இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
 ஆகஸ்ட் 2007 இதழ் 92 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
காதலன் - 6 & 7!
- மார்கெரித் த்யூரா -
தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -

மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

அத்தியாயம் -6

திடீரென்று பார்க்கிறேன், குளித்து முடித்ததின் அடையாளமாக கறுப்புவண்ண குளியல் அங்கியில் அமர்ந்திருக்கிறான். புகைத்தபடி விஸ்கி குடித்துக்கொண்டிருக்கிறான்.

நான் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், குளித்து முடித்தானாம். உறங்கியதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. காப்பி மேசை மீதிருந்த விளக்கை ஏற்றினான்.

செய்கின்ற காரியங்கள் எதுவும் அவனுக்குப் புதிதல்லவென்று தோன்றியது, அனைத்திற்கும் பழக்கப்பட்டவன்போல நடந்துகொள்கிறான். அடிக்கடி இவ்விடத்திற்கு வருகிறவனாக இருக்கவேண்டும். கலவி சுகத்தில் அதிக நாட்டமுள்ளவனென்ற போதிலும், பயந்தாங்கொள்ளி. உடலுறவின் மூலம் அதிலிருந்து மீள நினைக்கிறான். அவனுக்கு பெண்கள் சகவாசம் அதிகம் எனபதை நினைக்கிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது, அவர்களில் ஒருத்தியாக இருக்க எனக்கும் ஆசை, அதை அவனிடத்திலும் தெரிவிக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் பார்வையில் கள்ளம் புகுந்துகொள்கிறது, சட்டென்று அக்காட்சியே பொய்யென்று ஆகிறது, முடிவுக்கு வருகிறது.

அவனை என்னருகில் அழைக்கிறேன், என்னை தனதாக்கிக்கொள்ளும் காரியத்தில் அவன் மறுபடியும் இறங்கவேண்டும். அருகில் வருகிறான். அவனிடத்தில் பிரிட்டானிய சிகரெட்டின் மணம், விலை உயர்ந்த பர்·ப்யூமின் மணம், தேனின் மணம், அடிக்கடி அணிந்த இந்திய பட்டு ஆடைகளின் இனிமையான மணம், தங்கத்தின் நறுமணம். கலவிக்கு உகந்தவன். அவனிடத்தில் எனக்குள்ள அதீத இச்சையை தெரிவிக்கிறேன். அவசரப்படாதே, என்கிறான். முதற்காதலனான அவன்மீது என்னிடத்திலுள்ள விருப்பத்தையும், கலவியில் எனக்குள்ள நாட்டத்தையும், நதியைக் கடந்த அடுத்தநொடியிற் புரிந்துகொண்டானாம். தவிர, அவனிடத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் எந்தவொரு ஆணிடத்திலும் உண்மையாக நான் நடந்துகொள்ளமாட்டேன், என்கிறான். அவனுக்கும் நேரம் சரியில்லையாம், சொல்லச் சொல்ல மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன், எனது மகிழ்ச்சியை அவனிடத்திலும் தெரிவிக்கிறேன். கணத்தில் ஒருவித மூர்க்கம், ஒருவித நம்பிக்கையின்மை, என்மீதுப் பாய்கிறான், முதிராத எனது இளம்மார்பகங்களை வாய்கொள்ள உண்கிறான், சத்தமிடுகிறான், எனக்கெதிராக தகாதச் சொற்களை உபயோகிக்கிறான். அனுபவித்திராத பரவசத்தின் காரணமாகக் கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். இம்மாதிரியான காரியங்களுக்கு அதாவது உடலுறவுகளுக்குப் பழகியவன் போலிருக்கிறது, கைகளில் நல்ல தேர்ச்சி தெரிகிறது., அழகாய், கன கச்சிதமாய் ஆற்றுகின்றன. எனக்கும் அதிர்ஷ்டமென்று நினைக்கிறேன். இதைத் தொழிலாகக்கூட அவன் தொடரலாம். எந்த பள்ளிக்கும் செல்லாமலேயே என்ன செய்யவேண்டும், என்ன பேசவேண்டுமென தெரிந்துவைத்திருக்கிறான். என்னை வேசி என்கிறான், கழிசடை என்கிறான், மிகக் கேவலமாக நடத்துகிறான். வேறொருத்தியை அவன் தொட்டதில்லையாம், இவ்வுலகத்தில் அவனுக்குக் காதலியென்று இருப்பதெல்லாம் நான் ஒருத்திமட்டுந்தானாம், சொல்கிறான். கண்டதைப் பேசவும், விரும்பும்வகையில் என்னைக் கையாளவும், உடலில் வேண்டியதைத் தேடவும், கண்டெடுக்கவும் அனுமதிக்கிறேன் இல்லையா, ஆதலால் இதுபோன்ற உளரல்களை சகித்துகொள்ளத்தான் வேண்டும். இனி நானொரு கழிவுப்பொருள் அல்ல, உபயோகபடக்கூடும். ஊத்தையாக இருந்தாலென்ன, மெருகூட்டினால், பிராகசிக்கப்போகிறேன், அத்தனை கழிவுகளும், காதற் தாபத்தில் கரைந்தோடாதா?

நகரத்தின் இரைச்சல், சன்னற்கதவுகளில் மோதுவதுபோல, வெகு அண்மையில் மிக அருகில் கேட்கிறது. அறையில் எங்களைக் கடந்துசெல்வதுபோல காதோரங்களில் சப்தம். அவ்வோசைக்கிடையே, கடந்து செல்லும் பாதையில் வைத்து அவனுடலை அணைத்துக்கொள்கிறேன். பரந்துவிரிந்தகடல், சுருங்கிக்கொள்கிறது, விலகிச் செல்கிறது, மீண்டும் என்னிடத்தில் வருகிறது.

நிறுத்திடாதே தொடர்ந்து செய் என வற்புருத்துகிறேன், அவனும் அப்படியே செய்கிறான். கொழகொழவென்று இரத்தம், உயிர்போவதுபோல உணருகிறேன், அது இல்லையென்று ஆனாலும் என் மூச்சுநின்றுபோகலாம்..

சிகரெட் ஒன்றை பற்றவைத்து என்னிடத்தில் கொடுக்கிறான். எனது முகத்தருகே நெருங்கி, தாழ்ந்த குரலில் பேசுகிறான். பதிலுக்கு எனது குரலும் அடங்கி ஒலிக்கிறது. அவனுக்கானது எதுவென்று அவன் அறியான், அவனுக்காக அதுபற்றி நான் பேசுகிறேன். கம்பீரமான வனப்பு அவனிடம் குடிகொண்டிருப்பதைப் புரியவைக்கிறேன்.

அந்தி சாயும் நேரம். எதிர்காலத்தில் அவனது பெயரும், முகமும் மறக்க நேர்ந்தாலும், இப் பின்நேரத்தை வாழ்நாள் முழுதும் என்னால் நினைவில் நிறுத்த முடியும் என்கிறான். இவ்வீட்டை என்னால் மறக்காமல் இருக்கமுடியுமா, என்று கேட்க, அவன்: நன்றாகப் பார்த்துக்கொள், என்கிறான். நான் பார்க்கிறேன். எல்லா இடங்களிலும் இருப்பதுபோலத்தானே?-நான். அதற்கவன், ஆமாம். அப்படித்தான், சந்தேகம் வேண்டாம், என்கிறான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றைக்கும் அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுடைய பெயரும் நினைவில் இருக்கிறது. வெள்ளை நிற சுவர்களையும், சன்னல் இலைத்தட்டி ஊடாக பெரிய அடுப்பு ஒன்றையும் பார்க்கிறேன். மேற்புறம் வளைந்த கதவினைத் திறக்க பிறிதொரு அறை, அடுத்து திறந்தவெளி தோட்டம்- கோடைவெப்பத்தின் காரணமாக செடிகள் கருகிக் கிடக்கின்றன- சாடெக் நகரின் பெரிய வில்லாக்களில் மீகாங் நதிபக்கமாக அமைந்த மொட்டை மாடிகளில் இருப்பதுபோல நீலநிறத்தில் மதிற்சுவர். மூழ்கும் கப்பல், அபாயகரமான இடம்,

சிந்தனையைக் கலைப்பதுபோல மீண்டும் அவனிடமிருந்து கேள்வி, "உன் மனதிலிருப்பது என்ன? சொல்லேன்". "அம்மாவை நினைத்துக்கொண்டேன், உண்மை தெரியவந்தால், என்னைக் கொன்றுவிடுவாள்"- நான். என்ன சொல்வதென்று யோசிக்கிறான். பின்னர், எனது நினைப்பு நியாயமானதுதான், என்கிறான். 'இச்செயல் குடும்பத்திற்கு இழிவைத் தரக்கூடியதென்றும், இவ்விஷயத்தில் திருமணம் என்றபேச்சுக்கே இடமில்லை', என்றும் சொல்கிறான். நான் அவனைப் பார்க்கிறேன். அதைஉணர்ந்தவன்போல, மிடுக்குடன் "உன்னைப் புண்படுத்தும்படியான வார்த்தைகளை உபயோகித்தமைக்கு என்ன மன்னிக்கவேண்டும்", என்கிறான். நானொரு சீனன், என அடுத்து சொன்னபோது, இருவரிடத்திலும் மெல்லிய புன்னகை. "கலவிக்குப் பிறகு இருவரையுமே, ஒருவித கவலை ஆட்கொள்கிறதே, இது இயல்பாக நடப்பதா?" என்று அவனிடத்தில் கேட்கிறேன். அதற்கவன், "நாம் பகலில், நல்ல கோடைவெப்பத்தில் உறவு கொண்டோம், இல்லையா? அதுதான் காரணம். தவிர புணர்ச்சிக்குப் பிறகான நிலை கொடுமையானது, இரவென்றால் வந்த சுவடு தெரியாமல் அது போய்விடும்", என்கிறான். பதிலுக்கு, "புணர்ச்சிக்குப் பின்னர்வரும் வேதனைகளுக்கு, நீ நினைப்பதுபோல பகல் காரணமல்ல, நானே காரணம். கவலைகளோடு வாழ்பவள் நான், அதற்கென்றே காத்திருப்பவள் நான். எனது வாழ்க்கைத் துயரத்தால் ஆனது. எனது சிறுவயது நிழற்படங்களிலும் அத்துயரத்தினைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு என்னிடத்தில் இருக்கின்ற வேதனைகளும், நெடுநாளாக என்னை அறிந்தவையே. தோற்றத்தில் என்னைப்போலவே இருப்பதால், எனது பெயரைச் சொல்லிக்கூட அதனை அழைக்கலாம். இன்றைக்கு அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது, அம்மா தனது வாழ்க்கையின் வறட்சிகாலங்களில் என்னைச் சபித்த கெட்டநேரம் கடைசியில் இப்போதுதான் அதற்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய கூச்சல்களை நான் சரியாக விளங்கிக்கொண்டதில்லை, எதற்காகக் காத்திருந்தேன் என்றும் தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்த அறையில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது. எல்லாமே கடவுளால் தீர்மானிக்கபட்டவையென அம்மா சத்தம் போடுவாள், பிறகு எந்தவொரு பொருளுக்காகவும், மனிதருக்காவும், அரசாங்கத்திற்காகவும், கடவுளுக்காகவும் காத்திருக்கக்கூடாதென்று சொல்வாள்", அவனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். நான்பேசுவதை அவதானிக்கிறான், அவனது கண்கள் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன. பேசுகிறபோது எனது உதடுகள் அசைவை அவன் கவனிக்கிறான். ஆடையின்றி இருக்கிறேன். கட்டுப்பாடற்ற அவனது கைகள், எனது உடலில் தங்குதடையின்றி பயணிக்கின்றன. இதுவரை நான் சொன்னவற்றை அவன் காதில் வாங்கி இருப்பானென்று நினைக்கவில்லை. 'பிறருக்கு தீங்கிழைக்க நினைப்பவள் அல்ல, நிலைமை அப்படி. அம்மா ஒருத்தியின் ஊதியத்தில், நாங்கள் உண்ணவும், உடுக்கவும் வேண்டும், மொத்தத்தில் எங்கள் தினசரி வாழ்க்கை எத்தனைக் கடினமானதென்று அவனுக்கு விளக்கினேன். தொடர்ந்து சொல்லமுடியாமல் நெஞ்சை அடைக்கிறது. "என்ன நடந்தது? நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?" அவன். "வீதிக்கு வந்தோம், வேறென்ன செய்ய முடியும்.? அவரவர்க்கு முடிந்ததை வகையில் நெருக்கடியிலிருந்து மீள நினைத்தோம். எவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள முடியுமோ நடந்துகொண்டோம்", - நான். இப்போது அவன் உடல் என்மீது பரவுகிறது, முரட்டுத்தனமாக என்னுள் பிரவேசிக்கிறான். ஒரு சில நிமிடங்கள் அசைவற்று இருக்கிறோம், வெளியில் நகரத்தின் ஆரவாரத்தைக்கேட்டபடி, கலவியின் வேதனையில் இருவருமாய் துடிக்கிறோம், சிறிது நேரத்திற்குப் பிறகு சுற்றிலும் நிசப்தம். உடல்மீதான முத்தங்கள், நம்மை கண்ணீர் சிந்தவைக்கின்றன. அழுவது மனதிற்கு ஆறுதலைத் தருகிறதென்று சொல்லலாம். வீட்டில் நான் கண்கலங்கியதில்லை. அன்றைக்கு, நான் சிந்திய கண்ணீர் எனது கடந்தகாலத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்குமான ஆறுதலையும் தந்தது. "என்றேனும் ஒரு நாள் என் அம்மாவைவிட்டுப் பிரிந்து செல்வேனென்றும், அம்மாவாக இருந்தாலென்ன, அவளையும் வெறுக்கும் சந்தர்ப்பம் எனக்கு நேரக்கூடும்", என்கிறேன். கதறி அழுகிறேன். "சிறுவயதில் எனக்கான கனவுகளென்பது, அம்மாவின் தரித்திரங்களன்றி வேறல்ல. கனவுகளிற்கூட அம்மாவைக் கண்டதுண்டே தவிர, கிறிஸ்துமஸ் மரங்களையல்ல. அவளென்றால் அவளை மட்டுமே. அவளைமட்டுமே கண்டிருக்கிறேன், எப்படி?: தோல் கழண்ட தரித்திர அம்மாவாக, வறுமையின் அத்தனைத் தோற்றங்களையும் காட்சிப்படுத்துகிற அம்மாவாக, ஒருவேளை உணவுக்குகூட வழியின்றி அலையும் அம்மாவாக, எந்நேரமும் தனக்கு - அதாவது மரி லெகிராண் தெ ரூபேக்கு(Marie Legrand de Roubaix) நேரும் இடர்பாடுகளை, பிறறிடம் புலம்பித்திரியும் அம்மாவாக, தனது அறியாமை, தனது சிக்கனம், தனது நம்பிக்கை என்று கதைக்கிற அம்மாவாக மட்டுமே அறிவேன்".

இரவு பிறந்திருப்பதைச் சாளரங்கள் ஊடாக அறிய முடிந்தது. இப்போது கூடுதலாகச் சத்தம் வருகிறது. முன்னிலும்பார்க்க ஆகக் கூடுதலாக, அதிக இரைச்சலோடு கேட்கிறது. தெருவிளக்குகளில் இருந்த சிவப்பு பல்புகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

அறையைவிட்டு இருவரும் வெளியில் வந்தோம். ஆண்களுக்கான கருப்புநிற பட்டைகொண்டதொப்பி, பொன்னிற காலணிகள், கருஞ்சிவப்பு உதட்டுச் சாயம், பட்டினாலான கவுன், மீண்டும் என்னை அலங்கரித்திருந்தன. சட்டென்று எனக்கு வயது கூடியிருப்பதைப்போல உணர்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவன், நீ மிகவும் களைத்திருக்கிறாய் என்கிறான்.

நடைபாதை எங்கும் கூட்டம். இன்ன திசை என்றில்லாமல் மக்கள் நடக்கிறார்கள், சோர்வாக சுறுசுறுப்பாக, எதிர்படுபவர்களை முட்டிமோதிக்கொண்டு முன்னேறும் கூட்டம், பார்வையற்ற இரவலர்க¨ளைப்போலவும், வெறிபிடித்த தெரு நாய்களைப் போலவும் அலையும்கூட்டம் - சீனர்களின் கூட்டம், வளமையுடனான இப்போதையக் காட்சிகளுக்கிடையே மறுபடியும் அக்கூட்டத்தைப் பார்க்கிறேன், இருவரும் பதற்றத்துடன், கூட்டத்தில் அவர்களன்றி வேறொருவர் இல்லை என்பதுபோல, பாவப்பட்டவர்களாக, வேதனைகளை மறந்து, ஆர்வமின்றி, நடக்கவேண்டும் என்கிற எண்ணம் எதுவுமின்றி, கால்போனபோக்கிலே, வலப்பக்கம்.. அல்ல அல்ல.. இடப்பக்கமாக, மற்றவர்களை முந்திக்கொண்டு நடக்கிறார்கள்.

அடுக்குமாடிகளுடனிருந்த ஓரு சீன உணவு விடுதிக்குள் நுழைகிறோம். கட்டிடம முழுமையும் விடுதி ஆக்ரமித்திருக்கிறது. பெரியக் கடைகளைப்போலவும், ராணுவ முகாமைப் போலவும் அளவில் மிகப்பெரியதாக இருக்கிறது. உணவு விடுதியின் உபரிகைகளும், தளங்களும் வீதியைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. பரிமாறுபவர்கள், உணவுக்கான உத்தரவுகளைப் பெற்று தயாரிப்பவர்களிடம் சொல்ல, அவ்வுத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு பதிலுக்கு அவர்கள் கூக்குரலிட, கட்டிடத்திலிருந்து வருகின்ற சத்தமானது, ஐரோப்பிய நாடுகளில் கேட்கமுடியாதது. சாப்பிட வந்தவர்கள் ஒருவரும் பேசிக்கொண்டிருக்கவில்லை. மாடிகளில், சீன இசைக்குழு வாசித்தபடி இருக்கிறது. நாங்கள் அமைதியாக இருந்த, அதாவது ஐரோப்பியகள் அதிகமாக இருந்த, மாடியொன்றுக்குச் செல்கிறோம். எல்லா இடங்களிலும், ஒரேமாதிரியான உணவுவகைகள் கிடைக்குமென்ற போதிலும், இங்கு சத்தம் குறைவு. இங்கே காற்றுவாரிகள் இருந்ததோடு, சப்பதத்தைக் குறைக்கும் வகையில் தடித்த திரைகள் தொங்கவிடபட்டிருக்கின்றன.

"உன்னுடைய தந்தை எப்படி, எவ்வகையில் பணம்படைத்தவராக மாறினார்?" என அவனைக் கேட்டேன். பணத்தைப் பற்றி பேசுவதென்றால் அவனுக்கு கசப்பு என்றவன், நான் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டுமென்றால், அவனது அப்பாவுடைய செல்வத்தைக் குறித்து சொல்ல விருப்பமென்றான். "ஷோலென் நகரிலேதான் ஆரம்பம் என்றுசொல்லவேண்டும், உள்ளூர் மக்களுக்கென்று முந்நூறு பிரத்தியேகக் குடியிருப்புகளைக் கட்டினார். பல வீதிகளை அவருடையதென்று சொல்லலாம்",- அவனது பிரெஞ்சு உச்சரிப்பில் பாரீஸ் தொனி இருக்கும்படி மிகவும் கவனத்துடன் பேசுகிறான். பணமென்று வருகிறபோதெல்லாம், அவன் பேச்சில் உண்மையிலேயே ஒரு அக்கறையின்மை இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஷோலென் நகருக்குத் தெற்கே புதிய குடியிருப்புகளக் கட்டுவதற்கு நிலங்கள் வேண்டியிருந்ததால், அவனது அப்பா தனக்குச்ச் சொந்தமான நிறையகட்டிடங்களை விற்றதாகக் கூறினான். சாடெக் நகரிலிருந்த நெல் விளையும் நிலங்களைக் கூட அதற்காத்தான் விற்றாரென்று அவன் நினைக்கிறானாம். எனக்குத் தெரிந்து, அவன் சொல்கிற மாதிரியான குடியிருப்புப் பகுதியொன்றில், கொள்ளைநோய் காரணமாக ஒருமுறை மாலையிலிருந்து மறுநாள் காலைவரை, சன்னல்களையும்,, கதவுகளையும் மூடியதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டத்தையும் தடைசெய்திருந்தார்கள், என்பதால் அவனிடம் தொற்றுநோய்களைக் குறித்து விசாரித்தேன். சிற்றூர்களைக் காட்டிலும், எலி ஒழிப்பு, இங்கே மும்முரமாகக் கடைபிடிக்கப்பட்டதால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறான். சடாரென்று குடியிருப்புகளைப் பற்றிய தகவல்களை கதைபோல ஆர்வத்துடன் விவரிக்கத் தொடங்குகிறான். தனித்தனி வீடுகளைகளைக் காட்டிலும், இவற்றிர்க்கான கட்டுமான முதலீடு குறைவு என்பதோடு, சராசரி மக்களின் தேவைகளை வெகுவாகப் பூர்த்திசெய்யக்கூடியதாகவும் இருக்கிறதாம். இங்கு வாழ்கிற மக்கள் ஏழைகள், கிராமங்களிலிருந்து குடியேறியவர்கள், அவர்களுக்கும் தனித் தனி வீடுகளைக் காட்டிலும் சேர்ந்துவாழ்வது பிடித்தமானது, தவிர சாலையோரங்களில் உண்பதும் உறங்குவதும் அவர்களது இரத்தத்தில் கலந்தது, ஏழைகளில் இம்மாதிரியான வழக்கங்களை மதிக்கவேண்டும். எனவே அப்பா கட்டிய குடியிருப்புகள் அனைத்தும் வீதியோடு இணைந்த, வசீகரமான, மேற்கூரையிட்ட வாயில்களைக் கொண்டவை, மக்கள் பெரும்பாலான நேரங்களை வாயில்களிலேயே கழிக்கிறார்கள். கோடைநாட்களில் உறங்குவதும் நடக்கிறது. சின்னவயதில் வெளியில் உறங்க ஆசைப்பட்டதுண்டு எனவே அவனிடம் எனக்குக்கூட அதுபோன்ற குடியிருப்பொன்றில் வசிக்க விருப்பமென்று தெரிவிக்கிறேன். மதியம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியபோது, சிராய்பொன்றை ஒன்றை ஏற்படுத்தி இருந்தான், எனது இதயம் சட்டென்று அவ்விடத்தில் இடம்பெயர்ந்ததைபோல உணர்ந்தேன், கூடவே இலேசாக வலிக்கிறது. அவன் சொல்வது எதுவும் காதில் விழவில்லை, காதுகொடுத்து கேட்கும் நிலையில் நானுமில்லை. புரிந்துகொண்டவன்போல அமைதியானான். நிறுத்தாதே தொடர்ந்து பேசு என்கிறேன். அவன் தொடர, மறுபடியும் அக்கறையுடன் காதில் வாங்குகிறேன். அவனது நினைவில் முழுக்கமுழுக்க பாரீஸ் நகரம் இடம்பெற்றிருப்பதாச் சொல்கிறான். நற்குணங்களற்ற பாரீஸ் பெண்களைப்போல அல்லாமல், வேறுபட்டவளாக நான் இருக்கிறேனாம். 'குடியிருப்பு தொழில் இவ்வளவு பணத்தை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்குமென்று நான் நினைக்கவில்லை', என்கிறேன். அவனிடத்தில் பதிலில்லை.

அத்தியாயம் -7

எங்கள் இருவருக்குமான சத்திப்பு காலம் முழுவதும் அதாவது ஒன்றரை ஆண்டுகாலம், இப்படித்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோமேயன்றி, இருவருக்குமான வாழ்வொன்றைப் பற்றிய நினைப்போ, அது தொடர்பான உரையாடலோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான வாழ்க்கையொன்றை கற்பனை செய்வதற்கில்லை என்பது முதல்நாளே விளங்கிவிட்டது, எனவே நடக்கும் உரையாடல்கள் இருவருக்குமான வாழ்க்கைப்பற்றிய அக்கறையின்றி சஞ்சிகைக்குறிய கருப்பொருள் தன்மையுடனோ, விவாதத்திகுறியதாகவோ, பேச்சில் ஒருவரொருக்கொருவர் ச¨ளைத்தவரல்ல என்பதை நீருபிக்கின்ற வகையிலோ இருந்தது.

" பாவம்! உனது பிரான்சு அனுபவம் மோசமாக அமைந்துவிட்டது", என்கிறேன். அதை ஆமோதித்தான். பெண்கள், கல்வி, ஞானம் அனைத்தையும் பாரீஸில் பணம் கொடுத்து வாங்க முடிந்தது என்கிறான். என்னை விட பன்னிரண்டு ஆண்டுகள் வயதில் கூடுதலாக இருப்பது அவனை பயமுறுத்துகிறது. ஏமாற்று வார்த்தைகளோ, காதல் மொழிகளோ, எதுவென்றாலும், அப்பேச்சில் நாடக அனுபவத்தின் இணக்கமும், நேர்மையும் இருக்க, அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எனது குடும்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேனென்று சொல்ல, ஐயோ வேண்டாமே என்கிறான். நான் சிரிக்கிறேன்.

அவனது உணர்வுகளை வேடிக்கையாக வெளிப்படுத்த தெரிந்துவைத்திருக்கிறான். அவனது தந்தையைப் பகைத்துக்கொண்டு, என்னை விரும்பவோ, கைப்பிடிக்கவோ, அவனோடு அழைத்துக்கொள்ளவோ முடியாதென்பதும் புரிகிறது. தனக்குள்ள அச்சத்திலிருந்து விடுபட்டு என்னை நேசிப்பதற்குறிய துணிச்சல் அவனிடத்தில் துளியுமில்லை. என்னை அவனது பிடியில் சிக்கவைக்க முடிந்த கதாநாயகத் தன்மை ஒருபக்கம், தனது தந்தையின் பணம் ஏற்படுத்தியிருக்கும் கோழைகுணம் மறுபக்கம், இரண்டும் அவனிடத்தில் இருக்கின்றன. எனது சகோதரர்களைப் பற்றிப் பேச நான் வாய் திறந்ததால்போதும்? முகம் வெளுத்துபோகிறது. அத்தனை பயம். ஏதோ எனது குடுப்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தங்கள் வீட்டுப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டே ஆகவேண்டும், என்றிவனைக் கெஞ்சுவதுபோல நினைக்கிறான். எனது குடும்பத்தவர்களுக்கு எப்போதோ அவன் அர்த்தமற்றவனாக ஆகி இருப்பனாம், இனி அவளுக்கென்று கூடுதலாக மதிப்பற்றுப்போய், அதன்பொருட்டு அவளையும் ஒருநாள் இழப்பதன்றி, வேறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லையாம், கூறுகிறான். .

பாரீஸ¤க்குத் தான் போன நோக்கம் வணிகத்துறையில் கல்விகற்பதற்காகவென்றும், அவன் அதைத் தவிர பிறவற்றில் அக்கறைகாட்டியதால் கோபமுற்ற அவனது தந்தை, செலவுக்கென்று அனுப்பிய பணத்தைச் சுத்தமாக நிறுத்தியதோடு, சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கானப் பயணச் சீட்டையும் அனுப்பியிருந்ததால், பாரீஸைவிட்டு புறப்டவேண்டிய அவசியம் வந்ததாகக் கடைசியில் உண்மையைக் கூறினான். தனது படிப்பைத் தொடரமுடியாமல் திரும்பிவந்தற்காக வருந்துகிறானாம். தொலைதூர கல்விதிட்டத்தின் மூலம் பாதியில் விட்டக் கல்வியை முடிக்கவிருப்பதாகக் கூறுகிறான்.

எங்கள் குடுபத்துடனானச் சந்திப்பு ஷோலென் விடுதியொன்றில் ஏற்பாடு செய்யபட்ட விருந்துடன் தொடங்கியது. அம்மாவும் எனது சகோதரர்களும் சைகோனுக்கு வருகிறபோது நகரத்திலுள்ள அவர்கள் அறிந்திராத, இதுவரை நுழைந்திராத எதோவதொரு பெரிய சீன உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று கூறுகிறேன். ஏற்பாடு செய்த, பெரும்பாலான மாலை நேர விருந்துகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகக் கழிந்தன. எனது சகோதரர்கள் அவனிடம் உரையாடுவதுமில்லை, ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை, அவர்கள் கவனம் முழுதும் பரிமாறப்படும் உணவிலிருக்கிறது. அவர்களால் அவனைக் கவனிக்கப் போதவும் போதாது, அது நடக்கக்கூடியதென்றால், ஒழுங்காகக் கல்வி கற்கவும், சமுதாயத்தின் ஆரம்ப வாழ்வியல் விதிகளுக்கு இணங்கிப்போகவும் அவர்களால் முடிந்திருக்கும். உண்கிறபோது அம்மா மாத்திரம் கொஞ்சநேரம், தொடக்கத்தில், பறிமாறப்படும் உணவைக்குறித்தோ, அதிகபடியான அதன் விலைகள் குறித்தோ ஒரு சில வார்த்தைகள் கூறுவாள், பிறகு வாயைமூடிக்கொள்வாள். இரண்டுமுறை வீணாகத் அவன் முயற்சித்தான், முதலின் தனது பாரீஸ் அனுபவத்தைச் சுருக்கமாகச் சொல்ல முயன்றான், முடியவில்லை. சில சமயங்களில் அவன் எதையாவது சொல்லிக்கொண்டிருக்க, நாங்கள் ஏதோ கேட்டோமென்று பேர்பண்ணிகொண்டிருப்போம், அவ்வளவுதான். எல்லோருடைய கவனமும் உணவிலிருக்க, அவனது முயற்சிகள், நிலவிய அமைதியில் கரைந்துபோகின்றன. என் சகோதரர்ககளோ இத்தனை நாட்களாகப் பட்டினிகிடந்தவர்களைப்போல உண்கிறார்கள், இதற்குமுன், அவர்களைப்போல உண்பவர்களை வேறெங்கும் கண்டதில்லை.

உண்ட உணவிற்கான பணத்தினைச் சிறிய பீங்கான் தட்டொன்றில் எண்ணி வைக்கிறான். நாங்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கிறோம். முதன்முதலாக எழுபத்தெட்டு பியாஸ்தர் பணத்தை தட்டில் அடுக்கி இருக்க, மூர்ச்சை ஆகாதகுறை. அம்மாவிடம் சந்தோஷம் தாண்டவமாடுகிறது. எல்லோரும் புறப்பட தயாரானோம். 'நன்றி' என்ற சொல்லை மறந்துங்கூட ஒருவரும் வாய்திறந்து உச்சரிக்கவில்லை. இப்படியான உபசரிப்புக்காகவாவது நன்றி என்று சொல்லி இருக்கலாம். 'இல்லை', 'வணக்கம்', 'பிறகு சந்திப்போம்', 'நலமா'? போன்றவை நாங்கள் அறிந்திராத சொற்கள்.

குறிப்பாக என் இரு சகோதரர்களும் ஒரு வார்த்தைகூட அவனிடத்தில் பேசவில்லை. அவர்கள் தொட்டுணரவும், பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பினை அளிக்கவல்ல ஸ்தூல உடம்புடன் அவன் வரவில்லைபோலிருக்கிறது. அவர்களால் அது முடியவும்முடியாது என்பதற்கு அடுக்கடுக்காகக் காரனங்களைச் சொல்லலாம், முதலாவது என் காலடியில் அவன் கிடப்பதும், என் அன்பினைப் பெறுவதற்கான தகுதி அவனுக்கு இல்லையென்று அவர்கள் நினைப்பதும். அடுத்து பணத்திற்காக அவனுடன் இருக்கும் நம் சகோதரி, உண்மையாக அவனை நேசிக்கமாட்டாள் என்றும் அவர்கள் கருத இடமுண்டு. காதலை முறித்துக்கொள்ளும் நிலைக்குச் செல்லக்கூடியவன் இல்லை என்பதால், என்னால் நேர்படும் எந்த இடர்பாட்டையும் சகித்துக்கொள்ளக்கூடியவன் என்பதுகூட ஒரு காரணம். பிறகு அவன் ஒரு சீனன் என்பதும், நான் ஒரு ஐரோப்பிய பெண் என்பதும் அவற்றுள் மிகமுக்கியமானது. எனது மூத்த சகோதரன், அவனை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை என்ற வகையிலும், அவனிடம் பேச விருப்பமில்லாமல் இருப்பதும், அவளை அப்படியொரு முன் மாதிரியான முடிவொன்றிற்கு இட்டுச் செல்கிறது. எனது காதலனுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளுக்கும் எனது சகோதரனையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். நான் மட்டு விதிவிலக்கா என்ன? எனது குடும்பத்தார் சார்பாக எதையாவது பேசவேண்டும் என்கிறபோது மட்டும் வாய்திறப்பதோடு சரி மற்ற நேரங்களில் நானும் மௌனமாகவே இருக்கிறேன், எனது குடும்பத்தை வைத்துக்கொண்டு அவனிடம் என்ன பேசமுடியும். உதாரணமாக எனது சகோதரர்கள் இரவு உணவை உண்டு முடித்தபிறகு 'சூர்சு'க்குச்(Source) சென்று குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று என்னிடம் தெரிவிக்க்கிறபோது, எங்கள் அனைவருக்கும் குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று அவனிடம் சொல்வது நானாகத்தான் இருக்கும். நான் சொல்வது எதையும் காதில் வாங்காதவன்போல நடந்துகொள்கிறான். சொன்னதைத் திரும்பச் சொல்வதோ, எனது வேண்டுகோளை மறுபடி அவனிடம் கொண்டுபோவதோ நல்லதல்ல என்பது என் மூத்த சகோதரனின் தீர்மானம், அவனுடைய பொருமலுக்கும் நான் பணிந்து ஆகவேண்டும். கடைசியில் அவனும் மனமிறங்குகிறான். எனது கெஞ்சலை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தவன்போல தாழ்ந்தகுரலில், ஒருசில விநாடிகள் என்னோடு தனித்திருக்க விருப்பமென்ற தனது அந்தரங்க ஆசையைத் தெரிவிக்கிறான். இப்பொழுது என் முறை, எனக்கு அவன் சொல்வது எதுவும் காதில் விழாதாதுபோல நடந்துகொள்ளவேண்டும். அவனை பழி தீர்த்துக்கொள்ளும் கூட்டத்தில் இப்போது நானும் ஒருத்தி, ஒருவகையில் எங்கள் காரியத்தினைக் குறைசொல்ல, குறிப்பாக எனது மூத்தசகோதரனின் நடத்தைக்குப் பாடம்கற்பிக்க ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருவதற்காகவாவது அவனுக்குப் பதிலிறுக்கக்கூடாது. அவன் தொடர்ந்து, " உங்களூடைய அம்மா எவ்வளவு சோர்வாக இருக்கிறார்கள் என்று பார்", என்கிறான். உண்மையில் ஷோலென் சீனவிடுதியில் தடபுடலாகச் சாப்பிட்டதின் காரணமாக கண்களில் நித்திரை தெரிகிறது. என்னிடத்தில் பதிலில்லை. என்னுடைய மூத்தச்கோதரன் வாயிலிருந்து மோசமான வார்த்தையொன்று கேட்கிறது. அம்மா, 'எனது மூன்று பிள்ளைகளில் பெரியவனுக்கு மட்டும் ஒழுங்காக பேசவரும்' எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். திடீரென்று அங்கே அமைதி; எனது காதலனின் பயத்தினை அறிந்தவள், அவ்வாறே எனது இளைய சகோதரனும் பயப்படக்கூடியவன் என்பதை அறிந்திருக்கிறேன். மறுவார்த்தையில்லை. அடங்கிப்போகிறான். எல்லோரும் 'சூர்சு'க்குப்(Source) போகிறோம். அம்மாவும் வருகிறாள். கூடிய சீக்கிரம் உறங்கிவிடுவாள் என்று நி¨னைக்கிறேன்.

எனது மூத்த சகோதரனுக்கு முன்பாக, காதலன்போல அவன் நடந்துகொள்வதில்லை. அவனது இருப்பைத் தெரிவித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், எனக்கு அவன் இருப்பு வெற்றிடமாக, புல் பூண்டற்றுப் போனதாக உணர்த்தப்படுகிறது. எனது இச்சை மூத்த சகோதரனுக்குக் கீழ்ப்படிகிறது, அவன் என் காதலனை நிராகரிக்கிறான். இருவரையும் சேர்ந்து பார்க்கிறபோதெல்லாம், அப்படியொரு காட்சியை இனி என்னால் சகித்துக்கொள்ளகூடாதென்று நினைக்கிறேன். அவனுக்கேற்படும் இழிவுக்கு அவனது நோஞ்சான் உடலே காரணம், ஆனாலந்த நலிந்த உடலே என்னைத் திருப்திபடுத்துகிறதென்பதை எப்படி புரியவைக்க. எனது சகோதரனுக்கு அவன் ஒரு வெளியிற்சொல்லமுடியாத வெட்கக்கேடான விஷயம், பெருமைக்குரியவனல்ல. கமுக்கமாகப் பிரயோகிப்படும், என் மூத்தசகோதரனின் கட்டளைகளை மீறவோ எதிர்க்கவோ எனக்குத் துணிச்சலில்லை. இதுவே என் இளையசகோதரனென்றால் சண்டை இடமுடியும். என் காதலன் விஷயத்தில், எனக்கு எதிராகக்கூட எதையும் செய்யமுடிவதில்லை. இன்றைக்கு உங்களிடத்தில் அதைப்பற்றி சொல்கிறபோதுகூட என் கண்ணெதிரே பராக்கு பார்க்கும் பாசாங்குடன்கூடிய முகமொன்றைப் பார்க்கிறேன், அம்முகத்தில் இது தவிர வேறுவிஷயங்கள் சிந்திக்க இருக்கின்றன என்பதுபோல ஒருபாவனை. எனினும் விலையுயர்ந்த விடுதியொன்றில் நன்றாகச் சாப்பிட ஆசைப்பட்டு, இதுபோன்ற அவமதிப்புகளை சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறதே என்பதால் ஏற்பட்ட எரிச்சலில், கீழ்வாய்ப்பகுதி சற்றே இறுக, அதற்கான நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். எனது நினைவுகளைச் சூழ்ந்தபடி எங்கும் வேட்டையாடுபவர்களுக்கான தெளிந்த இரவு. குழந்தையொன்று 'வீல்' என்று அழுவதையொத்த சத்தம், எதிர்பாராத நேரத்தில் புறப்பட்டு அச்சுறுத்துகிறது.

சூர்ஸ¤க்குச்(Source) சென்ற பிறகும் நாங்கள் அவனிடம் உரையாடலில்லை என்றே சொல்லவேண்டும்.

மர்த்தெல் பெரியே(Martel Perrier) கொண்டு வரச் செய்தோம். என் சகோதரர்களிருவரும், கொண்டுவந்த உடனேயே மடமடவென்று குடித்துவிட்டு, இரண்டாவதாக ஒன்று வேண்டுமென்றார்கள். அம்மாவும், நானும் எங்களுடையதை அவர்களிடம் கொடுத்தோம். குடித்து முடித்தார்களோ இல்லையோ, போதை தலைக்கேறியது. என் காதலனிடத்தில் பேசவில்லை என்ற குறையே தவிர, அவர்கள் புலம்பலில் குறைச்சல் இல்லை, குறிப்பாக எனது இளைய சகோதரனைச் சொல்லவேண்டும். அந்த இடம் ஏதோ இழவு வீடுபோல இருப்பதாகக் குறைபட்டுகொள்கிறான், தவிர அங்கே மது பரிமாற பெண்கள் இல்லையே என்ற வருத்தம் வேறு. வார நாட்கள் என்பதால் சூர்சு(Source)வில் அதிகக் கூட்டமில்லை. எனது இளைய சகோதரனுடன் சிறிது நேரம் ஆடினேன். என் காதலனுடனும் சிறிது நேரம் ஆடினேன். எனது மூத்த சகோதரனோடு நான் ஆடவில்லை, அவனுடன் இதற்கு முன்பு ஆடியதுமில்லை. ஓர் ஆணுக்கான கவர்ச்சி அவனுடலில் அதிகமென்று நினைக்கிறேன், அது ஏற்படுத்தும் பயம் என்னை அவனை நெருங்கவிடாமல் தடுக்கிறது. எங்கள் இருவருக்கும் பொதுவான அம்சம் எங்கள் முகத்துக்கிடையே உள்ள ஒற்றுமை. ஷோலென் நகரத்து சீனனுடைய கண்கள் கலங்கி இருக்கின்றன, கொஞ்சம் சீண்டினால் அழுது விடுவான்போல. என்னிடம், " நான் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தேன்?", என்கிறான். பதிலுக்கு நான் அவனிடம்," உனக்கெதற்கு அவர்களைப் பற்றிய கவலை, வீட்டிலும் இதுதான் நிலைமை, எந்த மாதிரியான சூழ்நிலையென்றாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்பது அரிது", என்கிறேன்.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner