கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, " உங்களை  அம்மாச்சியிடம்  அழைத்துச்செல்லப்போகின்றேன்" என்றார் நண்பர் கருணாகரன். " எங்கே..? " எனக்கேட்டேன்.  " அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?" என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து  கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது  அம்மாச்சி உணவகம்.  கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால்,  வெளியூர்களிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி  வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும்  அழைக்கிறாள்.

அந்த உணவகத்தின் பெயரையும் சிங்களத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை அரசு எத்தனிக்கிறது என்ற குற்றச்சாட்டை வடக்கு  முதல்வர் முன்வைத்திருக்கிறார். வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அம்மாச்சி உணவகத்தில் அன்று காலைப்பசியை போக்கியபோது புதிய அனுபவமும் கிட்டியது. அவ்வாறு ஒரு உணவகத்திற்கு அதற்கு முன்னர் சென்றிருக்காதமையினால்தான் அந்த புதிய அனுபம் என நினைக்கின்றேன். கொட்டகை ( Cottage)  வடிவில் அம்மாச்சி இயங்குவதனால்  அப்பம், தோசை, புட்டு, இடியப்பம், இட்டலி, வடை முதலான உணவு வகையறாக்கல் பரிமாறப்படும் அழகே அலாதியானது. அனைத்தையும்        ஒரு (கொட்டேஜில் )  கொட்டகையில் பெறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெண்கள் பொறுப்பாக இருந்து உடனுக்குடன் தருகிறார்கள்.    அங்கு   தனியாக காசாளரும் ( Cashier) இல்லை. யாரிடம் எதனைக்கேட்டுப்பெறுகின்றோமோ அவரிடமே அதற்கான பணத்தை தரல்வேண்டும். அதனாலும் இந்த  அம்மாச்சி வித்தியாசமானவள். தென்னிலங்கையிலிருந்து வரும் பெரும்பான்மை இனத்தவர்களையும் அம்மாச்சி பெரிதும் கவர்ந்திருக்கிறாள். அதனால்தான்போலும் இலங்கை அரசு இதற்குள்ளும் அரசியலை திணிக்கப்பார்க்கிறது. அம்மா, அம்மே, அம்மாச்சி எல்லாம் ஒன்றுதான். சில நாட்களுக்கு முன்னர் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் பிரஸன்ன விதானகேயும் இங்கு வந்து சென்றதாக கருணாகரன் சொன்னார். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் அவதானித்தேன். வழக்கமாக உணவுவிடுதிகளில்,  பொலித்தீன் பாவனைக்கு இருக்கும். உணவு பரிமாறும் தட்டத்தில் வெள்ளை நிறத்திலான  மெல்லிய பொலித்தீனை சுற்றி அதில் உணவு தருவார்கள். ஆனால், அம்மாச்சியில் அப்படி இல்லை.  பிரம்பினால் வடிவமைக்கப்பட்ட வட்டில்களில் சிறிய வாழை இலை வைத்து அதில் நாம் விரும்பிக்கேட்கும் உணவைத்தருகிறார்கள்.  இதன்மூலம் எமது பாரம்பரிய உணவு நாகரீகமும் பேணப்படுகிறது.  பொலித்தீனுக்கு அங்கு அனுமதி இல்லை. தேநீர் அல்லது கோப்பி கேட்டால், எமக்கு அவை கிடைக்காது. ஆனால்,  சில விதைகளினால் தயாரிக்கப்பட்ட சாயம்தான் அங்கு தேனீர். பருகிப்பார்த்தேன். சுவையாக இருந்தது.   வெளிநாடுகளில் பாவனைக்கு இருக்கும் Green Tea, Herbal Tea, Lemon Tea  வகையறாக்களைச்சார்ந்த உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தேநீர் அங்கு தரப்படுகிறது. அம்மாச்சி உணவகத்தில் சுத்தம் பேணப்படுகிறது. அதனால் அங்கு வருபவர்களின் ஆரோக்கியமும் பேணப்படுகிறது.

இலங்கையில் தற்பொழுது எங்கு திரும்பினாலும் உணவகங்களுக்கு மாத்திரம் குறைவில்லை. அத்துடன் McDonalds, KFC, Pizza Hut   பெருமளவில் தோன்றியிருக்கின்றன.  இவற்றினால் எமது ஆரோக்கியத்திற்கு என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான். இலங்கையிலும் வெளிநாடுகளைப்போன்று Fast Food நாகரீகம் தோன்றியிருப்பதனால், McDonalds, KFC, Pizza Hut   என்பன முளைத்திருக்கின்றன. இந்தப்பின்னணிகளுடன் கிளிநொச்சி அம்மாச்சியை பரவசத்துடன் ரசித்தேன். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் எம்மவர்கள்  தங்கள் குலதெய்வங்களான  அம்மாளாச்சிகளை தரிசிக்க செல்வது போன்று  ஒரு முறையாவது கிளிநொச்சி  அம்மாச்சியை தரிசித்து திரும்பலாம்.


கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்

அங்கு பணியாற்றும் பெண்கள் இன்முகத்துடனும் சுறுசுறுப்புடனும் இயங்குகிறார்கள். அவர்களுக்கும் சீருடை தரப்பட்டிருக்கிறது. தலைமுடி உணவில் உதிர்ந்துவிடாதிருக்க தொப்பியும் அணிந்திருக்கிறார்கள். வட  பிரதேசத்தில், எத்தனையோ  அம்மாளாச்சி கோயில்கள் இருக்கலாம். அங்கு வரம் கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம். அவரவர் நம்பிக்கையில் தங்கியிருக்கிறது. ஆனால், கிளிநொச்சி அம்மாச்சியிடத்தில் சுவையான,  அதே சமயம் ஆரோக்கியமான உணவு கிடைக்கும். இங்கு பொலித்தீன் பாவனையில் இல்லை என்று உவகையுடன் சொன்னாலும், அதனை இலங்கையில் தடை செய்வதற்கு  அரசு ஆலோசிப்பதனால்   சுமார் மூன்று இலட்சத்து  நாற்பத்தி ஐயாயிரம்  பேர்  தொழில் வாய்ப்பை  இழக்கவிருக்கிறார்கள் என்றசெய்தி வருத்தம் அளிக்கிறது. அவ்வாறே புகையிலைச்செய்கைக்கும்  ஆபத்து வரவிருக்கிறது.

ஒன்றை இழந்து மற்றும் ஒன்றை பெறவேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். 1990 களில் வெள்ளீய அச்சுக்கோப்பாளர்களின் வாழ்வுக்கு கணினி உலைவைத்தது. வீரகேசரி உட்பட பல பத்திரிகைகள் வெள்ளீய அச்சுக்களினால்தான் அச்சிடப்பட்டன. அச்சகங்களும் அதன் பயன்பாட்டில்தான் இயங்கி, திருமண அழைப்பிதழ் தொடக்கம் பிரசுரங்கள், நூல்கள், இதழ்களை வெளியிட்டன.  கணினியின் வருகையினால் பல அச்சுக்கோப்பாளர்கள் தமது வேலையை இழந்தனர். வேறு வேலைகளைத்தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இன்று அதுபற்றி பேசுவார் எவரும் இல்லை. அதுபோன்று பொலித்தீன் பாவனைக்கு தடைவந்தால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.  பல வெளிநாடுகளில் அஸ்பஸ்டஸ் உற்பத்தி தடைசெய்யப்பட்டது.  அதனாலும் மக்கள் வேலை இழந்தனர். பொலித்தீன் கழிவுப்பொருளாக மாறினால் அது மண்ணில் உக்கிப்போவதற்கு இரண்டு நூற்றாண்டுகள் செல்லும் என்கிறார்கள்.  பாண், அரிசி,  பால்மா,  உட்பட ஏராளமான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் பொலித்தீனில்தான் கிடைக்கின்றன. நான் வாழும் அவுஸ்திரேலியாவில், Coles, WoolWorth முதலான சுப்பர் மார்க்கட்டுகளில் பொருட்களை பொலித்தீன் பைகளில்தான் தருகிறார்கள். சிறிதுகாலத்திற்கு முன்னர் மக்களிடமிருந்து அதனை அந்நியப்படுத்துவதற்கு துணியிலான பைகளை அறிமுகப்படுத்தினார்கள். எனினும் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை. Aldi என்ற சுப்பர் மார்க்கட்டில் பொலித்தீன் பைகளில் பொருட்கள் தரப்படுவதில்லை. வாடிக்கையாளர்களே தம்முடன் பைகளை எடுத்துச்சென்று பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். இங்கு குறிப்பிடப்படும் சுப்பர் மார்க்கட்டுகளில் ஒரு டொலருக்கு இந்த துணியிலான பைகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுபோன்று இலங்கையிலும் துணியில்  பைகள்  தயாரிக்கும் தொழிற்சாலைகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தி அதற்கு ஊக்கமளிக்கவேண்டும்.

" பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று எமது முன்னோர்கள் சொல்லியிருப்பதை பின்பற்றுவோம்.



கிளிநொச்சியிலிருந்து வவுனியா வந்து எங்கள் ஊரைக்கடந்து செல்லும் கொழும்பு பஸ்ஸில் ஏறினேன். நண்பர் தம்பிஐயா தேவதாஸ்   தொலைபேசியில் அழைத்தார்.  கொழும்பில் அவரை சந்தித்தவேளையில் இலங்கை வானொலியில் தான் நடத்தும் விடியும் வேளை நிகழ்ச்சிக்கு வந்து நேர்காணல் தருமாறு கோரியிருந்தார். எனது வடபகுதி பயணவேலைகளில் அதனை முற்றாக மறந்திருந்தேன். அவர் எனது நீண்ட கால நண்பர். இலங்கையில்  நலிந்துபோன  தமிழ் திரைப்படத்துறை பற்றி நூல்கள் எழுதியிருப்பவர். இலங்கையில் வெளியான அனைத்து தமிழ்த்திரைப்படங்களும் எந்த தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடியிருக்கின்றன என்ற தகவலையும் துல்லியமாகச்சொல்லும்  ஆற்றல் மிக்கவர். ஆசிரியப்பணியிலிருந்த காலத்திலேயே இலக்கியப்பிரதிகளும் எழுதியிருப்பவர். கருணாசேன ஜயலத் எழுதிய கொளுஹதவத்த என்ற பிரபல நாவலை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். இந்தக்கதையை அதே பெயரில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கியிருக்கிறார். தம்பிஐயா தேவதாஸின் தமிழ் மொழிபெயர்ப்பை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.  கே. ஜயதிலக்கவின் மூன்று பாத்திரங்கள் என்ற நாவலையும் தமிழுக்கு தந்திருப்பவர்.

இவர், எழுதிய நூல்கள் சில:  இலங்கைத்தமிழ்ச்சினிமாவின் கதை, பொன்விழாக்கண்ட சிங்கள சினிமா, இலங்கை திரையுலக முன்னோடிகள், இலங்கை திரை உலக சாதனையாளர்கள், குத்துவிளக்கு - மீள் வாசிப்பு, இலங்கை திரை இசையின் கதை,  இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள். தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும், சிங்களப்பழமொழிகள், புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்பன  இவரது பிறநூல்கள். நீண்டகாலமாக இலங்கை வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும்  நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறார். எனது எழுத்துலக வாழ்வில் சமகால நண்பர். எனக்கிருக்கும் பயணங்கள் பற்றி அவரிடம் சொல்லி  அந்த நேர்காணலை தவிர்க்கவே பெரிதும் விரும்பினேன்.

" என்ன மச்சான் நான் கேட்டால் வரமாட்டாயா...? " என்று உரிமையுடன் அழைத்தார்.

கருணாகரனுக்கு நான் அண்ணாச்சி என்றால்,  தம்பிஐயா தேவதாஸிற்கு மச்சான். இலக்கிய வாழ்வில்தான் எத்தனை சொந்தங்கள்.

எங்கள் ஊருக்கு வந்துசேர்ந்ததும் இந்த வானொலிக்கலைஞருடன் தொடர்புகொண்டேன். அந்த நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி மறுநாள் காலை   7 மணி செய்திக்குப்பின்னர்  தொடங்குகிறது என்று சொல்லி அதிர்ச்சியை தந்தார்.

அப்படியாயின் அதிகாலையே எழுந்து கொழும்பு சென்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லவேண்டும். இந்த மச்சானை  என்ன செய்வது...?

மீண்டும் ஒரு அதிகாலை  எழும்படலம் தொடங்கியது.

(பயணங்கள் தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here