யி டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!
எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs) என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி - https://www.youtube.com/@girinav1
வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத் தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என் அவா.
தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.





வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.

நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.
அழைப்பு வந்திருந்தது.
ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள்(cents ). அவ்வளவுதான். மேலும் அதில் அறுபது சென்ட் பெனிஸ் (pennies ) ஆக இருந்தது. பார்ப்பனியத்தின் மௌனக் குற்றச்சாட்டால், மறைமுகமான கையாளுகையால் அச்சுறுத்தி ஒருவரின் கன்னம் எரிக்கப்படும்வரை மளிகைக் கடைக்காரரையும், காய்கறிக்காரரையும், இறைச்சிக் கடைக்காரரையும் அந்தக் காசு காப்பாற்றியது. மூன்று முறை டெல்லா அதை எண்ணினார். ஒரு டாலர் எண்பத்தேழு சென்ட். அடுத்த நாள் கிறிஸ்துமஸ்.
ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன் உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் தலைவனின், மன்னனின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பர். தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் இரகசியமாக என்ன நடக்கிறது என்பதை, தான் அறிந்து கொள்ளவே இரகசிய ஒற்றர்களை வைத்திருப்பர். ஒரு நாட்டில் வேற்று நாட்டு ஒற்றர்கள் பிடிபட்டால், அவர்களைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள் குறித்து ஆராய்வோம்.



சம்பந்தன் இறந்துவிட்டார். அவரின் மரணத்தை ரணில் மாத்திரம் அல்ல – புலம்பெயர் அரசியலும் தமக்கேற்ற வகையில் பயன்படுத்தி அரசியல் செய்ய துணிவது காணக்கிட்டுவதாய் உள்ளது. ஆனால், இதுவரை காலமும், தமிழ்த்தேசியம் பின்பற்றிய சம்பந்தரின் அரசியலும் இறந்துவிட்டதா? – அல்லது அது புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளதா? என்பது தெளிவற்றே காணப்படுகிறது. இதற்கிடையில் அவரது வாரிசான சுமந்திரன், பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டு நகர்கின்றார் என்பதிலும் சந்தேகமில்லை.


மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.





தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர். முருகவழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்திலேயே குறிக்கப்பட்டதாய் உள்ளது. மலைநாட்டுக் கடவுளாக முருகப்பெருமான் சங்க இலகக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளார். சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ இனத்தவர் தங்களது கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்திய அணங்கில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (புறநானூறு : 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (குறிஞ்சிப்பாட்டு: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (அகநானுறு. 22:11); முருகு அயர்தல் (குறிஞ்சிப்பாட்டு: 362:1); வெறி (நற்றிணை. 273:4-5; பரிபாடல்i. 5:15); வெறியயாடல் (அகநானூறு 182:17-18); வெறியாட்டு என்பார்கள். ஐந்குறுநூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடல் குறித்து கூறப்பட்டு உள்ளது.
