ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப்  போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று   நிற்பது போல  ,   ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும்  ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி  அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் .   அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! .

         கொஞ்சநாளுக்கு முதல் சுகன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அலைபேசியில் " வா , வா " என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் .   அது  ஞாபகம் வந்தது   .   அவ்விடத்திற்கு அயலில் கார் சென்ற போது " வீட்டிலா இருக்கிறாய் ? " என்று கேட்டான் . " வா " என்றான் . அலைச்சல் வேலையில் தினமும் ஒரு மூட் . எரிபொருள் விலை ஏறியதில் ...புலம் பெயர் நாடே வேறொரு மாதிரி தோற்றம் காட்டுகிறது . இந்த நாட்டுக்கு வெளிநாட்டுக் கொள்கை கிடையாது . அயலில் உள்ள பெரியவன் என்ன சொல்றானோ ?....பின்னாலே போறவன் . வாழ்க்கைச் செலவு கூடும் . பஞ்சத்தை எட்டிப் பார்க்கும் என்று தெரியும் . இன்றைய தலைவரின் அப்பருக்கு இருந்த தைரியம் ….கிடையாது . என்ன இருந்தாலும் பழசு வலிமையானது தான் . ஊரிலே ஏர் மேடை கட்டி இறைக்கும் முறை , சூத்திரக்கிணறுகள் ...எல்லாவற்றையும் மெருகூட்டி மீள கொண்டு வாருங்கள் . அதை வீழ்த்த இன்று கூட எதுவுமே இல்லை . காந்தி வயதானவராக இருக்கலாம் . அவரது கொள்கைகள் வயதானதில்லை .   இந்த தலைவர்களா இயற்கையைக் காப்பாற்றப் போறவர்கள் ? . வாயில் கஞ்சாவை வைத்துக் கொண்டு பேசுறவர்கள் . வெறித்தனமாக சண்டை பிடிக்க  ஆயுதங்களை அனுப்பிக் கொண்டு கிடக்கிற பலவீனமானவர்கள் . சரியான    மெண்டல்கள் . விடுங்கள் .

ஓர்கானிக் உழைப்பில் மட்டும் கவனம் பதித்து உழையுங்கள் . அதை நிர்வகிக்கிற கட்டமைப்பிலே நிறைய குளறுபடிகள் ; சுரண்டல்கள் ; கட்டுக்கள் ; பறிப்புக்கள் ; துரத்தல்கள் . பண நோட்டுகளின் மதிப்புகள் இமய மலையின் உச்சியைக் கடந்து கொண்டு போகிறது . அங்கே இருக்கிற பொருளைக் கொண்டு வந்து இங்கே விற்றாலும் அங்கத்தைய விலையில் தான் விற்கப்படுகிறது . இடையில் உள்ள தூரமா பெறுமதியை மாற்றுகிறது ? எல்லாம் புலுடா ? . இந்த உக்ரேன் மோதலுடன் எல்லாமே மாறட்டும் .  பிரித்தானிய சாம்ராட்சியத்தின் கடைசி படிக்கட்டும் வீழ்ந்து உடைந்து போகட்டும் . இலங்கையும் இந்த மக்கள் எழுச்சியுடன் பச்சைப்பாவாடை  கட்டிக் கொள்ளட்டும் .

       நியூற்றன் துணிக்கை நியூற்றன் கருவைத் தாக்குற கொள்கையை சமூகங்களில் வைத்தே உலகமயமாதலை சோதித்துப் பார்த்தார்கள் . அது நிறைய பிரச்சனைகளையே கொண்டு வந்திருக்கிறது . அபிமன்யுவைப் போல வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி தெரியவில்லை . சண்டைகளை வளர்த்திக் கொண்டு போகிறார்கள் . இங்குள்ளவர்கள் " பிராந்திய சுதந்திரம் "  பற்றி பேசுகிறார்கள் . இலங்கை அரசு தமிழர்களை அடித்தபோது பேசிய அதே பேச்சுகள் . இவர்களின் பிரபு , சேரிப் பிரச்சனை நம்மூர் சாதிகளுக்கு வேற ஒரு வடிவம் கொடுத்தது . அது தான் நாம் இன்று காண்கிற சாதிப் பிரச்சனைகள் . நிறுவி ,நிறுவிப் பாருங்கள் . ஐரோப்பிய நாட்டினரே காரணம் என்ற விடையையே பெறுவீர்கள் . நம்மவர்களே புறுபுறுக்கிறார்களா ? . அடிமை நிலைக்குள் வீழ்ந்து நிரம்ப  நாளாகி விட்டது .  "  விழித்து எழுந்து வா ! "  என்றால் யுகக் கணக்கிலே நடைபெறுகிற சமாச்சாரம் . “ ஏன்? ,  என்ற கேள்வி இல்லாமல் …வாழ்வு இல்லை ! ”.

     நண்பனைச் சந்திக்கச் சென்றான் . "டேய் வாடா " வரவேற்றான் . வீடு ஒரு கனவு . நம்ம நாட்டில் அதை சுழல்க் காற்றில் தள்ளி விட்டிருக்கிறார்களே . கடிக்கிற வேட்டை நாய்கள் நம்பிரதேசம் எங்கிலும் திரிந்து கொண்டு ... .,  இந்த எழுச்சி ...ஒரு புரட்சியாகவே மாற மாட்டாதா . அப்பனே , கடவுளே நீ தான் துணையாய் நிற்க வேண்டும் ! .

      வீட்டிலே அவனும் குட்டி மகள் சுபாவும் இருந்தார்கள் . அவன் மனைவியும் மூத்தவன் ரமணனும் " நோஃவிரில்ஸ் குரோசரிக் கடைக்கு போய் இருந்தார்கள் . " மாமா தோட்டம் கொத்தி விட்டு வருகிறீர்களா ? " என்று மழழையில் கேட்டாள் . புரியாது சுகனைப் பார்க்க " உன் மண்வெட்டிப் பல்லைக் கூறுகிறாள் " என்றான் . அவளிடம் திரும்பி " உனக்கு வாய் கூடி விட்டது " என்று செல்லமாக கோபித்தான் . அந்த வயசு ... பட்டங்கள் தெளிக்கிற வயசு . அவர்கள் வைக்கிற பட்டங்களைக் கேட்டால் தலையை பிய்த்துக் கொள்வீர்கள் . அவன் தங்கச்சியை "இராவணன் மீசை "என்று பழித்தான் . அது கடற்கரையில் வாழ்ற தாவரம்  . அதன்  உருண்டு ஓடுற முள்ளு ..... பந்தா ,  பூவா , காயா ..? ….வித்தியாசமாகப் பார்வைக்கு பட '  பட்டப்பேர் ' . அதைச் சொன்னால் தங்கச்சி அழுவாள் . பிறகென ! . ஒல்லியான அவனுக்கு அவள் வைத்த பேர் " குண்டா " . இவள்  வெளிநாட்டில் பிறந்தவள் . கொஞ்சம் மேலே போய் விட்டிருக்கிறாள் . தொடர்ந்து " எங்கே சிந்தையை வைத்து விட்டு வந்து விட்டீர்கள் . தொலைந்து விட்டதா ? " என்று கேட்டாள் . பெண்கள் சூட்டிகைகள் . இது என்ன ? . புரியவில்லை . சுகனுக்கும் புரியவில்லை . " இது என்னடி ? " என்று கேட்டான் . அரைக் கண்ணை வைத்துக் கொண்டு கன்னத்தில் கையை வைத்து நடித்துக் காட்டினாள் . " எடியே அவன் மூஞ்சியே அப்படித் தான் ." என்று சொல்ல மெளலியும் சிரித்தான் .

      அவளுக்கு மூஞ்சி என்றது விளங்கவில்லை . தாய் , செந்தமிழில் சொல்லிக் கொடுக்கிறாள் . " அது என்னப்பா மூஞ்சி ? " கேட்டாள் . " செல்லம் உன்னை குஞ்சு என்று கூப்பிடுறோமே . (முகத்தைக் காட்டி ) இதையும் அப்படி சொல்கிறோம் "என்றான் . விளங்கின மாதிரி தலையை ஆட்டினாள் . அதை ஞாபகம் வைத்திருந்தாலே பெரிய விசயம் . " அப்ப காலை ...? " என்று நினைப்பு வரக் கேட்டாள் . " தாமரைப்பூ " என்றான் . வெள்ளையா ,சிவப்பா ? " கேட்டாள் . " வெள்ளை  "  .  " ஓ " என்றவள் , கண்ணைக் காட்டினாள் . " அது மீன் , மீனம்மா" என்றான் . மெளலியிடம் திரும்பி , "இப்படி கேட்டுக் கொண்டு வந்தால்  என்னால் சமாளிக்க முடியாதடா , ஏதாவது தோன்றினால் சொல்லு " என்றான் . " எப்படி உன் அலைச்சல் வேலை போகிறது ? " கேட்டான் .இந்த எரிபொருள் உயர்வால் ...கவிழ்ன்று விட்டது . குறைந்தால் தான் நிமிறும் ." என்று அலுத்துக் கொண்டான்
     
       " என்னடா ஒரேயடியாய் சலிச்சுக் கொள்கிறாய் .உன்னுடையது மட்டுமில்லை . எல்லா வேலையுமே சலிப்பையும் கொண்டது தான் . அது சரி , உனக்கு ' வேலை ' என்றால் என்ன என்று முதலில்  தெரியுமா ? " என்று  கேட்டான் . " சொல்லு " என்றான் . " அது , உண்மையில் அனுபவமடா ! .சம்பளம் தரப்படுவதெல்லாம், அதில் வசதி வாய்ப்புக்கள் கூடிக் கு றைந்திருந்தாலும் ...அது உக்கிப் போற வெறும் பேப்பர் தான் . பிளாஸ்டிக் வேணாம் என்றவர்கள் அதில் அடிக்கிறார்கள் . அதை விடு . நாம் புத்தகம் வாசிக்கிறோம் . அதுவும் வேலை தான் . எந்த முயற்சியில் இறங்கினாலும் , ( சம்பளம் கிடைக்காட்டியும்  கூட... ) அது வேலை தான் ! . நீ சிறுகதை எழுதுகிறாயே ..." தொடர , " அப்பா , ஞானியே எங்கே இருந்து இந்த முத்துக்களைப் பெற்றாய் . போதும் நிறுத்து " என்று சிரித்தான் . " வெளியில் சொல்லாதே சாமியார் எனச் சிரிப்பார்கள் " என்றான்  கூடவே  . " எல்லாம் இதை கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தேன் . ( அலைபேசியைக் காட்டினான் ) வந்தது . யாமறியோம் எல்லாம்  இதன்  பராம்பரமே " என்றான் . " அந்த பொயின்றும் சிந்திக்கக் கூடியது தான் "  மெளலி தலையை ஆட்டிக் கொண்டான் .

        அவளை தூக்கிக் கொண்டு அவன் வீட்டைக் காட்டினான் . ஒரு பெரிய அறையும் இரண்டு சிறிய அறைகளும் கொண்டது . பரவாயில்லை . அவனிடம் சுபாவைக் கொடுத்து விட்டு தேனீருக்கு தண்ணீர் வைத்தான் . தயாரித்த பிறகு முறுக்குடன் சுபாவை வாங்கிக் கொண்டு கதிரையில் இருந்து குடித்தார்கள் . அவளுக்கு ஜூஸ் .

        " அப்ப கழறுறேன்ரா , சுபாக்குட்டி , பாய் பாய் " என்று கையைக் காட்ட , முகம் முழுக்க சந்தோசம் தெரிய கையை காட்டினாள்  . கார் டயரில் ஆணி ஏறினால் , " அது எங்களைப் பார்த்து  தான் ஏறுது " என்று சுகன் சொல்லுறதும் நினைப்பு வந்தது . " காயத்திரி "   அவளையும் அப்படி நினைத்தான் . கண்ணில் ...துளிர்த்தது .

        வழமை போல வானொலி ஒலிப்பரப்பாளர் நிரஞ்சனா , ஒரு குட்டிக் கதை சொல்லத் தொடங்கி    இருந்தார் .

       " தலைப்பு வேலை " என்று விட்டு " ஒரு கணனிக் கம்பனியில் ஒரு துப்பரவு வேலைக்கான காலி இடம் ஏற்பட்டிருந்தது . சந்திரன் பொறுமைக்குப் பேர் போனவன் .வேலையில்நேர்த்தி அவனுக்கு முக்கியம் . சலிக்காது வேலை செய்வான் .சமிரி அப்பார்ட்மெண்டில் , மற்றவர் செய்யிற போது குற்றம் கண்டு பிடித்தாலும் , சேர்ந்து சரி செய்வான் . சிடு , சிடுப்பில்லாமல் செய்வதால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும் . முகத்தை கழுவிக் கொண்ட அவன் மூக்கு மூடியை மாட்டிக் கொண்டான் . " உனக்குத் தான் வேலை கிடைக்கும் " என்று நண்பர் வாழ்த்தி அனுப்பினர் . வேலையில் பொது , ஸ்கிள் ... பிரிவுகள் இருக்கின்றன . எங்கட ஆட்கள் ' பொது ' தான் .கம்பனியில் , அறையின் ஒரு பகுதியைக் காட்டி " எங்கே செய் " என துப்பரவு பொருட்களையும் , துணியையும் கொடுத்து விட்டனர் . அவன் வேலை ஆச்சரியமூட்டியது . இப்படியே அந்த தளம் முழுதையும் துப்பரவாக்கி விடுவார்கள் போல இருந்தது . " சுப்பர் " என பாராட்டைத் தெரிவிக்க , அவனுக்கு தலை நிமிர்ந்தது . ஒருத்தர் " உன்னுடைய ' ஈ முகவரியைக்'  கூறு " என்று கேட்டார் . " என்னிடம் இல்லை " என்று தெரிவிக்க , " இது கொரானாக் காலம் . எங்களுக்கு கட்டாயம் வேண்டுமே . மன்னிக்கவும் " என்று அடுத்த ஆளைக் கூப்பிட்டனர் .

       அவன் ஓரேயடியாய் சோர்ந்து போனான் . அவன் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தாக வேண்டி இருந்தது . கொரானா பல வேலைகளை பறித்திருந்தது . எட்ட நின்று பழகிறது ... நீண்டு அரசும் பொறுமை இழந்து , எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி , மறுபடியும் வேலைக்கு போகச் சொல்லி இருந்தது . அவன் கையில் உள்ள பணம் கரைந்து கொண்டிருந்தது . சமரிக்கு ...கொடுக்க வேண்டும் . சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் . கொடாததுக்கு வட்டி கட்ட வேண்டியும் வரலாம் . கையிலே பத்து ரூபா மட்டுமே எஞ்சி இருந்தது . இந்த வேலை கிடைத்தால் வெல்லலாம் என்று நினைத்திருந்தான் . ஈ முகவரியிலே ' பஞ்' அடிப்பான் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை . தமிழீழம் எங்களுக்கு என்ன கிடைத்தா விட்டது ? . எத்தனை இயக்கங்கள் இருந்தன . எதற்கு ? ,எங்களுக்குள்ளே பலப்பரீட்சை ! . இருந்ததையும் இழந்து விட்டு ....ஊருக்கு திரும்ப போகவே முடியாதா ? .

       கோப்பிக் கடையிலே  கோப்பி குடிக்கவே மனமில்லை . கால் போன போக்கிலே நடந்தான் . மனம் ஒரு  குரங்கு . சப்வேயிலே போய் பாய்வோமா ? என்று ஒன்று கேட்டது . வீதியில் பாலத்திற்கு கீழே ஓடிய விரைவு வீதி  கண் சிமிட்டியது . விரக்தியில் கிடந்தான் . ஒரு யானையையே எறும்புகள் வீழ்த்தி விடுகின்றன . ராஜமெளலி படத்திலே வார ' ஈ '  இலும் சிறிய ஒன்று உலகையே ஆட்டி படைக்கிறது .  வீதியில் விவசாயச் சந்தைக் கடை ஒன்று திறந்திருந்தது . நுழைந்தான் . இருந்த பத்து ரூபாவிற்கும் ஐந்து இறாத்தலைக்  கொண்ட வெங்காய பைகள் மூன்றை வாங்கினான் . உருளையில் இருந்த சிறிய " கண்ணாடிப் பொலித்தீன் பைகள் கொஞ்சம் தர முடியுமா ? " என்று கேட்டான் . கடையாள் " ஏன் " என்று கேட்டார் . " இதைக் கொண்டு போய் விற்கப் போறேன் " என்றான் . இப்படி யாருமே வருவதில்லை . ஆச்சரியப்பட்ட அவர் " தாராளமாக எடு " என்று அனுமதித்தார் . கூடவே வெற்றுச் சாக்கு ஒன்றையும் எடுத்து அவன் முன்னால் போட்டார் . " இதிலே போட்டுக் கொண்டு போ " என்றார் . சின்ன அளவில் ஐந்தை ஒரு பையில் போட்டு முடிச்சுப் போட்டான். பெரியதில் நாலை கோட்டான் . வேடிக்கைப் பார்த்த விவசாயியும் அவர் மகனும் " வாழ்த்துக்கள் " கூறி  அனுப்பினர் . ஒரு வேகத்தில் வாங்கி விட்டான் தவிர , விற்றுத்தள்ளுமா ? என்ற பட்டாம் பூச்சிகள் பறக்க தொடங்கி விட்டிருந்தன .

        நிரஞ்சனாவும் , சந்திரனுக்கு கூறுகிறார் . வேலை என்றால் என்ன ? . அவனும் தன்னையே கேட்டுக் கொள்கிறான் . " அது ஒரு அனுபவம்  " . அட , சுகன் அறுத்ததையே இவர்களும் அறுகிறார்களே . நம்ம ஆள் நேர்த்தி மிக்கவன் இல்லையா ! . சிந்திப்பதை நிறுத்தி விட்டு  ,அவன் சாக்கை தோளில் போட்டுக் கொண்டு சப்வேக்கு அருகில் வைத்து " இரண்டு ரூபா, இரண்டு ரூபா " எனக் கூவிக் கொண்டிருந்தான் . சாப்பாடைக் கொண்டு போகும் பையில் வெங்காயப் பையை வைக்கக் கூடியதாக இருந்தது . வேலையால் வாரப் பெண்கள் வாங்கிக் கொண்டார்கள் . ஏன் பத்து ரூபாவிற்கு என கதை செல்கிறது . மெளலி யோசித்துப் பார்த்தான் . சிறிய தொகை விற்க முடியும் . கதை தானே . ஆச்சரியப்படத் தக்க முறையில் அவன் எல்லாத்தையுமே விற்று விட்டான் . கையிலே இருபது ரூபாவாகி இருந்தது . " பரவாயில்லையே " உள்ளத்தில் சந்தோசம் கொப்பளித்தது .

       கண்ணன் கீதையிலே கூறுகிறார் . முயற்சி செய் . கடமையைச் செய் . அடுத்த பத்து நிமிசத்திலே நடக்கப் போறது கூட உனக்குத் தெரியாது . வேலை செயிறது தான் உன்னுடைய வேலை . எல்லையைத் தாண்டி போகக் கூடாது . பிறகு , " எல்லாம் சிவமயம் " என யோசிக்க வைத்து விடும் . அவனுடைய வீடு ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலேயே இருந்தது . யாழ்ப்பாணத்தானுக்கு இது ஒரு தூரமா ? . ராஜநடை போட்டு போனான் . சிவாஜி தோற்றது . போங்கள் .

       சமரியர் நல்ல மனமுடையவர்களாக இருந்தார்கள் . கதை இல்லையா ? எல்லோரும் நல்லவர்களாகத் தானிருக்கப் போறார்கள் .  " முயற்சியில் இறங்கி இருக்கிறேன் " என்றான் . எல்லாருமாக ஐந்து பேர்கள் . " நீ  தங்குறதிற்கும் , சாப்பிடுறதுக்கும் பணம் தர வேண்டியதில்லை . இப்ப நாங்கள் பிரித்து கட்டிக் கொள்கிறோம் . வேலை கிடைக்கிற போது தா . அவசரமில்லை . இந்த முயற்சியை சனி , ஞாயிறுகளில் அப்பவும் தொடர்ந்து வைத்திரு , இப்ப மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே " என்று தட்டிக் கொடுத்தார்கள் .வேலை கிடைக்கும் போல இல்லை . ஆனால் அதே விவசாயக் கடையில் அடுத்த நாள் ' உருளைக் கிழங்கு ' என மாறி , மாறி  வாங்கி விற்கத் தொடங்கினான் . சிலவேளை விற்காதும் எஞ்சி விடும் . சமரியிலே ...கொடுத்தான் . ஒவ்வொரு நாளும் விற்பனைப் பற்றி விவசாயி அக்கறையுடன் விசாரித்தார் . ஒரு கண்ணாடிப் பை உருளையைக் கொடுத்து இது இருபது ரூபா . நீ ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாப்படி கொடு . என்றார். முன்பின் தெரியாத ஒரு உதவி . அவனை நெக்குருக வைத்தது . அப்பிள் , தோடை ...என பழ வகைகளையும் விற்று வந்தான் . சனி ,ஞாயிறு தினங்களில் சில உணவகங்களிற்கு அருகிலும் வைத்து விற்றான் .  சில எரிபொருள் நிலைய மூலையிலும்  விற்க அனுமதித்தார்கள் . அவன் பைக்கான பணத்தையும் கழித்து விட்டான் . நல்ல மாதிரியான உடையில் நேர்த்தியாக வைத்து விற்பதில் பல அனுபவங்களையும் பெற்று வந்தான் . ஒரே விவசாயக்கடையில் நேர்மையாக வாங்கிறதில் பிடித்து போக , அவர் விற்காது விடுறதை வத்தல்களாக , ஊறுகாய்களாக தயாரிக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார் . அவனுக்கு வேலை கிடைக்கவே இல்லை . விவசாயின் புத்திமதிப்படி தள்ளு வண்டி ஒன்றும் வாங்கி , முனிசிபால்டியின் வெண்டர் அனுமதி எடுத்து , வாடகைக்கு நிறுத்தி விற்கிற அளவிற்கு வளர்ந்தான் . அவனுக்கு மேலும் சில விவசாய சந்தைக் கடைகள் பரிச்சமாகின . அவன் சமரிப்பணம் கொடுக்கவும் தொடங்கி இருந்தான் . சமரித் தோழன் ஒருவனிடம் கார் இருந்தது . நகரத்துக்கு வெளியில் உள்ள ...கடைகளிலிருந்து வாங்கி வர உதவுகிறான் .

       அப்படி பலரின் வழிகாட்டுதலில் இரண்டு வருடங்களில் சிறிய கடை ஒன்றுக்கும் உரிமையாளனாகி விட்டான் . ஓரளவு வளர்ச்சிக்குப் பிறகு இலக்ஷ்மி கடாட்சமும் கிடைக்கத் தொடங்கி விடுகிறது .அவனுக்கு மணமாகி தனி வாடகை வீட்டிற்கும்  மாறினான் .

       நம்மவர் முன்னேறி இருக்கிறார் என்று சுடர் ஒளி பத்திரிகை நிருபர் , பேட்டி எடுக்க வருகிறார் . கதையைக் கேட்டவர் , " உங்களுக்கு  மட்டும்   ‘ ஈ முகவரியும் ‘ இருந்தால் ..எங்கேயோ போய் இருப்பீர்கள் " என்கிறார் . அதற்கு சந்திரன் சிரிக்கிறார் . " இல்லையே , இப்பவும் நான் ஒரு கணனிக் கம்பனியிலே நிலத்தை சுத்தம் செய்து கொண்டு தான் இருப்பேன் " என்கிறார் . நிருபரிடம் அந்த பகுதியை அவர் கூறி இருக்கவில்லை . அவர் தலையை பிய்த்துக் கொண்டார்  . ஏன் என்பதை சொல்லாமலே விட்டு விட்டார் .

       வேலைக்கு என்று ஒரு உறுதியான அர்த்தம் உண்டு .இதே போல சாதியிற்கும் அர்த்தம் உண்டு . ஆனால் வந்தவர் , சென்றவர் எல்லாம் அந்த அர்த்தங்களை சிதறடித்து விட்டிருக்கிறார்கள் . இன்று நாம் ஒவ்வொரு  சொல்லுக்கும் உரிய உண்மையான அர்த்தத்தை தெரிய,புரிந்து கொள்ள தமிழ் அகராதியை தேட வேண்டி இருக்கிறது . இன்று , ஒரு மொழியை , இன்னொரு மொழி மரியாதை அளிக்காது , குறை கூறி , கொச்சைப் படுத்துகிறது . கனடாவில் எல்லாம் முதலாம் குடிமகனின் மொழி ஆட்சி மொழியாக  கூட  கிடையாது . தன்னுடையதே சிறந்தது என்கிறதே சரித்திரமாக கிடக்கிறது .    எல்லா அடக்குமுறைகளும் ஒரே வடிவத்தில்  . தான் கிடக்கின்றன . அடிப்படைவாதிகளிற்கு இந்த மொழி , மதம் தான் தெரிகிறது  . கருவளையம் அவன் எல்லாப் புலன்களையும் மறைத்து நிற்கிறது . நாம் தோல்வியின் விளிம்பில் நிற்கலாம் . ஆனால் பழமையின் வழித்தோன்றல்கள் நாம் . நம்மவர் " யாவரும் கேளிர் " என்ற பெருந்தன்மைமிக்கவர்கள் .

      எம்முன் நிற்வபவர்கள் வளரவில்லை . எனவே நாம் உண்மைகளை தேடியே பயணப்படுவோம் . கோட்டான்கள் கூவட்டும் . கூகைகள் பிளிறட்டும் . எம்நாடு ,எம்மண் எமக்குரியது தான் . நாம் அதை நோக்கி கடுமையாக உழைப்போம் . வேலை செய்வோம் . மனிதன் சிந்திக்கிறான் . சிந்திக்கிறதே ஒரு வேலை என்று தெரியும் . அது அனைத்துக் கட்டுக்களையும் உடைத்தெறியும் . அதை கட்டுப்படுத்த வீசப்பட்ட ஆயுதம் தான் இந்த   பண நோட்டு . அதை மதிப்பிழக்க வைப்போம் . பழமையை மீளக் கொண்டு வந்து ….விடுதலை செய்வோம் . உரோமர் , கிரேக்கர் , பிரெஞ்சுப் புரட்சி கொண்டு வந்த சுதந்திரம் , ஜனநாயகம் எல்லாம் அர்த்தமற்று போய் விட்டன . பிரான்சு நாட்டில் சக்கரவர்த்திப் போல அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி . சிறிலங்காவிலும் மன்னரைப் போல ஒரு ஜனாதிபதி ..உலக நாடுகள் அனைத்திலும் ( முக்கால்வாசி) ஜனாதிபதிகளே ஆட்சி . மக்களாட்சி மலர தோளை உயர்த்தி உழைப்போம் , வேலை செய்வோம் .       நிரஞ்சனா ,  கதையை    முடித்து  விட்டார்  .

     அது  சரி  ,  இது என்ன குட்டிக்கதையா , புரட்சிக்கதையா ?  புதிய குட்டிக்கதை ! . வாகனம் கோவிலை அடைந்து விட்டது . இனி , அவன் காயத்திரியோடு பேசப் போகிறான் .  அதில்  உங்களுக்கு   இடம்   இல்லை  .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here