இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவமபர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
தினமணி.காம்
15 ஆண்டுகளுக்குப் பின் ஆங் சான் சூ கீ விடுதலை
மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கீ, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலுக்குப் பின்னர் சனிக்கிழமை (நவம்பர் 13) விடுதலை செய்யப்பட்டார்.  யாங்கூனில் உள்ள அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர். வீட்டின் வாசலுக்கு வந்த ஆங் சான் சூகி, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க மக்கள் அவரை வரவேற்றனர். தேசத் தந்தையின் மகள்: 1945 ஜூன் 19-ல் யாங்கூனில் பிறந்தார் ஆங் சான் சூ கீ. மியான்மரின் தேசத் தந்தையாகக் கருதப்படும் அவரது தந்தை ஆங் சான், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டிற்கு விடுதலைப் பெற்று தந்தார். ஆனால், அதே ஆண்டில் ராணுவ அதிகாரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கீ, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலுக்குப் பின்னர் சனிக்கிழமை (நவம்பர் 13) விடுதலை செய்யப்பட்டார்.  யாங்கூனில் உள்ள அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர். வீட்டின் வாசலுக்கு வந்த ஆங் சான் சூகி, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க மக்கள் அவரை வரவேற்றனர். தேசத் தந்தையின் மகள்: 1945 ஜூன் 19-ல் யாங்கூனில் பிறந்தார் ஆங் சான் சூ கீ. மியான்மரின் தேசத் தந்தையாகக் கருதப்படும் அவரது தந்தை ஆங் சான், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டிற்கு விடுதலைப் பெற்று தந்தார். ஆனால், அதே ஆண்டில் ராணுவ அதிகாரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஏதும் அறியாத குழந்தையாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் சூ கீ. அவரோடு பிறந்த 2 சகோதரர்களில் ஒருவர், சிறுவயதிலேயே ஏரியில் மூழ்கி இறந்து விட, மற்றொரு சகோதரர் ஆங் சான் ஓ, அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சூ கீ, பள்ளிப் படிப்பை யாங்கூனில் முடித்தார். 1960-ல் அவர் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1969-ல் ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்தில் தத்துவம்,அரசியல், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய அவர், ஐ.நா.  சபையில் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

பிரிட்டிஷ் மருமகள்: 1972-ல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை திருமணம் செய்தார். லண்டனில் குடியேறிய தம்பதியினருக்கு அலெக்சாண்டர் ஆரிஸ், கிம் ஆகிய 2 குழந்தைகள் பிறந்தன. அப்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார்.

அதன்பின்னர், இந்தியாவுக்கு வந்த அவர் சிம்லாவில் உள்ள ஐஐஏஎஸ் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்க 1988-ல் அவர் மியான்மருக்குத் திரும்பினார். அப்போதுதான் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவித்த மக்களை மீட்க, 1988 செப்டம்பர் 27-ல் தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி மகாத்மா காந்தியின் பாதையில் அஹிம்சை வழியில் போராடினார்.

அவரது எழுச்சியைத் தடுக்க திட்டமிட்ட ராணுவ ஆட்சியாளர்கள் 1989 ஜூலை 20-ல் அவரை வீட்டுக் காவலில் சிறைவைத்தனர். அவர் காவலில் இருக்கும்போதே 1990-ல் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சூ கீயின் கட்சி, 59 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால், அந்தத் தேர்தலை ரத்து செய்த ராணுவ ஆட்சியாளர்கள் சூ கீயை தொடர்ந்து வீட்டுக் காவலில் வைத்தனர்.அவரது எழுச்சியைத் தடுக்க திட்டமிட்ட ராணுவ ஆட்சியாளர்கள் 1989 ஜூலை 20-ல் அவரை வீட்டுக் காவலில் சிறைவைத்தனர். அவர் காவலில் இருக்கும்போதே 1990-ல் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சூ கீயின் கட்சி, 59 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால், அந்தத் தேர்தலை ரத்து செய்த ராணுவ ஆட்சியாளர்கள் சூ கீயை தொடர்ந்து வீட்டுக் காவலில் வைத்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு: அவரது ஜனநாயக சேவையைப் பாராட்டி 1990-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த நிதி மூலம் மியான்மர் மக்களின் சுகாதாரத்துக்கான அறக்கட்டளையை நிறுவினார்.

1996-ல் அவர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் சென்ற கார் அணிவகுப்பின் மீது 200-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர். இதில் சூ கீயின் ஆதரவாளர்கள் 70 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். 1999-ல் லண்டனில் அவரது கணவர் உயிரிழந்தபோது, இறுதிச் சடங்கில் பங்கேற்ககூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், ஐ.நா. சபையின் முயற்சியால் 2002-ல் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

விடுதலையும், வீட்டுக் காவலும் அடுத்தடுத்து தொடர்ந்தன.சுமார் 21 ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயகம் மலர போராடி வரும் அவர், 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்துள்ளார்.

பொதுத் தேர்தல்: அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்து கடந்த ஆண்டே அவர் விடுதலைச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அவரது வீட்டுக்கு ஏரி வழியாக நீந்திச் சென்ற அமெரிக்கரை சந்தித்ததற்காக மீண்டும் 18 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவரது காவல் நவம்பர் 13-ல் முடிவடைய இருந்தநிலையில், நவம்பர் 7-ல் அங்கு பொதுத் தேர்தலை நடத்தி ராணுவ ஆட்சிக்கு சாதகமான கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ கீ தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. அவரது கட்சியும் தேர்தலைப் புறக்கணித்தது.

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ராணுவத்துக்கு சாதகமான ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆங் சான் சூ கீயை ராணுவ ஆட்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர். 65 வயதாகும் அவர் மீண்டும் அரசியலில் வலம் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது உலகமே, சூ கீயின் உதட்டசைவுக்காக காத்திருக்கிறது.

நன்றி:  தினமணி-

 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்