இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2011  இதழ் 135  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

http://www.masusila.com/
ஆ.மாதவன், நாஞ்சில் நாடன், திலீப்குமாருக்கு விருதுகள்!
விருதுக்கு வாழ்த்து!
- முனைவர் எம்.ஏ.சுசீலா -
நாஞ்சில் நாடன்திலீப்குமார்ஆ.மாதவன்ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள் (விழா முடிந்த அன்று இரவு உணவு நேரத்தில் ஜெயமோகனும் கூடநாஞ்சிலைப் பார்த்து angry old man என்று கிண்டலடிக்கும் அளவுக்குக் கும்பமுனி எனக் குறிப்பிடப்படும் நாஞ்சிலின் கோபம் கட்டுமீறியிருந்தது) இந்த விருதுச் செய்தி வந்தடைந்து விட்டது அதிசயம்தான்!

முதல்நாள் 19/12 அன்று விஷ்ணுபுர விருது விழா முடிந்து மறுநாள் 20/12 மதியம் கோவை விஜயா பதிப்பகத்தின் புத்தகக்குவியலுக்குள் மூழ்கித் திளைத்து நாஞ்சிலின் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு நிமிருகையில் அப்போதுதான் உள்ளே நுழைந்த விஜயா பதிப்பக உரிமையாளர் திரு வேலாயுதம் அவர்கள் ‘’அம்மா ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு.நம்ம நாஞ்சிலுக்கு அகாதமி அவார்டாம்’’என்று தனக்கே பரிசு கிடைத்தது போன்ற குழந்தைக்குதூகலத்துடன் என்னிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். உடன் அலைபேசி எண் தந்து நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அவரே உதவினார்.

நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன. (’சொல்ல மறந்தகதை’யாக தங்கர்பச்சான் இயக்கத்தில் அது திரைப்படமானபோது நான் படித்து மனதில் காட்சிப்படுத்தியிருந்த நாவலுக்கும் அதற்கும் இடைவெளிகள் நிறைய இருப்பதாக உணர்ந்தேன் நான்.) அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’ நாவலிலும், வ்சிறு கதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள் சதுரங்கக்குதிரை, என்பிலதனை, எட்டுத்திக்கும் மதயானை ஆகியன. இவரது சிறுகதைகளும் முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. அண்மைக்காலமாகக் கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வரும் நாஞ்சில், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். இவ்வாண்டின் சாகித்திய அகாதமி விருது அதற்கு முற்றிலும் தகுதி படைத்த ஒருவருக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்னும் உள்ளப் பூரிப்போடு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

திலீப்குமார்..
இவ்வாண்டின் ‘விளக்கு’ விருது பெறும் திரு திலீப்குமார் அவர்கள் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவரெனினும் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளைஎழுதியிருப்பவர். மூங்கில் குருத்து,கடவு ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களைத் தந்திருக்கும் திலீப்குமார் தேர்ந்த திறனாய்வாளராகவும் (மௌனியுடன் கொஞ்ச தூரம்), மொழிபெயர்ப்பாளராகவும்கூட இயங்கி இருக்கிறார். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்ற திலீப்குமாருக்குச் ‘சாரல்’ விருதும் முன்பு வழங்கப்பட்டிருக்கிறது. .திரு திலீப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

http://www.masusila.com/2010/12/blog-post_24.html


மேலும் சில சுட்டிகள்:
மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்

மொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் - ஜெயமோகன்
திலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா
திலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

ஆ.மாதவன் - சுட்டிகள்:
பாச்சி - ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து
அ.முத்துலிங்கம்

ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் -
அழியாச்சுடர்கள் தொகுப்பு

ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:
கிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்