த வருடம், (2025) வெளியிடப்பட்ட நூல்களுக்கான அழைப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது:

ஆண்றொன்று போனால் வயது ஒன்று போகும் எனச்சொல்வார்கள். ஒருவருடைய பிறந்த தினம் வரும்போது, குறிப்பிட்ட நபர் தங்களது வயதில் மூத்தவராயின், வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் “ எனச்சொல்வார்கள். அல்லது, வாழ்த்து மடல் அனுப்புவார்கள். வேறும் சிலர், தங்கள் முகநூலில் பதிவுசெய்து வாழ்த்துவார்கள். முன்பெல்லாம் பிறந்ததின வாழ்த்து மடலை தபாலில் அனுப்புவார்கள். ஆனால், சமகாலம் புதிய தொழில்நுட்பத்தின் தீவிர முன்னேற்றத்தால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தங்கள் வாழ்த்துச்செய்தியை பகிர்வார்கள்.
ஒருவரது வாழ்வில், மணிவிழா, வைரவிழா, பவளவிழா என சில விழாக்கள் வந்து போகும். அவ்வாறு சமகாலத்தில் பவளவிழாவை கடந்து வந்திருப்பவர் எங்கள் கலை, இலக்கிய குடும்பத்தில் ஒருவரான பன்முக ஆற்றல் மிக்க திருமதி கோகிலா மகேந்திரன்.
கடந்த ஆறுதசாப்தங்களுக்கும் மேலாக கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணி, சீர்மியத்தொண்டு முதலானவற்றில் அர்ப்பணிப்புடன் இயங்கிவருபவர் கோகிலா மகேந்திரன்.
சமீபத்தில் ஒரு நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது கலை, இலக்கியவாதி கலாநிதி மணிவண்ணன், எனக்கு தந்ததுதான் பவளமல்லிகை – கோகிலா மகேந்திரன் சிறப்பு மலர். இதனை எனது மற்றும் ஒரு நண்பர் சிவசுதன் என்னிடம் சேர்ப்பித்தார். இருவருக்கும் எனது முதற்கண் நன்றி.
இதன்தொகுப்பாசிரியர்கள் :- திருமதிகள் சிவரூபி செல்வநாதன், நளாயினி சுகிர்தன், திரு. மு. சதீஸ் பாலமுருகன் ஆகியோர்.
வழக்கமான பவளவிழா மலர்போன்றில்லாமல், முற்றிலும் தனித்துவமான உள்ளடக்கங்களை கொண்டு மலர்ந்திருக்கிறது இந்த ஆவணம். மலர்களுக்கு அவற்றின் இதழ்களும், அவற்றிலிருந்து புறப்படும் மகரந்தங்களும்தான் மக்களை பெரிதும் கவருகின்றன. மலர்கள் மாலைகளாகின்றன. மாலைகள், ஆண்டனுக்கும் , ஆளுமைகளுக்கும் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவான ஒரு பாரட்டு மலர்தான் இந்த பவளமல்லிகை. , இந்த பவளமல்லிகையும் வாசகரை பெரிதும் கவருகின்றது.

cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள், பதிவுகள் இணைய இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரே மாதத்தில் 338,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசகர்கள் (Unique Visitors) பதிவுகள் தளத்திற்கு வந்திருப்பதும், 70 லட்சம் பக்கங்கள் (Page Views) வாசிக்கப்பட்டிருப்பதும், இணைய உலகத்தில் பதிவுகள் இதழுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கைக் காட்டுகிறது.
இந்த எண்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப விபரங்கள் இதோ:

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர். நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளி அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது. இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.
ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா. மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும். தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன.

கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.
நாடகத்துறையிலிருந்தபோது திரு. அஸ்வகோஷ் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு அவர் எழுதி புத்தகமாக வெளிவந்த நாடகம் ஒன்றை அவர் முன் னிலை யல் அரங்கேற்றியிருக்கிறார்.
படிக்கிறபோதே, 1980 களில் "ஆத்மா" கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தார். "ஆத்மா" பௌர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினார்.
1988-89ல் கணையாழியில் திரு.அசோகமித்ரன் பணியி லிருந்த சமயத்தில் ஒரு மாத காலம் அச்சு கோர்ப்ப வராகவும், புரூப் ரீடராகவும் அங்கு பணிபுரிந்திருக் கிறார்.
ஆத்மாஜி என்ற பெயரை "ஆத்மாஜீவ்" என்று நியூம ராலஜி யின்படி பெயர் மாற்றி தந்தவர் திரு. பிரமீள்.
வேர்கள் ராமலிங்கம், திரு. கோணங்கி, ரவி சுப்ர மணியம், இரா.நடராசன், பாவண்ணன், பிரம்மராஜன், நாகார்ஜூனன், கால சுப்ரமணியம் போன்ற பலருடன் நேர் மற்றும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார்.
1990 களில் "காலக்ரமம்" என்ற பெயரில் கவிதைகளுக் கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள் வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தியவர். இவரது கவிதைகள் தமிழின் முக்கியமான சிறு பத்திரி கைகளில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொ குப்புக ளும் வெளியாகியுள்ளன.

இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு.இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.

கட்டுரையாளர்: முனைவர் ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி -1), குரு நானக் கல்லுரி (தன்னாட்சி), சென்னை. -
முன்னுரை
நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.
வளையாபதி - காலமும் கருத்தும்
வளையாபதி சமண சமயச் சார்புடைய காப்பியம் என்ற கருத்துண்டு, இது சீவக சிந்தாமணி எழுந்த காலத்தில் எழுந்தது என்றும் கூறுவர். இதன் காப்புச் செய்யுள் சிந்தாமணிக் காப்பின் கருத்தை அடியொற்றி அமைத்துள்ளது. மேலும், காப்புச் செய்யுளின் கருத்தைக் கொண்டு வளையாபதி சிந்தாமணிக்கு முற்பட்டது என்பாரும் உண்டு. எவ்வகையாயினும் வளையாபதி எழுந்த காலம் ஆய்வுக்குரியதாகவே அமைகிறது. வளையாபதி சமண சமயம் பற்றியது. இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. செய்யுளின் பண்புகளைக் கொண்டு இதனை இயற்றியவர் புலமைப் பண்புமிக்க நல்லிசைப் புலவர் எனத் திண்ணமாகக் கூறலாம் என சோமசுந்தரனார் தெரிவிக்கிறார். மேலும் அடியார்க்கு நல்லார், இளம்பூரணர் அரும்பதவுரையாசிரியர். பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் பெருமக்கள் வளையாபதி செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும் இந்நூல் தமிழ்மரபு மாறாக இயன்றதொரு நல்லிலக்கியம் எனவும் கூறுகிறார்.

அத்தியாயம் 3: மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு: வடிகட்டலும் விசுவாசமும் (The Translation of Translation: Filtered Aesthetics)
முதல் இரண்டு அத்தியாயங்கள் தர்வீஷின் கவிதை உலகிலுள்ள அரசியல் மற்றும் அழகியல் அடுக்குகளைத் தேடிக் கண்டறிந்தன என்றால், இந்த மூன்றாம் அத்தியாயம் நமது ஒட்டுமொத்த விமரிசன ஆய்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையப் போகிறது.
ஏனெனில், இங்கு நாம் கவிஞரைத் தாண்டி, மொழிபெயர்ப்பாளரான பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் உழைப்பையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும், 'மொழிபெயர்ப்பின் அரசியல் மற்றும் ஒழுக்கவியல்' கோட்பாடுகளின் பின்னணியில் சர்வதேசத் தரத்தில் அலசப் போகிறோம்.
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது முன்னுரையில் மிகவும் நேர்மையாகவும், அறிவுஜீவிக்குரிய ஒழுக்கத்தோடும் ஒரு பிரதான உண்மையை ஒப்புக்கொள்கிறார்:
"நான் அறிந்தவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தர்வீஷின் கவிதைகள் எவையுமே அரபு மூலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல... ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகவே தர்வீஷும் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவ்வகையில் நமது மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகள் தான்."
கோட்பாட்டுத் தளத்தில் இதனை 'இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு' (Indirect or Secondary Translation) என்று அழைப்பார்கள். புகழ்பெற்ற ஜெர்மன் மெய்யியலாளரும் கோட்பாட்டாளருமான வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) தனது The Task of the Translator (மொழிபெயர்ப்பாளனின் பணி) என்ற புகழ்பெற்ற கட்டுரையில், மொழிபெயர்ப்பு என்பது மூலப் பிரதியின் 'மறுவாழ்வு' (Afterlife) என்று குறிப்பிடுவார். மூலப்பிரதி தன் உடலை (சொந்த மொழியை) இழந்து, வேறொரு மொழியில் ஆன்மாவாக மறுபிறவி எடுக்கிறது.