இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010  இதழ் 130  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பாகம் இரண்டு: நினைவுகளின் சுவட்டில் ...
நினைவுகளின் சுவட்டில் ....

- வெங்கட் சாமிநாதன் -

அத்தியாயம் 52.


வெங்கட் சாமிநாதன்நான் ஹிராகுட் வந்ததிலிருந்து, அது ஒரு ஞாயிறறுக் கிழ்மை, எல்லோராலும் ராஜா என்று அழைக்கப்பட்ட் எஸ்.என். ராஜாவின் வீட்டில் தான் தங்கினேன் அவர் தான் என்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாரோ தெரியாது, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறு நாள் தான் எனக்கு வேலை கிடைத்துவிட்டதே. ராஜா அங்கு ஹிராகுட் காம்ப்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார். அங்கிருந்த தமிழர்களில் மூத்த வயதினரும் அவர்தான். ராஜா, அவ்வளவாக பெரிய வேலையில் இல்லாது இருந்தாலும், ஒர் எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் அஸ்பெஸ்டாஸ் சுவரும் கூரையும் கொண்ட வீட்டில் இருந்தாலும், அவர் வயதிற்காகவோ என்னவோ, அல்லது அவரது யாருக்கும் ஏதாவது உதவியாக இருக்கும் குணத்தாலோ, எல்லோரும் மரியாதையுடன்

தான் அவருடன் பழகினார்கள். “உனக்கும் ஒரு க்வார்ட்டர் கிடைக்கும் வரை இங்கேயே இருக்கலாம். இங்கேயே சாப்பிடலாம். என்ன? சரிதானா? இல்லை உனக்கு வெளிலேதான் சாப்பிடணும்னாலும் சரி ,அதை உனக்குன்னு க்வார்ட்டர் கிடைத்து போனாயானால் வேறு ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னார்.

இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? புதிய இடத்தில்? எனக்கு என்று ஒரு க்வார்ட்டர் கிடைக்கும் வரை இருந்தேன். ஒரு மாத காலமோ என்னவோ. கொஞ்சம் கூட இருக்கலாம். ராஜாவுக்கு அடிக்கடி மாறி வரும் ஷிஃப்ட். ஹிராகுட்டின் பவர் ஹவுஸில் ஸ்விட்ச் போர்ட் ஆபரேட்டர். எட்டு மணிக்கு ஒருதரம் ஷிஃப்ட் மாறும். வீட்டில் எப்போதும் யாராவது இருக்க அது சௌகரியம். அவருக்கு ஊர் காவேரி பட்டினம். மாமி அப்போது ஊருக்குப் போயிருந்தாள். நான் அவரது வீட்டிற்குப் போன இரண்டொரு நாட்களில் அவரது மைத்துனன், அவருடன் வந்து சேர்ந்தான். என்னை விட நான்கைந்து வய்து மூத்தவன். வேலை தேடி வந்திருந்தான். வைத்தியநாதன் என்று பெயர். இந்த பெயர்கள் எல்லாம், அறுபது வருடங்களுக்கு முன் ஒரு குறுகிய கால கட்டமே பழகிய மனிதர்களின் பெயர்கள், முகம் எல்லாம் எப்படி ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை. அடுத்து ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் ஒருவர், ஸ்ரீனிவாசன் என்று பெயர். சில நாட்களே தங்கியிருந்தார். எங்கள் எல்லோரையும் விட அதிகம் படித்த மனிதர். ஒரு அசாத்திய சுய நம்பிக்கை யோடு இருப்பவர் என்பது அவர் எங்களுடன் பழகிய தோரணை யிலிருந்து தெரிந்தது. “இதோ பாருங்கள் ராஜா, எனக்கு சுளையாக ரூ 200 கைக்குக் கிடைக்கவேண்டும். அதற்கு குறைந்தால் எனக்கு அவர்கள் கொடுக்கும் வேலை வேண்டாம். ரெவென்யூ ஸ்டாம்புக்குக் கூட நான் பைஸா கொடுக்கமாட்டேன்” என்றார். ஊர் விட்டு இவ்வளவு தூரம் வேலை தேடி வந்த ஒரு மனிதர் இப்படியெல்லாம் நிபந்தனைகள் போடுவார் என்றால் எங்களுக்கு ஆச்சரியம் தான். நாங்கள் சிரித்தோம். ஆனால், அவருக்கு வேலை கிடைத்தது. முன்னல் சொன்னபடியே அவர் வேலையை ஒப்புக்கொள்ள வில்லை ஒரு வாரத்துக்குள் அவர் ஹிராகுட்டை விட்டுப் போய்விட்டார். பிறகு, எனக்கு ஒன்றிரண்டு வயது மூததவனாக ஒருவன் வந்திருந்தான். வேலை தேடித்தான். கொஞ்சம் விசித்திரமான ஆள். ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவன் என்று தெரிந்த்து. இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்ட அன்று அவன் போகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “நாள் நன்னாயில்லை. இன்னிக்குப் போகாதே”ன்னு அப்பா சொல்லிட்டார்” என்றான். எங்களுக்கு வேடிக்கயாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. அவன் குடும்பத்துக்கு அந்த வேலை தேவை. அவன் சம்பாதித்தாக வேண்டும். இல்லையெனில் ஊர் விட்டு ஒரிஸ்ஸாவில் இந்த வனாந்திரத்துக்கு வருவானேன். பாரதியார் கூட் இந்த மாதிரியான ஒரு வேடிக்கை மனிதர் பற்றி எழுதியிருக்கிறார். வீட்டை விட்டுக் கிள்ம்பிய போது ஒரு விதவை எதிர்ப்பட்டாள் என்று போகாமல் அன்று காரியத்தைத் தள்ளிப் போட, அதன் பிறகு அந்த வருஷம் பூராவுமே நல்ல நாளோ நல்ல சகுனமோ ஆகவில்லை என்று. அவர் எழுதி நாற்பது வருடங்களுக்குப் பிறகும் அதே கதை.
எங்கள் அலுவலகம் அதிக தூரத்தில் ஒன்றும் இல்லை. அலுவலக நேரத்தில் இஷ்டப்பட்டால் வீடு வந்து கொஞ்சம் இளைப்பாறிப் பின் போக்லாம். 15 நிமிட நடை. ஒரு புதிய குடியிருப்பு எவ்வளவு பெரிதாக இருக்கமுடியும்? அதிகம் போனால் ஒரு 300 வீடுகள் அதாவது 30 வரிசை வீடுகள். வரிசைக்குப் பத்தாக. அலுவலக்ம் ஒரு ஷெட்டில் இருந்தது. MB shed என்றார்கள். அதற்கு என்ன அர்த்த்மோ தெரியாது. அதற்குள் தான் ஒரு சீஃப் என்சினியர், இரண்டு சூப்பிரண்டெண்டெண்ட் என்சினியர் அலுவலகங்கள் எல்லாம் அந்த் ஷெட்டுக்குள். ஒவ்வொருத்தரின் கீழும் மூன்று நான்கு செக்‌ஷன்கள் அதற்கான செக்‌ஷன் ஆபீஸர்கள் ஒவ்வொரு செக்‌ஷன் ஆபீஸர் கீழும் ஏழெட்டு பத்துபேர் உதவியாட்கள். இதெல்லாம் நான் சொல்லக் காரணம் அங்கு நடந்த விவகாரங்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாகவும் பைத்தியக்காரத்தன மாகவும், இது தானா இந்த்ப் பெரிய பெரிய அதிகாரிகள் எலலாம் செய்யும் காரியங்கள்! என்று என்னை நினைக்க வைத்தது தான்.

நான் இருந்த செக்‌ஷனில் இரண்டு டைப்பிஸ்டுகள். நான் ஒருத்தன். எனக்கு பத்து வயது மூத்தவனாக ஒரு மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்று ஒரு வங்காளி. என் செக்‌ஷனுக்கு அதிகாரி, தேஷ் ராஜ் பூரி என்னும் செக்‌ஷன் ஆபீஸர். அங்கு இருக்கும் குமாஸ்தாக்கள் இரண்டு சூப்பிரண்டெண்டெண்ட் என்சினியர்களுக்கு கடிதங்கள் எழுதுவார்கள். அது திருத்தப்பட்டு எங்கள் டேபிளுக்கு வரும் அது டைப் செய்யப்பட்டு தேஷ் ராஜ் பூரி சரி பார்த்து சீஃப் என்சினீயரின் பிஏ –யின் கையெழுத்துக்குப் போகும். அது எங்கள் செக்‌ஷனுக்கு கையெழுத்தாகி திரும்பி வரும்நான் இருந்த செக்‌ஷனில் இரண்டு டைப்பிஸ்டுகள். நான் ஒருத்தன். எனக்கு பத்து வயது மூத்தவனாக ஒரு மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்று ஒரு வங்காளி. என் செக்‌ஷனுக்கு அதிகாரி, தேஷ் ராஜ் பூரி என்னும் செக்‌ஷன் ஆபீஸர். அங்கு இருக்கும் குமாஸ்தாக்கள் இரண்டு சூப்பிரண்டெண்டெண்ட் என்சினியர்களுக்கு கடிதங்கள் எழுதுவார்கள். அது திருத்தப்பட்டு எங்கள் டேபிளுக்கு வரும் அது டைப் செய்யப்பட்டு தேஷ் ராஜ் பூரி சரி பார்த்து சீஃப் என்சினீயரின் பிஏ –யின் கையெழுத்துக்குப் போகும். அது எங்கள் செக்‌ஷனுக்கு கையெழுத்தாகி திரும்பி வரும். பின் அதை ஒரு டெஸ்பாட்ச் குமாஸ்தா பதிவு செய்து அதே ஷெட்டில் இருக்கு அடுத்த ரூமுக்கு அனுப்பி பெற்றதற்கு அங்கு குமாஸ்தாவின் கையெழுத்து வாங்கி வர ஒரு ப்யூன் இங்குமங்கும் போய் வருவான். அதே போல மற்ற அறைகளிலிருந்து மற்ற அறைகளுக்கு கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். இதே நாள் பூராவும் வருஷம் பூராவும் ஒரே ஷெட்டுக்குள் இருக்கும் பல ஆபீஸர்களுக்கிடையே கடிதங்கள் பரிமாறிக் கொள்வது தான் இந்த என்சினீர்களின் வேலையா?. இதற்குத் தான் இவ்வளவு பெரிய குடியிருப்பும், பவர் ஸ்டேஷனும், கடைகளுமா? இதற்குத் தான் 100 கோடி செலவாகும் என்று தில்லி அரசாங்கம் இவர்களைத் தேர்ந்தெடுத்து இங்கு அனுப்பியுள்ளதா? இப்படி ஒருத்தருக்கொருத்தர் கடிதங்கள் எழுதிக் கொண்டால், அணை எப்படிக் கட்டப்படும்? எல்லாம் ஒரே பைத்தியக் காரத்தனமாகப் பட்டது. குழ்ந்தைகள் விளையாட்டு மாதிரி இருந்தது.

ஏன் அடுத்த ரூமில் இருக்கும் மற்ற என்சினீயர்க்ளை கூப்பிட்டு, ”என்ன்ய்யா பண்றே, என்ன சமாசாரம்?” என்று கேட்டு பதில் பெற்றால் என்ன? என்று தோன்றிற்று ஆனால் இந்தக் கடித்ப் பரிமாறலின் ஒவ்வொரு க்ட்டத்திலும் எல்லோரும் ரொம்பவே சீரியஸாக் அந்தக் கடிதங்களைத் தயாரித்தார்கள். நேரில் பேசிக்கொள்ள வேண்டிய ஒரு சின்ன விஷய்த்தை ஏன் இவ்வளவு பெரிசு படுத்தி அமர்க்களப் படுத்துகிறார்கள்? என்று நான் அப்போது நினைத்தேன். மற்ற பொழுதெல்லாம் இவர்கள் நன்றாகத் தானே பேசுகிறார்கள்! அப்படியிருக்க ஆபீஸ் நாற்காலியில் உட்கார்ந்து ஃபைலைப் பிரித்த உடன் இவாகளுக்கு என்ன ஆகிவிடுகிறது? என்று எனக்குத் திகைப்பாயிருந்தது.

சின்ன விஷயம். வைத்திய்நாதனுக்கு வேலை கிடைத்து விட்டதா? என்று நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு அடுத்த ரூமில் இருக்கும் ராஜாவுக்கு குரல் கொடுப்பேனா, இல்லை ஒரு ஆபீஸும் எட்டு வேலை யாட்களும் வைத்துக் கொண்டு அவருக்கு லெட்டர் எழுதிக்கொண்டிருப்பேனா?

‘என்ன சாமா? ஆபீஸெல்லாம் எப்படி இருக்கு.? சிரமமா இருக்கா? பிடிச்சிருக்கா? என்று கேட்டார். ”எனக்கு என்னவோ ஒண்ணும் புரியலை. பைத்தியகாரத்தனமா இருக்கு,” என்றேன் “என்ன?” என்று கேட்டார். சொன்னேன். ராஜாவும் சீனிவாசனும் சிரித்தார்கள். “இப்போ அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் போனப்பறம் வேலை தொடங்கிடும். மற்ற என்சினீயர்கள் எல்லாம் அவங்க வேலை இடத்துக்கு ஆபீஸை மாத்திண்டு போயிடுவாங்க. அப்போ ஒரே ஷெட்டுக்குள்ளே பரிமாறல் நடக்காது. வேறே வேறே ஊர்லே இருக்கற வேறே வேறே ஆபீஸ்களுக்குள்ளே எழுதிப்பாங்க. அப்போ நேர்லே பேசி முடியாது. அப்புறம் என்ன நடக்கறது, நடககலை ங்கறதுக்கு ரிகார்ட் வேண்டாமா? அதான். பின்னாலே உனக்குப் புரியும்.” என்றார். ” நீ அப்பாக்கு லெட்டர் போடறே இல்லையா? ஊர்லே இருந்தா அவரோடே நேர்லே பேசிக்கலாம். ஆனா, இப்போ?” என்று விள்க்கினார். சரி என்று தலையை ஆட்டினேன. ஆனால் புரிந்ததாகச் சொல்லமுடியாது. ஒரு ஷெட்டுக்குள் இருந்துகொண்டு செய்யும் இந்தப் பைத்தியக்காரத்தனம் புரியத்தான் இல்லை. இப்படித்தான் உலகம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

புதிய இடத்தில் பொழுது அன்னிய உணர்வு இல்லாது சுகமாகக் கழிந்தது. வைத்திய நாதனுக்கு ச்ங்கீதத்தில் நல்ல ரசனை. பாடமாட்டான். ஆனால், நல்ல ஞானம். ஒரு நாள் இரவு வீட்டுக்குத் திரும்பி வரும்போது யார் வீட்டு ரேடியோவிலோ யாருடைய கச்சேரியோ கேட்டது. அந்த சமயம் வயலின் வாத்திய ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. “ராஜமாணிக்கம் வாசிக்கிறார் பாரு,” எப்ப்டிடா சொல்றே? என்று எங்களுக்கு ஆச்சரியம். “கேட்டா தெரியாதா என்ன” என்று வெகு அலட்சியமாக, ஆனால் வெகு சாதாரண பாவனையில் சொன்னான். இது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தை இல்லை என்ற பாவனையில்.

நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லோரும் எனக்கு மூத்தவர்கள். வந்த சில நாட்களிலேயே அன்று ஞாயிற்றுக் கிழமை. வெயில் கொளுத்திற்று. கோடை காலம் தொடங்கிவிட்டது, இனி போகப் போக அதிகமாகும் என்றார் ராஜா. “மகா நதி பக்கத்திலே தானே இருக்கு. இவ்வளவு பக்கத்திலே இவ்வளவு பெரிய ஆறு ஓடறப்ப்போ குளிக்கறதுக்கு மகாநதிக்கே போகலாமே?” என்று. எல்லோரும் கிளம்பினோம். அதிக தூரம் போக வேண்டிருக்கவில்லை. ஆனால் எனக்கு மகாநதியின் பிரும்மாண்டத்தைப் பார்ப்பது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது. முதலில் எடுத்த உடனேயே தெரிந்தது, மிக உயர்ந்த கரையிலிருந்து கீழே இறங்க் வேண்டியிருந்தது தண்ணீரில் கால் வைக்க. ஆற்றின் எதிர்க்கரையே தெரியவில்லை. இம்மாதிரியான, சமுத்திரம் போன்று அகன்று விரிந்து பாயும் ஒரு நதியைப்பார்த்ததே இல்லை. எனக்குத் தெரிந்த காவிரி எல்லாம் இதற்கு முன் ஒரு கால்வாய் என்றே சொல்லவேண்டும். வைகை மதுரையில் இன்ன்ம் கொஞ்சம் அகன்று காணப்பட்டது. ஆனால் நான் இருந்த 1946-47 லேயே வைகையில் தண்ணீர் கிடையாது. இங்கு ஒரு பெரும் சமுத்திரம்போல அக்கரை எங்கிருக்கிறது என்று தெரியாது பெருக்கெடுத்து ஓடுகிறது மகா நதி. மகா நதி தான். ஆனால் நடுவில் ஒரு தீவு இருப்பது தெரிந்தது. ஆற்றில் வெள்ளம் வந்தால் அந்தத் தீவில் தெரியும் தென்னை மரங்கள் கூட மூழ்கி விடும் என்றார்கள். அந்தத் தீவைத் தாண்டினால் மறு கரை தெரியும்.

குளிக்க இறங்கினோம். கொஞ்ச தூரத்தில், சுமார் நூறு அடி தள்ளி, பெண்கள் கூட்டம். எல்லா வயசிலும் ஒன்றிரண்டு. குளித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி, அவர்கள் மார்பில் துணி இல்லை. ஆனால் அவர்கள் அது பற்றி சிந்தனையே இல்லாமல் வெகு சகஜமாகத்தான் இருந்தார்கள். ஏதும் . ஆனால் பின்னர் தான் வேடிக்கை இருந்தது. எங்களில் சிலர் கோவணம் கட்டிக் கொண்டு குளிக்க இறங்கினார்கள். அவர்களுக்கும் அதுதான் முதல் தடவை என்று சற்றுப் பின்னர் எங்களுக்குத் தெரிய வந்தது. கோவணம் கட்டிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து அந்த பெண்கள் கூட்டம் சிரிக்க ஆரம்பித்து. அவர்களுக்கு ஒரு பக்கம் வெட்கமாகவும் இருந்திருக்கிற்து. ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்திருக்கிறது அவர்களூக்கு. சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. ”என்ன இது? ஏன் சிரிக்கிறார்கள்?” என்று கேட்டேன். ராஜாதான் சொன்னார். அவர்தான் எங்களுக்குள் ஹிராகுட்டுக்கு பழம் பிரஜை ஆயிற்றே. அந்தப் பழ்ங்குடிப் பெண்கள் கோவணம் கட்டிக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் தான் ஆண்கள் கோவணம் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கு சிரிப்பு தாங்க்வில்லை.” என்றார். “சொல்லியிருக்கக் கூடாதா?” என்றார் கோவணம் கட்டியிருந்த ஆசாமி ஒருவர். ‘இந்த நேரத்துக்கு இங்கு பெண்கள் குளிக்க வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் ராஜா.

அதற்குப் பிறகு நாங்கள் அதிக தடவை மகா நதிக்கு குளிக்கச் சென்றதில்லை. அங்கு இருந்தது சுமார் ஒரு வருட காலம் தான். அதற்குள் எங்கள் அலுவலகம் எதிர்க்கரையில் இருந்த புர்லாவுக்கு மாற்ற்லாகிவிட்டது. புர்லாவில இருந்த எங்கள் குடியிருப்பிலிருந்து மகா நதி அதிக தூரம். அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருந்தது.. அந்த ப்ழங்குடி மக்கள் மிகவும் நல்லவர்கள். மற்றவர்களையும் தம்மைப் போல் நினைப்பவர்கள். நகர்புற சாமர்த்தியங்களும் ஏமாற்றுக்களும் பொய்களும் அவர்களை இன்ன்ம் பீடிக்கவில்லை. அவர்களைப் போல் தான் அப்பக்கத்து
அலுவலகத்தில் ப்யூன் வேலை பார்ப்பவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அங்கு வேலைக்கிருப்பவர்கள் சீஃப் என்ஜினியரிலிருந்து சாதாரண குமாஸ்தா வரை ஒன்று பஞ்சாபிகள் பெருமபாலோர். அதற்கு அடுத்து வங்காளிகள், மலையாளிகள் பின்னர் தமிழ்ர்கள். குமாஸ்தா வேலையில் கூட ஒரியர்கள் மிகவும் சிலர் தான் இருந்தனர். ப்யூன்கள் வேலையில் தான் அவர்கள் பெருமபாலும் காணப்பட்டார்கள். “அவர்களுக்கு சொந்த வீடு(குடிசை தான்) நிலம் எல்லாம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு காசு வேண்டும். அதற்காகத்தான் வேலைக்கு வருகிறார்கள். வயிற்றுக்கு இல்லாமல் தவிப்பவர்கள் இல்லை அவர்கள்” என்றார். அலுவலகத்துக்கு வெளியே, ரோடோரம் பெண்கள் கடலை, கறிகாய், பழம் என்று சிறிய சாக்குத் துணி பரப்பி கடை வைத்திருப்பார்கள். எத்தனையோ தடவை நம்மிடம் இருக்கும் காசுக்கு மேல் ஏதும் வாங்கத் தோன்றினால், அல்லது தற்செயலாக கையில் காசு இல்லாது ஏதும் வாங்கக் கண்களில் பட்டு விட்டால், “அப்புறம் காசு கொடுங்கள்” என்று சொல்வார்கள். தெருவில் போகிறவனை எப்படி இவர்கள் நம்புகிறார்கள்? இதை வைத்துத் தானே அவர்கள் பிழைப்பு? “ என்று ராஜாவைக் கேட்டால்,அவர்களிடையே இம்மாதிரி எண்ணங்களே உதிப்பதில்லை. காசு கொடுத்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்பார்.  அவர்கள் ஏமாறித்தான் இருக்கிறார்கள். நான் ஹிராகுட்டுக்குப் போனது மார்ச், 1950-ல்.

அப்போது அணை வேலை எதுவும் தொடங்கப் படவில்லை. அதற்கு ஒரு வருடம் முன்புதான் மற்றவர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வீடு கட்டும் பணி தான் முதலில் நடந்துகொண்டிருந்தது. அதற்கு முன் அங்கிருந்த ஒரு பழைய கடைத் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் அங்கு துணிக்கடை வைத்திருந்த ஒரு மார்வாரிக்குச் சொந்தம் என்ற் தெரிந்தது. மற்ற கடைக்கார்கள் எல்லாம் வாடகை கொடுத்து கடை வைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல. அந்த மார்வாரி, வட்டிக்குக் கடன் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்த வழியில் அவனுக்கு அங்கிருந்த நிலங்கள் பெருமளவில் அவனுக்குச் சொந்தமாகியுள்ளதாகவும் சொன்னார்கள். எவ்வளவு காலமாக அந்த மார்வாரி அங்கிருந்தான். என்பது தெரியாது. அந்தப் பழங்குடி மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மிகப் பழ்ம் குடி அந்த மார்வாரிதான் என்று தெரிந்தது. ஏதோ கண்காணாத் இடத்தில் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்று என் அம்மாவும் மற்றவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை நினைத்துக் கொண்டேன். இதற்கும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் முன், அணைக்கட்டு என்ற நினைப்போ திட்டமோ இல்லாத காலத்தில் அங்கு குடி பெயர்ந்து தன்னை ஒரு பெரும் பணக்காரனாக நிலைநாட்டிக்கொண்டுவிட்ட அந்த மார்வாரியைப் பற்றி என் அம்மா என்ன நினைப்பாள்? அல்லது அந்த மார்வாரியின் பெற்றோர்கள் சிந்தனை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அங்கிருந்த ஒரே துணிக்கடை அவனது தான். அங்கு வேண்டியவர்களுக்கு ஒரு அவசர்த் தேவைக்கு பணம் வட்டிக்குக் கொடுப்பவனும் அந்த மார்வாரி தான்.

நாங்கள் நிறையப் பேர் இருந்ததால், அவரவர்க்கு வேலை நேரம் மாறுவதால், யாராவது வீட்டில் இருப்பார்கள். வீட்டைப் பூட்டி சாத்தியமில்லை. எல்லோரும் ஒன்றாக எங்காவது வெளியே சென்றால் தான் வீடு பூட்டப் படும். தவறிப் போய் ஒரு நாள் வீடு திறந்தே கிடந்திருக்கிறது. எல்லாம் பத்திரமாகத் தான் இருந்தது. திறந்த வீட்டில் யாரும் நுழையவில்லை. பிறகு இந்த நம்பிக்கையால் கவனமின்மை வந்துவிட்டால், ஏதோ திருட்டுப் போவது கண்டு பிடித்தோம். யார் பையிலிருந்தாவது சில்லரை போகும். ஒன்றிரண்டு ரூபாய்கள். மற்ற பணம் நோட்டுகள் அப்படியே இருக்கும். வந்தவனுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே திருடியிருக்கிறான் என்பது தெரிந்தது. இந்த விவ்ரம் மற்றவர்கள் அனுபவத்திலும் இருக்கவே இது தமாஷாக பேச்வத்ற்கு ஒரு விஷயமாகப் போயிற்று. (தொடரும்)

27.5.10

பாகம் இரண்டு: நினைவுகளின் சுவட்டில் – (53)

- வெங்கட் சாமிநாதன் -

அத்தியாயம் 53


வெங்கட் சாமிநாதன்எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு வருவதற்கான செலவுக்கு அம்மா அட்கு வைத்த நகையை மீட்க வேண்டும்.

முதலில் ஜெம்ஷெபூர் போகவேண்டும். நான் வேலை பார்ப்பவனாக, அவரால் தயார் செய்யப்ப்ட்டவனாக அவர் முன் நிற்க வேண்டும். மாமா, மாமி இருவ்ருக்கும் நேரில் சென்று நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவேண்டும். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். ராஜாவிடம் சொல்லிக்கொண்டு புற்ப்பட்டு விட்டேன். என்ன பெரிய விஷயம் ஒரு ராத்திரி பயணம். சாய்ங்காலம் ஐந்து மணிக்கு ஹிராகுட்டிலிருந்து பஸ் ஏறினால் சம்பல்பூர் அரை அல்லது முக்கால் மணி நேரத்தில். பின் சம்பல்பூரிலிருந்து ஜ்ர்ஸகுட்ர் ஒன்று அல்லது ஒன்றே கால் மணி நேரத்தில். ஜெர்ஸகுடா ஸ்டேஷனிலேயே ஏதாவது சாப்பிடலாம். ராத்திரி தான் கல்கத்தா போகும் பம்பாய் மெயில் வரும். காலையில் ஜெம்ஷெட்பூர் போய்ச் சேர்ந்துவிடலாம். போய்ச் சேர்ந்தேன். என்னைப் பார்த்ததும் மாமிக்கும் மாமாவுக்கு சந்தோஷம் தான். ஆச்சரியமும் கூட. “என்னடா இது, வேலையில் சேர்ந்து நாலு நாள் ஆகலை அதுக்குள்ள் என்ன அவசரம் உனக்கு?” என்று ஆச்சரியத்துடன் கண்கள் விரிய கொஞ்சம் சத்தமாகவே கேட்டார்கள். சொன்னேன். “உங்களைப் பாத்து நமஸ்காரம் பண்ணிச் சொல்லணும்னு தோணித்து? என்றேன். “சரிதான் போ. அதுக்கு என்ன இப்படி அவசரம்? அப்பாக்கு, நிலக்கோட்டை மாமாக்கெல்லாம் லெட்டர் போட்டயா, இல்லையா? என்று கேட்டார். எல்லோருக்கும் சந்தோஷம் தான். எப்படியோ எங்கேயோ வேலை கிடச்சுட்டதே. அவர்கள் பொறுப்பையும் நிறைவேற்றியாச்சே. இனி இவன் பாடு, இவன் சாமர்த்தியம்.,” என்று ஒரு நிம்மதியும் சந்தோஷமும். ஹிராகுட் எப்படி இருக்கு, ஆபீஸ் வேலையெல்லாம் கஷ்டமில்லாமல் இருக்கா,?” என்று கேடக ஆரம்பித்தவர் பின் கொஞ்சம் யோசிக்க்ற மாதிரி நிறுத்திப் பின், “ஆமாம் ராஜா தான் இருக்காரே. எல்லாம் பாத்துப்பார். ஏண்டா பாத்துக்கறாரோல்யோ? என்று இன்னொரு கேள்வியாக தானே பதிலையும் சொல்லிக்கொண்டு, “கவலைப் படவேண்டாம்” என்று சமாதானமும் சொல்லிக்கொண்டார் மாமா..

இரண்டு நாள் பொழுது ஜெம்ஷெட்பூரில் கழிந்தது. ஞாயிறு ராத்திரி டாடாநகரில் பம்பாய் மெயில் ஏறினேன். மாமா ஸ்டேஷனுக்கு வரவில்லை. பையன் எல்லாம் தனியாகவே இருந்து கத்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டார். காலையில் ஐந்து மணிக்கு ஜெர்ஸகுடா போய்ச் சேரும். விழித்திருந்து இறங்க வேண்டும். தெரியாதா, ஒரு தடவை போய்ப் பழக்கப்பட்டது தானே. இறங்கவேண்டுமென்றால் தானே விழிப்பு வந்துவிடும். மேலே ஏறிப் படுத்துக்கொண்டேன். மனதில் ஒரு நிம்மதி. சந்தோஷம். வாழ்க்கையை, தன்னந்தனியனாக எதிர்கொள்ள ஆரம்பித்தாயிற்று. நிலக்கோட்டையிலும், உடையாளூரிலும், திரிந்து கொண்டிருந்த கிராமத்துப் பையன் இப்போது வட நாட்டில் எங்கெங்கோ ஒரிஸ்ஸாவிலிருந்து பீஹாருக்கும், பீஹாரிலிருந்து ஒரிஸ்ஸாவுக்கும் என்னவோ நிலக்கொட்டையிலிருந்து வத்தலக் குண்டு போவது போல பிரயாணம் செய்துகொண்டிருக்கிறானே. வளர்ந்து கொண்டிருக்கிறான். உலகம் தெரிகிறது. என்று என் மனத்துக்குள் மிகத் திருப்தியுடன் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. கண் விழித்ததும் மேலேயிருந்து குனிந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நன்றாக விடிந்து விடடது தெரிந்தது. வண்டி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கீழே குனிந்து எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கேட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிலாஸ்பூர்வந்து விடும். உனக்கு எங்கே இறங்கணும், பேட்டா?” என்று கேட்டார்கள். “ என்னது? பிலாஸ்பூரா? ஜெர்ஸகுடா போயிடுத்தா? “ என்று திடுக்கிட்டுப் போனேன். ”ஜெர்ஸகுடா காலை ஐந்து மணிக்கே வந்துவிடுமே. சொல்லியிருந்தா எழுப்பியிருப்போமே” என்று வருத்தத்துடன் சொன்னார்கள். சரி பிலாஸ்பூரில் இறங்கி திரும்பிப் போகிற வண்டிக்காக காத்திருந்து ஏறுக்கொள். இப்போ வேறு என்ன செய்வது? தப்பு பண்ணியாச்சு” என்றார்கள். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துகொள் என்று புத்தி மதி சொன்னார்கள். சின்ன பையன், ஹிந்தி வேறே என்னமோ போல பேசுகிறான் என்று நினைத்திருப்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் பிலாஸ்பூரில் இறங்கக் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை. மன நிம்மதியின்றி கவலையுடன் கீழே இறங்கி உடகார்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே இருந்தேன். இது எப்படி ஆயிற்று? முதலில் பழக்கமில்லாத் இடத்துக்கு சரியாக இறங்க வேண்டிய இடத்தில் சரியாக இறங்கி வண்டி மாறி, பஸ் பிடித்து எல்லாம் போனவனுக்கு இரண்டாம் முறை ஏன் தவறிப் போயிற்று? ராத்திரி தூக்கம் வருவதற்கு முன்னால், ரொம்ப புத்திசாலியாக பெரியவனாக வளர்ந்து வருவதைப் பற்றி எண்ணி பெருமைப் பட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. எவ்வளவு சீக்கிரம் அந்த கர்வம் பங்கமடைந்து விட்டது!

பிலாஸ்பூர் ஸ்டேஷனில் இறங்கி கல்கத்தா பக்கம், போகும் வண்டிக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் வேளையில் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்து இருக்கைகளில் உடகார்வதும் பின் போரடித்தால், ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நடப்பதுமாக பொழுது கழிந்தது. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். ஹிராகுட் போய் விடலாம். சரி. ஆனால் ஆபீஸ் போகமுடியாது. நாளைக்குத் தான் போகமுடியும். லீவும் போடவில்லை. என்ன சொல்வது? அது வேறு கவலை அரித்துக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் கிடைத்த சமூஸாவும் டீயும் தான் பசியை அடைக்கக் கிடைத்தது. ஒரு வழியாக ஒரு பாஸ்ஞ்சர் வண்டி வந்தது. அதில் ஏறி ஜெர்ஸகுடா போய்ச் சேர்ந்தேன். அடுத்து சம்பல்பூருக்குப் போக கொஞ்ச நேரத்தில் ஒரு ஷட்டிலும் வந்தது. பின் சம்பல்பூர் ஸ்டேஷனிலிருந்து ஹிராகுட் போக பஸ் பிடித்து ஹிராகுட் போய்ச் சேர்ந்த போது மணி ஆறோ என்னவோ ஆய்விட்டது.

வீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிவந்தது. புது ஆள், சின்ன பையன், இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாறவேண்டும், அதுவும் வேளை கெட்ட வேளையில். காலையிலேயே வந்திருக்க வேண்டியவனுக்கு என்ன ஆயிற்று? என்ற கவலை அவர்களுக்கு. எனக்கு தூங்கிப் போய்விட்டேன், பிலாஸ்பூர் போய்த் திரும்பி வருகிறேன் என்று சொல்ல வெட்கம். “மாமா தான் அப்பறமா போய்க்கலாம்டா”ன்னு சொன்னார் என்றேன். “சரி. எப்பறமா போக்லாம்னு சொன்னார்? எந்த வண்டியிலே ஏறினே, உனக்கு ஏறறதுக்கு வண்டியே கிடையாதேடா. பொய் சொல்றேடா, அதுவும் ஒழுங்காச் சொல்லத் தெரியலையே. இப்பதான் வேலை கிடச்சிருக்கு. மாமா அப்பறமா போலாம்னு சொல்வாராடா? என்ன பண்ணினே சொல்லு? என்று என் அசட்டுத்தனத்தை அங்கிருக்கும் எல்லோருக்கும் முன் போட்டு உடைத்தார்கள். நான் விளித்தேன், என்ன பதில் சொல்வதென்று தெரியாது. பின் மெதுவாக “ஆமாம், தூங்கிப் போயிட்டேன். விழித்த போது வண்டி ரொம்ப தூரம் தாண்டிப் போயிடுத்து.” என்றேன். ராஜா சிரித்துக்கொண்டே, “அப்படிச் சொல்லு. அதிலே ஒண்ணும் தப்பில்லே. எல்லாருக்கும் நேர்ரது தானே. இதையே நாளைக்கு ஆபீசிலும் சொல்லு. புரிஞ்சிப்பா” என்றார்.

மறுநாள் ஆபீஸில் ஒரு நாள் லீவ் எழுதிக்கொடுத்தேன். “என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு நான் சொன்னதும் எல்லோரும் கனிவாகப் பார்த்துச் சிரித்தார்கள். போய் மலிக் சாஹப்டே கொடு என்று சொன்னார்கள். நான் அவர் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்து புன்முறுவலித்து, “ எனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பாயா? “ என்று கேட்டார். இது எனக்கு அதிசயமாக இருந்தது. இதை எதிர்பார்க்கவே இல்லை. சரி என்றேன். முதலில் புத்தகம் வரவழைத்த்து சொல்கிறேன் பின் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும் மலிக் முரளீதர் மல்ஹோத்ரான்னு ஒரு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் இருக்கார். அவர் தமிழ் சொல்லிக்க் கொடுக்கச் சொல்லிக் கேட்டார் என்றேன். அவர்களுக்கு ச்ந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “வந்து இரண்டு நாளாகலே அதுக்குள்ள் பெரியா ஆளா வளைச்சுப் போட்டுட்டயே,” என்று கேலி வேறு செய்தார்கள். ”ஆமாம் அவர் என்னைக் கேட்க என்ன காரணம்?” என்று யோசித்தேன். என்னைத் தவிர வேறு தமிழ் ஆட்களே அந்த ஆபீஸில் இல்லை. என்பது தெரிந்தது. ஆனால் தமிழ் கற்கணும்னு ஏன் தோணித்து அவ்ருக்கு?, என்று அடுத்த கேள்வி எழுந்தது. அதற்கு பதில் கிடைக்கவில்லை. அவர் ரொம்பவும் நல்ல மனிதர். நீ சின்ன பையன். ஏதோ அவருக்கு உன் கிட்ட ஒரு பாசம் போல. தமிழ் கத்துக்கறது ஒரு சாக்குதான் என்றும் ஒரு அபிப்ராயம். என்னை விட அதிகம் செல்லஸ்வாமியை அவருக்குத் தெரியுமே. என்னவோ. அதன் பின் அது பற்றி நான் அதிகம் யோசிக்க வில்லை. பால பாடப் புத்தகம் அனுப்பும்படி அப்பாவுக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டேன்.

மலிக் முரளீதர் மல்ஹோத்ரா எனக்கு நேர் பெரிய அதிகாரி இல்லை. அவர் அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸர். ஆபீஸ் முழுதுக்குமான நிர்வாகம் அவர் கையில் ஆனால் நான் வேலை செய்யும் சீஃப் என்சினீயர் ஆபீஸில் உள்ள செக்‌ஷனில் வொர்க் செக்சனுக்கு தேஷ்ராஜ் பூரி என்பவர் செக்ஸன் ஆபீஸர். எல்லோருமே பஞ்சாபிகள். ஹிராகுட் முழுதிலுமே, சீஃப் என்சினீயரிலிருந்து கடைசிப்படியில் இருக்கும் க்ளர்க் வரை, பின் எல்லா கண்டிராக்டர்களும் பஞ்சாபிகள் தான். எல்லோரும் சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்ததாகவும் அது கட்டி முடிந்த பின் இங்கு வந்ததாகவும் சொன்னார்கள். எல்லோரும் பஞ்சாபியில் பேசிக்கொண்டார்கள். பஞ்சாபி அல்லாதவரிடம் மாத்திரம் ஹிந்தியில் பேசினார்கள். பஞ்சாபி தான் முதலில் நான் தானாக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பாஷையாக இருந்தது. அதில் என் முயற்சியோ, என் புத்திசாலித்தனமோ எதும் இல்லை. சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பஞ்சாபிகள். அவர்கள் என்னேரமும் யாரிடமும் பேசுவது பஞ்சாபியில் தான். ஆக, கேட்டுக் கேட்டு அது தானாகவே நம்மைத் தொற்றிக்கொள்ளும். ஆனால் பஞ்சாபி கற்றுக்கொண்டவர்கள் மிகச் சிலரே. எனக்கு அவர்கள் பஞ்சாபியில் பேசுவதைக் கேட்க மிக சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஒரே விஷ்யத்தைப் ஹிந்தியிலும் சொல்லலாம் ப்ஞசாபியிலும் சொல்லலாம். ஆனால் பஞ்சாபியில் சொல்வதும், சொல்வதைக் கேட்பதும் மிகவும் குதூகலம் தருவதாக இருந்தது. ’ஹேய் தேனு கீ ஹொயா,’ என்று சாதாரணமாகச் சொன்னாலே அதில் மிகுந்த இளப்பமும் கிண்டலும் தொனிக்கும். அந்த சுவாரஸ்யம் வேறு எந்த் மொழியிலும் இல்லையெனத் தோன்றிற்று.

அதிலும் எத்தனையோ வகைகள். மலிக் முரளீதர் மல்ஹோத்திரா இப்போது பாகிஸ்தானில் இருக்கும் முலதானிலிருந்து வந்தவர். மூல்தான் என்னும் ஜில்லா சிந்து மாகாணத்தைத் தொடும் எல்லையில் இருந்தது. ஆக, பஞ்சாபியே கொஞ்சம் சிந்தி போல தொனிக்க பேசுவார்கள். அதுவும் ஒரு சுவாரஸ்யம் தான். மலிக் சாஹேப் தவிர இன்னொருவரும், அவரும் செக்‌ஷன் ஆபீஸர் தான், மூல்தானி. நல்ல உயரம். பிரம்மாண்டமான சரீரம். தொப்பை வேறு பெரிதாக முன் தள்ளியிருக்கும். மலிக் ஆயா ராம் என்று பெயர். அதிலும் எத்தனையோ வகைகள். மலிக் முரளீதர் மல்ஹோத்திரா இப்போது பாகிஸ்தானில் இருக்கும் முலதானிலிருந்து வந்தவர். மூல்தான் என்னும் ஜில்லா சிந்து மாகாணத்தைத் தொடும் எல்லையில் இருந்தது. ஆக, பஞ்சாபியே கொஞ்சம் சிந்தி போல தொனிக்க பேசுவார்கள். அதுவும் ஒரு சுவாரஸ்யம் தான். மலிக் சாஹேப் தவிர இன்னொருவரும், அவரும் செக்‌ஷன் ஆபீஸர் தான், மூல்தானி. நல்ல உயரம். பிரம்மாண்டமான சரீரம். தொப்பை வேறு பெரிதாக முன் தள்ளியிருக்கும். மலிக் ஆயா ராம் என்று பெயர். அவர் செக்‌ஷனில் நான் இல்லாவிட்டாலும் என்னிடம் மிக அன்பாக பேசுவார். என் பெயர் அவருக்கு சொல்ல வராது. அவர் என்னை, ”ஸ்னாதன் தர்ம்” என்று தான் அழைப்பார். எனக்கும் சனாதன தர்மத்திற்கும் இடையே மூல்தானுக்கும் தஞ்சாவூருக்கும் உள்ள தூரம் என்று அவரிடம் சொல்லிப் பயனில்லை. அவர் ஸ்னாதன் தர்ம் என்றுதான் அழைப்பார். எனக்கு அதில் ஏதும் பெரிய ஆக்ஷேபனை கிடையாது. இருப்பினும், ஸ்னாதன் தர்ம் என்று என்னை அழைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். இருந்தாலும் அவர் அன்பு மிகுந்தவராதலால் நான் சிரித்துக்கொண்டே “ஹான் ‘யே கீ நா ஹை தேரா” ( ஏய் இது என்னடா பேரு உனக்கு?) என்று கொஞச நாள் கேட்டார்கள். பின் அவர்களுக்கும் அது பழகிவிட்டது.
நான் வேலை பார்த்த செக்‌ஷனில் இரண்டே இரண்டு டைபிஸ்ட்கள். நான் ஒருத்தன். மற்றவன் மிஹிர் குமார் பிஸ்வாஸ் என்னும் வங்காளி. நல்ல உயரம் வங்காளிகள் ஸ்டைலில் வேஷ்டி கட்டிக்கொண்டு தான் வருவான். நிறைய வேலை எங்கள் இருவர் மேஜையிலும் குவியும். தப்பில்லாமல் டைப் செய்பவன் பிஸ்வாஸ் தான். தேஷ் ராஜ் பூரி, என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொல்வார் “ இரண்டு பேரும் நிறைய வேலை செய்கிறீர்கள். நீ டைப் செய்வது பார்க்க அழகா இருக்கு. ஆனால் தப்பு நிறைய செய்கிறாய். பிஸ்வாஸ் டைப் செய்வது பார்க்க நன்றாக இல்லை. ஆனால் தப்பில்லாமல் செய்கிறான். எது தேவலை சொல்” என்பார். அவரிடம் ந்ல்லா பெயர் வாங்க கொஞ்ச மாதங்கள் ஆயிற்று. ஆனால் அப்போது புதிதாகச் சேர்ந்த் போது, அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் எவ்வளவு நல்ல மனதுடையவர் என்பதை நான் அந்த ஹிராகுட் அணை நிர்வாக த்திலிருந்து வெளியேறும் கடைசி நாட்களில் தான் எனக்குத் தெரியவந்தது. அது பின்னால் வரும் சந்தர்ப்பத்த்தில்.

எஸ். என். ராஜா வீட்டிலேயே எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்? மாமி எப்போது வேணுமானாலும் வரலாம். அப்போது எங்கு ஓடமுடியும்? இருந்தாலும் நான் அதற்கு முயற்சிக்காமலேயே ஒரு வீடு ஒன்று எனக்கு தரப்பட்டது. அது ஹிராகுட் முகாமிலிருந்து தூர ஒதுங்கியிருப்பது போல படும். கோடியில் ஒரு சின்ன குன்றின் அடிவாரத்தில் அந்த் வரிசை வீடு இருந்தது. ஆர்டர் வந்ததும், பெட்டி படுக்கைகளோடு அந்த புதிய வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே அந்த வீடு ஒருவருக்குத் தரப்பட்டிருந்தது. நானும் போய் அதில் பங்கு கொள்ள வேண்டும். அந்த வரிசை வீடு எப்போதோ கட்டப்பட்டிருக்கவேண்டும். பஞ்சாப் கிராமத்து வீடுகள் போல, வீட்டு கொல்லைப் புறக் கதவைத் திறந்து செலவது போல ஒரு சுற்றுச்சுவர் கதவைக் கடந்து சென்றால் ஒரு பெரிய திறந்த முற்றம். தளமில்லாத் வெற்று மண் தரை முற்றம். அந்த முற்றத்தின் மறு பக்கத்தில் இரண்டு பெரிய அறைக்ள் தாழ்வாரத்தோடு. அவ்வளவே. ஏற்கனவே ஒருவன் தன் குடும்பத்தோடு, (மனைவி மாத்திரமே, குழந்தைகள் இல்லை) இருந்தான். நான் அடுத்திருந்த மற்ற அறையில் என் பெட்டி படுக்கைகளை வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அடுத்த அறைக்காரன் வந்தவன் என்னைப் பார்த்து, ‘உன்னை யார் இங்கே உள்ளே விட்டது. கிளம்பு இந்த இடத்தை விட்டு. இது என் வீடு” என்று கத்தினான். அவனிடம் எனக்கு இங்கு வர ஆர்டர் இருப்பதைச் சொல்லி ஒன்றும் பயனிருக்கவில்லை. கத்திக்கொண்டே இருந்தான். நீயா ந்ல்லபடியா எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பு, இல்லையானால், நான் உன் சாமானகளை வெளியே எறிந்து விடுவேன்.” என்று பயமுறுத்திவிட்டுச் சென்றான். நான் மறு நாள் காலை, (வேறு யார்) மலிக் முரளீதர் மல்ஹோத்ராவிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் ராம் சந்த் என்பவனிடம் நீ அங்கு தானே இருக்கிறார். என்ன விஷய்ம்? என்று கேட்க, அவன், “அந்த ஆள் சண்டைக்காரன், யார் போனாலும் விரட்டி விடுகிறான். அவன் புதுசாக கல்யாணம் செய்துக்கொண்டவன். யாரும் அங்கு வருகிறவர்களோடு சண்டை போடுகிறவன். அவனோடு இருக்க முடியாது. அவனை எல்லாருக்கும் நன்கு தெரியும்..” என்று சொல்லி, “இன்னொரு வீடு அலாட் ஆகிறவரைக்கும், என் வீட்டீல் வேணுமானால் வைத்துகொள்கிறேன்.” என்றான்.

இவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ராம் சந்த் என்னுடைய பிரசினையைக் கேட்ட மாத்திரத்திலேயே, முரளீதர் மல்ஹோத்திரா சொல்லாமலேயே, என்னிடம் வந்து தங்கிக்கொள் என்று சொன்னது, முகம் தெரியாத, பழகாத ஒருவனுக்கு உதவ முன் வந்தது பெரிய விஷ்யமாகப் பட்டது. ஆனால் நான் அவன் வீட்டுக்கு தங்கப் போனதாக நினைவு இல்லை. எனக்கு நினைவில் இருப்பது, எனக்கு இன்னொரு வீடு தங்குவதற்கு உத்தரவு கிடைத்தது தான். அது எஸ்.என்.ராஜாவின் வீட்டுக்கு சில வரிசை வீடுகள தள்ளி அலுவலக்ம் போகும் வழியில் இருந்தது. அந்த வீட்டில் ஏற்கனவே ஒர் மலயாளியும் தமிழ்னும் இருந்தனர். மலயாளி ஒரு எலெசக்ட்ரீஷியன். கூட இருந்த தமிழ்ன் அவனுக்கு உதவியாள். எனக்கு இங்கு எந்த பிரசினையும் இருக்கவில்லை. ராஜாவுக்குத் தான் கொஞ்சம் கவலையாக இருந்தது.

(தொடரும்).
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்