இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
சமாதானத்தின் அவசியமும் சர்வதேசத்தின் முன் தலை குனிந்த மகிந்த ராஜபக்க்ஷவின் ராஜதந்திரமும்!
 
இலங்கைத் தீவு....மீண்டும் இலங்கையில் பல்வேறு பிரிவினருக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் நாட்டைப் பற்றியெரிய வைத்துள்ளன. தாய்த்தமிழகத்தை நோக்கிய ஈழத்துத் தமிழ் அகதிகளின் எண்ணிகையும்,  மோதல்களுக்குள் சிக்கி அழியும் அப்பாவி மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது கவலைக்குரியது. ஸ்ரீலங்காவின் இன்றைய ராஜபக்ஷச அரசு விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்வதாக எண்ணிக்கொண்டு திட்டமிட்டுத் தமிழ் மக்கள் மீதான தனது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனாலும் இவ்வளவு அழிவுகளுக்குமிடையிலும் இலேசான நம்பிக்கைக் கீற்றாகத் தொடரும் சமாதான முயற்சிகள் ஓரளவு ஆறுதலை அளிக்கின்றன. அண்மைக் காலமாக இலங்கையின் பல்வேறு முரண்பட்ட சக்திகளுக்குமிடையில் அதிகரித்து வரும் மோதல்கள் மீண்டும் தீவிரமாகச் சமாதான நகர்வுகளை முன்னெடுப்பதன் அவசியத்தை  வலியுறுத்துகின்றன.
 
சர்வதேச சமூகம்  இலங்கை மீண்டும் போருக்குத் திரும்புவதை விரும்பவில்லையென்பது மட்டுமல்ல அவ்விதமொரு நிலை ஏற்படாதிருப்பதற்காகத் தம்மால் முடிந்த அளவுக்கு அழுத்தங்களையும் பிரயோகிக்கத் தயாராகவுள்ளதென்பதையும் மேற்படி அண்மைக்கால நிகழ்வுகள் புலப்படுத்தி நிற்கின்றன. கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது பற்றிப் பெரிதாக ஸ்ரீலங்கா அரசு சந்தோசப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளின் விடுதலைப் புலிகள் மீதான தடைகள் புலிகளைச் சமாதான நகர்வுகளை நோக்கித் திரும்புவதையே மையமாகக் கொண்டவை. ஆனால் அதே சமயம் முன்பெல்லாம் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஓரபட்சமாகச் செயற்படும் பெரும்பாலான சர்வதேச நாடுகள் தற்போது ஈழத்தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளை விளங்கிக் கொண்டுள்ளன எனபதையும் அவற்றின் அரசியல் நகர்வுகள் மூலம் புரிய வைத்துள்ளன. இது ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகளுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதலாம்.
 
குறிப்பாகப் பின்வரும் அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:
 
1. அண்மையில் ஜப்பானிய சிறப்புத் தூதுவரான அகாசி இலங்கையின் நிலைமை மோசமடைந்து யுத்தத்திற்கு நாடு திரும்பினால் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகளை ஈடுபடுத்துவதசியம் என்னும் கருத்துப்பட தன் எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்தார். அதே சமயம் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப் படை வருவது தவிர்க்க இயலாதது என்று கருத்து தெரிவித்திருந்தது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க.வின் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன ஐக்கிய நாடுகள் சபையினது தீவிர உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்ப வேண்டிய சூழ்நிலையை வலியுறுத்தி வருகின்றனவென்றும் ஐக்கிய நாடுகள் சபையானது முடிவெடுத்துவிட்டால் சிறிலங்கா அரசாங்கத்தால் அதைத் தடுக்க முடியாது. ஐ.நா.வுக்கு வேறு மாற்று வழியில்லையென்றும் அதே சமயம் ஐ.நா. அமைதிப் படையினது முயற்சிகள் தோல்வியடையுமானால் நாடு பிளவுபட்டு வட-கிழக்கு தனியரசாக மாறிவிடுமென்றும், இது போன்ற நிலைமை  21 நாடுகளில் ஏற்பட்டிருக்கிறதென்றும் எச்சரித்திருந்தார். இது இலங்கையின் தேசிய பிக்கு முன்னணிக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ஜப்பானிய அரசு தன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டுமென அம்முன்னணியின் தலைவரான தாம்பர அமில தேரர் வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையினது படையை ஈடுபடுத்துவது நாட்டைப் பிளவுபடுத்தி விடுமென்பதால் பிரிவினைவாத சக்திகள் இம்முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியிருந்தார். அதே சமயம் இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி,யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையினது அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டால் தமிழீழத்தை விடுதலைப் புலிகள் அமைத்துவிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
 
2. இலங்கை வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அவுஸ்திரேலிய இணைப்பாளர் ரொபின் கில் பற்றிக் அம்மையார் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இதுவும் சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
3. இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்க அரசின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய பாராளுமன்ற அங்கத்தினரான ஜோன் மேர்பி ஆத்திரமூட்டல்கள் எத்தகையதாகவிருந்த போதிலும், ஸ்ரீலங்க அரசின் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா அரசானது தமிழ்மக்களை நாட்டினொரு அங்கமாகக் கருதவில்லையென்ற தன் எண்ணத்தை வலிமையுறச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
 
4. சர்வதேச சமூகத்தின் உதவியுடன் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பின் சார்பில் பாரிசில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவ்வமைப்பின் ஆணையாளரான லூசி அர்பெளர் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், சர்வதேச காவல்துறை மற்றும் தடயவியல்துறையினர் உதவியுடன் படுகொலைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அத்துடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும், மேலும் இந்த வன்முறைகள் வெறும் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் மட்டும் அல்ல- சர்வதேச மனித உரிமைக சட்ட மீறல்களுமாகும் என்றும் அவர் தனதுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
 
5. இதே சமயம் ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தமிழகம் நோக்கிச் செல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் (UNHCR) ஆழ்ந்த கவலை தெரிவித்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தது.
 
 
6. இதே சமயம் அண்மையில் ஒருநாள் பயணமாக இலங்கை வந்திருந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு வந்தால் அவர்களுடனான உறவினை மறுபரிசீலனை செய்யத் தயாரென்றும் அத்துடன் சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட வேண்டுமென்றும் ,  இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கூறிய அதேசமயம் சிறிலங்கா அரசாங்கமானது ஏற்கனவே ஒப்புக்கொண்ட விடயங்களைச் செயற்படுத்த வேண்டுமென்றும் இதுவே ஜனநாயகப்பூர்வ அரசாங்கமொன்றிடமுள்ள தமது எதிர்பார்ப்பாகுமென்றும்,  ஆத்திரமூட்டல்களுக்குக்கெதிரான அரசின் நடவடிக்கை வன்முறையாக மாறி விடக்கூடாதென்றும்,  அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மனித உரிமை மீறல்கள் இல்லாமலிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமமென்றும் மேலும் ஜெனீவா ஒப்பந்தத்தை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டுமென்றும் கூறியிருப்பதானது ஸ்ரீலங்கா அரசின் ராஜதந்திர நகர்வுகளுக்கு விழுந்த பலத்த அடியாகும்.
 
7. இதே சமயம் அண்மையில் டோக்கியோவில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கான மாநாடு நடத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வேயை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் அண்மைய நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இழக்க வேண்டியேற்படுமென்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மீண்டும் அமைதிப் பாதைக்கு திரும்ப இருதரப்பினரையும் இணைத் தலைமை நாடுகள் கேட்டுக்கொள்வதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவர்த்தைகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமெனவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை அது கட்டாயம் கைவிட வேண்டுமெனவும்,  ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள் அரசியல்  தீர்வுகாணல் அவசியமெனவும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளை உள்ளடக்கியதாக அத்தீர்வு இருக்குமெனவும், அதற்காதரவான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளுமெனவும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது. அதே சமயம் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்குச் சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்து தீர்வு காண வேண்டுமமெனவும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வன்முறைச் செயல்களை மேற்கொள்ளும் குழுக்களை அது தடுக்க வேண்டுமெனவும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் அது பாதுகாக்க வேண்டுமெனவும்,  வன்முறையாளர்களைத் தண்டிக்க வேண்டுமெனவும்,
முஸ்லிம்களை உள்ளடக்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் உரிமைகள் வழங்கக் கூடிய ஒரு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான பாரிய அரசியல் மாற்றங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக வேண்டுமெனவும்,  அத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் உதவுமெனவும், அவற்றை மேற்கொள்ளத் தவறினால் சர்வதேச சமூகத்தினது ஆதரவை இழக்க நேரிடுமெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இவையெல்லாம் ஸ்ரீலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சு வார்த்தைகளை நோக்கித் தள்ளியிருக்கின்றன. தற்போது தடைப்பட்டுள்ள அமைதிக்கான நகர்வுகள் மீண்டும் முனைப்புடன், நம்பிக்கையுடன், இலங்கையின் அனைத்து மக்களின் நலன்களை மையமாக வைத்து முன்னெடுக்கப்படுவதொன்றே தற்போதுள்ள சூழலில் அப்பாவி மக்களின் அழிவுகள் தொடர்வதைத் தடுத்து நிற்கும் வ்ல்லமை மிக்கது. அதே சமயம் மேற்படி நிகழ்வுகள் மேலுமொரு உண்மையினையும் தெளிவுபடுத்தி நிற்கின்றன. விடுதலைப் புலிகள் மீதான தடைகளை விட சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஸ்ரீலங்கா அரசுக்கேற்பட்ட தலைகுனிவின் பாதிப்பு அதிகமானதுதான் என்பதுதானது. ஆனால் அந்தத் தலைகுனிவு ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள சூழலில் சாதகமானதொரு அம்சம்.
 
-  அவதானி -
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner