இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
நேபாள நாட்டில் மன்னராட்சியும் மாவோயிஸ்டுகளும்- வல்லரசுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் 'சிவதலம்'!
 
 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன்
 

நேபாள நாட்டு மன்னர்...சைவ சமயத்தின் முதற்கடவுளான சிவனின் தலம் என்று சொல்லப்படும் நேபாளத்தில் கடந்தமாதம் ( சித்திரை 2006) முழுதும் நேபாளாஅரசருக்கெதிராக ஏழு அரசியற் கட்சிகள் நடத்திய 'மக்கள் போராட்டத்தைத்' தெரிந்திராத அரசியல் அவதானிகள் ஒருசிலர்தானிருப்பார்கள். உலகில் உள்ள ஒரேயொரு இந்து தேசமான நேபாளத்தில் நடக்கும் அரசியல் எழுச்சிக்குப் பின் எத்தனை வல்லரசுகள் தங்கள் சுயநலத்திற்காகப் பாடுபடுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இன்று ஈராக் நாட்டிலிருந்து சூடான் நாடுவரையான பல நாடுகளில் வல்லரசுகளும் பணம் படைத்த நாடுகளும் தங்கள் கைவரிசைகளைக்காட்டி வருகின்றன.

தனது நாட்டின் இருபக்கத்திலும் இன்று உலகில் பலம் பொருந்திய நாடுகளாகப் பூதாகார வடிவெடுக்கும் இந்தியாவும் சீனாவும், அத்துடன் எவருடைய நாட்டிலும் தன் மூக்கை நீட்டும் அமெரிக்காவும் (அவர்கள் தூணிலும், துரும்பிலும், உலகில் எந்தமூலையிலும்  இருக்கும் அபார வல்லமை படைத்தவர்கள் என்று தங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கும் வல்லரசு!!!) எப்படித் தங்கள் நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கப்போகிறார்கள் என்பது நேபாளாப் புத்தி ஜீவிகளுக்குத் தலையிடியைக்கொடுக்கின்றது.

 
இலங்கையிலிருந்து உலகெங்கும் பரந்து கிடக்கும் இந்துக்களாகிய (சைவர்கள்?) பெரும்பாலன தமிழர்கள், இன்று உலகத்தில் உள்ள ஒரேயொரு இந்து நாட்டுக்கு, பலம் படைத்த நாடுகளால் என்ன நடக்கிறது, எங்களுக்கு நடந்த பல அரசியற் திருப்பங்கள்மாதிரி நேபாள மக்களுக்கும் நடக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். இந்தியா, சீனா என்ற பெரிய இரு நாடுகளைத் தெற்கிலும் வடக்கிலும் கொண்டசிறிய நாடான நேபளத்தில் அவர்களின் அண்டை நாடான சீனாவும் இந்தியாவும் எப்படி உள் நுழைந்திருக்கிறார்கள், எப்படி நேபாள மக்களின் எதிர்காலத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விடயங்கள்.
 

நேபாள் நாட்டு வரைபடம்...

 
ஆசியாவின் புராதன சரித்திரத்திரத்தில் நேபாளா நாகரிகத்தின் வளர்ச்சி, கி.மு. 9000 வருடங்களுக்கு மேலிருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சிகள் சொல்கின்றன. மனித நாகரிகத்தின் பல பரிமாணங்களான, கலை, சட்டம், விஞ்ஞானம், தத்தவம், அரசியல், ஜனநயகம் என்று பலதுறைகளின் வளர்ச்சிக்கு அத்திவாரமான கிரேக்க நாகரீகமே கி.மு.8000 என்று அகழ்வாராய்ச்சிகள் சொல்லும்போது நேபாளா மக்களின் நாகரீகம் , அந்தப் பிராந்தியத்திலுள்ள ஆசியா நாடுகளின் ( சீனா, இந்தியா) வளர்ச்சியுடன் தொடர்புள்ளது என்று அகழ்வாராய்ச்சிகள் விளக்குகின்றன.

புத்தரின் காலகட்டத்தில் ( சித்தர்த்த கெளதமர்-563-483) மதம் நேபாளத்திற்கு கி. பி. 4-5ம் நூற்றாண்டுகளில் பரவமுதல் உலகில் பல இடங்களிலுள்ளதுபோல் ஆதிமக்களும் பல விதமான கடவுள்களையும். சமய வழிபாடுகளையும் கொண்டிருந்தார்கள்.

நேபாளத்தின் இந்து சமயத்தின் அதிகாரம், சந்திரகுப்த மௌரியர்களின் ஆதிக்கத்திற்கு 5ம் நூற்றாட்டிற் தொடங்கியது. அந்தக்கால கட்டத்தில் இந்தியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் புத்தமதம் பரவியது. நேபாளமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனாலும் இந்து இனவழியினரான லிச்செஸ்வி பரம்பரையினர் ஆட்சியில் நேபாளம் இருந்தது. இந்து பிராமணியத்தின் அத்திவாரமான சமஸ்கிருதம் அரச மொழியாகவிருந்தது.

 
11ம் நுற்றாண்டில், தென்னிந்தியாவை ஆட்கொண்டிருந்த சளுக்கிய சாம்ராச்சியம் நேப்பாளம் வரை தன் ஆதிக்கத்திஐப் பரப்பியது. நடத்தியது.11ம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் தனது இராணுவ வல்லமையால் தில்லி சேர்ந்த பலபகுதிகளைத்தனது கைக்குள் கொண்டுவந்தாலும்  நேபாளத்தில்  அந்த முறசி வெற்றி பெறவில்லை. ஆனால் முஸ்லிம் வியாபரிகளின் தொடர்பும் அதன்பின் முஸ்லிம் குடியேற்றமும் நடந்தது.
 
சிதறிக்கிடந்த பலதரப்பட்ட சிறு இனங்களை, காட்மண்டுவிலுள்ள இந்து சாம்ராச்சியம் பரிபாலனம் செய்தது.

இந்து பிராமணியத் தத்துவங்கள் முன்னெடுக்கப்பட்டன. நேபாளிய மன்னர் பிராமணியக்கடவுள்(வைஷ்ணவர்கள்) விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படவைத்தார்.அவரைக் கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் கிடையாது. மன்னர் பரம்பரை கடவுள் பரம்பரையாகக் கருதப்பட்டது.14-18ம் ந்நூற்றாண்டுவரை நேபாளம் மூன்று அரசதானிகளாகவிருந்தன. 1768ல் பிரித்திவி நாராயனண் ஷா என்ற இந்து மகராஜாவின் தலைமையில் மூன்று இராஜதானிகளும் ஒன்றாயின. அந்தக்கால கட்டத்தில் இந்தியா முழுவதையும் தனதி பிடிக்குள் கொண்டுவர ஆசைப்பட்ட பிரித்தானிய சாம்ராச்சியத்தினர் நேப்பாளத்திற்கும் படையெடுத்தனர். 1816-1818 வரை நேபாள  பிரித்தானிய யுத்தம் நடந்தது  கடைசியில் அவர்களைத்திருப்திப்படுத்த நேபாளத்தின் ஒரு பகுதியாப் பிடித்து வைத்திருந்த  சிக்கிம் பகுதியைப் பிரித்தானியரிடம் கொடுத்துவிட்டுப் பிரித்தானியர் நேபாளத்தைத் தாக்ககூடாது என்ற ஒப்பந்தத்தை நேபாள அரசர்  செய்து கொண்டார்.அன்றிலிருந்து சிக்கிம் இன்றும் இந்தியர் கையிலிருப்பதும் அதை எதிர்த்து சிக்கிம் மக்கள் போராடுவதும் தெரிந்ததே.

 
இதே கால கட்டத்தில் (1815) பிரித்தனியர், பிரான்சிய சக்கரவர்த்தி நெப்போலியனை வாட்டர்லூ என்ற இடத்தில்(பெல்ஜியம்) என்ற இடத்தில் வெற்றிகொண்டார்கள். அக்கால கட்டத்தில்  இலங்கை முழுவதையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவரப் பெரிய கண்டிப் போர் (1815) கண்டி அரசருக்கும் பிரித்தானியருக்குமிடையில் நடந்தது என்பதைச் சரித்திரம் படிக்கும் மாணவர்கள் உலக அரசியல் வரலாற்றில் எப்படி பிரித்தானிய போன்ற வல்லமையுள்ள நாடுகள் ஒரே நேரத்தில் எப்படிப் பலநாடுகளில் பலதரப்பு வெற்றிகளைக் கண்டார்கள் என்று தொடர்பு படுத்திப்பார்க்கலாம். உதாரணத்திற்கு இன்று அமெரிக்காவும் பிரித்தானியாவும் முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் சமர் புரிவதைச் சரித்திர வரலாற்களுடன் ஒப்பிடலாம்
 
யார் படையெடுத்தாலும் நேபாளிய மக்கள் எப்போதும் தங்கள் தேசிய உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். பலதரப்பட்ட சிறு சிறு குழுக்களாகவிருந்த நேபாளா மக்கள் பெரும்பாலோர்றூயர் மலையுச்சிகளையண்டிய பகுதிகளில் ஒரு இனத்துடன் இன்னொரு இனம் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் இன்னும் வாழ்கிறார்கள். இந்தியாவின் வடக்கிலிருந்து நேபாளதிற்குப் படையெடுத்த குப்த இராஜ பரம்பரை ஆதிக்க வாதிகளுக்கு நேபாளாத்தின் தெற்குப்பகுதியான காட்மண்டு பிரதேசத்தைக் கைப்பற்றியதுடன் இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளையும் மேம்படுத்தினார்கள். திபேத்திய-பேர்மிய பரம்பரைக்குடிமக்கள் இன்னும் புத்த சமயவாதிகளாயிருக்கத் தெற்குப்பக்கம் இந்துக்களின் ஆதிக்கத்தில் மேம்பட்டது.  இந்துசமயத்தின் பலகோட்பாடுகள் (பயங்கரமான சாதியமைப்புக்கள்) மிகவும் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 
நேபாள நாட்டு மக்கள்.....அதற்கு உதாரணமாக ஒரு சிறுதகவல்: எனது ஆங்கிலச் சினேகிதி ஒருத்தி பலவருடங்களுக்கு முன் சமூக வரலாறு ஆராய்ச்சியாளராக ( Social Anthropologist)  நேபாளம் போயிருந்தாள். பிராமணியக் குடும்பங்களில் வேலைசெய்யும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் கிட்டத்தட்ட அடிமைகளாக நேபாளத்தில்  நடத்தப் படுகிறார்கள். ஒரு பிராமணியக் குடும்பத்திற்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு தீண்டப்படாச் சாதியைச் சேர்ந்த பெண் பிரசவ வலியாற் துடிக்க, அவளின் முதலாளிகளான பிராமணியர்கள் அவளை மாட்டுக்கொட்டிலுக்குள் பிரசவிக்கப்பண்ணினார்கள். தனியே அந்தப்பெண் வலியாற் துடித்தாள். அந்த வீட்டுக்கு அருகில் குடியிருந்த எனது சினேகிதி விடயம் தெரிந்து, அந்தப்பெண்ணுக்கு உதவி செய்யப்போனபோது தடுக்கப்பட்டாள். அந்தத் தடையையும் மீறி உதவி செய்தாள். தீண்டத் தகாத மக்களாகப் (Untouchables)பிராமணியர்களாற் தாழ்த்தி நடத்தும் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யப் போனதால் எனது சினேகிதியும் தீண்டத்தகாத பெண்ணாக நடத்தப்பட்டதுமல்லாமல் நேபாளாத்தை விட்டு வெளியேறுமளவுக்குத் தள்ளப் பட்டாள்.

1990ம் ஆண்டின் பிற்பகுதியில் அவள் என்னுடன் லண்டனில் பப்ளிக் ஹெல்த் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வந்த போது 'நீ ஒரு இந்துப் பெண்ணா' என்று என்னை கேட்டாள். 'ஏன் அந்தக் கேள்வியைக்கேட்கிறாய்' என்று  நான் கேட்டபோது 'மனிதர்களைச் சாதியடிப்படையில் பிரித்து மிருகமாக நடத்தும் இந்து சமயத்தை மனதார வெறுக்கிறேன் ' என்றாள். அவள் எங்கள் 'ஒவ்வீசு'க்கு வந்தகால கட்டத்தில், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழிக்கவேண்டும். நேபாள மக்களுக்குச் சமத்துவம் வரவேண்டும் என்று போராடத்தொடங்கிய மாவோயிஸ்டுகளின் குரல் அகில உலகமயப்பட்டதைப் பார்த்து என் சினேகிதி, 'உலகம் மிகவும் வேகமாக மாறி கொண்டிருக்கிறது. நேபாள மக்களுக்கும் மாற்றம் வரவேண்டும்' என்றாள். வெளிநாட்டார் வெறுக்குமளவுக்கு சாதிப்பிரிவுகள் அமுல் நடத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய வறுமையுடன் வாழும் மக்கள் தொகை அதிகம்.

மக்களின் சிந்தனைச்சுதந்திரதையும் போராட்ட உணர்வையும் கட்டுப்படுத்த சமயத்தைப் பாவிப்பது உலகெங்கும் நடப்பதுபோல் நேபாளத்திலும் நடக்கிறது.
 
நேப்பாள இராச்சியம் நாற்பது விதமான வித்தியாசமான இனங்களைக்கொண்டது சனத்தொகையில் 26 கோடிமக்களைக்கொண்ட நேபாளம் ஒரு நாளும் இனரீதியான சண்டைக்கோ, பிரிவினைக்கோ போரிட்டது கிடையாது. திபேத்திய-பேர்மிய இனவழி, இந்திய-ஆரிய இனவழி ( பிராமணியா ஆதிக்கம்) என்று இரு பெரும் வித்தியாசமான மக்களையும் முசாலாமன்ஸ் என்ற முஸ்லிம் சிறு பான்மையின மக்களையும்கொண்டது. பலமொழிபேசும் மக்களைக் கொண்டது.இவர்களின் கலாச்சாரம், பண்பாடுகள் புத்த மதம், இந்து மதம் இரண்டோடும் இரண்டறக்கலந்தது. 

நேபள இராச்சியம் இரு பெரிய இராஜ குடும்பத்தால் ஆளப்பட்டுக் கொண்டு வருகிறது. ஷா பரம்பரை, ராணா பரம்பரை. இராஜ தந்திரங்களை வலுப்படுத்த ஒருத்தொருக்கொருத்தர் திருமணங்கள் மூலம் உறவுகளை வலுப்படுத்தினாலும் இருவருக்குமிடையில் யார் யாரை முதலில் வீழ்த்துவது என்ற உள் நோக்கம் எப்போதும் இருந்துகொண்டேவந்தது. இவர்களின் பகைமயைப் பாவித்தவர்கள், பாவிப்பவர்கள் நேபாளத்தைச் சீர் குலைக்க விரும்புவர்களாகும். இருபக்கங்களிலும் மிகவும் வலிமைவாய்ந்த இரு நாடுகளான இந்தியா, சீனாவை எல்லை நாடுகளாகக் கொண்டிருப்பதால் நேபாளம்  அண்டை நாடுகளின் ஒற்றர்களின் தேவலோகமாகக்கருதப் படுகிறது.
 
1940ம் ஆண்டுகளில் இந்தியாவில் சுதந்திரப்போராடம் உச்ச நிலையிலிருந்த கால கட்டத்தில் நேபாளத்திலும் அரசாட்சியில் இருந்த பிரித்தானியா ஆதிக்கத்தின் சினேகிதர்கள் என்று சொல்லப்பட்ட ராணா இராஜபரம்பரைக்கு எதிராக நேபாள மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

சீனா, நேபாளத்தின் அண்டை நாடுகளில் ஒன்றான திபேத்தை ஆட்கொண்டபின் இந்தியா உடனடியாகத் தன் இராஜதந்திரதைக் காட்டத்தொடங்கியது.

இந்தியாவுக்குச் சினேகிதமான இந்தியாவின் உதவியுடன் அரசர் திருபுவனன் (அதிக  வலிமையற்ற அரசராக ) ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணா பரம்பரை ஓரம் கட்டப்பட்டது. இந்தியாவுக்குச் சினேகிதமான நேபாளியக் காங்கிரஸ் கட்சி மக்களின் குரலாக ஒலித்தது.

மன்னர் திருபுவனனின் பின் அவரின் மகன் மகேந்திரா 1960 ஆட்சிக்கு வந்ததும், மக்கள் குரலை அடக்க கொங்கிரஸ் பார்ட்டியையும் தடைசெய்தார்.  பஞ்சாய்த்து முறையைக் கொண்டு வந்தார்.

அவரின் மகன் பிரேந்திரா 1972ல் பதவிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் குரலும் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.
 
அதே காலகட்டத்தில் இந்தியா முழுதும் இருந்த மன்னராட்சிகள் இந்திரா காந்தியால் தடைசெய்யப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. நேபாள அரச குடும்பத்துடன் தொடர்புள்ள சிம்லா இராச்சியம் (இந்தியாவின் வடக்கிலுள்ள மலைப்பிரதேச இராஜதானி. பழைய பிரித்தானிய ஆளும் வர்க்கத்தின் கோடைக் கனவுலகம்) இந்திரா காந்தியால் பிரச்சினைக்குள்ளானது.

இந்திய அரசின்  ஆசிவாதம் பெற்ற நேபாளிய கொங்கிரஸ்பார்ட்டிக்கு அரசர் அடிபணியவேண்டிவந்தது.  பன்முக அரசியலைப்பு நேபாளத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 50 வருடங்களில் முதன்முறையாகத் தேர்தல் வைக்கப்பட்டது. இ¢ந்தியாவின் அடிவருடி என்று இராஜ பரம்பரையின் திட்டுகளுக்கு உள்ளாகும் கிரிஜா பிரசாத் கொய்ராலா ('உயிரே'' முதல்வன்' 'மும்பாய் எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் நடித்த நடிகை மனிஷா கொய்ராலாவின் தாத்தா) பிரதமரானார்.

இந்தியா மாதிரியே, அரசாங்கத்தில் மிகவும் பெரிய ஊழல்கள் நடக்கத்தொடங்கின. அரச அதிகாரிகளின் செல்வம் குவிந்தது, சாதாரண மக்கள் வறுமையில் வாடினார்கள். மன்னரால் அதிகம் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் பதவிகளிலிருந்தோர்பலர் அரச குடும்பதினரும், உறவினர்களும், சினேகிதர்களுமாவர்.

1996ல் நேபாளத்தின் அரசியல் முறைமாறி , மக்கள் அதிகாரம் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவோயிஸ்டுகள் போராட்டத்தைத் தொடங்கினர்.
மக்கள் அரசர் பிரேந்திராவில் விசுவாசமுடையவர்களாக இருந்தார்கள்.  இங்கிலாந்து ஈட்டன் என்ற பணக்காரப் பள்ளிகூடத்தில் படித்த இளவரசர் தீபேந்திரா, ராணா இராஜ குடும்பத்தைச் சேர்ந்த தேவயானி என்ற இளவரசியைக் காதலித்தார்.

ராணா பரம்பரை 1846-1950 வரை பிரித்தனிய சாம்ராச்சியத்தின் உதவியுடன் அரசாண்டவர்கள்.

தங்களின் எதிரிகளான ராணா குடுமத்திலிருந்து மருமகள் வருவதை மகாராணி ஐஸ்வர்யா விரும்பவில்லை. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி, விசேட சடங்குக்காக அரச குடும்பம் ஒன்றாய்ச் சேர்ந்திருந்த வேளை, நேபாள இளவரசர் திபேந்திரா, தனது காதலுக்குத் தடையாகவிருந்த தாய், தகப்பன், இளவரசர் நிரான்ஞன்,மன்னரின் தங்கைகளான  இளவரசிகள் சாந்தி,சாரதா அவளின் கணவர் குமார், மன்னரின் மகள் இளவரசி ஸ்ருதி, மன்னரின் மைத்துனர் ஜெயந்தி இன்றைய மன்னரின் மனைவி என்று அன்று கூடியிருந்த அத்தனை இராஜ குடும்பத்தினரையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இன்று மகாராஜாவாகவிருக்கும்  ஜானேந்திரா வெளி விடயமாகப் போயிருந்தால் உயிர் தப்பினார்.
 
அரச குடும்பத்தில் வெறுப்புள்ளவர்கள், ஜானேந்திராதான், தனக்கு அரச பதவி வேண்டும் என்பதற்காக இந்தக் கொலைகளையெல்லம் செய்தார்  என்ற  வதந்தியைப் பரப்பினார்கள். இறந்திவிட்ட அரசரின் இன்னொரு தம்பியான தினேந்திரா மிகவும் நீண்ட கலத்திற்கு முதலே தனக்கு எந்த அரச பதவிகளும் பட்டமும் வேண்டாம் என்று விலகிவிட்டார். ஜானேந்திரா சந்தர்ப்பவசமாக அரசராக்கப்பட்டர்.
 
அரச குடும்பத்தை அடியோடு தொலைக்கவேண்டும் என்றிருந்தவர்கள் புதிய அரசராக வந்த ஜானேந்திரருக்குப் பல தலையிடிகளைக் கொடுத்தார்கள். போதாக்குறைக்கு மன்னரின் மகன் பாரஸ் என்பவன் ஒரு உல்லாசப் பேர்வளி. உதாவாக்கரை இளவரசன். அத்துடன் ஒருநாள் , குடிபோதையில் கார் ஓட்டி வரும்போது யாரையோ அடித்துக் கொலையும் செய்து விட்டான்.

அரச குடும்பம் ' தெய்வ பரம்பரை, சட்டங்களுக்கு அப்பாற் பட்டவர்கள்' என்பதால் அவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. மக்கள் கொதிதெழுந்தார்கள்.

இதேகாலகட்டத்தில் அரசியலில் மிகவும் மோசமான ஊழல்களும் நடந்தன. அரசர், தனது ஆணைக்குள் ஆட்சியைக் கொண்டுவந்தார். பாராளுமன்றத்தைக்கலைத்தார். மக்கள் கொதிதார்கள். பல கட்சிகள் தோன்றின. உலகத்திலுள்ள ஒரேயொரு இந்து மன்னரின்  ஆட்சியை அழிக்கப் பலசக்திகள் பணத்தைக் கொட்டுகின்றன. அரசாங்கத்திற்கெதிராக ஏழுகட்சிகள் ஊர்வலம் செய்தன. இதில் எந்தக்கட்சிக்கு யார் பணம் கொடுத்தார்கள், ஊர்வலத்திற்கு வருவதற்கு ஒரு நாளைக்கு 15 டொலர்ஸ் என்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது இராஜ தந்திரமான விடயங்கள். மாவோயிஸ்டுகள் இந்த ஏழு கட்சிகளிலும் மிக முக்கியமானவர்கள். அரச குடும்பத்தை அழித்துவிட்டுக் குடியரசைக் கொண்டுவர நினைப்பவர்கள். (15.3.1919ம் ஆண்டு  இரஷ்ய மன்னரும் அவரின் குடும்பம் அத்தனைபேரும் பீட்டர்ஸ்பேர்க்குகு அர்கிலுள்ள கிராமத்தில் வைத்துப் புரட்சிவாதிகளாற் கொலைசெய்யப்பட்டார்கள் அப்படியே நேபாள மன்னர் குடும்பத்திற்கும் நடக்க வேண்டும் என்று நேபாளப் புரட்சிவாதிகளிற் பலர் ஆர்வத்துடன் துடிக்கிறார்கள்)
 
மாவோயிஸ்டுகளின் கொள்கைகளில் நம்பிக்கையுள்ள கிராமங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். 70 வீதமான கிராமப்புற்ப்பிரதேசங்கள் போராளிகளின் கைக்கு வந்தது. மாவோயிஸ்டுகளின் ஆட்சிவந்தால் சீனாவின் அதிகாரம் நேபாளத்தில் தலைதூக்கும் என்பதனால் இந்தியா இடைவிடாமல் மன்னருக்குப் புத்திசொல்லி, இன்னுமொரு பன்முகப் பாராளுமன்ற முறையரசைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள்.

82 வயதில் சுவாசப்பை வேலைசெய்யாமல் செயற்கைச் சுவாசப்பையின் உதவியுடம் வைத்தியாசாலையிற் படுத்திருக்கும் தங்கள் நண்பர் பிரசாத் கொய்ராலாவைப் பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா மன்னருக்கு உத்தரவு போட்டுவிட்டது.

அவரின் வாழ்நாள் இனி எண்ணிக் கொண்டிருக்கும் சிலநாட்கள். அவருக்குப் பின் என்ன நடக்கும்?


மன்னர் ஜானேந்திராவுக்கு 58 வயது. கடந்த ஐந்து வருடங்கள் அவர் பட்ட துயரால் மிகவும் வாடிப்போய் வயதுபோன மனிதர் மாதிரித் துவண்டு தெரிகிறார். அவருக்குப்பின் அவரின் பொல்லாத மகன் பாரஸ் அரசனாக் வரப் பொதுமக்கள் விடமாட்டார்கள். அரசருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்தான் பரம்பரைச் சொத்துக்கள். மகனுக்கு மகுடம் கிடைக்கா விட்டால் அவர் மகளுக்கு மகுடம்  கிடைக்குமா?
 
'புனித கன்னித்தேவதையைத்' தெரிவு செய்து வணங்கும் நேபாளா மக்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு அரசியை ஏற்றுகொள்வார்களா என்பது கேள்வி? என்னென்றால் இந்த மன்னர்( தேவ ஷா) பரம்பரையைச் சேர்ந்த மகாராணி இராஜேந்திர லஷ்மி என்பவர்,ராணா பரம்பரையைச் சேர்ந்த ஜான் பகதூர் என்பவருடன் போராடித் தோற்றுப்போய் ராணா பரம்பரையினர் 100 வருட ஆட்சியில் வரக் காரணமாகவிருந்தார். இப்போது, அரசர் ஜானேந்திரரின் வீழ்ச்சிக்குப்பின் ராணா பரம்பரையைக் கொண்டுவருவார்களா (காதலுக்காக உயிர் விட்ட இளவரசர் தீபேந்திரா விக்ரம் ஷா தேவ்,என்பவரின் ராணா பரம்பரைக்காதலி இளவரசி தேவயானியின் சந்ததி!) என்பது கேள்வி.
 
பிரசாத் கொய்ராலா சகாப்தம் முடிந்தபின் யார் பிரதமராவார்? இந்தியா இப்போதே யாரையும் மனதில் வைத்திருக்கிறார்களா? இந்தியா, தனது பாதுகாப்புக்கருதித் தன் அண்டைநாடுகளில் எப்போதும் ஒரு கண்வைத்திருப்பது அரச இராஜதந்திரம். இந்தியாவின் அண்டைநாடுகளான பூட்டான், நேபாளம் எப்போதும் இந்தியரின் கண்காணிப்பில் இருக்கும். மாபெரும் சக்தியாக வளரும் சீனாவுடன் இந்தியா பலவிதங்களில் போட்டிபோடவேண்டியிருக்கிறது. இதில் ஒரு அம்சம் நேபாளத்தில் இந்திய இராஜ தந்திர ஊடுருவல். அத்துடன் மிக உயர் மைலைப் பிரதேசமான நேபாள நாட்டு நீர்வளத்தில்உண்டாகும் மேலதிகமான எலெற்றிசிட்டியை இந்தியா மிகவும் மலிவான விலையிற் பெற்றுக்கொள்கிறது. நேபாளத்தில் எத்தனையோ விதமான மூலப்பொருட்கள் இன்னும் தொடப்படாமலும் விரிவுபடுத்தப்படாமலும் முடங்கிக்கிடகின்றன. இவற்றில் கைவைக்க இந்திய முதலாளிகள் கழுகுகள்போற் காத்திருக்கிறார்கள். நேபாளத்தின் பொருளாதாரம் வளர்வதற்கு மன்னராட்சிப்பிரச்சினை, அரசியல் கட்சிகளின் ஊழல்கள் என்பன இடையூறாகவிருக்கின்றன.

வறுமை கொந்தளித்தால் புரட்சிவரும் என்பது தத்துவம். அதைத் தடுக்கவும் , தனது அரசியல் இலாபங்களுக்கும் இந்தியா தனது காய்களை நகர்த்துகிறது.


இந்துக்களின் கட்சியான பா.ஜ.க வுக்கு நேபாளத்தில்' இந்து இராஜதானி' என்ற அக்கறையுண்டு. இந்திய கொங்கிரஸ் அரசுக்கு எப்படியும் நேபாளக் கொங்கிரஸைப் பதவியில் வைத்திருக்கத் தேவையிருக்கிறது. இவர்களை விட, நேபாளத்திற் தங்கள் மூக்கை நுளைக்கும் வெளிநாட்டுச் சக்திகள் பலவிதங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போதைய அரசரின் நிர்வாகத்தில் பல பெரிய ராணாக்கள் முக்கிய பதவிகளிருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் ஏதோ ஒரு அரச குடும்பம் நேபாளத்தை ஆளவேண்டும் என்று நினைப்பார்கள்
 
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner