அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -

கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."
இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார். எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது. அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள். இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.

ஒரு மனிதனைக் 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் ராமாயணத்தில் குற்றமுடைய செயல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். நமக்குத் துன்பத்தைச் செய்தாலும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மகளிரைக் கொல்வது பாவம் என்றும், குற்றம் என்றும் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமாரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர். எனினும் ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன். தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை இணைய இதழில் கேட்டிருந்தார்.
- எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார். அவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அதனையொட்டி முன்னர் பதிவுகளில் எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரையினை நினைவூட்டுகின்றோம். - பதிவுகள்.காம் -
கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024 அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
நாவல் பற்றிய படைப்பாசிரியரின் ஆரம்ப உரையின் சில பகுதிகளே கதைச்சுருக்கமும் ஆகும். அவரது அழைப்பை ஏற்று நானும் சென்றேன். குறுந்தூர ஓட்ட வீராங்கனை போல சென்ற கையோடு திரும்பியும் விட்டேன். காரணம் உண்டு. மிக ஆறுதலான வாசிப்பையே செய்யும் நான் அதிவிரைவில் வாசித்த படைப்பு இது. விரைவு வாசிப்பானது ஆர்வ மிகுதியின் விளைவாகும் . காரணங்கள் சில. கருவுக்கும் கதைக்களத்துக்கும் பொருத்தமான ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான எழுத்துநடை , புனைவில்லா உண்மைகளின் தரிசனம் தந்த பெருவியப்பும் உருக்கமும். மருத்துவத்துறை சார்ந்த ஒருவராக எனது ஒத்துணர்வு .அனுபவரீதியான மன ஈர்ப்பு. உளத்தாக்கங்கள். சிறிதே குற்ற உணர்வு.

“தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது” என்பது சம்பந்தனின் நிலைப்பாடானது. முள்ளிவாய்க்காலின் பதினைந்தாவது வருட “நினைவேந்தலின் போது”, அதே தினத்தில் இது, வெளியிடப்பட்டுள்ளமை, பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாயுள்ளது. இது ஒருபுறம் நடந்தேற, இம்முறை, பதினைந்தாவது வருட நினைவேந்தலின் போது, சர்வதேசம், தான் இருப்பதைக் வழமைப்போல், காட்டிக்கொள்ள முண்டி அடித்திருந்தாலும், இத்தடவை, அது சற்று தீவிரமாகவே தனது முண்டியடிப்பை வெளிபடுத்தியதை, காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க தூதுவரின் வடக்கு விஜயமும், அமெரிக்க காங்கிரஸில் முதல் முறையாக (அம்மாடி – கடைசியாக) தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பிலான மனு ஒன்றை, சமர்ப்பணம் செய்தது, என்பதுபோக, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலரும் இம்முறை நேரடியாகப் பங்கேற்றமை என நிகழ்ச்சி நிரலை அமர்க்களப்பத்தி விட்டனர். 








அழகான ஆலமரம் 

வலது கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி, “லுக் அற் யுவர் பியூட்டிபுல் சண்”, எனச் சொல்லி, அந்தத் தாதி என் கையில் தந்த என் மகனை இனம்புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில் வைக்கிறேன், நான். பஞ்சிலும் மிருதுவான அந்தக் கால்கள் என் கைகளில் பட்டபோது என் மனதில் பல வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன.


ஒரு சில மாதங்கள் ஓடி மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும், அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.