இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2008 இதழ் 105 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

.நீதியான அரசியல் தீர்வே இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்!

சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த John Argue (Amnesy International Canada, Sri Lanka Coordinator) மற்றும் நம்மொழி சஞ்சிகை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்"இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் மூலமே யுத்தம் நிறுத்தப்படும்" என்று இலங்கையின் எதிர்காலம் என்ன? என்ற தலைப்பில் ரொறன்டோ கனடாவில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17, 2008 ம் திகதி ரொறன்டோ கனடாவில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் முக்கிய பேச்சாளர்களாக முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும், தற்போது Rensselaer Polytenic Institute USAல் கடமையாற்றுகின்றவரும், இலங்கையின் சமாதானத்திற்காக வேண்டி நிற்பவருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் இரத்தினம் ஜீவன் கூல், சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த John Argue (Amnesy International Canada, Sri Lanka Coordinator) மற்றும் நம்மொழி சஞ்சிகை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலை சமாதானத்திற்கான கனேடியர்கள், நம்மொழி சஞ்சிகை, கருமையம் மற்றம் ளுடுனுகு ஒழுங்குபடுத்தியிருந்தனர். நான்கு நோக்கங்களை மையமாக வைத்து இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. தென்னிலங்கையில் உள்ள அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து செய்யப்படுகின்ற குண்டுத்தாக்குதலைக் கண்டித்தல், இலங்கையின் அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் கொல்லப்படுவதையும், இலங்கை மக்களின் உரிமையை இலங்கை அரசு பறித்துள்ளதையும் கண்டித்தல், முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு நீதியானதும். கௌரவமானதுமானதுமான அரசியல் தீர்வு முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல், சகலவிதமான கொலைகளையும், ஆட்கடத்தல்களையும், மனித உரிமை மீறல்களையும், அழிவை நோக்கிச் செல்லுகின்ற யுத்தத்தையும் நிறுத்தும் பொருட்டு, இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று வலியுருத்துதல் என்பனவே இந்த நோக்கங்கள்.

பேராசிரியர் இரத்தினம் ஜீவன் கூல் பேசும் போது "ஒவ்வொரு இலங்கையனும் தனது சுதந்திரத்தையும், நலனையும், அபிவிருத்தியையும் தேடிக் கொள்ளக் கூடியதும், இவற்றிற்காக மற்றவர்களின் உரிமைகளை மதிப்பதுமான சூழ்நிலையை வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டார். பேராசிரியர் இரத்தினம் ஜீவன் கூல் பேசும் போது "ஒவ்வொரு இலங்கையனும் தனது சுதந்திரத்தையும், நலனையும், அபிவிருத்தியையும் தேடிக் கொள்ளக் கூடியதும், இவற்றிற்காக மற்றவர்களின் உரிமைகளை மதிப்பதுமான சூழ்நிலையை வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது "சமாதானம் என்பது பிரிவினைக்கு எதிரானது அல்ல. சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும் தங்களுக்குள் மோதுப்படாமல், தனியான நிலப்பிரிவுக்குள் இருந்து கொண்டு தமது நல்வாழ்வைப் பேணுவது சாத்தியமானதே. இலங்கையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு பல காரியங்கள் தமிழர்களாலும், முஸ்லீம்களாலும், மிகக் கூடுதலாக சிங்களவர்களாலும் செய்யப்படவேண்டும். இலங்கையின் சமனற்ற அரசியல் சமூகங்களுக்குள் சிங்கள மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கின்றது. அவர்கள்தான் அரசியல் தீர்வைக் கொடுக்க வேண்டியவர்கள்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

நம்மொழி சஞ்சிகை ஆசிரியர் பாஸ்கரன் பேசும் போது "வடக்கு கிழக்கு முஸ்லீம்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும்" என்று வலியுறுத்திப் பேசினார்.

"முஸ்லீம்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு இல்லை. அவர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்பாணம், மன்னார் என்று எல்லா இடங்களிலும் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்கும் கௌரவமானதும், நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும். அது முடியும். இதற்கு உதாரணமாக இந்தியாவில் உள்ள பாண்டிச் சேரியை எடுத்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியின் அரசியல் அதிகாரம் தமிழ் நாட்டுக்குள் உள்ள ஒரு நகரத்திற்குள்ளும், கர்நாடகாவில் உள்ள ஒரு நகரத்திற்குள்ளும், ஆந்திராவில் உள்ள ஒரு நகரத்தினுள்ளும் உள்ளது. அது போல ஒரு அதிகார அரசியல் தீர்வுதிட்டத்தை வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு வழங்குவதில் எந்த கஸ்டமும் கிடையாது" என்று நம்மொழி பாஸ்கரன் பேசினார்.

1984ம் ஆண்டில் இருந்து 2008 வரைக்கும் பத்து தடைவ இலங்கைக்கு சென்று வந்தவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடா தொடர்பாளருமான John Argue பேசும் போது " இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு பாரிய அளவிளான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றது" என்று குறிப்பிட்டார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது, கொலை செய்யப்படுவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபை அம்பலப்படுத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இலங்கை அரசின் அமைச்சர் ஊடகவியலாளர்கள் மீது நடாத்திய வன்முறைகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை அம்பலப்படுத்துகின்ற செய்யதியையும் அவர் தெரிவித்தார். இதே சமயம் கனடாவில் தமிழ் ஊடகவியாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட John Argue இவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

canadiansforpeace@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner