சென்னை 29வது 'சமூக நீதி' திரைப்பட விழாவில்... - சுப்ரபாரதி மணியன் -

இந்தத் திரைப்பட விழாவில் துவக்க விழா படமாக ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் திரையிடப்பட்டது . இந்த படம் சென்ற மாதம் திருப்பூர் டாப் நூலகத்தில் நடந்த பெண்கள் தினத்திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது..
29ஆவது சமூக நீதி திரைப்பட விழா சென்னையில் பெரியார் திடல் அன்னையின் மணியம்மையார் திடலில் அரங்கில் 15/4/26 அன்று ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் இந்த சமூக நீதி திரைப்பட விழா நடக்கின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துவக்கி வைத்தார் .மறுபக்கம் அமைப்பின் செயல் பாடுகள் கடந்த முப்பது ஆண்டுகளாக மாற்று கலாச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிப்பிட்டார். இயக்குனர் ஆர்பி அமுதன் அவர்கள் வரவேற்று பேசினார். 'இந்த திரைப்பட விழாவில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகின்றன. அதுவும் கணிசமாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படம் மற்றும் குறும்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது. முதன் முயற்சியாக திரைப்படங்களை எடுத்து இருப்பவர்களின் படங்களும் நிறைய இடம்பெறுகின்றன அவர்களை முதன்மைப்படுத்தும் விதமாக இதில் திரைப்படங்கள் திரையிடல் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளும் மனித உரிமை கேள்விகளும் நிறைய எழுபப்பட்டு வரும் நிலையில் அதற்கான களங்கள் குறும்பட ஆவணப்படங்களில் இடம் பெற்று இருக்கின்றன என்பது ஆரோக்கியமாகப்படுகிறது .இந்த திரைப்பட விழாவில் சமூக நீதி கூறும் மனிதர்கள் அவர்கள் நடவடிக்கைகள் அவர்கள் சார்ந்த தருணங்கள் கொண்ட படங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன' என்று குறிப்பிட்டார்.
நேற்று முதல் படமாக 'தி ஃபர்ஸ்ட் ஃபிலிம்' என்ற படம் இடம்பெற்றது. இந்தப் படத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சூழலில் ஒரு பெண் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எவ்வளவு சிரமமாக இருந்தன, அது அவர்களின் விடுதலையின் ஒரு படியாக எப்படி இருந்தது என்பதை அந்த படம் விளக்கியது. 'தீண்டாத வசந்தம்' போன்ற படங்கள் இந்தியாவில் நடந்து வரும் ஆவண கொலைகள் பற்றிய மையமாக இருந்தது. 'மறையாத நிழல்' என்ற பாரு பெண்மணியின் படம் பாலியல் தொந்தரவு சார்ந்த ஒரு பெண்ணின் நிகழ்வு வாழ்க்கை முழுவதும் தொடர்வது பற்றி இருந்தது. மற்றும் விளிம்பு நிலை சார்ந்த மக்கள் பற்றிய படங்களும் மொழி சிறுபான்மையினர் பற்றிய படங்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.






சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்






"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









