சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -முன்னுரை
சங்க இலக்கியநூல்களின் மூலம் தமிழர்கள் வாழ்வியல் சு10ழலைப் பற்றிய செய்திகள் புலவர்களின் பாடலடிகளில் காணமுடிகிறது. மரங்களும், மலர்களும் அதன் தன்மையை பல புலவர்கள் தம் பாடலடியின் வழியாக ஆராய்ந்து எடுத்தாளப்பட்டதையும், புலவர்கள் தம் பாடலடிகளின் மூலமாக தலைவன் தலைவியின்  வாழ்வியலைத் தாவரங்களில் மீது செலுத்திய அறிவுதிறனைப்பற்றியும் அகநானூற்றுப்புலவர்கள்  முல்லைத்திணையின் வழியாக  இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

முல்லை மலர்களும் மரங்களும்
வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மைபெறுவது மரஇனமாகும். பொது மரஇனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையையுடைய உள்ளீட்டைக்கொண்டே வரையறுக்கப்படுகிறது. “ திண்மையான உள்ளீட்டை பதினைந்திலிருந்து இருபதடி உயரமேனும் வளர்வதுமாகிய தாவரம் மரம்” என்று தாவரவியலார் குறிப்பிடுகிறார்.

முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடா, காயா, குருந்து முதலியன  மரங்கள் மிகவும் உயரமற்ற குறுமரமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லைநிலத்தில் உள்ள மரங்களின் பூக்கள் தலைவனின் கார்கால வரவினை உணர்த்தும் கற்கால மரமாகவும், முல்லைநிலத்தில் காட்டின் அழகினைக் கூட்டுவதற்கும் ஆயர்கள் அம்மரத்தில் உள்ள செடிப்பூக்களைக்கொய்து தலையில் கூ10டிக்கொள்வதற்கும் பயன்பட்டுள்ளது. மேலும் மயிலினங்கள் கூடி ஆடக்கூடிய முல்லைநிலக்காடானது மரங்கள் அடர்ந்துக்காணப்படும் என்பதை,

மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் (அகம்.344:6)
என்ற தொடர் சுட்டுகிறது.

பிடவம்
பிடவம், முல்லைநிலத்தில் வரைக்கூடிய குறுமரம். அகநானூற்றுப்பாடல்களில் இதனைப் பிடா, பிடவு எனக் குறிப்பிடுகின்றனர். குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலக்காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மணத்தால் பெயர்பெற்ற மரங்களும் பிடவமரமும் ஒன்றாகும். இதனுடைய பூ வெண்மை நிறத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையதாகும். வினைவயிற்சென்ற தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்பருவத்தைத் தலைவிக்கு உணர்த்தும் மலராகவும். பாசறையில் இருக்கும் தலைவனுக்குக் கார்கால வரவை உணர்த்தித் தலைவியை நினைவூட்டும் அடையாளமாகவும் பிடவம் திகழ்கிறது. பிடவமலர் பற்றிய குறிப்பைத் தொல்காப்பியர் கூறுகையில், 'யாமரக் கிளவியுமு பிடாவும் தளாவும் (தொல்.எழு:230)' என்ற நூற்பா வழித்தந்துள்ளார்.

பிடவமரத்தை நாட்டார் வழக்கில் ‘புடன்’ என அழைப்பதாக பி.எல். சாமி குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியர் பிடவமரத்தை யாமரதோடு இணைத்துக்குறிப்பிட்டுள்ளார். பிடவமரம், யாமரத்தோடு சிறியதாகும். அகநானூற்றில் இது ‘குறும்புதல் பிடவு’ (அகம்.154:4) எனப்படுகிறது. பிடவினைப்புதலாகக் கருதவியலாது. ஏனெனில் அகநானூற்றில் ‘முடக்கால் பிடவு’ (அகம்.344:3) என்று கூறி இதன்மேல் மயில்கள் ஆடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு கருத்துக்களுக்கும் விளக்கம் கூறும் கோவை. இளஞ்சேரன், ‘குறும்புதல் பிடவு’ என்பதற்கு குறுமையாகத் தழையால் புதல்போலும் செறிந்துள்ள பிடவு எனப்பொருள் கொள்ளல் வேண்டும் எனக்குறிப்பிட்டு படவினை சிறிய மரமாகக்கொள்ள வேண்டும்’ எனச் சுட்டியுள்ளார்.

பிடவமரத்தின் தோற்றத்தினைக்கூறும் அகநானூற்றுப்பாடியப்புலவர் மதுரைமருதம் இளநாகனார்மரம் சிறியதாகவும் அடிப்பகுதி கருமையாகவும், அதன் பூக்கள் விரிந்த வெண்மை நிறத்திலும் கொத்தாக மாலைப்பொழுதில் குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலத்தில் மலரும் என்பதை,

சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் (அகம்.34:1-2)

என்ற பாடலில் பதிவு செய்துள்ளார்.

பிடவின் மலர்
பிடவ மரத்தின் பூவெண்மை நிறத்தில் நறுமணத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையது. கார்காலம் வந்ததும் கொத்தாக வெண்மை நிறத்தில் மலர்ந்த பிடவமலர்கள் நல்வினைப்போல் காட்சியளிப்பதாக,

………… நிலவெனத்
தொகுமுகை விரிந்த முக்காற் பிடவின் (அகம்.344:2-3)

என்று மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் குறிப்பிடுகிறார். கார்கால வரவை, பிடவமலர்கள் தலைவனுக்கு அறிவுறுத்தி பாறையில் இருக்கும். அவனுள் தலைவியின் நினைப்பை மீட்டுகின்றன. இதனை,

சுரும்பிமிர் பூதப் பிடவுத்தளை யவிழ
அரும்பொறி மஞ்ஞை யால ………. (அகம்.304:11-12)

என்று இடைக்காடனார் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முல்லை நிலச்சு10ழலில் வளரக்கூடிய பிடவமலர் மலரும் காலத்தில் காடு முழுவதும் மணம் பரப்பும் என்பதை,

வெண்பிடவு அவிழ்ந்து வீகமழ் புறவில் (அகம்.184:7)
காடே கம்மென றன்றே (அகம்.23:5)

எனும் தொடர்களின் மூலம் அறிய முடிகிறது. பிடவமலர் வரலாற்றுக்குறிப்புடைய மரமாகவும் காட்சியளிக்கிறது. பிடவமரத்தின் பெயரால் ‘பிடவூர்’ என்று அமைந்துள்ளது. இவ்வூரின தலைவன் நெடுங்கை வேண்மான் ஆவான். இதனை,

………………. தித்தன் உறந்தைக் குணாஅது
நெடுங்கை வேண்மா அருங்கடிப் பிடவூர் (புறம்.395:19-20)

என்று நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.

காயா – பூவைமரம்
பூவால் பெயர்பெற்ற மரங்களில் காயாமரமும் ஒன்றாகும். இப்பூவானது முல்லைநிலத்தின் செந்நிலப்பெருவழியிலும் சில நேரங்களில் குறிஞ்சியிலும் பூக்கும் இயல்புடையது. கார்காலத்தில் மலரும் இதன் பூக்கள் காலையில் மலர்ந்து இரவில் உதிரும் தன்மையுடையது. இதன் அரும்புமுனை கருமையாகவும் மலர்ந்தால் மயிற்கழுத்துப்போன்று பளபளக்கும் நிலநிறத்திலும் காணப்படும். மலர்கள் மெல்லியதாகவும், மணமுடையதாவும் காட்சியளிக்கும். அதனை காண்பவர்கள் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. தலைவன் நினைவில் வாழும் தலைவிக்கு கார்காலத்தொங்கி விட்டது என்பதை அறிவுறுத்துவதற்கு உரிய அடையாளமாக் காணப்படும் காயாமலர் அகநானூற்றுப்புலவர்களால் பாடப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் ‘பூலைநிலை’  என்ற துறை குறிக்கப்பட்டுள்ளது.

தாவா வழுப்புகழ்ப் பூவை நிலையும் (தொல்.பொரு:63-10)

இதற்கு உரைவகுத்த இளம்பூரணர், ‘பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல் நாடெல்லை காடாதலின் அக்காட்டினைச்செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல் உன்னங்கண்டு கூறினார்போல இதுவும் ஒரு வழக்கு என்பார்.    

செவ்வரக்கினைப் போன்ற சிவந்த முல்லை நிலத்திற்குச்செல்லும் பெரிய வழியில் காலையில் பூத்த காயாவின் மலர்கள் மாலையில் வாடிப்பரவிக் கிடக்க அதில் தம்பலப்பூச்சிகள் பல ஒன்றாகச்சேர்ந்து வரிவரியாக ஊர்ந்து செல்வது, பவளத்தோடு நீலமணி ஒன்றாக இருப்பதைப்போல் காட்சியளிப்பதை,

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய (அகம்.14:1-4)

என்ற பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலைவனைப் பிரிந்ததால் மாலைப்பொழுதில் வாடும் தலைவி நிலையினைப் பாணனிடம் கூறும் தோழியானவள் முதல்நாள் பூத்தக்காயாமலர் மறுநாள் மாலை வாடிக்கிடப்பதுபோல் தலைவியும் வருத்தத்துடன் காணப்படுவதைக் குறிப்பிடுவதாக இப்பாடலடிகள் அமைந்துள்ளது.

கார்கால மழையால் மண்;ணரிக்கப்பெற்று வரிவரியாக மணலினையுடைய முல்லைநிலத்தில் நீலமணியுடன் கலந்த செம்பவளம் போல காயவின் வாடிய பூக்களுக்கிடையே தம்புலப்பூச்சி பல ஒன்றாக ஊர்ந்து சென்று ஈரம்பட்ட முல்லை நிலத்தை அழகு செய்த காட்சியை இடைக்காடனார்,

…………….. வரிமணல்
மணிமிடை பவளம் போல் அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்;புறம் வரிப்ப (அகம்.304:12-15)

எனக்குறிப்பிட்டுள்ளார். பாசறையில் இருக்கும் தலைவன் வினை முடிந்து மீண்டுவரும் செறிந்த மணல்மேடு அரிக்கப்பட்ட உவர்மண் மோதுவதுமாகிய முல்லைநிலத்து வழியில் காயாமலர் வாடிக்கிடப்பதைக் கண்டு மாலைபொழுது வந்துவிட்டதே தலைவி தன்னை நினைத்து வருந்துவாளோ என்றேண்ணி தன் தோப்;பாகனிடம் தேரினை விரைந்து செலுத்துமாறு அமைந்த மற்றொரு பாடலில் இடைக்காடனார் கூறுகையில்,

செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்த ஒளிப்பன மறைய (அகம்.374:11-14)

இதே போன்று கருத்தை அடிப்படையாகக்கொண்டு சீத்தலைச்சாத்தனார் மேகம் விடாமல் மழை பொழிதலால் காடு அழகு பெற்றது. நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையே சிவந்த புறத்திணையுடைய இந்திரகோப்பூச்சி ஏர்ந்து சென்றது. அவற்றிடையே முல்லையில் பல பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தக் காட்;சி சிறந்த ஓவியனால் வரையப்பெற்ற ஒவியம்போல் இருப்பதைக் கண்ட தலைவன் கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவி தன்னை நினைத்து வருந்துவாள் எனக்கூறி பாகனைத் தேரினை வரைந்து செலுத்தச் சொல்வதை.

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சு10ல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் நன்பல
முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவின் (அகம்.134:1-6)

என்ற பாடல் இதனை வெளிப்படுத்துகிறது.

குருந்தம்மரம்
குருந்தமரம் புனத்திலும், சுரத்திலும் பொழில்களிலும் வளரக்கூடிய ஒரு சிறுமரமாகும். குவிந்த இதழையுடைய இதன் பூக்கள் வெண்மை நிலத்தில் காணப்படும். இம்மரத்தினை குரா, குரவு, குருந்தம், குருந்து என்றும் அழைக்கலாம்.
குருந்து என்பது, ‘புனஎழுமிச்சை’ வகையைச் சார்ந்தது என்பதைப் பிங்கல நிகண்டு, ‘புனஎழுமிச்நை குருந்தெனப்புகலுவர்’ (பிங்.நி.2777) எனக்கூறுகிறது.

கார்காலத்தில் முல்லை மலருடன் தழைத்துக்காணக்கூடிய இம்மரத்தின் மீது மயில்கள்; ஏறி அகவி கார்கால வரவினைத்தலைவிக்கு உணர்த்துகின்றன. காட்டில் வாழும் மானினங்கள் நல்ல நிழலைத் தரக்கூடிய குருந்த மரத்தின் நிழலில் தன்துணையோடு தங்கி தலைவன் தலைவியைப் பிரியாது இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. குருந்தமரத்தின் மேல் குடுமியும், அழகிய தோகையும் உடைய மயில் தன் தோகையை விரித்தாடி தலைவிக்குக் கார்காலத்தை உணர்த்தும். இதனை,

குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுறக்
கொல்லை யுழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்
கார்மன் இதுவால்……….. (அகம்.194:11-16)

என்ற பாடலில் இடைக்காடானார் காட்சிப்படுத்தியுள்ளார். குருந்த மரத்தில் அமர்ந்து ஆடும் மயிலினைத்தினை கவரவரும் கிளியினை ஓட்டும் மகளிர் குருந்து மரத்தின் தீது அமர்ந்திருப்பதற்கு ஒப்பிட்டுள்ளார்.

செவ்வண்ணம் தீட்டியது போன்ற சிவந்த நிலத்தில் தேக்கி வைத்தது போன்ற தெளிந்த அறல்பட்ட நீரைக்குடித்த சிறிய குட்டியுடன் துள்ளிய நடையினையுடைய கலைமானோடு அசையும் கிளைகளையுடைய குருந்தமர நிழலில் தங்கியது. இத்தகைய முல்லை நிலச்சு10ழலில் தலைவியை பிரியேன் என்று கூறிவிட்டு இப்போது திரும்பி தலைவியை காணமுடியாத சு10ழலில் இருப்பதை இடைக்காடனார்,

செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
செறித்துநிறுத் தன்ன தௌ;ளறல் பருகிச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
வரந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய (அகம்.304:6-10)

என்ற பாடலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

முடிவுரை
அகநானூறு முல்லைத்திணைப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள தாவரங்கள் அனைத்தும் தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையை எடுத்துக்காட்ட சிறந்த குறியீடுகளாக அமைப்பு பாங்கினை புலவர்களின் பாடலடிகளில் அறியமுடிகிறது. முல்லை நிலத்தில் காணக்கூடிய கோட்டுப்பூக்கள், மிகவும் குறுகியதாகவும், பூக்கள் அழகு பெற்றும் காணக்கூடியன. பொதுவாக முல்லை நிலத்தில் பிடவம், கொன்றை, காயப் போன்ற குறுமரங்கள் காணப்படுகின்றன. மணத்தால் பெயர்பெற்ற கார்கால மலர்களில் பிடவமும், நிறத்தால் பெற்ற காயாமலர் காலையில் மலர்ந்து இரவில் உதிரும் முதலியன தன்மைகளில் தலைவன் தலைவியை காணக்கூடிய நிகழ்வினை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரையின் வழியாக ஆராய முற்பட்டுள்ளது.
நூற்பாட்டியல்
1. வேங்கடசாமி நாட்டாh.;ந.மு.            -  அகநானூறு வேங்கடாசலம் பிள்ளை.ரா, சைவசித்தாந்த நூற்பதிப்பக்கழகம்    ,சென்னை -18. ஆண்டு: 1944
2. சிவசுப்பிரமணியன்.வே.                 -  அகநானூறு ,   உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்,  சென்னை-90. ஆண்டு: 1990
3. இளம்பூரணர்                 -   தொல்காப்பியம்    கழக வெளியீடு  , சென்னை- 18. ஆண்டு: 1974
4. சாமி.பி.எல்.                     -   சங்கஇலக்கியத்தில்  செடி, கொடி விளக்கம்  ,கழக வெளியீடு,  சென்னை- 18. ஆண்டு: 1967
5. சீனிவாசன்                  -   சங்க இலக்கியத்தாவரங்கள்    தமிழ்ப்பல் கலைக்கழகம்,   தஞ்சாவூர். ஆண்டு: 1987
6. பிங்கல் முனிவர்                -   பிங்கல் நிண்டு,   மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,   சென்னை. ஆண்டு: 1995
7. ஒளவை துரைசாமிப் பிள்ளை        -   புறநானூறு ,  பூம்புகார் பதிப்பகம் ,  சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here