மு.புஷ்பராஜன்அசோகமித்திரன் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓவியர் கே.கிருஷ்ணராஜா  தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கவிஞர் மு.புஷ்பராஜன் இங்கு பிரித்தானியாவிலிருந்து விட்டு போய்  நிரந்தரமாக கனடாவில் வசிக்கப் போவதான செய்தியை அறிவித்த அவர் அதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். குடியுரிமை வதிவிடப் பிரச்சினை காரணாமாக, கனடாவில் வதியும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப்  பிரிந்து வாழும் புஷ்பராஜன்  எப்போதாவது ஒரு நாள் அவர்களிடம் போய் சேருவார் என்பதை நாம் எதிர்பார்த்திருந்தாலும் அந்நாள் இவ்வளவு சீக்கிரம் வந்து சேரும் என்பதினை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. இனி அவர் எம்மோடு இல்லை. எமது இலக்கிய சந்திப்புக்கள், அரசியல் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எமது ரெட்மூன் மாதாந்த திரைப்பட நிகழ்வுகள் எதிலுமே இனி இவரைப் பார்க்க முடியாது. மனதை ஏதோ ஒரு வெறுமை அப்பிக் கொண்டது. அசோகமித்திரன் மறைந்து மூன்றாவது நாள் 25.03.17 அன்று ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள  சிந்துமஹால் உணவு விடுதியின் கீழ்த்தளத்தில் ஒன்று கூடினோம். அன்றைய தினம் அங்கு மு.புஷ்பராஜன், பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கே.கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன் இவர்களுடன் தோழர்கள் வேலு, சேனன், எம்.பௌசர், கோகுலரூபன், சாந்தன், கஜன் காம்ப்ளர், செபஸ்டியன் என பத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆர்வலர்களும், அரசியல், சமூக  செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ஒரேயொரு பெண் பிரதிநிதியாக தோழர் பாரதி மட்டுமே கலந்து கொண்டார் என்பதினையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என கருதுகின்றேன். அசோகமித்திரன் மறைந்து மூன்று நாட்களும் பூர்த்தியாகாத நிலையில் அன்றைய உரையாடல்கள் ஆனது அசோகமித்திரன் மீதான போற்றுதல்களுடனும் தூற்றுதல்களுடனுமே ஆரம்பமாகியிருந்தது. திசை மாறிப் போன உரையாடல்கள் ஆனது பின்பு தனது சரியான தடத்திற்கு திரும்பி கலந்து கொண்ட அனைவரும் புஷ்பராஜனுடைய கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றியும் அவருடனான  தமது உறவுகள்  அனுபவங்கள் பற்றியும்  பகிர்ந்து கொண்டனர். அங்கு பரிமாறப் பட்ட விஸ்கியும் வைனும் கொஞ்சம் அதிகமாகவே உட்புகுந்த காரணத்தினால் அனைவரது அனுபவப் பகிர்வுகளும் கொஞ்சம் வெளிப்படையானவையாகவும்  உணர்ச்சிவசப் பட்டதாகவும் அமைந்திருந்ததினையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். 

கவிஞர் மு. புஷ்பராஜன் குறித்து நாம் இங்கு புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவுமில்லை. அவர் ஒரு தேசங்கள் கடந்த கலைஞர். கவிஞராகவும் விமர்சகராகவும் ஆய்வாளராகவும் கலை, இலக்கியம், சினிமா, அரசியல், வரலாறு என பல்வேறு தளங்களிலும் கால் பதித்துள்ள அவர் எழுதிக் குவித்துள்ள புத்தகங்களும் கட்டுரைகளும் அநேகம். அத்துடன் மிகவும் குறுகிய காலத்தில் மட்டுமே வெளி வந்து நின்று போயிருந்தாலும் ஈழ இலக்கிய பரப்பில் பலத்த அதிர்வினையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தவர். அன்று இவர் எழுதிய பல கட்டுரைகள் பேராசியர் க.கைலாசபதிக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் அதிக கலக்கத்தினையும் நடுக்கத்தினையும் கொடுத்தது என்பதினையும் இங்கு முக்கியமாக குறிப்பிட்டேயாக வேண்டும்.

எனக்கும் புஷ்பராஜனுக்குமான உறவானது அதிக நெருக்கமானதாக இல்லாது இருந்த போதிலும் கடந்த பல வருடங்களாக அவருடன் மணிக்கணக்காக உரையாட பல சந்தர்பங்கள் எனக்குக் கிடைத்திருந்து. ஒரு காலப்பகுதியில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புத்தகங்கள் வாங்குவதற்காக தோழர் பௌசர் அவர்களின் அலுவலகத்திற்கு நான் செல்வது வழக்கம். அந்த அநேகமான வியாழன்களில் அவரும் அங்கிருந்ததை நான் எதேச்சையானதாக கருதவில்லை. அங்குதான் அவருடனாக அதிகம் உரையாடி இருக்கின்றேன். உண்மையில் இந்த உரையாடல்கள் மூலமாக நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களும் தகவல்களும் நான் எந்த நூல்களை வாசித்தும் பெற்றுக் கொள்ள முடியாதவை. இவ்வகையில் அவர் எனக்கு ஒரு நடமாடும் நூலகமாகவே தோன்றினார் என்பது மிகைப் படுத்தப் பட்ட கருத்து அல்ல.

அன்று அந்நிகழ்வில் பேசிய யமுனா ராஜேந்திரன் அவர்கள் புஷ்பராஜனின் வியத்தகு ஆளுமைகள் குறித்தும் சர்வதேச இலக்கியங்களில் அவருக்குண்டான அளவு கடந்த அறிவினையும் பரிச்சியத்தினையும் குறிப்பிட்டார். கடந்த பல வருடங்களாக தனக்கும் அவருக்குமிடையிலான நெருங்கிய நட்பு குறித்தும் விளக்கினார். ஒரு கலைஞன் ஆனவன் மனித மனங்களின் நுட்பங்களை ஆழமாக புரிந்து கொண்டவனாக இருப்பான், அவனால் மற்றைய மனங்களை புண்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர் புஷ்பராஜனும் அவ்வகையில் ஒரு பண்பட்ட கலைஞனாக மற்றவர் மனங்களை புண்படுத்தாத மற்றவர்களின் பலவீனங்களையும் vulnerability  இணையும் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான மனிதர் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தோழர் பௌசர் அவர்கள் இத்தகைய புஷ்பராஜன் போன்ற ஆளுமைகளை புரிந்து கொள்ளாத இச்சமூகத்தினை கோபாவேசத்துடன் கடுமையாக சாடி இவருக்கும் தனக்குமான நட்பு குறித்தும் அது தரும் துயரம் குறித்தும் பேசி “மரணத்தை மட்டுமே நாம் துயரமாக கருதுகின்றோம். ஆனால் இது போன்ற நட்பின் பிரிவுகள் ஆனது எனக்கு ஒரு மரணம் தருகின்ற துயரிலும் அதிகமாக உள்ளது” என  குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மு.நித்தியானந்தன் அவர்கள் ஈழத்திலிருந்தே பல தசாப்த காலங்களாக  தொடரும் புஷ்பராஜனுடனான நட்பு குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் பேசி ‘அலை’ இன் ஸ்தாபகர்களில் ஒருவரான புஷ்பராஜன் எம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் போதே இங்கு இலண்டனில் சிலர் தாம்தான் அலையை உருவாக்கியவர்கள் என்று கூறித் திரிவது தனக்கு சிரிப்பை மூட்டுவதாக தெரிவித்தார். எவ்வளவு கூட்டிக் கழித்துப் பார்த்தும் இவர் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்று இன்று வரை எனக்குப் புரிபடவேயில்லை.

தோழர் சேனன் தனதுரையில் புஷ்பராஜனுடன் தனக்கு எந்தவிதமான பழக்கமோ உறவோ இருந்ததில்லை என்றும் அது குறித்து மிகவும் மனம் வருந்துவதாக குறிப்பிட்டு அதற்கான காரணத்தை அங்குள்ள மற்றவர்கள் மீது சுமத்தினார். இதனை வெறும் நகைச்சுவையாகவே மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது. அப்படியே இருக்குமென்றும் நினைக்கின்றேன்.

தொடர்ந்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். வேறு பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம். இரவு உணவினை உட்கொண்டோம். போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.  விடை பெரும் தருணத்தில் அவரது ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத் தொகுதியில் அவரது அழகான கையெழுத்தினைப் பெற்றுக் கொண்டேன்.

விடை பெற்று திரும்பும் போது மனம் இலேசாக் கனத்தது. வீடு கூப்பிடு தூரத்திலேயே இருந்த படியால் நடையிலேயே திரும்பினேன். ஈஸ்ட்ஹாம் நகரசபை மண்டபத்தின் மணிக்க்கூண்டுக் கோபுரத்தில் அமைந்துள்ள அந்த பிரமாண்டமான கடிகாரம் மணி ஒன்பதாகி விட்டதை தெரிவித்தது. இனி வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் இந்த மனிதரைச் சந்திப்போமா என்று என் மனம் என்னையே கேட்டுக் கொண்டது. ‘மரணம் மட்டுமே துயரம் அல்ல’ என்று பௌசர் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை எதனையுமே சட்டை செய்யாமல் ஈஸ்ட்ஹாம் பெருந்தெருவானது சனிக்கிழமை மாலைக்கே உரிய பொலிவுடன் ஆரவாரமாக இயங்கிக் கொண்டிருந்தது.\

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here