இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!

நன்றி: தினக்குரல்!
மோதலின் போது வல்லுறவு போர்க்குற்றம், இனப்படுகொலை!
ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானம்!


ஆயுத மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் முன்னெடுக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றமெனவும் இனப்படுகொலையின் ஓரங்கமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படும் சகல தரப்பினரும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் உடனடியாக இது நடைமுறைக்கு வரவேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1820 ஆவது தீர்மானத்திற்கு சபையின் 15 உறுப்பினர்களும் ஏகோபித்து அங்கீகாரம் வழங்கியுள்ளனர். அத்துடன் மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் பெண்கள், சிறுமிகள் உட்பட பொதுமக்கள் மீதான சகல விதத்திலுமான பாலியன் வன்செயல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தலைமையில் இடம்பெற்ற சபையின் அமர்வின்போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்செயல்களை போர்க்குற்றமென வடிவமைக்க முடியும். இவை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்செயலில் அல்லது இனப்படுகொலைக்கான நடவடிக்கை எனக் கருதமுடியும் என்று சபை தெரிவித்துள்ளது.

போர் நடவடிக்கைகளின்போது பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரணை செய்வதற்கான மறைமுகமான அச்சுறுத்தலாக இதனைக் கருத முடியும்.

இதனை உடனடியாகவே மனிதஉரிமை கண்காணிப்பகம் வரவேற்றிருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பாலியல் வன்முறைகள் தொடர்பான புதிய தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியெனவும் மோதலில் போது அடிக்கடி பெண்கள், சிறுமிகள் புறக்கணிக்கப்படும் நிலைமை இருந்து வந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர் ஒருநாள் விவாதத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது . இந்த விவாதத்தில் உரையாற்றிய கொண்டலீசா ரைஸ் பாலியல் வல்லுறவு மன்னிக்கமுடியாத குற்றமெனவும் உலகளாவிய ரீதியில் பெண்கள் மோதல் சூழ்நிலைகளில் மோசமாகப் பாதிக்கப்படுவதாகவும் பாலியல் வன்முறைகள் பெண்கள் மீது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியிருந்தார்.  நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது குற்றச்செயல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கான பொறிமுறையெனவும் குறிப்பிட்ட ரைஸ் ஆயுதப் போராட்டத்தின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டி நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாட்டுக்கு ஆயத்தப்படுத்துமாறும் ஐ.நா. செயலாளர் நாயகத்தை அவர் கேட்டுள்ளார்.

http://www.thinakkural.com/news/2008/6/21/importantnews_page53097.htm


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner