இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்!

_ சுப்ரபாரதிமணியன் -

ஆப்ரிக்க திரைப்பட உலகின் மிக முக்யமான இயக்குனராக ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோவின் சமீபத்திய "பமாகோ" என்றத் திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம் என்பதற்கு அத்தாட்சியாக 'பமாகோ' படம் வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண் முற்றத்தை அலட்சியமாக பார்த்துக் கிடக்கிறாள். அந்த முற்றத்தில் ஒரு நீதிமன்றம் கூடியிருக்கிறது. இரண்டு தரப்பிலான வழக்கறிஞர்கள் அங்கு நீதிமன்றப் பணியில் இருக்கிறார்கள். உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. சில வழக்கறிஞர்களால் ஆப்ரிக்காவின் சுய தன்மையைப் பாழாக்கி அதை ஒரு நவகாலனிய நாடாக்குவதில் இந்த் நிறுவனங்கள் நிணுக்கமாக எப்படிச் செயல்படுகின்றன என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த நிறுவனங்களின் சார்பிலும் சில வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். புலம்பெயர்தல் ஆப்ரிக்காவில் சாதாரணமாகி விட்டது. சகாராவில் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வி, உடல் நலத்திற்கு நிறைய நிதிகள். அரசு கல்வி கொடுத்தபின் எதற்கு வெளிநாடு போகிறாய் என்ற கேள்விகள். உலகமயமாக்கலின் நாகரீகம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவன் பாட்டு மூலம் தனது மனக் குறையை வெளிப்படுத்துகிறான். இன்னொருவன் விசாரணைக்கு வந்து நின்று பேச எதுவுமில்லாததாக மௌனமாகவே இருக்கிறான். அதீத மனிதத் தன்மையில் பல விடங்கள் நடப்பதாய் தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. உயர்ந்தபட்ச தங்கம் கிடைக்கும் நாடு. ஆனால்யாரும் தங்கம் அணிவதில்லை. நீக்ரோக்கள் சோம்பேறிகள் என்றி குற்றம் சாட்டப்படுகிறார்கள். நீதிமன்றம் நடக்கும் முற்றத்தை தாண்டி சுற்றுச்சுவருக்கு வெளியே இந்த வாதங்களைக் கேட்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சாவகாசமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதப்பிரச்சாரம் நடக்கிறது. வžகரமான வாதங்கள். மரங்கள் முக்யம் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தை நடத்த மரங்கள் எதற்கு . உற்பத்திப் பொருள்போதும். உடையின் பின்புற ஊக்கை போடச்சொல்லி ஒருபெண் நீதிமன்றத்தில் இருப்பவனிடம் கேட்கிறாள். பொருளாதார மேம்பாடு யார்பொருட்டு என்ற விவாதம் கிளம்புகிறது. திருவ ஜஸ்கட்டிகள் உருகுகின்றது என்பதும் விவாதமாகிறது. எய்ட்ஸ் வியாதிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கடன் நாட்டைச் சீரழித்துவிட்டது. ஆப்ரிக்கா அடிமை தேசமாகிக் கொண்டிருக்கிறது. உலகவங்கியின் மேல்குற்றம் சட்டப்படுகிறது. அவர்கள் இல்லாவிட்டால் எல்லோரும் பிச்சைக்காரர்களாகி இருப்பார்கள் என்கிறது ஒரு குழு. இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது பிசாசிடம் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்றது. கடன் பிசாசிடம் நாடு திணறுகிறது. இருப்புப்பாதை மூடப்படுவதால் தோடர்பற்றுப் போவிட்ட
ஒரு கிராமத்தைப் பற்றி ஒரு பெண் சொல்கிறாள். ஆப்ரிக்காவில் திட்டமிடப்பட்டு இருப்புப் பாதைகள் அழிக்கப்படுவது மக்களை
அந்நியமாக்குகிறது என்ற வேதனை ஒரு பெண் பிரதானமாய் பகிர்ந்து கொள்கிறாள். அப்ரிக்காவின் வறுமைத்தோய்ந்த நிலை
அவசரப்பட்டு உலகவங்கி போன்றவை குற்றவாளிகளாக்கப் படுகின்றன. மாலி புறநகர் பகுதியின் ஒரு வீட்டு முற்றத்தில் நடக்கும் இந்த நீதிமன்றம் சாதாரண மனிதர்களின் நடமாட்டங்களுக்கு ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோ: ஆபிரிக்கத் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களிலொருவர். 'பமாகோ' திரைப்பட இயக்குநரும் இவரே.மத்தியில் வடிவமைக்கப்பட்ட நாடகமாகிறது. இவை ஆப்ரிக்க திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனராக ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோவின் சமீபத்திய "பமாகோ" என்றத் திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம் என்பதற்கு அத்தாட்சியாக 'பமாகோ' படம் வெளிப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் தன்மையினூடே அவரின் அரசியல் கடமை குறித்த அக்கரையிலிருந்து அவர் விலகாமல் இருப்பதை அவர் படங்கள் காட்டுகின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளால் மரபுக்கும், புதுமைக்கு இடையில் நடக்கும் போராட்டம் இவரின் சமீபத்திய படைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. நவீன உலகத்தின் தொழில்நுட்ப அம்சங்களும், உபகரணங்களும் மனிதனை ஆத்மாவைத் தொடாமல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பதை வெளிப்படுத்தியது. ஆப்ரிக்க அரசியல் குறித்த விடயங்களைச் சொல்வதற்காக அவர் எடுக்கும் தளம் ஆப்ரிக்க கிராமங்களாக இருக்கிறது. "பமாகோ"வில் மெலே என்ற பாடகியின் கணவனுடனான முறிந்து போகிற தாம்பத்ய உறவை சொல்ல அரம்பிக்கிற படம் வெவ்வேறு தளங்களுக்கு படரசிகனை இழுத்துச் செல்கிறது. ஆப்ரிக்காவின் வறட்சியான கிராம புழுதியும் வெயிலும் வறுமையும் தரும் சித்திரங்களூடே 'கௌபாய் மற்றும் இந்தியர்களின்' வீரதீர செயல்களின் விமர்சனமும் நீதிமன்றஅலசல் போலவே இன்னொரு தளத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முரணான சமூகங்களை அதன் மூலம் முன் வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் கதை சொல்லும் மனத்தினன் ஆக அவரின் படங்களில் சிஸ்ஸாகோ வெளிப்பட்டிருக்கிறார். நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எந்தவிதத் தொடர்பும் அற்று அந்நியமாகிப்போய் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை சிஸ்ஸாகோவின் படங்களில் பார்க்க முடிகிறது.

சிறந்த நடிகரும் 'பமாகோ' திரைப்படத்தயாரிப்பாளம்  அதில நடித்தவருமான நடிகர் டானி கிளவர்."எல்லாம் இழந்து போனதான உணர்வும் இறந்த காலமும் என்னைப் படம் எடுக்க வைத்தது. எல்லா சொத்துக்களையும் இழந்திருந்தேன். பம்பாரா என்ற என் மொழி தொலைந்து போயிருந்தது. குழந்தைப்பருவ நண்பர்கள் இல்லை. எனவே என்னைச் சுற்றி இருப்பவர்களை, இருப்பவற்றை ஆழமாகக் கவனிக்கவும் கற்றுக் கொண்டேன். என் மனதில் ஆழப் பதிந்திருப்பவற்றை மீட்டெடுக்க நான் படம் எடுக்க வேண்டியிருந்தது. என் அம்மாவின் மூத்த மகனை அவளின் அல்ஜ“ரியத் தகப்பன் கட்டாயப்படுத்தி பிரித்திருந்தது என்னை மிகவும் பாதித்தது. என் அம்மாவையும் அது மிகவும் பாதித்தது. அவனைப் பற்றி நிறைய போசுவார்கள். இரண்டு தடவைதான் அவனை நான் சந்தித்திருக்கிறேன். ரஷ்யாவிற்கு சென்று படமெடுக்க கற்பதற்காகச் சென்றபோது ஒருமுறை வந்தான். அவனை நான் மிகவும் நேசித்தேன். மிகுந்த அன்பால் அவனைப்பற்றி என் அம்மா நிறையப் பேசினாள். அவனி ஆதர்சமாகக் கொண்டேன். அவனைக் கதாநாயகனாக மனதில் கொண்டு நான் படமெடுக்கிறவனானேன். அதற்கு முன்னால் திரைப்படங்கள் என்னை நெகிழ வைத்ததில்லை. எனது மங்கலான நினைவுகளில் இரண்டு மூன்று சார்லி சாப்ளின் படங்கள் மட்டுமே இருந்தன.எனது குடும்ப சூழல் பின்னணியும், அரசியல் அக்கறையும் என் படங்களின் வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொண்டேன்" என்கிறார் சிஸ்ஸாகோ.

ஆப்ரிக்க சமூகத்தின் அரசியல் தீண்டாமையை இன்னொரு வடிவத்தில் சொல்லும் படம் "சராபினா" பாடல்கள், நடனங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை இப்படம் கையாண்டிருக்கிறது. அதுவும் மாணவர்களின் துள்ளல் மிகுந்த பாடல்களும், ஆட்டமும் இப்படத்தை
வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த உணர்வெழுச்சியின் மறுபுறமாய் அவர்களுக்கு நேர்கிற அரசியல் அனுபவங்கள் அவர்களை செயலற்றவர்களாக ஆக்குகிறது. ஆனால் அந்தப் பாடல்களை அதிகாரம் அடக்கிவிட முடியாது. எல்லோர் வாய்களிலும் அவை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. 1976ல் நடந்த அரசியல் கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றதை நாடமாக்கி பரவலானது. இது நாடகத்திலிருந்து திரைப்படமாகியிருப்பதால் by2 வடிவத்திற்கு ஒத்திசைவான பாடல்களும், நடனங்களும் திரைப்படத்திலும் அதே வடிவமாக அமைந்துவிட்டிருக்கிறது. சரபினாவிற்கு பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவளின் கனவை அடிக்கடி நெல்சன் மண்டேலாவின் படத்திற்கு முன் நின்று அவரோடு போசுகிற இயல்பில் பகிர்ந்து கொள்கிறாள். அவளுக்கு ஆதர்சமாக இருப்பவள் கோல்டுபர்க் என்ற சரித்திரம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. மறுக்கப்பட்ட நீதியையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய மனித உரிமைகளைப் பற்றியும் வகுப்பில் மாணவர்களிடம் கோல்டுபெர்க் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சரித்திரம் கற்பிக்கும் சாக்கில் பொதுவுடைமை, புரட்சி பற்றி போதிக்கிறாள் என்றக் குற்றச்சாட்டும் கண்காணிப்பும் அவளின் மீது உண்டு. காவல்துறை அவளது நோட்டமிடுவதும், அவள் வகுப்பெடுக்கும்போது கூர்ந்து கவனிப்பதும் சாதாரணம். சராபினாவின் வகுப்புத்தோழியொருத்தி அரசியலில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடுவதும் அவளின் வகுப்பையும் பாதிக்கிறது. ஆப்ரிக்க சமுக எழுச்சிக்கான மாணவ்ர்களின் எண்ணமாய் அது விரிகிறது. பள்ளியில் காவல்துறையின் அத்துமீறலும், அதை எதிர்த்த மாணவர்களின் போராட்டங்களும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்ந்த கலவரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பினாவும் அவளது
வகுப்பினரும் மிகவும் மோசமான சிறைசித்ரவதைகளுக்குள்ளும் கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கோல்டுபர்க்கும் சிறை பிடிக்கப்பட்டு
சித்ரவதைக்குள்ளாகிறார். மாணவர்களின் எழுச்சி சிதைக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரற்ற பிணங்களாய் சிறையிலிருந்து
வெளிவருகிறார்கள். தங்கள் வகுப்பினரைத் தேடுகிறார்கள். ஜோகன்ஸ்பர்க்கில் ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் வேலை செய்யும்
சரபினாவின் அம்மா அவளுக்கு ஆறுதலாய் அமைகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விதைகளை மனதில் ஆழமாகப் பதிக்கிறார்கள். மாணவ்ர்களின் எழுச்சியும் போராட்டமும் வெளிப்படும் தீவிரத்தை படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆழமாக்குகின்றன. பாடல்களும் அதனூடனான ஆடல்களும் மாணவர்கள் போராட்டங்களை உணர்வு பூர்வமிக்கதாக ஆக்குவதாய்
அமைக்கப்பட்டிருப்பதில் மாலை சமூக எழுச்சியின் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு உட்பட்ட கட்டுரை ஆசிரியர்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்பல மாணவர்களின் போராட்டங்களை இப்படச்சூழலில் வைத்துபார்க்கலாம். தமிழில், இந்தி எதிர்ப்பி போராட்டச் சூழல்களில் மாணவர்களைக் கொண்டு இது போன்ற படங்களின் தேவையை இப்படம் வலியுருத்துகிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது மாணவர்களை தங்களின் அரசியல் உணர்வு குறித்து விழிப்படையச்செய்யும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சக்தியும் போராட்ட உணர்வும் தட்டி எழுப்பப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தை இப்படம் உணரச் செய்கிறது. அதற்குப் பயன்பட்டிற்கும் பாடல், நடனம் சார்ந்து கதை சொல்லும் இயல்பில் வழக்கமான பாணி தகர்ந்துபோய் திரைப்படம் பார்ப்பதை உணர்வெழுச்சி கொண்டதாக்குகிறது. ஆப்ரிக்க சமூகம் பற்றின பலவர்ண யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இந்த துண்டு வளையல்கள் ஒரு கோணத்தில் கலைடாஸ்கோப்பின் பல வர்ண ஜாலத்தை வெளிப்படுத்துபவை. கறுப்பு சமூக மக்களிடம் மிஞ்சியிருக்கும் புன்னகையையும் வெளிப்படுத்துபவை.


subrabharathi@gmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner