இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2010  இதழ் 129  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

குரு.சுப்ரமணியன் (சென்னை) குட்டிக் கதைகள்

சர்க்கஸ்


குரு.சுப்ரமணியன் (சென்னை) குட்டிக் கதைகள்ஒமனாவுக்கு அந்த பிரபல சர்க்கஸ் கம்பெனியில் வேலை. ஏழ்மையின் காரணமாக அவள் பெற்றோர்கள் சின்ன வயதிலேயே அவளை அந்த சர்க்கஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார்கள்

அந்த வேலையில் அவள்சேர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன.

சர்க்கஸில் அவள் செய்யும் அபார சாகசச்செயல்களுக்காகவே மக்கள் திரண்டு வருவது யாவரும் அறிந்ததே.

அந்தரத்தில் பாரில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் விளையாடுவதும் மறுமுனையில் இருக்கும் மற்றொரு பாருக்குத் தாவுவதும் போன்ற விளையாட்டுகளில் அவள் மிகுந்த தேர்ச்சி பெற்றுப் பார்வையாளர்களின் பாராட்டுதலையும் சம்பாதித்திருந்தாள்.

சார்க்கஸ் மானேஜரும் நிகழ்ச்சிகளில் அவளுடைய செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார். அவளே அந்த சர்க்கஸின் வெற்றிக்கும் மாபெரும் வசூலுக்கும் ஒரு முக்கிய காரணம் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பகல் காட்சிக்கு எக்கச்சக்கமாகக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது.

ஆனால், அன்று காலை ஷாப்பிங் போயிருந்த ஓமனா அதுவரை திரும்பி வரவில்லை. காரணம் தெரியாமல் மானேஜர் தவித்துப்போனார். அவளுக்காகவே சர்க்கஸ் பார்க்க வந்திருக்கும் பொதுமக்களை எப்படி சமாளிப்பது என்று பயந்தார்.

பகல் காட்சி ஆரமபிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஓமனா ஒரு ஆட்டொவில் வந்து இறங்கினாள். நொண்டிக்கொண்டே
தன் ருமிற்கு நடந்தபோது, அவள் வலது காலில் ஒரு கட்டுப் போடப்பட்டிருந்ததை அனைவரும் கவனித்தார்கள்.

"அடேடே!என்னம்மா, என்ன ஆச்சு, ஏன் கால்லே கட்டுப் போட்டிருக்கே, அடி பட்டுதா, எப்படிப்பட்டது.."என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனார் மானேஜர். "டவுன் பஸ்ஸிலேயிருட்ந்து இறங்கும் போது அஜாக்கிரதையால் தவறிக் கீழே விழுந்துவிட்டேன், சாரே" என்று அழுதுகொண்டே சொன்னாள் ஓமனா.

மானேஜருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் விழித்தார்!

**********************

 

பரிசு

குரு.சுப்ரமணியன் (சென்னை) குட்டிக் கதைகள்அன்று அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா.

வழக்கம்போல் பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, மாறுவேடப் போட்டி எல்லாம் கோலாகலமாக நடந்து முடிந்தன.

பத்தாம் வகுப்பு மாணவன் சுதாகர் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாக விழாத்தலைவர் ராஜலிங்கம் அறிவித்தார்.

அவனை விடமிகவும் பிரமாதமாகப் பேசிய கேசவனுக்குத்தான் கண்டிப்பாக முதல் பரிசு கிடைக்கும் என்று எல்லாருமே எதிர்
பார்த்தார்கள்.

ஏமாற்றத்தால் கேசவன் முகம் வாடிப்போனதைக் கண்டு கொள்ளத் தவறவில்லை சுதாகர்.

அன்று மாலையே பரிசுக்கோப்பையை எடுத்துக்கொண்டு கேசவன் வீட்டிற்குச் சென்றான். "நடந்ததை நினைத்து நீ சிறிதும் கவலைப் படாதே. நானே கூட உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் என்று முடிவுசெய்திருந்தேன். ஆனால் நான் தலைமை ஆசிரியரின் மகன் என்பதாலும் ராஜலிங்கம் எங்கள் குடும்ப நண்பர் என்பதாலும், தீர யோசிக்காமல் எனக்கு முதல் பரிசைத் தந்துவிட்டார். நியாயமாகப் பார்த்தால் இந்தக் கோப்பை உனக்குத்தான் சேர வேண்டும், இந்தா, இதை சந்தோஷத்தோடு தருகிறேன். மறுக்காமல் வாங்கிக்கொள்" என்று பரிவுடன் அளித்தபோது கேசவனின் கண்களில் நீர் துளிர்த்தது
.

g.thambudu@gmail.com


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்