நனவிடை தோய்தல்: அந்தக்காலத்து அரிக்கன் லாம்பு! - இந்து லிங்கேஸ் -

மாலை நேரத்தில் சூரியன் மறைந்து,வெளிச்சம் மெதுவாகக் குறைந்து இருள் படரத் தொடங்கியது.அந்த மாலைக் கருக்கலில் கிணற்றடியில் துலாவில் அள்ளி அள்ளி தண்ணீரை தொட்டிக்குள்ளும், பெரிய வாளிக்குள்ளும் இறைத்துக்கொண்டிருந்தேன்.
அம்மா உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு இப்படியாக ஒத்தாசை செய்வது மட்டுமன்றி,தோய்த்து அலம்பிய துவாய்களைப் பிழிவதென்றாலும்,அங்கே என் கைகளின் பலம் வேண்டும் அம்மாவுக்கு! அம்மாவுக்கும் எனக்குமான அமைதியான சம்பாஷணைகள் இங்குதான் அநேகமாக அரங்கேறும்.அதற்குள் சோகங்களும்,கூடவே சுகங்களும்கலந்திருக்கும். மாறாக எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் கிணத்தடியில்தான் அம்மா ஆரம்பித்துவைத்தார் என்றும் சொல்லலாம்.இல்லத்திற்குள் மட்டும்தானா நம் சுகவாழ்விருந்தது? இல்லையே! வாழ்ந்த காணி, ஆட்டுப்பட்டி, மாட்டுத்தொழுவம், கோடி, மூலை முடக்கென வளவிற்குள் சுற்றிவர இருந்த நம் பாதம் பதித்த எல்லா இடங்களிலும் எமக்கொரு கதையிருந்ததே! மாமரத்தின் நிழலில்,.வேம்பின் கீழே போட்டிருந்த கட்டிலில். வாழை மரங்களிற்காய் வாய்க்கால் வெட்டி, பாத்திகட்டி தண்ணீரை ஓடவிட்டுப்பாத்திருந்த அந்தப்படிகளில்.கிணற்றடியில் நின்ற கமுகு மரங்கள்.எங்கள் வேலிக்கும் அடுத்த வீட்டுப் பூரணம் அக்கா வீட்டுக்குமான குறுக்குவழிப்பொந்து.


நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.




சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.



* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.


மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.




ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









