பதிவுகள் முகப்பு

செ.சுதர்சன் கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
20 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. என் பலஸ்தீனியப் பாலகனே!

ஒற்றைப் பாலகன்...
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து,
அரவணைப்பே இல்லாது சரிந்த,
தன் தாயின் உடலைக் காண்கையில்...
உத்தம போராளியாகிறான்!
அவனை உலகம்
'தீவிரவாதி' என்றே தீர்த்துக்கட்டுகிறது!

அந்தப் பாலகனுக்கு...
"நீ தீவிரவாதி ஆகுக!" என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
அவன் உருக்கொள்ளட்டும்!
ஆயிரம் காளியாய் அவன் உரு
அணி வகுக்கட்டும்!

பலஸ்தீனியப் பாலகனின்....
எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது அவனது மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
அவனைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!

மேலும் படிக்க ...

சிதைவின் கலை - சிறிசுவின் சிறுகதைகள்! - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
'பதிவுகளில்' அன்று
20 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துருக்களில் வெளியான படைப்புகள் 'பதிவுகள் அன்று' பகுதியில் ஒருங்குறி எழுத்துருவில் ஆவணப்படுத்தப்படும். இக்கட்டுரை அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை. 28.09.2002 அன்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய அவரது உரையின் எழுத்து வடிவம். அதனை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். -


பதிவுகள், அக்டோபர்  2002 இதழ் 34

நான் விமரிசனங்கள் எழுதப்புகுந்த இந்த பதினைந்து வருடங்களில் ஈழ இலக்கியத்தைப்பற்றி தொடர்ந்து மிக கறாரான , அதிகமும் எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கிறேன். ஆனாலும் என் இலக்கிய நண்பர்களில் ஈழத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  தொடர்ந்து அங்கு வெளியாகும் நூல்கள் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடுமையான விமரிசனம் தேவை என்று கோரப்பட்டு வரும் நூல்கள் அதிகம் . உலகமெங்கும் உள்ள ஈழ வாசகர்கள் என் ஆக்கங்கள் மீது மிகுந்த கவனம் அளித்து வாசித்தும் வருகிறார்கள். ஒரு முறை என் ஈழநண்பர் ஒருவரிடம் ஈழத்தவர்களுக்கு ஒரு நன்றிக்கடனாக என் விமரிசனங்களை நான் மென்மையாக்கிக் கொள்ளவேண்டுமா என்று கேட்டேன் . அதன் பிறகு உங்கள் குரலுக்கு மதிப்பிருக்காது என்றார் . இக்கூட்டத்துக்கும் சிறிசுக்கந்தராஜா என்னை அழைத்தபோது '' வந்து திட்டிவிட்டு போ'' என்றுதான் சொன்னார் .

சிறீசுவை எனக்கு மாண்டிரியல் நகரில் பழக்கம். தத்துவவாதியான கோமாளியின் சாயல்களை வெளிப்படுத்தும் உற்சாகமான நண்பராக இருந்தார். அவருடனான நாட்கள் எனக்கு மிகுந்த பசுமையான நினைவுகளாக உள்ளன. இந்நூல் அப்பசுமை நினைவுகளை மீட்பதாக இருந்தது.  1962 ல் வெளிவந்த வ. அ .இராசரத்தினம் அவர்களின் 'தோணி' என்ற சிறுகதையை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். எழுபதுகள் வரை ஈழ எழுத்தின் மிகப்பெரும்பாலான இடத்தை நிரப்பியிருந்த முற்போக்கு கதைகளின் மிகச்சிறந்த மாதிரிக் கதை அது. ஈழத்து தீவுப்பகுதியின் ஒரு குக்கிராமத்தில் நடக்கிறது கதை. பத்துபதினைந்து குடிசைகளும், வகிடுபோல அவற்றை இணைத்துச் செல்லும் பாதைகளும், உள்வாங்கிய கடலாலான ஆறும் உள்ள ஊர். மீனவச்சிறுவனின் இளமைப்பருவத்தை மிகுந்த உயிர்ப்புடன் சொல்கிறது . தன் தந்தையைப்போல  வெள்ளைப்பாயை விரித்து கடலுக்கு அப்பால் சென்று மாய உலகத்து செல்வங்களை அடைந்து விடவேண்டுமென கனவு காண்கிறான். முருக்குத்தடியில் ஓட்டைபோட்டு அவனும் தோணி செய்து தன் தந்தையை போலவே கடலில் செல்ல யத்தனிக்கிறான். அதை கண்ட தந்தை அவனையும் கடலுக்கு கொண்டு செல்கிறார். அவனுடைய முதல் வேட்டையே வெற்றிகரமாக அமைகிறது. அந்தமீனை விற்று தன் தாயாருக்கும் தனக்கும் என்ன வாங்கலாம் என்ற கனவுடன் கரை திரும்பும்போது தெரிகிறது படகு அவன் தந்தைக்கு சொந்தமானதல்ல என்று. மொத்தமீனையும் படகு சொந்தக்காரனுக்கு அளித்துவிடவேண்டுமென்று .

மேலும் படிக்க ...

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
19 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும்  இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.

எம் மொழி அழிந்து விட்டால், எம்மினமும் அழிந்து விடும் என்பது யாவரும் அறிந்ததே! புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழி நிலைத்திருக்க வேண்டுமானால், எமது பண்பாடு கலாச்சாரமும் இந்த மண்ணில் நிலைத்திருக்க வேண்டும். எமக்கான அடையாளங்களை நாம் காப்பாற்றாவிட்டால், புகுந்த மண்ணில் முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம். எனவேதான் இதைச் சிந்தனையில் கொண்டு, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் கனடா கலைமன்றம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க ...

ஆய்வு: மன்னர்களின் மனிதநேயம் - முனைவர் பட்ட ஆய்வாளர் - பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. -

விவரங்கள்
முனைவர் பட்ட ஆய்வாளர் - பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி,தமிழ்நாடு,இந்தியா. (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது) -
ஆய்வு
19 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முனைவர் பட்ட ஆய்வாளர் -  பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது) - நெறியாளர் - முனைவர் ச. இராமலட்சுமி, துணை முதல்வர் மற்றும் துறைத் தலைவர், தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா (பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது)


ஆய்வுச் சுருக்கம்    

சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் கொண்டவைகளாகும். வீரமுடன் இணைந்த மன்னராட்சி முறையின் சிறப்பினைப் பற்றி கூறுகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கின்ற பண்பானது அனைத்து மக்களிடமும் விளங்கியது. அதில் மன்னராகப் போற்றப்பட்டவரின் கடமைகள் மனிதநேயத்தன்மையுடன் காட்டப்பட்ட தன்மையினைப் பற்றி அறியலாம். மனிதர்களின் குறைகளைப் போக்கி விட்டு மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவது மனிதநேயப் பண்பாகும். மன்னர்களின் ஆட்சியின் சிறப்பினால் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டினைச் செழிப்பாக வாழ வைத்த செய்தியினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. மன்னர்களின் மனித நேயப் பண்பு செல்வத்தைத் தனக்கென சேர்த்து வைக்காமல் பிறருக்குக் கொடுக்கும் ஈகை பண்போடு விளங்கியத் தன்மை கூறப்படுகின்றது. போரின் போதும் அனைவரையும் காப்பாற்றியமை மனிதநேயம் மிக்க செயலாகப் போற்றப்படுகின்றது.

கலைச்சொற்கள்: வீரம், மனிதநேயம், மன்னர்கள், ஈகை, போர்

முன்னுரை

இலக்கியங்கள் காதல், வீரம், கொடை, மனிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கி இருக்கின்றன. புலவர்களின் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும் சேர்ந்து மனிதத் தன்மையின் அடையாளமாக விளங்கக் கூடிய ஒன்றான மனிதநேயம் என்பதனை அனைவருக்கும் அறிவுறுத்தியது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை மனிதனால் பாதுகாக்கப் படுகின்ற அனைத்தும் மனிதநேயத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது. மனிதன் என்ற சொல்லானது மனிதம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. மனதில் பலவகையான எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்களே மனிதனைச் சிறந்தவனாகக் காட்டுகிறது. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதத்தன்மையினை வெளிப்படுத்துவது மனிதமாகும். மனிதனை மனிதன் மதித்து அன்பு செய்வதையே முக்கிய நோக்கமாகக் கருதுகின்றது. மனிதனது குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவதே மனிதமாகும். வறுமை இல்லாத வாழ்வினை மக்களுக்கு அளிக்க விரும்பினர். நாட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிரம்பி நாடு செழிப்புற இருக்க வேண்டும் என்பதனையே தங்களுடைய கொள்கையாகக் கொண்டு மன்னர்கள் வாழ்ந்தார்கள். மாதம் மும்மாரி மழை பொழிந்து நாட்டினை வளப்படுத்தியது. மனிதத்தன்மையை உணர்ந்த மன்னர்கள் மக்களுக்கு முன்னுதாராணமாக விளங்கினார்கள். இதனால் மனிதநேயம் சங்க இலக்கியத்தில் சிறந்த செல்வாக்குடன் விளங்கியது என்பதனைக் காணலாம்.

மேலும் படிக்க ...

இலங்கைத் தமிழர் அரசியல்: வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மூன்று அவதானிப்புகள் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
18 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

I

கீழே காணக்கிட்டும், மூன்று அவதானிப்புகள், ஓரளவில், வரலாற்று முக்கியத்துவம் கொண்டன. ‘வீரசேகரியின்’ பத்தி எழுத்தாளர் ‘கபில்’ பின்வருமாறு தெரிவித்திருந்தார்:

“அண்மை காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் செல்நெறி குறித்து, தமிழ் மக்கள் ஆழமான அதிருப்திகளையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர்…. தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையில் முட்டிக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களால், தமிழ் மக்கள் சோர்வடைந்து இருக்கின்றார்கள்….” (வீரகேசரி : 08.10.2023)

இவ் அவதானிப்புக்கு சமதையாக, அரவிந்தன் எனும் போராளி, இரு கிழமைகளுக்கு முன்பு தனது நீண்ட பேட்டி ஒன்றினை வழங்கும் போது குறிப்பிட்டிருந்தார் : “நாம் முட்டாள் சமூகமாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றோம் - முட்டாள் தனமாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்”. (YouTube பேட்டி :- 30.09.2023)

“தற்சமயம் , தமிழ் மக்களுக்கு தலைமை இல்லை. கூட்டு தலைமைதாணும் கிடையாது. மேய்ப்பவரற்ற மந்தைகள் போலிருக்கின்றார்கள்”. (திபாகரன்: 15.10.2023:தமிழ்வின்)

மேற்படி மூன்று கூற்றுக்களிலும், மூவரதும் வேதனைகள் பிண்ணிப்படர்வதாக உள்ளது வெளிப்படை.

இவ் அவதானிப்புகளுக்கு தளம் அமைப்பது போல், பின்வரும் இரு செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.

‘தினக்குரலின்’ தலைப்பு செய்தி பின்வருமாறு குறித்தது: “09 பேர் கொண்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு வரைபில், 13வது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட வில்லை” (ஞாயிறு தினக்குரல் : 15.10.2023)

மேலும் படிக்க ...

படிக்கக் கிடைத்த இருபெரும் கவிஞர்களைப் பற்றிப் பார்க்கக் கிடைத்த இரண்டு ஆவணப்படங்கள்! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
17 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம் -  நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை  (Yellow Cat in Memory Lane)|  ஆவணப்பட இயக்குநர்: திரு. T.பாண்டியராஜு  (T Pandiaraju) - https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY

கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம் -  கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் ; இயக்குநர் : திரு ‘நிழல்’ திருநாவுக்கரசு; தயாரிப்பு: குவிகம் இலக்கிய வாசல் - https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமா கிறது? முக்கியத்துவம் பெறுகிறது? ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்க மும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்? அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண் டியது அவசியமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேச வேண் டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேச வேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர் கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - விருதுவிழா-2023 - தகவல்: அகணி சுரேஸ் -

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஸ் -
நிகழ்வுகள்
15 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அஞ்சலி: இலங்கைத் தமிழ்ப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் மறைவு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
15 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இசைக்குழுக்களில் இணைந்து பாடிப்புகழ்பெற்ற  பாடகர்களில் ஒருவர் ஸ்ரனி சிவானந்தன். இலங்கைப் புகையிரதக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபடியே தன் இசைப்பயணத்தையும் தொடர்ந்தவர் இவர்.  இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனப் புகழ் ராமதாஸின் 'கோமாளிகள்' திரைப்பட வெற்றியைத்தொடர்து வெளியான 'ஏமாளிகள்' திரைப்படத்தில் ‘வா இந்தப் பக்கம்’ என்னும் பாடலைப் பாடியவர் இவர். 'இலங்கை இந்தியக் கூட்டுத்தாபன'தயாரிப்பான 'நெஞ்சுக்கு நீதி'யிலும் பாடியிருக்கின்றார். இந்தியத் தமிழ்க் கதாநாயகன் ஒருவனுக்காக (நடிகர் ஶ்ரீகாந்த்) முதலில் குரல் கொடுத்த இலங்கைத் தமிழ்ப்  பாடகர் இவரே. வேறு யாரும் பாடியிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க ...

பயணியின் பார்வையில் – அங்கம் -03 - நாணயக்குற்றிகளின் தேவை எதிர்காலத்தில் குறைந்துவிடும் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
14 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது, நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன் அவரது காரில் கொழும்பில் சிலரை பார்க்கச் சென்றிருந்தேன்.

சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அவ்வாறு நெரிசல் உருவாகும் இடங்களில் தரிக்கும் வாகனங்களைச் சுற்றி பிச்சைக்காரர்கள் மொய்ப்பதை அவதானித்தேன்.

நண்பர் காரின் கண்ணாடி யன்னலை மூடிக்கொண்டு ஒரு செய்தியைச் சொன்னார்.

“பூபதி அண்ணன்… இங்கே பிச்சைக்காரர்களுக்கு நூறு ரூபாவுக்கு மேல்தான் கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த பெண் பிச்சைக்காரிக்கு இருபது ரூபா நாணயத்தாளை கொடுத்தேன். அந்தப்பெண், அதனை சுருட்டி எனது முகத்திற்கே விட்டெறிந்து, கெட்ட வார்த்தையினால் திட்டிக்கொண்டு சென்றாள். “

தெகிவளையில் ஒரு கப் பால்தேநீர் ( சீனியில்லாமல் ) நூறுரூபாவுக்கு வாங்கி அருந்தினேன்.

மேலும் படிக்க ...

கலை இலக்கிய வித்தகர் “ பாடும்மீன் ” சு. ஶ்ரீகந்தராசவின் வாழ்வும் பணிகளும் ! அக்டோபர் மாதம் அகவை 70 இல் பயணிக்கும் பல்துறை ஆளுமை ! ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்! அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்!   மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால், கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை  கேட்கமுடியும். அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.

பாடும்மீன் என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம், அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

1991 ஆம் ஆண்டு ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.

நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா “ என்றார்.

முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

மேலும் படிக்க ...

நினைவுள் எழும் எழுத்தாளர் ஒருவரின் வாழ்வுத்தடங்கள்! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
இலக்கியம்
11 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து இனமுரண்பாடுகளினால் தங்கள் வாழ்வை புலம்பெயர்நாடுகளில் களம் அமைத்துக்கொண்ட எழுத்தாளர்களுள் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கமும் அவர்களும் ஒருவர்.அலைக்கழிக்கும் வாழ்வியற்சூழலுக்குள் தன்னை நிலைநிறுத்தி நேர்கொண்ட உறுதியுடன் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள் நின்றுகொண்டே நிதானமாக சாதித்த பெண்ணாக நம்முன் வாழ்ந்தவர்.

ஈழத்து யாழ்ப்பாணம் கரவெட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்திருந்தாலும்(04/05/1941) தன் கல்வி, தொழில், ஆய்வு நிமித்தம் மட்டக்களப்பு, கொழும்பு, சென்னை என நகர்ந்து இங்கிலாந்தில் (ஈஸ்ட்ஹாம்) பதியம் இட்டுக்கொண்டார். ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இளங்கலைமாணி (சிறப்பு), முதுகலைமாணி பட்டங்களைப் (சமஸ்கிருதம், தொல்லியல், இந்துகலாச்சாரம்) பெற்றார்.அதே சமயம் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை (1966- 1968)பிரதான பாடமாக கற்பித்தார்.பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகம் (இந்து பண்பாடு- 1969 1979), களனி பல்கலைக்கழகம்(தொல்லியற்றுறை- 1976- 1979)விரிவுரையாளராகவும், பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.

மேலும் படிக்க ...

குவிகம் குறும்புதினப் போட்டி 2024-25

விவரங்கள்
- சுந்தரராஜன் -
நிகழ்வுகள்
11 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதிக்குப் பாராட்டு விழா!

விவரங்கள்
- தகவல்: அற்லஸ் -
நிகழ்வுகள்
11 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) நிருவாகிகள் தெரிவு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
11 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர். 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் படிக்க ...

ஓராயத்துடனான எனது பயணம்! - க. குருபரன் -

விவரங்கள்
- க. குருபரன் -
சமூகம்
10 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பு பற்றியும், அதனுடனான தனது பயணம் பற்றியும் பொறியியலாளர் க.குருபரன் தன் எண்ணங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றார். புகைப்பட உதவி - ஓராயம். - பதிவுகள்.காம் -


சமூகப்பணி என்பது எனக்கு இளவயதில் இருந்து இயல்பாக வந்ததொன்று. இருப்பினும் நீண்ட காலமாக ஒரு சில காரணத்திற்காக, நல்ல விடயங்களுக்கு நிதி உதவி அளிப்பது, சிறுசிறு பணிகளை நானே செய்வது தவிர, அமைப்புரீதியாக செயல்படுவதைத் தவிர்த்து வந்தேன். ஒரு சில காரணத்திற்காக என்று பொதுப்படையாக கூறிய போதிலும், எனது குணாம்சங்களுடன் கூட்டாக இயங்குவது கடினமானது என்பதே முக்கிய காரணமாகும்.

2020இல் ஒரு சூறாவளி போல் எம்மைக் கடந்து சென்ற பெருந்தொற்று உலகில் பல மாற்றங்களை செய்தது போல், எனது வாழ்விலும் இந்த விடயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட வித்திட்டது. மன உளைச்சல், அழுத்தத்துடன் என்ன செய்வதென்றறியாது எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலமது. இதில் இருந்து ஓரளவேனும் விடுதலை பெற ஏதாயினும் செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் உலகெல்லாம் பரந்து, தொடர்புகள் அற்று சிதறி வாழும் எமது பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து ஏன் கலந்துரையாடக்கூடாது என்ற எண்ணம் எமக்கு வந்தது. யாழ் இந்துவில் 1971 -1978 இல் படித்த நாம், எம்மால் தொடர்புகொள்ள முடிந்த எல்லோரையும் இணைத்து ZOOM ஊடாக இணைந்தோம். நீண்ட நாட்களிற்குப்பின் இடம்பெற்ற சந்திப்பென்பதால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுவாரசியமாகவும் இக்கலந்துரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது. எல்லோரும் வெவ்வேறு துறைகளில் விற்பன்னர்களாக இருந்தது மட்டுமல்லாது சமூகப்பணியிலும் ஈடுபட்டிருந்ததனால் நாம் ஏன் ஒரு அமைப்பொன்றை உருவாக்கி சமூகசேவை செய்ய கூடாது என்ற கேள்வி அப்போது எழுந்தது. இச்சூழ்நிலையில் பிறந்த குழந்தை "ஓராயம்" என்று அழகிய தமிழ் பெயர் சூட்டப்பட்டு பூரணமான யாப்புடன், ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக கனடாவில் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஓராயம் அமையத்தினை இலங்கை உட்பட மற்றைய நாடுகளிலும் பதிவுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த சூழ்நிலைதான் என்னையும் அதில் முற்றாக ஈடுபட வழிவகுத்து, ஓராயம் அமையத்தினால் வரையறுக்கப்பட்ட 6 வேலைத்திட்டத்தில் ஒன்றான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினை வழி நடத்தும் பொறுப்பினை உருவாக்கியது.

மேலும் படிக்க ...

பதிவுகளில் அன்று: றஞ்சியின் (சுவிஸ்) நூல் மதிப்புரைகள் இரண்டு!

விவரங்கள்
- றஞ்சி (சுவிஸ்) -
'பதிவுகளில்' அன்று
09 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள்.காம் யூன் 2005 இதழ் 66
நூல் அறிமுகம்:  'ஓவியம் வரையாத தூரிகை'  - றஞ்சி (சுவிஸ்) -


இனங்களின் மொழிகளின், தேசங்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலக்கியம் வாழ்வின் ஆதாரங்களைச் தேடிச்செல்லக் கூடிய சூழ்நிலையாக உள்ளது. அந்த வகையில் 'ஓவியம் வரையாத தூரிகை' பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது.

பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய விடியலிலும் அனாரின் கவிதைகள் ஆழ்ந்து நிற்கின்றன. நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள், நிற, இன ஒடுக்குதலுக்கு அவதியுறுவோர் என பெண் ஒடுக்குமுறைக்கு தனது அனுபவங்களை வேதனையை எதிர்ப்பு உணர்வை வெளியிடும் பெண் குரலாக இவரின் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. அனாரினால் எடுத்தாளப்படும் சொற்களும் படிமங்களும் வித்தியாசமானவை. இன்று தமிழில் கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகா¢த்து வருகின்றன. உணர்வுகளை பாதிக்கும் வகையில் கவிதைகளை எழுதி வருபவர்களில் -எழுத்துலகில் குறுகிய காலத்தில் நன்கு அறியப்பட்ட கவிஞரான- அனாருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் 'ஓவியம் வரையாத தூரிகை'  பெண்ணின் மனஉணர்வுகளை பெண் நிலையில் நின்று பதிவு செய்கின்றன.

மேலும் படிக்க ...

கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய 'பதிவுகள்' விவாதமொன்று!

விவரங்கள்
- மு.புஸ்பராஜன் & தேவகாந்தன் -
'பதிவுகளில்' அன்று
09 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடந்தது. அதனையொட்டிப் 'பதிவுகள்' இதழில் வெளியான மு.புஸ்பராஜனின் எதிர்வினையும், அதற்கான எழுத்தாளர் தேவகாந்தனின் எதிர்வினையும்  ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள்.காம் -


பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68
எழுத்தாளர் மு.புஸ்பராஜனின் எதிர்வினை: இலண்டன்! அவலை நினைத்து..  - மு.புஷ்பராஜன் -

கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (Scarborough Civic Center ) எனது 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவரின் ஆரம்ப உரை எதுவுமின்றி கூட்டம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன். ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிரி உதிரியாகத்  தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:

- நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. -

'அலை' வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டன. இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: யாழ் இந்துக் கல்லூரியும் , அதனைப் பாதித்த கட்டடக்கலைக் கூறுகளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
09 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- யாழ் இந்துக்கல்லூரி(கனடா) நடத்திய கலையரசி2023 மலருக்காக எழுதிய கட்டுரை.

நான் கல்வி கற்ற மூன்று கல்வி நிலையங்கள்; ஆரம்பக் கல்வி ,வகுப்பு ஏழு வரை - வவுனியா மகா வித்தியாயலம். எட்டு தொடக்கம் க.பொ.த (உயர்தரம்) வரை - யாழ் இந்துக்கல்லூரி. பட்டப்படிப்பு, கட்டடக்கலை - மொறட்டுவைப்பல்கலைக்கழகம்.  இவற்றை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. இவை பற்றிய நினைவுகள் எப்போதும் என்னுள்ளத்தில் பசுமையாக  இருந்து வரும். இவற்றில் யாழ் இந்துக்கல்லூரியில் படித்தது என் பதின்ம வயதுகளில். நான் யாழ் இந்துவில் படித்த காலத்தில் நண்பர்களுடன் நகரில் சுற்றித்திரிவதில் அதிக ஆர்வம் மிக்கவனாகவிருந்ததால் பல பங்கு பற்றியிருக்க வேண்டிய நிகழ்வுகளில் பங்கு  பற்றவில்லை. அதனை இப்பொழுது உணர முடிகின்றது. 'இந்து இளைஞன்' போன்ற யாழ் இந்துவின் பிரசுரங்கள் பலவற்றை இப்பொழுது பார்க்கும்போது  ஒன்றை மட்டும் உணர முடிகின்றது. அங்கு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ஈழநாடு, கண்மணி, சிரித்திரன் போன்றவற்றில் எழுதிக்கொண்டிருந்தேன். குறிப்பாக ஈழநாடு  பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்தேன். வாரமலரில் சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். ஆனால் யாழ் இந்துக்கல்லூரி வெளியிட்ட சஞ்சிகையில் எதனையும் எழுதவில்லை. இதற்கு இன்னுமொரு காரணம் எமக்குத்  தமிழ் படிப்பித்த எவரும் இவ்விதமான சஞ்சிகைக்கு நீங்களும் எழுதுங்கள் என்று கூறியதுமில்லை. சஞ்சிகையினை அறிமுகப்படுத்தியதுமில்லை.  அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். தமிழ் ஆசிரியர்கள் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களை இவ்விடயத்தில் அதிகம் தூண்ட வேண்டும். அது நல்ல ஆரோக்கிய விளைவுகளைத்தரும்.

மேலும் படிக்க ...

'காமன்வெல்த் ' அறக்கட்டளை நடத்தும் பொதுநலவாய நாடுகளுக்கான வருடாந்த சிறுகதைபோட்டி 2023! - தகவல் - 'காமன்வெல்த்' அறக்கட்டளை -

விவரங்கள்
- தகவல் - 'காமன்வெல்த்' அறக்கட்டளை -
நிகழ்வுகள்
09 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

போட்டிக் கதைகளை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி - நவம்பர் 1, 2023

'காமன்வெல்த்' சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளர்கள் வெவ்வேறு ஐந்து காமன்வெல்த் பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும்  £2500 வழங்கப்படுவதுடன் அவர்களில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் ஒருவருக்கு £5000 வழங்கப்படும். பரிசு பெற்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பாளர் சில பரிசுத் தொகையைப் பெறுவார். போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம்.

தமிழில் கதை எழுதுபவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையென்றாலும், தமிழிலேயே தங்கள் கதைகளை அனுப்பலாம். தேர்வு விதிகளின் ஓர் அங்கமாக, அக்கதைகள் அனுபவமுள்ள தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பெறும். இந்த முதல் நிலையை வெற்றிகரமாகக் கடக்கும் கதைகள், சர்வதேச தேர்வுக்குழுவினர் வாசிப்பிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்பிரசுரம்: 'நடு' இணைய இதழ் - எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடனானதொரு நேர்காணல்! - கோமகன் -

விவரங்கள்
- கோமகன் -
நேர்காணல்
09 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'நடு' இணைய இதழில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடனான நீண்டதொரு ,காத்திரமான நேர்காணல் வெளியாகியிருந்தது. அதனைக்ப் 'பதிவுகள்' வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.

எழுத்தாளர் ஒருவருடனான இவ்விதமான நேர்காணல்களை, மற்றும் அவர்தம் எழுத்துலக அனுபவங்களை விபரிக்கும் வாழ்க்கைச் சரித்திரங்களை, சுயசரிதைகள் முக்கியமானவை. இலக்கியச் சிறப்பு மிக்கவை.

இந்நீண்ட நேர்காணலில் இளங்கோவன் அவர்கள் தன் எழுத்துலக அனுபவங்களை, அதற்குத்  தன் குடும்பச்சூழல் எவ்விதம் உதவியது, மார்க்சியம் பற்றி, இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றி, இலங்கையில் வெளியான சிற்றிதழ்கள் பற்றி, எழுத்தாளர்கள் எஸ்.பொ. கே.டானியல், அகஸ்தியர் பற்றி, தமிழர்கள் மத்தியில் தொடரும் தீண்டாமை பற்றி, இதற்குப் புகலிடத் தமிழர்கள் சிலர் எவ்விதம் தொடர்வதற்கு உதவுகின்றார்கள் என்பது பற்றி, தலித் என்னும் சொல்லாடல் பற்றி , வர்க்கப்புரட்சியின் அவசியம் பற்றி எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கின்றார்.

நல்லதொரு நேர்காணல். இதற்குப் பின் 'நடு'ஆசிரியர் கோமகனின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் தெரிகின்றன. அவர் இல்லையென்பது துயர் தருவது. ஆனால் அவர் தன் படைப்புகள்  மூலம், 'நடு' இணைய   இதழ் மூலம் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்.


நேர்காணல்-வி. ரி. இளங்கோவன்-கோமகன்

உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?

நான் ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற தீவகப்பகுதியில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எமது குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் இலக்கியத்துறையுடனும் ஊடகத்துறையுடனும் தொடர்புடையவர்கள் தான். எனது மூத்த சகோதரர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு – நாவேந்தன் புகழ்பெற்ற பேச்சாளர். அரசியல் துறையிலும் எழுத்துத் துறையிலும் தனக்கென்று ஓர் தனிமுத்திரை பதித்தவர். இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதைப் (1964) பெற்றவர். அடுத்த சகோதரர் துரைசிங்கம் சாகித்திய மண்டலத்தின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதை நான்கு முறை பெற்றவர். எமது வீட்டில் உடன்பிறப்புகள் எல்லோருமே இலங்கையிலிருந்து வெளியாகிய அனைத்து பத்திரிகைகளுக்கும் செய்தியாளர்களாக இருந்திருக்கின்றோம். அதனால் அனைத்துப் பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியும் இலவசமாகவே எங்கள் வீடுநாடி வரும். அத்துடன் எனது சகோதரர்களது இலக்கியச் செயற்பாடுகளினால் வீட்டில் ஓர் பாரிய நூலகம் போன்று புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.

மேலும் படிக்க ...

மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின் வெளியீடும், அறிமுகமும்!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின்  வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் பா.அ.ஜயகரனின்  தலைமையில் நடந்த நிகழ்வைத் தேடகம் ( தமிழர் வகைதுறை வளநிலையம்) ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர்கள் மீராபாரதி, துஷி ஞானப்பிரகாசம், எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களைப்பற்றிய உரைகளை நிகழ்த்தினர். சிறப்புப் பிரதிகளைக் கவிஞர் திவ்வியராஜன், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், நாடகவியலாளர் சொர்ணலிங்கம், ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரன், கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் மீராபாரதி வித்தியாசமாகத் தன் உரையினை ஆற்றினார். வழக்கமான உரையாக அல்லாமல் ஒரு நவீன நாடகக் காட்சியைப்போல் அவரது உரை அமைந்திருந்தது. பார்வையாளர்களின் பின்னாலிருந்து, வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கையைப்பற்றிய விமர்சனத்துடன் ஆரம்பித்து 'இனிச் சரிவராது' நாடகத்தின் உரையாடல்களை நடித்துக் காட்டியபடி தன் உரையினைத்தொடர்ந்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அதுபோல் உரை, நடிப்பு என இரு வடிவங்களில் நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை.  வித்தியாசமான முயற்சி, ஆனால் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலானதாக  அமைந்திருந்தது.

மேலும் படிக்க ...

யாவரும் கேளிர் 2023! - தகவல்: எல்லாளன் -

விவரங்கள்
- தகவல்: எல்லாளன் -
நிகழ்வுகள்
07 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தமிழ் வரலாற்றறிஞர் ஒரிசா பாலு (சிவ பாலசுப்பிரமணி) மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
06 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் வரலாற்றறிஞர் ஒரிசா பாலு (சிவ பாலசுப்பிரமணி) அவர்கள் மறைந்த செய்தியினைச் சமூக ஊடங்கள் வாயிலாக அறிந்தோம். கடலியல் சார்ந்த தமிழர் வரலாற்றில் கூடிய கவனம் செலுத்தியவர் ஒரிசா பாலு அவர்கள். அவரது மறைவு உண்மையில் மிகப்பெரும் இழப்பே. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல். அத்துடன் அவர் நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பொன்றையும், பத்திரிகைச் செய்தியொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள்.காம் -

மேலும் படிக்க ...

திருப்பூர் இலக்கிய விருது 2023! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
06 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் இலக்கிய விருது 2023!

 இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லா பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம். ஒரு பிரதி அனுப்பவும்.  நூல்கள் அனுப்ப கடைசி தேதி:  15 -11- 2023

 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
 திருப்பூர் மக்கள் மாமன்றம்
 டைமண்ட்  திரையரங்கு அருகில்
 மங்கலம் சாலை
 திருப்பூர்  641 604 ( 95008 17499)

- வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடாவில் 'தேடகம்' அமைப்பின் ஏற்பாட்டில் கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீடு..! - வி.ரி.இளங்கோவன் -

விவரங்கள்
- வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
05 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு  கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.

டானியலின் அரசியல், இலக்கிய, சமூகப் பணிகளில் இறுதிவரை அவருடன் உடன்நின்று செயற்பட்ட தோழர் வி. ரி. இளங்கோவன், டானியலின் பணிகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். இளந்தலைமுறையினர் உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பலரும் விருப்புடன் நூலைப் பெற்றுச் சென்றனர்.

கல்வியாளர்கள் பார்வதி - கந்தசாமி, மூத்த தோழர் வீரசிங்கம், ஹரிகரன் ஆகியோர் சிறப்புப் பிரதிகள் பெற்றனர். டானியலின் மூத்த மகன் புரட்சிதாசன் சிறப்புப் பிரதிகளை வழங்கினார்.

கனடா 'தேடகம்' அமைப்பினர் இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர். இந்நூல் ஏற்கனவே யாழ்ப்பாணம், சென்னை, தஞ்சாவூர் ஆதியாம் இடங்களில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..!

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கம்பராமாயணத்தில் வாழ்வியல் சிந்தனைகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
  2. கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023 - குரு அரவிந்தன் -
  3. நைரா - வாசிப்பு அனுபவம்! நாவலாசிரியருக்கு ஒரு கடிதம்! - வித்யா அருண், சிங்கப்பூர் -
  4. அண்மைகால இலங்கை அரசியலில் அரங்கேறும் நாடகங்களும் , அவற்றின் பின்னணிகளும்! - ஜோதிகுமார் -
  5. உலக மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டமும், சுப்ரபாரதிமணியனின் 'நைரா' நாவல் வெளியீடும்! - சுப்ரபாரதிமணியன் -
  6. முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் - எழுத்தாளனின் பார்வையில் சினிமா - ஒரு கண்ணோட்டம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  7. வாசிப்பும் யோசிப்பும் (379) : எழுத்தாளர் நடராஜா முரளிதரனின் 'எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை'! - வ.ந.கிரிதரன் -
  8. யாழ் இந்துக் கல்லுரிச் சங்கம் - கனடா: கலையரசி 2023
  9. காற்றுவெளி சஞ்சிகையின் எழுத்தாளர் சொக்கன் நினைவுச் சிறப்பிதழ்! - முல்லைஅமுதன் -
  10. மறக்க முடியாத யாழ் இந்துக்கல்லூரி விறாந்தை! - வ.ந.கிரிதரன் -
  11. பதிவுகளில் அன்று: தான்யாவின் கட்டுரை தொடர்பான எதிர்வினைகளின் தொகுப்பு!
  12. பதிவுகளில் அன்று: டொராண்டோ பத்திரிகைக் கட்டுரைகளுக்கான எதிர்வினை! நன்னூலாரின் ‘ஓட்டைக் குடங்களும், எருமை மாடுகளும், பன்னாடைகளும்’ - என்.கே.மகாலிங்கம் -
  13. இலண்டனூடாக கங்காரு தேசம் - 5 - ஶ்ரீரஞ்சனி -
  14. பதிவுகளில் அன்று: 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து... - தான்யா -
பக்கம் 38 / 104
  • முதல்
  • முந்தைய
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • அடுத்த
  • கடைசி