இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008! இதழ் 99!  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

மயிலாடுதுறை: மார்ச் 6,7 & 8 !
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில்
"உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'! பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ.(AVC)கல்லூரி (தன்னாட்சி) நடைபெறுகின்றது. இதில் 78 பேராளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடு அ.வ.அ. கல்லூரித் தமிழாய்வுத் துறை செய்துவருகின்றது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வில்(06.03.2008 காலை 10.30) சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ச.அகத்தியலிங்கம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் தொ.பரமசிவம், தமிழ்ச் செம்மொழித் திட்டத் தலைவர் முனைவர் க.இராமசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்விற்கு அ.வ.அ. கல்வி றிறுவனங்களின் செயலர் தமிழ்த்திரு.சொ.செந்தில்வேல் தலைமை தாங்குகிறார். முதல்வர் முனைவர் மு.வரதராசன் வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச் செயலர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறுகின்றார்.

நிறைவு விழா நிகழ்வில்(08.03.2008 பிற்பகல் 2.30) பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.திருவாசகம், கவிக்கோ அப்துல்ரகுமான், தவத்திரு ஊரன்அடிகள், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் திரு.எஸ்.இராஜகுமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். முதல்வர் மு.வரதராசன் தலைமை தாங்குகிறார். தமிழத்துறைத் தலைவர் பேரா.சா.கிருட்டினமூர்த்தி வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச்செயலர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறுகின்றார்.

06.03.2008 மாலை 6.30 மணியளவில் கருத்தரங்கப் பேராளர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இரவு விருந்து வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் முனைவர் கே.ஏ.குணசேகரனின் தமிழ்ப் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்து அனுப்பும் அயல்நாட்டவர்களின் பெயர்கள் கருத்தரங்கின் வாழ்த்துச் செய்திகள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

............ நாட்டில் வசிக்கும் ......(பெய‌ர்)..
...... உங்க‌ள் சுருக்க‌மான‌ வாழ்த்துச் செய்தி... என்று வாழ்த்துகிறேன்.
என்று அனுப்புங்க‌ள்.

அனுப்ப‌வேண்டிய‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி: -
tamilthinai@gmail.com

நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்

http://www.ciil.org

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் "உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'! பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் "உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'! பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் "உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'! பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் "உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'! பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!

தகவல்: ஆல்பேர்ட் , அமெரிக்கா
albertgi@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner