இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2006  இதழ் 83 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவித்தல்!
இராஜேஸ்வரி-கோவை ஞானி பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006!

பெண்கள் சிறுகதைப் போட்டி 2006!கடந்த ஒன்பது வருடங்களாக லண்டன் வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தாலும் , கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி இந்தியாவிற் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்களின் சொத்தாகவிருந்துகொண்டு, ஆண்களுக்குப்பிடித்த பெண் எழுத்தாளர்களை மட்டும் பிரபலப்படுத்தும் தமிழ் இலக்கியத்துறைக்குள் ஆரம்பகால எழுத்தாளர்களாகவிருக்கும் பெண்களின் படைப்புக்களுக்கு இடம் கொடுத்து அவர்களை முன்னேற்ற இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 500 பெண்கள் இந்தப்போட்டிக்கு எழுதியிருக்கிறார்கள் இந்தப்போட்டிக்கு வந்து பரிசு பெற்ற சிறந்த கதைகள் புத்தக உருவில் வந்திருக்கின்றன.இந்தியச் சர்வகலாசாலையிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து , ''இந்த ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள்'' பற்றிய ஆராய்ச்சிகளைச் (Women's writings--an anthropoligal view) சில பெண்னியவாதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆடம்பர விளப்பரமில்லாமற் தொடரும் இந்தப்பணியின் பின்னணியில் தமிழகத்தைச்சேர்ந்த பல ஆண், பெண் இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். போட்டிக்கு வரும் சிறுகதைகளைப்படிப்பதும் தேர்ந்தெடுப்பது, புத்தகமாக வெளிவரப்பண்ணுவது போன்ற பல வேலைகள், ஞானி அய்யாவாலும் அவருடைய இலக்கிய நண்பர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றம் அவர்களின் கல்வி வளர்ச்சியிற் தங்கியிருக்கிறது. பத்திரிகைகளைப்படிப்பது கல்வித்தரத்தை, பொது அறிவை, உலக ஞானத்தை விருவுபடுத்த உதவுகிறது. இந்தியாவில் மட்டுமல்லமல் உலகிற் பல இடங்களில், பத்திரிகையுடனான பெண்களின் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆண்களுக்குப்பிடிக்காத, ஆண்களின் தத்துவங்களை முன்னெடுக்காத பெண்கள் படைப்புக்கள் குப்பையிற் போடப்படுகின்றன.

எழுத்துக்கள் என்பது மனித எண்ணங்களின் வடிவங்களில் ஒன்று. அடிமட்டத்தில் வாழும் பெண்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க, முன்னேற்ற, பிரபலப்படுத்த, இராஜேஸ்வரி சிறுகதைப்போட்டிமூலம் பல தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிகள் பாடுபடுகிறார்கள். 2006ம் ஆண்டுக்கான சிறுகதைபோட்டிகளுக்கு உலகம் பரந்து வாழும் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களிடமிருந்து படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை 8-10 பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதவும். நவம்பர் 15ம் திகதிக்கு (15.11.06) முன் உங்கள் படைப்புக்களை அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

2006 பெண்கள் சிறுகதைப்போட்டி,
K Palanisami
24, VRV Nagar, Gnambgai Mill Post,
Coimbatore 641029
Tamil Nadu, South India,
INDIA

தகவல்:
rajesbala@hotmail.com
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner