இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2007 இதழ் 95  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி!
கானல் காடு கவிதைக் கருத்தரங்கு!

- திலகபாமா (சிவகாசி) -

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி!

பொ. நா. கமலா( ஓய்வு பெற்ற பேராசிரியை) சிவகாசி, பாரதி இலக்கியச் சங்க நிறுவனர் கவிதாயினி திலகபாமா அக்டோபர் 6, 7 , 2007 இல் பட்டி வீரன் பட்டியிலிருந்து 35 கி. மீ தூரத்திலுள்ள குறிஞ்சி நிலமான கானல் காட்டில் நிகழ்த்திய கவிதைக் கருத்தரங்கு பசுமையாக என் நினைவினின்றும் நீங்காது என்றும் நிலைத்திருக்கும்.

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி!

அதன் காரணங்கள்:

1, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவரான பொன்னீலன் அவர்கள் முதல் தமிழ் நாட்டின் சிறந்த கவிஞர்களான பிரம்மராஜன் பழமலய் மற்றும் பல இளங்கவிஞர்கள் , நாவலாசிரியர்கள் , சிறுகதையாசிரியர்களான விழி. பா.இதயவேந்தன் மேலும் மார்க்சீயவாதியான தோதாத்ரி கல்லூரி ஆசிரியர்கள் , இளநிலை முதுநிலை ஆய்வுப் பட்ட மாணவர்கள் போன்றோரும் இதழாளர்களான வைகை செல்வி ஆகியோரும் இக்கவிதைக்
கருத்தரங்கில் பங்கு பெற்றமை.

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி!

2,பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை காலைக் கூட்டத்தில் பட்டி வீரன் பட்டி சௌந்திரபாண்டியனார் அரங்கில் நிகழ்த்தி இவ்வாண்டின் சிறந்த கவிஞர்களான அம்சப்ரியா அமிர்தம் சூரியா ஆகியோருக்கு விருதும், ரூ 5000 பொற்கிழியும் திருமதி லட்சுமி அம்மாள் அவர்கள், பேராசிரியர் திரு. சி. கனகசபாபதி அவர்கள் நினைவாக வழங்கியமை மேலும் , வைகை செல்வியின் நூலினை , திருமதி பொ. நா. கமலா வெளியிட , திருமதி ரெங்க நாயகி அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு செய்தமைபரிசு பெற்ற கவிதைத் தொகுதிகள் பற்றித் , திரு முல்லை நடவரசும் , திருமதி பொ. நா. கமலா எதிர்காலத்தில் மாணவிகளும் கவிதை நூல்களைப் படைத்துப் பரிசு பெற வேண்டும் என ஊக்குவித்தமை. திருமதி நளினி மோகன் மற்றும் பள்ளி மாணவிகள் தன் கவிதைகளை வாசிக்குமாறு செய்தமை நூலாசிரியர்கள் ஏற்புரை வழங்கியமை மாணவிகளின் ஆர்வத்தீக்கு நெய்யாக இருந்தமை போன்றவற்றால் பட்டி வீரன் பட்டியில் இன்னும் பல கவிஞர்கள் உருவாவது உறுதி என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது (இது இருநாள் நிகழ்வின் காலை நிகழ்ச்சி மட்டுமே).

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி!
mathibama@yahoo.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner