முனைவர் புட்பா கிறிட்டியின் 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமூகப்பணிகள்' ஆய்வு நூல் வெளியிடு!


Join Zoom Meeting |Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

Join Zoom Meeting | Meeting ID: 893 0426 1486 | Passcode: 965901


எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.
ஐஸ்லாந்தைக் கரைகளால் வட்டமாக சுற்றி வரும் தெருப் பயணமே இங்கே பிரபலமானது. பல இடங்களில் நல்ல பாதையும் சில இடங்களில் கற்பாதையும் உள்ளது. இந்தப் பாதையால்போய் வருவதே ஒரு விதமான சாகசமே என்பதால் எங்கள் பயணமும் அதேதான். இங்குதான் அருவிகள் எரிமலைகள் , பனிப்பாறைகள் கறுப்பு கடற்கரைகள் அதிகம் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் எங்கள் பயணம் அத்திலாந்து சமுத்திரத்தின் கடலலை ஒரு பக்கமும் மலைகளை மறுபக்கமும் தடவியபடியே எங்களது பயணவான் சென்று கொண்டிருந்தது .
முதல் இடமாக ஸ்கோஃபொஸ் (Skógafoss)என்ற பிரசித்தமான ஒரு அருவியை நோக்கியே எங்கள் பயணமும் இருந்தது. இந்த அருவி ஆரம்பத்தில் கடலருகே இருந்ததாம். தற்பொழுது ஐந்து கிலோமீட்டர் முன்வழுக்கையில் தலைமயிர் மின்வாங்குவதுபோல் தள்ளிப் போய்விட்டது. இப்படியான மாற்றங்கள் மற்றைய இடங்களில் நடப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் ஆனால் இங்கு ஒரு எரிமலை பொங்கி தனது குளம்புகளை தள்ளுவதன் மூலம் கடலை பின்னால் சில நாளில் தள்ளிவிடும்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG] ]
யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாகை நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

புகழ் மிக்க வானியற்பியல் அறிஞர்களில் ஒருவர் ரஷிய அமெரிக்கரான George Gamow. இவரது மிகச்சிறந்த நூலான One Two Three Infinity ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்துறையில் ஆர்வம் மிக்க வாசகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாசிப்புத் தீனியாக அமையும் நூல்.
ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி: அறிவியல் உண்மைகளும் ஊகங்களும் (Tamil Edition) Kindle Edition
Tamil edition by ஜார்ஜ் கேமாவ் (Author), Jeyapandian Kottalam (Translator) https://amzn.to/4hPS0OB
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.

வாசகர்களின் பல வகையினர். அவர்களில் ஒரு வகையினர் மென்வாசகர்கள். உலக இலக்கியத்தின்ம் தமிழ் இலக்கியத்தின் உன்னதப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்கள், ஆனால் விரிந்த, பரந்த பெருநாவல்களை வாசிப்பதில் ஆர்வமற்றவர்கள். இவர்களுக்கு உரியவை உன்னதப் படைப்புகளின் சுருக்கப்பதிவுகள். அவர்களுக்கு உதவக் கூடியவை எழுத்தாளாரும், மொழிபெயர்ப்பாளருமான அனந்தசாய்ராம் ரங்கராஜனின் உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான பெரு நாவல்களின் சுருக்கமான , அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகள்.
உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்ன கரீனினா' , ஃபியதோர் தஸ்தயேவ்ச்கியின் 'குற்றமும், தண்டனையும்' , 'க்ரமசாவ் சகோதரர்கள்' ஆகியவை தற்போது சுருக்க, அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியாகியுள்ளன.
மென்வாசகர்களுக்கு நிச்சயம் களிப்பைத் தருவன இத்தகைய உன்னதப் படைப்புகளின் சுருக்கப் பதிப்புகள். இச்சமயத்தில் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் விரும்பி வாசித்த 'ராணி முத்து' பிரசுரங்களாக வெளியான சிறந்த தமிழ் நாவல்களின் சுருக்கப்பதிப்புகள் நினைவுக்கு வருகின்றன. அவ்வயதில் ,விரிந்த மூல நாவல்களை வாசிக்கும் பொறுமை அற்ற பருவத்தில், பல நல்ல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவை அச்சுருக்கப் பதிப்புகளே.
” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”
என்று திரைப்பட இயக்குனர் வ. கீரா “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார். அவரின் வீரா நாவலுக்காக அவருக்கு “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ வழங்கப்பட்டபோது ஏற்புரையில் இவ்வாறு பேசினார். ( வீரா நாவல் டிஸ்கவரி புக் பேல்ஸ் , சென்னை வெளியீடு )
மற்றும் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி உட்பட30 படைப்பாளிகளுக்கு நேற்று அவ்விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் ” என்ற சுற்றுச்சூழல் நூலை அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.அந்த நூலை சென்னை கோரல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூ330.
விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தனுபவங்களை விவரித்தனர். முத்துபாரதி நன்றி கூறினார். கீழ்க்கண்டோர் “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பெற்றனர்.
ஓவியர் புகழேந்தி, தொல்லியலாளர் மூர்தீஸ்வரி, திரைப்பட இயக்குனர் வ.கீரா, திருக்குறள் க.காமராசு, பேரா. ரமணி

- முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI) -
"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)
'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின் கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக் கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan, முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]
இலக்கியம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் கண்டறிய முடியாத அனுபவங்களின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வது சாத்தியமற்றது. உலக இலக்கிய வரலாற்றில், காதல், வீரம் மற்றும் மகிழ்ச்சியான முடிவுகளை விட பேரழிவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் துயரங்கள் அவர்களுக்கு எப்போதும் உரிய நீதியைப் பெற்றுத்தந்துள்ளன. இனப் பின்னணி காரணமாக அச்சுறுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் துயரங்கள் மேற்கத்திய நாடுகளில் பல சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலும், உயிர்வாழ்வதற்கான நெருக்கடியே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிடத்தில் நிற்கிறது. மனிதன் இந்த கிரகத்தில் தனக்கென ஒரு இடத்தைக் கண்டறிய போராடுகிறான். தேசியம், பிறப்பிடம், சமூகம், குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவை ஒரு மனிதனின் உயிர்வாழ்வதற்கான உந்துதலை உறுதிப்படுத்தும் விஷயங்களாகும்.
இலக்கியம், யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, மனித உயிர்வாழ்வின் தவிர்க்க முடியாத உந்துதலை பல வடிவங்களில் காலங்காலமாக வெளிப்படுத்தி வருகிறது. பல எழுத்துக்களின் பிரதான கருப்பொருள் வாழ்க்கை மற்றும் அதை எப்படி வாழ்வது என்பதுதான். மனிதர்களின் மனோபாவத்தில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருந்து வருகிறது, குறிப்பாக நவீன காலங்களில். போர்கள் பண்டைய கால மனிதர்களை நிலைகுலையச் செய்தன. இன்று வெளிப்படையான போர்கள் இல்லை. இருப்பினும், அதே வகையான அக்கறையின்மை நவீன மனிதர்களை தங்கள் அடையாள இழப்பால் விரக்தியடையச் செய்கிறது. உலகமயமாக்கலின் பெயரால், உலகம் முழுவதும் ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இருப்பினும், மனித இதயத்திற்குள் ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது. அத்தகைய வெற்றிடம் இங்கு விவாதிக்கப்படும்.


இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை எனது எட்டு வயது பேரனுக்கு உடனே சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய விடயத்தை சியாமளாவிடம் மறைத்தேன். ஐஸ்லாந்தில் எப்பொழுதும் எரிமலை பொங்கும் என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே சிறிய அளவில் எரிமலைகள் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.
அதைச் சொல்லி என்ன பயன்?
இதேபோல் எகிப்திற்கு நாங்கள் செல்லும் காலங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தன. நல்ல வேளையாக இரண்டு தேர்தல்களின் இடையில் எங்கள் பயணம் இருந்தது. அங்கு பயங்கரவாதம் இங்கு எரிமலை – இது சின்ன விடயம் அல்ல. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு (Öræfajökull) எரிமலை பொங்கியபோது விமானப் போக்குவரத்து முற்றாக பல கிழமைகள் தடைப்பட்டிருந்தன.
ஐஸ்லாந்து நாட்டின் கால்பகுதி எரிமலையாலானது - 130 மேலாக பொங்கும் எரிமலைகள் உள்ளன. விடிந்தும் விடியாத காலை நேரத்தில் ரீச்சவிக் விமான நிலையத்தில் இறங்கியதும், ஒரு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கார் சாரதி என்னை தனது காரில் ஏற்றினார்.

கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன்.
ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால் இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது தனுஷின் உடல் மொழியிலே வெளிப்படுகிறது.உடல் மொழி மூலம் நடிப்பது அவருக்கு கைவந்த கலை. சிவாஜி கணேசனின் உடல் மொழி நாடகத்துக்கானது; தனுஷின் உடல் மொழி சினிமாவுக்கானது.இதிலுள்ள ஒருமுக்கியமான யதார்த்தம் — தமிழ் நாட்டின் கிராமங்களில் பகை ஏற்பட்டால் வீடுகள் எரிப்பதுபோல, மாடு கன்றுகளை கொல்ல முயல்வதும் நிகழ்கிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தனுஷை தாக்க வரும்போது மாட்டுக்கன்றை கொலை செய்ய முயன்ற காட்சி, அந்தக் கிராமிய நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.கிராமத்தில் யாராவது இறந்ததும், அதே சமயத்தில் குழந்தை பிறந்தாலும் அல்லது மாடு, ஆடு கன்று போட்டாலும்,“இறந்தவர் திரும்பி வந்து விட்டார்” என்று நம்புவார்கள். இதே நம்பிக்கை இங்கு கன்றின் வழியாகப் படிமமாகிறது.இந்த நம்பிக்கையை நான் என் "பண்ணையில் ஒரு மிருகம்: நாவலில் “நீலன்” என்ற காளைக் கன்றாகப் பயன்படுத்தியிருந்தேன்.
நான் தமிழ்நாட்டு கிராமத்தில் சிலகாலம் வாழ்ந்தவன் மட்டும் அல்ல, அந்த கிராமத்தின் கதையை நாவலாக்கி தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றவன்.மகனாக, தந்தையின் கனவுகளில் வாழ மறுத்தாலும், தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் பல — கிராமத்து பஞ்சாயத்து நிகழ்வும், கடையில் எழுதிய“அகிம்சை” என்ற வசனமும் முக்கியமானவை.

மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.
வகுப்பறையில் இன்னுமொரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. சணண்முகசுந்தரம் மாஸ்டர்தான் எங்களுக்கு அரசறிவியல் பாடம் கற்பிக்க வந்தார். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யச் சொன்னார். ஒவ்வொருவரும் அவரது மேசைக்கு அருகே சென்று சகமாணவர்களைப் பார்த்து எங்களை அறிமுகம் செய்ய வேண்டும். முக்கியமாக எங்கள் பெயர், தந்தையின் பெயர், எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். நான் எனது பெயரையும் தந்தையின் பெயரையும், ஊரையும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
‘நின்று கொள்’ என்றார். என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘குருநாதபிள்ளை மாஸ்டரின் மகனா?’ என்று கேட்டார். ‘ஓம்’ என்று பதில் சொன்னேன்.
‘நான் நடேஸ்வராக்கல்லூரியில் அவரிட்டைப் படிச்சு நல்ல பெயர் எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதேபோல என்னட்டை படிக்கிற நீயும் நல்ல பெயர் வாங்கி அவரது பெயரைக் காப்பாற்ற வேண்டும், தெரியுதா?’ என்றார்.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
அறிமுகம்
ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.
திருப்புகழிலா முதல் பதிவு?
குகதொன்மைப் பதியாகிய ‘கதிர்காமம்’ எனும் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பலவிதமாக எழுதி வைத்துள்ளனர். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், “கதிர்காமம் என்ற தலப்பெயர் அருணகிரிநாதர் திருப்புகழிலேயே முதன்முதலில் இடம்பெறுகிறது” (2013:75) என்கிறார்.
வடமொழிக் கந்தபுராணத்து வீரமாமகேந்திர காண்டம், பதினெண் புராணங்களில் ஒன்றாகிய காந்தமகா புராணத்தில் வரும் தட்சிணகைலாச மான்மியம் முதலானவை இவ்விடயத்தில் முதலில் நமது கவனத்திற்குரியவை. அவற்றிற் பலவும் பேராசிரியர் குறித்த கருத்தைக் கூறும் காலத்துக்கு முன்னரேயே தமிழில் வெளியாகியவை.

ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant பற்றி (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) பிரசுரமான ஆய்வுக் கட்டுரையின் ('The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan') என்னும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்பைச் செய்திருப்பது செயற்கைத் தொழில் நுட்பமான கூகுள் நனோ பனானா (Google Nano Banana). மொழிபெயர்ப்பை இரண்டு நிமிடங்களுக்குள் அது செய்தது.
சுருக்கம்
வாழ்க்கையில் எந்தவொரு பயணமும் உலகெங்கிலும் உள்ள மனிதப் பயணிகளால் ஆனந்தமாகத் தேடப்படுகிறது. இருப்பினும், சில இனக்குழுக்களின் சில புலம்பெயர்வுகள், ஒரு விரும்பத்தகாத இயக்கத்தைத் தவிர, சில சமயங்களில் ஆபத்தான இயக்கங்களைத் தவிர, வேறு வழியில்லை. வசதியான இருப்புடன் எந்தவொரு மனிதனுக்கும் வாழ்க்கையும் பயணமும் கைகோர்த்து இனிமையாக செல்கின்றன. தாயகத்தில் வாழ்க்கை நிச்சயமற்றதாகி, ஒரு அன்னிய தேசத்திற்குள் நுழையும்போது மட்டுமே நெருக்கடி ஏற்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் அத்தகைய இனக்குழுக்களில் ஒருவர். தங்கள் நிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையால் இருத்தலியல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இலங்கையில் ஒரு தமிழ் குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதராகப் பிறந்தார். அவர் ஒரு எழுத்தாளராகவும், கட்டிடக்கலை பட்டதாரியாகவும், நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது மிகுந்த உணர்திறனுடன் வளர்ந்தார். இருப்பினும், அவரது நிலைமை அப்படியே இருக்கவில்லை, ஏனெனில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான இன மோதலின் குழப்பங்களும் கொடுமைகளும் இருந்தன. பிழைப்பதற்கான ஒரே வழி, கனத்த இதயத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறி, ஒரு புகலிடத்தை நோக்கிச் செல்வதுதான். இந்த பயணம் எந்தவொரு மனிதனின் வாழ்விலும் மிகவும் பரிதாபகரமான ஒன்றாகும். அவரது துன்பங்கள் 'குடிவரவாளன்' நாவலில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன, இதில் இளங்கோ என்ற கதாநாயகன் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் பிரதிபலிப்பாகவே வாழ்கிறார்.
இந்த ஆய்வுக் கட்டுரை 'குடிவரவாளன்' நாவலின் கதாநாயகனின் இருத்தலியல் இக்கட்டை ஆராய முற்படுகிறது, அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் உலகெங்கிலும் உள்ள அத்தகைய குடியேறிகளின் உடல், உளவியல், பன்முக கலாச்சார, இன, அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன.
முக்கிய சொற்கள்: கனேடிய-தமிழ் எழுத்தாளர், வ.ந. கிரிதரன், கட்டாய இடப்பெயர்வு, புலம்பெயர்வு, தமிழ் இனம், அகதிகள், விருப்பமில்லாத குடியேறி, அடையாள நெருக்கடி, அரசியல் புகலிடம்.

- அமில்கார் கப்ரால் (Amilcar Cabral)
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?
அதிகாரம் மையப்படுத்தப்படுவது முக்கிய காரணங்களிலொன்று. ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அமைப்புகள், காலப்போக்கில் வளர்ச்சியடையும் போது , அவற்றின் அதிகாரம் அமைப்பின் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரின் கைகளிலேயே தங்கும் நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக மக்களின் அபிலாசைகள் கட்சியின் நலன்களுக்காகப் புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்பட வேண்டிய போராளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளாக மாறி விடுகின்றனர். இது அமைப்புகளின் ஆரம்ப நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் நிலை. இவ்வாறு அமைப்புகளின் அதிகார வேட்கை காரணமாக மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகும் நிலை உருவாகின்றது.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்
நான்:
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல்
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு!
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல்
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும்
எல்லையென்று ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப்
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?
கண்ணம்மா:
கண்ணா! ஒளியெல்லை தாண்டிச் செல்வது பற்றிக்
கூறினாய்.
ஒளி எல்லை தாண்டுமொரு வழி உண்டு தெரியுமா கண்ணா?
நான்:
ஒளியெல்லை தாண்டும் வழியுண்டா கண்ணம்மா?
களிப்பில் மூழ்குமென் நெஞ்சிற்கு உன் பதில்
காரணமாக இருக்கட்டுமடி கண்ணம்மா!
கூறு கண்ணம்மா!

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
இன்று, காசாவின் இருளில்
ஒளி ஒரு பிரார்த்தனை போலே சுழன்றது—
இல்லை, அது வெறும் சூரியன் அல்ல,
ஒரு மூச்சு…
தெய்வீக மென்மை கொண்ட ஒரு மீள்பிறப்பு.
நான் என் உள்ளத்தில் மண் களிமணியை
உணர்ந்தேன்—
அங்கே, குழந்தை ஓர் இறுக்கப்பட்ட ஓசை போல
மௌனத்தைக் கிழிக்க முயன்றது.
இறுதி வெற்றி: LA Dodgers - 5 Toronto Blue Jays 4

இன்று , நவம்பர் 1, 2025, மாலை எட்டு மணிக்கு பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).
இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.
பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ் & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball என்றழைக்கப்படுகின்றது.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
50 வருசத்திற்கு முந்தின கதையிது.மத்தியான வெயில் கொளுத்தி எரிக்கும்.மேனி பிசுபிசுக்கும்.சைக்கிளில் சென்று அலுவல்களை முடித்து வீடு திரும்புவதற்கிடையில் காற்றும் வீசவில்லையென்றால் ஒரே எரிச்சலாயிருக்கும். அப்படியிருந்தும்,ஊருக்குள்ளால யாழ்தேவி கிழிச்சிக்கொண்டு போற வேகத்தில யாழ்.இந்து மகளிர் கல்லூரிக்குப் பக்கத்தில இருக்கிற ரெயில்வே கேற்றோட நிற்கின்ற அரசமர இலைகளும் பறக்கும்,அந்தக்காத்து வந்து முகத்திலயும் அடிக்கும்.அப்போதுதான் இலேசா உடம்புக்குச் சுகமாயிருக்கும்.காற்றில் பறந்த மாசுபடாத புழுதியின் வாசமும் எம்மை ஒருகணம் வசப்படுத்திவிடும்.புகையிரத நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர்க்கடைகளுக்கு முன்னால் நிற்கின்ற பெரிசுகளிடம் கிடுகு வண்டில்காரர் வந்து,
"ரயில் கடவையைக் கடந்து யாழ்தேவி போயிற்றுதே?"என்று கேட்டு நேரத்தைக் குறிச்ச காலமது.யாழ்தேவியில் வருபவர்க்கென்றே ஒவ்வொரு கதையிருந்தது.

கட்டளைக் கலித்துறை
எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மொத்த எழுத்தெண்ணிக்கை 68. நிரையசையில் தொடங்குவதால் ஒவ்வொரு அடியிலும் ஒற்று நீங்கலாக 17 எழுத்துக்கள்.
அவனிவாழ் அவரும் இவரும்..
அவரா இவராய்? அவருமா இப்படி? என்றிடுவோர்
அவரும் இவரொடு வையகம் வாழ்பவர் என்றுணரார்வ்
அவரை அவராய் அறிந்து புரிந்தவர் நல்லுறவோர்
அவரை அறியாது அல்லவை கூறுவோர் புல்லராமே.

கேள்வி: வணக்கம் குரு அரவிந்தன் அவர்களே, கனடாவில் இம்மாதம் தமிழ் இலக்கிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது பெறும் உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாமா?
பதில்: வணக்கம், வாழும்போதே ஒருவரின் சிறந்த சேவைக்காகக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கனடாவில் கடந்த 32 வருடங்களாக இலக்கியச் சேவையாற்றிவரும் எழுத்தாளர் இணையத்தினர் கனடாவின் உயர் விருதாக இதை அறிவித்திருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிமுகம் என்றால் இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசந்துறையில் உள்ள மாவிட்டபுரம் எனது தந்தை அருனாசலம் குருநாதபிள்ளையின் ஊராகும். தாயார் இலக்சுமி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபை 2 ஆம் வட்டார பிரதிநிதியாகவும், பட்டினசபை முதல்வராகவும் பணியாற்றியவர். எனது கடந்தகால வாழ்விடங்கள் காங்கேசந்துறை, கொழும்பு, ரொறன்ரோ என்று சொல்லலாம்.
இலங்கையில் நடேஸ்வரக்கல்லூரி, மகாஜனக்கல்லூரி, பட்டயக்கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றினேன். போரச்சூழல் காரணமாக கனடா நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இங்கும் கணக்காளராகவும், பகுதிநேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச்சபையிலும் பணியாற்றுகின்றேன். எழுத்தாளரான மனைவி மாலினி அரவிந்தனும் கணக்காளராகவும், ஆசிரியராகவும் இங்கு பணியாற்றினார். இலங்கை வங்கியின் அதியுயர் முகாமையாளராக பணியாற்றிய திரு.கு. சிவகணநாதன் எனது மூத்த சகோதரர், மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி எனது மூத்த சகோதரியின் கணவர்,