இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2007 இதழ் 91  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நூல் அறிமுகம்!
'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை' !
பேராசிரியர் இந்திரபாலா அவரகளின் நூல் அறிமுகம்!
- பராசக்தி சுந்தரலிங்கம்

வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம், தொழில் நுட்பப் பயன் பாட்டினால் வரலாறு, மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே ஆராய்ந்து பூர்வீக வரலாற்றை எழுதியவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி யிருக்கிறது.

இன்றைய நவீன உலகில் அகழ்வாராய்ச்சி, சாசனவியல், ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக, புராதன வரலாறு பற்றிய புதிய கண்டுபிடிப்புகள,; விஞ்ஞான நோக்கில் ஆராயப்படுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரத்திற்கு ஆதரவாக அல்லது முரணாக பல செய்திகள் புதியனவாக வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் பிற் கூறில,; இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நடைபெற்ற (இன்றும் தொடரும்) அகழ்வாராய்ச்சியின் பயனாகவும், சாசனவியல் பற்றிய புதிய அணுகுமுறையினாலும், வரலாறு பற்றிய பார்வையும் மாற்றமடைந்து வருகிறது. இந்த வகையில், பேராசிரியர் இந்திரபாலா, கி.மு. 300ம் ஆண்டு முதல் கி.பி. 1200 வரையிலான, இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றை, புதிய பல வரலாற்றுச் சான்றுகளுடன், 'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை'என்னும், தமது புதிய நூலிலே ஆராய்கிறார்.

1965ம் ஆண்டிலே, இவ்வாசிரியர் இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆராய்ந்து எழுதிய பின்னர், கடந்த நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாகக் கிடைத்த பல புதிய தரவுகளை வைத்து, தனது முந்திய முடிவுகள் பலவற்றை மீளாய்வு செய்கிறார். புராதன காலம் முதல் கி;.பி. 1200 வரை இலங்கையில் தமிழ் மக்கள் எப்படி ஒரு தனி இனமாக வளர்ச்சியடைந்தனர் என்பதை விளக்கும் ஆசிரியர், அக்காலப் பகுதியில், தமிழ் சிங்கள மக்களின் வரலாறு ஒன்றோடொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்படுவதால், சிங்கள மக்களும் எப்படி ஒரு தனி இனமாக வளர்ச்சியடைந்தனர் என்பதையும் விளக்குவது தவிர்க்கமுடியாததாகிறது.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழ் மக்களா அல்லது சிங்கள மக்களா என்ற கேள்வி எழுந்துள்ள நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வந்துள்ள இவ்வாராய்ச்சி நூல் பல சரித்திர உண்மைகளை விளக்குவதன் மூலம் தமிழ் சிங்கள மக்களின் வரலாற்றை விளங்கிக்கொள்ள ஆதாரமாகிறது.

இங்கு கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் ஒருசில கவிதை வரிகள் பொருந்தி வருவதைக் காணலாம்:
......
அனைத்தையும் மனதிருந்து அழித்து
எழுதுவோம் புதிய கவிதை


அம்மா!
பார்க்க மறுக்கிறாய்
நான் நிற்கவா? போகவா?
போவெனச் சொல்லில்
என் முதுசக்காணியின்
பிள்ளைப்பங்கைத் தா
போய் விடுகிறேன்.


ssss@bigpond.net.au

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner