பதிவுகள் முகப்பு

விசுவாசம் மிக்க போராளி: 'ஆனந்தி' (சுப்பிரமணியம் சதானந்தன்)!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிலர் தாம் சார்ந்த அமைப்புக்கு அல்லது நிறுவனத்துக்கு விசுவாசமாக இறுதிவரை வெளிச்சத்துக்கு வராமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள். எவ்விதத்தேவையற்ற பிரச்சினைகளிலும் சிக்காமல் , எல்லோருடனும் அன்புடன் பழகும் இவர்கள் கடமையே கண்ணாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வகையான மனிதர்களில் ஒருவராகவே அண்மையில் மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளில் இயங்கிக்கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சதானந்தன் (ஆனந்தி) அவர்களை நான் அறிந்துகொண்டிருக்கின்றேன். புரிந்துகொண்டிருக்கின்றேன். இவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எவற்றையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஆரம்பத்தில் இவர் காந்திய அமைப்பிலும் இயங்கிக்கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

இவரை நான் நேரில் சந்தித்ததில்லை. பழகியதில்லை. ஆனால் ஒருமுறை இவரிடமிருந்து இயக்க இலச்சினை பொறிக்கப்பட்ட நன்றிக்கடிதமொன்றினைப் பெற்றிருக்கின்றேன். 86-89 காலகட்டம். இவர் தமிழகத்தில் இயக்கத்தளப்பொறுப்பாளராக இயங்கிக்கொண்டிருந்தாரென்று நினைக்கின்றேன். கனடாவில் வெளியான 'புரட்சிப்பாதை'க் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான எனது 'மண்ணின் குரல்' நாவல் நூலுருப்பெற்றபோது அனுப்பியிருந்தேன். அதற்கு நன்றி தெரிவித்து வந்த கடிதம் அது. தட்டச்சு செய்யப்பட்டிருந்த கடிதத்தில் 'ஆனந்தி' என்று கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார். அது இன்னும் என்னிடமுள்ளது. 

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் நீலாவணனின் 'பல்லிகள்'! & எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.

'வெண்டிப்பிஞ்சின் இருபுறமும் விரல்கள் வந்து முளைத்ததுபோல்' பல்லியின் உடல் வாகு இவருக்குத் தென்படுகின்றது. 'பாசி மணி பதித்தது போல் பளபளக்கும்' பல்லிகளின் விழிகள் அமைந்திருக்கின்றன. இவ்விதம் பல்லியின் உடலமைப்பை ஆரம்பத்தில் வர்ணிக்கும் கவிதை பின்னர் அவற்றின் கூடலை வர்ணிக்கின்றது. அதனை வாசிக்கையில் இலேசானதொரு புன்னகை அரும்பாமல் போகாது. 'பூச்சியுண்ட போதை கொண்டு , புருஷனைப்போய் வளைத்துக்கொண்டு , கீச்சுமூச்சு மூட்டு'தாம். 'கிசுகிசுத்து'ப் பேசுதாம் பெண் பல்லி. 'அதற்காகத்தானடியேய் ஆடை அவிழ்த்தோம் என் ஆண் கதையாதே காதலில் கட்டுண்டு' கிடக்குமாம். நிச்சயம் சொல்லுங்கள் இவ்வரிகளைப் படிக்கையில் உங்கள் இதழ்களில் புன்னகை படர்கிறதா இல்லையா?

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நந்தனி சேவியருக்கான அஞ்சலி நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்: நந்தின்னி சேவியர் குடும்பத்தினர் -
நிகழ்வுகள்
26 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

“நான் கே.எஸ்.பேசறேன்”– நினைவாஞ்சலிக் கூட்டமும் நூல் வெளியீடும்! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
25 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று. அவருடைய ஆளுமை, எழுத்தாற்றல், மொழிபெயர்ப்புத்திறன், சமூக அக்கறை ஆகியவற்றை நினைவுகூரும் எளிய அஞ்சலிக்கூட்டம் ஒன்று புதுப்புனல் பதிப்பக அலுவலகத்தில் 24.10.2021 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. டாக்டர் .கே.எஸ்.சுப்பிரமணியனின் மகனும் மகளும் அயல் நாட்டில் கல்வித் துறையில் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். தங்கள் தந்தைக்கான எளிய அஞ்சலியாய் ஒரு நூல் அவருடைய நினைவுநாளன்று வெளி யிடப்பட வேண்டும் என்று விரும்பி அந்தப் பொறுப்பை என் கையில் கொடுத்தனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 373: புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுகதையும் , சிறுகதை பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் முக்கிய சிறுகதைகளில், பலராலும் அடிக்கடி நினைவுக் கூரப்படும் கதைகளிலொன்று இச்சிறுகதை. கதைக்குப் பங்கங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதாம். சிறந்த சிறுகதையொன்று பக்கங்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்யப்படுமொன்றல்ல. அதற்கு உதாரணமாக விளங்கும் சிறுகதைகளிலொன்றுதான் பொன்னகரம்.

நம்மவரில் பலருக்குச் சிறுகதையொன்றின் வடிவம் அல்லது கூறும் பொருள் பற்றிய புரிதல் போதிய அளவில் இல்லையென்பதையும் உணர முடிகின்றது. அவர்கள்தம் ஆதர்ச எழுத்தாளர்கள் பல பக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளை எழுதியிருந்தால் இவர்களும் அவற்றையே , அவ்விதம் எழுதுவதையே சிறுகதையொன்றினை எழுதுவதற்குரிய வழியாகக் கருதிக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அதிக அளவில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்திருக்க மாட்டார்கள். படித்திருந்தால் சிறுகதையொன்றின் தரத்தினை நிர்ணயிப்பது அதன் பக்கங்களின் எண்ணிக்கை அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்குச் சிறுகதைகள் என்றால் அது வெளிப்படுத்தும் அம்சம் என்ன என்பதைப்பற்றிய புரிதல் இல்லாமலிருக்கும். உதாரணத்துக்கு ஒரு சிறுகதை கருத்தினை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தால் உடனேயே அதனைப் பிரச்சாரமாகக் கருதி விடுவார்கள். இவ்விதம் இவர்கள் கருதுவதற்கு முக்கிய காரணம் போதிய அளவிலான வாசிப்பு இல்லாததே. ஒரு சிறுகதையானது ஒரு கருத்தினை மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். ஓருணர்வினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். ஓரிடத்தைப்பற்றிய அல்லது ஒரு விடயத்தைப்பற்றிய விவரணச்சித்திரமாக இருக்கலாம். ஓரிடத்து மாந்தரைப்பற்றிய நடைச்சித்திரமாக இருக்கலாம். ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். நான் இங்கு என்ன கூற வருகின்றேனென்றால் ஒரு சிறுகதையை ஒருவர் வாசித்து முடிக்கையில் அச்சிறுகதை அதனை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு ஏற்படுத்தும் விளைவையே குறிப்பிடுகின்றேன்.

மேலும் படிக்க ...

வன்னியியல் ஆய்வரங்கம் -8

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

“இலக்கியவெளி” நடத்தும் இணைவழி கருத்தாடல் நிகழ்வு! - அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
23 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நம்பிக்கையளிக்கும் சிரித்திரன்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிரித்திரனின் அண்மைய இதழ்களைப் பார்த்தேன். 'டொராண்டோ'வில் முருகன் புத்தகசாலையில் சிரித்திரன் சஞ்சிகையை நீங்கள் வாங்கலாம். சிரித்திரன் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் ஆசிரியர் சுந்தர். (சிவஞானசுந்தரம்). அவர் சிறந்த கேலிச்சித்திரக்காரராக இருந்தது முக்கிய காரணம். தன் திறமையை முழுமையாக அவரால் அச்சஞ்சிகைக்கு வழங்க முடிந்தது. கேலிச்சித்திரங்களே சிரித்திரன் சஞ்சிகையின் இதயமென்று கூறலாம்.அதற்குப்பின்தான் ஏனைய அம்சங்கள் எல்லாம். ஏனென்றால் சிரித்திரனின் பிரதான நோக்கமே அனைவரையும் சிரித்திருக்கச் செய்வதுதான்.

மேலும் படிக்க ...

ஆய்வு: “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” - முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -

விவரங்கள்
- முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -
ஆய்வு
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ஆதிகாலப் பழந்தமிழரின் வாழ்வியலைப் பதிவுசெய்வது சங்க இலக்கியமாகும். ஒரு செல் உயிரி முதல், பிற உயிர்களனைத்தும் இயற்கையின் ஆதாரமாகத் திகழுகின்றன. பண்டைய காலந்தொட்டுத் தற்போதைய நவீனக்காலம் வரை, ஒவ்வொரு உயிரும் தன்னைச் சுற்றிருக்கும் சூழலைச் சார்ந்து வாழ்கின்றது. நமது முன்னோர்களான சான்றோர்கள் அருளிய இயற்கைக் குறித்த சிந்தனை, தெளிவு, பாதுகாப்பு, இயற்கையைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை அறிவை ஆராயுமிதமாக, “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” என்கிற தலைப்பின்கீழ் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

மனித இனத்தின் பகுத்தறிவு சாதனையாகக் கருதுவது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகும். எவற்றையும் அறிவியல் கண் பார்வைக்கொண்டுப் பார்க்கும்போக்கு இந் நூற்றாண்டில் சாத்தியமாகியிருக்கிறது. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தான் சார்ந்த இடத்தைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டி பல முயற்சிகளை எடுத்திருக்கிறான். அதன்பொருட்டு தோன்றியதே அறிவியல் யுகம்.

சுற்றுச்சூழல் என்ற சொல் சுற்றுப்புறங்களை உணர்த்தும் சொல்லாக்க (Etymologically) விளக்கமாகும். இது ஒரு ஒருங்கிணைந்த சொல்லாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இச்சொல் உயிரினங்கள் வாழும் முறைமைகளையும் நீர், உணவு, சூரிய ஒளி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய கருத்தினை ஆராயும்போது, எல்லா உயிர்களும் சுற்றுப்புறத்தைச் சார்ந்து இருக்கின்றன. அதுபோல், ‘சுற்றுச்சூழல்’ என்கிற சொல்லும் உயிரினங்களைச் சார்ந்து தான் பொருள் தருகிறதென்பதை அறியமுடிகிறது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbour front), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனேன். இந்த மண்டை ஓடுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதை அறிந்து கொள்வதற்காக, அருகே சென்று பார்த்த போதுதான் தெரிந்தது, அவை எல்லாம் செயற்கையாகச் செய்யப்பட்ட மண்டை ஓடுகள் என்பது. கடந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் நடந்த ‘உயிர்வதைகள்’ (Built on Genocide) பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மண்டையோட்டுக் கோபுரம் செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: எழுத்தாளர் எஸ்.பத்மநாதனின் சிந்தனைப்பூக்கள் பாகங்கள் 4 & 5!

விவரங்கள்
- தகவல்: எஸ்.பத்மநாதன் -
நிகழ்வுகள்
21 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நேர்காணல் (பகுதி ஒன்று): ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
20 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான அறிமுகக்குறிப்பொன்றினை அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தோம். தற்போது இவருடனான நேர் காணலினைப் பிரசுரிக்கின்றோம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்நேர்காணல் உதவும். 'பதிவுகள்' சார்பில் இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


கேள்வி: உங்கள் சிறு வயது குறித்தும், உங்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓவிய நாட்டங்கள் குறித்தும் கூற முடியுமா?

பதில்: நான் ஆரம்ப கல்வியை கற்றது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில். எனது தந்தை மு.சு.வீரப்பா, ஹட்டன் நீதிமன்றத்தில் ஒரு மொழிப்பெயர்ப்பாளராக (முதலியாராக) இருந்தார். அவர், 1940 களில் இருந்தே நீதிமன்ற அலுவலராக இருந்து வந்துள்ளார். ஓர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தை பெற்ற அவர் பொதுவில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவர். அவரும் எனது சென்ஜோன் பொஸ்கோ கல்லூரியில் அதிபராக பணியாற்றிய வணக்கத்துக்குரிய பிரதர் தோமஸ{மே என்னை முதன் முதலாக இனங்கண்டு என்னை ஓவியத்திற்கான தூண்டுதலை தந்தவர்கள்.

கேள்வி: அப்படியென்றால் உங்கள் தந்தையைப் பற்றியும், பிரதர் தோமஸை பற்றியும் அவர்கள் எவ்வகையில் ஓவியங்கள் தொடர்பில் உங்களுக்கு உதவினார்கள் என்று கூற முடியுமா?

பதில்: முதலில் எனது தந்தையாரை பற்றி கூறுவது பொருத்தமானதாக இருக்கும். எனக்கு பத்து வயதாக இருக்கும் போதே எனது தந்தையாரானவர் நான் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வரைவதற்கான ஓவிய தாள்களையும் வர்ணப்ப10ச்சிகள் செய்வதற்கான வண்ணங்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். அதுமாத்திரமல்லாமல் பண்டிகைகள் வரும் போதெல்லாம் அஞ்சல் அட்டைகளை வாங்கி அவற்றில் என்னை ஓவியங்கள் தீட்ட வைத்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழும் வழக்கமும் அவரிடம் இருந்தது. போதாதற்கு மாலை வேளைகளில், வேலை பளுக்கள் மிகுதியான நாட்களில், ஓரளவு மது அருந்திவிட்டு தன்னிடமிருந்த கலைக்களஞ்சிய தொகுதிகள் (encyclopedia) பதினொன்றில் அவர் விரும்பியதை தேர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். அச்சமயங்களில் ஓவியர்களை பற்றி அவர் வாசிக்க நேரும் போதெல்லாம் என்னையும் அழைத்து அவ் ஓவியர்களை பற்றி கூறி அவர்களின் ஓவியங்களையும் காட்டி என்னிடம் விவரிப்பதில் இன்பமடைவார்.

மேலும் படிக்க ...

சிறுகதை : பரமு!  - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
19 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

" பரமு காலமாகி விட்டான் ! " என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது . அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில் , இவர்களுடைய தலைமையில் , பரமுவும் ஒருத்தன் . மெலிந்த தேகம் .எளிமையான ஆடை .நட்பான பார்வை . முக்கியமாய் அவனை விட ஒன்று, இரண்டு வயசு மூத்தவன் . அகிலை , கிராமப்பொறுப்பாளர் ஏதோ ...விசயத்திற்கு சுளிபுரம் அனுப்பி இருந்தார் . அவனுடைய நண்பன் சேகருடன் சென்றிருந்தான் . சேகர், ஆதரவாளன்.தோழனாகவில்லை . இருவருமே எங்கும் திரியிற நண்பர்களாக இருந்தவர்கள் . இவன் சேர்ந்து விட்டான் . ஆனால் , திரியிறது நிற்ககவில்லை .தவிர , அவனுக்கு வட்டுக்கோட்டையில் , உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் ,திருத்திய வானொலிப்பெட்டி ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது . " குடுத்திட்டுப் போவோம் "என்று கையளித்து விட்டு ,சிறிய கூலியைப் பெற்றுக் கொண்டு வந்தான் . அவனோடு திரியிறதால் சுளிபுரம் முன்னமே சிறிது தெரியும். ஆனால் , அன்று தான் வலக்கம்பறை தேர்முட்டியில் இருந்த கிளி ,மதன் , வனபால் , செந்தில் , பரமு எல்லொரும் அறிமுகமாகிறார்கள் . கூட இருந்த பாபுவை அவனுக்கு , யாழ் புதியசந்தையில் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற போது வந்து தேனீர் குடிக்கிற கடைக்கு ...அவனும் வருவான் . கதைக்கிற போது 'மூளாய்' என்ற போது சுளிபுரத்திற்கு அருகில் ஊர் என்பதால்...நட்பு எற்பட்டு விட்டது . காலையில் அங்கிருந்து வார மினிபஸ் ஒன்றில் வந்து விட்டு எப்படியோ பொழுதைக் கழித்து விட்டு மாலையில் போய் விடுகிறேன்"என்றான் . ' வாழ்வே மாயம் ! ' என்றால் என்ன என்று அகிலுக்கும் தெரியும் . ஆனால் , அவனுக்கு தொழில் நுட்பவேலைகள் அத்துப்படி . அங்கே இருக்கிற பொயிலரில் பிரச்சனை வந்து விடும். திருத்தி இயங்க வைத்து விடுவான் . மின் இணைப்பு வேலைகளையும் நன்கு தெரியும் . அதனால் , கடையில் இருந்த குலம் அவனுக்கு சிலவேளை இலவசமாக தேனீர்க் கொடுப்பான் . கடனுக்கும் தேனீரைக் கொடுத்து எழுதி வைத்திடுவான் . குலம் கூறுகிற‌வன் . " இவன் மாச முடிவிலே எப்படியும் ...கணக்கை இல்லாமல் செய்து விடுவான் . நல்லவன் " . இயல்பான ஒரு வேலை ...? யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் என்றால் ? , யாரைப் போய் நோவது ! ...தெரியவில்லை . எப்பவுமே ஒரு சமூகம் எந்தகாலத்திலும் இரவல் ஆட்சியில் கிடக்கக் கூடாது . பல்லைக்கடித்துக் கொண்டு விடுதலையப் பெற்று விட்டால் தான் உய்யும் . இல்லையேல் சந்ததி பாலையைக் காண வேண்டியது தான் .

மேலும் படிக்க ...

'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் பற்றி எழுத்தாளர் திக்குவல்லை கமால்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"இழந்த மண்ணும் புகுந்த மண்ணுமாய் வாழ்வின் இருத்தலையும் வலிகளையும் பிசைந்து தருகின்றன இச்சிறுகதைகள்." - எழுத்தாளர் திக்குவல்லை கமால் , அண்மையில் வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுதி பற்றி.

எழுத்தாளர் திக்குவல்லைகமால் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக வெளிவந்த எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் ' பற்றி குறிப்பின்றினை எழுதியுள்ளார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி. 


திக்குவல்லை கமால் அவர்களின் முகநூற் குறிப்பு கீழே:

புது வரவு - கட்டடக் கா( கூ)ட்டு முயல்கள் - திக்குவல்லை கமால்-

மேலும் படிக்க ...

சேனையூர்க் கலம்பகம் நூல் வெளியீடும் புதிய அகவை கொள்ளலும்! - தகவல்: பாலசுகுமார் -

விவரங்கள்
- தகவல்: பாலசுகுமார் -
நிகழ்வுகள்
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேவனின் (யாழ்ப்பாணம்) 'பெண் பாவை' நாடகம் பற்றி...

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் தேவன் (யாழ்ப்பாணம்) ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தைத் தமிழில் 'பெண்பாவை' என்னும் பெயரில் நாடகமாக்கியதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தினகரன் பத்திரிகையில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது."

'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்' நூலிலும் அறுபதுகள், எழுபதுகளில் வெளியான நாடகங்களிலொன்றாகப் 'பெண் பாவை' குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தேவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

என் பால்ய , பதின்ம வயதுகளில் இவரது 'மணி பல்லவம்' நாவல் என்னிடமிருந்தது. றோபேர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் புகழ்பெற்ற நாவலான 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு. எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நாவல்களிலொன்று. தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆய்வுக்குரியதோர் விடயம்.

மேலும் படிக்க ...

செவிநுகரக் கவிதந்த கவியரசன் நீயன்றோ! - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , ஆஸ்திரேலியா -

விவரங்கள்
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , ஆஸ்திரேலியா -
கவிதை
17 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 கண்ணதாசன் கவிதைக்கு கற்கண்டே தோற்றுவிடும்
அவ்வளவு சுவையினையும் அவனளித்து நின்றானே
காதலினைப் பாடிவிடின் காமனுமே வந்திடுவான்
தேமமதுரத் தமிழாலே திசைநுகரக் கவிதந்தான்

பாவாணர் மத்தியிலே பக்குவமாய்க் கவிதந்தான்
பாரதிரக் கவிதந்த பாரதிக்கு மகனானான்
ஓவியமாய்க் கவிதந்தான் உயிர்ப்புடனும் கவிதந்தான்
சேமமுற வாழ்வதற்கும் சீராகக் கவிதந்தான்

மேலும் படிக்க ...

சிறுகதை: சரஸ்வதியும் சங்கரலிங்கமும்!  - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
சிறுகதை
15 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“ வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. “

சங்கரலிங்கம், சகல கலா வல்லி மாலையை மெய்யுருக பாடிக்கொண்டிருந்தார். ஊரில் பாடசாலையில் முதலாம் வகுப்பில் அவர் படிக்கும்போது, பண்டிதர் நமசிவாயம் ஒரு நவராத்திரி காலத்தில் சொல்லிக்கொடுத்தது.

சங்கரலிங்கத்திற்கு தற்போது எழுபத்தியைந்து வயதும் கடந்துவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்து நாற்பது வருடங்களும் விரைந்து ஓடிவிட்டன. ஆனால், ஐந்து வயதில் பண்டிதர் சொல்லித்தந்த சகலகலா வல்லி மாலை அவரைவிட்டு ஓடிவிடவில்லை.

புகலிடத்திற்கு வந்த காலம் முதல் நவராத்திரியின்போது மட்டுமல்ல, நல்லூர் கந்தனுக்கு கொடியேறினாலும் சிவன்ராத்திரி காலம் வந்தாலும், ஊரில் சித்திவிநாயகர் ஆலயத்தில் சதூர்த்தி உற்சவம் தொடங்கினாலும், சங்கரலிங்கம் விரதம் அனுட்டிப்பவர்.

வருடாந்தம் இலங்கையிலிருந்து மறக்காமல் பஞ்சாங்கமும் தருவித்துவிடுவார். இலங்கையில் ரயில்வே திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்திலும் நவராத்திரி வரும்போது, அவர்தான் அலுவலகத்தில் கலைமகள் விழாவை ஏற்பாடு செய்வார். ஒரு தடவை போக்குவரத்து அமைச்சரையும் அழைத்தார். அவர் பெளத்த சிங்களவர். பிள்ளையாரை கணதெய்யோ எனவும், சிவனை ஈஸ்வர தெய்யோ எனவும், முருகனை கதரகம தெய்யோ எனவும் சரஸ்வதியை அதே பெயரில் சரஸ்வதி தெய்யோ எனவும் அழைக்கத்தெரிந்த அமைச்சர்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும், இங்கே தேடிக்கொண்ட நண்பர்களிடமும், தான் போக்குவரத்து அமைச்சரை கலைமகள் விழாவுக்கு அழைத்த கதையை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிவிடுவார்.

அந்த பழங்கதையை கேட்டுக்கேட்டு அவரது மனைவி சுகுணேஸ்வரிக்கு அலுத்துவிட்டது.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள், காலையில் வீட்டை சுத்தம் செய்து இரவு சரஸ்வதி பூசைக்கு தயாராகும்போதும் மனைவியிடம் தனது பதவிக்காலத்தில் ஒரு சரஸ்வதி பூசை நாளன்று போக்குவரத்து அமைச்சரை அழைத்த கதையை மீண்டும் சொல்வதற்கு தயாரானபோது, “ அந்த அமைச்சரும் செத்துப்போய் பல வருடமாகிவிட்டது. நீங்கதான் இன்னமும் அந்த ஆளை நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க… “ என்றாள் சுகுணா.

மேலும் படிக்க ...

'டொராண்டோ' முருகன் புத்தகசாலையில்...

விவரங்கள்
- வ.ந.கி -
பதிப்பகங்கள் அறிமுகம்
15 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டொரோண்டா'வில் நீண்ட காலமாக நான் பாவிக்கும் புத்தகக்கடை முருகன் புத்தகசாலை. இங்கு இலங்கை, இந்திய மற்றும் புகலிட எழுத்தாளர்களின் நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை நீங்கள் வாங்கலாம். முருகன் புத்தகசாலையில் எனது நூல்களான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுப்பு), குடிவரவாளன் (நாவல்), அமெரிக்கா (நாவல்) மற்றும் நல்லூர் இராஜாதானி (சிங்கள மொழியில்) ஆகிய நூல்களை நீங்கள் வாங்க முடியும். குறிப்பிட்ட பிரதிகளே இங்கு விற்பனைக்கு உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் முருகன் புத்தகசாலையுடன் தொடர்புகொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

துயர் பகிர்வோம்: கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 எம்மைவிட்டுப் பிரிந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குறிபாகப் புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழியைத் தக்கவைப்பதற்குக் கடந்த 30 வருடங்களாக முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது. இவரையும் இவரது மனைவி திருமதி. யோகசக்தி அருள் சுப்ரமணியத்தையும் முதன் முதலாக அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வீட்டில்தான் சந்தித்தேன். மாதகல் மண்ணில் பிறந்த இவர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்திருந்தார். மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய அதிபராகவும் இவர் பணியாற்றியிருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் எங்கள் இருவருக்கும் அதிக ஈடுபாடு இருந்ததால், தொடர்ந்தும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட முடிந்தது. சமீபகாலமாகச் சுகவீனமடைந்திருந்தாலும், சமூகத் தொண்டை அவர் கைவிடாது தொடர்ந்து கொண்டே இருந்தார்.

கனடா அறிவகத்திற்கு அவர் பொறுப்பாக இருந்தபோது, நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். அவர்களின் தமிழ் மொழிப் பரீட்சையும், நாங்கள் நடத்தும் தமிழ் மொழிப் பரீட்சையும் அனேகமாக ஒரே வாரஇறுதியில்தான் நடந்து கொண்டிருந்தன. இதனால் பங்கு பெற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழப்பநிலையை அடைந்தனர். ஏற்கனவே அவர் எனக்கு அறிமுகமானவராக இருந்ததால், பேசித்தீர்கக் கூடிய விடயம் என்பதால் நான் அவருடன் இது பற்றி உரையாடினேன். எங்கள் பக்கத்து நடைமுறைச் சிக்கல்களை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் பெருந்தன்மையோடு, சற்றுக் கடினம்தான் ஆனாலும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி, தங்களின் பரீட்சைத் திகதியை வேறு ஒரு தினத்திற்கு மாற்றிக் கொண்டார். அவர் பொறுப்பாக இருந்த நிறுவனத்தைவிட, தமிழ் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர் காட்டிய அக்கறை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இருவருமே சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அத்துறை சம்பந்தமாக அடிக்கடி கலந்துரையாட முடிந்தது. தனது சிறுவர் இலக்கிய நூல் வெளியீடுகளுக்கு உரையாற்றப் பல தடவைகள் என்னை அழைத்துக் கௌரவப்படுத்தி இருக்கின்றார். தாய் மொழியாம் தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்ட இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

‘தமிழ் பூங்கா’ என்ற ஒரு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி அதன் பொறுப்பாளராக இருந்து செயற்பட்டார். கடைசியாக ‘பட்டறிவு பகிர்வு’ என்ற கவிதை மின்நூலை சென்ற ஆகஸ்ட் 28 ஆம் திகதி ‘சூம்’ மூலம் வெளியிட்டிருந்தார். தனது பிறந்த ஊரின் பெருமை பேசும், ‘மாதகல் மான்மியம்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். தமிழ் சிறுவர்களின் மொழி வளர்ச்சிகாகப் பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவற்றில் பயிற்சி நூல்கள், கட்டுரைகள், இலக்கண வினாவிடை, சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஒலிவட்டுக்கள் போன்றவை முக்கியமாக அடங்கும். எதிர்கால சந்ததியினருக்கு இவை எப்போதும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் “மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம்”

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
13 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கிடைத்தது வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக அண்மையில் வெளியான எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்பின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் எனக்குக் கிடைத்தன. குறுகிய காலத்தில் மிகவும் தரமாக, சிறப்பான வடிவமைப்பில் ,நேர்த்தியாக நூல் வெளிவந்துள்ளது. அதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் க.பரணீதரனுக்கும் நன்றி. குறிப்பிட்ட பிரதிகளே என்னிடம் விற்பனைக்குள்ளன. 'நண்பர்களின் கவனத்துக்கு இவ்வறிப்பினை இங்கு பதிவிடுகின்றேன். நூலை வாங்க விரும்புவோர் என் மின்னஞ்சலுக்கு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) எழுதுங்கள். மேலதிக விபரங்கள் தரப்படும்.
மேலும் படிக்க ...

'கனவு' முப்பத்தாறு ஆண்டுகளும், நூறு இதழ்களும் -இறையடியான் -

விவரங்கள்
-இறையடியான் -
இலக்கியம்
13 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நொடிந்து போவதற்கும் வீழ்ந்து போவதற்கும் விருப்பமாக இருந்தால் தமிழில் இதழ் ஒன்றை தொடங்கலாம் என்பது முதுமொழி. ஐம்பது அறுபது ஆண்டுகளின் தமிழ் இதழ்களை திரட்டும் போது இது எதற்கென விளங்கும்.

எழுத்து, சரஸ்வதி, மணிககொடி போன்ற தொடக்க கால இலக்கிய இதழ்கள் ஒரு காலக்கட்டம். தீபம், கணையாளி, சுபமங்களா, தீராநதி, காலச்சுவடி ஆகிய அடுத்த கட்டம்.

கண்ணதாசன், கவிதாசரண், யுகமாயினி, செம்மலர், தாமரை, ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது. கல்கண்டு, கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் ஆகியவற்றை அறுபது எழுபதுகளின் கால வரிசையில் சேர்க்கலாம்.

தேன் மழை, அலிபாபா, புதிய பார்வை, முங்காரி, குமுதம் நெஞ்சம், நூதன விடியல், மன ஓசை, கலியுகம், கோடங்கி மகளிர் குரல், மனிதநேய மடல், சமவெளி, நவீன விருட்சம், சோலை குயில், முல்லைச் சரம், திசை எட்டும், காவ்யா தமிழ், முகம் போன்றவற்றை ஒரு தொகுப்பாக்கலாம்.

இந்த மூன்று வரிசைகளைத் தவிர சிறுவர் இதழ்கள் கண்ணன், அணில், வாண்டு மாமா, டும்டும் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

தென்மொழி, தமிழ்ப் பாவை, குயில், தமிழ்ச்சிட்டு, முதல் மொழி, தமிழ்ப் பொழில், அறிவு கடல், தமிழ்நிலம், அறிவு, கைக்காட்டி, குறளியம், தமிழம், பாவை, தமிழ்ப்பாவை, பூஞ்சோலை, மாணாக்கன், முப்பால் ஒளி, குறள் நெறி, இயற்றமிழ், தமிழோசை, தமிழ்த்தேன், தமிழியக்கம், தீச்சுடர், எழுச்சி, வானம்பாடி, வேந்தம், வல்லமை, தமிழ்ப் பறை, வண்ணசிறகு, நெய்தல், பொன்னி, வலம்புரி, தமிழ் நிலம், தமிழ்நாடு, நெறிதமிழ், மறுமொழி, எழு கதிர், வெல்லும் தூய தமிழ், அறிவியக்கம் போன்ற தனித்தமிழ் சஞ்சிகைகள்.

புதுவை, மும்பை, பெங்களூர் போன்ற ஏனைய மாநிலங்களிலிருந்து வெளி வந்துள்ள திங்கள், காலாண்டிதழ்கள் பட்டியலாக்கப்படவில்லை.

இந்த எண்ணிக்கையில் வேறு மொழிகளின் இதழ்கள் கிடைக்குமா என்பது ஐயத்துக்குரியது. பல குறிப்பிடப்பட்ட பட்டியல்களில் சில விடப்பட்டிருக்கலாம்.

இவற்றுள் பல இதழ்கள் குறிப்பாக சிற்றிதழ்கள் படிக்க படிக்க இலக்கிய தரமான படைப்புகளை வெளியிட்டு மறைந்து போயின. அவற்றை மதிப்பீடு செய்தால் மேலும் பெரியதொரு தொகுப்பு வெளிவர கூடும்.

மேலும் படிக்க ...

'தலைவி' பார்த்தேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்றிரவு தலைவி திரைப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்த்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட கதை. இதற்கு முன்னர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கிடையில் நிலவிய உறவினை மையமாகக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'இருவர்' வெளிவந்திருந்தது. ஆனால் 'தலைவி'திரைப்படத்தின் வெற்றியாக நான் கருதுவது பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் , நடிப்பும்.

'இருவர்' திரைப்படத்தில் மோகன்லாலை, பிரகாஷ்ராஜைத்தான் நாம் நினைவு கூர்வோம். அவர்கள்நடித்த பாத்திரங்களை அல்ல. ஐஸ்வர்யா பச்சன் மட்டும் சிறப்பாக ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருந்ததாக உணர்ந்தேன். ஆனால் 'தலைவி' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்தும், அரவிந்தசாமியும் முறையே ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆராகவும் முற்றாகவே தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். கலைஞராக நடித்த நாசரும் ஓரளவுக்குத் தன்னை மாற்றுவதில் வெற்றிகொண்டிருக்கின்றார் என்றே கூறலாம். ஆனால் முதலிருவரும் முற்றாகவே தம்மை அப்பாத்திரங்களாகவே மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். படம் முழுவதும் எம்ஜிஆர் , ஜெயலலிதாவாகவே அவர்கள் தென்பட்டார்கள். கங்கனா ரணாவத்தாக, அரவிந்தசாமியாகத் தென்படவேயில்லை. அவ்வளவுக்கு இருவருமே அவ்வாளுமைகளின் இயல்புகளை உள்வாங்கி நடித்திருக்கின்றார்கள். மிகவும் சிரமமான பணியினைச் சிறப்பாக, எப்பொழுதும் மனத்தில் நிலைத்திருக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அதற்காக இயக்குநர் விஜய் அவர்களைப் பாராட்டலாம். இத்திரைப்படத்தின் மூலம் கங்கனா ரணாவத்துக்குச் சிறந்த நடிகைக்கான மத்திய அரசின் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆணாதிக்கம் நிறைந்த தமிழ்த்திரையுலகில், அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் ஜெயலலிதா அடைந்த அவமானங்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வெற்றிகொண்டு தன்னை நிலை நிறுத்திய வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அதனைச் சிறப்பாகவே இத்திரைப்படத்தில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009-7) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
11 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் 2009 -7

பங்குனி பிறந்து வெய்யில் கனத்திருந்தது. இரவுக்கும் பகலுக்கும் வெளிச்சம் தவிர வேற்றுமை அதிகம் இல்லாதிருந்தது. பகலில்போல் இரவிலும் குண்டுகள் விழுந்து வெடித்தன. பகலில்போல் இரவிலும் மனிதர்கள் சிதறி அழிந்தார்கள். தெய்வங்களும் நீங்கிப்போன பூமியாயிருந்தது வன்னி நிலம். பிரார்த்தனைகள் மனிதருக்கு ஆறுதலைத் தந்தன. பலன்களைத்தான் தராதிருந்தன. பதுங்கு குழி இருந்ததில் அதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த இடம், யுத்தம் புதுக்குடியிருப்பைநோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையிலும் தகுந்த பாதுபாப்பைத் தருமாவென யோசனையாகிப் போனது முருகமூர்த்திக்கு. அதுவரை இருந்தது சரிதான், ஆனால் இனி என்ற கேள்வி அவன் மனத்தில் விடைத்து நின்றிருந்தது. கடைசியில் மேலே நகர்ந்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு அவன் வந்தான். மாசி 4இல் இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி ஓய்ந்திருந்த ராணுவத் தாக்குதல், மறுபடி மாசி 6ஆம் திகதியிலிருந்துதான் உக்கிரமடைந்திருந்ததை அவன் நினைவுகொண்டான்.

இரண்டு நாட்கள் இந்தக் குண்டுவீச்சுகளுக்கு ஒரு இடைவெளி விட்டாலும், குண்டுகள் எட்டாத இடத்துக்கு பிள்ளைகளோடு அவன் ஓடிவிடுவான். பலபேர் குண்டுகளை யோசிக்காமல் ஓடினார்கள். அவனால் முடியவில்லை. அவனுடைய மகள் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் நடுங்கி ஒடுங்குகிறாள். எந்தநேரமும் பதுங்குகுழிக்குள்ளே அடங்கிக் கிடக்கிறாள். ஷெல்லடியில் தாய் உடல் சிதறிச் செத்த துக்கத்தையும், அதன் பயத்தையும் அவளால் இலகுவில் மறந்துவிட முடியாது. அவள் சிரித்து என்றும் பார்த்ததேயில்லையென ஆகியிருந்தது. முருகமூர்த்தி நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. சித்திரை 14இன் புதுவருஷத்துக்கு முன்னர் வன்னியின் முழுநிலப் பரப்பையும் பிடித்துவிடுகிற மூர்க்கத்தில் ராணுவம் மும்முரமான எறிகணை வீச்சில் இறங்கியதுதான் நடந்தது. கடற்புறத்திலிருந்து பீரங்கிப் படகுகள் குண்டுகளை வாரி இறைத்துக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது..  -  நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
  2. அறிமுகம்: ஓவியர் வீரப்பன் சதானந்தன் - வ.ந.கிரிதரன் -
  3. அந்தக் கணத்தில் இருத்தலும், நிகழ்காலத்தில் வாழ்தலும்!   - ஸ்ரீரஞ்சனி -
  4. ஓராயம் அமைப்பின் ஆதரவில் நடந்த மெய்நிகர் நிகழ்வு: 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' - வ.ந.கிரிதரன் -
  5. ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -
  6. ஆய்வு: எஸ். பொன்னுத்துரை படைப்புகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்! - முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -
  7. அரசும் அதிகாரமும் - அறிதலும் பகிர்தலும் 8 நிகழ்வுக்கான அழைப்பு! - விதை குழுமம் -
  8. பன்னாட்டுத் தமிழியற் கருத்தரங்கு அழைப்பிதழ்! தலைப்பு: “திருக்குறள் கூறும் அறம்”!
  9. வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'!   - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
  10. ஓராயம் அமைப்பு: அனுபவப் பகிர்வு க. பாலேந்திரா & ஆனந்தராணி பாலேந்திரா!
  11. இனிய நந்தவனம் - கனடா சிறப்பிதழ் வெளியீடு! - மணிமாலா - கனடா -
  12. தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (15 - 20)! - ஜோதிகுமார் -
  13. பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர் சொற்பொழிவு - 10!
  14. தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (11 - 14)! - ஜோதிகுமார் -
பக்கம் 90 / 107
  • முதல்
  • முந்தைய
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • அடுத்த
  • கடைசி