இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2007 இதழ் 91  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!

பசோலினி : கலையும், விளையாட்டும்!

சுப்ரபாரதிமணியன்

ஆழ்ந்த சிந்தனையில் பசோலினிமுகத்தில் புரளும் தலை மயிர்கற்றையுடன் அந்த இளைஞன் ரோமின் தெருக்களில் அலைகிறான். வீ£தியில் நடந்து போகிறவர்களுடன் பேச்சு கொடுக்கிறான். வாகனங்களின் தாறுமாறான இயக்கமும் இரைச்சலும் அபரிமிதமாக இருக்கிறது. அலட்சியமும், இறுக்கத்திலிருந்து தளர்ந்த மனநிலையிலுமாக அவன் முகம். போரும் குண்டுகளின் பொழிவும் இடைக்காட்சிகளாகி துணுக்குறச் செய்கிறது. கடவுளின் குரல் அவனை அழைக்கிறது. இளைஞன் அதை அலட்சியம் செய்தபடி நடக்கிறான். சிவப்பு காகிதப் பூவை கையில் ஏந்தியபடி தெருக்களில் அலைகிறான். கடவுளின் குரல் உட்சபட்ச்மாய் அலலைக்கழிக்கிறது. வெகுளித்தனம் பாவசித்தமானது என்கிறது கடவளின் குரல். அவற்றையெல்லாம் சபிக்க வேண்டும் என்கிறது. அநீதிகளுக்கும் போரின் வன்முறைகளுக்கும் மத்தியில் மகிழச்சியாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் அழிந்து விட வேண்டும் என்கிறது. வெளுத்த நீல வானத்தைக் காட்டும் காட்சியினூடே கைகளை விரித்தபடி அவனின் சவம் கிடக்கிறது. காகிதப்பூ அவன் அருகில்.

பசோலினியின் குறும்படங்களில் ஒன்று இது. இதில் வரும் கடவுளின் குரல் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் குரலை ஒத்திருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் பசோலின.¢ அவரின் குரல் என்றைக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அநீதி, பாசிசத்திற்கு எதிராகவே இருந்திருக்கிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு கூட அவர் எதேச்சாதிகாரம் , சிஜஏ ஆதிக்கம் , பொதுப்பண விரயம், வன்முறையை ஊக்குவித்தல், எல்லா சிந்தனைத்தளங்களும் வெளியேற்றப்பட்ட அறநெறி குறித்து தன் தீர்க்கமான கருத்துக்களை முன் வைத்தவர். பாலியல் துன்புறுத்தல் என்ற வகையில் பதினொரு வயது பையன் ஒருவன் பசோலினி மீது குற்றம் சாட்டியிருந்தான். அதனால் பசோலினி அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டார். எழுபதுகளில் இத்தாலியில் நிலவிய அதிகாரத்துவம் படைப்பாளிகளை மிகவும் பாதித்திருந்தது. முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள். மிகச் சிதைந்த பொருளாதார நிலை.எங்கும் வன்முறை. பசோலினீயின் எழுத்தும் படைப்பும் இதற்கு இதற்கு எதிராக இருந்ததே அவரின் கொலையின் பின் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இருபத்தோராம் வயதிலான அவரின் எழுத்துக்களிலிருந்து ஓரிநனப் பாலுணர்வு சம்பந்தமான அவரின் ஈடுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வயது பாலியல் உணர்வின் சந்தோச காலம் என்கிறார்.ஓரினப் பாலுணர்வு அவரை அலைக்கழித்திருக்கிறது. உடம்பின் தேவை மற்றும் பாலியல் பிரச்சினைகள் குறித்து அவற்றின் முக்கியத்துவத்தை பல வகைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து சொல்லாடல்களும் விவாதத்திற்கும் மார்சியத்தின் போதாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மனித நேயம் கத்தோலிக்கம், மார்க்சியம், உளவியல் சிந்தனை மற்றும் ஓரினப் பாலுணர்வு வெவ்வேறு வகைப் பழக்கங்களாய் மற்றும் படிமங்களாய் அவரின் படங்களில் நிறைந்திருக்கிறது. பாலியல் பிரச்சினைகளும், பாலியல் தொழிலாளர்களும் அவ்வகையில் அவர் படங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். கத்தோலிக்கத்தினூடே மார்க்சியத்தின் தேவையைப் பல வகைகளில் உணர்ந்திருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்க மார்க்சியம் அவருக்குப் பெரிதும் உதவியிருப்பதும் கலைஞர்களும் மற்றும் எழுத்தாளர்களின் இருப்பும், நியாயமும், பணியும் மார்க்சியத்தால் வழி நடத்தப்படுவதாகவே பெரிதும் நம்பினார். மார்க்சியத்தைத் தவிர கிறிஸ்துவும், பிராய்டும் அவரின் பெரும் ஆதர்சங்களாக இருந்திருக்கிறார்கள். பைபளின் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் விமர்சனரீதியிலும் விவரணங்களாகவும் பல படங்களில் பதிவு செய்திருக்கிறார். கிறிஸ்துவ நிறுவனங்களை தம் படைப்புகளில் கேவலமாக சித்திகரித்த குற்றச்சாட்டிற்காக கைதாகியும் இருக்கிறார்.

உலகின் பேரிலக்கியப் படைப்புகளில் ஒன்று ஈடிபஸ் மன்னன். சிக்மண்டு பிராய்டு போன்றவர்களின் தீவிர பரிசிலனைக்குட்பட்டது. புராதன கிரேக்க மொழிகளில் சோபாக்ளிஸ் எழுதிய இந்த நாடக் வடிவத்தை பசோலினி தன் வரலாற்றுப் படம்மாக்கியிருக்கிறார். ஒரு வகையான விஞ்ஞான விளக்கத்தை பசோலினியின் ஒற்றை பாலுணர்வு பிரச்சனைக்கு இக்கதை அளிப்பதாய் நம்பியிருக்கிறார். ஒடிபசிற்கும் அவன் தாயிற்குமான அன்பை மீறி ஒடிபசின் பாலைவன அலைவுறுதல் படத்தின் மையமாகியிருக்கிறது. முதல் பாகம் இத்தாலிய நகரமொன்றின் ஒரு ராணுவ அதிகாரி , அவன் குழந்தை, மனைவி என மையமாகிறது. குழந்தை மீதான சிறு வெறுப்பில் குழந்தை அலைக்கழிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகிறது. இதிலிருந்து சோபாக்ளியின் நாடகத்திற்கு தாவுகிறது. கடைசிப்பகுதி மீண்டும் நிகழ்காலத்திற்கு வருகிறது. ஒடிபஸ் புல்லாங்குழல் வாசித்தவறு கண்கள் குருடான நிலையில் ஒரு மாதா கோவிலில், ஒரு தொழிற்சாலைத்தெருவில் அலைகிறான். அவனின் அம்மா அவனை அடிக்கடி எடுத்துச் செல்லும் புல்வெளியில் திரிகிறான். இவற்றின் பிம்பங்களை அழிவுறுகிற கவி மனம், மார்க்சிய கவி மனம், அழிவுறும் நிலை என்ற வகையில் வகைப்படுத்திப் பார்க்கிறார் பசோலினி.

அறுபதுகளில் இந்தியாவிற்கு வந்த பசோலினி இந்தியா பற்றின தனது பதிவுகளை புத்தகமாக்கியிருக்கிறார். அதுவே ஒரு படமாகவும் விரிகிறது. இந்திய சாமியார்கள், எழுத்தாளர்கள் , பழைய மகாராஜாக்களின் குடும்பத்தினர் என்று பலரின் பேட்டிகளாய்த் தொடர்கிறது. இந்திய சமூக் நிலைகள், வறுமை , மதம், உழைக்கம் வர்க்கம் என்று அவர் மனம் துணுக்கிடுகிறது. ஒரு வகை அவநம்பிக்கைவாதியாக அவர் இதில் வெளிப்படாவிட்டாலும் இந்தியாவின் சோகங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருப்பதும் விரவும் பிம்பங்களால் தெளிவடைகிறது. எரியூட்டப்படும் ஒரு பிணத்தைக் காட்டியபடி படம் முடிவடைகிறது. பின்னணியில் உடம்பை உலுக்கும் புல்லாங்குழல் இசை. பசோலினியின் பின்னணிக்குரல் அலைந்து தேய்வுறுகிறது. " இந்தியாவிற்கு வந்து போகும் ஒரு மேற்கத்திய உலகைச் சார்ந்தவன் ( எல்லாம் உள்ளவனானவன் ) எதையும் தருவதில்லை.ஆனால் இந்தியா ( எதுவுமில்லாதது ) எல்லாவற்றையும் தருகிறது."

சுப்ரபாரதிமணியன்
srimukhi@sancharnet.in


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner