பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் குரு அரவிந்தனின் எழுத்துகள் பற்றி.... - முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -

விவரங்கள்
- முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -
இலக்கியம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

4

7-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.

கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நூல்களைப் பார்வையிட்டும், வாங்கியும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைய இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. அரங்கு எண் 604, 605 இன் முதல் விற்பனையாகிய ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ ஆகிய நூல்களைப் பிரபல கவிஞர் இந்திரன் அவர்கள் கவிஞர் மு. முருகேஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளை வழங்கும் தமிழ் ஆளுமைகளுக்கான உயர் விருதுகள் 2024!

விவரங்கள்
- தகவல்; அநுரா -
நிகழ்வுகள்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்  குறித்த் ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன்  அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.  வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை, நாடகம்  என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.  

திண்ணை இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவரது அறிவியல் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் பதிவுகல் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.  அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார்,  இவர் பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். பெர்னாட்ஷாவின் நாடகமொன்றினையும் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.ஜெயபாரனை வாழ்த்துகினறோம். மேலும் இவரது இலக்கியப்பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.

மேலும் படிக்க ...

பொங்கலோ பொங்கல் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
உயர்வான எங்களது பொங்கல் விழாவே

வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

மேலும் படிக்க ...

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கவிதை
14 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
உலகைக் காக்கும் உழவர்கள் திருநாளில்,
உவகை ஆறு ஊற்றெடுத்துப் பெருகட்டும்.
உலகம் ஆனந்தத்தில் கூத்தாடட்டும்.
உன்மத்தம்கொண்டவர்தம் ஆட்டத்தால்
உருக்குலைந்து கிடக்கும் உலகில்
நன்மத்தம் எங்கும் நிலவட்டும்.
என்மத்தம் இதுவே!
உன்மத்தமும் இதுவாக இருக்கட்டும்.
இருப்பின்,
உன்மத்தம் நீங்கி,
நன்மத்தப் பூ மலரும்.
நானிலம் செழிக்கும்.

இலங்கைக்கு மார்க்கம் படிக்க வந்த ரஹ்மான் 'இளம்பிறை' மாத இதழ் ஆசிரியரான கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இளம்பிறை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  'இவரது   அரசு பதிப்பகமும் பல சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பினை நல்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  'இளம்பிறை'யின் இதழ்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்: - பதிவுகள்.காம்- 


மூத்த தலைமுறையினருக்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும். கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தினால் ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை அக்கால ஊடகங்கள் அப்போது அதற்குச் சூட்டி, சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன. ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும் அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! அப்போது நான் படித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இருந்தேன். எம்மைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.

எமது வீட்டிலே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம். அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும் யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம். 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

மேலும் படிக்க ...

தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'

நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்'  என்று எனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன். இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள். அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.

எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.

இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா. இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: 'தஞ்சைநால்வர் குடும்பத்தினர் வடிவமைத்த நாட்டிய மரபு'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 842 3057 8587 | Passcode: 525751

மேலும் படிக்க ...

நண்பர் முருகபூபதி! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
இலக்கியம்
11 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.

88 களில் முருகபூபதி கேட்தற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. தற்போதைய இந்தியாவை இணைப்பது மதமோ கலாச்சாரமோ அல்ல தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல்க் கட்டுரை “நடுகாட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில்( 1987 வைகாசியில்) வந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள் , சிறுகதைகள், நாவல்கள் அவரே சீர் பாத்திருப்பார். கடைசியாக வந்த தாத்தாவின் வீடு நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்த இடத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம் .

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
11 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 826 0364 5021 | Passcode: 383598

அன்புடையீர் வணக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். எமது சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, இம்மாதம் 14 ஆம் திகதி ( 14-01-2024 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக மெய்நிகரில் இடம்பெறும். சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் படிக்க ...

எனது புதிய ஆங்கில வலைப்பதிவு 'vngiritharancorner' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது புதிய  ஆங்கில வலைப்பதிவு  'vngiritharancorner' - 'My English Journey (எனது ஆங்கிலப் பயணம்') என்னும் தலைப்பில் எனது ஆங்கில வலைப்பதிவில் பதிவொன்றினை இட்டிருந்தேன்.  அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

(பயனுள்ள மீள்பிரசுரம்) நூல் அறிமுகம்: பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’ - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
நூல் அறிமுகம்
05 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.

உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை வாழ்க்கைக்கு அதீதமான விஷயங்களைப்பேசிவந்த இலக்கியம் சட்டென்று நேரடியான அன்றாட யதார்த்ததை நோக்கி திரும்பியது. யதார்த்தவாதம் இலக்கியத்தில் பிறந்தது. குஜராத்தி யதார்த்தவாதத்தில் காந்தியத்தாக்கம் மிகவும் அதிகம்.

காந்திய யுக படைப்பாளிகளில் முதன்மையானவர் பன்னாலால் பட்டேல். அவரது வாழ்க்கை ஒரு நாடகம் , மூலத்தில் ‘மானவீனீ பவாயி ‘ குஜராத்தி யதார்த்தவாதத்தின் ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. 1946ல் எழுதப்பட்டு 1973ல் தமிழில் மொழியாக்கம்செய்யபப்ட்ட இந்நாவல் இன்றும் அதன் அடிப்படையான சத்திய வேகத்தால் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

மேலும் படிக்க ...

என்ன நினைச்சே. நீ என்ன நினைச்சே' - 'சொக்கத்தங்கம்' பாடலொன்று.

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
03 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்ந் நினைவாக ஒரு பாடல்.  கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர்கள் உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஶ்ரீராம்.
 
விஜயகாந்த்துடன் நடித்திருப்பவர் சவுந்தர்யா. மருத்துவப் படிப்பை உதறிவிட்டு நடிக்க வந்து வெற்றியீட்டியவர். ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டார். விளைவு விமான விபத்தில் பலியானார்.
 
இசை - தேவா. பாடல் வரிகள் - ஆர்.வி.உதயகுமார்.
 
நல்லதொரு பாடல். https://www.youtube.com/watch?v=PrwKFS4V42A

 

சமுதாயவியல் சார்ந்த பண்பாட்டுச் சிந்தனை! - கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -

விவரங்கள்
- கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -
ஆய்வு
03 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் புஸ்பா கிறிஸ்ரி என்று அறியப்பட்ட புட்பா கிறிட்டி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (கனடா) முதுகலை பட்டம் பெற்றவர்.  பின்னர் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம்) 'மறையியல் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர். அவருக்கு எம் வாழ்த்துகள். -


முன்னுரை

பண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும்.  பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன

தமிழரின் நாகரிகம் பழமை வாய்ந்தது. முன்னர் சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் சிறந்தது எனச் சொன்னவர்கள், கீழடியின் நாகரிரீகம் கண்டு, திகைத்துள்ளனர். தமிழர்தான் நாகரிகவாதி என்கின்றனர். தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க, முன்னின்ற மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேச நிலைப்படுத்தப்பட்டது. முதலில் தமிழைக் கற்று, அதன் மேன்மை கண்டு, அதனை உலகறியச் செய்தனர் மேற்குலகினர். இப்போது உலக நாடுகள் எங்கும், குறிப்பாகத் தமிழர்கள் செல்கின்றனர். நமக்குள் நமது புகழைப் பேசிக்கொள்ளாமல், தமிழை, தமிழ்பண்பாட்டை உலகப் பொதுமேடையில் பேசி, மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர் சங்கங்கள், ஆய்வுக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும் வள்ளுவரை பல கட்டங்களில் ஆராய்கின்றனர். வள்ளுவத்தை உலகப் பொதுமறையாக்க முனைகின்றனர். திருவள்ளுவர் தந்த திருமறை வாழ்வின் நெறிகளைக் கற்றுத் தருவது தனிமனித ஒழுக்கத்தை, சமுகத்திற்குக் கற்றுத் தந்தவர் வள்ளுவர்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்னும் பாரதி வாக்கு, திருக்குறளை உலத் தரத்திற்கு உயர்த்தி வைத்தது. பாரதி பாடிய அன்றே இந்தூல் உலகெங்கும் பரவி விட்டது எனலாம்.

மேலும் படிக்க ...

கனடாவில் பாவலர் பாலரவியின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
02 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமைதாங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் கவிஞர் பாலரவியின் தங்கை சசிகலா தனது மாணவி என்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்க்கும் இவர்களைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் முருகபூபதிக்கு பாராட்டு விழா! - தகவல்: கிறிஸ்ரி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- தகவல்: கிறிஸ்ரி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
01 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்,  2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை,  இலக்கியச் சாதனையாளர் விருதையும்   வழங்கிக் கௌரவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024  ஜனவரி  மாதம் 7 ஆம்திகதி   ஞாயிற்றுக்கிழமை  மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது. 112 High St, Berwick VIC - 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள,  மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்த விழாவில், முருகபூபதியின்   இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள்  என்பவற்றைப்பற்றி, அறிஞர்களும், இலக்கியவாதிகளும்,  சமூகச் செயற்பாட்டாளர்களும்  உரையாற்றவுள்ளனர்.

மேலும் படிக்க ...

'செயற்கைப் புலமை'யும் (AI) சர்வதேச நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் மீதான அதன் தாக்கமும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
01 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.

ஆனால் இக்கட்டுரை விவாதிக்க முற்படுவது, துவாரகாவின் உரையானது செயற்கைப் புலமை கொண்டு தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. மாறாக இன்று புது வரவாக கருதப்படும் செயற்கைப் புலமை எனும் தொழிநுட்பம், இனி எவ்விதம் உலகில் கோலோச்சப்போகின்றது என்ற கேள்வியேயாகும்.

கிட்டத்தட்ட, பத்து தினங்களின் முன்னர் மோடி அவர்கள் தனது காசி உரையில், பாஷ்னி எனும், AIயின் உதவி கொண்டு உடனுக்குடன் தமிழுக்கு பரிவர்த்தனை செய்தார் எனக் கூறப்பட்டது. இதனை அவர் AIயின் உதவி கொண்டுதான் ஆற்றக்கூடியதாக இருந்தது என்பதும் உலகளவில் இச்செய்தியானது பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக்கப்பட்ட  ஒரு விடயமாயிற்று (19.12.2023).

இதனாலோ என்னவோ ஏட்டிக்குப் போட்டியாக நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டும் வகையில் மோடி பேசி முடிந்த சில தினங்களிலேயே பாகிஸ்தானின் இம்ரான்கான் சிறையில் இருந்தவாறே AIயை பாவித்துத் தன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததாக செய்தி வந்தது.

மேலும் படிக்க ...

புதுவெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -
கவிதை
31 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நல்லன நடக்க வேண்டும்.
நாடெலாம் சிறக்க வேண்டும்.
வல்லமை பெருக வேண்டும்.
வாழ்வது உயர வேண்டும்.

தொல்லைகள் தொலைய வேண்டும்.
தோல்விகள் அகல வேண்டும்.
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்.

போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்.
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும்.

ஊழலும் ஒழிய வேண்டும்.
உண்மையே நிலைக்க வேண்டும்.
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்.

உழைபவர் உயர வேண்டும்.
நல்லூதியம் கிடைக்க வேண்டும்.
கொடுப்பவர் பெருக வேண்டும்.
குவலயம் சிறக்க வேண்டும்.

கல்வியில் உயர்வு வேண்டும்.
கசடுகள் அகல வேண்டும்.
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: பாடகர் இளமைந்தன் இளஞ்சேயின் பாடல்கள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
30 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் வேந்தனாரின் மகன் வேந்தனார் இளஞ்சேய். அவரது மகனே இளமைந்தன் இளஞ்சேய். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரைப்பற்றிய குறிப்பொன்றினை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.  இளமைந்தன் இளஞ்சேய் தன் இசைப்பயணத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

விதைப்பந்து திருவிழா – இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - றியாஸ் அகமட். சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- றியாஸ் அகமட். சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
சுற்றுச் சூழல்
29 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

25.11.2023 - இன்று காலை போக்கும் வரத்துமாக, மருதமுனை, எருவில், பழுகாமம், அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, தாண்டியடி, பாவற்கொடிச்சேனை ஊடாக பயணம் செய்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அடைந்தோம்.

மேலும் படிக்க ...

நிருவாகிகள் தெரிவு - இலங்கை மாணவர் கல்வி நிதியம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
29 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்திருந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.

மேலும் படிக்க ...

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
28 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1. நேரமது கிடைத்திடல் வேண்டுமே

நற்றமிழ்தனை ஆய்ந்திடல் வேண்டும்
நன்னூல்கள்பல படித்திடல் வேண்டும்
கற்றவருடன் பழகிடல் வேண்டும்
கவிதைகள் எழுதிடல் வேண்டும்

உற்றவர் உறவுகள் வேண்டும்
உண்மை நண்பர்கள் வேண்டும்
பெற்றவர் ஆசிகள் வேண்டும்
பிள்ளைகள் பெருமை வேண்டும்

ஆக்கங்கள் ஆக்கிடல் வேண்டுமே
ஆய்வுகள் செய்திடல் வேண்டுமே
நோக்கங்கள் நிறைவுறல் வேண்டுமே
நேரமது கிடைத்திடல் வேண்டுமே!

மேலும் படிக்க ...

அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
28 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
 
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக்  கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : அமுதா விழா காணும் கலை, இலக்கிய ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது. அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும் அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம்.  இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம் சாதித்தன. தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால் அல்ல, அவரது அரசியல் இயக்கம் தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.

ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி,  தன்னை முன்னர் தடை செய்த எல்லா நாடுகளாலும்  ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார். அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள், வன் முறையாளராக பார்க்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)."

 இந்த வரிகள் இடம்பெற்ற அரசியல் ஆக்கம் ஒன்றை முன்னர் எழுதியவர் பற்றித்தான் இந்த முதல் சந்திப்புத் தொடரில் எழுதுகின்றேன். அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் ஆய்வாளர். இம்மாதம் அவருக்கு எண்பது வயது பிறக்கிறது. எம்மால் அன்புடன் என்றென்றும் , 'ரவி அண்ணன்'  என அழைக்கப்படும் அவரை வாழ்த்திக்கொண்டே இந்த அங்கத்தை தொடருகின்றேன். தொடக்கத்தில் நான் இங்கு குறிப்பிட்ட வரிகளை தான் எழுதிய , ' இந்தியா - ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும்' ! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.

மேலும் படிக்க ...

சமரசங்களுக்கு ஆட்படாத எழுத்தாளர் சீ.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய அரசியல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
26 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த " மலையகம் 200" என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைகு என் நன்றி.  -


“பிரட்டின் அதிர்விலே
விடியலே அதிர்ந்து போய்
தேயிலையின் மீது
சரிந்துகிடந்து…
… …
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரைகளை
அமைவுற நோக்கியே…
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…”

மலையக மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அல்லது நான்கு ஐந்து தலைமுறைகள், கழிந்தப் பின், மலையக மக்கள் தாமும் இந் நாட்டில் ஒரு குடியினர்தாம் என்று தமது சமூக இருப்பை இந்நாட்டில் கட்டமைத்து வேர்பதித்து கொள்ளத்துவங்கியதன் பிரதிபலிப்பாய், அவர்களின் பிரதிநிதியாய் தோன்றியிருக்கக்கூடிய ஒரு கவிஞன் இப்படியாய்ப் பாட முன் வந்தான். பெயர்: சீ.வி. வேலுப்பிள்ளை.

வேலுப்பிள்ளையின் முக்கியப்படைப்புக்களான 'தேயிலைத்தோட்டத்திலே' (In The Ceylon Tea Garden 1952–1953) அல்லது 'உழைக்கப்பிறந்தவர்கள்'  (Born To labour 1958–1959) போன்றே 1959 இல் வெளிவந்திருக்கக்கூடிய அவரது 'மலையக அரசியல் தலைவர்களும், தளபதிகளும்' என்ற நூல் மிக முக்கியமானது.  அவரது அரசியலை நுட்பமாக வெளிக்கொணரக்கூடியது. ஆனால், அவரது அரசியலைப் போன்றே அவரது கவிதை மனநிலையையும் இங்கே அலச முற்படுவது, இனி மலையகத்தில் உருப்பெறபோகும் இளம் கவிதை மனங்களுக்கு பயன் தருவதாய் அமையக்கூடும். இதனை இசை உலகின் விளிம்புகளில் ஒளிரக்கூடிய சில உதாரணங்களுடன் விளக்க முற்படலாம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 33: மலையக ஆளுமைகள் இருவர்: தெளிவத்தை ஜோசப், லெனின் மதிவானம் - நினைவுமீட்டலும் உரையாடலும்
  2. ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா! - வ.ந.கி -
  3. 'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்.. - ஊர்க்குருவி - -
  4. கனடா வரலாற்றில் தமிழர் படகுகள் - குரு அரவிந்தன் -
  5. அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக... - வ.ந.கி -
  6. விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை ! வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்கு இம்மாதம் 69 வயது ! - முருகபூபதி -
  7. நூல் வெளியீட்டு விழா: சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வாழ்வு! - தகவல்: இளஞ்சேய் -
  8. கம்பராமாயணத்தில் அசதியாடல்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -
  9. சிறுகதை : உப்பிட்டவரை... - கடல்புத்திரனஂ -
  10. முனைவர் செ. இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்! - ஊர்க்குருவி -
  11. அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
  12. ஆவணச்சிறப்பு மிக்க முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) - வ.ந.கி -
  13. ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -
  14. நாடுகளின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாக்கம்! - ஜோதிகுமார் -
பக்கம் 32 / 104
  • முதல்
  • முந்தைய
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • அடுத்த
  • கடைசி