இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர்  2008 இதழ் 105  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

வன்னிப் பகுதியில் தினமும் 250 குடும்பங்கள் இடம்பெயர்வு!
நிவாரணம் வழங்க உதவுமாறு கோரிக்கை!


வன்னியில் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் இடம்பெயர்ந்த குடும்பமொன்று மரமொன்றை ஆதாரமாக்கி ஒரு கொட்டிலை அமைத்தபோதும் வெள்ளம் அந்த கொட்டிலுக்குள் புகுந்துள்ளதைக் காணலாம். ... வன்னியில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களால் தினமும் 250 குடும்பங்கள் என்ற ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக முல்லைத்தீவு அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. தினமும் கடும் மோதல்கள் நடைபெறுகின்றன. பாரிய படைநடவடிக்கை, கடும் ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல்களாலும் விமானத் தாக்குதலாலும் தினமும் பெருமளவு குடும்பங்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு வெளியேறி வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 250 குடும்பங்கள் வரை இடம் பெயர் வதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதிவழங்கும் நிறுவனங்கள் இடம்பெயரும் மக்களின் நிலையைக் கருத்திற்கொண்டு உதவ முன் வரவேண்டும் என புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்ற இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிவரை 33,327 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து முப்பத்தெட்டாயிரத்து நானூற்றி தொண்ணூற்றி மூன்றுபேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்களையே பராமரிக்க முடியாத நிலையிலும் அவர்களுக்கு இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்க முடியாத நிலையிலும் தினமும் பெருமளவு மக்கள் இடம் பெயர்வதால் வன்னியில் நிலைமை மேலும் மேலும் மோச மடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 1000 கூடாரங்கள் அவசரமாக அமைப்பு

வன்னியில் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் தங்கியுள்ள மக்களுக்கான உடனடி உதவியாக 1000 பிளாஸ்ரிக் கூடாரங்களை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்.) நிதியுதவியில் இவை மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்டமாக 460 கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு முன்னதாக மரங்களின் கீழ் தங்கியுள்ள மக்களை மழையிலிருந்து பாதுகாப்பதற்காகவே இக்கூடாரங்கள் அவசரமாக அமைக்கப்படுவதாக அதன் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 22 நலன்புரி நிலையங்களில் 2000 குடும்பங்கள் தங்கியுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாடசாலைகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்கியுள்ள மக்களுக்கான தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் 50 வீதமான வீடுகள் உடனடித் தேவையாகவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினக்குரல் 08 - September - 2008
http://www.thinakkural.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner