இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2008 இதழ் 105 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்!
கவிஞர் தா. இராமலிங்கம் மறைவு!
   - முல்லை அமுதன் -
சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 16.08.1933இல் அமரர் தாமோதரம்பிள்ளை, அமரர் சின்னப்பிள்ளை ஆகியோருக்கு
மகனாகப் பிறந்த கவிஞர் தா. இராமலிங்கம் அவர்களின் கவி ஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்த கவிஞர் தன் பட்டப் படிப்பை கல்கத்தா, சென்னைப் பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். இலங்கையில் இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியிலும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் தன் ஆசிரியத் தொழிலைத் தொடர்ந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் மீசாலையைச் சேர்ந்த மகேஸ்வரியைத் தன் வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு அமரர் கலைச்செல்வன், வைத்தியகலாநிதி அருட்செல்வன், பொறியியலாளர் தமிழ்ச்செல்வன், திருமதி இசைச்செல்வி குகரூபன் (டீ.யு), வைத்தியகலாநிதி கதிர்ச்செல்வன் ஆகியோர் மக்கட் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டனர்

இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவைச் சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) நூல்கள்மூலம் கிடைக்கிறது. 1960இல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை, சுவர், புதுசு, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில அ. யேசுராசா, இ. பத்மநாப ஐயர், உ. சேரன், மயிலங்கூடலூர் பி. நடராசன் ஆகியோர் தொகுத்த மரணத்துள் வாழ்வோம் (1985ஃ 1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா ஆகியோர் தொகுத்த பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984ஃ 2003) தொகுதியில் இறுக்கமான, சிறப்பான 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பத்மநாப ஜயரும் யேசுராசாவும் இனைந்து 1981இல் தா. இராமலிங்கம் கவிதைகளை, கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வெளியிட முனைந்தும் முடியாதுபோனமை துரதிர்ஷ்டமே. மீண்டும் இரண்டு மூன்று ஆண்டுகள்
முன்னர் முயற்சிசெய்தபோதும் காலச்சூ+ழல் காரணமாக முடியாதுபோயிற்று. கவிஞரும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர்பற்றி நண்பர் யேசுராசாவிடமும் ராதேயனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.

பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூக நோக்கு, ஆழ்ந்த புலமை, மனித நேயம் இவற்றிக்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதித அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம்தான்.

‘ஞாபகமறதி’ நோயினால் தன்னைமறந்தநிலையில் வாழ்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது. இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப் படித்தல் வேண்டும்.

25.08.2008இல் அமரத்துவமடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழ் ஈழம்) மண்ணில் 26.08.2008 தகுந்த மரியாதையுடன் தகனம்
செய்யப்பட்டுள்ளது. மரணம் நிஜம் எனினும் வாழ்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில் அவரின் மரணம் பல செய்திகளைச் சொல்லிச்செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவதுதான் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் சமர்ப்பணமாகும்.

mullaiamuthan_03@hotmail.co.uk


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner