பதிவுகள் முகப்பு

கலை பற்றிய கதையாடல் - அங்கம் 2 - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கதிரை வாங்கப் போனோமல்லவா, கலைத்துவக் கதிரையை எங்கே வாங்கலாம் என்பதுதான் இப்போ பிரச்சினை.

1. கலையெனப் பொதுப் பொருளில் சுட்ட முடியுமா?

2. அ. முடியுமெனின் அதன் உட்கூறு என்ன?

   ஆ. விதிக்கப்பட்ட வரைவிலக்கணங்களுக்கூடாக எங்ஙனம் புரிவது.

மேலும் படிக்க ...

நினைவுகள் அழிவதில்லை! நெஞ்சினில் நிலைத்திருக்கும்! தமிழின் நினைவுகளும் என் மனதில் அழியாதென்றும் நிலைத்திருக்கும்! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனதருமை சிறிய தமக்கையார்(தமிழ்) அமரர் செல்வி தமிழரசி வேந்தனார் அவர்களின் 70 ஆவது பிறந்ததினமின்று. தனது 26 வயதில் , 29.06.1979 இல் இயற்கையெய்திய எனதருமை சின்னக்கா "தமிழ்"( தமிழரசி) உடனான என் நினைவலைகள் சிலதை, இங்கு அவரைத் தெரிந்த உங்களில் சிலருடனும் , எனது குடும்பத்தை அறிந்த சிலருடனும் பகிர்ந்து கொள்கின்றேன். தமிழ் தமிழ் என நாள்தோறும் நானழைத்த என் சிறியதமக்கை. எல்லோரையும்,அனுசரித்து பொறுமையாய் நடந்திடும் என்னருமைத் "தமிழ்".

மூத்த மகள் என, என் மூத்த தமக்கையாரிடம் எம் பெற்றோர் காட்டிய அதீத அன்பு..  மூத்த மகன் என ,என் தாயார் ,என் அண்ணனிடம் காட்டிய பாசம்.. இளையவன் - சின்ன மகன் - தன்னைப்போன்ற உருவமும் குணமும் கொண்டவன் என, என் தந்தை என்னிடம் கொண்ட அளவிலாத பாசம், தாயாரிற்கோ தன் கணவரைப் போன்றவன் என்று என்னில் ஒரு பற்று..

இந்தப் பின்னணியில், அண்ணா பிறந்து ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் பிறந்த என் சிறிய தமக்கை தமிழ், தனக்கு உரிய பாசம் , அக்கறை,தன் பெற்றோர்களிடம் இருந்தும், தன் உடன் பிறப்புகளிடமிருந்தும் கிடைக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கத்தை தன்மனதில் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி மூன்று) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பகுதி-i

சென்ற இதழில், தொடப்பட்ட, மூன்று விடயங்கள்:

1. ஒன்று, பக்மூத், எவ்வாறு ஓர் 150,000 உக்ரைனிய போர் வீரர்களுக்கு, ஓர் மரண பொறியாக செயற்பட்டது. (பக்மூத் வீழ்ச்சியின் போது 50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும் 85,000 பேர் காயமுற்றதாகவும் ஒரு பதிவு கூறுகின்றது).
 
2. இத்தோல்வியை தொடர்ந்து எவ்வாறு ஸெலன்ஸ்கி  G-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு ஓர் 375 மில்லியன் டாலர் பணமுடிச்சும்,  F-16 விமானங்களின் வழங்குகைக்கும் உறுதி செய்யப்பட்டார் என்பது குறித்தும்.

3. இப்பணமுடிப்பு பரிசளிப்புகள், “பக்மூத் வீழ்ந்து விட்டது - இருந்தும் அது இப்போது, எம் இதயத்தில் ஆழ வாழ்ந்திருக்கின்றது” என்ற அவரது ஆரம்ப அறிவிப்பை எப்படி அவர் அவசர, அவசரமாக மாற்றி – “இல்லை பக்மூத்தை இப்போதே சுற்றி வளைத்துள்ளோம் - இனி மீட்டெடுப்பதே எமது பிராயசித்தம் என புரண்டு பேச வைத்ததையும் பார்த்திருந்தோம்.

இச்சூழலில் F-16 விமானங்கள், போர்களத்தின் சாரம்சத்தை மாற்றக்கூடியதே என்றும், F-16 விமானங்களின் சிக்கல் நிறைந்த தொழிநுட்ப நடைமுறைமையானது, அமெரிக்காவின் ஓய்வு பெற்ற விமானிகள் அல்லது அந்நாட்டின் ஒப்பந்த அடிப்படையிலான விமானிகளை, F-16 விமானங்களை ஓட்ட வைக்கும் என்றும், இது ரஷியாவை அமெரிக்காவுடன் அல்லது நேட்டோவுடனான நேரடி மோதல்களுக்கு இழுத்துவிடும்  என்றும் ஆயஉபசழபயச கூறியிருந்தார்.

மேலும் படிக்க ...

கவிதை: தந்தையரை என்றுமே போற்றிடுவீர்! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தந்தையர்தினக் கவிதை!


தந்தையர் தினமதினில் நாமெம்
தந்தையர்நினைவுகளைமீட்டிடுவோம்
சிந்தையில் அவரெமக்காய் பட்டிட்ட
சிரமங்களெண்ணிவணங்கிடுவோம்

தோளில்தூக்கி உயர்வினை நாட்டியும்
துன்பங்கள் நீக்கிநல்வழி காட்டியும்
பாரிலெம்மைச் பலசிறப்புகள் கண்டிட
பாதைபோட்ட தந்தையரை மறவோம்

அப்பாவினன்பதுவெளித்தெரியாது
ஆழ்மனதில் புதைந்து கிடப்பது
எப்போதுமெம் உயர்வை விரும்புவது
என்றுமெம் மனதில் அழியாதிருப்பது

கந்தைசுற்றி வாழ்ந்திட நேரினும்
கல்வியைதம்பிள்ளைகட்குவழங்குவர்
விந்தைமனிதரிந்த அப்பாக்களை
வாழ்வில் என்றுமே போற்றிடுவீர்

தந்தையர்தினமதில்தந்தையைநினை
தந்தையினுழைப்பின்உயர்வையுணர்
முந்தையதலைமுறையிதையறியும்
மனதிலிதைநம்பிள்ளைகள்கொள்வீர்

மேலும் படிக்க ...

அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும் போற்றுகிறேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
கவிதை
18 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தந்தையர்தினக் கவிதை!

    ஈன்றெடுத்தாள் அம்மா  எனைச் சுமந்தார் அப்பா
     சான்றோனாய் என்னை சபை வைத்தார் அப்பா
     நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
     வானளவு  உயர வாழ் வளித்தார் அப்பா

    ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
    உயரோங்கி நிற்க உழைப் பீந்தார் அப்பா
    தனக் கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
    எனக் கெனவே தேடி குவித்திட்டார் வாழ்வில்

    விருப் பென்று எதையும் வெளியிடார்  அப்பா
    பொறுப் புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
    என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
    கண் மணியாய் கருத்தில் இருத்தினார் அப்பா

   தோழேற்றி என்னைச் சுகங் காண்பார் அப்பா
   தோழனாய் இப்போ ஆகி விட்டார் எனக்கு
   வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
   வணங்கு கின்ற தெய்வமாய் தெரிகிறார் அப்பா

மேலும் படிக்க ...

ஜெயலலிதா என்னும் நர்த்தகி... - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நர்த்தகி. அவரது நடனத்திறமையின் காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் நடித்திருக்கும் பாடற் காட்சிகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அப்பாடற் காட்சிகளிலெல்லாம் அவரது நடனத்திறமையின் கூறுகள் சிலவற்றைத்தான் காண முடியும்.

ஜெயலலிதாவின் நடனத்திறமையினை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படங்கள் வெகு சிலதாம். அவற்றிலொன்று ஆதி பராசக்தி. அப்படத்தில் வரும் இப்பாடற் காட்சியினைப் பாருங்கள் அவரது நடனத்திறமையினை புரிந்துகொள்வீர்கள்.

அறுபதுகளில் அவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகமான 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் மிகவும் புகழ்பெற்றது. கல்கியில் அது பற்றியொரு விமர்சனம் வெளிவந்ததாக நினைவு. நீண்ட நாட்களாக அதனை யு டியூப்பில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவதிருந்தால் பகிர்ந்துகொள்ளூங்கள்.

மேலும் படிக்க ...

'சே' என்னும் மானுடத் தோழர்!

விவரங்கள்
- நந்திவர்மன் -
அரசியல்
15 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்

ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம்.   இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட  எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.

பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (4) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
14 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒர் உலகப் புகழ் பெற்ற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாகவும் புனைவுக்குரிய பாங்குடனும் நகர்த்தும் பாங்கு சிறப்பாக அமைந்துள்ளது. “பல்லாயிரக் கணக்கான பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்றொழித்து அவர்களது சொத்து, சுகம் அனைத்தையும் அழித்து தனியொருவனின் அகம்பாவத்தை ஆணவத்தை வெற்றியென்று கொண்டாடியவர்களை வீரர்கள் என்று வரலாற்றில் வரைந்து வைத்தவர்கள் சாதித்தது என்ன? வெறும் ஜாலமாக முடிந்து ஒரு பிடி மண்ணிலும் கலவாமல் மறைந்து போனது அலெக்சாண்டரின் ஆணவம்” கணிசமான நாடகப் பிரதிகள் போர் குறித்தவையாக அமைந்திருப்பதனால் இக்கூற்று பொருந்துவதாகவே அமைந்துள்ளது.

3.5 பிரதிகளின் மொழி

ஒரு பிரதி நாடகமாக நடிக்கப்படும்போதுதான் முழுமையடைகிறது என்று கூறுவார்கள். நடிகனும் அவனின் மொழியும் பாவனைகளும் அரங்கில் காட்சியாக விரிகின்றபோது அது பார்வையாரிடம் விரைவாகச் சென்று சேர்கின்றது. அவர்களை நாடகத்துடன் ஒன்றிணைய வைக்கிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது பிரதியின் மொழியாகும். நாடகம் ஒன்றுக்கான கூட்டுழைப்பை இவ்வாறுதான் மொழி வேண்டி நிற்கிறது.

“நாடகம் என்பது நிச்சயமாக இலக்கியத்தின் கிளைப்பகுதி அல்ல என்பதைத்தான் உலக நாடகவியலாளர்கள் செயற்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு கதையையோ நாடகத்தையோ எழுத்தில் படிக்கும்போது அந்த எழுத்து மொழியை முதலில் புரிந்து கொள்கிறோம். அப்படி புரிந்து கொள்ளத் தொடங்கும் போதிலிருந்துதான் அதை நம் அனுபவ அளவில் நின்று காட்சிப்படுத்த ஆரம்பிக்கின்றோம். நாடக அரங்கில் இந்த செயல்முறை தலைகீழாக மாறிச் செயல்படுகிறது. அத்தகைய நாடகம் என்பதை நிகழ்வாக நாம் பார்ப்பதென்பது நாடகத்தின் மொழிமூலம் சாத்தியப்படுகிறது” (15)

ஏழுமலைப்பிள்ளையின் மேற்குறித்த நாடகப்பிரதிகளின் ஊடாக அவர் மொழியைக் கையாண்டுள்ள வகையினை நோக்குவோம்.

மேலும் படிக்க ...

விரைவில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள வ.ந.கிரிதரனின் புதிய நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

--அட்டையைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதனை  ஒரு தடவை அழுத்தவும். -

எனது மூன்று நூல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. 'ஒரு நகரத்து  மனிதனின் புலம்பல்' (கவிதைகள்) பதிவுகள்.காம் வெளியீடாகவும், வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ஜீவநதி பதிப்பக வெளியீடாகவும் , நவீன விக்கிரமாதித்தன் (நாவல்) ஓவியா  பதிப்பக வெளியீடாகவும் வெளியாகவுள்ளன. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் அட்டைப்படத்தையே இங்கு காண்கின்றீர்கள்.

மேலும் படிக்க ...

‘நகுலாத்தை’: யதார்த்தமும் மாயமுமாய் பயணிக்கும் பிரதி - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
13 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(1)

2022 ஆவணியில் வடலி வெளியீடாக வந்த யதார்த்தனின் ‘நகுலாத்தை’ நாவல், தன் மதிப்பீட்டை அண்ணளவாய்ச் செய்வதற்கான வெளிகளையே கொண்டுள்ளது. அதில் ஐதீகம், நாட்டார் பாடல், வாய்மொழி இலக்கியங்களின் பயன்பாடுபற்றியதும், அப் படைப்பாக்கத்திற்கு நிறையவே தேவைப்பட்டிருக்கக் கூடிய தேடல்கள், கள ஆய்வுகள்பற்றியதுமான  படைப்பாளியின் எந்த விபரங்களும் இல்லை. வடவிலங்கையின் நிலவியல் படம் மட்டும் தரப்பட்டுள்ளது.

கதையிலிடம்பெறும் ஐதீகங்கள் குறித்து, அவை ஐதீகங்களா புனைவுகளா என்பதுபற்றிய படைப்பாளியின் வாக்குமூலம், இதுபோன்ற ஓர் இலக்கியப் பிரதிக்கும் முக்கியமானது. அல்லாமல், நாவல் கட்டமைப்பு தவிர்ந்த காத்திரமான விமர்சனம் சாத்தியப்படாது. இத்தகைய தட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் விமர்சனம், ஏகதேசமாய் தன் வழியில் முன்செல்லவோ, தடைகளால் பின்னிழுக்கப்படவோதான் செய்யும்.

நாவல் சார்ந்த குறையாகவன்றி இதை பதிப்பு சார்ந்த குறையாகக் காணவேண்டும்.

(2)

மொழி வழியில் ‘நகுலாத்தை’ ஒரு பிரதியாய் நன்கு கட்டமைந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை.  அது பாவித்த மொழி அந்த மண்ணுக்கானது. பல இலங்கைத் தமிழ் நாவல்களில் பயின்றிருக்காத உரையாடல் வளம் ‘நகுலாத்தை’யிலுண்டு.

பிரதேசவாரியாய் முக்கியம் பெற்றிருக்கும் சொற்கள் சில எவ்வாறு தம் வெகுவான பொருத்தம் கருதி தமிழுக்கே உரியனவாகவும், தமிழாய்வுக்கு உதவுபவையாகவம் ஆகினவோ, அதுபோல இலங்கையின் வடபிரதேச, குறிப்பாக வன்னிப் பிரதேச, பேச்சுவழக்கிலுள்ள மொழி வளம் அவைசார்ந்து பயனளிக்கக்கூடியது. அவ்வாறான பல சொற்களை பிரதியில் அடையாளப்படுத்த முடியும். ‘உருத்து’ (தூளாக்குதல்) என்ற சொல்லை உதாரணத்துக்கு இங்கே குறிப்பிடலாம்.

மேலும் படிக்க ...

துயர் பகிர்வோம் - நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
13 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது.

கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன்,  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். கனடாவில் உள்ள மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து மிகவும் திறமையாகச் செயற்பட்டவர். அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் இருந்து ‘குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு’ நிகழ்வைத் தொடங்க வேண்டும் என்பதைத் தான் கற்றுக் கொண்டதாகவும், அதையே கடைசிவரை கடைப்பிடித்ததாகவும் அவர் ஒரு முறை குறிப்பிட்டது நினைவில் நிற்கின்றது.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளியும், புகைப்படத் தொகுப்பும்! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
நிகழ்வுகள்
12 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியத் தோட்டம் (அறக்கட்டளைப் பதிவு இலக்கம்: 86107 1371 RR0001)

 

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளி - https://www.youtube.com/watch?v=3ulGohjdauo&t=2s      

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுப் புகைப்படத் தொகுப்பு  - https://tamilliterarygarden.com/gallery

தமிழ் இலக்கியத் தோட்டம் - https://tamilliterarygarden.com


மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார! முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும்,  அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே  எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன்  மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.

"நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?"  என நான்  யோசித்துக்கொண்டிருந்தபோது,  கொழும்பிலிருந்து  நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு,  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர்  ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார்  கமலி அக்கா கனடாவில்  மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான  செய்திகளே வந்துகொண்டிருந்தன.

கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது.  மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன். ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது.  என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு  கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சரியம் அடைந்தனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனின் “டாக்டரின் தொணதொணப்பு” - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு வைத்தியருடன் நோயாளர் கொண்டுள்ள அன்புறவு என்பது எல்லா வைத்தியர்களாலும் இலகுவில் பெறக்கூடியதல்ல. முதலில் டாக்டராக சந்திக்க வரும் நோயாளர் நீண்ட காலத்தின் பின்னும் உறவாக நினைத்து 'அந்த முகத்தை ஒருக்கா பாத்திட்டு போவம்' என்ற உணர்வுடன் சந்திக்க வருவதும், தமது நோய்நிலை மறந்து மகிழ்வதும், டாக்டர். எம். கே. முருகானந்தன் அவர்களின் மருத்துவ அனுபவங்களில் உன்னதமான ஒரு பகுதி. பெருமை கொள்ளலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பு மட்டுமே 'டாக்டரின் தொணதொணப்பு'. மற்றப்படி நோயாளரின் மனதில் அவர் பற்றிய நினைவுகள் அருமருந்து.

இவரது சிறப்பான மருத்துவ அம்சமாக , தன்னுடைய நோயாளரின் நோய்நிலைத் தகவல்களை 1999 ம் ஆண்டில் இருந்தே கணினி மயப்படுத்திப் பாதுகாப்பதைக் கூறலாம். நோயாளரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த நடைமுறையை இன்றும் இலங்கையில் சிலரே கைக்கொள்கின்றனர்.

புத்தகத்தின் ரசனைக் குறிப்பில் திரு.இ.து.குலசிங்கம் அவர்கள் கூறியிருப்பது போல 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக்காதல் நோயாளன் போல் ..' எனும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தினை ஒத்ததாக, இந்த டொக்டரின் மேல் காதல் கொண்ட நோயாளர் மிக அதிகம் என உணர்கிறேன். அதுவே அவரது இளமைக்கும் வெற்றிகளுக்கும் காரணமாகலாம். இவர் வைத்தியராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் இருப்பது மேலதிக சிறப்பு.

மேலும் படிக்க ...

தேடகம், காலம் & பதிவுகள்.காம் ஏற்பாட்டில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
11 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மாலை 3600 KIngston Road இல் அமைந்துள்ள ஸ்கார்பரோ கிராமச் சமூக நிலையத்தில் தேடகம், காலம் மற்றும் பதிவுகள்.காம் ஒன்றிணைந்து நடத்திய எழுத்தாளர்கள்  முருகபூபதி மற்றும் சாம்ராஜுடனான இலக்கியச் சந்திப்பு அமைதியாக ஆனால் காத்திரமானதாக நடந்து முடிந்தது. நிகழ்வினை எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையேற்றுச் சிறப்பாக  நெறிப்படுத்தினார்.

ஆரம்பத்தில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுத்தாளர் முருகபூபதி பற்றி நல்லதோர் அறிமுகத்தைச் செய்தார். ஆரம்பத்தில் மல்லிகையில் முருகபூபதியின் முதலாவது சிறுகதை வெளியானதையும், தொடர்ந்து வெளியான இரண்டாவது கதை தான் நடத்திய 'பூரணி'சஞ்சிகையில் வெளியானதையும் நினைவு கூர்ந்தார். முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கொழும்புக் கிளையில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்ட என்.கே.மகாலிங்கம் அவர்கள் ஆனால் முருகபூபதியின் கதைகளில் ஏனைய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளில் உள்ளதைப்போன்ற பிரச்சாரத்தொனி இருந்ததில்லை என்றும்  சுட்டிக்காட்டினார். கூடவே முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் ( 1976 இலும்  )  முதல் நாவல் பறவைகள் ( 2003 இலும்) சாகித்திய விருது பெற்றதையும்  நினைவு கூர்ந்தார். இவ்விதம் ஆரம்பத்தில் புனைவிலக்கியத்தில் கால் பதித்த முருகபூபதி பின்னர் ஊடகத்துறைக்குள் மூழ்கி அபுனைவிலக்கியத்தில் மூழ்கி விட்டார் என்னும் கருத்துப்படத் தன் உரையினையைத் தொடர்ந்தார்.

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (3) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.3.1 தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்

சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஏழுமலைப்பிள்ளை இதனை நான்கு காட்சிகளைக் கொண்ட ஒர் எழுத்துருவாகத் தந்துள்ளார். காக்கைவன்னியன் சங்கிலியின் தளபதியை வஞ்சமாகக் கொலை செய்துவிட்டு பறங்கியருடன் சேர்ந்து சங்கிலியனைக் காட்டிக்கொடுப்பதே இந்நாடகம் ஆகும்.

யாழ்ப்பாண இராட்சியத்தின்மீது வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கும்போது சங்கிலியன் போருக்கான ஆயத்தங்களைச் செய்கிறான். வீரமாணிக்கதேவர் என்ற தளபதியை வீரநாயகனுடன் சேர்ந்து சதி செய்து காக்கை வன்னியன் கொல்கிறான். வீரமாணிக்க தேவன் இறந்ததறிந்து சங்கிலியன் துயரப்பட்டிருந்தபோது பறங்கியர் சங்கிலியனை அரண்மனையில் முற்றுகையிடுகின்றனர். இக்காட்சிகளின் ஊடாக சங்கிலியன் நாடகத்தை நகர்த்தியுள்ளார் ஏழுமலைப் பிள்ளை.

மேலும் படிக்க ...

நூல்கள் கிடைக்கப்பெற்றோம்!

விவரங்கள்
Administrator
நூலகம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' - பதிவுகள்.காம் -

எமக்குக் கிடைக்கும் நூல்களை இங்கு ஆவணப்படுத்துவோம். அவ்வப்போது நூல்களுக்கான விமர்சனக் குறிப்புகள் எழுதப்படும்.  - பதிவுகள்.


காலப்புனல் - தே.செம்மனச்செல்வி, பொய்கை வெளியீடு

சினிமா: பார்த்ததும் கேட்டதும் - முருகபூபதி ஜீவநதி பதிப்பகம் (2023)

இலங்கையில் பாரதி - முருகபூபதி , முகுந்தன் பதிப்பகம், ஆஸ்திரேலியா (2019)

கதைத்தொகுப்பின் கதை (சிறுகதைகள்)  ,முருகபூபதி, ஜீவநதி ,இலங்கை (2021)

சதிவிரதன் (சிறுகதைகள்) - குரு அரவிந்தன் , மணிமேகலை  பிரசுரம் (2019)

யாதுமாகி நின்றவள் (சிறுகதைகள்),  குரு அரவிந்தன் , இனிய நந்தவனம் பதிப்பகம் (2022)

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து (கவிதைகள்), கவிஞர் புகாரி, யுனிவேர்ஸ் பப்ளீஷர்ஸ் (2019)

அன்புடன் நயாகரா (கவிதைகள்),கவிஞர் புகாரி, யுனிவேர்ஸ் பப்ளிஷர்ஸ் (2019)

எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை (கவிதைகள்)< ந.முரளிதரன், நாளை பதிப்பகம் (2020)

அஞ்சலி: எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்தார்!

விவரங்கள்
Administrator
இலக்கியம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்த செய்தியினை இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். அவரது மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கிக்கிடக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். கலைவாதி கலீல் பன்முகத்திறமை மிக்க இலக்கியவாதி. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மன்னாரிலிருந்துத் திடமாகக் கால்பதித்தவர். என் பால்ய பருவத்திலிருந்தே இவரது பெயரை ஏதாவதொரு சஞ்சிகை, அல்லது பத்திரிகையில் அவதானித்தே வந்துள்ளேன்  திக்குவல்லை, கமால், சாரணாகையூம், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார், எம்.ஏ.நுஃமான், பாலமுனை பாறுக், அன்பு ஜவகர்ஷா அடிக்கடி பல்வேறு அச்சூடகங்களில் தென்படும் பெயர்கள். எழுத்தாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர்  கலைவாதி கலீல் பற்றி நல்லதோர் அறிமுகக் கட்டுரையினை அவரது பவளவிழாவின்போது எழுதியிருக்கின்றார்.  17.10.2018 அன்று 'நியூஸ் பிளஸ்' இணையத்தளத்தில் வெளியான அக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இங்கு அஞ்சலிக் கட்டுரையாக மீள்பிரசுரம் செய்கின்றது. அத்துடன் எண்ணிம  நூலகமான 'நூலகம்'தளத்திலுள்ள அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு வெள்ளி ரூபாய்'க்கான இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றது. இணைப்பு - https://noolaham.net/project/06/544/544.pdf -


பவளவிழாவில்  கலைவாதி      - எம்.எஸ்.எம்.ஸாகிர் -

தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர்.  எள்ளளவும் கோபம் எடுக்காதவர்.இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல். மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.

மேலும் படிக்க ...

இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - தகவல்: ஜயகரன் -

விவரங்கள்
- தகவல்: ஜயகரன் -
நிகழ்வுகள்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியுடனொரு மாலைப்பொழுது!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று மாலை, கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியுடன்  5 Spice உணவகத்தில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோருடன் சந்தித்தோம்.  எழுத்தாளர் முருகபூபதி  குறிப்பாகப் போர்க்காலச்சுழலில்  தன் ஊடகத்துறை அனுபவங்களைவ் எதிர்கொண்ட பிரச்சினைகளையெல்லாம் எம்முடன் பகிர்ந்துகொண்டார். கதை, கட்டுரை, நாவல் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகள் என இவரது இலக்கியக் களம் பரந்தது. இவர் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. கடந்த 35 வருடங்களாக இவர் இலங்கை மாணவர் கல்வி  அமைப்பின் மூலம் இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களுக்கு ஆற்றும் சேவையினைப் பற்றியும் எமக்கு விளங்கப்படுத்தினார். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது தலைமையில் இயங்கும் இலங்கை  மாணவர் கல்வி அமைப்பு மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பது உண்மையிலேயே  பிரமிக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

ஆச்சரியப்பட வைத்த வானொலி அறிவிப்பாளர் தர்சினி உதயராஜா! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
கலை
09 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.

இவர்களில் தர்சினி உதயராஜாவின் குரல் நேயர்களை மிகவும் கவர்ந்து விட்டதை அறிய முடிந்தது. பத்து வருடங்களுக்கு  முன்னர் இவர் நிகழ்ச்சியை கேட்டு விட்டு மீண்டும் பல வருடங்களின்  பின் கேட்டபோது அன்றிருந்த பல வாசகர்கள் மீண்டும் அவரது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ராஜவர்மன், அப்பன் என்று சில பெயர்கள் நினைவில் நிற்கும் வகையில் மீண்டும் மீண்டும் வானலையில் ஒலித்தன.இவர்களைப் போன்ற பல நேயர்கள் இவர் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்து பங்கு பற்றினார்கள் என்பதையும் அவர்களது கூற்றுக்களிலிருந்து அறிய முடிந்தது. இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நேயர்களை  அன்பொழுக அழைத்துச் செல்லும் அவரது குரல் என்பதை உணர முடிந்தது. நேயர்கள் இவரைச்  சகோதரியாக, சிநேகிதியாக, ஆசிரியையாக , சிறந்ததோர் ஊடகவியலாளராக, வானொலி அறிவிப்பாளராகப் பார்த்தார்கள் என்பதையும் உணர முடிந்தது.

மேலும் படிக்க ...

கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1. - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
08 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1

நானும் நண்பனும் ஒரு கதிரை வாங்கப் போனோம்.

விலை பேசி.. எல்லாம் முடித்தாயிற்று.

நண்பனுக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல் பற்றி எழுத விழைகிறேன்.

இதுவொரு முன்னோட்டம்.

ட்றெயிலர் என்று சொல்வார்களே அது.

தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம்.

லைக், சப்கிறிஸ்சன் தவிர்க்கப்படும்.

படித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க ...

'டொரோண்டோ'வில் எழுத்தாளர் சிவசங்கரி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.

இவரது எழுத்துகள் எழுபதுகளில், எண்பதுகளில் தமிழக வெகுடன இதழ்களை ஆக்கிரமித்திருந்தன. இவரது எழுத்து நடை அதுவரை எழுதி வந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்து நடையிலிருந்து சிறிது வேறுபட்டது. ஆண், பெண்ணுக்கிடையிலான  உறவினை, அன்பினை, அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் எழுத்து. 'இந்தும்மா' போன்ற அன்பொழுக இவரது நாயகர்கள் தம் இதயங்க கவர்ந்த காதலிகள், மனைவிகளை அதிகம் அழைப்பதை இவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அதன் பாதிப்பை இந்துமதி போன்ற எழுத்தாளர்களிடம் காணலாம். அதிகமாகத் தமிங்கிலிஸ் பிரயோகங்களை இவரது எழுத்தில் காணலாம்.

இவரது நாவல்கள் பல தமிழ்த்திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவரது நாவல்களை அதிகம் வாசிக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கின்றேன். 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை , நண்டு போன்ற இவரது கதைகளின் திரைப்பட வடிவங்களைப் பார்த்திருக்கின்றேன்.

என் பால்யப் பருவத்தில் விகடனில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான சிறு நாவல் 'எதற்காக?'

அந்நாவல் தொடராக வெளியானபோது வாசித்துள்ளேன். என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் அந்நாவலும் ஒன்று.  அதன் கரு   வாசிப்பவர் மனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அது என்னை ஏன் பாதித்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.  இந்த மானுட இருப்பு பற்றிய  தேடல் எனக்கு எப்போதுமுண்டு. ஏன் எதற்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் படைக்கப்பட்டுள்ளன?  எதற்காக எதிர்பாராத விளைவுகள் உயிர்களின் இருப்பில் ஏற்படுகின்றன? இவரது 'எதற்காக' என்னும் நாவலும் இப்பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளதால்தான் முதல் வாசிப்பிலிருந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. காதல் மிகுந்த , ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொட்டி வாழ்ந்து வரும் தம்பதிக்குக்  குழந்தை பிறக்கின்றது. இன்பத்தில் வளம் , நலத்துடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் அந்தப்பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில் மின்  ஒழுக்கினால் தீண்டப்பட்டு கருகி இறந்து விடுகின்றாள். எதற்காக இப்படி நடக்கின்றது என்று  கேட்கும் நாவலாசிரியை கடவுளிடமும் அதே கேள்வியைக் கேட்கின்றார் 'எதற்காக?'  வாசிக்கும் ஓவ்வொருவரும் கேட்கும் கேள்வி 'எதற்காக?'  

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (2) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்

சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.

3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: 54 சமகால ஆங்கிலக் கவிதைகளும் எழுத்தாளர் க.நவம் மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய 'எனினும் நான் எழுதுகிறேன்'

விவரங்கள்
- க.நவம் -
நிகழ்வுகள்
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.

மற்ற கட்டுரைகள் ...

  1. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “காலத்தைக் கடந்து நிற்கும் சிலப்பதிகாரம்”
  2. குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்! - குரு அரவிந்தன் -
  3. சிறுகதை: எங்கம்மா....! - ஸ்ரீராம் விக்னேஷ்-
  4. ஆய்வு: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (1) - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  5. நேற்று 'டொராண்டோ'வில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட நிகழ்வு! - வ.ந.கி -
  6. பதிவுகள்.காம் பதிப்புத்துறையில்......
  7. அஞ்சலிக்குறிப்பு: இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -
  8. எழுத்தாளர் என்.சரவணனின் 'யாழ் நூலக எரிப்பு' பற்றிய 'தாய் வீடு' கட்டுரை பற்றிய முகநூல் பதிவும் , அதற்கான அவரது எதிர்வினையும்! - வ.ந.கி -
  9. இலங்கைப் பயணக் கதையினை எழுதுவது எப்படி ? - அமரர் கல்கி, மணியன், சாரு நிவேதிதா, அராத்து, அ.மார்க்ஸ், சரவணன் மாணிக்கவாசகன் மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் எழுதிய இலங்கைப் பயணக் குறிப்புக்கள் தொடர்பாக --- - வாகீசன் -
  10. கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2022ம் வருட விருதுகள்!
  11. கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -
  12. கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
  13. யாழ் நூலக எரிப்பு தின நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -
  14. கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
பக்கம் 47 / 104
  • முதல்
  • முந்தைய
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • அடுத்த
  • கடைசி