இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2006 இதழ் 84 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
பாரிஸ்: 'இளங்கோவன் கதைகள்' நூல் வெளியீடு!

இளங்கோவன் கதைகள்'புகலிட வாழ்க்கையில் காணப்படும் எம்மக்களின் அவலங்கள் பலவும் யதார்த்தபூர்வமாகச் சி;த்தரிக்கப்பட்டுள்ளதை 'இளங்கோவன் கதைகளில்" காணலாம். பன்முக ஆளுமை வளம் பெற்றவர் இளங்கோவன். அவர் கவிதைகள், சிறுகதைகள் மூலம் ஐரோப்பியத் தமிழிலக்கியப்பரப்பில் முக்கிய இடம்பெற்றுள்ளார். இலக்கியச் செழுமைமிக்க, புத்திஜீவிகள் நிறைந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனது சிறுகதைத் தொகுதியினை இங்கு வெளியிட்டுவைப்பதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்" இவ்வாறு பல்கலைவேந்தன் வி. ரி. இளங்கோவனது சிறுகதைத்தொகுதியான 'இளங்கோவன் கதைகள்" நூலை வெளியிட்டுவைத்து உரைநிகழ்த்திய 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க, பிரெஞ்சுக் கிளையின் 'வித்தியாலய விழா" கடந்த ஞாயிறு (15 - 10 - 2006) மாலை பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் விசேட நிகழ்வாக 'இளங்கோவன் கதைகள்" நூல்வெளியீடு இடம்பெற்றது. விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை மேலும் பேசுகையில், 'அரசியல், மருத்துவம், சட்டம், கலை இலக்கியத்துறைகளில் ஈடுபட்டுப் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனை மாணவப் பருவம் முதல் நன்கறிவேன். அவர் பாரிஸ் வந்த காலந்தொட்டு அவரது படைப்புகளைத் தவறாது வாசிப்பவன் நான். கலை இலக்கியத்துறையில், ஐரோப்பியத் தமிழ்ப் படைப்பாளர்களுள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கவராகத் திகழும் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

எழுத்தாளர் சு. கருணாநிதி பேசுகையில், 'நாடறிந்த கவிஞராகத் திகழ்பவர் இளங்கோவன். அவர் இச்சிறுகதைத் தொகுதியின் மூலம் தமது ஆளுமையின் இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளார். சிறந்த கவிஞராகவும், நல்ல தமிழ்ப் பேச்சாளராகவும் நாட்டிலும், புகலிடத்திலும் பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற இளங்கோவன், சிறுகதைகள் மூலமும் புகலிடத் தமிழிலக்கியப்பரப்புக்கு வளம் சேர்த்துள்ளார்" என்றார்.

வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரெஞ்சுக் கிளையின் சார்பில், சங்கச் செயலாளர் திரு எஸ். மகேந்திரன், இளங்கோவனுக்கு மாலை அணிவித்துக் கௌரவித்ததுடன், வித்தியாலயப் பழைய மாணவரான இளங்கோவனது நூலை விழாவில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். நூலின் முதற்பிரதியை இலக்கிய ஆர்வலரும், பாரிஸ் கிரு~;ணா அச்சக அதிபருமான திரு யா. பாலகிரு~;ணன் பெற்றுக்கொண்டார்.

இளங்கோவன் நூல் வெளீயீட்டு விழாக் காட்சி..ஒரு பழைய மாணவனின் நூலைத் தமது விழாவில் வெளியீடுசெய்து கௌரவித்தமை ஒரு முன்னுதாரணமான நிகழ்வாகுமென வி. ரி. இளங்கோவன் தமது பதிலுரையில் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், தமது நான்கு சகோதரர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்தவர்கள் என்பதை நினைவுகூர்ந்ததுடன், அந்த வித்தியாலயம் உருவாக்கிய மாணவர்கள் பலரும் இன்று உலகளாவிய ரீதியில், கலை இலக்கியத்துறையில் மாத்திரமின்றி சகல துறைகளிலும் புகழ்பெற்று முன்னணியில் விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

கவியரங்கம், நடன, இன்னிசை நிகழ்ச்சிகள் பலவும் விழாவில் இடம்பெற்றன. பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இவ்விழாவி;ல் வழமைபோல இராப்போசனமும் வழங்கப்பட்டது. சங்கத்தி;ன் புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
 

நிகழ்வுக் காட்சிகள் சில...

இளங்கோவன் நூல் வெளீயீட்டு விழாக் காட்சி.

இளங்கோவன் நூல் வெளீயீட்டு விழாக் காட்சி.

vtelangovan@yahoo.fr


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner