இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2009 இதழ் 112  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

கல்விமான் செல்வா இலங்கையன் மறைவு!
டொரோண்டோவில் வசித்து வந்த எழுத்தாளரும், கல்விமானுமான கனடாத் தமிழ் இலக்கிய உலகில் செல்வா இலங்கையன் என அறியப்பட்ட இலங்கையர் செல்வரத்தினம் மார்ச் 21ந்திகதி காலமான செய்தியினையும், அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களையும் எழுத்தாளர் நவம் எமக்கு அறியத் தந்திருந்தார். அவ்விபரம் வருமாறு:

Mr. Ilankaiyar Selvaratnam passed away on 21st March 2009 in Toronto. Mr. Ilankaiyar, a progressive minded Social Activist, Writer, retired Science Education Officer, Teacher at St. Patrick�s College and Vaitheeswara College, Jaffna, will be greatly missed by his family, students, and friends.

Viewing takes place on 26th Thursday and 27th Friday March 2009 at Heritage Funeral Centre, 50 Overlea Blvd., (Don Mills & Eglinton) between 5 pm and 9 pm.

The funeral Service will be held on 28th Saturday March 2009, at 10 am at the above Centre and the cremation will take place at St. John�s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road at 1pm.

செல்வா இலங்கையன் அண்மையில் தனது வாழ்வு அனுபவங்களை ஒளிவு மறைவின்றிச் சுயசரிதையாக வெளியிட்டிருந்தார். இது தவிர கனடாவிலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்களில் அவ்வபோது கல்வித்துறை சார்ந்த கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவரது மறைவையொட்டி 'நம்நாடு' என்னும் வலைப்பதிவில் வெளிவந்த கவிதை கீழே:

இலங்கையன் வணக்கம்! - கல்விமான் செல்வரத்தினம்(செல்வரத்தினம்) ஆசிரியர் மறைந்தநாள் கவிதை
.


- புதியபாரதி -


மனிதரில் நேயம் மிக்கோர்
மாமனி தன்னே என்பார்
புனிதராய் நிற்போர் எல்லாம்
புத்தனாய் மதிக்கக் காண்பார்
கனிதரும் சுவைபோல் கல்வி
கண்டவர் பயனே ஈவார்
இனியதின் மகிமை எல்லாம்
இலங்கையன் கொண்டான் என்பேன்!

எறும்புகள் ஊர்தல் போன்று
இவன்நடை இருக்கும் சின்னக்
குறும்புகள் சிரிப்பி னோடு
குறுமொழி கனமாய் மின்னும்
பெறும்புகழ் இவனைச் சார்ந்து
பெரும்தமிழ் அறிஞன் ஆனான்
தொறும்நிலக் கனடா மன்றில்
செந்தமிழ் மனிதம் தந்தான்!

கரும்புகள் இனிக்கா திந்தக்
கல்விமான் கதைக்கும் போதில்
அரும்புகள் விரிதல் போலே
அழகுற மொழிவான் சாதி
நொரும்புகள் நிலத்தில் கண்டு
நொடிந்தனன் அதற்குள் நின்றும்
திரும்பினான் செல்வா என்னும்
சிந்தனை யாளன் என்பேன்!

ஆயிரம் குடங்கள் வைத்து
அளன்கின்ற ஓமம் தோற்கும்
பாயிரம் கொண்டு இந்தப்
பரிதியின் பாடல் பூக்கும்
தாயினும் சிறந்தான் இந்தத்
தமிழறி வாளன் கண்டீர்
நோயினை வென்றான் ஆயின்
நின்றவன் போயே விட்டான்!

ஊன்றிய தடியே இல்லான்
உலவிய அறிஞன் எங்கே?
வான்மடி சென்றார் மன்றில்
வந்துநின் றழுவான் எங்கே?
கூன்பணி கொள்ளான் தேசக்
கூட்டமாய் நிற்பான் எங்கே?
ஏன்இவன் சென்றான் என்றே
என்னுளம் கனக்கு தம்மா!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

ஒரு தூயனின் இறப்பில் இதயத்தால் வணங்கி
புதியபாரதி


- http://namnaadhu.blogspot.com/2009/03/blog-post_26.html

தகவல்: எழுத்தாளர் நவம்
knavam27@hotmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner