இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர்  2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!
‘த டச்சஸ்’- The Duchess (சீமாட்டி)

-ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -


த டச்சஸ்’- the Duchess (சீமாட்டி) ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ’ குடும்ப அடக்கு’ முறையை எதிர்த்த பழையகாலப் பிரபுத்துவ (மறைந்து விட்ட இளவரசி டையானாவின் பழைய தலைமுறை) பெண்ணைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு சினிமா. 18ம் நூற்றாண்டின் சரித்திரத்தில் இடம் பெற்ற, இளவரசி டையானாவின் மூத்த தலை முறைப் பாட்டியின் கதை ‘த டச்சஸ்’(சீமாட்டி)) என்ற பெயரில் படமாக்கப் பட்டுத் திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் திரையிடப்பட்ட இப்படம் பல தரப்பட்ட விவாதங்களை முன்னெடுக்கப் படுகின்றன.

‘த டச்சஸ் ஒவ் டெவன்சையார்’ என்ற பிரபலமான புத்தகம் திரைப்; படமாக்கப் பட்டிருக்கிறது. பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டீருக்கிறனவா என்ற கேள்வி நெருடுகிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படம் எடுக்கும் பிரித்தானிய் படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நடுநிலமையிலிருந்த சரித்திரத்தைப் பார்ப்பது புரிகிறது.

‘அதர் போலின் கேர்ல்ஸ்’ என்ற பெயரில் இரு மாதங்களுக்கு முன் வந்த படம், மாவரசர் எட்டாவது ஹென்றியின் இரண்டாவது மனைவியும, ஹென்றியால் தயை வெட்டப்பட்ட ஆன் பொலின்) அவரது சகோதரி மேரியையும் பற்றியது. ஆரச குடும்பங்கள் தங்கள் கிரிடங்களையும், அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்ள என்எனன் செய்வார்கள் , அந்த சூதுவிளையாட்டில் பெண்கள் எப்படிப் பாவிக்கப் படுகிறார்கள் என்பதை யதார்த்தமாகக் காட்டிய படம் அது.

கடந்த சில வருடங்களாகப் பிரித்தானிய அரச குடும்பங்களைப்பற்றிய சினிமாப்படங்கள், முக்கியமாக,பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றங்களையுண்டாக்கிய பெண்களைப்பற்றிய படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

த டச்சஸ்’- the Duchess (சீமாட்டி)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கான விதையை விதைத்தவர் என்று கூறப்படும் முதலாவது எலிசபெத் மகாராணியாரைப்பற்றி எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அண்மையில் வந்த இரு படங்கள் சேகர் கபூர் அவர்களால் ( இந்தியாவின் தலித் மக்களின் வாழ்க்கையோடு சமபந்தப்பட்ட பூலாந்தேவி பற்றி ‘த பண்டிட் குயின’; என்ற பெயரிற் படம் எடுத்தவர்) படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தில்’ கன்னிப் பேரரசி’ என்று கருதப்பட்ட முதலாவது எலிசபெத் மகாராணியாரின் ‘அந்தரங்க’ விடயங்கள் தவிர்க்கப்பட்டு, இங்கிலாந்தை ஒரு உலக வல்லரசாக வலம்வர எலிசபெத் எடத்த திட்டங்கள்,தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இந்தப் படங்கள், ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் வெள்ளையின மக்களுக்கு பிரி;த்தானியப் பேரரசின் பழைய மேம்பாடுகள்,பாரம்பரியம், புதிய முறையில் சொல்லப் படுகின்றனவா என்று பல புத்திஜீவிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குறிப்பிட்ட கால கட்டங்களில் சில பெண்கள் சில மாற்றங்களைச் செய்யத் துணிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லப் பல பெண்கள் ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். அவர்களின் எழுத்துக்கள் புதிய கண்ணோட்டத்தையுண்டாக்கும் படங்கள் படைக்கக் காரணிகளாகின்றன.

இப்படத்தைத் தயாரித்தவர் வேண்டுமென்றே, மறைந்து போன இளவரசி டையானாவின் வாழ்க்கையைப் புதிய வடிவில் படமாகத் தயாரித்திருக்கிறாரா என்ற கேள்வியைப் பலர் கேட்கிறார்கள். இளவரசியின் தலைமுறைப் பிரபுத்துவக் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப் பாட்டியான ஜோர்ஜியானா(1754-1806) என்பவரின் வாழ்க்கைச்சரித்திரம்;, கிட்டத்தட்ட டையானாவின் வாழ்க்கைச்சரித்திரம் மாதிரியானதாகும். யாரோ ஒருத்தர் வாழ்க்கைபோல் இன்னொருத்தர் வாழ்க்கையும் இருப்பது தவிர்கக மடியாது. அதிலும், எத்தனையோ தலைமுறைக்குப்பின் நடந்த டையானாவின் கதைக்கும் என்றே நடந்த ஜோர்ஜியானாவின் கதைக்கும் ஏதோ ஒரு வித்தில் தொடர்பு இருந்தால் அதைப் பரம்பரைத் தொடர்பு என்று பார்க்காமல் சந்தாப்;ப வசத்தால் ஒரே மாதிரியாக அமைந்து விட்ட வாழ்க்கைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு வயதுக்கு மூத்தவரான இளவரசர் சார்ல்ஸை அரச குடும்ப நெருக்கடியால் இளவரசி டையானா இளவயதில் திருமணம் செய்ய நேரிட்டதுபோல், மிகவும் இளவயதில்,ஆண் வாரிசுக்காகப் பெண்தேடும் நிலப்பிரபுத்துவரை மணம்(1774) செய்கிறாள்; பேரழகியான ஜோர்ஜியானா.

டையானாவைச் செய்யமுதல்,இளவரசர் சார்ள்ஸ}க்குப் பல தொடர்புகள் இருந்ததுபோல் ஜோர்ஜியானாவைச் செய்த அந்தப் பிரபுக்குஏற்கனவே பல பெண்களின் தொடர்புண்டு. ஜோர்ஜியானா திருமணம் செய்து வீட்டுக்கு வந்துவுடனேயே, பிரபுவின் இறந்துபோன வைப்பாட்டியின் குழந்தையைப் பரிபாலிக்கும் கடமை ஜேர்ஜியானாவுக்குக் கொடுக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்ட ஜோர்ஜியானபவுக்கு’ இந்த வீட்டில் நிறைய இடமுள்ளது, அந்தக் குழந்தை வளருவதால் உனக்கு ஒன்றும் கெட்டுவிடாது’ என்று அவள் கணவா ;அதட்டி விடுகிறார்.

ஜோர்ஜியானாவுக்கு ஆண்குழந்தை பிறக்காமல் பெண்குழந்தைகளே பிறக்கின்றன. அதனால் ஜோர்ஜியாவின் கணவர் அதிருப்தியாகவிருக்கிறார். ‘காதலற்ற’ திருமணத்தில் சலிப்படைகிறாள் ஜோர்ஜயானா. சீமாட்டிகளின் பொழுதுபோக்கான சீட்டாடுதல், நடன விழாக்களுக்குப்போதல் என்று ஜோர்ஜியானா அலைகிறாள்;. பிரபுக்கள் வட்டத்தில் மிகவும் பேரழியாகவும், அழகான உடுப்புக்களுக்கும் அலங்காரங்களுக்கும் பெயர் பெற்ற ஜோர்ஜியானாவைப் பார்ப்பதற்கென்றே,பத்திரிகையாளர்களும்,பிரபுத்துவ மட்டக் கூட்டங்களும் அலைமோதுகின்றன.

பிரபுத்தவ வட்டத்திலுள்ள சார்ல்ஸ் கிரேய் என்பர் ஜோர்ஜியானாவை, அவளது திருமணத்துக்கு முன்பேயே விரும்புகிறார்.ஆனால் ஜோர்ஜியானா ‘டெவன்சயர் பிரபுவைச்’ செய்ய நிச்சயம் செய்யப்பட்டதால்; அவர் தனது காதலை வெளிப்படுத்தவில்லை.
அதே கால காட்டத்தில், கணவனால் துன்பப் படுத்தப் படும் எலிசபெத் என்ற சீமாட்டியின் தொடர்பு ஜோர்ஜியானாவுக்குக் கிடைக்கிறது;. கணவனுடன் பிரச்சினை பட்ட எலிசபெத் என்ற பெண், மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயானவள் இருக்க இடமற்றுக் கஷ்டப்பட்டபோது, அவளைத் தன வீட்டில் வைத்திருக்கக் கணவரிடம் அனமதி பெறுகிறாhள். ஜோர்ஜியானாவும், எலிசபெத்தும் ஒரேவீட்டில் மிகவும் சினேகிதமாகவிருக்கிறார்கள்.

