தனது
பத்தாவது வயதில் எழுத்துலகில் காலடி வைத்த வ.ந.கிரிதரன் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தற்போது தொராண்டோ, கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஈழநாடு
சிறுவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவர். முதலாவது கவிதையான 'பொங்கலோ பொங்கல்'
சுதந்திரனில் வெளிவந்துள்ளது. அதன் பின் இவரது சிறுவர் கால ஆக்கங்கள் பல வெற்றிமணி, சுதந்திரன்,
சிரித்திரனின் 'கண்மணி', மற்றும் சிரித்திரனில் வெளிவந்திருக்கின்றன. இவர் ஏழாம் வகுப்பில்
இருந்த பொழுது அகில இலங்கைத் தமிழ்த் தின விழாக் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையிலேயே
முதலாவதாக வந்துள்ளார். ஆரம்பகாலக் கவிதைகள் பல வீரகேசரி, ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி,
தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது முதலாவது
சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்
பட்ட கதைகளில் ஒன்றாக வெளிவந்தது. அப்பொழுது வயது 17. அதன் பின் இவரது ஆரம்பகாலச் சிறுகதைகள்
சில ஈழநாடு, தினகரன் ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு',
'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு
மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன.
மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப்
பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும்
(இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள்
பெற்றுள்ளார். மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார்.
இதுவரையில் இவரது ஐந்து நூல்கள்
வெளிவந்துள்ளன. சிறுகதைகள் மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலை உள்ளடக்கிய தொகுதியான 'அமெரிக்கா'
தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'
ஆய்வு நூலும் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கனடாவில் 'மங்கை பதிப்பக'
வெளியீடுகளாக 'மண்ணின் குரல்' (கனடாவில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல்),'எழுக அதி
மானுடா (கவிதைத் தொகுதி) ஆகியன வெளிவந்துள்ளன. 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின்
காதலும்'. 'கணங்களும் குணங்களும்' (இவை 'தாயகத்தில்' தொடராக வெளிவந்தவை), 'மண்ணின் குரல்'
ஆகியவற்றின் தொகுதி தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் தலைப்பில்
வெளிவந்துள்ளது. இவரது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்திலிருந்து வெளிவந்த
'பனியும் பனையும்' தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்'
சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் அவர்களது தமிழ்ப் பாடத்திட்டமொன்றில் சேர்க்கப் பட்டுள்ளது. 'சுலேகா.காம்'
இல் இவரது இரு சிறுகதைகள் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டவை) இடம்பெற்றுள்ளன. தொராண்டோவில்
ஒரு சில இதழ்களே வெளிவந்த 'இரவி' மற்றும் 'கல்வி' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான இவர்
தொரண்டோவில் ஆரம்ப காலத்தில் 'குரல்' என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் வெளியிட்டவர்.
அத்துடன் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் 'நமது பூமி' என்றொரு செய்திக் கடிதத்தினையும் (News Letter),
'கணினி உலகம்' என்றொரு நியூஸ் லெட்டரையும் வெளியிட்டவர். இவையும் ஒரு சில இதழ்களே வெளிவந்தன.
கனடாவுக்குப்
புலம் பெயர்ந்த பின் இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள்,
கவிதைகள்,
கட்டுரைகள்
ஆகியன) 'தாயகம்', 'தேடல்', 'கணையாழி', 'துளிர்', 'சுவடுகள்', 'உயிர் நிழல்',
'ஆனந்த விகடன்', 'சுபமங்களா' மற்றும் இணைய இதழ்களான 'திண்ணை','அம்பலம்','ஆறாந்திணை',
'மானசரோவர்.காம்'....ஆகியவற்றில்
வெளிவந்திருக்கின்றன. 'ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்','பிரபஞ்ச ஆய்வு', 'திராவிடக் கட்டடக்கலை'
பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் வீரகேசரி, கணையாழி, திண்ணை போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.
'மரபும் கவிதையும்', 'வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்' ஆகிய தொடர்கள் மற்றும் 'பாரதியின்
படைப்புகள்' பற்றிய கட்டுரைகள் 'தாயகம்' இதழில் வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியம் சம்பந்தமான
பல்வேறு விமரிசனக் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. 2000ம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்'
இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார். திண்ணை, பதிவுகள் போன்றவற்றில்
நடைபெறும் விவாதங்கள் பலவற்றில் ஜீவன் கந்தையா, திண்ணை தூங்கி, டிசெதமிழன் ஜெயமோகனுட்படப்
பலருடன் தீவிரமாகப் பங்கு பற்றி வருபவர். திண்ணை மற்றும் பதிவுகளில் தீவிரமாக விவாதிக்கப்
பட்ட 'ஜெயமோகனின் விஷ்ணுபுரம்', 'மு.தளையசிங்கத்தின் நிலைப்பாடு', 'தீண்டாமை', மற்றும் பல்வேறு
இலக்கியம் சம்பந்தமான நடைபெற்ற/நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவை. அண்மைக்காலமாக இடம்பெற்று
வரும் ஆபிதீன்/சாரு நிவேதிதா பற்றிய விவாதங்களும் முக்கியமானவை. ஈழத்தின் முற்போக்கு இலக்கிய
முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி
வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள்.
பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள்
பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால்
ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும்
பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.
சீதாக்கா!
-வ.ந.கிரிதரன் -
இன்னும்
இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர்
தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது.
மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ
ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச்
சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்..உள்ளே
இருப்பதிகாரம்
- வ.ந.கிரிதரன்
-
நிலை மண்டில ஆசிரியப்பா!
வானினை
நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை
உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத்
தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்....உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு
அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-
நவீன
பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள்
பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல.
பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச்
சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை...உள்ளே
வ.ந.கிரிதரன் (ஆங்கிலம்)...உள்ளே
மீள்பிரசுரம்:
திண்ணை.காமிலிருந்து.
குறிப்பேட்டுப் பதிவுகள்......
- வ.ந.கிரிதரன் -
அண்மையில்
நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக்
கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று
அகப்பட்டது. ... மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப்
பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக்
காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை
இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் முதலாவது பதிவு. காதல்,
அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை....உள்ளே
வ.ந.கிரிதரனின்
27 சிறுகதைகள்!
இம்முறை ஒரு பதிவுக்காக பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, ஆனந்தவிகடன்,
மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது
சிறுகதைகளை வாசகர்களுக்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இதில் பல சிறுகதைகள்
புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும்
சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. -...உள்ளே
வ.ந.கிரிதரனின் 19 கட்டுரைகள்!
1. அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்! -வ.ந.கிரிதரன்-
அவ்வப்போது
திண்ணை, பதிவுகள், ஆறாந்திணை, தேடல், சுபமங்களா, கணையாழி, வீரகேசரி,
தாயகம் போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில்
வெளிவந்த கட்டுரைகளில் பதினெட்டினையும், நல்லூர் ராஜதானி நகர அமைப்பு
ஆய்வினையும் ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்யுமொரு முயற்சியிது.
இங்குள்ள கட்டுரைகளின் பொருள் அறிவியல், இலக்கியம், வரலாறு,
கட்டடக்கலை, விமரிசனமெனப் பரந்தது. பயனுள்ளதாக விருக்குமென்பதென்
கருத்து..உள்ளே
வ.ந.கிரிதரன் கவிதைகள் 32...உள்ளே
நாவல்: அமெரிக்கா.....உள்ளே
Fractured Self: A Study of V.N.
Giritharan’s Selected Short Stories!
-
A dissertation submitted to the University of Madras in partial
fulfilment of the requirements for the award of the degree of Master
of Philosophy in English Under Choice Based Credit System By M.
Durairaj
Department of English, University of Madras...Read
More
'Seeking
The Invisible Humanness in an Alien Land’
A review of the Diasporic issues as revealed through the selected
Short stories of V.N. Giridharan - By R. Dharani, Lecturer,
Dept. of English, PSG College of Arts & Science, Coimbatore – 641
014., Tamil Nadu, India...Read
More எனது நூல்கள்....
   
|
|