இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2011  இதழ் 134  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல் / சமூகம்!

'பூந்தளிர்' வலைப்பதிவிலிருந்து... 15.01.2011
தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டியது அவசியம் - ஆனந்தசங்கரி -
ஆனந்தசங்கரிதற்பொழுது தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பெரும் துன்பங்கள் அவலங்களுக்கு தீர்வுகாண வேண்டுமாயின் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டியது அவசியம் என்பதனை நாம் உணர்ந்துள்ளோம். அதன் அடிப்படையில் அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அதன் மூலம் பலமிக்கதொரு அழுத்தத்தை நாம் அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் கருதுகின்றோம். அதற்கு அடித்தளமாக பல வேறு குரோதங்களையும் மறந்து எதிர்வரும்உள்ளுரட்சி தேர்தலில் அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட்டால் அது பெரும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமைக்காக ஈடுபட்ட அனைவருக்கும் தமிழர் விடுதலை கூட்டணி முழு ஒத்துழைப்பiயும் வழங்கி வந்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணிஇ தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்)இ பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஜனவரி 1ம் திகதி கொழும்பில் கூடி தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஒரு பாரிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டியதின் அவசியத்தை தீர்மானித்தோம். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதாயும் ஈபிடீபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் அழைப்பு விடுவதெனவும் தீர்மானித்தோம். அதனடிப்படையில் ஈபிடீபியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டாமையினால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் முதற்கட்டமாக திரு.சித்தார்த்தன் அவர்களும் பின்னர் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல காத்திரமான உடன்பாடுகளில் ஆர்வம் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14ம் திகதியன்று நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் பேசினேன். தமிழ் மக்களின் துயரமான நிலைமைகளையும் தமிழ்க்கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையையும் வலியுறுத்தியது மட்டுமல்லாது தமிழரசுக் கட்சியின் பெயரையும் அதன் சின்னமான வீட்டுச்சின்னத்தையும் அனைவருக்கும் பொதுவானதாகவும் ஏற்க நாம் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.

தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்வேண்டியது எமது மக்களுக்கு அவசியமானது ஒன்று என்பது இன்று அதற்கான நிலைமைகளும் உருவாகியுள்ளன. இதைத் தவறவிடுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் பெரும் கேடாக அமைந்து விடும் என்பதனை அனைத்துத்தரப்பிற்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த தேர்தலில் நான் ஒரு வேட்பாளராக எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்துக்கும் போட்டியிடப் போவதில்லை என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுவது தமிழ்மக்களுக்கு நல்லதல்ல என்பதனையும் உணர்ந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் விரைந்து எமக்கு தமது முடிவினைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

நன்றி: பூந்தளிர் வலைப்பதிவு
http://poonththalir.blogspot.com/


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்