எலிபெத்துக்கு,ஜோர்ஜியானாவின் உப்புச்சப்பற்ற வாழ்க்கை புரிகிறது. ஜோர்ஜியானாவில் ஒரு கண் வைத்திருக்கும் இளம் பிரபு சார்ல்சுசடன் ஜோர்ஜியானா தொடர்பு வைத்துக்கொள்ள எலிசபெத் உதவுகிறாள்.

பிரபுக்களின் ;ஆதிக்கத்துக்குள் வந்த பெண்கள் பிரபுக்களின்’பாவிப்புப் பொருட்கள்’ என்பதைப் பிரபு நிலைநாட்டுகிறார். ஜோர்ஜியானாவால் வீட்டுக்குள் நுழைந்த எலிசபெத், ஜோர்ஜியானாவின் வைப்பாட்டியாகிறாள். அதை எதிர்த்த ஜோர்ஜியானா அவளது கணவரால் பாலியல் கொடுமைக்காளாகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது.

ஜேர்ர்ஜியானாவின் கணவரான டெவன்சயர் பிரபு, எலிசபெத்தை அவர்கள் வீட்டிலேயே வைப்பாட்டியாக வைத்திருக்கிறார்.ஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்ஸ் கிரேயைச் சந்திப்பது பிரபுக்கள் வட்டத்தில் வதந்தியாகப் பரவுகிறது. அந்த உறவை உடனடியாக கைவிடச்சொல்லி ஆணையிடுகிறார் பிரபு. சார்ல்சைப் பார்கவும் பழகவும் தனக்கு உரிமை தரவேண்டும அல்லது தான் பிரபுவை விவாகரத்து செய்வேன் என்று வாதாடுகிறாள் ஜோர்ஜியானா. பிரபு மறுக்கிறார். அப்படியான உறவுகள் சார்ல்சுடன் தொடர்ந்தால்,ஜோர்ஜியானா வீட்டை விட்டுத் துரத்தப் படுவாள் என்றும், அவளின் குழந்தைகளைப் பார்க்க அவளுக்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காது என்றும் கட்டளையிடுகிறார்.அத்துடன், இளைஞனான சார்ல்ஸ் கிரேயின் எதிர்காலம் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப் படும்,சார்ல்சின் பாராளுமனறக்கனவு தவுடு பொடியாகும் என்றும் மிரட்டுகிறார்.

ஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்சின் குழந்தை தன் வயிற்றில வளர்வதாகச் சொல்கிறாள். குழந்தையை அழிக்கச் சொலகிறார் பிரபு ஜோர்ஜியானா மறுக்கிறாள. ஜோர்hஜியானா குழந்தை பிரசவத்துக்குப் பிரான்சுக்கு அனுப்பப் படுகிறாள. எலிசபெத்தும் துணைபோகிறாள்.;
ஜோர்ஜியானாவுக்குக் குழந்தை பிறக்கிறது; சார்ல்சின் தகப்பன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாh. அக்குழந்தை,சார்ல்சின் சகோதரியின் குழந்தை எலிசா ;(1791-1859) என்ற பெயரில் வளர்கிறது.

சுர்ல்ஸ் கிரேய், தனது உறவுச் சீமாட்டி ஒருத்தரைத் திருமணம் செய்கிறார். ஜோர்ஜியானாதனது 52வது வயதில் மரணமடைகிறாள். சுhர்ல்ஸ் கிரேய் இங்கிலாந்தின் பிரதமராகிறார். 1833ல் இங்கிலாந்து பிரபுக்களின் கையிலிருந்த அடிமை வியாபாரம் சார்ல்ஸ் கிரேயால் ஒழிக்கப் படுகிறது;.

இப்படம், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம் உச்ச கட்டத்திலிருக்கும்போது நடந்த கதை. இக்கதையில், பெண்கள் தங்கள்கணவனின் சொத்தாகவே மதிக்கப்படுகிறாள், பெருவிரலுக்கு அளவான தடியால்த் தனது மனைவியை அடிக்கக் கணவருக்கு உரிமையுண்டு, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை நிர்ணயிப்பவர் கணவரே என்றிருந்த பல பரம்பரைச் சட்டங்களை மீறுகிறாள் ஜோர்ஜியானா.; இப்படத்தில் தனது குழந்தைக்குதுத் தான்தான் பால் கொடுப்பேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறாள் ஜோர்ஜியானா. வசதியுள்ள கணவன் எத்தனை வைப்பாட்டியையும் வைத்திருக்கலாம் என்ற நிலைப்பாடு அன்றைக்குப் பிரித்தானியாவின் வழக்கத்தில் இருந்ததபோல் இன்று பல நாடுகளிலும் வழக்கில் உண்டு. குடும்ப கவுரவும் என்று பேர்வைக்குள் இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இதற்கு எதிராகப்போர் தொடுத்துத் தோல்வியடைகிறாள் ஜோர்ஜியானா.

குடும்ப வாழ்க்கைக்கப்பால் அரசியலில் ஈடுபடுவது குறிப்பிடப்படுகிறது. சார்ல்ஸின் பாராளுமன்றத் தேர்தல்காலத்தில் (1784)சார்ல்ஸ}க்காக ஜோர்ஜியானா பிரசாரம் செய்தது குறிப்பிடப்படுகிறது;. உலக நாடுகளையும் பல்லின மக்களையும் அடிமைகளாக வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவை இழந்த காலத்தில் இந்தக்காதல் கதை உருவாகியிருக்கிது. அத்துடன் அதே கால கட்டத்தில் பிரான்சிய புரட்சியும் நடந்திருக்கிறது வரலாற்றின்படி, ஜோர்ஜியானா, பிரான்சிய அரசி மாரியா அன்ரோனட்டுடன் தொடர்பு வைத்திருநத்தும், அவளின் காதலர் சார்ள்ஸ் கிரேய் பிரான்சிய புரட்சியில் சம்பந்தப்பட்டதும் தெரிகிறது. இவர்கள் பிரபுக்கள் வட்டத்தைச் சோந்தவர்கள் என்ற படியால் பிரானஸ்; அரச குடும்பத்தினரின் நனமயைக் கருத்தில் வைத்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், பாராளுமன்றத்துக்க வந்ததும் சார்ள் கிரேய் (அன்றைய கால கட்டத்தில் லிபரல் கட்சியாக மாற்றமடைந்த கட்சியொன்றில் இருந்தவர்) பிரித்தானிய பொருளாதாரத்தின் அடிப்படையாயிருந்த ‘ அடிமைத்’ தனத்தை ஒழிக்கிறார்.; பிரான்சிய புரட்சி, அமெரிக்கச் சுதந்திரப் போர் என்பன, அன்றைய கால கட்டத்தில வாழ்ந்த சாதாரண மக்களின் சுதந்திர சிந்தனையை மாற்றியதுபோல், கணவனால் துன்புறுத்தப் பட்ட சீமாட்டி எலிசபெத்துக்குரல் கொடுக்கவும், அரசியல் பிரசாரம் செய்யவும், தனக்குப் பிடித்தவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஜோர்ஜியானா போராடியதற்கும் எந்த வித்தில் உதவியிருக்கும் என்பது கேள்விக்குறியாகவிருக்கிறது.

கடந்த சில தாசாப்தங்களாகப் பிரித்தானிய சமூகவாழ்க்கை மாறினாலும் அரச குடும்ப வாழ்க்கை மாறாமலிருந்தது. இறுக்கமான’ மேல்மட்ட அரச குடும்பத்தில்’ இருந்து வராமல், தகப்பனிடமிருந்து விவாகரத்து செய்த தாயை அடிக்கடி காணாத துயருடன் வாழ்ந்த டையானா இளவரசர் சார்ள்ஸைத் திருமயணம் செய்ததும் பிரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்தன.

ஜோர்ஜியானா மாதிரி , அன்புக்கு ஏங்கிய டையானாவைப் பொது மக்கள் வரவேற்றனா. பிpரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடக்க மறைந்துவிட்ட இளவரசி டையானாவின் போக்குகள் உறுதுணையாயிருந்தன. அரச குடும்ப அங்கத்தவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற வரைமுறையைத் தூக்கியெறிந்தவர் டையானா. பொதுமக்களுடன் சாதாரண உறவுகளைத் தொடர்ந்தவர். மிதிகண்ணிவெடிகளுக்கெதிரான போராட்டத்தை உலகமயப்படுத்தியவர். அதனால், ஆயுத உற்பத்தியாளாகளின் ஆத்திரத்தை வாங்கிக் கட்டியவர். இங்கிலாந்து அரச குடுமப் வரைமுறைகளைத்தாண்டி இஸ்லாமியரைக்காதலித்தவர்.

இப்படம் பிரித்தானிய அரச பரம்பரையின் ஆண்கள், அதாவது, ஆதிக்கமுள்ளவர்கள் எப்படித் தங்களைச் சார்ந்தவர்களைப் பாவிப்பார்கள் என்பதை யதார்த்தமாகப் படம் பிடித்திருத்திருக்கிறது. பெண்கள் தங்கள் ‘சுயமையை’ நிலைநாட்டப் போராடும்போது, அவர்களுக்கெதிரான ஆயதங்களாக என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்படும் என்று சொல்லப் படுகிறது;. இன்று, பொருளாதார ரீதியில், ஓரளவு சமத்துவத்தை அனுபவிக்கும் பெண்கள் ‘குடும்பம்’ என்று வரும்போதும், சமுதாயத்தில், தாங்கள் சரியானது என்று நினைப்பதைச் செயற் படுத்த முயலும்போதும் ஆதிக்கமுள்ள ஆண்களால் அன்று கொடுமையாக நடத்தப் பட்ட’ ஜோர்ஜியானா’வாகத்தான் நடத்தப் படுகிறார்கள். ஜோர்ஜியானா,அன்று (1784), தான் சரியென நினைத்த அரசியல் கருத்தை (லிபரல் கருத்துக்கள்) ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்தபோது, பிற்போக்குப் பத்திரிகைகள் கண்டபாட்டுக்கு எழுதின.

பொருளாதார ரீதியில் உழைக்கவும், மேற்படிப்புகளில் திறமைகளைக்காட்டவும் வசதியுள்ள வாழ்க்கையமைப்பை இன்று பெண்கள் அனுபவிக்கிறார்கள். இவை உண்மையான’ விடுதலையா’என்று கேட்டால் பதில் ‘இல்லை’ என்றுதான் வரும். ஏனென்றால் ‘ சுதந்திரம்’ என்ற பெயரில் மற்றவர்களின் சுதந்திரத்தை, கவுரவத்தை, சமுதாய நலனை நாசம் பண்ணும் வக்கிரம் ஆண்களால் இன்னும் வளர்கிறது;. தங்கள் ஆயதங்களாகச் சிலர் பத்திரிகைகளைப் பாவிக்கிறார்கள். இளவரசி டையானாவின் வாழ்க்கையில் பத்திரிகைகள் என்ன செய்தார்கள் என்பதும் தெரியும். டையானாவின் வாழ்க்கை முடீவுக்கும் அவர்கள் காரணிகளாக இருந்தார்கள்.

ஜோர்ஜியானாவின் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதிய அமன்தா பேர்மன், அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த ‘சுதந்திரமற்ற’ மேல்மட்ட பெண்களையும், தங்களின் ‘ சுயமையை’ நிலைநாட்டப் போராடிய பெண்களையும் பார்வையாளர்கள் முன் நிறுத்துகிறார். இப்படியான அடக்கு முறையை வைத்திருந்த பிரித்தானிய பரம்பரை மாறிவிட்டது. ஜோர்ஜியானா வாழ்ந்த கால கட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. பணக்காரரின் சொத்துக்களாகத்தான் நடத்தப் பட்டார்கள்.

ஆனால், அன்று ஜோர்ஜியானா, குடும்ப அமைப்பில் பெண்களுக்குச் சமத்துவம் கேட்டு முன்னெடுத்த போராட்டம் பல தலை முறைகளுக்குப்பின் பல தரப்பட்ட போராட்டங்களுக்குப்பின வெற்றி கண்டிருக்கிறது. ஆன்றைய கால கட்டத்தில் ஆதிக்கத்திலிருந்த ஆண்களுக்காக வாக்குக் கேட்டுப் பிரசாரம் செய்கிறார் ஜோர்ஜியானா. இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் அதன்பின் இருநூறு வருடங்களுக்குப்பின்தான் ஆரம்பமாகியது. பிரபுக்கள் வாழ்க்கையின் ஒருபகுதி மட்டுமே இப்படத்தில் பிரதிபலிக்கப் படுகிறது. ஆடிமை வியாபாரம், ஆதிக்க பரவலாக்கல் அதில் அழிந்த கோடிக்கணக்கான கறுப்பு இன மக்கள் பற்றி எதுவும் கிடையாது. அக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் மிகவும் பெரிய பணக்காரர்களாக- டியுக் ஒவ் டெவன்யசர் மாதிரியாக இருந்தவர்கள் நிலப் பிரபுக்களே.
பிரித்தானிய பிரபுக்கள் குடும்ப வாழ்க்கையமைப்பு, அன்றைய பெண்களின் அலங்காரங்கள், ஒரு சில அழகிய பிரிட்டிஸ் மாளிகைகள் என்பனவற்றைப்; பார்க்க விரும்புவர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாகவிருக்கும்.

rajesmaniam@hotmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner