முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இலேச அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் இலேச அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
இலேச அணி
கருதியதை வெளிப்படுத்தும் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்த்துவனவாக மறைத்துக் கூறுவது இலேசம் என்னும் அலங்காரமாகும்.
"குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாடல் இலேசம் ஆகும்"
(தண்டியலங்காரம் 38)
சொல்லில் மறைத்துக் கூறுதல், உடல் மொழி வழி வெளிப்படுத்துதல்.
இலேச அணியின் வகைகள்:2
"புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப்படுத்தலும்
அவையும் அன்னதென்று அறைகுநர் உளரே"
(தண்டியலங்காரம் 39)
ஒன்றைப் புகழ்ந்துரைத்தலைப் போன்று காட்டிப் பழித்தலும், பழித்தலைப் போன்று காட்டிப் புகழை விளம்புதலும் ஆகிய இவ்விரண்டும் இவ் இலேச அலங்காரத்தின் வகையாக உரைப்பவரும் உள்ளனர்.
* ஓவியம் - AI
59 இல் நான் பிறந்தபோது என் ஞாபககார்த்தமாக அப்பா ஒரு றலி சைக்கிள் வாங்கினார்.அப்போது அதன்விலை 150 ரூபா. யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அப்போது சாம்பசிவம், மணியம் சைக்கிள் கடைகளென இவையிரண்டும்தான் பிரபல்யம்!சாம்பசிவத்திலேயே தரமான Brooks சீற்றும்,Miller டைனமோவும் சேர்த்து வாங்கினாராம்.அன்று தொடக்கம் அதுவும் எம்மோடு ஒன்றாய் வாழ்ந்தது.மழையில அது நனையக்கூடாது.மழையில் அது நனைந்தாலும் உடனே முழுமையாக மென்மையான மஞ்சள் துணியால் சைக்கிளை துடைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார் அப்பா.
அப்பாவைப்போல துப்புரவா, மினுக்கிக்கொண்டு வெளிக்கிட்டு றலி ஒரு மிடுக்காத்தான் நிற்கும்.புழுதியில் படிந்த தூசியை நித்தம் துடைத்து,கீறு விழாது பக்குவமா பாதுகாத்து,அதையும் போக வர பார்த்து மகிழ்வதே அப்பா அதன்மீது கொண்ட நிரந்தரப் பாசம். இவற்றையெல்லாம் நான் பார்த்துப் புரிந்துகொள்ள அதற்கும் ஏழு வயதாகிவிட்டது.தம்பியும் பிறந்து அவனிற்கும் 4 வயதாகிவிட்டது. வீட்டில ஒரு விலையுயர்ந்த அன்றைய ஆடம்பர பொருளென்றால் அது றலிதான்.அதுதான் வாழ்க்கைக்கு முதுகெலும்பா நின்று உழைச்சுக்கொடுத்தது என்றும் சொல்லலாம்.வீட்டுக்கு ஒன்று என்று படலையடியிலயோ அன்றி கேற்றடியிலயோ ஒன்று நின்றது.அது நின்றால் வீடும் தனியழகுதான்.
முற்றத்து மூலையில ஒரு பூவரசு.
பக்கத்தில பூத்துக்குலுங்கும் செம்பருத்தி.
அருகில வாழையோ மாமரமோ அத்துடன்
விவசாயம் செய்கின்ற செம்மண் ஊருக்குள்ள
சோடிச்சுக்கொண்டு றலியும் நிற்பதைப்பார்த்தாலே
இதன் வடிவு ஒரு படி மேல!
அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக தொகையில் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தையும் பெற்றபடி இருந்தது சுவீடிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட மூன்று நாவல்கள்;. இந்த மூன்று நாவல்களும் ஒருவரால் எழுதப்பட்டது. வெளிநாட்டு புத்தக வரிசையில் அமெரிக்க அல்லது பிரித்தானிய புத்தகங்கள் மட்டுமே நான் அறிந்தவரையில் கடந்த 20 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகின்றன. வேறு மொழியில் வந்த நாவல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முன்னணியில் இருப்பது ஒரு புதுமையான விடயம்.
The Girl with the Dragon Tattoo
The Girl who played with fire
The Girl who kicked the hornets’ nest
BY STIEG LARSSON
வாசிப்பதற்கு ஆவல் கொண்டு வாங்க நினைத்துவிட்டு இந்த நிலையில் இந்த மூன்று பத்தகங்களின் கனதியையும் விலையையம் பார்த்து பின்பு சிறிது யோசிப்பேன். வாங்கினால் வாசிப்பேனா அல்லது இடையில் விக்கிரம் சேத்தின் சூட்டபிள் போய் ( Vikram Seth-A Suitable Boy) அரைவாசியில் விட்டது போல் இவற்றையும் இடையில் நிறுத்திவிடுவேனோ என நினைத்துப் பார்ப்பேன். ஓவ்வொரு புத்தகமும் சராசரி 550 பக்கங்களுக்கு மேல் உள்ளவை. புத்தகக் கடைகளில் எட்டிப் பார்த்துவிட்டு விலகிச் செல்வேன். பின்பு மூன்று நாவல்களும் நியூஸ் பிரிண்டில் மலிவு விலையில் ஒன்றாக வந்தபோது சிறிது கவரப்பட்டாலும் நேரமின்மையால் சுவிஸ் சொக்கிலேட்டை பார்த்து விலகிச் செல்லும் நீரிழிவு வியாதிக்காரர் போல் விலகினேன்.
ஒரு முறை தொழில் முறை மாநாடு நிமித்தம் ஜெனிவா செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஐரோப்பிய விடுமுறையாக மாற்றியபோது பயணத் துணையாக இருக்கட்டும் என மெல்பேன் விமான நிலையத்தில் உள்ள புத்தக சாலையில் வாங்குவதற்கு கையை வைத்த போது முதல் நாவலில் சினிமாவாக எடுக்கப்பட்டதாக எழுதி இருந்தது. வாசிக்கத் தொடங்கியபின் கீழே வைக்க முடியவில்லை. இளம் வயதில் இருந்த போது மட்டுமே இரவுநேரத்தில் தொடர்ச்சியாக விடியும் வரை வாசிப்பது வழக்கம். அதன் பின் பல்கலைக் கழகம் வேலை அத்துடன் தொலைக்காட்சி என்பவற்றால் அதிக நேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் விடை பெற்றுக்கொண்டது. முப்பது வருடங்களுக்குப் பின் இரவுகள் விழித்திருந்து அதிகாலை வரை வாசித்தவை இந்த நாவல்கள்தான்.
ஊடகத்தின் சிம்ப சொப்பனமாய்
சிகரம் தொட்ட பாரதி அண்ணன்
இவ்வளவு சீக்கரம்
நம் எல்லோரையும் விட்டுச் செல்வாரென
பேனாக்களிலிருந்து ஊற்றெக்கும் கண்ணீர்க்குளங்கள்
கவிதையாய் பத்தியாய், சித்திரமாய்
செம்மொழியாய் சொல்லி அழுகின்றன.
அவரின் உள்ளம் மென்மையானவை
ஆனாலும்
அவரின் எழுத்துக்கள்
குட்டக் குட்ட குனியும்
எழுத்துக்கள் அல்ல.
ஒரு சமூகத்தின் விடியலுக்காய்
வீராப்புடன் வீறு கொண்டு எழுந்து
நிமிர்ந்து நிற்கும் வித்துக்கள்.
எழுத முடியாமல் மை தீர்ந்து போன
வெற்றுப் பேனாக்களையும்
இளம் குரும்பட்டிகளையும்
ஊடக நாற்காலியில் அமர வைத்து
அழகு பார்த்தவர் என்று
நாங்கள் காது கொடுத்து கேட்காமல்
இருந்து விட்டோம்.
அறிமுகம்தமிழ்ப் புனைகதைத் துறைக்கு வளஞ்சேர்க்கும் படைப்பாளிகள் வரிசையில், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜாவும் ஓருவர். அறிதொழில் சார்ந்த தனது பேராசிரியர் பணிக்கு அப்பால் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருபவர். 80களின் பின்னர் போரும் வாழ்வும் இடப்பெயர்வும் ஆயுதக்கலாசாரமும் என்று சுற்றிக்கொண்டே இருந்த ஈழப் புனைகதைப் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியோடு புதிய வாழ்வியல் அனுபவங்களையும் தந்தவர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அவரின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகிய 'பாவனை பேசலன்றி' (2000, மித்ர பதிப்பு) குறித்த பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஆசி. கந்தராஜா தனது தொழிலின் நிமிர்த்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டவர். அதன்மூலம் தனது தரிசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கத்தின் தொடர்ச்சியாகப் பல புதிய களங்களையும் கதைகளையும் ஆசி. கந்தராஜாவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதில் சில கதைகளை இத்தொகுப்பில் காணலாகும்.
தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள், போலிப் பெருமைகள், புதிய களங்களில் கிடைத்த அநுபவங்கள், தனித்துப்போன முதியோரின் வாழ்வில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பு மையமாகக் கொண்டமைந்துள்ளது.
குடும்ப வாழ்வு குறித்த சிக்கல்கள்
தொகுப்பில் உள்ள கதைகளில் அம்மா பையன், அடிவானம் ஆகியவை குடும்பத்தில் ஆண் பெண் குறித்த சிக்கல்களைக் கூறும் கதைகளாக உள்ளன. இக்கதைகளின் ஊடாக மேலைத்தேயக் குடும்பங்களையும் தமிழர் குடும்பங்களையும் இரண்டு புறமும் வைத்து சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:
ஓவியன் சிறுவனாய் இருந்தபோது, பறவைகளின் கூடுகளைக் கலைப்பதற்காகக் குன்றின்மேல் இருக்கும் பாப்ளர் மரங்களின் உச்சிக்கு ஏறுகின்றான். மரங்களின் உச்சியை அடையும் சிறுவர்களின் முன் இயற்கை அப்படியே விரிந்து கிடக்கும். ‘பூமியின் மகத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தும். மங்கிய, சூடேறிய ஸ்டெப்பியின் காற்றில், கன்னிநிலம் ஒய்யாரமாய் படுத்துக்கிடக்கும் - ‘கண் பார்வை எட்டும் வரை ஒரே நீல பூமி... வார்த்தைகளுக்கு அகப்படாத பெரும் நிலப்பரப்பு’ ஆறுகள், தொடுவானத்தருகே மெல்லிய நூலிழையாகி மறையும். மரக்கிளைகளில் நாம் ஒன்றி படுத்தவாறே விண்ணுலகத்து காற்றின் ஓசைகளையும் ரகசியங்களையும் செவிமடுப்போம். இலைகள், அந்த ரகசியங்களை எல்லாம் எம்மிடம் அன்போடு முணுமுணுத்தன.
இப்படியாக, இயற்கையை அன்போடு விசாரிக்கும், இதே சிறுவர்களில் ஒருவன் மரங்களை நட்டவன் குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றான்:
‘யார் இந்தமரங்களை, இக்குன்றுகளில் நட்டிருப்பவர்? நட்டவரின் நம்பிக்கை என்ன? அவரது கனவுதான் யாது?’
சிறுவனின் தேடல்கள் சிலவிடயங்களை எமக்குப் புகட்டுவதாய் உள்ளன.
பொட்டல் காடாய் இருந்த இக்குன்றில்தான், ‘தூய்ஷேன்’ பள்ளிக்கூடம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய்ஷேன், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை, இந்தப் பின்னடைந்த லம்பாடி கிராமத்தினரிடையை (அசோக மித்திரனின் பாஷையில்) பிரதிநிதித்துவம் செய்தவர் என்றும் கூறினர்.
தூய்ஷேன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இங்கு ஆரம்பித்தவராம். இப்போது சாந்தமான தாடிகார தபால்காரராய் இருக்கின்றார் இவர். 1924 இல், இக்கதையின் நாயகிக்கு. 14 வயதாய் இருக்கும்போது ஓர் இளைஞன் போர்வீரனின் மேல்கோட்டோடு, இந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வந்துசேர்கின்றான்.
குட்டிப்போட்டால், அக்குட்டிகளையும் குதிரைகளையும், குளிர்காலத்தில் அடைத்துவைக்கும், வசதிபடைத்தோரின் இந்தக் களிமண் குதிரைக் கொட்டிலை, இவர்தான் ஆரம்பப் பள்ளியாக மாற்றியவர். சுற்றிலும் முட்புதர்கள். களைகள். சுவர்கள் மலையில் நனைந்து, நனைந்து கரைந்து இடிந்துபோய் நின்றன. கதவு ஆடிக்கொண்டிருந்தது.
ஆகவே, இவ் இளைஞன் முன் இரண்டு பொறுப்புகள் கிடந்தன. ஒன்று சீரழிந்து போன இம்மண் கொட்டகையை, சின்னஞ்சிறுசுகள் படிக்கக்கூடிய இடமாக எப்படி மாற்றுவது என்பது முதலாவது. அடுத்ததாய், இப்பள்ளிக்கான, சிறுபிள்ளைகள் கூட்டத்தை, இப்பின்னடைந்த கிராம மக்களிடையே இருந்து எப்படி இழுத்து வந்து சேர்ப்பது என்பது இரண்டாவது.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி எனது வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியும் ஒரு படமும் வந்திருந்தது. அனுப்பியவர் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான நண்பர் தெய்வீகன். இலங்கையில் சில தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவரான இராசநாயகம் பாரதி, திடீரென உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக படத்துடன் அந்தச்செய்தி கூறியது. தற்போது இலங்கையில் நிற்கும் நண்பர் தெய்வீகனை தொடர்புகொண்டு, பாரதியின் சுக நலன் விசாரித்து, பாரதி விரைவில் நலம்பெறவேண்டுமென பிரார்த்தித்தேன். எமது பிரார்த்தனைகள் சில வேளைகளில் இந்த விதியின் செவிகளுக்கு எட்டுவதில்லைப்போலும் !? கடந்த 09 ஆம் திகதி ( இரண்டு வாரங்கள் கழித்து ) பாரதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வருகிறது. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவரின் உயிரை காலன், இரக்கமின்றி பறித்துவிட்டானே என்ற கோபம்தான் எழுகிறது.
கவியரசு கண்ணதாசன், 1981 இல் அமெரிக்கா – சிக்காகோவில் திடீரென மறைந்தபோது, கவிஞர் வாலி சொன்ன கூற்றுத்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. வாலி இவ்வாறு சொன்னார்: “ எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருத்தன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துப்போட்டுவிட்டான். “
1997 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளியாவில் தினக்குரல் நாளிதழும் வார இதழும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே எனக்கு பாரதியின் அறிமுகமும் தொடர்பாடலும் கிடைத்தது. அதற்கு முன்னர், பாரதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். அக்காலப்பகுதி இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.
மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?
சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட இராசநாயகம் பாரதி அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி மாலினியின் உறவினரான திரு. எஸ்.பி. சாமி அவர்கள் இருந்தார்கள். இலங்கையில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இரண்டு தடவைகள் எனது நூல்களை வெளியிட்ட போது, திரு. எஸ்.பி. சாமி அவர்கள் ஒருமுறையும், ஞானம் ஆசிரியர் திரு. ஞானம் அவர்கள் ஒருமுறையும் தலைமை தாங்கியிருந்தார்கள். திரு. இராசநாயகம் பாரதி அவர்களும் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
கனடாவில் 2019 ஆம் ஆண்டு கனடிய தமிழ்ப் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘நீங்காத நினைவுகள்’ என்ற தொகுப்பைத் தொகுத்து வெளியிட்ட போது, எனது 50 ஆண்டுகால இலக்கிய பணியைப் பாராட்டும் முகமாக என்னை நேர்காணல் ஒன்று செய்து தினக்குரலில் வெளியிட்டிருந்தார். அதன் பின் எனது கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவற்றைத் தினக்குரலில் வெளியிட்டு இலங்கையில் வாசகர்கள் பலரை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். சுமார் 40 ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்ட இவர் தமிழர் தகவல் விருது பெறுவதற்காகக் கனடா வந்த போதும் அவரைச் சந்தித்துப் பாராட்டி உரையாடியிருந்தேன்.
அதன் பின் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றிய போதும் என்னுடைய சிறுகதைகள், கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து பிரசுரித்திருந்தார். கடைசியாக இவர் வீரகேசரி யாழ்பாண பிராந்தியப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி இருந்தார். இரு வாரங்களுக்கு முன்பும் தொலைபேசியில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவரான கனடாவில் வதியும் மகாஜனக்கல்லூரி நண்பர் சிவநேசச்செல்வன் பற்றியும் விபரங்களைப் பெற்று என்னுடன் உரையாடியிருந்தார். அப்போது என்னை யாழ்ப்பாணம் வரும்படியும், வரும்போது எனக்கு ஒரு பாராட்டு விழா அங்கே எடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். என்ன செய்வது, சில ஆசைகள் நிறைவேறாமலே போய்விடுவதுமுண்டு.
- ரீஜன்ஸ்பேர்க் நகரக் காட்சி -
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.
டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய தலை நகரமான ரீஜன்ஸ்பேர்க் (Regensburg) நதியோரத்தில் உள்ளது.
இங்கே காலையில் படகிலிருந்து இறங்கி, வழிகாட்டியுடன் நதிக்கரையோரமாக நடந்தபோது, அது பழமையான நகரமாகவும், அதே நேரத்தில் அந்த பழமை பாதுகாப்பாகவும் உள்ளது. புதிய கட்டிடங்களும் எங்களால் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. புதுமையும் பழமையும் அழகாக இணைந்து இருந்தன. பழமையை பேணியபடி, புதுமையை உருவாக்குவது எப்படி என்பதை ஐரோப்பியர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கிய பாடமாகும்.
சுயேட்சைப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரைப் பற்றிக் கூறியதாக முகநூலில் வாசித்தேன். இது பற்றிய காணொளியை முகநூல் நண்பர் நவமகன் கேதீஸ் தனது எதிர்வினையில் தந்திருக்கின்றார். அதற்கான இணைப்பு
இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று. உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது 'நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்' என்றே.
முன்னுரைதொல்காப்பியர் அடிப்படையில் அகத்திணைகள் ஏழாகப் பகுக்கப்படுகின்றன. அகத்தைச் சார்ந்த வாழ்வாக புறம் அமைகின்றது. மக்களின் ஒழுகலாறுகளைக் கூறும் அகம ;ஐந்திணைப்பாடல்களில் இயற்பெயர் சுட்டாமல் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். ஒருவரும் தம் பெயரைச் சுட்டி கூறும் மரபுவழக்கில் இல்லை என்பதை ,
“மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.”1 (தொல். 1000)
என்ற நூற்பா வழிமொழிகின்றது. அகப்பொருட்குரிய திணைகள் ஏழாகத் தொல்காப்பியம் வகுத்துள்ளது.
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.”2 (தொல். 947)
முற்கூறிய ஐந்திணைகளின் சிறப்பியல்பு கைக்கிளை பெருந்திணையில் அமையாது போனாலும் அகத்திணையில் அடக்குவது தவறில்லை என்பர் சான்றோர்கள். காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் ஆற்றல் கொண்டு வாழ்ந்த சங்க மாந்தரின் வாழ்வியலை ஆய்வுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
நெஞ்சம் ஒருமித்தல்
அன்பினால் கூடிய உள்ளப்புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்க வல்லதாகும். இருமணம் பலமுறை சந்தித்தாலும் எவ்வித உறவும் இல்லாது நெருங்கிய நெஞ்சமோடு ஒருமித்து பிரியாது காணப்படும் தன்மையினை குறுந்தொகையில் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் தத்துவங்களை அகஇலக்கியங்கள் வழி அறியலாம்.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.” (குறுந்: 40)
- எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் -
ஒரு ஓவியனின், புதிய சித்திரத்திற்கான தயாரிப்புகளுடன் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' நாவல் ஆரம்பமாகின்றது. ஓவியன் பின்வரும் பொருள்படக் கூறுவான் :
“பொழுது புலர்கின்றது… ஜன்னல்களை அகலத் திறக்கின்றேன்… கிரகிக்க முடியாத, எதிரொலிகளை உள்ளத்தில் உருவாக்கும், இந்த இளம் கோடையின், உதயம் போன்றதன், முக்கியத்துவத்தை இன்னும் நான் பெறவே இல்லை. எனது சித்திரம் வெறும் எண்ணக்குவியலாய் மாத்திரமே இருக்கின்றது. எத்தனையோ கோட்டுருவங்களை இந்தச் சித்திரத்திற்காய், இதுவரை கீறிவிட்டேன். ஆனால், என் ஆன்மாவிலிருந்து, பிறப்பெடுக்கக்கூடிய அந்த மர்மமான, வஸ்து, அகப்படாமல் கைநழுவிச் செல்லும் அந்தப் பொருள், இன்னமும் என் கைக்கு வந்து சேர்ந்ததாய் இல்லை. வசப்பட்டதாயில்லை”.
