பதிவுகள் முகப்பு

கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
26 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு  வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில்  நன்றி.

இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன்  பார்வைகளை  வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆளுமையின் மறு பக்கத்தை பேராசிரியரின் உரையாடல்களூடு எடுத்துக் காட்டுகின்றார். வாதப்பிரதிவாதங்களை எழுப்பக்கூடிய விபரிப்புகள். 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு, ஜெயமோகனின் ரப்பர் நாவல்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள் ஆழமான தர்க்கங்களை வேண்டி நிற்கின்றன.

மேலும் படிக்க ...

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!  

அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார்.  வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு - https://www.aaees.org/e4saward

தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

மேலும் படிக்க ...

மீள்பிரசுரம் (விகடன்.காம்) : பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி! - சு. அருண் பிரசாத் -

விவரங்கள்
- சு. அருண் பிரசாத் -
நேர்காணல்
24 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பேட்டியிது.  இதன் முக்கியத்துவம் கருதி, நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -


“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”

60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன். தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், பாரதி குறித்து இதுவரை அறியப்படாத அரிய தகவல்களையும், பாரதியின் எழுத்துகளையும், பாரதி பற்றிய எழுத்துகளையும் பதிப்பித்துள்ளார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', ‘பாரதி நூற்பெயர்க் கோவை' ஆகியவை இவரது பெரும் சாதனைகள்.

    “தம் வாழ்வையே பாரதி ஆய்வுக்காக அர்ப்பணித்த சீனி. விசுவநாதனின் பணியைப் போற்றும் வகையில், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று கடந்த செப்டம்பர் மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவின்போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், சீனி. விசுவநாதன் உள்ளிட்ட பாரதி ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' வழங்கிச் சிறப்பித்தார்.

பாரதியின் 139-வது பிறந்தநாளை ஒட்டி, மூத்த பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனுடனான சிறப்புப் பேட்டி.

“உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?”

“1934-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று பரமத்திவேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1944-ல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில் என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம் வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.”

மேலும் படிக்க ...

கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
24 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.

உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.

விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.

மேலும் படிக்க ...

புத்தக வாசிப்பின் மகத்துவம்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
 - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
24 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



* ஓவியம் - AI

      மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த  கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய  காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.

      இத்தகைய மொழியின் வெளிப்பாடுகளை நாம் நூல்களின் வழியாகவே அதிகமாகப்; பார்க்கமுடிகின்றது. இதுபோன்ற நடைமுறைகள் சமூகத்தில் இவை மிக முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. கல்வி வேறு அறிவு வேறு என்பதை முதலில் நாம் புரிதல் அவசியமாகின்றது. வெளியில் இருந்து உள்ளே செல்வது கல்வி. அந்தக் கல்வியைப் பயன்படுத்தி உள்ளிருந்து வெளியில் வருவதுதான் அறிவு என அனுபவ வாயிலாக உணர்வதை நாம் அவதானிக்கலாம்..

      புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பதுபோல எனக் கூறலாம். புத்தகம் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். வாசிப்பு என்பது மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். புத்தக வாசிப்பு என்பது மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை  நாம் எல்லோரும் உணர வேண்டும். அதிகமான அறிஞர்கள் புத்தக வாசிப்பினால்த் தான் உலகில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களாகத் திகழ்கின்றார்கள் அந்த வகையில் உலகில் உயர்ந்த மனிதர்கள் சிலரைக் குறிப்பிட்டு இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் சுவை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
23 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

சுவை அணி

உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் புலனாக விளங்க எட்டு வகையான மெய்ப்பாட்டாலும் நடப்பது சுவை எனும் அலங்காரமாகும்.

“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே”
(தண்டியலங்காரம் 42)

சுவை அணியின் வகை

உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய் வழியாகப் புலப்படுத்தும் தன்மை மெய்ப்பாடு என விளம்புதலாயிற்று. இது எட்டு வகைப்படுதலாகும். இத்தன்மையினை

“அவை தாம்
வீரம் அச்சம், இழைப்போடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே”
(தண்டியலங்காரம் 43)

இதையேத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில்

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3)

என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க ...

ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
23 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre  மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

கண்ணையெரிக்கும் புகைக்காற்று - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
கவிதை
23 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்ணைக் கரிக்கும்
புகைக் காற்று
தேர்தல் பண்டிகைகளில்
தீப் பிளம்பாய் வீசும்.
காதிலே சேல் வடியும்.

தீய அடுப்புக்ளை மூட்டி
காய்ந்த விறகுகளையும் சருகுகளையும்
தீப்பிளம்புக்குள் போட்டு பத்த வைத்து
சட்டி பானைக்குள்  எண்ணெய்யை ஊற்றி
பதமாக சுட்டு இறக்குகின்ற பலாகாரங்களை
ஈன இரக்கமில்லாமல் வெந்து  கரியாய் தீய வைத்து
யாருமே உண்ண மனமில்லாத
குப்பைக் குழிக்குள்; போட்டு மூடும் பலகாரங்கள்தான்
இங்கே மூக்கைத் துளைக்கின்றன.
   
இவையேதான் நாவுக்கு சுவையென
விளம்பரங்கள் செய்து
பசியாறிக் கொள்ள சிறந்த சாதனம் என்று
வெடிக் கொளுத்தி
மொழிகளில் முழுக்கமிடுகிறார்கள்.

விசங்களைக் கக்கிக் கொண்ட எரிந்த விறகுகள்
கால ஒட்டத்தில் சாம்பலாகி தோல்வியைத் தழுவினாலும்
வயிறு நிறையத் தின்று ஏப்பமிட்ட தலைக்கனம்
மீளவும் அடுப்புக்களை மூட்டி
விறகுகளை எரிக்க ஆயத்தம் செய்யும்.

மேலும் படிக்க ...

கவிதைகள்: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா? & சோக்கிரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
21 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் -AI

துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?

மேலும் படிக்க ...

உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்கள் நினைவாக! ஆறாவது ஆண்டையும் கடந்து செல்லும் ஆறாவடு! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
20 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. 2019 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் சில தற்கொலைக் குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.40 வெளிநாட்டவர்களுடன் 45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

கடந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் அரசுகளும் மாறின, அதிபர்களும் மாறினார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசு காலத்திலாவது உண்மைகள் கண்டறியப்படுமா? என்பதும் தெரியவில்லை. கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர், அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் பின்னாளில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மாறிய ரணில் விக்கிரமசிங்கா.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர். எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானர். அவர் வெளியேறியபோது, எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஜனாதிபதியானார்.

மேலும் படிக்க ...

நிலம்சார் பண்பாட்டு மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்! - மெய்ஸ்ரீ ப. செ, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014. -

விவரங்கள்
- மெய்ஸ்ரீ ப. செ, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014. -
ஆய்வு
20 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

 மொழிபெயர்ப்பு என்பது யாருக்காக? இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. அதேபோல் தமிழ் நிலப்பரப்பும் பன்மயத்தன்மை உடையது. பல மொழிபேசும் மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்குள் சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள் சார்ந்து பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அப்பன்முகத்தன்மையில் தான் ஓர் ஒற்றுமையும் உள்ளது. அதுவே தமிழ் நிலம்சார் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் நிலப்பரப்பிலுள்ள பண்பாட்டு அம்சங்களை உலகிற்குப் பறைசாற்ற மொழிபெயர்ப்பு அவசியமாகிறது. மொழி, சடங்கு, வழிபாட்டு முறை போன்ற இனக்குழு அடையாளங்களை மொழிபெயர்க்கும் பொழுது, பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு மொழியில் ஒரு சொல் உணர்த்தும் பண்பாட்டுப் பொருள் வேறு மொழியில் வேறொரு பொருளை உணர்த்துகிறது. இவ்வாறான பல சிக்கல்களை அடையாளப்படுத்தும் விதமாகவும் அதற்கான தீர்வு வழிமுறைகள் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழ் நிலம்சார் பண்பாட்டுக்கூறுகளைத் தன்னுள் கொண்ட பாரதியாரின் கண்ணன் பாடல்களில் கண்ணம்மா என் குலதெய்வம் என்னும் பாடல்  மூலத்தோடு, கே. எஸ்  சுப்பிரமணியம், பி. எஸ்  சுந்தரம், தென்காசி தங்கபாண்டியன் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒப்புநோக்கப்படுகிறது.

மேலும் படிக்க ...

சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
19 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 39 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது

 சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான். ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை. சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது  2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ்  என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது  எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன .

அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக,  தேவையாக  சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை,  தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற,   தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான்  லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட  முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். 

மேலும் படிக்க ...

அஞ்சலி: ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண்ணாளுமை புஷ்பராணி நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார். அண்மைக்காலமாக அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார். எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார். தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது, அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும் நாம் கடந்துதான் செல்லவேண்டும்.

புஷ்பராணி அவர்களை 2019 இல் முதலில் பாரிஸில் நடந்த எனது சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுக அரங்கிலும், பின்னர் கடந்த 2023 இல் அவரது இல்லத்திலும் சந்தித்தேன். இறுதியாக நடந்த சந்திப்பிற்கு தோழர் ராயப்பு அழகிரி என்னை அழைத்துச்சென்றிருந்தார். தனது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும். இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2025 ) நாம் வாழ்கிறோம். தமிழ் ஈழ விடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்தான் புஷ்பராணி!

இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்விகண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
இலக்கியம்
18 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் புஸ்பராணி சிதம்பரியின் 'அகாலம்' நூல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதி, 21.08.2022 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியான  கட்டுரை. அவரது நினைவாக  மீள்பிரசுரமாகின்றது.


முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -    21 ஆகஸ்ட் 2022

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.

1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில், புனித பிரதேசம் என அழைக்கப்படும் கதிர்காமத்தில், அங்கு வாழ்ந்த அழகி மனம்பேரி பிரேமாவதி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அவலத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த நூலின் அறிமுக நிகழ்வு பாரிஸில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்தபோதுதான் முதல் முதலாக புஷ்பராணி அக்காவை சந்தித்தேன். அவரைக் கண்டதும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பொங்கி வந்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன். எனது வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பியிருந்த பெண் ஆளுமை அவர். 'அக்கா' என்று விளித்ததும், தன்னை அவ்வாறு அழைக்கவேண்டாம். 'புஷ்பராணி' என்றே அழைக்கலாம் என்று அவர் சொன்னதும் சற்று திகைத்துவிட்டேன்.

மேலும் படிக்க ...

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான 'தமிழ் மகளிர் பேரவை' புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத்  தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது.  தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர்.  அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல்.  அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.  

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.

மேலும் படிக்க ...

அறிந்திரன் சிறுவர் சஞ்சிகையின் வெளியீட்டாளரான எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவின் வேண்டுகோள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் சிறுவர் சஞ்சிகைக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது.  எதிர்காலத்தின் நாயக, நாயகியர்கள் குழந்தைகளே.  காலத்துக்காலம் பல சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் , அவை போதிய ஆதரவின்றி தொடராமல் நின்றுவிட்டன. இந்நிலையில் அண்மையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருந்த அறிந்திரன் சஞ்சிகையும் தொடராமல் நின்று போனது. இதனை எப்படியும் மீண்டும் வெளியிட வேண்டுமென்ற ஆர்வத்திலுள்ளார் இதன் வெளியீட்டாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தா. இது பற்றிய அவரது தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள்.காம் -

மேலும் படிக்க ...

பட்டினப்பாலையில் வணிகம்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
15 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.

ஒரு நாடு குறையாத விளைச்சல், நடுநிலைமையாளர், சோர்வற்ற வணிகர் என்று இருக்குமானால் அது வளமுடையதாகக் காட்சியளிக்கும் என்ற கருத்தமைந்த பாடலைக் குறள் புலப்படுத்துகிறது.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு (கு.எண்.731)

இதன் வழியாக வணிகரின் மேன்மையை அறிய முடிகிறது.

பெருங்குடி

வணிகர் மிகுதியாக இருந்த பூம்புகார், புகழாகிய சிறப்புக் கொண்ட அரசரின் மதிப்புக்கும், பெருமைக்கும் உரியதாய், இம்மக்களைக் கொண்டு பயன்பெற்று விளங்கியது. இதைப் 'பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" என்ற தொடர் வலியுறுத்துகிறது. வணிகர் தம் குடிக்கு ஏற்ற ஒழுகலாறைக் கைக்கொண்டு, அதிலிருந்து சிறிதும் பிறழாதவராய்த் திகழ்ந்தனர். இவர்கள் அறவழியில் சேர்த்த பொருளில்லாதவர்களுக்குத் தந்தனர். அதன் பயனாகப் போகப் பூமியில் மகிழ்ச்சியை அடைபவர் போல் தோன்றினர்.

மேலும் படிக்க ...

மங்கலமாம் சித்திரை மனமகிழ வைக்கும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வசந்தம் மலர வருகின்ற சித்திரையே
சுகந்தம் பரப்பி சுகந்தருவாய் சித்திரையே
அகங்கள் நிறைய ஆனந்தம் அத்தனையும்
அள்ளியே நீவருவாய் அழகான சித்திரையே

பற்பல தத்துவங்கள் உள்ளடக்கி நிற்கின்றாய்
பண்பாடு கலாசாரம் தாங்கியே ஒளிர்கின்றாய்
இத்தரையில் எதிர்பார்க்கும் ஏற்றமுடை திருநாளாய்
சித்திரையே விளங்குகிறாய் சிறப்புடனே வந்திடுவாய்

இலங்கையில் சித்திரை இன்பத்தை அளித்துவிடும்
இருவினமும் சித்திரையை ஏந்திடுவார் மகிழ்வுடனே
செந்தமிழும் சிங்களமும் கொண்டாடும் திருநாளாய்
சித்திரைத் திருநாள் இலங்கையில் மலர்ந்திடுமே

மேலும் படிக்க ...

தமிழர் தகவல் விழா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில்  கடந்த 34 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் தமிழிதழ் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் தமிழர் தகவல் இதழின் வருடாந்த மலர் வெளியீடும்,  விருதுவிழாவும் ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர்களின் சபாபீடத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.. நேரம் தவறாமைக்கு ஒரு முன்னுதாரணமான தமிழர் தகவல் விழா வழமைபோலச் சரியாக மாலை மூன்று மணிக்குத் தொடங்கியிருந்தது. ‘இளமுகில் சுவடு ஆண்டு மலர் வெளியீடு’ என்ற முதலாவது பகுதியை இளையோரான பிறைட்னி ஆரம்பித்துவைக்க, மீதியை அக்க்ஷே தலைமைதாங்கி அழகு தமிழில் நடத்தினார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியமும் , ஆரம்ப காலத் தமிழ்ச் சஞ்சிகைகளும், 'நிழல்' சஞ்சிகையின் முக்கியத்துவமும் ... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.

நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக்  கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.

தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை  மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை   15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு  இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது.  எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.  அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான கையெழுத்துச் சஞ்சிகை 'குரல்' .  செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம் ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான சஞ்சிகை  'குரல்'.

மேலும் படிக்க ...

கவிதை: முகநூல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகநூல் எனக்குப் பலரின் ஆளுமையினைத்
தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
புரட்சிகரமான கருத்துள்ளவர்கள் என்று
நான் நம்பிய பலரின் உண்மைச் சொரூபத்தினை
வெளிப்படுத்தியிருக்கின்றது.
சமூகத்தையே மாற்றிவிடப் போவதாகக்
கூக்குரல் இட்டவர்கள்
அவர்கள்தம் உண்மைச் சொரூபத்தை
முகநூல் வெளிப்படுத்தியபோதும்
நாணவில்லை. ஓடி ஒளியவில்லை.
இன்னும் அவ்வாறே கூக்குரல் இட்டுக்
கொண்டுதானிருக்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

கவிதை: ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், ,முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை ) கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை ) -
கவிதை
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. நடந்துவிடாதா அந்நற்கூத்து.

உங்களிடம் இருக்கும்
அறியாமையைக் கொஞ்சம் தாருங்கள்.
அத்துடன்
அந்தக் கல்லாமையின் புன்முறுவல்.
உள்ளிருக்கும்
யாவையும்
துடைத்தெறிந்து
காம்பு சப்பும்
மடியிலிருந்து
தொடங்கலாமா.

மண்ணோடு கலந்துவிட்ட
தொப்புள் கொடி
உறவற்ற
துயரம் சொல்லிலடங்காது.

அலுப்பு கூட்டும்
அன்றாடத்தின்
மதிப்புகள் கூடிய
வாழ்வைவிட்டு
அக்காக்கள் தேடும்
தம்பியாக
ஆடு மாடுகளுக்குள்
ஒலிந்து ஓட
என்ன செய்ய வேண்டும்
இப்பொழுது
நான்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "தமிழ்மொழிக்குப் பங்களிப்புச் செய்த பிரெஞ்சு அறிஞர்கள்"

விவரங்கள்
-பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
பயணங்கள்
11 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நடு இரவில் தெரியும் சூரியன்!

ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எழுத்தாளரும் பன்முக ஆளுமையாளருமான பவானி சற்குணசெல்வத்துடன் ஒரு நேர்காணல்! - முனைவர். பொ. திராவிடமணி -
  2. நதியில் நகரும் பயணம் (13): ஹெக்- டெல்ஃவ்ற் -ரொட்டர்டாம்- கீத்தோன் - நடேசன் -
  3. கலைஞராய் அறிஞராய் துறவியாய் மிளிர்ந்த அடிகளார் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
  4. வெளியீடும் அறிமுக உரைகளும் - பெனடிக்ற் பாலன் படைப்புகள்! - தகவல் - ஜயகரன் (தேடகம்) -
  5. நடேஸ்வரா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் - குரு அரவிந்தன் -
  6. ‘இவள்’ சிறுகதைத் தொகுப்பில் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள்! - -முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
  7. மு.நித்தியானந்தன் எழுதிய ‘இந்திய இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ நூல் குறித்து... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  8. பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பன்முகம்! - நடேசன் -
  9. சிறுபாணாற்றுப்படையில் தாவரங்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
  10. குவிகம் நடத்தும் லலிதா ஈஸ்வரன் சிறுகதைப்போட்டி 2025!
  11. எதிர்வினை: பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்! - ஆசி .கந்தராஜா -
  12. மகிழ்ச்சியான ஒரு தீவு(3) - அருபா! - ஶ்ரீரஞ்சனி -
  13. நதியில் நகரும் பயணம் (13) - புருஜ் (Bruges, Belgium)) - நடேசன் -
  14. புதிய சமுதாயத்தில் மாற்றத்தைக் கோரும் 'கொழுகொம்பு' - சில அவதானிப்புகள் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
பக்கம் 2 / 104
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி