இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செபடம்பர் 2009 இதழ் 117  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
வலைப்பதிவு அறிமுகம்!

கவிஞர் மேமன்கவியின் வலைப்பதிவு: 'செவி, கண், ரசனை'
கவிஞர் மேமன்கவிஈழத்துப் படைப்பாளியான கவிஞர் மேமன்கவி 'செவி, கண், ரசனை' என்னுமொரு வலைப்பதிவினைத் தொடங்கியிருக்கின்றார். அதன் இணையத்தள முகவரி:
http://eeview.blogspot.com/ இன்னும் ஆரம்ப நிலையிலிருந்தாலும் அவரது வலைப்பதிவில் கவிதை வாசிப்பு என்னும் பகுதியினை அறிமுகப் படுத்தியிருக்கின்றார்.  காணொளிகளில் அதனை நீங்கள் கண் கொண்டு பார்க்கலாம்; செவி கொண்டு கேட்கலாம். பின் இரசிக்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://eeview.blogspot.com/

அதிலொரு கவிதை 'ஒரு பிஞ்சுவின் பிரகடனம்' . இக்கவிதையின் வாசிப்பு நெஞ்சினைக் கனக்க வைத்து விடுகிறது.

'எனக்கு ஊட்டிப் பார்க்க
உனக்கு
ஆசைதான் அம்மா!

வறுமை ஈட்டி தாக்கிய
எலும்புக் கூடான
உன் உடலில் ஓடும்
என்னைத் தீட்டிப் பார்த்த
குருதியா
நான் உறுஞ்சப் பார்ப்பது
வேண்டாமே அம்மா!

இவ்விதமாகச் செல்லும் கவிதையில் இப்பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பற்பல நிலைகளில் வாடும் பிஞ்சுகளின் நிலை, அவர்தம் அன்னையரின் நிலை ஆகியன எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. கவிஞரின் குரலிலேயே கவிதை வாசிப்பு நிகழ்கிறது. கவிதை வெளிப்படுத்தும் உணர்ச்சியினை கவிஞரது குரல் நன்கு பிரதிபலிக்கின்றது. உள்ளத்தையும் தாக்குகின்றது.

'ஒரு பிஞ்சுவின் பிரகடனம்'

இது பற்றிய அவரது கடிதம் கீழே:

நண்பர்களே! சிறுமுயற்சி ஓன்றினை செய்து இருக்கிறேன். அம்முயற்சியில் முழுமையான வெற்றியினை நான் அடையவில்லை என எனக்குத் தெரிகிறது.அதனால் எனது அம்முயற்சி உங்களுக்கு முழுமையான திருப்தியினை தராது என்பதை நான் உணர்கிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்குத் தேவை. கீழே உள்ள சுட்டிகளை அழுத்துங்கள்.

நன்றி.

அன்பன்
மேமன்கவி

http://eeview.blogspot.com/
http://www.youtube.com/watch?v=OF-uZy30LY4&feature=channel
http://www.youtube.com/watch?v=rdKZuoTudsc&feature=channel
http://www.youtube.com/watch?v=X9JvV_NLmMs&feature=channel

கவிஞர் மேமன்கவி பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவிலிருந்து....

கவிஞர் மேமன்கவிமேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
இவரது முதலாவது கவிதை 1974 ஆம் ஆண்டு சுதந்திரன் இதழில் தமிழே என் மூச்சு எனும் தலைப்பில் வெளிவந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். 1990 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல பரிசை இவரது நாளைய நோக்கிய இன்றில் கவிதைத் தொகுதிக்காகப் பெற்றார்.

பல சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளன. கவிதை ஓன்று தேசீய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.

இவரது நூற்கள்
உனக்கு எதிரான வன்முறை (2005, துரைவி வெளியீடு)யுகராகங்கள் (1976, எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம்)
ஹிரோசிமாவின் ஹீரோக்கள் (1982, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
இயந்திர சூரியன் (1984, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
நாளையை நோக்கிய இன்றில் (1990, நர்மதா பதிப்பகம், தமிழ் நாடு)
மீண்டும் வசிப்பதற்காக (1999, மல்லிகைப் பந்தல்)
உனக்கு எதிரான வன்முறை (2005, துரைவி வெளியீடு)

விருதுகள்
1990 - நாளைய நோக்கிய இன்றில், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு.
2005 - உனக்கு எதிரான வன்முறை, யாழ். இலக்கிய வட்டத்தின் இணைப்புச் சங்கமான இலங்கை இலக்கியப் பேரவையின் சிறப்பு விருது.

நன்றி: http://ta.wikipedia.org/


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்