இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

கறுப்பு ஜூலை 1983!
போரே போ போ! போ!
அமைதியே! வா! வா! வா!


கறுப்பு ஜூலை 1983!ஈழத்தமிழர்களின் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருவாக்கிய கறுப்பு ஜூலை 1983 இனப்படுகொலைச் சம்பவங்க்ள் நிகழ்ந்து இருபத்துநான்கு ஆண்டுகள் எவ்வளவு விரைவாகக் கடந்து சென்றுவிட்டன. 1983 ஜூலைக் கலவரம்தான் அன்றையப் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் தலையிலான இந்திய அரசினை ஈழப்பிரச்சினையில் தீவிரமாக ஈடுபடவைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசுடன் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பின. பூமிப்பந்தின் அனைத்துத் திக்குகளையும் நோக்கி ஈழத்தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தனர். சர்வதேசம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊன்றிப்பார்க்க ஆரம்பித்தது. இந்த இருபத்துநான்கு ஆண்டுகளில் மீண்டுமொருமுறை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையினை அன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்... இடையில்தான் எத்தனை எத்தனை பேச்சுவார்த்தைகள், தலையீடுகள்... சர்வதேச ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டங்கள்.. இன்றைய மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்காவின் அரசின் கீழ் மீண்டும்
ஈழத்தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. சொந்த மண்ணிலேயே தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அடைந்து வருகின்றார்கள். பய்ங்கரவாதததிற்கெதிரான யுத்தமென்ற போர்வையில் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருநாளும் கொன்றொழிக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழர்களின் தாயகத்தின் பல பகுதிகள் மீண்டும் இராணுவப் பாதுகாப்பு வலையமென்ற பெயரில்
ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அமைப்புகளுகிடையிலான பிளவுகளைத் தனக்கு சாதகமாக்கி ஸ்ரீலங்கா அரசு பிரித்தாளும்
தந்திரத்தைப் பாவித்துத் தனது ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து வருகின்றது.

இன்றைய நிலையில் ஸ்ரீலங்காத் தமிழர்களின் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக மாறியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசியல் அமைப்புகளும் ஈழத்தமிழர்களின் விடயத்தில் பல்வேறு போக்குள்ளவைகளாகப் பிளவுண்டு கிடக்கின்றன. சர்வதேச அழுத்தம் காரணமாக மகிந்த அரசால் தனது திட்டங்களை ஒரு நிலைக்கு மேல் நகர்த்த முடியாமலுள்ளது. மகிந்தவின் இராணுவச் செயற்பாடுகள் சிலவற்றுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தும், சிலவற்றுக்குக் கண்டும் காணாமலுமிருந்துவரும் சர்வதேசச் சமூகம் தொடர்ந்தும் ஸ்ரீலங்காப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வேயொன்றென வலியுறுத்தி வரும் அதே சமயம் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்கள் போன்ற்வற்றுக்கும் ஸ்ரீலங்கா அரசு எதிர்பார்த்த கண்டனத்தைத் தெரிவிக்காமலிருப்பது ஸ்ரீலங்கா அரசின் கடும்போக்காளர்கள் மத்தியில் கடும்
அதிருப்தியினைத் தோற்றுவித்துள்ள்தை அவ்வபோது அவர்கள் விடும் அறிக்கைகள், ஆற்றும் உரைகள் மூலம் அறிய முடிகிறது.

கறுப்பு ஜூலை 1983!ஈழத்தமிழர்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினொரு குறீயீடாக இன்று வரலாற்றில் பதிந்து விட்டிருக்கின்ற கறுப்பு யூலை 1983இனை நினைவு கூரும அதே சமயம் ஒன்றினை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம். ஸ்ரீலங்கா அரசின் தமிழ மக்கள் மீதான இராணுவச் செயற்பாடுகள் தொடரும் வரையில் அங்கு அமைதி ஏற்படப் போவதில்லை. இன்றைய யதார்த்தத்தில் ஸ்ரீலங்கா அரசு இரு பகுதிகளாகப் பிளவுண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி ,விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியென இரு பகுதிகளாகப் பிளவுண்ட நிலையில் இன்றைய மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசின் இராணுவப் போக்கினை முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒருபோதுமே வெற்றியளிக்கப் போவதில்லை. ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் சுயநிரணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு,  அதனடிப்படையில் இதய சுத்தியுடன் அனைத்துப் பிரிவினராலும் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையிலான சமாதானத்திற்கான யுத்தநிறுத்தச் செயற்பாடுகள் மீண்டும் சர்வதேசச சமூகத்தின் ஆதரவுடனும், உத்தரவாதத்துடனும் முன்னெடுகக்கப்படுவதொன்றே தற்போதுள்ள சூழலில் அரசியல் மோதல்களுக்குள் சிக்கி அல்லலுறும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் சிறிதளவாவது அமைதியினைக் கொண்டுவரும். அந்தத் தற்காலிக அமைதியினை முதற்படியாக வைத்தே சமாதானத்திட்டத்தின அடுத்த கட்டச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் துரதிருஷ்ட்டவசமாக ஸ்ரீலங்கா அரசுகளின் கடந்தகாலச் செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாகவில்லை. இதனால்தான் எததகைய சமாதானத்திட்டங்களும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும்,  உத்தரவாதத்துடனும் கூடியதாகவிருக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். கறுப்பு யூலை 1983இனை நினைவு கூரும் இத்தருணத்தில் ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாகத் தலைநிமிர்ந்து வாழுமொரு சந்தர்ப்பம் ஏற்பட , ஆரம்பப் படிக்கட்டாக மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென வேண்டுகின்றோம்.   
- நந்திவர்மன் -

கறுப்பு ஜூலை 1983இனை விபரிக்கும் சில இணையத் தளங்கள்:
http://genocide.org.uk/genocide/?page_id=4
http://genocide.org.uk/genocide/?cat=1
http://www.tamilnation.org/indictment/genocide83/index.htm
http://en.wikipedia.org/wiki/Black_July
http://www.tamilcanadian.com/page.php?cat=145&id=4218
http://www.sangam.org/articles/view2/?uid=463
http://www.hrsolidarity.net/mainfile.php/1999vol09no10/1916/


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner