ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “தமிழியல் ஆய்வுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு”
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
- ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -
83 ஜூலை இனப்படுகொலை இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனை. இலங்கையை 26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது. போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே. இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை' ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம்.
அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.
இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல் நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்) இணைத்திருக்கின்றேன். இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் , ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.
* ஓவியம் - AI
மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மறதி நோயும் மாறிவருவதை நாங்கள் பார்க்கின்றோம். மனிதரின் ஆயுள் காலத்தை மருத்துவத் துறையின் முன்னேற்றம் அதிகரித்திருப்பதால், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது என்றும் நாங்கள் பொருள்கொள்ளலாம். அதேவேளையில் ஒருவரின் வாழ்க்கைமுறையும் இதற்குப் பங்களிக்கிறது என்பதும் விஞ்ஞானம் கூறும் ஓர் உண்மையாகும். மறதி நோயை விளங்கிக்கொள்வது, அதன் அறிகுறிகளை விரைவில் இனம்காண்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்குத் தேவையான உதவிகளைப் பெற்று, வாழ்க்கைத் தரத்தை ஓரளவாவது பேணிக்கொள்வதற்கும் உதவிசெய்யும்.
மனித மூளையைப் பாதிக்கும் பல்வேறு வகையான ஒழுங்கீனங்களின் (dementia) மிகப் பொதுவான ஒரு ஒழுங்கீனமாக அல்சைமர் நோய் (Alzheimer's disease) காணப்படுகிறது. (Alzheimer’s Association, 2024). இந்த நோய் யாருக்கும், எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும்கூட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே இது அதிகமாகக் காணப்படுகிறது.
மூளையிலுள்ள புரதங்களான beta-amyloid மற்றும் tauஇல் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், plaques மற்றும் tangles (புரதக்கட்டிகள், இறந்த நரம்புகளின் சுருக்கங்கள்) உருவாகக் காரணமாகின்றன என்றும், அவை நரம்புக் கலங்களையும், அவற்றின் இணைப்புக்களையும் சேதப்படுத்துவதால் மூளையின் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது என்றும் ஜேர்மன் மருத்துவரான Alois Alzheimerதான் முதன்முதலாக அல்சைமர் நோய் பற்றி விபரித்திருந்தார் (Alzheimer’s Association, 2024).
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்கள் தாய்த்திருநாட்டையும் மொழியையும் வளர்க்க தமிழ் அமைப்புகளை நிறுவியும், தங்களது எண்ணங்களை ஊடகங்களின் துணைகொண்டும் வெளியிட்டு வருகின்றனர். மலேசியாவில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகிய தளங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள் பலர். மலேசியத் தமிழ்க் கவிதைகள் ஆரம்ப காலத்தில் அவர்களது துன்பங்களைத் தாங்கியதாகவும், பின்னர் சமூக வெளிப்பாடுகளின் கூடாரமாகவும் மிளிர்ந்தன.
மலேசிய தமிழ்க் கவிஞர்கள்
கா.பெருமாள், ஐ.உலகநாதன், தீப்பொறி பொன்னுசாமி, சீனி நைனாமுகமது, ப.மு. அன்வர், கரு.வேலுச்சாமி, மா.இராமகிருஷ்ணன், செ.மு.ஜெயகோபி ஆகிய ஏராளமான தமிழ்க் கவிஞர்களை மலேசிய இலக்கிய உலகம் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. மலேசிய தமிழ்க் கவிதைகளின் மொழிநடையை ஆய்வு செய்தால் அவற்றின் பன்முகத்தன்மைகள் தெரியவரும்.
உவமைகள்
மலேசிய தமிழ்க் கவிதைகள் சிறந்த உட்பொருளைக் கொண்டே சமைக்கப் பட்டுள்ளன. நல்ல பொருள்நயமும், உவமை நலமும் அவற்றின் அழகுக்குச் சான்று. கா.பெருமாள் என்ற கவிஞரின் கதிரும் கடலும் கவிதையில் மேகத்தைப் பெண்ணாக உவமிக்கின்றார்.
சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன செல்வி சோலை இராச்குரார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
முன்னுரைவாய்மொழி வழியாகத் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என புதிய செய்திகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கின்றது. இதனைத் தொல்காப்பியர்,
"உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே" (நூ. 1162)
பொருளியல் எனும் நூற்பா மூலம் விளக்குகின்றார். அவ்வகையில் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவரான போகரின் சப்தகாண்டம் என்னும் நூலில் இடம்பெறும் சைவசமயக் கடவுளான சிவபெருமான் பற்றிய புராணச் செய்திகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
போகர் வரலாறு
கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் ஆத்திகவாதியானாலும், மனிதன் கடவுளைப் படைத்தான் எனும் நாத்திகவாதியானாலும் அவர்களின் அறிவுக்கு எட்டாத பரம்பொருள் ஒன்று உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது இயற்கை சக்தியாகவோ அல்லது இறை சக்தியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப பெயர் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் பரம்பொருள் ஒன்றுதான். இதனைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். அந்தச் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் போகர் ஆவார்.
பதினெண் சித்தர்களில் ஒருவர் போகர். இவரின் முழுப்பெயர் போகநாதன். இவர் தன்னைப் போகநாதன், கைலாச போதரிசி எனக் கூறிக் கொள்கிறார். இவரின் குருநாதன் காலாங்கி நாதர். போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தர் ஆவார்.
ஜென் தங்கக் கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில் 1399ல் கட்டப்பட்டது. அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை . தூரத்தில் இருந்து பார்த்தபோது ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது. இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில் பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில், கட்டிடத்தின் நிழல் அழகான பிம்பமாக நீரில் தெரியும். இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இமாலயத்தை கடந்து சென்ற பௌத்தம், சீனாவில் விரிவடைந்து மகாஜான பௌத்தம் ஆகி , அதிலிருந்து பூத்தது இந்த ஜென் பிரிவு. இந்த பௌத்த கோவில் ஜென் பிரிவுக்கானது.
நமது மகாவிஷ்ணுவின் கருடன் எப்படி கொயாட்டோவின் தங்கக் கோவிலின் கூரையில் பறந்து வந்துள்ளார் என்ற கேள்வியுடன் அந்த இடத்தை சுற்றி வந்தேன். ஒவ்வொரு திசையில் பார்க்கும்போது அந்த மாலை நேரத்து வெயிலில் கட்டிடத்தின் அழகு கண்களை நிறைத்தது.
இந்த கோவில் அமிடா புத்தருடன் கருணைக்கான பெண் தெய்வத்திற்கு உரியது . இந்த கட்டிடத்தின் உள்ளே செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை : காரணம் 1950 இல் அங்கிருந்து புத்த குருவாகப் பயிற்சிபெற்ற மாணவர் ஒருவரால் இந்த ஜென் தங்கக் கோவில் முற்றாக எரிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்ட கட்டிடமே நாம் இப்பொழுது பார்ப்பது.
ஏற்கனவே கூறியபடி இந்த அழகிய ஜென் புத்த கோவிலில் மாணவராக இருந்த இளம் பிக்கு ஏன் எரித்தார் என்ற கேள்விக்குப் பைத்தியகாரன் எனப் பதில் கிடைக்கிறது .
முன்னுரைபழமொழிகள் அச்சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக்கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும், தெளிவுடனும், சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்காக கம்பர் தம் இராமாயணத்தில் தேவைப்படும் இடங்களில் பழமொழிகளை பயன்படுத்தியுள்ளதை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
தொல்காப்பியத்தில் பழமொழி
தமிழில் பழமொழி இலக்கியத்திற்கு முதன் முதலாக வரையறை தந்தவர் தொல்காப்பியரே.
“பாட்டு உரை நூல் வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ்”
(தொல்காப்பியம்- செய் 78)
நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும், இன்னோரன்ன விளங்கித் தோன்றிக் கருதிய பொருளைக் காரணத்தொடு முடித்துக் கூறுதல் முதுமொழி என்று கூறுவர்.
“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப”
(தொல்காப்பியம்-செய் 175)
கொயாட்டா நகரமே அதிக காலம் யப்பானிய அரசின் தலைநகராக இருந்தது. இதில் (Heian period (794–1185) இக்காலத்தில் மன்னருக்கு பலமற்று போகப் பிரபுக்கள் உருவாகினார்கள். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள். கிட்டத்தட்ட ஆங்கிலேயப் பிரபுக்கள் போன்றவர்கள் . இக்காலத்தில் அதிக போர் நடக்கவில்லை என்பதால் மேலும் சீனாவின் அரசு பலமற்று போனதால் அக்காலத்தில் அமைதி நிலவியது: இலக்கியம் வளர்ந்தது என்கிறார்கள். இக்காலத்தில் யப்பானில் கவிதை மற்றும் இலக்கிய நூல்கள் பல உருவாகின.அதில் பெண்கள் முதன்மையானவர்கள். உலகம் இலக்கியங்கள் என்ற வரிசையில் ஒரு முக்கியமான நூல் ஜென்ஜின் கதை 11ம் நூற்றாண்டில் பெண் ஒருவரால் எழுதப்பட்டது (The Tale of Genji) . சிலர் இதை யப்பானின் முதல் நாவல் என்பார்கள். ஆங்கில மொழி பெயர்ப்பு 1000 பக்கங்கள் வரும். இதில் கதாநாயகனாக வருவது மன்னரின் வைப்பாட்டியான பெண்ணுக்குப் பிறந்தவன், காதல், காம விடயங்களுடன் அரசராக முயற்சிக்கும் விடயங்கள் கொண்டது என அறிந்தேன். அத்துடன் பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்க அரசவையில் நடக்கும் வரம்பு மீறிய செயல்கள் விவரிக்கப்படும். இது தற்கால நாவல் போன்றது அல்ல. இதை எழுதிய பெண், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் . அத்துடன் மன்னராக வருபவரைத் திருமணம் செய்யக் காத்திருந்தவர் என மேலும் அறிந்தேன்.
யப்பானில் மத்திய காலத்துத் தலைநகராக இருந்தது கொயாட்டா நகரின் தெற்கே உள்ள ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) பெரிதானதும் பிரபலமானதுமாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொர்க்கத்துக்கு பாதைகள் ரோறி வாசல்கள்(Torii gate) வரிசையாக உள்ளன. யப்பானது உல்லாசப் பயணத்திற்கான விளம்பரப் படங்களில் வருவது இந்த கதவுகள், வரிசையாக செம்மஞ்சள் நிறத்தில் மரங்கள் அமைந்திருக்கும். இது சின்டோ மதத்தின் மட்டுமல்ல, யப்பானின் அடையாளமுமாகும். இதனூடாக போவது ஒரு விதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதான படிமமானது. உங்கள் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக்கி காமி என்ற தேவனிடம் அழைத்துச் செல்கின்ற வழியாகும்.
* ஓவியம் - AI
1. மலரும் பூக்களல்ல காதல்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை
பூத்திடும் குறிஞ்சிப் பூக்களல்ல
நம் உறவு…!
பூத்த நொடிகளிலே உதிர்ந்து
விழும் சகுரா மலர்களல்ல
நம் காதல்…!
காலையில் மட்டும் கண்சிமிட்டும்
வெண் தாமரைப் பூக்களல்ல
நம் அன்பு…!
இரவில் இமைகள் இசைக்கும்
மல்லிகை மலர்களின் மணமல்ல
நம் நேசம்…!
வாசம் நுகர வாடிப்
போகும் அனிச்சம் மலர்களல்ல
நம் சரசம்…!
இடம் பார்த்துப் படர்ந்து
கொள்ளும் மணிச்சிகைப் பூக்களல்ல
நம் புரிதல்…!
அரும்பி அறுவடைகளை அழிக்கும்
பெரிய உந்தூழ் பூக்களல்ல
நம் பாசம்…!
பூக்களைக் காதலுக்கு ஒப்பிடுவதேன்…?
ஒப்பிடும் தரம் அல்லவே ஆழமான
உண்மை நெஞ்சங்களின் கேண்மை!
* நன்றி - புகைப்பட உதவி - 'தடயத்தார்' கிருபா கந்தையா.
'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின் (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centre இல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக , மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது. 'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட் இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார். வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரன் இயக்கத்தில் மேடையேறிய, இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga) அங்கு நிஞ்ஜா வீடும், நிஞ்ஜா உடைகளும், போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும் எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல் என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக இந்த மாதிரியான இராணுவ பயிற்சிகள் உள்ளவர்களின் தேவைகள் அங்கிருந்தது. ஆனால் , அவை எல்லாம் மீஜி மன்னரின் சீர்த்திருத்தத்தின் பின்பு மறைந்துவிட்டன . இவைகள் தற்போது பழைமை பேணுவோர்களால் உல்லாச பிரயாணிகளுக்காக காட்சிப்படுத்துகிறார்கள் .
எமது வழிகாட்டி ரிச்சாட்டின் கூற்றுப்படி யப்பானில் பச்சை குத்தியவர்கள் வேலைகளிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் யப்பானில் பாதாள உலகம் எனப்படும் பணத்திற்காகக் கடத்தல், கொலை செய்பவர்கள் இல்லை. என்றபோது யக்குசா என்ன பாதாளலோகக் குழுவிற்கு (Yakuza) என்ன நடந்தது என்று நான் கேட்டபோது இப்பொழுது வெளிநாடுகளில் இயங்கலாம், உள்நாட்டில் அவர்கள் மிகவும் குறைவு என்றார் – அவர்கள் இருந்தாலும், அவர்கள் ஆரம்ப தொழில்கள் இப்போது குறைவு. சூதாடுதல் , அதிக வட்டிக்குப் பணம் கொடுத்தல் என்பவை சாத்தியமில்லை . இப்பொழுது ஓரளவு சூதாடுதல்( Poker and sports) யப்பானில் உள்ளது. மிக குறைந்த வட்டிக்கு அல்லது வட்டி இல்லாது யப்பானில் கடன் பெறமுடியும். இப்படியானவற்றால் யக்குசாவில் அங்கத்தினர் குறைந்துள்ளார்கள் என்றார்.
முடிவுரை
உலகம் ஒரு புதிய சகாப்தத்துள் காலடி எடுத்து வைத்துள்ளது. தொழிநுட்பம், மூலதனம், உற்பத்தி, விநியோகம், மூலப் பொருட்களின் இருப்பு - இவற்றில் எதை எடுத்தாலும் - இவை மனித வாழ்வுக்கு அல்லது உலகின் அசைவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைகளாகின்றன. இற்றை நாள்வரை, இவை தொடர்பாய் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகளின் செல்வாக்கு இன்றுவரை இவை தொடர்பில் இருந்து வந்தாலும், இன்று இது குறைந்த மட்டத்திலேயே செயல்படுவதாகத் தெரிகின்றது. அதாவது, ஒப்பீட்டளவில் ஆதிக்கம் இங்கே குறைந்துள்ளதாகவே காணக்கிட்டுகின்றது.
சீனத்தின் எழுச்சியும், ரஷ்யாவின் இருப்பும், இந்தியா, பிறேசில், தென்னாபிரிக்கா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் புதிய வடிவம் - உலகின் முகத்தை இன்று மாற்றி இருப்பதாகக் கருதப்படுகின்றது.
F-35 அல்லது F-16 விமானங்கள் இன்று வீழ்ந்து நொறுங்குவது சகஜமாகியது – அவை மத்திய கிழக்கின் ஈரானிய போர்முனையாக இருக்கலாம் அல்லது உக்ரைனிய போர்முனையாக இருக்கலாம் அல்லது இந்தியா-பாக் போர்முனையாகக் கூட இருக்கலாம் - ஒரு காலத்தில், இவ்விமானங்கள், கண்ணுக்குத் தென்படாத தொழிநுட்ப வளர்ச்சியின் சாதனைகள் என போற்றிப் புகழப்பட்டிருந்தன. அதாவது, நேற்றுவரை கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்த இவ்விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தப்படுவது சகஜமாயிற்று.
உக்ரைனின் போர் நிலவரம் அல்லது மத்திய கிழக்கின் ஈரானிய போர் நிலவரம் இன்று உலகத்தைப் புதிய செய்திகளுடன் அணுகுவதாக் காணப்படுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள், எதிர்பாராத விளைவுகள் அங்கே காணக்கிட்டுகின்றன. இஸ்ரேலிய வீடுகள், இஸரேலின் நகர்களிலேயே வைத்து தாக்கப்படுவதும் அல்லது அவர்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் இதுவரையிலும் உலகம் கேள்வியுறாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இந்நடைமுறை இன்று வித்தியாசப்பட்டுள்ளது. அந்தளவில், சீன -ரஷ்ய --இந்தியத் தொழிநுட்ப ங்கள், விண்வெளி தொடக்கம் நவீன ட்ரோன்கள் வரை வளர்ந்து நீள்வதாய் உள்ளன.
சொப்கா என்று அழைக்கப்படும் கனடாவில் கடந்த 16 வருடங்களாக இயங்கும் பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை மிசசாகா காவ்த்ரா வீதியில் உள்ள ஜான் போல் போலாந்து கலாச்சார மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சில பிரமுகர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து கனடிய தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.
கூகி வா தியாங்கோ மறைந்து விட்டார் . கென்யா எழுத்தாளரும் கல்வியலாளருமாகிய அவரது மரணம் இன்றைய தமிழ் சமூகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது எமக்குள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்மைப் பொறுத்தவரை எமக்குள் இருக்கும் குழாயடிச் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளவே எமக்குப் போதிய நேரமோ அவகாசமோ இல்லாதபோது இது போன்ற ஆளுமைகளின் இருப்பும் மறைவும் எமக்கு ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. இவரது வாழ்வு குறித்தோ அல்லது படைப்புக்கள் குறித்தோ எந்தவித நிகழ்வுகளையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளாமல் ஒரு சில சஞ்சிகைகளில் ஆங்காங்கே பதிவிடப்படும் வெறும் அஞ்சலிக் குறிப்பிடனேயே இவரது மரணத்தையும் கடக்க நினைக்கின்றது எமது சமூகம். இத்தனைக்கும் இதுவரை இவரது ஆறேழு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. அதனையும் விட அன்றைய காலகட்டங்களில் இவர் எமது பல்வேறு சிறுபத்திரிகைகளைளின் அட்டைப்படமாக அலங்கரிக்கப் பட்டிருந்தார் என்பதும் இவரது எழுத்துக்களை எமது முன்னோடிகள் ஆய்வு ரீதியாக மதிப்பீடும் விமர்சனமும் செய்திருந்தனர் என்பதும் எமக்குள் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது. அன்று உலகளாவிய ரீதியில் தனது கவன வட்டத்தினை விஸ்தரித்து மிகவும் காத்திரமாக இயங்கி வந்த எமது சமூகம் ஒரு சில தசாப்த காலத்திற்குள் இப்படி தடாலடியாக கீழிறங்கிப் போயுள்ளது உண்மையிலேயே வேதனையை ஏற்படுதி நிற்கின்றது.
‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.
காலம் இதழ்களை என்னால் தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. ஆனாலும் படித்த இதழ்கள் மனசுக்குள் பதியமாயிற்று. மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களின் புத்தகங்களால் குவிந்த தலாத்துஓயா இல்லத்தில்தான் முதன்முதலாக காலம் சஞ்சிகையை கண்டேன். என்னுடன் அதிநேசத்தோடு இருந்த கே.கணேஷ் அவர்கள் நான் மிகுந்த ஆர்வத்துடன் காலம் இதழ்களை படிப்பதைப்பார்த்து ஒருசில காலம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக தந்தார்; (பல பெறுமதியான நூல்களை அவரது கையொப்பத்துடன் எனக்கு தந்திருந்தார்). கொழும்பு போகும்போது புத்தக கடைகளில் காலம் இதழை கண்டால் வாங்கிக்கொள்வேன். என் வாசிப்புப் புலத்துக்கு காலம் சஞ்சிகையும் வெளிச்சமிட்டிருக்கிறது.
வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் வெகு தூரம் போய்விட்டேன். ஏதோ தொலைத்தது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் தொலைத்தது வேறு எதுவும் இல்லை. என்னைத்தான். அப்போதுதான் புரிந்தது எனக்;காக வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்று. அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள், திறனாய்வு போன்ற துறைகளில் தன் ஆளுமைகளைச் செலுத்தி வருபவர்தான் முருகபூபதி அவர்கள்;. ஒவ்வொரு கலைஞர்கள். எழுத்தாளர்களின் பிரிவின்போதும் அதனைப் பதிவாக்குவதிலும் அவர் காட்டும் அக்கறை அவரது பரிவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். இலக்கியம் முதன்மையாகக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்; பரிவு காட்டுவதுதான். அதனை இவரின் செயலிலும், எழுத்துக்கள் மூலம் புரிந்து கொண்டேன்.
பழகுவதற்கு இனிமையானவர் முருகபூபதி அவர்கள். எனது அன்புத்தந்தை எஸ் அகஸ்தியரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தவர்;. இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983களில இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் எனது தந்தை அகஸ்தியர் பிரான்சிற்கும் முருகபூபதி அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர். ஆனால் தொடர்ச்சியாக இருவரும் கடிதத் தொடர்புகளில் இருந்திருக்கிறார்கள். அகஸ்தியருடன் இவர் மேற்கொண்ட நேர்காணலை இவரது ‘சந்திப்பு’ என்று நூலில் பதிவு செய்தமையை நன்றியுடன் நினவுகூர விரும்புகின்றேன்.
அத்தகைய அவரது உறவின் தொடர்ச்சி இன்றுவரை எமது குடும்பத்துடன் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்வான விடயம். முக்கியமாக அகஸ்தியரின் ‘சுவடுகள்’ விவரண நவீனம் என்ற நாவல் 2023ஆம் ஆண்டில் வெளியிட்டவேளை, பல சிரமங்கள் மத்தியில் அவர் அந்நாவலை வெளிக்கொண்டு வருவதற்காகச் செய்த உதவியோ அளப்பரியது. என் இதயத்தில் அவை ஆழமாகப் பதிந்துள்ளது. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்குக்காட்டும் அக்கறையும் அன்பும் மேலானது. என்றும் அதனை நன்றியுடன் நான் நினைவிருத்துவதுண்டு. லண்டன் வரும் வேளைகளில் நான் அவரைச் சந்திப்பதில் மிக ஆர்வத்துடன் இருந்திருக்கின்றேன். தொலை நகல் வழியாக அவருடன் தொடர்புகள் தொடர்வது மகிழ்வுதருகின்ற விடயம். எனது தாயார் நவமணியின் சுகம் குறித்தும், எனது சகோதரி நவஜெகனி குறித்தும் தொடர்பு கொள்ளும் வேளைகளில் எல்லாம் அவர் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அத்தகைய ஒரு மனிதத்தை நேசிக்கின்ற ஒருவராவார்.
(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது. எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.)
1951ம் ஆண்டு ஜுலை 13ம் திகதி..... நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் 'வீல், வீல்' எனும் ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!
ஒரு அன்புத் தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் பாலகனை ஒப்புவித்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.
அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.
இலங்கையில் வடமேல் மகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு நகரில் 1954ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி, இவரின் மாணவ பதிவு இலக்கம் : 1.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன் மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள் பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில் இவர்கள் எழுதினார்கள்.
ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.
டோக்கியோவிலிருந்து, நாகோயா என்ற பெரிய நகரத்திற்கு பஸ்ஸில் போகும் பாதை, வளைவுகள் மலைகள் நிறைந்தது. ஒரு பக்கம் பச்சை சிவப்பு என வர்ணம் கலந்த மலைச்சிகரங்களின் நிரந்தர அணிவகுப்பு மறுபக்கம் தூரத்தில் அமைதியான நீல வர்ணத்தில் பசுபிக் சமுத்திரம் என்பது அழகான காட்சி , அதுவும் இலையுதிர்காலம் கண்ணுக்குக் கல்யாண விருந்தாக இருந்தாலும், என் மனதில் வெளியே தெரியும் அழகிற்கு மாறாக உள்ளே இருப்பது நமக்குத் தெரியாது. கோபத்தில் கொதிக்கும் நிலமும், பொங்கி அதிரும் கடலும் நினைவுக்கு வந்தது. யப்பான் மூன்று கண்டங்களின் நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்ற இயற்கை அழிவுகள் நமது தவிர்க்க முடியாத உறவினர்கள்போல் வந்து தங்கிப் போவன.
ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் பின்னர் அதே பெயரில் சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் தமிழ்க்குரல் பதிப்பகத்தினால் (1995 இல்) வெளியானது.
மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை இத்தொடரில் எழுதும் பொழுது குறிப்பிட்ட மேற்கண்ட வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
1976 முதல் அவர் மறையும் வரையிலிருந்த இலக்கிய நட்புணர்வுதான் இந்தப்பத்தியின் ரிஷிமூலம்.
பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்த நிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார்.
1. நிகர் செய்திடாத நியாயங்கள்.
வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.
நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.
சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின்
புரையோடிய அவலம்.
விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.
கூடிய நெருக்கடி கூத்தில்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதிலத்தில்
மகிழவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.
காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.
எனது கவிதை வரிகளை அவரிடம் வாசித்து காட்டினேன்:
‘காளான்கள் இருக்கவில்லை
துவாரங்கள் மட்டுமே…
ஈரமுடன்,
காளான் மனம் வீசுவதாய்…’
‘நல்லது. மிக மிக நல்லது. நல்ல அவதானிப்பு’
திடீரென ஒரு குழிமுயல் எம்மை வெறித்து பார்த்து கொண்டிருப்பதைக் கண்டோம்.
பெரிதும் கிளர்ச்சியடைந்த அவரது கன்னங்கள் சிவப்பாய் மாறின. வாய்விட்டு கத்தினார். பின் என்னைத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இச்சிரிப்பானது புத்தி பூர்வமானதாகவும் மிகுந்த மனித நேயம் கலந்திருப்பதாகவும் எனக்குப் பட்டது. என் உள்ளம் அவரைக் கட்டியணைத்தது.
இன்னும் ஒரு சமயம்: வானில் ஓர் பருந்து வட்டமிட்டது. திடீரென அது அசைவின்றி நின்றது. அதனது இறக்கைகள் மெதுவாக அசைந்தன அல்லது அசையாதிருந்தன - இப்போது பாய்வதா அல்லது பொறுத்திருப்பதா என்று நின்று, நிதானிப்பது போல. டால்ஸ்டாய் அவரது கரங்களைக் கண்ணுக்கு மேல் வைத்து உற்றுபார்த்து விட்டு கூறினார்: ‘திருட்டு நாய்… கோழிகளா உன் இலக்கு… வண்டிக்காரனைக் கூப்பிடுவோம்… அவன் பார்த்துக் கொள்வான்’
வண்டிக்காரனைக் கூப்பிட்ட சத்தத்தில் பருந்து பயந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.