இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
காந்தளகக் குறிப்புகள்......

1. பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப் பதிவு தொடங்கியது!

- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -

 மறவன்புலவு க. சச்சிதானந்தன் -
தமிழ்நூல்.காம்!வணக்கம். தேவாரம் மின்னம்பல தளத்தில் ((www.thevaaram.org) பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும். எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம். பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில் 392 பாடல்களைக் குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம்.

ஏனைய பாடல்களுக்குக் குரலிசைவடிவம் சேர்க்கும் முயற்சியில் பன்னிரண்டாம் திருமுறையின் 4,274 பாடல்களுக்கும் குரலிசை
அமைக்கத் தொடங்கியுள்ளோம். ஏனெனில் 12ஆம் திருமுறை முழுமையையும் குரலிசையாக இதுவரை பதிவாகவில்லை.
ஏற்கனவே பன்னிரு திருமுறைப் பாடல்களில் பெரும் பகுதியை இசைப்பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் குரலிசையாகப் பதிவுசெய்த காலங்களில் அவருடன் முழுமையாக ஒத்துழைத்த பெருந்தகையாளர், பொற்றாளம் ஆறுமுகம் அவர்கள். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க இராமலிங்கம், தருமை ஆதீனப் புலவர் க. ஆறுமுகம், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் பொருளாளர் திரு. அ. ச. ஞா. மெய்கண்டான் ஆகியோருடன் பொற்றாளம் ஆறுமுகம் ஆய நால்வரும் ஒரு குழுவாகி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீச்சரர் கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை வழங்க, இசைக்கருவிகள் துணைநிற்க, 12ஆம் திருமுறைப் பாடல்களைக் குரலிசையாகத் தரமான ஒலிப்பதிவகமொன்றில் பதிவுசெய்து வருகிறார்கள். மாசி 4ஆம் நாள் திங்கள்கிழமை (16.2.2009) இத்திருப்பணி தொடங்கியுள்ளது. மூன்று நாள்கள் பதிவுப் பணி நடைபெற்று, இதுவரை இதுவரை 138 பாடல்கள் பதிவாயின. அடுத்த பதிவு நாள் மாசி 17 (2.3.2009) ஆகும்.

பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப் பதிவு தொடங்கியது!திருவருள் துணையுடனும் தருமை ஆதீனம் குருமகாசந்நிதானம் அருளாசியுடனும் இப்பணி தொடர்ந்து 4,274 பாடல்களும்
குரலிசையாகப் பதிவாக 6 - 7 மாதங்கள் ஆகலாம். ஒரு பாடலைக் குரலிசையாகப் பதிவு செய்ய ரூ. 100 வரை செலவாகிறது.  இத்திட்டம் உரிய காலத்தில் நிறைவேறுமாயின் மொத்தச் செலவு ரூ. 500,000 ஆகலாம். சிங்கப்பூர் அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோயில் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக்குழுவினர் இந்த முயற்சிக்கு உற்சாகமூட்டி உள்ளனர். தொடக்கத் தொகையாக அவர்கள் வழங்கிய தொகையை நன்கொடையாளர் பட்டியலில் பார்த்துதவுக. பாயிரம் தொடக்கம் வெள்ளானைச் சருக்கம் வரை புராணங்களாகவோ,  தனித்தனிப் பாடல்களாகவோ அன்பர்கள் பொறுப்பேற்று நிதிவழங்கி இத்திட்டம் விரைந்து நிறைவு பெற வேண்டுகிறேன்.

நன்கொடைகளை, க. சச்சிதானந்தன் என்ற பெயருக்கு, காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002, இந்தியா என்ற முகவரிக்கு
அனுப்பலாம்.
(Donations in favour of K. Sachithananthan, may be mailed to Kaanthalakam, 68, Annaa Saalai, Chennai 600002, India)
மின்னஞ்சல்
email: tamilnool@gmail.com பதிவாகிய குரலிசையைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் (www.thevaaram.org) அவ்வப்பாடல்
பகுதியில்
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=12000&padhi=001 கேட்கலாம். இச்செய்தியை ஆர்வமுள்ள அன்பர்களுக்கு மீள அனுப்பி உதவுக

2. 125 ஆண்டுகள் சைவப் பணியாற்றி வரும் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை ...

வணக்கம். 125ஆண்டுகள் சைவப் பணியாற்றி வரும் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையினரின் 125ஆம் ஆண்டு விழாவுக்கு உலகெங்கும் உள்ள சைவ அன்பர்களை அழைக்க விரும்புகின்றனர். அன்பர்களும் அமைப்புகளும் இணைத்துள்ள கடிதம் பார்த்து, அச்சபையாருடன் d_a_sankar@yahoo.co.in தொடர்பு கொள்ள. ஆர்வமுள்ள பிறருக்கு இக்கடிதத்தை அனுப்பி உதவுக. நன்றி

The Saiva Sithaantha Sabai of Tuticorin (Thooththukkudi) in Tamil Nadu is 125 years old. The Sabai is keen to have an international
participation at its 125th year anniversary. Please see attached note. Please circulate this note to all those interested. If you are interested
please contact d_a_sankar@yahoo.co.in for more information. Thanking you


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
tamilnool@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner