பதிவுகள் முகப்பு

பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' புத்தக வெளியீடும் ஆனந்தராணியுடனான அறிமுகமும்! - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -

விவரங்கள்
- சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -
முகநூல் குறிப்புகள்
23 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -

-  சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) என் பதின்மப் பருவத்திலிருந்து அறிமுகமான நண்பர்களில் ஒருவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர் அண்மையில் 'டொரோண்டோ'வில் நிகழ்ந்த நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றியெழுதிய சிறப்பான முகநூற் பதிவிது. - வ.ந.கி -


பாலேந்திராவின் நாடக பயணத்தின் 50 வருட காலத்திற்கு மேலான பயணத்தின் அனுபவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக அவரால், அவரின் இணையர் ஆனந்தராணியுடன் இணைந்து உருவாக்கி புத்தக வெளியீடும் விமர்சன அரங்கும் கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வாரம் நிகழ்ந்தது. தற்போது எல்லாம் இவ்வாறான பொது நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்பவர்கள் மிக அரிதாகிப் போன சூழலில்... இந்நிகழ்வில் பல கருத்து வேறுபாடு உள்ளவர், அமைப்புகள்களைச் சேர்ந்தவர்கள் தனி நபர்கள் என்று வழமையை விட ஐந்து மடங்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டது பாலேந்திராவின் நாடக உலகப் பயணதிற்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாராமாக பார்க்க முடிகின்றது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தை தனது கட்டப்பெத்தை பல்கலைக் கழக மாணவர் வாழ்வில் அத்திவாரம் போட்டவர்.

இலங்கை பரப்பில் தலை நகரிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகத்தை பார்க்க நாம் போயாக வேண்டும் என்பதாக பல ஊர் மக்களையும் அரங்கத்திற்கு அழைத்த பெருமை பாலேந்திராவை சாரும். ஆரம்பத்திலேயே குறிபிட்டும்விடுகின்றேன் இந்த நாடகப் பயணத்தின் வெற்றி ஆனந்தராணி இல்லாவிட்டால் நிச்சயம் முழுமைபெற்றிருக்க முடியாது. இதனை அருகில் இருந்த அல்ல தூரத்தில் இருந்து பார்த்து வந்த பலரில் நானும் ஒருவனாக இருந்தாலும் அன்று புத்தக வெளி யீட்டில் இருவரும் தம்மால் உருவாக்கப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட நாடங்களில் சிலவற்றில் இருந்து ஒவ்வொரு காட்சியை பாடலுடன் நடிப்பை சபையில் முன்வைத்த போது என்னால் இன்னும் அதிக உணரமுடிந்தது.  பாடல்களுக்கான உயிர்ப்பை.... இனிமையை... தாளம் போடும் அளவிற்கு பின்னணி இசையான அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யாழ் கண்ணன் இல்லாமலே எம் முன்னே கொண்டு வந்தனர். அவர்களின் பாடலுடன் இணைந்து நடிப்பை நான் தாளம் போட்டுத்தான் கேட்டேன். வாசுதேவன் என்ற கவிஞரின் கவிகளும் வலுவாக இருந்தன.

நிகழ்விற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அவரின் ஆரம்ப காலத்து பல்கலைக் கழக சகாக்கள், நாடக நடிகர்களாக சிலர் வந்திருந்தது அதுவும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு என்பதாக அது இருந்ததும் இந்த ஐந்து மடங்கு பார்வையாளர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை நிறுவுவதற்கு போதுமான ஆதாரத்தை கொண்டிருந்து.

மேலும் படிக்க ...

நடிகர் சரத்பாபு மறைந்தார்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னை  மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. அவரது அமைதியான யாரையும் கவரும் முக அழகுடன் கூடிய ஆளுமையும், இதயங்களை வருடிச்  செல்லும் குரலும் எப்போதும் என்னை ஆகர்சிப்பவை. அது அவரது உண்மைக் குரலா அல்லது வேறு யாராவது அவருக்குக் குரல் கொடுத்தார்களா என்பது தெரியாது.  ஆனால் அந்தக் குரலும், அவரது நடிப்பும், சிரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரது மறைவுச் செய்தியினை இன்று இணையம் மூலம் அறிந்தேன். அண்மையில் அவர் மறைந்ததாக முகநூலில் வதந்தியொன்று  பரவியது நினைவுக்கு வந்தது. ஆனால் இது வதந்தியல்ல என்பதைத் தமிழக முதல்வரின் இரங்கல் செய்தி புலப்படுத்தியது. இதுவரை காலமும் தன் நடிப்பால் எம்மையெல்லாம் மகிழ்வித்து வந்தார் சரத்பாபு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -

விவரங்கள்
- பதிவுகளுக்கு அனுப்பியவர்: நா.சபேசன் -
நூல் அறிமுகம்
21 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் கிடைக்கக் கூடிய முழுக் கவிதைகளையும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?' எனும் தலைப்பில் தொகுத்து இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடுகிறோம். காலச் சுவடும் கூடலும் இணைந்து இந் நூலை வெளியிட்டுள்ளன.  இதற்காக நுஃமான் அவர்கள் எழுதிய முன்னுரையை நன்றியுடன் இங்கு பகிர்கிறேன். விஜயேந்திரனின் கவித்துவத்தை இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. -  எழுத்தாளர் நா.சபேசன் -


இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்  - எம். ஏ. நுஃமான் -

1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.

மகாஜனாவில் இருந்து ‘புதுசு’மூலம் வெளி உலகுக்கு அறிமுகமான கவிஞர்களுள், விஜயேந்திரனின் சக பயணிகளான பாலசூரியன், சபேசன், ரவி, ஊர்வசி, ஔவை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1970களின் பிற்பகுதியிலும் 80களிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைத் துறைக்குள் வந்தவர்களை, போரின் புதல்வர்கள் என்று நான் சொல்வதுண்டு. இனமுரண்பாடும், விடுதலை இயக்கங்களின் எழுச்சியும், போரும், வன்முறையும் இவர்களைக் கவிதைக்குள் இழுத்துவந்தன. இவர்களுடைய கவிதைகள் பெரும்பாலும் இவற்றுக்கான இலக்கிய எதிர்வினைகளாகவே அமைந்தன. தமிழ்த் தேசியக் கருத்துநிலையும், மார்க்சிய இடதுசாரி இலட்சியங்களும், வெவ்வேறு அளவில் இவர்களது கவிதைகளில் தொனிப்பொருளாகக் கலந்திருக்கக் காணலாம். இவர்கள் யாரும் ஏராளமாகக் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள் அல்ல. ஆனால், கணிசமான எண்ணிக்கையில் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பத்தினாதனின் ‘அந்தரம் நாவல் குறித்த எனது பார்வை. - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
20 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை,  சிறுகதை,  நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.

அந்த வகையில் இலங்கை மன்னார் மாவட்டம் வட்டக் கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொ. பத்தினாதன் அவர்களின் ‘அந்தரம்’ என்ற நாவல் குறித்து எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். 208 பக்கங்களைக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினால் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பான விடயம். நூலின் அட்டைப்படம் அந்தரத்தை அழகாக, சைகையால் வெளிப்படுத்தி நிறகின்றது.

மேலும் படிக்க ...

பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கிய நிகழ்வில் "கதைகளும் நாமும்"

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

மேலும் படிக்க ...

நியூசிலாந்து சிற்சபேசனின் புதிய நூல்; வெளியீடு - மெய்நிகர் அரங்கு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Zoom Link https://auckland.zoom.us/j/97354605291
Zoom Meeting ID: 973 5460 5291 (No password)

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால் குடிக்கவில்லை. எனினும், ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன்"

இவ்வாறு   1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் - மார்ச்சில் 'யுகமலர்' என்ற தனது கதைத்தொகுதியை வெளியிட்டபோது கூறிய எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கல்கரி மாநகரில் இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

"எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்" என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால், நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.

மேலும் படிக்க ...

கலை,இலக்கியப் பங்களிப்பு மிக்க 'நுட்பம்' சஞ்சிகை பற்றி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதலாவது நுட்பம் இதழ் 1968இல் வெளியானதை நுட்பம் 1970 இதழில் வெளியான கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரியின்  தமிழ் மன்றத்தலைவர் மாவை. நித்தியானந்தனின்   'தலைவரின் செய்தி'யிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இரண்டாவது நுட்பம் 1969இல் வெளிவரவில்லையென்பதையும், 1970இல் வெளியான நுட்பம் இதழே இரண்டாவது இதழ் என்பதையும் மேற்படி தலைவரின் செய்தி தெரிவிக்கின்றது.  1971 வரை கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியாக இயங்கிக்கொண்டிருந்த இக் கல்வி நிறுவனம் 1972 தொடக்கம் -1977 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்குகின்றது. 1978இலிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகமாகச் சுயாதீனமாக இயங்கத்தொடங்குகின்றது. 1972 வரை தமிழ் மன்றம் என்னும் பெயரில் இயங்கிய தமிழ் மாணவர்களின் சங்கம் 1973இலிருந்து தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது.

மேலும் படிக்க ...

முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.) - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
18 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

புலம்பெயர் படைப்பாளர்களின் பாடுபொருள் - தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்கள் ஒப்பீடு! - முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் படைப்பாளிகளின் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சமுதாயம் தன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகப் படைப்பாளி தன் இலக்கியத்தைப் படைக்கின்றான். சமுதாயத்தின் தாக்கத்தின் தன் பாடுபொருளாகக் கொள்கின்றான் . உலகத்தில் ஓர் இனத்தினரின் ஆக்கிரமிப்பால் புலம்பெயரும் பூர்வ குடிகள் தம்முடைய மனக்குமுறல்களைப் படைப்புக்களில் பதிவுசெய்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயா்ந்த தமிழா்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடிபுகுந்துள்ளனா். வெவ்வேறு நாடுகளில் குடிபெயா்ந்திருந்தாலும் அவா்களின் மனம் அவா்களுடைய சொந்த நாட்டைச் சுற்றியே வருவது இயல்பாகும். அதைப் போலவே பாலஸ்தீனத்தை இழந்த அரேபியர்கள் தம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்களில் இடம்பெறும் பாடுபொருளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இடம் பெயா்தல்

தனது ஊரை விட்டுப் பிற மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்குச் சென்று வாழ்தல் இடம்பெயா்தலாகும். இடம் பெயா்தல் ஒரு திட்டமிட்ட வினையாகும். சான்று: பனை ஏறும் தொழிலாளா்கள் குமாி மாவட்டத்தை விடுத்துப் பிற மாவட்டங்களை நாடிச் செல்லுதலும் உாிய பருவத்தில் மீண்டும் தம்மிடம் நோக்கி வருதலும்

குடிப் பெயா்தல்

ஏதேனும் இயற்கைச் சீற்றம் காரணமாகச் சொந்த நாட்டிற்குள் வேறு இடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று வாழ்தல்குடிபெயா்தலாகும். குடிப்பெயா்தலும் ஓரளவு திட்டமிட்டே செய்யப்படுகிறது. சான்று: இந்தியாவில் பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்கள் இலங்கைக்குக் குடிபெயா்ந்தமை.

புலம் பெயா்தல்

தம் மண்ணில் வாழ முடியாமல் துரத்தப்படும் நிலையில் உயிருக்கு அஞ்சி வேற்றிடம் சென்று வாழ்தல் புலம் பெயா்தல் ஆகும். சான்று: ஈழத் தமிழா்கள் சிங்கள இராணுவத்தின் நெக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி ஓடி உலகின் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்தல்

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க ...

ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க, விற்க

விவரங்கள்
Administrator
பதிவுகள் விளம்பரம்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க, விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன் (Shanthi Chandran)
HomeLife Today Realty Ltd.
647-410-1643  / 416-298-3200
200-11 Progress Avenue, Scarborough,
Ontario, M1P 4S7 Canada

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: 'யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்” (மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
17 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள். அந்த விதி, சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி விளையாடியது. 1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை, வீரகேசரி பத்திரிகை நிறுவனம், முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது. இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வனையே சாரும். இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.

முதல் முதலில் 1976 ஆம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி முதல் தலைவராக அமர்ந்த யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்தான் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் தமிழ் நாவலுக்கு நூற்றாண்டு பிறந்திருந்தது. பல தமிழ் நாவலாசிரியர்களை உருவாக்கிய தமிழ்நாடே இந்த நூற்றாண்டை மறந்திருந்தபோது, பேராசிரியர் கைலாசபதி, தனது தலைமையில் அந்த நூற்றாண்டை இரண்டு நாள் ஆய்வரங்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் படிக்க ...

அரசியல் கைதியான எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை! - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசியல் கைதியாக இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை பெற்றுள்ள செய்தியினை ஜீவநதி ஆசிரியரும், எழுத்தாளருமான க.பரணீதரன் தனது  முகநூற் பதிவில் அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி. சிறையில் வாடிய பொழுதிலும் சமுதாயப் பிரக்ஞை மிக்க நாவல்களை எழுதியவர் சிவ ஆரூரன். அவற்றுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருதுகளைப் பல தடவைகள் பெற்றிருப்பவர்.

மேலும் படிக்க ...

முக்கொம்பன் , பூநகரியில் நூலகம் அமைக்கும் திரு.குகனுஜன்! நூலகத்துக்கு உலகெங்குமிருந்து நூல்களை அனுப்பி உதவிடுவோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
13 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                  -   -

அண்மையில் முக்கொம்பன்,  பூநகரியிலிருந்து என் முகநூல் நண்பர்களில் ஒருவரான குணரட்னம் குகனுஜன் ( Kunaradnam Kukanushan ) அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தான் வசிக்கும் பகுதியில் ஊரிலுள்ள பலரின் உதவியுடன் நூலகமொன்றினை அமைத்துள்ளது பற்றியும், அதற்கு பலரின் உதவியுடன் பாட நூல்கள் பலவற்றைக் கொள்வனவு செய்துள்ள விபரத்தையும் தெரியப்படுத்தியிருந்தார். மாணவர்கள் தம் நன்மைக்காக பலரின் உதவிகளுடன்  நூலகம் அமைக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. சமுதாயப் பயன்மிக்க  செயற்பாடு. அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப்பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் தம் நூல்களை அனுப்பி உதவலாம்.

தம்மிடமுள்ள நூல்களை இவர் உருவாக்கியுள்ள நூலகத்துக்கு அனுப்பி உதவ விரும்பினால் , இவருடன் மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள். இவருடைய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    தொலைபேசி இலக்கம்: +94770662917

இவர் அண்மையில் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

‘ஈழத்து நாதஸ்வர இசைமரபில் பஞ்சாபிகேசன் பரம்பரை’

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

திரு வி.ஜீவகுமாரன், திருமதி கலாநிதி ஜீவகுமாரன் இருவரின் நூல்வெளியீட்டு விழா!

விவரங்கள்
_ தகவல்: ஜீவகுமாரன் -
நிகழ்வுகள்
12 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - தெளிவாகப் பார்ப்பதற்கு படத்தை ஒருமுறை அழுத்தவும். -

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2023

விவரங்கள்
- தகவல்: கோகுல ரூபன் -
நிகழ்வுகள்
12 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடையார்குடிக் கல்வெட்டும், விளக்கமும், ஆதித்த கரிகாலன் படுகொலையும், கல்கியும் பற்றி...... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.

கல்கி பிராமணர் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் திட்டமிட்டே குற்றவாளிகள் என்பதை மறைத்தார் என்று கூறுவது  சரியானதல்ல. நாம் ஒருவரின் சாதியைக் கூறி அறிமுகப்படுத்துவது மனித உரிமை மீறல் என்னும் காலகட்டத்தில் வாழ்கின்றோம். அதன் காரணமாகவும் அவர் குற்றவாளிகளின் சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கக் கூடும். மக்களுக்கிடையில் சாதிரீதியிலான வேறுபாடுகளை அவ்விதம் குறிப்பிடுவது அதிகரிக்கும் என்று கல்கி கருதியிருக்கலாம்.  மேலும் பொன்னியின் செல்வனில் பல பாத்திரங்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அவர்களையெல்லாம் சாதிப் பெயர் பாவித்துக் கல்கி அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் எதற்காகச் சதிகாரர்களின் சாதிப்பெயரைக் கல்கி கூற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?

கல்கி தேசியவாதி. காந்தியவாதி. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற ஒருவர். அவரது 'தியாகபூமி'யில் தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்தவர். பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். அவ்விதமான ஒருவரைச் சாதி வெறியராகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மன்னன் மன்னன் என்னும் யு டியூப்பில் நன்கறியப்பட்ட அரசியல் ஆய்வாளார்  'பிராமணர்கள் திட்டமிட்டு மாற்றிய சோழ வரலாறு என்னும் காணொளியில் எதிரிகள் , துரோகிகள் பற்றி கூறும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது. துரோகிகள் என்றால் கூட இருந்து குழி பறிப்பது என்கின்றார். எதிரிகள் என்றால் எதிரி நாட்டில் அல்லவா  இருக்க வெண்டும் என்கின்றார். கூட இருப்பவன் எதிரிக்கு உளவாளியாக இருந்து செயற்படலாம் என்பதை ஏனோ மறந்து விட்டார்?  பாண்டியனுக்கு ஆதரவாகச் சோழர் மத்தியில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் பாண்டிய ஆபத்துதவிகளாகக் கருதப்படலாம்.  இதை அவர் மறந்து விட்டார். இங்கு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் சோழர்களை வெறுப்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.  உண்மையில் குற்றவாளிகள் நால்வரும் சகோதரர்கள் என்றுதான் உடையார்குடிக் கல்வெட்டு கூறுகின்றது.  ஒரு குடும்பத்தவர்கள் சோழரை வெறுப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு வகையில் சோழரால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அதனால் பாண்டியனுடன் இணைந்து பாண்டியனுக்கு உளவாளிகளாகச் செயற்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.  

மேலும் படிக்க ...

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

விவரங்கள்
- முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா -
இலக்கியம்
10 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய  உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023இல்   முதற்பரிசு பெற்ற கட்டுரை. -


குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.

குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.

அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய  படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் படிக்க ...

பதினைந்தாவது குறும்பட விருது விழா - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதி மணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
09 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

30/4/23, காலை 10 மணி ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற பதினைந்தாவது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.  

 திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தலைவர் கே பி கே செல்வராஜ் விருதுகளை அளித்து சிறப்புரை ஆற்றும் போது “இன்றைய இளைஞர்களின் கலை வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக  குறும்படங்கள் அமைந்துள்ளன. திரைப்பட முயற்சிகளுக்குச் செல்லவும் நுழைவாயிலாக சிலருக்கு அமைகின்றன. இலக்கியப் படைப்புகளை எடுத்துக் கொண்டு குறும்படங்களாகவும்., திரைப்படங்களாகவும் மாற்றும் ரச வித்தையில்  தேர்ச்சி கண்டவர்கள் பலர்  வெற்றி பெறுகிறார்கள். அதற்கு இலக்கிய வாசிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது “ என்றார்.

”ஆவணப்படங்களும் குறும்படங்களும் சந்திக்கும் புள்ளி  “ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்க நிழ்ச்சியில் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் கோவை மயன், குறும்பட இயக்குனர் தாரபுரம் புகழ் , மேட்டுப்பாளையம் ஓவியர்  தூரிகை சின்னராஜ், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பங்கேற்று

“ஆவணப்படங்களின் நிஜத்தன்மையும், குறும்படங்களின் புனைவுத்தன்மையும் கொண்ட படைப்புலகம் தேவையாக இருக்கிறது ”  என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

குறும்பட விருதுகளை புகழ், கிளமண்ட் விக்டர், திருமூர்த்தி, பெ. மணிவண்ணன்,மோகன் பிரசாத்  உட்பட 8 பேர் பெற்றனர். ஆவணப் படத்திற்கான விருது மயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது கொங்கு பகுதியைச் சார்ந்த 8 நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம் - ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) - முருகபூபதி , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில், ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்த நபர் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கையில் சில சிங்கள திரைப்படங்கள் முன்னர் வெளிவந்துள்ளன. ஹ◌ாரலக்‌ஷே ( நான்கு இலட்சம் ) தடயம ( வேட்டை ) உதுமானெனிய ( மேன்மைதங்கிய ) முதலானவை அவற்றில் முக்கியமானவை. இவற்றில் காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்கிரம, ரவீந்திர ரந்தெனிய, சுவர்ணா மல்லவராச்சி முதலான மிகச்சிறந்த சிங்கள நடிகர்கள் நடித்திருந்தனர். அந்த வரிசையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படுகாகஹே டொன் சுமதிபாலா எமது இலங்கை சமூகத்தில் அனுதாபத்திற்குரிய மனிதன்.

அந்தச்சம்பவம் 1972 இல் நடப்பதற்கு முன்னர் 1971 இல் கதிர்காமத்திலும் ஒரு அழகுராணி ( பிரேமாவதி மனம்பேரி ) அவ்வாறு பாலியல் வன்முறைக்கு இலக்காகி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். இவள் பற்றி கங்கை மகள் என்ற சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து இரண்டு வருடங்களில் நடந்திருப்பவை.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு ( மெய்நிகர் நிகழ்ச்சி )

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting
Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting

Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

மேலும் படிக்க ...

அறிவியற் சிறுகதை: அழைப்பு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -

விவரங்கள்
ு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -
சிறுகதை
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாசா விண்வெளி ஆய்வகம்.குளிர்ந்த அறையின் கதவுகளை மிக வேகமாக திறந்து உள்ளே வந்தார் டாக்டர் ரொனால்ட்.

“மீண்டுமா..?”

டாக்டர் ஜேரிக்கு ஒன்றும் புரியவில்லை.

“எப்படி?”

“இதோ பாருங்கள்....”

கையில் இருந்த டேப்பில் காட்டுகிறார் உதவி ஆய்வாளர் டாக்டர் ரொனால்ட்.

FRB இல் தொடர்ந்து வரும் சமிக்ஞையின் குறியீடுகள்.

“வாவ்...இதை எதிர்ப்பாக்கவில்லை”

பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இத்தனை காலம் காத்திருந்தது வீண் போகல...! ரொனால்ட் .

கடந்த சில மாதங்கள் முன்பு , வானியலாளர்கள் அதிவிரைவு விண்வெளி சமிக்ஞை வானொலியில் (FRB) வழக்கத்திற்க்கு மாறாக சில சமிக்ஞையை கண்டுள்ளனர், அவை ஆரம்பத்தில் ஒரு முறை தோன்றிய சாதாரனமான வானொலி சமிக்ஞையாக காணப்பட்டன. FRB களில் தொடர்ந்து ஏற்படும் மாற்றம் விண்வெளி ஆய்வகத்துகே ஒரு பிரமிப்பைக் கொடுத்தது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஹிதுமதெ ஜீவிதெ என்றழைக்கப்பட்ட படுகாகஹே டொன் சுமதிபாலா! - வ.ந.கி -
  2. சிறுகதை: முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? - வ. ந.கிரிதரன் -
  3. புத்தனுக்குக் கவிதைத் தூது - செ.சுதர்சன் -
  4. பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் , இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்! - வ.ந.கிரிதரன் -
  5. நுட்பம் (1980/1981) - மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு! - வ.ந.கிரிதரன் -
  6. எழுத்தாளர் முனியப்பதாசன் எழுதிய தொடர்கதை - 'காற்றே நீ கேட்டிலையோ? ' - வ.ந.கிரிதரன் -
  7. மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! - முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -
  8. குறிஞ்சிப்பாட்டு சுட்டும் 'பிறங்குமலை மீமிசைக்கடவுள் முருகப்பெருமான்' - - முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
  9. நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
  10. பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடும் , பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' நூல் அறிமுக நிகழ்வும் & வாழும் தமிழ் கண்காட்சியும்
  11. நூல் அறிமுக நிகழ்வும், வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும்! - தகவல் - பிறேம் -
  12. உழைப்பாளர் தினக்கவிதை - 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம். - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -
  13. உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  14. கதிரையதிகாரம் - துவாரகன் -
பக்கம் 49 / 104
  • முதல்
  • முந்தைய
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • அடுத்த
  • கடைசி