இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2007 இதழ் 88 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

புதினம்.காம்!
கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்!

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்!சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வானூர்தி சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்!வானூர்தி நிலையத்துக்கான அனைத்துப் பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வானூர்தி எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான்படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் வானூர்திகள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வானூர்தி நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வானூர்தி சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்!தாக்குதல் தொடங்கிய பின்னர் வானூர்தி நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டதாகவும்,  இத்தாக்குதலில் இரு உலங்கு வானூர்திகளும் வானூர்திகள் தரித்து வைக்கப்படும் இடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனம் தெரிவிக்கின்றது.. வானூர்திகளின் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து கொழும்பின் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகளை எரிய விடவேண்டாம் என்று பொதுமக்களுக்கு சிறிலங்கா வான்படையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நன்றி: புதினம்.காம்

பி.பி.சி (தமிழ்): இலங்கை விமானப்படையின் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் வழித் தாக்குதல்...உள்ளே
B.B.C: Sri Lankan rebels launch air raid ..Read More
B.B.C: Tamil Tigers unveil latest tactic ..Read More

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner