- முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2

என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.

மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின்  திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே  மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.

புறநானூற்றில் கல்வி குறித்த மதிப்பு
கல்வி என்ற சொல் பழமையானது. இன்றளவும் நிலைபெற்றிருக்கும் ஒன்று. தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு தொன்மையானவையோ, அவ்வளவு கல்வியும் தொன்மையானது. ஒரு நாட்டின் கலை பண்பாடு,நாகரிகம், அரசியல், அறிவியல், பொருளியல் முதலியவற்றை வளர்ச்சியடைச் செய்யும் கருவியாகக் கல்வி அமைகின்றது. இக்கல்வி தனிமனிதனிடம் அமையும்போது ‘மயக்கத்தைத் தரும் அறிவில், குற்றமில்லாத அறிவு தோன்றுவதற்கு’ வழியினை ஏற்படுத்தித் தருகிறது. இக்கல்வியினை அறியாதவன் ‘சொல்லின் பொருள் அறியா மூடர்’ என்ற புறந்தள்ளப்படுகிறார். ஆகையால் கல்வியானது மனிதனை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி ‘ஏழு பிறப்புக்கும்’ பயனைத் தரும் என்ற தத்துவம் மரபு சார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இதனை தொல்காப்பியர்,

“வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது”5

ஏன்ற  நூற்பாவின்மூலம் வேண்டிய கல்வியென்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுகின்ற கல்வியாகும் என்ற  கருத்தினைப் புலப்படுத்துகிறார். பண்டைக் காலத்தில் மக்கள் கல்வி கற்பதற்காகவே அயல்நாடுகளுக்குச் சென்றும் பணிந்தும் பொருள் கொடுத்தும் கல்வி கற்றனர் என்பதனை இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. இதனை புறநானூற்றுப் பாண்டியன் நெடுஞ்செழியன்,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”6

என்ற வரிகளின் வாயிலாகக் கல்வியைப் பொருள் கொடுத்தும் பணிந்தும் கற்பது மட்டுமின்றி, துன்பம் ஏதும் நேரினும் அதனைப் பொறுந்துக்கொண்டும் கற்பதே நன்மையாகும் என்று புலப்படுத்தியுள்ளார். மேலும், இவ்விதக் கல்வியானது அரச மரபை மாற்றும் தன்மையுடையது என்பதனை புறநானூற்று,  பாடல் வரிகள் சுட்டுகின்றன.

ஒரு காலகட்டத்தில் அரசப் பதவியென்பது மூத்தவனுக்கு முதல் கொடுப்பது மரபுவழியான வழக்கமாகும். இம்மரபானது காலம் காலமாக கடைப்பிக்கப் பட்டசெயல்பாடாகும்.இவ்விதச் செயல்பாடு மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குற்றவுணர்வை எற்படுத்தியமையால் ‘மூத்தோன் என்று என்னாது அறிவுடையோன்’ என்ற சொல் கல்வியறிவைச் சுட்டுகிறதா? என்ற ஐயப்பாடு எழுகிறது. காரணம் யாதெனில் உலகப்பேரரசர் வரிசையில் போற்றப்படும் அக்பர் கல்வியறிவில்லாதவர் என்பது யாவரும் மறுக்க முடியாதது. இத்தகு உயர்நிலையை அடைவதற்கு’அறிவு இன்றியமையாததாகும் என்பதனை உணர்ந்த நம்மில் பலருக்கு அறிவு என்பதனைக் குறித்த ஐயம் எழக்கூடும். இங்கு அறிவு என்பது,‘தம் குடியின்கீழ் வாழும் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செயல்படுத்தும் ஆற்றல்’ என்பது விடையாக அமைகின்றது. ஆகையால் பாண்டியன் நெடுஞ்செழியன் சுட்டும் அறிவுடையோன் என்பதற்கு இவ்விதக் கருத்து பொருந்திப் போகும் முகமாக அமைகின்றது. மேலும், கல்வியறிவு பெற்றோர் உயர்வு தாழ்வு பார்க்காது வாழ்ந்தனர் என்பதனை புறநானூறு,

“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே”7

என்ற பாடல் வரிகளின் வாயிலாகப் பண்டைக் காலத்துச் சமுதாயத்தில் அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நாற்குலங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களுக்குள் கல்வி கற்றவரை பாரபட்சம் பார்க்காது அணுகினர் என்ற செய்தியை அறிய முடிகிறது. இச்சிந்தனை மனித ஆற்றலை மேம்படுத்துகின்றன என்பதை இப்பாடலின் கல்வி குறித்த மதிப்பீடு வாயலாக அறிய முடிகிறது.

புலவர் அரசர்க்கு உணர்த்தும் அறிவுரை
சங்க காலத்தில் புலவர்களின் அறிவுரைக்கும். அறவுரைக்கும் மன்னர்கள் செவிகொடுத்துப் பணிந்திருக்கிறார்கள் என்பதனைச் சங்கப் பாடல்கள் தமக்குப் புலப்படுத்துகின்றன. புலவர் தம் இலக்கியப் படைப்புகளில் மன்னர்க்குச் சிறப்பிடம் கொடுத்தனர் என்பதனை,

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”8

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அந்நாட்டில் காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படுவதாகும். இவ்வியற்கை வளங்களுக்கும் மேலாக மன்னனே முதன்மையானவன் என்ற கருத்து பண்டைக் காலத்தில் காணப்பட்டது. ஆகையால் வளங்களை மக்களின் வாழ்வியல் முறைக்கு ஏற்ப செம்மைப்படுத்தியும் நெறிப்படுத்தியும் தரவேண்டியது மன்னனின் கடமையாக இருந்தது. இவ்வளங்களை உணரவும் நுகரவும் என்று மனிதன் அறிந்தானோ அன்றே வறுமை என்ற கருத்தும் வளரத் தொடங்கியது. இவ்வறுமையிலிருந்து மனித இனத்தைக் காப்பது மன்னனின் கடமையாகக் கருதப்பட்டது. பண்டைக்காலம் முதல் நடப்புக்காலம் வரை மனித ஆற்றலைப் பாதிக்கும் காரணியாக வறுமை என்ற கருத்து தொடர்ந்து வருகிறது. இதனை புறநூனூறு

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கி நோக்கி
அருள் வல்லை ஆகுமதி9

என்ற பாடல் வரிகளின்,‘எத்தகைய ஆற்றல் படைத்தவருக்கும் துன்பம் வருதல் இயற்கை, அத்தகைய துன்பத்துடன் வருத்தி வருவோரைக் காத்து நிற்பது மன்னனின் கடமையாகும்’ என்று புலவர் அரசனுக்கு உணர்த்துகிறார். இதற்கு அடுத்த நிலையில், பெரும் பேரரசுகள் அனைத்தும் போரின் அழிவிலே தோன்றியதாகும். இதனை வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்தி நிற்கின்றன. இங்கு உருவாகும் அழிவு, ஆக்கம் என்ற இரு கருத்து நிலைகள் மனிதனை மையமிட்டு நிகழ்த்தப்பட்டன. இவ்வித அழிவு, ஆக்கம் ஆகியன மனிதன் மற்றொரு மனிதன்மீது செலுத்தம் அதிகாரமாகும். இவ்வதிகாரத்தில் பெறும் வெற்றி பண்டைய சமுதாயத்தில் பெருமைக்குரியதாக மதிக்கப்பட்டது.

“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”10

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக,‘மன்னா நீ பெறும் வெற்றிகள் உன் போர் வீரர்களால் வந்ததல்ல, உன் நாட்டில் உணவு உற்பத்தி செய்கின்ற உழவர்களால் தோன்றியதாகும். ஆகையால் அவர்களைப் காப்பது உன் கடமையாகும். இல்லையெனில் ‘யானை புகுந்த வயல்போல்’ இந்நாடும் மக்களும் அழிவார்கள் என்ற கருத்தினை சங்கச் சான்றோர் உணர்த்தி நிற்கின்றனர்.

சமூக சேவை
உலகின்கண் மக்களிடையே உடைமை, இன்மை என்ற ஏற்றத்தாழ்வும் அதன் காரணமாகத் துன்பமும் வறுமையும் தோன்றின. அவற்றைத் துடைக்க மக்களுள்ளத்தில் இரக்கமும் ஈகையும் மலர்ந்து மக்கள் தொண்டு அல்லது சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. வழிபோக்கர் வசதிகளுக்காக நெடுஞ்சாலைக்கும், பூஞ்சோலைகளும், ஊர்ப்பொது மன்றங்களும் மன்றங்களிடத்துப் பயன்தரு விளா, பலா முதலிய மரங்களும் பொய்கைகளும் ஆங்காங்கு அமைக்கப் பெற்றன. விருந்தோம்பல் வீடுதோறும் சிறந்த அறமாகச் செய்யப்பெற்றது. அறச்சாலைகள் நிறுவப்பெற்றன. மருத்துவ முறைகள் பலவற்றைப் பற்பல மக்களும் செய்து வந்தனர். இத்தகைய தொண்டுகளைப் புறநானூற்றில் காண முடிகிறது.

சிறுகுடி என்று ஊர்த் தலைவனால் பாணன் பசியெனும் நோய் போக்க உணவெனும் மருந்து வழங்கியதைப் பார்த்து, பெருமன்னனான கிள்ளிவளவன் “பசிப்பிணி மருத்துவன்”11 என்று பட்டம் கொடுத்து பாராட்டி உள்ளான். உணவுடன் உடை அளித்த வள்ளல்களும் உண்டு. பாசிபோன்று, அழுக்கேறி, நைந்துபோன இரவலர்தம் ஆடைகளைத் தம் கையால் அகற்றி, புதிய ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தனர் - மகிழ்வித்தனர். இதனை,

“முதுநீர்ப் பாசியன்ன உடைகளைந்து
திருமல ரன்னபுதுமடிக் கொளீஇ”12

என்ற வரிகளால் அறிய முடிகிறது. :”நீரின்றியமையாது உலகு” என்ற அடிப்படையை உணர்ந்த மன்னர்கள் பெய்யும் மழைநீர் வீணே கடலிற் கலந்து வறிதே போகாது. ஆணைகட்டியும் ஏரி, குளங்களிற் சேர்த்தும் பெருந் தொண்டாற்றியுள்ளனர். இதனைக் கடமையாய்ச் செய்யத் தவறியவர்களுக்குக் குடபுலவியனார் “உண்டி கொடுத்தேர் உயிர் கொடுத்தோரே”13 என்ற பாடல் வழி அறவுரை கூறியுள்ளளார்.

பொது நலத்தல் மனித உலகம் இருக்கிறது. அதில் உள்ள உயிர்களெல்லாம் தாம் செயலுக்கு ஏற்ப இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, செல்வம், வறுமை ஆகியவற்றை அடைகிறது. கடமை, பாசம் கொண்ட உறவுகளால் வாழ்வு மேன்மை பெறுகிறது. உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து மக்களின் துன்பநிலை நீக்கப்படுகிறது. அறத்தொண்டுகளால் சமூக சேவை ஆற்றப்படுகிறது. இத்தகைய மனித உலகத்தைப் புறநானூறு படம் பிடத்துக் காட்டுகிறது.

அடிக்குறிப்புகள்
1. பி.நெல்சன், மனிதவள மேம்பாடு படிப்புக்கருவி கொள்கைகளும், செயல்முறையும், ப.1
2. முனைவர் அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், பா.187
3. கோ. கேசவன், மண்ணும் மனித உறவுகளும், ப. 154
4. ம.திருமலை, ஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறையும், ப.212
5. புலியூர்க்கேசிகன், தொல்காப்பியம், பா.186
6. முனைவர் அ.மா. பரிமணம், புறநானூறு மூலமும் உரையும், பா.183 (1-2 வரிகள்)
7. மேலது,பா.183 (9-10 வரிகள்)
8. மேலது, பா.186
9. மேலது, பா.27 (15-17 வரிகள்)
10. மேலது,, பா.35 (25 – 26 வரிகள்)
11. மேலது, பா.173
12. மேலது, பா. 390
13. மேலது, பா.18

துணை நூற் பட்டியல்
1. ம.திருமலை - ஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறையும், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு ,    மதுரை 625 001

2. கேசவன்,கோ. - மண்ணும் மனித உறவுகளும், சரவண பாலு பதிப்பகம்,    விழுப்புரம்,     2001 ஜுன்

3. முனைவர் அ.மா. பரிமணம் - புறநானூறு மூலமும் உரையும்,    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஆம்பத்தூர், சென்னை – 600 098

*கட்டுரையாளர் -   - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -

P.K.GOVINDARAJ raj <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here