“முடிவுப்பெறாத எனது சித்திரம் குறித்த எண்ணப்பாடுகளைப் பொதுவில் நான் எனது நண்பர்கள் மத்தியில்கூட பிரஸ்தாபிப்பதில்லை. ஆனால், இம்முறை ஓர் விதிவிலக்கை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். முழுமையுறா என் சித்திரத்தை, இன்று பகிரங்கமாய் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் போக்கொன்றைக் கடைப்பிடிக்கப் போகின்றேன். இது வெறும் சபலம் அல்ல. தூரிகையை, இப்போது கையில் எடுக்க எனைத் தூண்டிய இக்கதை மிகப்பெரியது…”
“இக்கதையை பாழ்படுத்தி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். இப்போதுகூட அந்த நடுக்கத்துடனேயே என் தூரிகையை நான் கையில் ஏந்தவும் செய்கின்றேன்”.
கிட்டத்தட்ட ஒரு நேர்மையான கலைஞனின் உண்மை வாக்குமூலம் என இதனை நாம் கொள்ளலாம். மாபெரும் கலைஞர்கள் இக்கேள்வியைக் கடந்து அடியெடுத்து வைத்ததாகவும் சரிதம் இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் இக்கேள்வியானது அவர்களைத் துன்புறுத்தி வாட்டி வதைக்கவே செய்திருக்கும்.
துன்புறுத்தல்? ஆம், இது, மிகப்பெரிய சொல்தான். ஆனால், இக்கேள்வியை வெறும் ஒரு யதார்த்தமாகக் கொண்ட மகாபுருடர்களும் இவ்வுலகில் ஜீவிக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
உனது மண்ணில் பூக்கும்
இரவுகள் அழகாகி விடியும் கணங்களை
ரசித்த அதே உன் கண்கள்
இனி புலரப்போகும் காட்சிகளையும் நிச்சயமாக நேசித்திருக்கும்.
அத்தனை அழகல்லவா எம் தாய்மண்?
கடல் அழகு.
கடலில் வந்து விழும் செம்பொன் பரிதியின் அழகு.
நீலத்தை உடுத்துநிற்கும் வானமும் வடிவு.
ஊரைக்காக்க எழுந்து நிற்கும் கோபுரங்கள்
வழிகாட்டும் பனைகளும் தென்னைகளும்.
குளங்களும்,தாமரைகளும்.
விடியலை பறைச் சாற்றும் பறவைகள்.
மனதை வருடும் தவிலும்,நாதஸ்வரமும்.
காற்றைத் தழுவி எமக்குக் கடத்தும்
அரசமரம்,ஆலமரம், பூவரசு.
பச்சைப்பசேலென
காற்றில் அலைபோல் அசையும் பயிர்கள்
என எல்லாமே அழகல்லவா?
அத்தனை அழகையும் வாரி அள்ளிக் கொட்டிக்கொண்டேயிருந்த மண்ணில்தான் 'யாழ்ப்பாணம்' என்ற நகரமும் மழையிலும், வெயிலிலும், ஏன் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டிலும்கூட கண்ணுபடப்போவதாய் செழித்துக்கிடந்தது.
சமூக அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி தற்போது இலங்கையில் தனது மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். பருத்தித்துறையில் ஆரம்பித்து பொத்துவில் வரையிலான் பயணமிது. இதன் நோக்கத்தை அவரது மிதிவண்டிப்பயணத்துக்கான முகநூல் இவ்விதம் கூறுகிறது:
"கதைப்பதனூடாக கற்போம் . கற்பதனூடாக கதைப்போம். கலந்துரையாடல் தலைப்புகள்: மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், மிதிவண்டியின் நன்மைகள், பாதுகாப்பான மிதிவண்டிப் பாதை நடை பதைகளை ஊக்குவித்தல், வீதிகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீடுகளில் மர நடுகையை ஊக்குவித்தல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் & ஊள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல். உங்கள் ஊர்களில் பின்வரும் திகதிகளில் நீங்களே உள்ளூர் புலமையாளர்கள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யலாம். பின்வரும் திகதிகளில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்கலாம். இப் பயணத்திற்கும் அதற்கான செலவுகளும் பங்குபற்றுகின்றவர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். பின்வரும் திகதிகளில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் தாமே அனைத்து தங்குமிட, உணவு, மிதிவண்டிப் பொறுப்புகளையும் எடுக்க வேண்டும். "
சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகசபை அங்கத்தவர்களால் மங்களவிளக்கு ஏற்றப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன பைரவி அருள் மாறன், லதிசா தயாளன், பிரகதி சர்மா ஆகிய சிறுமிகளால் இசைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து புஸ்பா சிவராசா, இந்திராணி சங்கநிதி ஆகியோரின் தமிழரின் பாரம்பரிய பறை இசையும், சிலம்பாட்டமும் இடம் பெற்றன. அடுத்து வரவேற்பு நடனமும், திருமதி அருள்மலர் மதியழகனின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.
அடுத்து இளையதலைமுறைக்கும் பெண்களுக்குமான ‘வதனம்’ சஞ்சிகையின் முதலாவது ஆண்டுமலர் வெளியீட்டுரையை எழுத்தாளரும் முதன்மை ஆசிரியருமான குரு அரவிந்தன் நிகழ்தி வைக்க, இளைய தலைமுறை இணையாசிரியர் ஆகாஸ் ஞானவேலு அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. திருமதி கேதா கிருபராஜனின் இதழ் ஆய்வுரையைத் தொடர்ந்து, முதல் பிரதியை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தென்னிந்தியத் தமிழர்களின் அரசியலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக் கூடாது.அப்படித் தலையிட்டு ஒரு கட்சி சார்பாக இருப்பது அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும் சீர்குலைப்பதாக அமையும். அண்ணா தலைமையிலான, கலைஞர் தலைமையிலான , எம்ஜிஆர் தலைமையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஒன்றிணைந்து ஆதரவளித்தார்கள்.
இன்று என்ன நடக்கிறதென்றால்... நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு செய்யும் தன் நலன் சார்ந்த அரசியலால், விடுதலைப்புலிகள் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்கள் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது திராவிடக் கட்சிகளின் கோட்டையாகத்தான் இருக்கிறது. இன்னும் இருந்து வரும். ஏன் என்றால் அந்த அளவுக்குத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் சுயாட்சி, சமத்துவம், சமநீதி, பகுத்தறிவுக்காக விழிப்புணர்வினை ஏற்றியிருக்கின்றன.
ஊழல், குடும்ப ஆட்சி என்பவற்றுக்கெதிராகக் குரல் எழுப்புவதும் அவற்றின் அடிப்படையில் தேர்தலில் நிற்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். நாம் தமிழர் போன்ற கட்சிகள் அவ்விதமே செயற்பட வேண்டும். அதற்கு மாறாகத் தம் சுய அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களின் துயரையும், வலியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் அவர்கள் தமிழகத்தின் பெருமான்மையான மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் மீதான ஆதரவைச் சீர்குலைக்கின்றார்கள்.
கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.
கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.
அவரது கவிதை -
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.
ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.
இதுவரை அதற்கான உரையாடலை நம் கவிஞர்களும் சரி, விமர்சகர்களும் சரி முன்னெடுக்கவில்லை. கவிஞர்கள் பலருக்குத் தாம் எழுதும் கவிதைகளையே புரிவதில்லை. இந்நிலையில் இந்நிலை எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. விமர்சகர்கள் பலரும் பிறர்தம் கருத்துகளை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்யப் பழகியவர்கள். அதனால் அதுவும் ஆச்சரியம் தரவில்லை. இக்கவிதையை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். இது பற்றிய என் எதிர்வினையே இது.
நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் .
ஏன் அங்கு போகவேண்டும் ?
அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க் முக்கியமாக இருந்தது. நான் சிறு வயதில் பார்த்த ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த நகரிலே எடுக்கப்பட்டது . அந்தப் படத்தை நகலெடுத்த படமாகச் சொல்லப்பட்ட தமிழ்ப் படமாகிய ‘சாந்தி நிலயமே’ நான் 1969 இல் பார்த்த படம். உண்மையில் சாந்தி நிலையம், ஜேன் இயர் (Jane Eyre by Charlotte Bronte) என்ற பிரித்தானிய நாவலையும் ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற அந்தப் படத்தை ஆஸ்திரிய கதையையும் இணைத்த நகல் எனக்கேள்விப்பட்டேன். மேலும் எனது நண்பன் ஒருவன் சாந்தி நிலையத்தில் நடித்த சிறுமி பிற்கால நடிகை மஞ்சுளா மீது ஏற்பட்ட பிரியத்தால் ஒன்பது தடவை பார்த்தான் என்பது, நாங்கள் இந்து கல்லூரி விடுதியில் இருக்கும்போது ஒரு வித சாதனையாகப் பார்க்கப்பட்டது. அவனும் அக்காலத்தில் சாதனையாளனாக எங்களுக்குத் தெரிந்தான்.
அதன் பின்பாகவே அது சவுண்ட் ஒவ் மியூசிக் இலங்கைக்கு வந்த பிற்காலத்தில் என் மனைவி சியாமளா பாடசாலையில் படித்த காலத்தில் அந்த படத்திற்கு யாழ்ப்பாணத்தில், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியினர் பாடசாலையால் கொண்டு சென்றார்கள் என்று சொன்னபோது சல்ஸ்பேர்க் செல்ல அதுவே முக்கிய காரணமாகியது .
சவுண்ட் ஒவ் மியூசிக் ஆங்கிலப்படத்தின் கதாநாயகி ஜுலி அன்ரூ மலையுச்சியில் நின்று பாடுவது என் மனத்தில் மட்டுமல்ல பலரது மனங்களில் பசுமையான காட்சியாக படிந்திருந்தது. இறுதிக் காட்சியில் , ஹிட்லரின் நாஜி படையினரிடமிருந்து முழுக் குடும்பமும் ஒரு சவக்காலையில் ஒழித்திருந்து, அதன்பின் அங்கிருந்து வாகனத்தில் கதாநாயகனும்( Mr. Christopher Plummer as Captain Georg Von Trapp) கதாநாயகியும் ஏழு பிள்ளைகளுடன் மலையில் ஏறி தப்பிச் செல்வதாகப் படம் முடிகிறது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்? தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா? அல்லது அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா? அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின் கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.
நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம் தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான் இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.
பெரியாரைப் பொறுத்த அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் தமிழ்தான். 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரையில் (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி 2 , பக்கம் 768) பெரியார் கூறுவதைச் சிறிது பார்ப்போம்.
அவர் எழுதிய மொழியாராச்சி (1948) நூலில் இடம் பெற்றுள்ள பகுதி இது. அப்பொழுது தென்னாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என்று மொழிவாரியாகப் பிரிக்கப்படாத காலகட்டம். அப்போது இவ்விதம் தென்னாடு மொழிவாரியாகப் பிரிப்பதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இவ்விதம் பிரிப்பது ஆரியரின் சூழ்ச்சி என்று அவர் திடமாக நம்பினார். கருதினார். கன்னடம், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்துமே தமிழ்தான். வெவ்வேறு இடங்களில் பேசப்படுவதால் , வடமொழியின் ஊடுருவலால் தமிழ் இவ்விதம் இடத்துக்கிடம் பேசப்படுகிறது என்று அவர் கருதினார்.
மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல் இருப்பதற்காக தென் மாநிலங்கள் அனைத்தையும் ஒரு குடையில் கொண்டு வர வேண்டுமெனறு அவர் கருதினார். அதற்காக திராவிட மொழியென்பது தமிழ்தான். தெலுங்கு, கன்னடம் , மலையாளம் அனைத்தும் திராவிட மொழியான தமிழ்தான். திராவிடம் என்று அழைப்பதன் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய் அனைத்து மாநிலங்களையும் தமிழகத்துடன் இணைக்க முடியும். இதன் மூலம் ஆரியரின் மொழிவாரி மாநிலப் பிரிவினைத் தவிர்க்க முடியும் என்று அவர் திடமாகக் கருதினார். இதை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்காக அவர் பல கட்டுரைகள் எழுதினார். உதாரணத்துக்குத் 'திராவிட மொழிகள்' என்னும் கட்டுரை பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:
" தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன். தமிழை அறியாதவன். ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக்கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன். இவை நான்கும் வேறு வேறு மொழியென்று கூறுபவர்கள் தமிழர் என்று தம்மை நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். கருதிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறலாமே தவிர - இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது.''